அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
வாழ்த்துக்கள் சகோதரி திருமதி சாள்ஸ் - வ.ஐ.ச.ஜெயபாலன் செய்தி வடக்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி முடிவு !இதன்படி இவ்வாரம் வடக்கு ஆளுநரின் நியமனம் இடம்பெறவுள்ளது.முன்னதாக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராக திருமதி சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - உதயன் செய்தி. . . வாழ்த்து. எங்கள் பல்கலைக்கழக மாணவி தோழமைக்குரிய திருமதி சாள்ஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களும் ஆதரவும். நிர்வாகப் பணிகளில் தமிழர் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தலைவர்களும் உங்களை ஆதரிக்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. . போர்க்காலத்தில் சிதைந்த காடுகள் பனந்தோப்புகள் பார்த்தீனியம் ஆக்கிரமித்த வயல்வெளிகள் நீராதாரங்கள் என்பவற்றை மேம்…
-
- 0 replies
- 756 views
-
-
[size=4]அவுஸ்திரேலிய கனவும் தமிழர் அரசியலும் - யதீந்திரா சமீப நாட்களாக அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் பற்றிய செய்திகளே ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்திருந்தன. மிகவும் குறைந்த செலவில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முடியும் என்பது, தமிழ் சமூகத்தில் குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் கவர்ச்சியானதொரு விடயமாகவும் இருக்கிறது. இதுவரை பல லட்சம் கொடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்திருக்கிறது. இவ்வாறு அவுஸ்ரேலியாவிற்கு கடல் வழியாக தமிழர்கள் அனுப்பிவைக்கப்படுவதற்கு பின்னால் ஓர் உள்நோக்கம் இருப்பதாகவும், இது தமிழர்களின் சனத்தொகையை குறைப்பதற்கு அரசு நுட்பமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கை என்றும் அபிப்பி…
-
- 1 reply
- 822 views
-
-
‘நிர்பயா’ தூக்கும் டெல்லி தேர்தலும் எம். காசிநாதன் இந்தியாவின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தல் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 70 சட்டமன்றத் தொகுகளில் நடைபெறும் அனல் பறக்கும் பிரசாரத்துக்கு மத்தியில் வெற்றி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கா அல்லது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கா என்ற எதிர்பார்ப்புக் கிளம்பி இருக்கிறது. தலைநகரில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, 2013இல் ஆட்சியை பிடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். 2009இல் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின், ஆட்சியில் நடைபெற்ற ஊழலா…
-
- 0 replies
- 449 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு? நிலாந்தன்… February 8, 2020 காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை. ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய அதை கூறிவிட்டார். அவருக்கு முன் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல சம்பந்தரும் அப்படித்தான் கூறுகிறார். ஆனால் அந்த உண்மையை கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் தான் வேறுபாடு உண்டு. 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று அதை ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால் காணாமல் போனவர்களில் பலர் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று அவர் சொன்னார். அதைத்தான் புதிய ஜனாதிப…
-
- 0 replies
- 482 views
-
-
கடிநாய்கள் மலிந்த ஊரில் காலை தூக்கியிருந்தால் வீரமோ? -விரான்ஸ்கி முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் முடிவடைந்த ஸ்ரீலங்காவில், தற்போது ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஸ்ரீலங்காவில் பேசாத அரசியல்வாதிகளின் வாய்களே இல்லை. மேடைக்கு மேடை, சோடைபோகாத தங்களின் தங்கக்குரல் பேச்சுகளில், அரசியல்வாதிகள் எப்போதும் வாய்கூசாமல் பயன்படுத்தி வருகின்ற சொல் ‘ஜனநாயகம்’. போன ஆட்சிக்காலத்தில், இந்தச் சொல்லுக்குத் தங்கத்தால் பூண் பூட்டிவிட்டதைப்போல, கொஞ்சம் அதிகமாகவே மவுசு இருந்தது. ‘நல்லாட்சி’ என்ற பொற்கிண்ணத்தில், மிதக்கின்ற விலை உயர்ந்த நாணயம் போன்ற இந்த ஜனநாயகத்தைத் தாங்கள் பெற்றெடுத்திருப்பதாக மைத்திரியும் ரணிலும் எல்லோரையும் …
-
- 1 reply
- 822 views
-
-
புவிசார் அரசியலும் தமிழர்களும் புவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்கப்படும் சொற்பதமாகும். இதற்கான வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சிசெய்து கொண்டிருக்கின்றேன். அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது ஒரு நாட்டின் பூகோள அமைவால் உருவாகும் அரசியல் என மிகவும் குறுகலான வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றனர். அண்மைக் காலங்களாக நாம் கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கிருமி உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதனால் நச்சுக்கிருமிகள் புவிசார் அரசியலில் ஒரு காரணி எனச் சொல்வதை விட முடியாது. பெருந்தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்து வரும் நிலையில் நாடுகளுக்கிடையில் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார ஒத்துழைப்பு புவிசார் அர…
-
- 0 replies
- 524 views
-
-
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மேற்குறித்த பாடலில் தனது துணையைப் பிரிந்து தேம்பி அழும் தமிழ்ப் பெண்ணின் கண்ணீர் இன்னமும் வற்றிப்போகவில்லை. காலம்தான் உருண்டு கொண்டே செல்கிறது. கண்ணீரும், பிரிவுகளும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தனவோ அதே வலியோடு இப்போதும் தொடர்கின்றன. தமிழர் வாழ்வோடு வலிமையும், வலியும் கூடப்பிறந்தவை. அதிலும் போரின் வாழ்வுக்குள் புதையுண்டு போகும் நேரத்தில் மேலெழும் பிரிவின் வலிக்கு இன்னமும் விழவில்லை முற்றுப்புள்ளி. துணையைப் பிரிந்த வலியின் ஆற்றாமையால் அழுது புரண்டு, அலைந்து திரிதல் என்பது எந்தவித விமோசனங்களுமற்ற சாபமாகிவிட்டது தமிழ்ப் பெண்களுக்கு. சாவித்திரியின் கற்புக்கனல் காலனை நெருங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. அவள் த…
-
- 0 replies
- 607 views
-
-
வல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களில் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது . கடந்த இரு கட்டுரைகளில் பாகிஸ்தானும் மியான்மரும் சீன தலையீட்டையும் மேலைத்தேய அழுத்தத்தையும் கையாழும் தன்மைகள் குறித்து ஆராயப்பட்டது. இந்த வரிசையிலே சிறிலங்கா குறித்த ஆய்வு இங்கே தரப்படுகிறது — புதினப்பலகைக்காகலோகன் பரமசாமி* அமெரிக்க தலைமையிலான தாராள பொருளாதார கொள்கை போக்கை கொண்ட மேற்கு நாடுகளும் யப்பானும் இணைந்து,யப்பானில் இடம் பெற்ற ஏழு …
-
- 0 replies
- 381 views
-
-
மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த பெரும்பான்மை மக்கள் வழங்கிய வாக்கின் மூலம் கிடைத்ததல்ல, ஏனைய கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்தி பணம் கொடுத்து வாங்கி பெற்றுக்கொண்ட பெரும்பான்மை தான் என்பது பலருக்கும் தெரிந்த விடயம் தான். மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் கட்சி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்த பலரை வாங்கிக்கொண்டது மட்டுமன்றி அக்கட்சியை மிக மோசமாக பலவீனப்படுத்தி இருக்கிறது. பலவீனமான எதிர்க்கட்சி தலைவராக இன்று ரணில் விக்கிரமசிங்க உள்ளார். ஜே.வி.பியை ஒன்றல்ல மூன்றாக உடைத்து பலவீனப்படுத்தி சிலரை தன் பக்கம் மகிந்த அரசு இழுத்துக்கொண்டது. அரசாங்கத்து…
-
- 1 reply
- 671 views
-
-
எழுக தமிழ்: அரசாங்கம் ஏன் எதிர்க்கவில்லை? விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், வடக்கில் பெரியளவிலான ஒரு மக்கள் பேரணி நடத்தப்பட்டிருக்கிறது. ‘எழுக தமிழ்’ என்ற பெயரில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக சில ஊடகங்களும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக சில ஊடகங்களும் குறிப்பிட்டன. இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான மதிப்பீட்டுக்குச் செல்வது இத்தருணத்தில் பொருத்தமற்றது; அநாகரீகமானது. ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மை. தமிழ் மக்களின் பிரச்சினைகளை மட்டுமே …
-
- 0 replies
- 317 views
-
-
குறிவைக்கப்படும் தமிழ்ப் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், கடந்த மாதம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், ‘ஆவா குழு’, ‘பிரபாகரன் படை’ என்ற பெயர்களில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் தமிழ்ப் பொலிஸாரே முக்கியமாகக் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் படுகொலைச் சம்பவத்தைக் காரணம் காட்டி, கடந்த காலங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவின் பெயரைப் பயன்படுத்தி, மாணவர்கள் கொலைக்குப் பதிலடியாகச் சுன்னாகத்தில் இரண்டு பொலிஸாரைத் தாமே வெட்டிக் காயப்படுத்தியதாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் உரிமை கோரப்பட்டிருந்தது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில், தமிழ்ப் பொலிஸாரே மாணவர்கள…
-
- 0 replies
- 333 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு பத்து வருடங்களுக்கு முன்னர், நவம்பர் மாதம் 10 ஆம் திகதி. அழகிய சுறுசுறுப்பான ஒரு காலை நேரம். கொழும்பு நாரஹேன்பிட்டி மணிங் பிளேஸ் பகுதியில் இருந்த தனது வீட்டில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மெய்ப்பாதுகாவலர் சாந்த லக்ஸ்மன் லொக்குவெல என்பவருடன் காரில் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றார். வீட்டில் இருந்து சிறிது தொலைவு சென்றதும், வாகன நடமாட்டங்களும் பெருமளவிலான மக்கள் நடமாட்டமும் மிகுந்திருந்த ஒரு பிரதான வீதியில் நகர்ந்து கொண்டிருந்த அவருடைய க…
-
- 0 replies
- 516 views
-
-
கம்பியா:து(ர்)ப்பாக்கி(ய) ஜனநாயகம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஜனநாயகம் பல வழிகளில் நிறுவப்படுகிறது. வாக்குப் பெட்டி முதல் துப்பாக்கி முனை வரை பல்வேறு அந்தங்களில் அது நிலைநாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்தின் தன்மையானது, அது அடையப்பட்ட வழிமுறையில் தங்கியுள்ளது. முறை எவ்வாறானதாயினும் முடிவில் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறுகின்றன. ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கான பொருட்கோடல் பரந்த தளத்தில் நடைபெறுவதால் எல்லாவற்றையும் ஜனநாயகம் என வசதியாக அழைத்துக் கொள்ளவியலுமாகிறது. ஆபிரிக்காவில் மிகவும் சிறிய நாடான கம்பியாவில் அண்மைக்காலமாக நடந்தேறிய நிகழ்வுகள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவத…
-
- 0 replies
- 649 views
-
-
தொடரும் தவறுகள்! போராட்டம் நடத்து வதற்கான ஜனநாயக வெளியை ஏற்படுத்தியி ருந்தால் மட்டும் போதாது, எதற்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என் பதைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் வடக்கில் காணி உரிமைகளுக்கான போராட்டங்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்பு கூறச் செய்வதற்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்களும் மேலும் மேலும் விரிவடைந்து செல்லத் தொடங்கியிருக்கின்றன. ஆயினும் அரசாங்கம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதிலோ அல்லது பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெ…
-
- 0 replies
- 398 views
-
-
வெலிவேரியா! சிங்களவர்கள் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தியதில் முன்னணிக் கிராமமாக மாறியிருக்கின்றது. சிறீலங்காவின் மிக முக்கியமான பேசு பொருளாகவும் இந்தக் கிராமம் மாறியிருக்கின்றது. இந்தக் கிராமத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு சிங்களக் கட்சிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சிக் கட்டிலில் அமரத் துடித்து நீண்ட நாட்களாக எந்தவொரு இரையும் கிடைக்காத எதிராக்கட்சிகளுக்கு வெலிவேரியா ஒரு முக்கியமான இரையாகக் கிடைத்திருக்கின்றது. இனிச் சிறிது காலத்திற்கு இதனையே வைத்து அரசியல் நடத்த முடியும். எதிக்கட்சிகள் என்பவை திறமையாக இருக்கின்ற ஒரு நாட்டில்தான் நேர்சீரான ஆட்சி நடைபெறும். அதுவும் ஜனநாயக நாடொன்றில் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை நகர்த்திச் செல்கின்…
-
- 2 replies
- 694 views
-
-
மங்கள: இனவாத அரசியலின் லிபரல் முகம் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கையின் பௌத்த சிங்கள இனவாத அரசியல் களத்தில், ஒரு லிபரல் (தாராளவாத) முகமாக வலம் வந்த மங்கள சமரவீர மறைந்திருக்கின்றார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்தார். தெற்காசியாவில் அதிகம் நிகழ்வது போலவே, மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவால், மங்களவும் ஓர் அரசியல் வாரிசாக அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். மங்களவின் மூன்று தசாப்தங்களைத் தாண்டிய அரசியல் வாழ்வில், மூன்று ஜனாதிபதிகளை உருவாக்குவதில் மூளையாக செயற்பட்டிருக்கின்றார். அதுபோல, மூன்று அரசாங்கங்களைத் தோற்கடிப்பதிலும் பங்களித்திருக்கின்றார். அதாவது, சுருங்கச் சொன்னால், அவர…
-
- 0 replies
- 427 views
-
-
கதாநாயகர்களின் கதை ‘சாண் ஏற முழம் சறுக்குவது’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் சில விடயங்கள் ‘சாண் ஏறாமலேயே, மீற்றர் கணக்கில் சறுக்கி’க் கொண்டிருக்கின்றன. ஒரு வியாபாரத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமாக இருந்தால், அதை நட்டம் என்போம். ஓர் ஆட்சியில் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவது தோல்வியாகும். நல்லாட்சி அரசாங்கமானது அதன் வாக்குறுதிகளிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம், சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் சொன்னது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான, இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்…
-
- 0 replies
- 456 views
-
-
தமிழ் தரப்பின் கூட்டுக்கள் தேர்தலுக்காகவா? கொள்கைக்காகவா? பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் கடந்து வந்ததுடன் அதற்காக இழந்தவையும் அதிகம். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஜனநாயக ரீதியாக தமது உரிமைக்காக தமிழ் தேசிய இனம் குரல் கொடுத்து வந்த நிலையில் அந்த தலைமைகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளும், கூட்டுக்களும், கூட்டுக்களின் நிலையற்ற தன்மையும் தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. மிதவாத தலைமைகளின் கோரிக்கைகளை தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்கவாத தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் இளைஞர், யுவதிகள் விரும்பியோ, விரும்பாமலோ ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயக ரீதி…
-
- 0 replies
- 296 views
-
-
ஜெனீவாவும் தமிழர் தரப்பும் கபில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதங்கள் இரண்டு இம்முறை இருப்பதால், ஜெனீவாவை நோக்கிய தமிழர் தரப்பின் ஓட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களின் கவனத்தை ஈர்க்கின்ற பல்வேறு போராட்டங்களும், பக்க அமர்வுகளும் நடத்தப்பட்ட போதிலும், போருக்குப் பின்னர் தான், ஜெனீவா நோக்கிய தமிழர் தரப்பின் நகர்வுகளும், ஓட்டங்களும் கூர்மையடைந்தன. போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் போராட்டங்கள் ஜெனீவா களத்…
-
- 0 replies
- 371 views
-
-
விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல் – நிலாந்தன்… விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு லாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும். அதே சமயம் விஜயகலாவைப் பதவி விலகக் கேட்டதன் மூலம் ரணிலுக்கு இழப்பு எதுவும் இல்லை. அவரின் எதிரிகள…
-
- 1 reply
- 967 views
- 1 follower
-
-
சிறீலங்காவில் ஐனாதிபதித்தேர்தல் சூடுபிடிக்கவும் ஆட்கொள்வனவுகள் இரகசிய ஒப்பந்தங்கள் அரவணைப்புக்கள் நடந்தாலும் தமிழர் விடயத்தில் மிகவும் கவனமாகவும் அதே நேரம் ஒரே கொள்கையிலும் சிங்களக்கட்சிகள் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. தேடுவாறற்று தமிழினம் இன்று தனித்துவிடப்பட்டுள்ளது மட்டுமன்றி பனையால் விழுந்தவனை மிதிப்பது போல யார் அதிகம் உதைப்பது என்பதும் நடக்கிறது இது புதிதல்ல என்பதாலும் வாங்கி மரத்துவிட்ட வரலாற்றுப்பாடங்களிலிருந்தும் தமிழினம் தள்ளியே நிற்கிறது. இந்தநிலையில் மகிந்தவை ஆதரிக்கணும் அவர் மீண்டும் வந்து தமிழரை மிதிக்கணும் என்றும் அவர் மிதிப்பது பழகிப்போனதால் அதிகம் வலிக்காது என்றும் அத்துடன் அவர்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவரும் நிலையில் அவரி…
-
- 33 replies
- 3.3k views
-
-
எதிர்வரும் 08 சனவரி 2015 அன்று நடைபெறவுள்ள இலங்கை சனாதிபதித் தேர்தலில் தற்போதைய சனாதிபதி மகிந்த ராகபச்ஸவும், மைத்திரிபால சிறிசேனவும் முன்னணி வேட்பாளர்களாக உள்ளனர். இக் கருத்துக் கணிப்பு மிகமுக்கியமான இந்த சனாதிபதித் தேர்தல் பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அறிய உருவாக்கப்பட்டுள்ளது. இக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்து தெரிவுக்கான காரணத்தை இத்திரியில் பதிந்து கருத்தாடலில் ஈடுபட அனைவரையும் அழைக்கின்றோம். 06-01-2015 வெள்ளி வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் இங்கு காணலாம். http://www.yarl.com/content/இலங்கையில்-நடைபெறவுள்ள-சனாதிபதித்-தேர்தல்-பற்றிய-உங்கள்-நிலைப்பாடு-என்ன ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளை இந்த இணைப்…
-
- 13 replies
- 1.9k views
-
-
சட்ட மறுப்பு போராட்டம்! இதைத்தான் அரசியல் சூனியம் என்பதா? தமிழ்த்தேசியத்தை நீக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளுக்கும் இலங்கையின் விருப்பங்களுக்கும் மனதார இடமளித்துவிட்டுத் தற்போது சட்ட மறுப்புப் போராட்டம் என்று அதுவும் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குள் நின்று கோசமிடுவது கோமாளி அரசியல் (Clown Politics) அல்லவா? அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டங்கள் மூலமாக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை (Political Emancipation) அடைய முடியாது என்பதுதான் தமிழ்த்தேசியத்தின் அடிப்படை. அதாவது சட்ட மறுப்புப் போராட்டம். …
-
- 0 replies
- 552 views
-
-
பீஜீங்கா- புதுடெல்லியா?: சிறிலங்காவின் தடுமாற்றம் புதினப்பணிமனைNov 01, 2018 | 1:53 by in செய்திகள் அரசியல் கொந்தளிப்பின் மத்தியில் சிறிலங்காவில் மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டார் என்றவுடன், முதலில் வாழ்த்து தெரிவித்த தலைவராக, சீன தலைவர் ஷி ஜின்பிங் இடம் பிடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பிரதமராக பதவி வகித்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவிநீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக முன்னைநாள் அதிபர், மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து சிறிலங்காவின் அரசியலில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது அரசமரம் போல் இருக்க வேண்டும் என்பதற்காக, யாப்புகளாலும் அரசியல் திருத்த சட்டங்கள் என்ற விழுதுகளாலும், …
-
- 0 replies
- 640 views
-