அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
கடந்த வார ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக இரண்டு விவகாரங்கள் காணப்பட்டன. ஒன்று முன்னணி ஊடக நிறுவகம் ஒன்றுக்கு எதிராக மங்கள சமரவீர வழக்குத் தொடுத்துள்ளமை. இரண்டாவது ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்துகின்ற அல்லது அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகின்ற எவரையும் சிறிலங்கா அரசாங்கமானது தடைசெய்யும் என்கின்ற அறிவிப்பு. சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் என்பது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தனிப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் மங்கள சமரவீர, முன்னணி ஊடக நிறுவகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தமை தொடர்பில் சிலர் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ள அதேவேளையில், இந்த ஊடகமானது தொழில்சார் ஒருமைப்பாட்டை ம…
-
- 0 replies
- 470 views
-
-
தமிழர்களிடம் எதிரான கருத்து நிலை உருவாகாமல் அடக்கி வாசிக்கும் புதுடில்லி —2009 இன் பின்னரான பன்னிரென்டு ஆண்டுகளில் ஈழத்தமிழர்களின் இந்தியா குறித்த எதிர்பார்ப்பு, நம்பிக்கை ஆகியவற்றுக்கு மாறாக இலங்கைக்கு கூடுதல் நிதிகளை வழங்கிப் புவிசார் அரசியல் அடிப்படையில் உறவைப் பேணுகின்றோம் என்ற குற்ற உணர்வு இந்திய மனச் சாட்சிக்குப் புரிகின்றது—- -அ.நிக்ஸன்- புவிசார் அரசியல், பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையை மையப்படுத்தி இந்தியா வகுக்கும் வியூகம், அமெரிக்கா, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் பின்னணியோடு வெளிப்பட்டு வருகின்றது என்பதை இலங்கையின் சமீபத்திய நகர்வும் அதன் மீதான நம்பிக்கைகளும் கோடிகாட்டுகின்றன. …
-
- 2 replies
- 495 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் போர் வலயமான வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்தில் தனது கண்முன்னாலேயே கடத்தப்பட்ட தனது மகனை இவரின் தாயாரான 46 வயதான பேரின்பராணி திருநாவுக்கரசு கடந்த ஆறு ஆண்டுகளாகத் தேடிவருகிறார். சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் காணாமற்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கானவர்களின் உறவுகளில் திருநாவுக்கரசுவும் ஒருவராவார். "2008ல் இராணுவச் சீருடை தரித்தவாறு உந்துருளிகளில் வந்த எட்டுப் போல் எனது மகன் கடத்தப்பட்டான்" என திருநாவுக்கரசு, அல்ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்தார். "எனது மகன் நாட்டின் தென்பகுதியிலுள்ள பூசா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாக என்னிடம் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவ…
-
- 0 replies
- 412 views
-
-
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும் ரணிலும் 01 SEP, 2022 | 03:59 PM 'அறகலய' மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த நாட்களில் 'கோட்டா வீட்டுக்கு போ ' என்ற சுலோகத்துக்கு நிகராக ' நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் ' என்ற கோரிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.பெரும்பாலும் சகல அரசியல் கட்சிகளுமே அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தன.மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்குதல்களுக்கு ஆளான நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளை ஆதரிக்கத்தயாராயிருப்பதாக கூறவேண்டியேற்பட்டது. மக்கள் கிளர்ச்சி தணிந்துபோயிருக்கும் நிலையில…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
மாகாண எல்லை மீள்நிர்ணயம்: கை உயர்த்துமா ‘கறுப்பு ஆடுகள்’? ஏ.எல்.நிப்றாஸ் சிரியாவில், பலஸ்தீனத்தில் தம்மைத் தாக்குவதற்கு வருகின்ற கவச வாகனங்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வயதான பெண்களின் தைரியமும் துணிச்சலும் கூட, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு இல்லை என்பதைத்தான் நெடுங்காலமாக கண்டும் உணர்ந்தும் வருகின்றோம். முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவாக்க, யாப்பு ரீதியான அநியாயங்கள், கொள்கை வகுத்தல்கள், மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ‘நக்குண்டார் நாவிழந்தார்’ என்பது போல எல்லாவற்றுக்கும் ஆதரவளிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்…
-
- 0 replies
- 556 views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் ஜனாதிபதி ரொபட் அன்டனி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு திகதியொன்றை குறித்துக்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின்போது தெரிவித்ததாக சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினர் குறிப்பிட்டிருந்தனர். எனினும் சுதந்திரக் கட்சி சார்பாக தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 23 பேர் கொண்ட அணியினர் ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லையென தெரிவித்திருந்தனர்.இந்த விடயத்தில் சுதந்திரக் கட்சியின் இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் கடும் போட்டியும் முரண்பாகளும் நிலவின. இதனால் ஜனாதிபதி அ…
-
- 0 replies
- 541 views
-
-
பேரவையின் இளைஞர் மாநாடு: விக்னேஸ்வரனைக் கரை சேர்ப்பதற்கான முயற்சி இளைஞர் மாநாடுகளை நடாத்துவது தொடர்பான அறிவித்தல்களை, தமிழ் மக்கள் பேரவையும் தமிழரசுக் கட்சியும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான சூழலில், இளைஞர் மாநாட்டுக்கான அறிவித்தல்கள் கவனம் பெறுகின்றன. தற்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் களத்தை, (குறிப்பாக தேர்தல் கள அரசியலை) நோக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முனையிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி. விக்னேஸ்வரனை முன்மொழியும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இன்னொரு முனையிலும் நிற்கின்றன.…
-
- 0 replies
- 466 views
-
-
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்க இன்னமும் சரியாக ஒரு மாதமே இருக்கின்ற நிலையில், ஜெனீவா, வாஷிங்டன், பிரசெல்ஸ், புதுடில்லி என்று அவசரமான இராஜதந்திர கலந்துரையாடல்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது அரசாங்கம். இலங்கை அரசாங்கம் காட்டுகின்ற இந்த இராஜதந்திர முனைப்புகளின் அவசரத்துக்கு ஒரே காரணம் வரும் மார்ச் 26 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தான். கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, 28ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதுவும் கூட,கடந்த மார்ச் அமர்விலேயே தீர்மானிக்கப்பட…
-
- 0 replies
- 367 views
-
-
http://www.kaakam.com/?p=1381 தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதை தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காது. அத்துடன் தமிழர்களின் மீதான ஆரியமாயையான இந்தியாவின் வரலாற்றுப் பகை என்பது எச்சான்றும் குறைத்து மதிப்பிட இயலாது. அண்டை நாடுகள் மீது தனது மேலாண்மையைச் செலுத்த நேரு காலத்திலிருந்து இந்தியா துடியாய்த் துடித்து வருகிறது. தேசிய இன விடுதலையை அடியொட்ட வெறுத்து இந்தியாவைக் காப்பது என்பதையும் தாண்டி அண்டை நாடுகளின் மீதான தனது மேலாதிக்கம் மூலம் அகன்ற பாரதக் கனவில் அன்றிலிருந்து இன்று வரை இந்தியா வெறித்தனமாக வேலை செய்து வருகிறது. இருதுருவ உலக ஒழுங்கிருந்த காலத்தில் JVP கலவரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்த…
-
- 0 replies
- 774 views
-
-
2019ஆம் ஆண்டின் சிந்தனையாளர்கள்: காலத்தை வரையும் தூரிகைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 07 வியாழக்கிழமை, மு.ப. 01:50Comments - 0 உலக வரலாற்றில் சிந்தனையாளர்களுக்கு தனியிடம் உண்டு. அரசனுக்கு வால் பிடித்த சிந்தனையாளர்கள் முதல், அரசனைக் கேள்விகேட்ட சிந்தனையாளர்கள் வரை, எல்லா வகையிலுமான சிந்தனையாளர்களை உலகம் பார்த்திருக்கிறது. உலகின் திசைவழியைச் செதுக்குவதில், சிந்தனையாளர்களுக்குத் தனியிடம் உண்டு. சோக்கிரட்டீஸ் தொட்டு, மக்கியாவலி வரையானவர்களின் கதை ஒன்றானால், ரூசோ முதல் மார்க்ஸ் வரையானவர்களின் கதை இன்னொன்று. உலக வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், சிந்தனையாளர்கள் தவிர்க்க இயலாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டரின் எழுச்சி, பிரெ…
-
- 0 replies
- 823 views
-
-
அமெரிக்கா எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் தன்னாலும் முடியும் என்ற செய்தியை இந்தக் குண்டுத்தாக்குதலை ஏவிய தரப்பு சொல்லியிருப்பது புலனாகிறது. இந்தியா-பாகிஸ்தான் முரண்பாட்டையும் சீன-பாகிஸ்தான் உறவையும் இந்தத் தாக்குதலின் பின்னணியாக ஏன் நோக்கக்கூடாது என்ற கேள்வியை ஈழத் தமிழ் அரசியல் அவதானிகள் எழுப்புகின்றனர். மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமியவாதம்…
-
- 0 replies
- 658 views
-
-
Published By: RAJEEBAN 12 JUN, 2024 | 10:58 AM Neve Gordon and Nicola Perugini www.aljazeera.com அனைவரினதும் கவனமும் ரபாவின் மேல் காணப்பட்ட வேளை, இஸ்ரேல் காசாவின் தென்பகுதியில் உள்ள சிறிய பகுதியை பாதுகாப்பான மனிதாபிமான வலயம் என மே 22 ம் திகதி அறிவித்துவிட்டு நான்கு நாட்களின் பின்னர் அந்த பகுதி மீது குண்டுதாக்குதலை மேற்கொண்டது. இஸ்ரேல் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது மேற்கொண்ட தாக்குதில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், 15 வருடத்திற்கு முன்னர் இலங்கையின் உள்நாட்டுபோரின் இறுதி தருணங்களில் பொதுமக்களின் அவலநிலையை விவரிக்கும் இரகசிய கேபிள்களை விக்கிலீக்ஸ் இடைமறித்த வேளை…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
முஸ்லிம்கள் மீதான பல்கோண ‘நெருக்குதல்கள்’ மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:40 Comments - 0 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு, முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள், பல வழிகளிலும் அதிகரித்திருக்கின்றன. முஸ்லிம் பெயர்தாங்கிகள்தான், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்றாலும்கூட, நிஜத்தில், இத்தாக்குதல் முஸ்லிம் சமூகத்துக்கே பெரும் சிக்கல்கள் நிறைந்த நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் மீது, இன்னுமொரு கட்ட ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும், அதற்கு நியாயம் கற்பிப்பதற்குமான ஒரு களச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஒரு குழுவினர் செய்த, வரலாற்றுத் தவறான பயங்கரவாத நடவடிக்கையைக் காரணமாகக் கூறி, 2…
-
- 1 reply
- 701 views
-
-
தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு இழக்கிறதா..? ஜெனீவா போயிருக்கும் வன்னி எம்.பி கனகரத்தினமா ஈழத் தமிழினத்தின் குரல்… தமிழர் கூட்டமைப்பை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக நம்புவதாக தெரியவில்லை என்று சென்ற வாரம் எழுதியிருந்தோம். யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தமிழரின் சுயநிர்ணய உரிமையை கூட்டமைப்பு விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று சில தினங்களுக்கு முன்பு சம்மந்தரை சந்தித்து கேட்டிருந்தனர். சுய நிர்ணய உரிமையை விடக்கூடாது என்று கூட்டமைப்பு மற்றவர்களை வலியுறுத்தினால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பை மற்றவர்கள் வலியுறுத்தினால் அது ஆபத்தானது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை யாழ். ஆயர் போடவில்லை. நேற்று முன்தினம் சம…
-
- 3 replies
- 665 views
-
-
பேயும் பிசாசும் - - துரைசாமி நடராஜா ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கையின் வரலாற்றில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இக்கட்சிகள் மாறி மாறி ஆட்சி பீட மேறி இருக்கின்றன. இந்நிலையில் இக்கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் போக்குகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. கட்சிகள் நாட்டின் அபிவிருத்திக்கு உரியவாறு வலு சேர்க்கவில்லை. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்கிற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் இவ்விரு பெரும்பான்மைக் கட்சிகளுக்க…
-
- 0 replies
- 816 views
-
-
-இலட்சுமணன் தமிழர் விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில், போராட்டத்தின் கொள்கை முரண்பாடுகளாலும் போராட்ட வன்முறைகளாலும் சிதறுண்ட தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகளை ஸ்திரப்படுத்தவும், தமிழர்களின் போராட்டம் நியாயமானது உண்மையானது, உணர்வுபூர்வமானது என்பதை சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்லவும், தமிழீழ விடுதலைப் புலிகள், வெகுஜனப் போராட்டமாக ‘பொங்கு தமிழ்”ஐ ஏற்படுத்தினர். தமிழர்களின் அபிலாஷைகளை, ‘பொங்கு தமிழ்” தமிழர்ப் போராட்டத்தின்பால் ஈடுபாடுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் பிரகடனப்படுத்தினர். இந்த ‘பொங்கு தமிழ்” பிரகடனத்துக்கு நிகராக ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், அந்தப் பணியை, தமிழ் தேசிய…
-
- 0 replies
- 425 views
-
-
மலையக மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. சுமார் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இம்மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்தார். இம்மாவட்டத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது ஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தாலும் கூடுதலான சிங்கள வாக்குகளே அவருக்கு இம்மாவட்டத்தில் கிடைத்திருந்தன. முக்கியமாக பெருந்தோட்ட பகுதி வாழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் சஜித் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 413 வாக்குகளை (66.37%) பெற்றிருந்தா…
-
- 0 replies
- 552 views
-
-
மணல்மேடான நம் தாயகத்தை காப்போம் - வ.ஐ.ச,ஜெயபாலன். * கடந்த டிசம்பர் 5ம் திகதி புதிய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கூடிய அமைசரவை அனுமதியின்றி (cancelation of permits for the transportation of rocks, sand, and soil) கல் மண் மணல் ஏற்றிசெல்ல அனுமதிக்கும் ஆபத்தான முடிவை எடுத்தது. டிசம்பர் 5ம் திகதியே உடனடியாக இந்த சூழல் விரோதச் சட்டம் அமூலுக்கு வந்த கையோடு யாழ்பாணக்குடாநாட்டையும் இலங்கையையும் இணைக்கும் சுண்டிக்குளம் மணல்திட்டை அபகரிக்கும் முயற்சி தீவிரமானது. மக்கள் எதிர்த்த இடங்களில் எல்லாம் பொலிசாரைக் கொண்டு மக்கள் அடித்து ஒடுக்கப்பபட்டார்கள். உண்மையிலேயே பெரும்பாலும் மணல் மேடுகளான தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் அழிவின் வ…
-
- 0 replies
- 424 views
-
-
Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 12:38 PM மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில் மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே சில பகுதிகளில் அமைக்கப்பட்டு மீளவும் சில இடங்களில் அமைக்கப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார திட்டமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கின்ற கனியமணல் அகழ்வுச் செயற்பாடும் மன்னார் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது மன்னார் தீவு தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். இதிகாச அடிப்படையில் இராமாயணத்தில் கூறப்படுகின்ற ராமர் பாலத்…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
கதிரியக்கம் நிறைந்த ஊரில் அஜய் வாழ்ந்தான். Oleh: Arulezhilan October 5, 2012 அஜய் வாழ்ந்த போது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அமைந்திருக்கும் மத்திய அரசின் அரிய மணல் ஆலை உருவாக்கும் கதிரியக்க அபாயம் தொடர்பாகவும், அந்தப் பகுதியில் நிலவும் கேன்சர் மரணங்கள் தொடர்பாகவும் ஒரு ஆவணப்படத்தை இயக்கலாம் என நானும் நண்பரும் புகைப்படக் கலைஞருமான ஜவஹரும் முடிவு செய்திருந்தோம். இதற்கு முன்னர் 2001-ல் அந்தப் பகுதி கடலோரக் கிராமங்களுக்குகுச் சென்றிருந்தேன். அப்பகுதிகளில் பரவி வரும் கேன்சர் ஆபத்து பற்றியும் அப்பகுதி மீனவ மக்களின் மரணம் பற்றியும் 07-10-2001 ஜூனியர் விகடனில் ‘ ஐயோ இது என்ன கொடுமை? என்ற கட்டுரையையும் எழுதியிருந்தேன். சுமார் பதினோரு வருடங்கள் கழிந்து விட…
-
- 0 replies
- 1.1k views
-
-
மீண்டுமொரு சதி, குழி பறிப்பு முருகானந்தம் தவம் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் முக்கியஸ்தரும் தமிழ் தேசியப்பற்றாளருமான சிவஞானம் சிறீதரனை வெளியேற்றி விட வேண்டும் என பல்வேறு சதி நடவடிக்கைகளில் இறங்கிய தமிழரசுக்கட்சியின் முக்கிய சில கறுப்பு ஆடுகள் அதில் தோல்வி கண்ட நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விடக்கூடாதென மீண்டும் குழிபறிப்புக்களில் இறங்கி அதிலும் தோல்வி கண்டும் அடங்காது தற்போது அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள சிறீதரனை அதிலிருந்தாவது அகற்றி ஆறுதல் வெற்றியையாவது பெற்று விட வேண்டுமென நினைத்து மீண்டுமொரு சதி, குழி பறிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த தமிழரசுக் கட்சியின் சில முக்கிய கறுப்பு ஆடுகளின் சதியின் …
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
நெருக்கடியான காலத்தில் கல்வி தொடர்பாகச் சிந்தித்தல் Bharati May 2, 2020 நெருக்கடியான காலத்தில் கல்வி தொடர்பாகச் சிந்தித்தல்2020-05-02T13:32:08+00:00Breaking news, அரசியல் களம் சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. கொரொணாத் தொற்றினை அடுத்து நாட்டின் கல்வி மற்றும் உயர்கல்விக் கட்டமைப்புக்கள் முன்னெப்போதும் இல்லாத பல சவால்களினை முகம்கொள்கின்றன. பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், ஏனைய உயர் கல்வி நிறுவனங்களும…
-
- 0 replies
- 491 views
-
-
தமிழருக்குத் தெரியுமா பான் கீ மூன்களின் மொழி? தெய்வீகன் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம், வழமை போன்று சம்பிரதாயபூர்மான சலசலப்புக்களை ஏற்படுத்திவிட்டு அடங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தும், ஒப்புக்கு ஓங்கி ஒலித்துவிட்டு மௌனித்து விட்டார்கள். யாழ்ப்பாணத்துக்கு வந்த பான் கீ மூன், நூலகக் கட்டடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசினார். பிறகு முதலமைச்சர் குழுவினரையும் சந்தித்தார். இந்த இரு பகுதியினரையும் தமிழர் தரப்பாக முன்வைத்து நடைபெற்று முடிந்த சந்திப்பினையும் இவர்களது எதிர்கால சந்திப்புக்கள் குறித்தும் ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். …
-
- 1 reply
- 640 views
-
-
-
- 0 replies
- 518 views
- 1 follower
-
-
முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு பகிரங்கக்கடிதம் 2 - இனவாத உப்பில் ஊறிய மிளகாய் சிவக்காது – நடராஜா குருபரன் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிதாமகரும் ஜே.வீ.பீயின் முன்னாள் அரசியற்குழு – மத்திய குழு – செயற்குழு உறுப்பினரும் அக்கட்சியின் இயந்திரம் என அழைக்கப்பட்டவருமான குமார் குணரட்ணத்திற்கு நான் எழுதிய முதலாவது பகிரங்கக் கடிதம் பல வாதப் பிரதி வாதங்களை தோற்றுவித்திருக்கிறது. அந்தப் பகிரங்க மடல் முகப்புத்தகத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியதுடன் என்மீது தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படவும் ஏதுவாகஅமைந்தது. எனது முதலாவது மடலில் நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதில் முன்னிலை சோசலிசக் கட்சியையும் அதன் முன்னணியான சம உரி…
-
- 0 replies
- 739 views
-