அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்? நிலாந்தன்! August 22, 2021 பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல வந்திருக்கிறார். இவர் யுத்தகாலங்களில் பாதுகாப்புத்துறை பேச்சாளராக இருந்தவர். அந…
-
- 0 replies
- 650 views
-
-
கோத்தா-கூட்டமைப்புப் பேர்ச்சுவார்த்தை. தரகர்களின் காலில் வீழ்வதை விடவும் எதிரியிடமே பேசுவது என்னமோ பெட்டர்தான். அதிலும் அரைகுறைகளிடம் அல்லாது அசல் "சிங்களத் தலைவனிடமே" பேசிவிடுவது சாலச்சிறந்தது. ஆட்சி மாற்றம், ஊழல் ஒழிப்பு என்று சிங்கள தேசத்தை அதன் அழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சி எதுவும் எடுக்காது, மொள்ளைமாரிகள், போலி ஜனநாயகவாதிகளுடன் கைகோர்க்காது நேரே "பாசிஸ்ட்டுகள்" இடமே பேசத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதுதான் "புலிவழி" "பலம்தான் உலக ஒழுங்கைத் தீர்மானிக்கிறது" என்பது நந்திக்கடலோன் வாக்கு. சிங்களதேசம் அந்நிய செலவாணிக்கு வழியின்றி பாதாளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து சிங்கள தேசத்தைக் காப்பாற்றும் வல்லம…
-
- 0 replies
- 444 views
-
-
-
- 3 replies
- 610 views
-
-
இளங்கோவன் என்ற தமிழ் நாட்டுக் காங்கிரஸ் அரசியல்வாதி, ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரும் விடுவிக்கப்பட்டால் தாம் தீவிரவாதிகளாக மாறப்போவதாக மிரட்டிருயிருக்கிறார் என்று முகநூலில் சில செய்திகள் சொல்கின்றன.. https://www.facebook.com/Sevanthinetwork/timeline?filter=1 இப்போதாவது புரிகிறதா தீவிரவாதிகள் ஒழிந்திருக்கும் குகை எங்கே என்று. தலைமைகள் தொடக்கம் தொண்டுகள் வரைக்கும் உள்ளே தள்ளப்பட வேண்டியவர்களின் மடம் அது. பிடித்து உள்ளே தள்ளிவிட வேண்டியதுதானே. ஏன் தாமதம்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ரஜீவ் காந்தி காலம் தொடக்கம் பதவியில் இருந்தபோதெல்லாம் கொள்ளை அள்ளிய கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் ஒருவரின் மானம் கெட்டதனமான வீராப்பு பேச்சு அது. இந்த வீரவண்டி…
-
- 7 replies
- 1.1k views
-
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது எவ்வாறு? உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய தினங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள் தற்போது தேர்தலுக்கு மும்முரமாக தயாராகிவருகின்றன. இம்முறை தேர்தலானது புதிய முறையில் நடைபெறவுள்ளமையே விசேட அம்சமாகவுள்ளது. இந்நிலையில் புதிய வட்டாரம் மற்றும் விகிதாசார முறை என கலப்பு முறையில் தேர்தல் நடைபெறவுள்ளமையே விசேட அம்சமாகும். அதன்படி தேர்தல் எவ்வாறு நடக்கும்? இரண்டு முறைகளிலும் எவ்வாறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்? வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது? இதுபோன்ற கேள்விகள் தற் போது சமூகத்தில் எழ…
-
- 2 replies
- 665 views
-
-
விழிப்படைத்த தமிழரசுக் கட்சியும் மாற்று தலைமை பற்றிய பேச்சும் 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது அபிலாசைகள் தேர்தல் நோக்கிய அரசியலில் தங்கியிருக்கின்றது. கடந்த எட்டரை ஆண்டுகளாக அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களது ஆணை பெற்ற கட்சியாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அண்மைக் காலமாக மாற்றுத் தலைமை, புதிய தலைமை என்கின்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை சாத்தியமா...?, அதற்கேற்ற நகர்வுகள் மக்கள் நம்பும் படியாக நடக்கின்றதா என்ற கேள்விகள் மீண்டும் மக்கள் மத்தியில் எழத்தொடங்கியிருக் கின்றன. தமிழ்…
-
- 0 replies
- 470 views
-
-
-
- 1 reply
- 810 views
-
-
கேள்விக்குறியாகியுள்ள மக்களின் பாதுகாப்பு -என்.கண்ணன் ஊடகங்கள் கூறுவது போன்று வடக்கில் மோசமான நிலை இல்லை, என்ற அவரது கருத்து அபத்தமானது. ஏனென்றால், ஊடகங்கள் நடக்காத ஒன்றைச் செய்தியாக்கவில்லை. நடந்த சம்பவங்களை செய்தியாக்குகின்ற போது, ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்கள் இடம்பெறும் போது அல்லது அடுத்தடுத்து இத்தகைய சம்பவங்கள் தொடரும் போது, அதனை பாரதூரமாகவே மக்கள் பார்ப்பார்கள் என்பது வெளிப்படை. ஓரிரு சம்பவங்களை வைத்துக் கொண்டு ஊடகங்களால் ஒன்றையும் ஊதிப் பெருப்பித்து விட முடியாது. அதேவேளை, தொடர்ச்சியான சம்பவங்கள் நடக்கும் போது, அதனை ஒரு சமூகப் பிரச்சினையாக வெள…
-
- 1 reply
- 423 views
-
-
தேர்தலும் ‘வாதங்களும்’ மொஹமட் பாதுஷா இலங்கை போன்ற நாடுகளில் முன்வைக்கப்படும் இன, மத பயங்கர வாதங்களுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பிருக்கின்றது. இங்கே அரசியல் எனும் போது உள்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு அரசியல் நகர்வுகளுக்கும் தொடர்பிருக்கின்றது என்பது நாம் அறியாததல்ல. சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இனம் சார்ந்த அரசியல் இலங்கையில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்திருக்கின்றது என்பதை வரலாற்றை ஆழமாக நோக்குகின்ற யாரும் அறிந்து கொள்வது அவ்வளவு கடினமன்று. இதே வகிபாகத்தையே மதவாதமும், பெருந்தேசிய வாதமும், பயங்கரவாதமும் தீவிரவாத போக்குகளும் வகித்து வந்தி…
-
- 0 replies
- 287 views
-
-
தமிழ்நாடு தேர்தல் முடிவு ஈழத்தமிழருக்கு சாதகமாக அமையுமா? தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான போது, பெரும்பாலானவர்களை அது ஆச்சரியப்பட வைத்ததா அல்லது அதிர்ச்சியடைய வைத்ததா என்று கூறமுடியாது. அந்தளவுக்கு கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவு. தமிழ்நாட்டை ஆட்சி செய்த கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கு இப்படியொரு தோல்வியை எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. அதிமுகவுக்கு இப்படியொரு வெற்றி கிடைக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. உண்மையில் சொல்லப் போனால் இந்த வெற்றியை ஜெயலலிதா கூட எதிர்பார்த்திருக்கமாட்டார். அதுபோல கருணாநிதி இதுபோன்ற தோல்வியையும் எதிர்பார்த்திருக்கமாட்டார். அந்தளவுக்கு இது எதிர்பாராத முடிவைத் தந்துள்ளது. அதி…
-
- 0 replies
- 783 views
-
-
நடந்து முடிந்த நாட்டின் 7வது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பல செய்திகளை உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளது. நாட்டின் இனமத பேதங்கள் வேண்டாம், நீதியான சுதந்திரமான நல்லாட்சி வேண்டும், சிறுபான்மையினரை ஒதுக்கக்கூடாது, உண்மையான ஜனநாயகம் வேண்டும் போன்ற பல செய்திகளை உரத்துச் சொல்லியுள்ளது. நிற்க இத்தேர்தலில் தமிழர்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகம் வாழும் வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் மேலும் பல செய்திகளைச் சொல்லியுள்ளது. இம்முறை தமிழ்மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தமையே இச்செய்திக்குக் காரணமாகும். 2005ல் மஹிந்த வெல்லவும் 2015ல் மஹிந்த தோற்கவும் காரணம் வடக்கு கிழக்கு மாகாணமே. அதிலும் தமிழ் மக்களே எனலாம். ஆம் 2005ல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாமென விடுதலைப் புலிகள் கூறியமையினால் மஹிந…
-
- 1 reply
- 1.3k views
-
-
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் என்றும் இல்லாத வகையில் ஆண்ட மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற முழு நாட்டிலும் உள்ள தமிழ் மக்களும் ஒற்றுமையாக வாக்களித்து அவரை தோல்வியடைய செய்துவிட்டார்கள். இது ஒவ்வொரு தமிழ் மக்களின் மனக்குமுறலின் வெறுப்பின் வெளிப்பாடாகும். அது மாத்திரம் இல்லாது யுத்தத்தில் போது மரணத்தை தழுவிய லட்சக்கணக்கான ஆத்மாக்களின் சாபமும் அவருக்கு எதிரான செயல்பட்டது எனலாம். மகிந்த ராஜபக்ச குடும்பம், அவருக்கு ஆதரவாகவும் செயல்பட்ட அனைத்து அடியாட்களும் அனுபவித்த சுகபோகங்களை கனவில் கூட யாரும் அனுவிக்க முடியாது எனலாம். ஆம் மகிந்தவிற்கு ஆதரவாக செயல்பட்ட அத்தனை கட்சிகளின் தலைமைகள், உறவுகள் ,அடியாட்கள்,அதிகாரிகள் செ…
-
- 0 replies
- 516 views
-
-
விக்னேஸ்வரனின் புதிய கட்சி முதலில் எந்த தேர்தலில் களமிறங்கும்? தற்போது கலைக்கப்பட்டுள்ள வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய கட்சியை ஆரம்பிக்கும் அறிவிப்பை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தின் நல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில்வைத்து செய்திருக்கிறார். அதன் பெயர் தமிழ் மக்கள் கூட்டணி.கடந்த சில வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குமுறிக்கொண்டிருந்த முரண்பாடுகளும் பிளவும் இப்போது வெட்டவெளிக்கு வந்துவிட்டது.இது வடக்கு அரசியலில் மாத்திரமல்ல தெற்கு அரசியலிலும் விளைவுகளை ஏற்படுத்தும்.இலங்கையில் சர்வஜனவாக்குரிமையை அடிப்படையாகக்கொண்ட ஜனநாயக அரசியல் தொடங்கிய காலம் முதல் இன்று வரை ஏதாவது ஒரு அரசியல் கட்சியே வடக்கில் …
-
- 0 replies
- 339 views
-
-
ஜனாதிபதி தேர்தலை, தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் – ஏன் பயன்படுத்த வேண்டும்? - யதீந்திரா அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்திற்கு பின்னர், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். யார் பிரதான வேட்பாளர்கள் என்னும் தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. எனினும் அவற்றை ஊகிப்பது கடினமான காரியமல்ல. ரணில் விக்கிரமசிங்கவே பிரதான வேட்பாளராக இருப்பார். அவரை எதிர்த்து எவர் நிறுத்தப்படுவார் என்பதை இப்போதைக்கு ஊகிப்பது கடினம். ஒன்றில் ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளை தோற்கடிக்க வேண்டுமென்னும் வியூகமொன்று, உள்ளுக்குள்ளும் வெளியிலும் வகுக்கப்படுமாக இருந்தால் மட்டும்தான், ஒரு பலமான பொது வேட்பாளரை நாம் காண முடியும். இல்லாவிட்டால்…
-
- 1 reply
- 754 views
-
-
சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் ; இரண்டு பிரேத பரிசோதனைகள் - நிலாந்தன் சாந்தன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். பொதுவாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஆயுள் தண்டனை எனப்படுவது விடுமுறை நாட்களைக் கழித்து பார்த்தால் 15 ஆண்டுகள். சிறை, சிறப்பு முகாம் போன்ற இடங்களில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தது 33 ஆண்டுகள். அப்படிப்பார்த்தால் அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை முடித்துவிட்டார். அதற்கு பின்னரும் அவர் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள் தமிழக அரசைக் குற்றஞ்சாட்டுகின்றார்கள். இந்த விடயத்தில் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. இந்திய மண்ணில் பாரதூரமான குற்றச் செயல்களுக்…
-
-
- 1 reply
- 482 views
-
-
கோட்டாவின் புத்தகம் March 12, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — கோட்டாபய ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி’ (The Conspiracy to oust me from the Presidency) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நூலை இலங்கையின் முக்கியமான நூல் நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவர் கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் அறியத் தந்திருக்கிறார். கொழும்பில் அரசியல்வாதிகளையும் இராஜதந்திரிகளையும் அழைத்து பெரும் ஆரவாரத்துடன் நூல் வெளியீட்டு வைபவத்தை நடத்துவதை அவர் தவிர்த்திருக்கிறார். உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இந்த நூலுக்கு பெரும் முக்கியத்துவம்…
-
- 0 replies
- 636 views
-
-
காலம் கோருவது வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே May 16, 2024 — கருணாகரன் — “முள்ளிவாய்க்கால் கஞ்சி“ யை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை – மூதூரில், மூன்று பெண்களைப் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட முறை மிகத் தவறானது. இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின்போதும் இது சமர்ப்பிக்கப்படலாம். இரவு வேளையில் வீட்டில் அணிந்திருக்கும் ஆடைகளோடு கிரிமினல் குற்றவாளிகளைப் போல குற்றம்சாட்டப்பட்ட பெண்களை ஆண் பொலிஸார் கொற இழுவையாக இழுத்துச் செல்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் இந்தக் கைதுக்கு முறைப்படியான நீதிமன்ற ஆணை பெறப்படவில்லை என்று கூறப்படு…
-
- 0 replies
- 346 views
-
-
பொதுத்தேர்தலும் இனப்பிரச்சினையும் படம் | IBTIMES எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தல் இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இடம்பெறுகின்ற இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கும் உருப்படியாக எந்தவொரு செயன்முறையையும் முன்னெடுக்காத தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இப்போது அந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசத் தலைப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜூலை 28ஆம் திகதி வெளியிட்ட அதன் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்புக்க…
-
- 0 replies
- 197 views
-
-
மென்வலு யுத்தம்! - பி.மாணிக்கவாசகம் விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகின்றன. ஆனால் உண்மையில் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. அது மறுவடிவத்தில் சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதையே உணர முடிகின்றது. ஆனால், இது ஆயுதமேந்திய யுத்தமல்ல. பதிலாக மென்வலு சார்ந்த யுத்தம். ரத்தம் சிந்தாதது. எனினும் மோசமானது. இன அழிப்பை அப்பட்டமான நோக்கமாகக் கொண்டது. அந்த வகையில் பௌத்த மதத்தைத் திணிக்கவும், தமிழ்மக்களின் தாயக மண்ணைக் கபளீகரம் செய்வதற்காகவும் இந்த மென்வலு யுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. …
-
- 0 replies
- 912 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமும் ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகளும் - யதீந்திரா அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தை கோரியிருக்கின்றார். இது தொடர்பில் தமிழரசு கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளுபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உறுதியான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்னும் நம்பிக்கை கூட்டமைப்பின் தலைவர்களால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நம்பிக்கையூட்டப்பட்ட அளவிற்கு விடயங்கள் எதுவ…
-
- 0 replies
- 739 views
-
-
அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை – நிலாந்தன். adminOctober 20, 2024 வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் கோசிமினின் வாக்கியம் ஒன்று உண்டு”மக்களிடம் செல்லுங்கள். மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள். மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்று. மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தயார்? கடந்த பல தசாப்தங்களில் தமிழ்கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட விடயங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை? எல்லாப் பழியையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மீது சுமத்திவிட்டு தமிழ…
-
- 1 reply
- 356 views
-
-
மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன? November 20, 2024 — கலாநிதி சு.சிவரெத்தினம் — நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் என்பார்கள், பொருளாதார நெருக்கடியும், வரிசைக்(queue) காலமும் இடம்பெற்றதும் நன்மையாகத்தான் முடிந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த உயர்வர்க்க ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்பட்டு சாதாரண உழைக்கும் வர்க்கத்திலிருந்து பல கஸ்ரங்களை அனுபவித்த ஒருவர் ஜனாதிபதியானதும். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிதியையும் அதிகாரத்தையும் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள் என்பதை புதிய ஜனாதிபதியும் அவருடைய அரசும் வெளிக்காட்டியதும் மக்களை முன்னைய ஆட்சியாளர்கள் மீது…
-
- 0 replies
- 325 views
-
-
காஷ்மீர்: இறையாண்மையும், நிலப்பரப்பும் செப்டம்பர் 2019 - ராஜன் குறை · கட்டுரை As if the actual state were not the people. The state is an abstraction. The people alone is what is concrete. -Karl Marx இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு குடியரசுகளாக பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, சில மன்னராட்சி பிரதேசங்கள் இரண்டில் எதனுடன் இணைவது என்ற கேள்வியை எதிர்கொண்டன. அதில் காஷ்மீரும் ஒன்று. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அழுத்தத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் இது மன்னரின் இசைவாக இருந்ததே தவிர மக்களின் குரலாக இல்லை. சில தனித்த உரிமைகளை அந்த மாநிலத்திற்குக் கொடுப்பதன் மூலம் மக்களைத் திருப்திபடுத்தவே இந…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலக வல்லரசின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய ஆண்டாக கடந்து செல்லும் 2024 – வேல்ஸில் இருந்து அருஸ் December 30, 2024 மனித வரலாற்றில் மிக அதிக நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்ற ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 70 இற்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது உலக மக்கள் தொகையில் அரை பங்குக்கு மேற்பட்ட மக்கள் தமது வாக்குபலத்தை பயன்படுத்தியுள்ளதுடன், பல நாடுகளில் தேர்தல்கள் இன்றியே ஆட்சி மாற்றங்களும் இடம் பெற்றுள்ளன. சிரியாவில் அரசு கைப்பற்றப்பட்ட அதே சமயம் ஜேர்மனி அரசும் வீழ்ந்தது. மறுபுறமாக தென்கொரிய அதிபரும் தனது பதவியை இழந்தார், அதற்கு முன்னர் பங்களாதேசத்தின் ஹசீனா அரசு வீழ்த்தப்பட்டது, மேலும் ஈர…
-
-
- 1 reply
- 391 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்; முதற் கோணல் -இலட்சுமணன் நம்மவர்களின் புதிய புதிய நம்பிக்கைகள்தான், வரலாற்று முரண்நகைகளை உருவாக்கிவிடுகின்றன என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. சிறுவன் சுர்ஜித், நம்போன்ற பெற்றோர்களின் கவனக்குறைவால் பலியாகி விட்டான். கவனக்குறைவுக்குப் பின்னரான செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளால், அவன் பலியானதாகப் பலர் குறைப்படுகிறார்கள். அதுவும் தவறுதான். இவ்வாறுதான், நம்மிடமே முதற் பிழையை, பிழைகளை வைத்துக் கொண்டு, அதை ஏற்றுக் கொள்ளாமலேயே நாம் எவ்வளவு தூரம்தான் பயணித்துவிட முடியும்; எதைத்தான் சாதித்துவிடமுடியும்; எதிர்த்தரப்பிடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்? இந்த வகையில், பெறுமதியான மிகப்பெரிய பிரச்…
-
- 0 replies
- 585 views
-