அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65வது குடியரசுதின வைபவம் வழமைபோல் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தன. கொழும்பு நிகழ்வில் பேசிய இந்தியத் தூதுவர், இலங்கையிலுள்ள அனைத்து தரப்புக்களின் கூட்டு அணுகுமுறையே நேர்மையான நல்லிணக்கத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், உறுதிப்பாட்டோடும், பங்குதாரர்கள் என்ற உணர்வோடும், பரபஸ்பர நல்லிணக்கப்பாட்டோடும் இருதரப்புக்களும் செயற்பட வேண்டும் என்றும், இதனையே …
-
- 3 replies
- 784 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவது யார்? முத்துக்குமார் ஜனவரி மாதம் அடுத்தடுத்து தமிழ் அரசியல் சூழலில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமெரிக்க பிரதிநிதிகளின் வடபகுதி விஜயம், அனந்திக்கு புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என அரசதரப்பு தெரிவித்தமை, முஸ்லிம் மக்கள் குழு சர்வதேச சமூகத்திடம் தமது பிரச்சனைகளைக் கூற தீர்மானித்தமை, மேல்மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியானமை, ஜனாதிபதி பங்குபற்றிய அரசவிழாவில் விக்னேஸ்வரனும் வடமாகாண சபை உறுப்பினர்களும் பங்குபற்றியமை போன்றவை முக்கியமான நிகழ்வுகளாகும். அமெரிக்க பிரதிநிதி ராப்பின் யாழ் விஜயம் ஜனவரி மாத ஆரம்பத்தில் இடம்பெற்றது. 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்பார்கள். அரசாங்கத்திற்கு தை பிறந்தால் தலையிடி தொடங்கும் எ…
-
- 16 replies
- 1.2k views
-
-
சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம் - நிலாந்தன்:- 02 பெப்ரவரி 2014 வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையை ஒத்தது என்று அத்தீர்மானத்திற் கூறப்பட்டுள்ளது. இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை வெளிப்படையாகக் கூறத் தயாரற்ற அத்தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வாதப்பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள், அது ஒரு சமயோசிதமான யதார்ததபூர்வமான தீர்மானம் என்று. மற்றொரு தீர்மானத்தில் போர்க் குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக்கோரிய கூட்டமைப்பு இத்தீர்மானத்தில் இங்கு இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதைக் கூராகக் கூறுவதன் மூலம் அரசாங்கத்…
-
- 0 replies
- 653 views
-
-
தெற்கில் புயலைக் கிளப்பியிருக்கும் வடமாகாண சபையின் தீர்மானம் - செல்வரட்னம் சிறிதரன்- 01 பெப்ரவரி 2014 இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியான மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலைக்கு ஒத்தவகையிலான மனிதக் கொலைகளுக்கு நியாயம் கோரும் வகையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது தெற்கில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டிருக்கின்றது. சிங்களத் தீவிரவாத கட்சிகளை மட்டுமல்லாமல்இ பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சியையும் அது உசுப்பிவிட்டிருக்கின்றது. வடமாகாண சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அந்த சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்திருக்கின்றார்கள். தமது எதிர்ப்பு வலிமையற்றது. தீர்மானம் நிறைவேற்றப்படுவதை அது எந்தவகையிலும் பாதிக்கப்போவதி…
-
- 1 reply
- 859 views
-
-
ஜெனிவா காச்சல் சிங்கள ஆட்சியாளர்களை தேசங்கள் எங்கும் ஓட வைத்துள்ளது. சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே ஆபிரிக்க - இலத்தீன் அமெரிக்க நாடுகளைக் குறி வைத்து தனக்கான பாதுகாப்பு வளையத்தை அமைக்க முயற்சி செய்துவரும் காலத்தில், அவரது துதர்களாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பிரித்தானியாவுக்குச் சென்று திரும்பியிருந்தார். தற்போது, மகிந்த ராஜபக்சேயின் செயலாளது லலித் வீரதுங்க அமெரிக்கா சென்றுள்ளார். ஜெனிவா காச்சலால் சிங்கள ஆட்சியாளர்கள் திசை எங்கும் ஓடித் திரிய, இந்திய காங்கிரஸ் கட்சியோ தாங்க முடியாத வயிற்று வலியுடன் துடிக்கின்றது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வு நடைபெறும் காலத்தை அண்டியே, இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், ஏற்பட்ட கிலி காங்கிரஸ் காரர்களுக…
-
- 3 replies
- 1.2k views
-
-
''ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. தலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை ராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை!'' - ஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி. இவரின் 'ஊழிக்காலம்’ நாவல், ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் துயரங்களை 'கண் முன் சாட்சி’யாகப் பதிவுசெய்திருக்கிறது. இவர், விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளி. ஈழ…
-
- 4 replies
- 2.6k views
-
-
ஒரு மாதிரி election முடிஞ்சிது பாருங்கோ........ இனி உந்த யாழ் தேவி யாழ்ப்பாணம் போகுமோ? இல்லை வவுனியாவோட நிக்குதோ தெரியல்ல பாருங்கோ எண்டாலும் நான் அதில ஒருக்கா ஆசைக்கு ஏறிட்டன் சரி அத விடுங்கோ சனம் தேசியத்த ஆதரிச்சு வாக்கு போட்டாலும் நாங்கள் இன்னும் கவனமா தான் இருக்கோணும் மகிந்தர் இந்த தேர்தல காட்டியே எங்களுக்கு தர வேண்டியத தட்டாமல் இப்பிடியே இழுத்துக்கொண்டு போய்டுவார்......... அங்க தயாகத்தில மக்கள் தங்கள் அரசியல் நகர்வுகள ஒரு பக்கம் மேற்கொண்டாலும் நாங்கள் புலத்தில இருக்குரனாங்களும் ஒரு பக்கத்தால சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுத்திட்டு இருக்கணும் ரெண்டு கையும் சேர்ந்து தட்டினா தான் ஓசை வரும் பாருங்கோ..... சரி இவள் பிள்ளைய பள்ளிக்கூடத்தால கூட்டிட்டு …
-
- 36 replies
- 3.3k views
-
-
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒரு பொதுவான தமிழ் நம்பிக்கை. ஆனால், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த நான்காண்டுகளாக தை பிறந்தும் வழி பிறக்கவில்லை. இவ்வாண்டிலாவது வழி பிறக்குமா? அல்லது நாளை மற்றொரு நாளே என்ற கவிதை வரியைப் போல இந்த ஆண்டும் மற்றொரு ஆண்டாக மாறிவிடுமா? முன்னைய நான்கு ஆண்டுகளோடும் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வேறுபட்டதாக அமையக்கூடும் என்று யாராவது நம்புவார்களாயிருந்தால் அவர்கள் தமிழர்களின் அரசியலோடு சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கருதியே அவ்வாறு கூற முடியும். வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரும் அதன் பின் வரப்போகும் இந்தியப் பொதுத் தேர்தலுமே அந்த இரு முக்கிய நிகழ்வுகளாகும். இவையிரண்டும் இந்த ஆண்டைத் திருப்பங்களுக்குரிய ஆண்டாக மாற்றுமா? முதலில் ஜெனி…
-
- 4 replies
- 865 views
-
-
திருக்கேதிச்சரத்தில் மனிதப் புதை குழி ஒன்று கடந்த 26ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. பதிகச் சிறப்பு மிக்க ஆலயத்திலிருந்து சுமாராக முன்னூறு மீற்றர் தொலைவில் ஆலயத்தின் புனிதப் பிரதேசத்தில் அது காணப்படுகின்றது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்ப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப் பெரிய மனிதப் புதைகுழி அது. கண்டுபிடிக்கப்பட்ட காலம், இடம் என்பவற்றின் காரணமாக அது அதிகரித்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. அது கண்டுபிடிக்கப்பட்ட காலம் எனப்படுவது ஜெனிவாவை நோக்கிச் செல்லும் ஒரு காலம். இக்காலப் பகுதியில் இப்படியொரு புதை குழி கிண்டப்படுவது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும். அதோடு இது தொடர்பில் ஆகக் கூடியபட்சம் வெளிப்படைத் தன்மையையும், நன்பகத் தன்மையையும…
-
- 1 reply
- 588 views
-
-
கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார். மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,"ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !" என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை போஸ் தலைமையிலான இளைஞர் கூட்டம் தாக்கியது. போஸ் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர் தத்துவம் படித்து பட்டம் பெற்றார் ; சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் தயாரானார். அத…
-
- 3 replies
- 920 views
-
-
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் - செல்வரட்னம் சிறிதரன்:- 25 ஜனவரி 2014 சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் நெருக்கடிகளையும் பயன்படுத்தி அரசாங்கம் தனது ஆட்சியதிகாரத்தை நிரந்தரமாக்குகின்ற துணிச்சலான அரசியல் தந்திரத்தைப் பரிசோதிக்க முனைந்திருக்கின்றது. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்வுள்ள அரசுக்கு எதிரான பிரேரணை என்பவற்றுக்கிடையில் இந்தப் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதைக் காண முடிகின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்த மோசமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து வருடங்களாகப் போகின்றன. யுத்தம் காரணமாக அழிவுக்கு உள்ளாகிய நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டையும் முன்ன…
-
- 0 replies
- 707 views
-
-
தீர்ப்பு: இனப்படுகொலை சேரன் இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal on Sri Lanka) தனது இரண்டாவது அமர்வை ஜெர்மனியின் பிரேமன் (Breman) நகரத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இந்த அமர்வை ஏற்பாடு செய்வதில் முன்னின்று செயற்பட்ட நிறுவனங்கள் அயர்லாந்தைச் சேர்ந்த இலங்கையில் சமாதானத்திற்கான மக்கள் அமைப்பும் பிரேமன் நகரத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்புமாகும். இந்த இரு அமைப்புகளிலும் தீவிரமாகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுபவர்களில் பலர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து உணர்வுத் தோழமையுடன் பணியாற்றி வரும் சிங்கள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆவர். இவர்களுள் சிலர் புலமையாளர்களாகப…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடஇந்தியாவில் இருந்து அண்ணளவாக 2500 ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையால் நாடுகடத்தப் பட்ட அரசகுமாரன் விஜயனும் கூட்டாளிகளும் இலங்கைக்கு வந்து மலைப்பாங்கான காட்டுப்பகுதியாய் இருந்த தென்னிலங்கையின் பெரும்பகுதியில் வாழ்ந்த பூர்வீக தமிழ்க் குடிமக்களோடு சேர்ந்து ஆட்சியை ஏற்படுத்தி இந்தியாவில் இருந்து மேலும் வரவழைக்கப்பட்ட பெண்களுடன் பல்கிப் பெருகி காலப்போக்கில் கோட்டே, கண்டி என்ற இரு சிங்கள இராச்சியங்களை உருவாக்கினார்கள். பாளி சமஸ்கிருதம் தமிழ் என்பன கலந்து உருவானதே சிங்கள மொழியாகும். பின்னர் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்த பவுத்த மதத்தையும் பின்பற்றி சிங்கள பவுத்தர்களாக வாழ்ந்து வந்தார்கள். இலங்கையின் வடகிழக்குப் பகுதியான சமதரைப் பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த நாகரீகம் …
-
- 5 replies
- 1.1k views
-
-
மாலதி மைத்ரி வல்லினம்.காம் கேள்வி-பதில் பகுதியில் நான் சிலருடைய எழுத்துக்களைப் படிப்பதில்லை என்று தெரிவித்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்ட பொழுது எனது நிலைப்பாட்டை சுருக்கமாகப் பதிவு செய்திருந்தேன். அதன் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருந்தது. “அ. மார்க்ஸ், ஷோபாசக்தி, யோ. கர்ணன் இவர்கள் மூன்று பேரும் அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள். இலங்கையில் புலிகளால்தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றைத் திரித்துக் கொண்டிருப்பவர்கள். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும் காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் இவர்களின…
-
- 9 replies
- 906 views
-
-
தமிழர்களும் அனைத்துலக சமுகமும் - நிலாந்தன் 12 ஜனவரி 2014 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' தமிழர்கள் எப்பொழுதும், பெருமையோடு நினைவு கூரக்கூடிய ஒரு வாக்கியம். அது யுகங்களைக் கடந்தும் நிலைத்து நிற்கும். கணியன் பூங்குன்றனாரின் அந்த வாசகம் ஒரு தீர்க்க தரிசனமும் கூட. ஈழத்தமிழர்கள், யாதும் ஊராகப்போய்விட்டார்கள். ஏறக்குறைய, நாலில் ஒரு; ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து விட்டார். அதாவது, தமிழர்கள் யாதும் ஊராகப் போய்விட்ட்டார்கள். ஆனால், யாவரும் கேளிரா? இல்லை. அங்கே தான் பிழைக்கிறது. தமிழர்கள் யாதும் ஊராகப் போனதுவரை கணியன் பூங்குன்றனாரின், தீர்க்க தரிசனம் பாதியளவில் சரி. ஆனால், யாவரும், தமிழர்களுக்கு கேளிர் அல்ல. அதாவது நண்பர்கள் அல்ல. எல்லாரும் தமிழர்களுக்கு நண்பர்களாக இருந்திரு…
-
- 2 replies
- 789 views
-
-
நான் மீனவர்களை சந்திக்கும் நம்பிக்கையில் சன் றைஸ் கடற்கரைக்கு சென்றேன். மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது அந்த கடற்கரை. கடலிற்கு செல்வதற்கு சிறிய கட்டுமரத்துடன் ஒரு குடும்பம் தயாராக இருந்தது. 40வயது மதிக்கத்தக்க ஒருவர் மேலாடையின்றி வெறும் சறத்துடன் மட்டும் கட்டுமரத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார். அவரின் பெயர் றோச்சர். சிறிது காலத்திற்கு முன்னர் தான் இந்த கடற்கரையை சுனாமி அடித்துச்சென்றது. 250'000 உயிர்களை பலியெடுத்து, 2.5 மில்லியன் மக்களை உடமையற்றவர்கள் ஆக்கியது. சுனாமி அடித்து ஆறு மாதங்களின் பின்னர் சிறிலங்காவில் மீள்கட்டமைப்பு எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக வந்தேன். எனது பயணம் அருகம் குடாவில் (Arugam Bay) தொடங்கியது. இங்கே தான் நான் றோச்சர் கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
மத்திய இந்தியாவின் தண்டகாரன்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்பதை எதிர்த்து பழங்குடி மக்கள் வில், அம்புடன் வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருக்க, அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறார் அருந்ததி ராய். ‘ஆபரேஷன் பசுமை வேட்டை’ என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய் தண்டகாரன்யா காடுகளுக்குள் நேரடியாக சென்றுவந்தார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் ‘இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சக்தி’ என மாவோயிஸ்ட்டுகளை வர்ணித்துக் கொண்டிருக்க, அருந்தி ராயோ அந்த அச்சுறுத்தம் சக்திகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை நேரடியாக சென்று பார்த்து வந்திருக்கிறார். ஆபரேஷன் பசும…
-
- 3 replies
- 974 views
-
-
1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிவ வடிய நின்று கொண்டிருக்கிறார். காலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்கின்றன. ராணுவத்தினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டனர். ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள். சே அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையும், பள்ளிக் கூடமும் அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர். சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் மெ…
-
- 3 replies
- 1.8k views
-
-
8884 சதுரகிலோமீற்றர் பரப்பளவான வடக்கு மாகாணத்தில் உள்ள 300 கிலோமீற்றர் நீளமுள்ள கிளிநொச்சி – முல்லைதீவு கரையோரத்தின் இரண்டு பக்கத்திலும் அரைவாசி எரிந்த நிலையிலுள்ள பனைமரங்கள், கூரைகளற்ற வீடுகள், குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், சேதமாக்கப்பட்ட வாகனங்கள் போன்ற பல்வேறு காட்சிகளைக் காணமுடியும். இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் The Week சஞ்சிகைக்காக Lakshmi Subramanian எழுதிய கட்டுரையில் தெரிவித்தள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாதி. நளாயினி பெரும்பாலான நாட்களில் வீறிட்டுக் கத்தியவாறே கண்விழிக்கிறார். இவரைப் பாதிக்கின்ற அந்தச் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, நளாயினி பயங்கரக் கனவுகளால் பாதிக்கபட்டுள்ளார். இவரது …
-
- 0 replies
- 620 views
-
-
சர்வதேச அழுத்தங்களை குறைக்க தேர்தல் வெற்றியை காண்பிக்க முயற்சி:- -அ.நிக்ஸன்- 06 ஜனவரி 2014 எதிர்க்கட்சிகளில் செல்வாக்கு உள்ளவர்களை அரசாங்கத்த்தின் பக்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம். அமரர் ஜே.ஆர்.ஜயவாத்தன இனப்பிரச்சினையை மையாகக் கொண்டு இனரீதியான கண்ணேட்டத்தில் சட்டங்களை உருவாக்கினார். ஆனால் அந்த சட்டங்கள் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கும் தற்போது இடையூறாக மாறிவிட்டது. அதனை எதிர்த்து வெகுஜன போராட்டங்களை ஆரம்;பிக்கும் தகுதியை இடதுசாரிகளும் இழந்துவிட்டன. தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் அது அரசாங்கத்துக்கு வாய்ப்பாக அமை…
-
- 0 replies
- 490 views
-
-
இலங்கை அரச படைகளுக்கும் அமெரிக்கப் படைத்துறைக்கும் இடையே நிறுவனம் சார்ந்த இறுக்கமான, தொழில் முறை உறவுகள் உள்ளன. இவற்றின் பல அம்சங்கள் வெளியே தெரிந்தவை பல அம்சங்கள் இரகசியமானவை. இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1951ம் ஆண்டு அமெரிகக்காவின் 'குரல' (Voice of America) வானொலி நிகழ்ச்சிகளைத் தென்னாசியப் பகுதிகளுக்கு ஒலிபரப்பும் அஞ்சல் நிலையமொன்றை இலங்கையில் அமைபப்தற்கு உடன்பாடு ஏற்பட்டது. பிற்பாடு 1983ல் ஜே.ஆர். ஜயவர்த்தன அதிபராக இருந்தபோது 500 ஏக்கர் நிலத்தை இந்த வானொலி நிலையத்தை விரிவுபடுத்துவ தற்காக வழங்கினார். தென்னாசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க நிலையமாக இது அமைநத்து. அக்காலகடட்டத்தில் நுண் அதிர்வு அலைவரிசைகளை (Low Fre…
-
- 0 replies
- 829 views
-
-
இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை 'இனப்படுகொலை' என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வௌ;வேறான, ஆனால் தமக்குள் இணகக் மான உறவுகளைக் கொணடி;ருக்கும் தளங்களிலிருந்து என்னுடைய பார்வையையும் வாதங்களையும் முன்வைக்கிறேன். முதலாவது தளம் ஊடகவியலாளர் என்பது. 1984 – 1987 வரை முழுநேரப் பத்திரிகை யாளனாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review எ…
-
- 7 replies
- 860 views
-
-
தமிழ்மக்களுக்குள்ள தெரிவு மாற்று அரசியலும், மாற்று அரசியல் இயக்கமுமே! சி.அ.யோதிலிங்கம் நேர்காணல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிச் சபைகளில் வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவது பற்றி? அண்மைக்காலமாக அடுத்தடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தில் இருக்கும் உள்ளூராட்சிச் சபைகளில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் ஆரம்பமான இப்போக்கு கிழக்கிலும் மிகவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வடக்கில் வலி-கிழக்குப் பிரதேச சபையிலும், வல்வெட்டித்துறை நகரசபையிலும் வரவு-செலவுத்திட்டம் முதலில் தோற்கடிக்கப்பட்டது. இந்தக் காய்ச்சல் கிழக்கிற்குப் பரவியபோது, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசசபையிலும், காரைதீவு பிரதேசசபையிலும், திருக்கோணமலை …
-
- 2 replies
- 869 views
-
-
எதிர்வரும் சனவரி 20 இல் இலங்கை - இந்திய நாட்டு மீனவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இதில் இலங்கை இலங்கைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராஜித சேனாரத்தின கலந்து கொள்ள இருக்கிறார். நீண்ட காலமாக இந்த இருதரப்புப் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் எனப் பேசப்பட்டு வந்தாலும் இப்போதுதான் அது சாத்தியமாகியுள்ளது. இலங்கையின் கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். இந்தக் கைதுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இலங்கைச் சிறைகளில் 271 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 78 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தாண்டு முதல்நாள் மட்டும் இராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இ…
-
- 0 replies
- 507 views
-
-
களவு போய்க் கொண்டிருக்கும் தாய் நிலங்கள். கோ.நாதன்:- 05 ஜனவரி 2014 வட, கிழக்கில் உள்ள தமிழ்க் கிராமங்கள் ஒவ்வொன்றும் மிகவும் துரிதமாக பறி போய்க் கொண்டிருக்கின்றன. நிலங்கள் வாங்குதல் அல்லது பூர்விக நிலத்தைப் பெறுதல் என்ற பெயரில் நாட்டின் அத்தனை பகுதிகளிலிருந்தும் இன்னுமொரு இனம் படை படையாக வந்து இறங்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ் நிலங்களை எல்லாம் அபகரித்தும், அபகரித்திக் கொண்டும் இருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் மக்களை ஏமாற்றி வழக்கு தொடுத்து அக்காணிகளுக்கு உரிமை நகல் பத்திரங்களை தயாரித்து அபகரிக்கின்றார்கள். பலவந்த முறையில் ஆயுதங்களால் பயம் காட்டி கட்டாய முறையில் காணிகளிலிருந்து எழுப்புகின்றார்கள. எந்த சக்தியிடம் அதிகாரம் இருக்கின்றதோ அந்த சக்தி பலாத்கார …
-
- 0 replies
- 528 views
-