அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து முதலில் அச்சமூகத்தில் உள்ள சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தைப் பற்றி சிந்திக்காது அமைப்பு, கட்சி, தொழில் உள்ளிட்ட விடயங்களுக்குள் தமது நடவடிக்கைகளை சுருக்கிக் கொண்டு செயற்படுவது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை சூனியமாக்கி விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு தம்மால் முடிந்த காரியத்தை செய்வதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அரசியல் கட்சிக…
-
- 1 reply
- 533 views
-
-
வேலைகோரிப் போராடும் பட்டதாரிகளின் கலைந்த கனவுகள் தொலைத்ததை மீட்குமா அரசாங்கம்? - கருணாகரன் இந்திரகுமாருக்கு வயது 28. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார். குடும்பத்தில் அவர்தான் முதலாவது பட்டதாரி. அவர், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியபோது, குடும்பமே மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. இருக்காதா பின்னே, குடும்பத்தில் முதலாவது ஆளாகப் பட்டதாரியாகப் போகிறார், படித்துத் தொழில் செய்யப்போகிறார் என்றால், எவ்வளவு பெரிய மகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படும் அந்தக் குடும்பத்துக்கு!. இந்திரகுமாரை நினைத்து, மிகப் பெரிய மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டது. சந்தோஷத்த…
-
- 0 replies
- 325 views
-
-
மனிதாபிமானத்திலும் அரசியல்……..? செல்வரட்னம் சிறிதரன் இதுகால வரையிலும் இல்லாத வகையில் உயிரிழப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள மழைவெள்ளம் மற்றும் மண்சரிவு இடர் நிலைமை அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் இதனை எழுதும் வரையில் 202 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் 96 பேரைக் காணவில்லை என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்திருக்கின்றது. காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்கப்படுவதையடுத்தே இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து செல்கின்றது. இந்த வகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். …
-
- 0 replies
- 392 views
-
-
சர்வதேச உறவுநிலை குறித்து அதிகமாகப்பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், அதனை இயக்கும் சக்திகளாக பாதுகாப்பும் பொருளாதாரமும் இருக்கின்றது என்பதனை மறந்துவிட முடியாது. நாடுகளுக்கிடையிலான உறவுநிலை என்பதனை, நாட்டின் அதிகார உச்சநிலையில் இருப்பவர்களுக்கிடையிலான உறவாக பார்க்கும் பழக்கம் அண்மைக்காலமாக பெருகிவருவதை காண்கிறோம். உதாரணமாக கமலேஷ் சர்மா, விஜய் நம்பியார் போன்றோர் ஓர் அதிகாரமையத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் நபர்களாக இருப்பதை, அவர்களின் செயற்பாடுகளால் பாதிப்புறும் ஈழத்தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது கமலேஷ் சர்மா மீது கனடா அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டூ, விஜய் நம்பியார் மீது யுத்தம் முடிவுற்றதும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமர்சனங்கள் என்பன, சர்வதேச உறவில் சிற…
-
- 1 reply
- 634 views
-
-
அமெரிக்கா: ஜனநாயகத்தை கட்டவிழ்த்தல் ஜனநாயகம் என்றால் என்ன? என்ற வினாவுக்கான பொதுவான விடையேதும் இல்லை. இருந்தபோதும், அனைத்தினதும் அடிப்படையாக ஜனநாயகம் கருதப்படுகிறது. ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அதன் காவலனாகவும் அமெரிக்கா முன்னிலைப்படுத்தப்படுகிறது. கெடுபிடிப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு, ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்திருக்கிறது. கட்டமைப்புகள் கட்டவிழும் காலமதில் ஜனநாயகமும் விலக்கல்ல; அமெரிக்காவும் விலக்கல்ல. கடந்தவாரம், அமெரிக்காவில் நடைபெற்றதொரு சம்பவம், கவனம் பெறாமல், சத்தமில்லாமல் கடந்து போயுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முக்கியமானதொ…
-
- 0 replies
- 710 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு : பி.ஏ.காதர் பி.ஏ.காதர் - 1994 ஜனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் அமைப்புக்குழுவில் முழு மலையகத்திற்குமான ஒரே ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பு பற்றியும் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் தனது பல்வேறு ஆய்வுகட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவர். இத்துறையில் சிறப்பு தகைமை கொண்ட இலங்கையின் அனைத்து புத்திஜீவிகளோடும் தொடர்பு வைத்திருந்தவர். சந்திரிகாவினால் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரணைகளை முன்வைத்து வாதாடிய அனுபவமும் இவருக்குண்டு. ஒருதடவை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் ஹோட்டல் கலதாரியில் ஏற்பாட…
-
- 1 reply
- 764 views
-
-
-
கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காகவே முறிந்து போயிருக்கின்றன. இது, சம்பந்தப்பட்ட இருவரின் வாழ்க்கையை மாத்திரமல்ல, அந்தக் குடும்பங்களின் நிம்மதியையும் நிர்க்கதியாக்கி விடுகின்றன. ஆனால், தரகர்களோ இன்னொரு திருமணத்தைச் செய்து வைத்து, தரகுக் கூலியைப் பெறுவதில் கவனமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று, முறிந்துபோன திருமணம் பற்…
-
- 0 replies
- 484 views
-
-
முன்னணியின் முக்கியமான மாற்றம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது. ஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட…
-
- 0 replies
- 271 views
-
-
" என்னுடைய பெளத்த மதம் எப்படிப் பொறுமை காக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கின்றது. என்னுடைய இராணுவத் தளபதியை கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டு படுகொலை செய்ய முயற்சித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை மேற்கொண்ட போதும் நாம் பேச்சுக்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். " இவ்வாறு சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை. இலங்கையின் சர்வ வல்லமையுடன் ஆட்சி பீடத்திலிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே தான். இவரைப் போலவே சிங்களவர்களில் அனைத்து மட்டத்தினருமே பெளத்த மேலாண்மை என்ற பொய்மையான மாயைக்குள் மூழ்கிப் போயிருக்கின்றார்கள். சிங்கள இனத்திலிருந்து பெளத்தம் என்பதைப் பிரித்துப் பார்க்க முடியாது. பெளத்தம் என்பது இல்லாமல் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை என்பது தான் உண்மை. …
-
- 1 reply
- 1.4k views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு ஐநாவில் ஒரு குரல் | லீலாதேவி ஆனந்த நடராஜா! "இந்த அரசாங்கங்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பி சர்வதேசம் மீண்டும் மீண்டும் காலத்தை கொடுத்துகொண்டும் உள்ளக விசாரணைக்கு வலுச் சேர்த்துக்கொண்டும் இருக்கிறது." - CMR வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் லீலாதேவி ஆனந்த நடராஜா Sept 12 ஆரம்பமாகி October 7வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள சென்றிருக்கும் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் திருமதி.லீலாதேவி ஆனந்த நடராஜா அவர்களுடனான நேர்காணல்.
-
- 0 replies
- 254 views
-
-
பிரதமர் ரணில் தப்பிப் பிழைத்துவிடுவார்? நாட்டில் திடீர் திடீரென அரசியல் பூகம்பங்கள் ஏற்படுவதும் பின்னர் அவை புஸ்வானமாகப் போய்விடுவதும் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். அந்தவகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று, நாளை என்று ஆரம்பித்து ஒருவாறு எதிர்வரும் 4ஆம் திகதி விவாதத்துக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் கருஜயசூரியவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கையளித்துள்ளார். எனினும் குறித்த பிரேரணையில் மஹிந்த ராஜபக் ஷ கையொப்பம…
-
- 0 replies
- 338 views
-
-
தடம்மாறும் ஐ.அமெரிக்க - பாகிஸ்தான் உறவுகள் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது. எது எவ்வாறிருந்த போதிலும், பாகிஸ்தான் - ஐ.அமெரிக்கா இடையிலான உறவானது, 30 ஆண்டுகளுக்கும் மேலானது என்பது ஒருபுறமிருக்க, எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.அமெரிக்காவின் இராஜதந்திர நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தல், பிராந்தியத்தில் செல்வாக்கைப் பேணுதல் என்பனவற்றுக்…
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக இருந்தும் இது விடயமான தீவிரமான அறிவார்ந்த பணிகளை கண்டுகொள்வது மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. இலங்கையின் சிவில்-இராணுவ தொடர்பில் அண்மைய கால நகர்வுகளில் தோன்றியிருக்கும் சில முக்கிய பண்புகளை கோடிட்டுக் காட்டுவதற்கு இக்கட்டுரை முயல்கிறது. இக்கட்டுரை இறுதியில் பிரேரிப்பது போன்று, சிவில்-இராணுவ தொடர்பு எமக்கு இன்னோர் பக்கத்தை காட்டித்தருகிறது. அதனூடாக இலங்கையின் தற்போதைய அரசியலை அவதானிக்கும்…
-
- 0 replies
- 796 views
-
-
எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் படை மற்றும் உளவுத் துறையின் மிரட்டல் கெடுபிடிகளுக்கு அஞ்சி, அகதிகளை பெரும் பொருட் செலவில் ஏற்றி வரும்…
-
- 5 replies
- 2.1k views
-
-
மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன் October 27, 2023 மயிலத்தமடு, மாதவனை பிரச்சினை இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரு பிரச்சினையாகியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் இதற்கு ஏதோ ஒரு தீா்வைக் கொடுக்க வேண்டும் என்ற நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளையில் சிங்களத் தரப்பினரைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் அரசாங்கம் கவனமாகவுள்ளது. மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநா் அநுருத்த யஹம்பத் இப்போதும் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றாா். பிக்குகள் மற்றும் சிங்களத் தரப்பினரின் பின்னணியில் அவா் செயற்படுகின்றாா். அதனால்தான் ஜனாதிபதியின் உத்தரவுகள் எதுவ…
-
- 1 reply
- 731 views
- 1 follower
-
-
புலம்பெயர்ந்த தமிழர் தொடர்பாகப் பரப்பப்படும் புரளிகளை நம்ப வேண்டாம். - வ.ஐ.ச.ஜெயபாலன் --------------------------------------------------------------------------------- ”மீண்டும் வன்முறையை ஏற்படுத்த. பாதாளக் குழுவினரின் ஆதரவைப் பெற புலம் பெயர் தமிழர்கள் முயற்ச்சி” என புதிய புரளி ஒன்று கிளப்பப் படுகிரது. நான் அறிந்தவரைக்கும் இது உள்நோக்கமுள்ள பொய்ப் பிரசாரமாகும். . இது உண்மையான கதையல்ல. புலம் பெயர் தமிழ் சக்திகளில் பெரும்பாலானவர்கள் சர்வதேச நாடுகளில் முக்கிய பொறுப்புகளிலும் அரசியல் தலைமைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் சர்வதேச வரண்முறைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்பட முழு உரிமையும் கொண்டுள்ளவர்கள்.. அவர்கள்ளில் பலர் பாலத்தீனிய அகதிகள்போல போர்குற்றங்களால் நேரட…
-
- 1 reply
- 1.2k views
-
-
இணக்க அரசியல் தோல்வியடைந்துள்ளது சமூக ஆய்வாளர் நிலாந்தனுடன் ஒரு நேர்காணல் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தென்னிலங்கை அரசியல் சூழலையும் தமிழர் அரசியல் சூழலையும் எப்படிப் பார்க்கின்றீர்கள்? தென்னிலங்கை அரசியல் சூழல் ஸ்திரமற்றதாக மாறியிருக்கின்றது. அதேநேரம் அது அதிகம் வெளிச்சக்திகளுக்குத் திறந்து விடப்பட்டதாகவும் மாறியிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் 2009 மே மாதத்திற்கு முன் வரையிலும் இலங்கையில் தமிழ் அரசியல் ஒரு வகையில் மூடப்பட்டதாக இருந்தது. அதாவது வெளிச்சக்திகள் எளிதில் கையாள முடியாததொன்றாகவும், வெளிச்சக்திகளால் கையாளப்பட முடியாததொன்றாகவும் வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பாகவும் காணப்பட்டது. 2009 மே மாதத்திற்குப் பின…
-
- 2 replies
- 363 views
-
-
எப்போது கைவிடுவார் சம்பந்தன்? Gopikrishna Kanagalingam / 2019 பெப்ரவரி 07 வியாழக்கிழமை, மு.ப. 02:08 இறுதிக்கட்ட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவு என்ற கட்டத்தை நெருங்கிக் கொண்டுவரும் நேரத்தில், இக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை வழங்கிய பெருமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனையே சேரும். அவர் மீதான விமர்சனங்கள் பலவாறாக இருந்தாலும், தமிழ் மக்களை வழிநடத்தி, ஓரணியில் வைத்திருந்தார் என்று உறுதியாகக் கூறமுடியும். சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம், நேற்று முன்தினம் (05) ஆகும். அவருடைய உடல்நிலை தொடர்பான கேள்விகள், அவ்வப்போது எழுந்துவருவதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனால், தன்னாலியன்றளவு…
-
- 1 reply
- 553 views
-
-
இலங்கை முன்னென்றும் காணாத அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில் June 11, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் எந்த ஒன்றின்போதும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போது நிலவுகின்றதைப் போன்ற குழப்பகரமான அரசியல் சூழ்நிலையை நாம் கண்டதில்லை. நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் அறிந்து கொண்டவர்களாகத்தான் அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றி பேசுகிறார்களா என்று கேட்கவேண்டியிருக்கிறது. தேர்தல்களைப் பற்றி தினமொரு விசித்திரமான கருத்துக்களை அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். அந்த கருத்துக்களின் தகுதி எத்தகையதாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கும்…
-
- 0 replies
- 345 views
-
-
தமிழர் அரசியலும், ‘பக்கச்சார்பற்ற’ ஊடகவியலும் படம் | TAMILNET இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில்வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்றகட்டுரைக்கு பதிலாக அமைந்த ஆங்கிலக் கட்டுரையின்[ii]மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்த சில அவதானிப்புகளும்ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும், தமிழர் அபிலாசைகளையும், தமிழினம் பல தசாப்த காலமாய் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுதலையும் சட்டப்படி குற்றங்களாக்குவதன் மூலமாகவே (criminalize) தொன்று தொட்டு வந்த இலங்கை அரசுகளும் அரசின் விவரணையை ஆதரிக்கும் ஊடகங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நசுக்கியுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னான தசாப்தங்களில் இலங்…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஒருங்கிணைந்த மண்ணில் ஒன்றிணைந்த வாழ்வு காரை துர்க்கா / 2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:36 Comments - 0 அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட…
-
- 0 replies
- 603 views
-
-
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் அதனுடன் இணைந்து செயற்படும் ஊழலில் ஈடுபட்ட திமிங்கிலங்களை பிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்திய சீன உறவுகளில் சமநிலையை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஊழலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதபோது அவர்களிற்கு எதிரான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கும் ஆபத்து குறித்தும் எச்சரித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கேள்வி:- இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நெருக்கடிகளிற்கு ஜனாதிபதி…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
தமிழ்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு? ஐந்து தமிழ்க்கட்சிகள் கூடிக்கூடிப் பேசி ஒருவாறாக ஒரு தீர்மானத்தை எட்டிவிட்டன. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்முயற்சியில் ஒன்று கூடிய ஆறு கட்சிகளில் ஒரு கட்சி ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவைத் தனித்து எடுத்து ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆறு கட்சிகளும் கூடி நிலைமைகளை ஆராய்ந்து என்ன செய்வது என்ற தீர்மானத்தை எட்டுவதற்கு முன்பே பொன்னம்பலம் கஜேந் திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தன்னிச்சையான முடிவை மேற்கொண்டு அதனை அறிவித்திருந்தது. அந்த அறிவித்தலை ஊடகங்கள் வாயிலாக வெள…
-
- 0 replies
- 845 views
-
-
ஒப்பீட்டுத் தீர்மானம் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்தனியாகக் கூடி முடிவெடுத்ததுடன். தமிழ்த்தேசிய கூட்டமைப்பாகவும் ஆதரவினை தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான சஜித் பிரேமதாசவை புதிய ஜனநாயக முன்னணி என்ற பல கட்சிகள் இணைந்த கூட்டு அணி, பொது வேட்பாளராக இந்த ஜனாதிபதி தேர்தலில் களத்தில் இறக்கி உள்ளது. இந்தப் பொது வேட்பாளரை ஆதரிப்பதில் பின் நிற்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டி வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் முடிவை இப்போது வெளிப்படுத்திவிட்டது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, அரசியல் தீர்வு ,பிளவுபடாத நாட்டுக்குள் அதிகா…
-
- 0 replies
- 386 views
-