Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மென் தமிழ்த் தேசியவாதம் - நிலாந்தன் 21 ஜூலை 2013 வடமாகாண சபைக்குரிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுவிட்டார். இத்தெரிவின் மூலம் கூட்டமைப்பின் தலைமையானது தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், பிராந்திய மற்றும் அனைத்துலக சமுகங்களுக்கும் வெளிப்படுத்தியிருக்கும் சமிக்ஞைகள் எவையெவை? முதலில், தமிழ் மக்களுக்கு அதாவது, தனது வாக்காளர்களிற்கு கூட்டமைப்பு வெளிக்காட்டியிருக்கும் சமிக்ஞைகள் எவையென்று பார்;க்கலாம். ஒரு முதன்மை வேட்பாளரை கட்சிக்கு உள்ளேயிருந்து தெரிவு செய்யாமல் கட்சிக்கு வெளியிலிருந்து தெரிவு செய்தது ஏன்? இதை இரண்டு விதமாக விளங்கிக்கொள்ளலாம். முதலாவது, கட்சிக்குள் குறிப்பிட்ட பொறுப்புக்குத் தோதான ஆட்கள் இல்லை என்று விளங்கிக்கொள்ளலாம். இரண்டாவது கட்ச…

    • 2 replies
    • 519 views
  2. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் இழக்கக்கூடாத அனைத்தையுமே இழந்துவிட்டனர். தாங்கள் இனியும் என்ன செய்வது என்ற நிலையில் தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் காவலர்களும் மீட்பர்களும் எப்போது வரப்போகிறார்கள் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற அவிப்பொருளை மகிந்த ராஜபக்ச தற்போது தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் மகிந்த கூறியிருக்கின்றார். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்பட்டு நிவர்த்திக்கப்படவில்லை. ஒரு பிரச்சினை தோற்றம் ப…

  3. ' உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக......' என்று அடைத்தகுரலில், திரைப்படம் ஒன்றிக்கு விளம்பரம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது நாம் பார்க்கப்போவது திரைப்பட விளம்பரமல்ல. சீனாவின் ஆட்சியாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் சிந்தனைச் சிற்பிகள், இந்துசமுத்திரப்பிராந்தியம் குறித்து முதன்முறையாக வெளியிட்டுள்ள நீலப் புத்தகம் (Blue Book)பற்றிப் பார்க்கப்போகிறோம். இந்தப் பிராந்தியத்தில்தான் நம் தேசமும் இருப்பதால், சீனா நமது பிராந்தியம் குறித்து என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது பற்றி அறிவதற்கு, நாம் அக்கறைப்படுவதில் தப்பேதுமில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு எம்முள் விதைத்துவிட்டுச் சென்ற பெருவலி, எம்மினத்தை அழிக்க உதவியோர், எமது நிலத்திலும், ஆகாயத்திலும், கடல் பரப…

  4. சிறிலங்கா: நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது மீளிணக்கத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சி [ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 07:30 GMT ] [ நித்தியபாரதி ] சிறுபான்மை – பெரும்பான்மை என்கின்ற தோற்றத்தின் ஊடாக இனப்பிரச்சினை நோக்கப்படுமாயின் பல்லின நாடுகள் வாழும் சிறிலங்காவின் அரசியல் இயங்குநிலை தொடர்பில் மிகத்தவறான கற்பிதத்தை உருவாக்கும். இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தென்னாசியவியல் போராசிரியரான வி.சூரியநாராயணன்* The New Indian Express ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுகளை வழங்குதன் மூலம் நாட்டில் இன மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவ…

  5. பிரபாகரன் தமிழீழம் கேட்டதில் என்ன தவறு? இலங்கையில் இருந்து - பிரியதர்சன் 20 ஜூலை 2013 விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கை இந்திய ஒப்பந்த்தின்படி இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவேன் என்று சொல்லியே மகிந்த ராஜபக்ஸ போரை தொடங்கி மாபெரும் அழிவுகளை நிகழ்த்தினார். தமிழர்களுக்கு சிங்கள அரச தலைவர்கள் எந்தத் தீர்வையும் வழங்கமாட்டார்கள் என்ற நிலையிலேயே தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு ஜனநாயக அரசியலில் ஏற்பட்ட பின்னடைவே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. ஏதுவுமற்;ற 13 ஐ வைத்து மாபெரும் போர் நடத்தப்பட்டதோ அந்தப் 13ஐயும் இல்லாது ஒழித்துக் கட்டுகிற வேலையில் இனவாத அணியி…

  6. இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்.ராஜீவை தாக்கியமை அரச துரோகமானாலும் அது தேசத்துரோகமல்ல. இந்தியாவை திருப்திப்படுத்தவே எனக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப் பிழைப்பாக மாறிவிட்டது. நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, எமது நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எமது அரசியலமைப்புக்குள் புகுத்தினார். இதனால் ராஜீவ் காந்தியை எதிர்த்தேன். எனவே, எனது நாட்டை பாதுகாப்பதற்காகவே ராஜீவை பழிவாங்கும் எண்ணம் என் மனதுக்குள் உருவானது. இதன் காரணமாகவே கடற்படை அணிவக…

  7. எனது கடந்த வாரக் கட்டுரை, �மகிந்த முன்னாலுள்ள தெரிவு � 13ஐ திருத்துவதா? ஒழிப்பதா?� என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. ஆனால், பத்திரிகையின் முதல் பக்கச் செய்தித் தலைப்பு, 'சர்வஜன வாக்கெடுப்புக்கு மகிந்த அரசு தயாராகின்றது' என்று இடம்பெற்றிருந்தது. அதன் பக்கத்தலைப்பாக, '13ஐ இரத்துச் செய்யுமாறு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்' என்று பதிவாகியிருந்தது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணாகவும், வேறுபட்டதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். உண்மைதான்! 13வது திருத்தச் சட்டத்தை என்ன செய்வதென்று தெரியாமல் மகிந்த அரசு தடுமாறுவதன் வெளிப்பாடே இந்தச் செய்திகளும், அதன் தலைப்புகளும். அறிவித்தபடி தேர்தல் நடத்தவில்லையானால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஆபத்தாக முட…

  8. வடமாகாணசபைத் தேர்தல்விவகாரம் முஸ்லிம் தலைமைகள் TNAயிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை 19 ஜூலை 2013 - எழுதுவது இலங்கையன் - ஏதாவது செய்தேயாகவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ வட மாகாண சபைத் தேர்தலை அறிவித்துள்ளது. இத்தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கு தோல்வியுறச் செய்வதானால் அதற்கான ஒரே வழி, தேர்தலை நீதியாக நடக்க விடாமல் செய்வதே. இது தவிர வேறெந்த வியூகமும் அங்கு பலிக்காது என்பது சர்வதேசம் அறிந்த மாபெரும் உண்மை. ஏனனில் தமிழ் மக்கள் யாவரும் தமது உணர்வு வெளிப்பாடாகவே இத்தேர்தலைக் கருதுகின்றனர். இந்த உண்மையானது கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த மக்கள் ஆ…

  9. அபிவிருத்தி: மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா? - பேரா. என். சண்முகரத்தினம் [ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 05:44 GMT ] [ புதினப் பணிமனை ] 01. 2009 ஆண்டு ஐந்தாம் மாதம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் "அபிவிருத்தியே" இன்றைய உடனடித்தேவை என ஆட்சியாளர் பிரகடனப்படுத்தினர். இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையை ஒரு "மனிதாபிமான" நடவடிக்கை எனக் குறிப்பிட்ட அரசாங்கம் மக்கள் வேண்டி நிற்பது அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளின் பூர்த்தியையே எனக்கூறியபடி "மீள்குடியேற்றம்" "அபிவிருத்தி" எனும் பதாகைகளுடன் திட்டங்களை ஆரம்பித்தது. இத்திட்டங்கள் வெளிநாட்டு நன்கொடை உதவியுடனும் கடனாகப்பெற்ற பெருமளவு நிதியுடனும் அமுலாக…

  10. இந்திய அரசும், இலங்கை மேன்மைதங்கிய ‘ஹை புரபைல்களும்’ விரும்பியபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராகும் ‘தகுதி படைத்த’ வேட்பாளராக முன்னை நாள் நிதிபதி விக்னேஸ்வரன் இறுதியில் தெரிவுசெய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்ச்சந்திரன் குடும்பத்தோடு ‘அண்ணன்’ மாவையும் சென்று குத்தகைக்கு எடுக்கப்பட்ட ரி.என்.ஏ என் முதன்மை வேட்பாளருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ‘ஹை புரபைல்’ கனவான் தான் வேட்பாளர் என்று சாணக்ஸ் சம்பந்தன் முன்னமே முன்மொழிந்த போதே விக்னேஸ்வரனே ‘விடுதலைப் போராளி’ யாவார் என்று பலரும் நம்பியிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாரம்பரியப்படி வழக்குப் பேசுபவர்களே மக்கள் பிரதிநிதிகளாகலாம். அது இன்னொரு படி மேலே போய் தீர்ப்புச் சொல்லும் ‘ஹை புரபைல்’ விடுதலைப் போராட்டத்தை ம…

  11. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயமும், அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் புது டெல்லிப் பயணமும், அரசியல் தளத்தில் பல உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. 13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில், தென்னிலங்கையில் உருவாகும் கடுமையான நிலைப்பாடு குறித்து இருவரும் விவாதித்துள்ளார்கள். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக , 13 இல் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்கிற செய்தி பசிலிடம் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கை, இந்தியத் தரப்பிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த விடயத்தில் இந்தியாவானது கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது போலொரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் மற்றும்…

  12. பயங்கரவாதம்: சுருக்கக் குறிப்புகள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா பயங்கரவாதம் ஒரு பண்புப் பெயர் அல்ல. நம் வாழ்வில் நாளாந்தம் அனுபவிக்கும் கொசுக் கடி, மின்சார வெட்டுபோல் உயிர்த்தோற்றமுள்ள ஒரு மெய்மை என்றுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு நகரின் தெருவிலோ அல்லது சந்தையிலோ அரசியல், மத, கருத்தியல் காரணங்களுக்காகக் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும். ஐந்து வார இடைவெளியில் இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள். ஒன்று அமெரிக்காவின் பொஸ்டன் நகரம். மற்றது ஐக்கிய ராச்சியத்தின் லண்டன். ஐக்கிய ராச்சியத் தெருக்களுக்குப் பயங்கரவாதம் 9/11க்குப் பிறகு வந்ததல்ல. இஸ்லாமிய குண்டுதாரிகளுக்கு முன்பு 70களிலும் 80களிலும் ஐரிஷ் விடுதலை இயக்கமான ஐ ஆர் ஏ …

  13. ஐந்து கண்கள்: மானுட யாப்பின் மீறல் சேரன் 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எஸ்.ஏ. - 18 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையும் வேறு போர்க்கலங்களையும் வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈழத் தமிழ் இளைஞர்கள் மூன்று பேரை நியூயோர்க்கில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ கைதுசெய்தது. ஆயுத விற்பனையாளர்களிடம்தான் போர்க்கலங்களை வாங்குகிறோம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் எஃப்பிஐ உளவாளிகள்தான் ஆயுத விற்பனையாளர்கள் போலத் தொழிற்பட்டு அந்த இளைஞர்களைச் சிக்கவைத்துவிட்டார்கள். பிற்பாடு, வேறு இரு ஈழத் தமிழ் இளைஞர்களும் ‘பயங்கரவாதம்’ பரவ உதவிசெய்தார்கள் எனக் கூறியும் கனடிய அரசால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எல்லா இளைஞர்களும் கனடியக் குடி…

  14. விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்கிப் பார்க்கும் சம்பந்தனின் கனவு யாருடையது? (ஆதாரங்களுடன் சிறப்பாய்வு) ஞாயிற்றுக்கிழமை, ஆடி 14, 2013 1:48 pm வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் போட்டியிரும் வேட்பாளரைத் தெரிவு செய்யும் முயற்சி கடும் சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளது. சட்ட அறிவுடைய ஒருவரே வடக்கு முதல்வராக வரவேண்டும் என்ற தலைவர் சம்பந்தனின் விருப்பமும், வடக்கை சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்று கட்சியிலுள்ள வடபகுதியைச் சேர்ந்தவர்களின் விருப்பமும் மோதி்க் கொள்வதால் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் நேற்று வரையில் மூன்று தடவைகள் கூடிய போதும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைக் கட்சி உறுப்பினர்களால் தெரிவுசெய்ய முடியவில்லை. அநேகமாக நாளை அதுபற்றி…

    • 20 replies
    • 2.2k views
  15. இரண்டேநாளில் வெளுத்தது பசிலின் சாயம். - புகழேந்தி தங்கராஜ் நாலுபேருக்குத் தெரிகிறமாதிரி ஏதாவதொரு துறையில் பிரபலமாகிவிட்டால், தன் சமூகத்தைத் திரும்பிக்கூட பார்க்கமாட்டான் தமிழன். ‘உங்களுக்கு இருக்கிற பாப்புலாரிட்டிக்கு அரசியல் பற்றியெல்லாம் நீங்கள் பேசலாமா’ என்று வேப்பிலை அடித்தே ஊமையாக்கி விடுவார்கள், சுற்றியிருக்கிற பூசாரிகள். இந்தப் பொதுவான விதிக்கு, விதிவிலக்கு மாயா. இசை உலகில் தமிழனின் ஒருமுகம் ஏ.ஆர். ரஹ்மான் என்றால், இன்னொரு முகம் – எம்.ஐ.ஏ. என்கிற பெயரில் பாப் இசை உலகை அதிரவைக்கும் மாயா. ஈழச் சகோதரியான இந்த இளம் பாடகி, ‘எங்கள் மண்ணில் நடந்தது போர் அல்ல… அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை’ என்பதை உலக அரங்கில் உரத்த குரலில் பதிவு செய்து வருபவர். எதிர்த்துக் கு…

  16. புளொட் இயக்கத்தால் தற்போது உமா மகேஸ்வரன் நினைவாக வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது.உண்மையில் புளொட் அதற்கு தகுதியுடையதா?தாம் கொலைசெய்து தொலைத்த உமா மகேஸ்வரனுக்கு நினைவுதினம் இன்னமும் தேவைதான?உமா கொலையின் கதை இது, 1989 ஜூலை15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் அநாதரவான நிலையில் சூட்டுக்காயங்களுடன் உமா மகேஸ்வரன் என்று அழைக்கப்பட்டட கதிர்காமர் நல்லைநாதனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு கொழும்பு பெரியாஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் அவர் மனைவி அகிலேஸ்வரி அடையாளம் காட்டினார்.புளொட் இயக்கத்தின் தலைவரான உமா மகேஸ்வரன் உடல் எப்படி கடற்கரைக்கு வந்தது? புளொட் உறுப்பினர்கள் ஏன் தங்கள் தலைவரைத்தேடவில்லை? உமாவின் மெய்க்காப்பாளர்கள் எங்கே போனார…

    • 0 replies
    • 2.9k views
  17. மேட்டுக்குடி உறவுகளைத் துறப்பாரா விக்னேஸ்வரன்? முத்துக்குமார் இந்திய அரசின் புண்ணியத்தில் வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. ஆனால் அரசியற் கட்சிகள்தான் இன்னமும் வேட்பாளர் பட்டியலை நிறைவு செய்யவில்லை. இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்குள்ளும் உள் இழுபறிகள் முடிவுக்கு வரவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள கட்சிகள் சில தனித்துப் போட்டியிடுவதா? கூட்டணிச் சின்னத்தில் போட்டியிடுவதா? என இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கூட்டணியில் பிரதான கட்சியாக விளங்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் விருப்பிலேயே உள்ளது. வடமாகாணத் தேர்தல் நடைபெறலாம…

    • 4 replies
    • 1.1k views
  18. சீனா, சிறிலங்கா குறித்த மூலோபாயக் கொள்கைகளை இந்தியா மாற்ற வேண்டும் – கேணல் ஹரிகரன் [ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 05:13 GMT ] [ நித்தியபாரதி ] சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரிப்பதால் ஏற்படுகின்ற ஆபத்தை தவிர்ப்பதற்கு, சீனா மற்றும் சிறிலங்கா தொடர்பான தனது மூலோபாயக் கொள்கைகளில் இந்தியா மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு சண்டேலீடர் ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ள இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். அவரது செவ்வியை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் 'நித்தியபாரதி'. கேள்வி: சிறிலங்காவின் தேசிய பிரச்சினையில் இந்தியா கடந்த பல பத்தாண்டுகள…

    • 7 replies
    • 933 views
  19. ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து விலகிய ஒருவரின் நேரடி வாக்கு மூலம். வணக்கம் மக்களா. நான் தவராசா தினேஷ் நான் இலங்கையின் வவுனியா பகுதியை சேர்ந்தவன் இப்போது மலேசியாவில் வாழ்கிறேன். நான் EPDP கட்சியில் இருந்து தப்பி ஓடியவன். அது கட்சி என்று சொல்வதைவிட நரகக்குழி என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மோசமான இடம். டக்ளசின் தலைமையில் மிகப்பெரும் சட்டவிரோத செயல்களே அங்கு நடைபெறுகிறது. இதில் இடம்பெறும் உறுப்பினர்கள் எல்லோரும் மிகப்பெரும் குற்றவாளிகள். நானும் அப்படியே இருந்தேன் இப்போது திருந்தி வாழ்கின்றேன். இக்கும்பலிடம் சிக்கினால் எனக்கு மரணம் தான் நான் உயிருக்கு பயப்பிடவில்லை நான் செய்த பாவங்களுக்கு தண்டனை பெறத்தானே வேண்டும் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். மக்களே நான் இந்த நரகக…

    • 9 replies
    • 1.5k views
  20. தடைசெய்யப்பட்ட 'ரைம்' சஞ்சிகையும் வலுவடையும் பௌத்த தீவிரவாதமும் - பார்த்தீபன் - 10 ஜூலை 2013 உலகின் முன்னணி சஞ்சிகையான அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ரைம்' வார இதழ் கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டது. பின்னர் சஞ்சிகை தடை செய்யப்பட்டு சுமார் 4,000 பிரதிகளை சுங்கப் பகுதியினர் கைப்பற்றிக்கொண்டார்கள். சர்வதேச ரீதியில் முன்னணியிலுள்ள சஞ்சிகை ஒன்று இலங்கையில் தடைசெய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பதால் விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றது. ஊடக சுதந்திரம் தொடர்பில் முக்கியமாகப் பேசப்படும் நிலையில் இந்தத் தடை, அதுவும் அமெரிக்காவின் முன்னணி சஞ்சினை ஒன்றின் மீதான தடை அனைவரின் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் கவனத்துக்குச…

    • 1 reply
    • 459 views
  21. ஆபிரிக்காவில் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த முதலாவது நாடு தென் ஆபிரிக்கா: அங்கு வாழ்ந்த வெள்ளையர்களிடம் கொடுத்ததால், 'போராட்டம் இன்றி' கொடுக்கப் பட்டது. கடைசியாக 'போராடி' பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தவர்கள், ரொடிசியா என அழைக்கப் பட்ட சிம்பாவே. இரு நாடுகளிலும் பெரும்பான்மையினர் கருப்பர்கள். வெள்ளை சிறுபான்மையினர் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். தாம் சிறுபான்மையினர் என்ற எண்ணம் இல்லாது, மேற்குலகம் ஆதரவு தரும் என இறுமாந்து எந்த வித சமரசமும் இன்றி, பெரும்பான்மை இனத்தவருடன் மோதி, தோற்று, பின்னர், பலவீனமான நிலையில் பேச்சு வார்த்தைக்குப் போய், வெள்ளையர் நலன்களை உறுதிப் படுத்தி பின்னர் சுதந்திரம் வழங்கி, இன்று பிரித்தானியா என்றாலே பாம்பாகச் சீ…

    • 8 replies
    • 818 views
  22. நமது தற்போதைய அரசியல் அலசல்கள் புலிகள் தவிர தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் எந்த தனிநபரோ அமைப்போ கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததில்லை. பேரம் பேசும் வல்லமையை வளர்த்துக்கொண்டதும் இல்லை. சிங்கள அரசுடன் பேசும் போதும் தமிழீழம் என்ற கொள்கையை விட்டு புலிகள் இறங்கியதேயில்லை. முழுப்பேச்சுமேசைகளும் அதைச்சுற்றியதாகவே இருக்கும். 'தேசிய நலனுடன் ஒத்துப்போகும் வரை உடன்படிக்கைகள் மதிக்கப்படுகின்றன" என்ற நெப்போலியனின் கூற்றையும் 'நான் எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட எப்போதும் தயாராக உள்ளேன். ஏனென்றால்அதை முறிக்காமல் விலக எனக்குத் தெரியும்" என்ற கிட்லரின் கொள்கையையும் பிரபாகரன் இறுகப்பற்றியபடியே பேச்சு மேசைகளில் பங்கெடுத்தார். ஆனால் அன்றும் சரி இன்றும் சரி சிங்கள அரசு…

  23. மிக மும்மரமாக, வட மாகாண சபைக்கான தேர்தல்களுக்கு முன்னர், அம்மாகான சபைகள் உருவாக வழிவகுத்த அரசியில் அமைப்பின் 13 வது சட்டத்தினையே ஒன்றுமில்லாமல் ஆக்கி, வெறும் தேர்தலை வைத்து, தமிழர்களை மட்டும் மல்லாது சர்வதேச நாடுகளையும் ஏமாத்த சகோதரர்கள் போட்ட திட்டம் இந்திய கோப சுழியில் சிக்கி சிதறி விட்டது போல் தெரிகின்றது. அவிட்டு விட்டப் பட்ட, அமைச்சரவையில் இருந்த இனவாதிகள் மீண்டும் கட்டப் படுகின்றனர். தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி, இந்தியாவின் உதவியுடன் வரையப் படும் இந்த சிறு கோட்டினைப் பிடித்து ரோட்டினைப் போடுவது தான். http://www.dailymirror.lk/news/32300-govt-to-proceed-with-pc-polls-under-existing-provisions-of-13th-amendment.html

    • 17 replies
    • 1.6k views
  24. அலுவலகத்தில் ஒரு நண்பர். வெள்ளையர். அமெரிக்கர். ஒரு விடயம், துல்லியமாக சொன்னார்: அசந்து போனேன். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியவில்லை. உலகின் அண்மைய ஆயுத விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு போராட்டம் எத்தியோபியாவிற்கு எதிரான எரித்திரிய மக்கள் முன்னெடுத்த போராட்டமே ஆகும். அந்த போராட்ட அமைப்பின் தலைமை ஒரு பட்டம் பெற்ற பொறியியலாளர். மிகச் சரியான முடிவுகளை மிகச் சரியான தருணங்களில் எடுத்திருந்தார். உங்கள் போராட்ட தலைமைக்கும் அந்த போராட்ட தலைமைக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாடு இது ஒன்று தான் என்றார். ***** எமது இனமானது கல்வியினால் முன்னேறிய இனம். வட அமெரிகாவில், அமெரிக்க சுதந்திர பிரகடனத்துடன், முதலாவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வீழ, இரண்டாவது பிரிட்டிஷ் சா…

  25. TNA பகிரங்க கோரிக்கை:- யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது. இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் சார்பில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம், பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். கூட்டமைப்பில் அமைய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும்; சுகாதாரத்துறை மேம்பாடென பல மில்லியன் மோசடிகள் இடம்பெற்றுள்ளது. இவற்றின் பின்னணியில் எல்லாம் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் இருந்ததாக நாம் சந்தேகிக்கின்றோம். ஏனெனில் அவர் தன்னை அமைச்சர் டக்ளஸினது தம்பியென கூறி கட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.