Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் சாத்தியமாகுமா? படை வலுச் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அரசு, புலிகளை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம் பேச்சுகளை இல்லாது செய்துவிடலாம் அல்லது பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை வெகுவாகக் குறைத்து விடலாமெனக் கருதுகிறது. அடுத்த சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, பேச்சுகள் நடைபெறும் இடத்தைத் தெரிவு செய்யும் முயற்சியில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கையிலேயே மீண்டும் கடுஞ் சமர் வெடித்துள்ளது. வடக்கு - கிழக்கில் போர்முனைக்குச் செல்லப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நில…

  2. பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? December 12, 2022 — கருணாகரன் — எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா.…

  3. பேச்சுவார்தைக்குப் போதல் – நிலாந்தன். “பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும்விட எவ்வளவோ சிறந்தது”இவ்வாறு தெரிவித்திருப்பவர் முன்னாள் குறேஷிய ஜனாதிபதி Stjepan Mesić. அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16–17 ஹவானாவில் நடைபெற்றது.அதில் Stjepan Mesić பார்வையாளர் அந்தஸ்தோடு கலந்து கொண்டார்.அவர் கூறியது ஒரு குரேஷியா யதார்த்தமாக இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழ் யதார்த்தம் அதுவல்ல. தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சிங்களத் தரப்போடு பேசி வருகிறார்கள். கடந்த நூற்றாண்டின் முற்கூறில் தொடங்கி இந்த நூற்றாண்டின் முற்கூறு வரையிலுமான ஒரு நூற்றாண்டு கால அனுபவம் அது.இதில் ஆகப் பிந்திய அனுபவம் 2018 ஆம் ஆண்டு மைத்திரிப…

  4. 83 இலங்கையில் இனக்கலவரம் நடந்து முடிந்த நேரம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு tube இல் வீடு திரும்புகின்றேன் .ஊர்வலத்தில் தந்த நோட்டிஸ்கள் சில எனது bag இல் இருந்தது .தமிழ் முகங்களை காணும் போது கொடுப்பதற்காக வைத்திருந்தேன் . Dollieshill Station தமிழ் முகம் என்று நம்பி நோட்டிசை நீட்டிவிட்டேன் .தந்தான் பாரு பேச்சு ஆங்கிலம்,சிங்களத்தில் .ஒரு வசனம் இன்றும் மனதில் இருக்கு " இந்த கலவரத்துடன் நிற்காது முழு தமிழர்களையும் கடலுக்குள் தள்ளி முடித்துவிடுவோம் " நானும் விடாமல் "எமது விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் வருது அடுத்த பொங்கலுக்கு தமிழ் ஈழம் எழுமென்றால் பண்ணிப்பாரும் " அடுத்த ஸ்டேசனில் நான் இறங்கிவிட்டேன் . இரண்டு வருடங்கள் ஓடியிருக்கும்.இந்திய …

    • 0 replies
    • 801 views
  5. பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது.மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்பு முயற…

  6. பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்ப…

  7. பேனா போராளிகள் மரணிப்பதில்லை; விதைக்கப்படுகின்றனர்; மீண்டும் எழுவர்! நடேசா நீ இன்று எம்மிடம் இல்லை. 2004 மே 31ஆம் திகதி நீ மரணித்து விட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் நீ மரணித்ததாக நானோ உன்னை நேசிக்கின்ற நண்பர்களோ நம்புவதற்குத் தயாராக இல்லை. நீ இன்னும் எம்முடன் இருப்பதாகவே நினைக்கின்றோம். உணர்கின்றோம். ஆனால் நெஞ்சு கனக்கின்றது. மீண்டும் துயில் எழுந்து வர மாட்டாயா என மனம் ஏங்குகின்றது. உன்னுடன் பழகிய நாட்கள் பசு மரத்தாணி போல் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது. ஆனால் அந்த இறுதிக் கணம். நீ என்னைச் சந்தித்தது இன்னும் என் கண் முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றது. இறுதியாக நான் உன்னைச் சந்தித்த போது உன்னில் காணும் வழமையான கலகலப்பு பேச்சு இவை அனைத்தையும் தொலைத்து விட்டு …

  8. Courtesy: ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து நடைபெற்ற அரசியல், பொருளாதார, சமூக, கலை மற்றும் கலாசார சம்பவங்கள், நிகழ்வுகளை நாம் மிகவும் அவதானமாக ஆராய்வோமானால், அவை பேயாட்டம், சூதாட்டம், போராட்டம், களியாட்டம் என்ற அடிப்படையிலேயே கடந்த எழுபத்து ஐந்து வருடங்களாக நகர்ந்துள்ளதை அவதானிக்க முடியும். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த தமிழன் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை, பங்களிப்பு சரித்திரம் மிக சுருங்கிய சில தசாப்தங்களே. ஆனால் இவ் பூமியில் தமிழ் மொழி கலை, கலாச்சாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகள் அல்ல, “கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த தமிழ்”. இதில் இலங்கைதீவில் தமிழர் தாயாக பூமியான வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்க…

  9. பேயும் பிசாசும் - - துரைசாமி நடராஜா ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இலங்­கையின் வர­லாற்றில் முக்­கிய கட்­சி­க­ளாக விளங்­கு­கின்­றன. இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் இக்­கட்­சிகள் மாறி மாறி ஆட்சி பீட­ மேறி இருக்­கின்­றன. இந்­நி­லையில் இக்­கட்­சி­களின் செயற்­பா­டுகள் மற்றும் போக்­குகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­றன. கட்­சிகள் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு உரி­ய­வாறு வலு­ சேர்க்­க­வில்லை. நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வைப் பெற்­றுக் கொ­டுக்­க­வில்லை என்­கிற பர­வ­லான குற்­றச்­சாட்டு இருந்து வரு­கின்­றது. மலை­யக கட்­சிகள் உள்­ளிட்ட சிறு­பான்மைக் கட்­சிகள் இவ்­விரு பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்க…

  10. செய்தித்தாள்களிலும் - ஊடகங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் பற்றிய துயரச் செய்திகள் வெளியாகி கண்களைக் குளமாக்கி, மனதை ரணமாக்கிவிட்டது. சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா. மற்றும் மேலை நாடுகளின் கோரிக்கைக்கு இணங்க, அவர் 2009-ஆம் ஆண்டு மே 19-ஆம் நாள் காலை 7.30 மணி அளவில் ஐந்து மெய்க்காப்பாளர்களோடு சென்று ராணுவத்திடம் சரணடைந்துள்ளார். பாலகன் பாலச்சந்திரனுடன் சென்ற ஐந்து பாதுகாப்பாளர்களையும் தனித்தனியே சுட்டுக்கொன்ற இலங்கை ராணுவத்தின் "53-ஆவது படையணி' இறுதியாக, 12 வயதே ஆன பாலச்சந்திரனையும் விட்டு வைக்கவில்லை. அவ்விதம் சரணடைந்த பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் உண்ணக் கொடுத்துவிட்டு, நிதானமாகத் தமது உயர் அதிகாரிகளோடு தொடர்ப…

  11. ஆமிக்குப் போன தமிழ்ப் பிள்ளையளுக்குப் பேய் பிடிச்சிட்டுதாம் இந்த வாரம் பரபரப்பான செய்திகளில் முதலிடத்தைப் பெற்றது மேற்குறித்த செய்திதான். "உலகம் 21 ஆம் திகதியுடன் அழியப்போகிறது''. என்ற வதந்தியைக் கூட பின்தள்ளி விட்டு, வடபகுதியின் வாய்கள் அத்தனையும் இந்த பேய்பிடிப்புக் கதைகளையே அதிகம் முணுமுணுத்துக்கொண்டன. மறத்தால் புலியை விரட்டிய தமிழ்ப் பெண்களின் வீரத்தை காலம் காலமாகவே செவி வழிக்கதைகள்,இலக்கியங்கள் என்பவற்றில் மட்டுமல்லாது நேரிலும் கண்டவர்கள் நாங்கள். தமிழர்களின் விடிவுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்களுக்கு சரிசமமாக, ஆயுதத்தை தமிழ்ப் பெண்களும் தூக்கினர் இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டிக்கொண்டு, வரிச் சீருடையோடு களமாடி மகளிர் படையணிகள் பறித்த வெற்றிகள் ஏராளம்.தனியே …

    • 0 replies
    • 838 views
  12. பேய்க் கூத்தும் கூஜாவும் சிறிது காலம் மலையேறியிருந்த இனவாதப் பேய்கள், மீண்டும் கொட்டு முழக்கங்களோடு களம் திரும்பியிருக்கின்றன. இனவாதப் பேய்களுக்கு மூக்கணாங்கயிறுகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனாலும், அவை - ஆட்சியாளர்களின் கைகளில் இல்லையோ என்கிற சந்தேகமும் ஒருபுறமுள்ளது. பேய்களைப் பிடித்து கூஜாவுக்குள் அடைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், பேய்களோடு சேர்ந்து நடனமாடத் தொடங்கி விட்டார்களோ என்கிற அச்சம், எல்லா மட்டங்களிலும் எழத் தொடங்கியுள்ளன. அம்பாறை நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை (26), பேய்களின் இனவாதக் கூத்துகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன்போது, அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள…

  13. பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்.கே. அஷோக்பரன் / 2020 செப்டெம்பர் 02 , நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சொன்ன ஒரு விடயம், பல அரசியல்வாதிகளையும் அல்லோலகல்லோலப்பட வைத்திருக்கிறது. புதிய நாடாளுமன்றம் கூடிய நாளிலிருந்து இன்றுவரை இதுதான் பரபரப்பான செய்தி. சீ.வி. விக்னேஸ்வரன் சொன்னதும், அதற்கான சிலரின் ஆதரவும் சிலரின் எதிர்வினைகளும் சிலரின் பட்டவர்த்தனமான மௌனங்களும் அவர்களது உண்மை முகங்களைக் கொஞ்சம் வௌிச்சத்தில் காட்டுவதாக அமைந்துவிடுகிறது. எல்லோரும் பரபரப்பாகும் அளவுக்கு, நீதியரசர்…

  14. பேரம் பேசுமா கூட்டமைப்பு? Editorial / 2018 ஒக்டோபர் 19 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:38 தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறையும் அவ்வாறு நடந்து கொள்ளுமா, என்ற கேள்வி, இப்போது பரவலாக எழுந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, பாதீட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்குப் பேரம்பேச வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை தான், இந்தக் கேள்விக்கான மூல காரணம். அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தான், பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க, தமது விடுதலையை முன்னிறுத்தி, அரசாங்கத்துட…

  15. பேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல் - க. அகரன் சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமையே அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ளது என்பதைத் தற்கால அரசியல் நகர்வுகளில் அவதானிக்க முடிகின்றது. கடந்து வந்த கடினமான பாதைகளைப் பொறுத்தாண்ட தமிழினம், தமக்கான நல்ல தீர்வு ஏற்படும் என்ற எண்ணவோட்டத்தில் இருந்த நிலையிலேயே, அண்மைய அரசியல் சலசலப்புகள், ஏமாற்றம் நிறைந்த களச் சூழலைப் பிரதிபலிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்துக்காக இதயபூர்வமான ஒத்துழைப்பை வழங்கியிருந்த தமிழர்களின் அரசியல் பலமாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு விடயத்தில், இன்று அடுத்தகட்ட நகர்வைக் கொண்ட…

  16. பேரம் பேசும் பலம் கூட்டமைப்புக்கு உள்ளதா? DEC 12, 2015 | 3:05 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேரம் பேசும் பலத்தைக் கொடுங்கள், அதனைக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தலில், நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும், வகையிலான பேரம் பேசும் பலத்தை வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்கள் கூட்டமைப்புக்குக் கொடுத்திருந்தனர். ஆனால், அந்தப் பேரம் பேசும் பலத்தை கூட்டமைப்பு இதுவரை பயன்படுத்தியிருக்கிறதா? – அந்த பலத்தை வைத்து இதுவரை எதனைச் சாதித்துள்ளது? என்ற கேள்விகள் பரவலாக எழுந்திருக்கிறது. சில…

  17. பேரரசுகள் தேடிவரும் ஒரு நாட்டைவிட்டு, மூளைசாலிகளின் வெளியேறம் தொடர்கிறது! -நிலாந்தன்!- இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும்,நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன கூறியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியா…

  18. ஒரு இனமாக, ஒரே சனமாக எங்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. இருப்பதை விட்டு விட்டு இல்லாததைத் தேடி அங்கலாய்ப்பது அதில் ஒன்று. எதைத் தந்தாலும் அதில் நொட்டை நொசுக்கு பார்த்து குறை கூறித் திரிவது இன்னுமொன்று. சந்தோஷத்தை சத்தமாக கொண்டாடமல் அடக்கி வாசித்து விட்டு, அவலத்தை அகிலமெல்லாம் கேட்கத் தக்கத்தாக அழுது ஒப்பாரி வைப்பதும் மற்றுமொரு கெட்ட பழக்கம். எங்களுக்கு எந்த சின்ன நல்லதும் நடந்து விடக் கூடாது, நடந்தால் தப்பாகி விடும் என்ன மனநிலையும் அதில் அடக்கம். 2015 தேர்தலில் மைத்ரி-ரணிலை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று அலட்டித் திரியும் நாங்கள், மறுவளமாக மகிந்த ஆட்சி பீடமேறியிருந்தால் அரங்கேறியிருக்கக் கூடிய அவலங்களைப் பற்றி கதைக்க ம…

  19. பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன் December 16, 2018 கடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும் தமிழ் மக்களும் என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள் பகிரப்பட்டன. தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள சாத்தியமான வழியாகத் தெரிவது பிரதிநிதித்துவ ஜனநாயக வழிமுறைதான். இந்த வழிமுறையில் தமிழ் மக்கள் தமது பேரத்தை உச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பேர அரசியலை முன்னெடுக்கவல்ல தமிழ்ப் பிரதிநிதிகள்; ஆகக் கூடிய பட்சம் திரட்டப்பட்டு ஒரு கொத்தாகச…

  20. பேரவையின் இளைஞர் மாநாடு: விக்னேஸ்வரனைக் கரை சேர்ப்பதற்கான முயற்சி இளைஞர் மாநாடுகளை நடாத்துவது தொடர்பான அறிவித்தல்களை, தமிழ் மக்கள் பேரவையும் தமிழரசுக் கட்சியும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான சூழலில், இளைஞர் மாநாட்டுக்கான அறிவித்தல்கள் கவனம் பெறுகின்றன. தற்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் களத்தை, (குறிப்பாக தேர்தல் கள அரசியலை) நோக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முனையிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி. விக்னேஸ்வரனை முன்மொழியும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இன்னொரு முனையிலும் நிற்கின்றன.…

  21. பேரவையின் எழுக தமிழ் – 2019 – எதிர்கொள்ளப் போகும் உண்மையான சவால்? - யதீந்திரா இலங்கைத் தீவு மீண்டுமொரு தீர்க்கமான தேர்தல் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்ற சூழலில் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை மீண்டுமொரு எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இதன் வெற்றி தோல்வி எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இது வெற்றியளிக்குமாக? ஒரு வேளை வெற்றியளிக்காவிட்டால் அது விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்திவிடாதா? இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள் பேரவையால் இதனை திறம்பட முன்கொண்டு செல்ல முடியுமா ? இப்படியான கேள்விகளை ஆங்காங்கே காண முடிகிறது. முதலில் இவ்வாறான கேள்விகள் ஏன் வெளிவருகின்றன என்று பார்ப்போம்! 2016இல் இடம்பெற்ற எ…

  22. பேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது? Sep 14, 20190 யதீந்திரா தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து அதன் அரசியல் பெறுமதி தொடர்பில் ஒரு சிலர் மாறுபட்ட அபிப்பிராயங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த எழுக தமிழ் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியை பலப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்பதே அவ்வாறானவர்களின் வாதமாக இருக்கிறது. விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கின்ற நிலையில், இவ்வாறானதொரு எழுக தமிழ் அவரை பல்படுத்துவதற்கான ஒரு மறைமுக முயற்சி என்பதே மேற்படி வாதங்களின் சாராம்சமாகும். அது உண்மைதானா? ஒரு வேளை எழுக தமிழால் விக்கினேஸ்வரனது கட்சி பலமடைவதால் தமிழ் மக்களு…

  23. பேரவையின் தீர்வுத் திட்டம் கோருவது என்ன? தமிழ் மக்கள் பேரவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு சில மாதங்களுக்குள்ளேயே, அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய முன்வரைவினை வெளியிட்டிருக்கின்றது. பேரவையின் உருவாக்கம் மீதான ஆதரவும் அதிருப்தியும் தமிழ்த் தேசிய உரையாடல் பரப்பில் இருந்து இன்னும் அகலவில்லை. அப்படியான நிலையில், எதிர்பார்க்கப்பட்டதைத் தாண்டிய வேகத்தில் பேரவை தன்னுடைய முதல் நடவடிக்கையாக அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைவினை மக்கள் முன் வைத்திருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்ட நீட்சி, காலத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்து வந்திருக்கின்றது. ஆனால், அ…

  24. பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 28 புதன்கிழமை, மு.ப. 01:07 Comments - 0 தேர்தலைப் பிரதானப்படுத்திய அரசியல் கூட்டணிகள், இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில் தோற்றம் பெறுபவை. அங்கு கொள்கை, கோட்பாடுகளுக்கான இடம் என்பது, இரண்டாம் பட்சமானதே. அதனால்தான், முன்னாள் வைரிகளான சந்திரிகாவும் ரணிலும், தமது பொது வைரியான மஹிந்தவை எதிர்கொள்வதற்கான கூட்டணியை, 2014இல் அமைக்க முடிந்தது. இப்போது, மைத்திரியும் மஹிந்தவும், ரணிலை எதிர்கொள்வதற்காகப் புதிய உடன்பாட்டுக்கு வந்திருப்பதும் அதன்போக்கிலானதுதான். அப்படியான நிலையொன்று, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியலிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் …

  25. Published By: DIGITAL DESK 7 06 OCT, 2024 | 05:14 PM ஆர்.ராம்- ‘தமிழ்த் தேசியம்’ தான் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிரதான கோசமாகும். ஆனால் அந்த அரசியல் கட்சிகளுக்குள் தங்களில் யார் தமிழ்த் தேசியவாதிகள் என்பதில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகக் கூடிய ஆகக்கூடுதலான விடயங்களை உள்வாங்கியிருக்கின்ற அரசியல்கட்சிகள் ‘தூய தமிழ்த் தேசியவாத சக்திகளாக’ அல்லது ‘தமிழர்களின் உரிமைக்கான குரல்களாக’ அடையாளப்படுத்தப்படுகின்றன. அதே நேரம், மத்திய அரசாங்கத்துடன் ஒன்றித்துப் பயணிக்கக் கூடிய அரசியல் கட்சிகள் அல்லது அங்கத்துவத்தினைக் கொண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.