அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
ஈழத்தில் நடந்து முடிந்த புலிகளின் அழிப்பின் பின் அந்த அழிவு தொடர்பாக பலவாறான கருத்துக்கள் தமிழர் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுள் பல புலிகளின் அணுகுமுறையில் தவறுகளை இனம்காண்பவையாக உள்ளன. உதாரணமாக, 1) புலிகள் அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்காமை 2) ராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை வழங்கியமை 3) கருணாவின் பிளவு 4) தலைவரின் தூரநோக்கற்ற சிந்தனை 5) தக்க தருணத்தில் கெரில்லா போர்முறைக்கு மாறாதமை 6) மரபுப் போர் முறையைக் கைக்கொண்டமை. போன்ற பல கருத்துக்கள் வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாறிவரும் உலக ஒழுங்கு சில இடங்களில் பேசப்பட்டு வந்தாலும், அதன் தாக்கம் அதிகளவில் பேசப்படுவதில்லை. சமீபத்தில் பூகோள அரசியலை…
-
- 51 replies
- 9k views
-
-
"என்னைப்பெத்த ராசாவே கொஞ்சம் சேதி கேளு ராசாவே! உண்ணாமல் இருப்பதாக சொன்னாக உருகிப் போனேன் உயிரோடு புதைஞ்ச சனம் யாரை நம்பிப் புதைஞ்சதையா உண்ணாமச் செத்த சனம் உலகநாட்டைப் பார்த்ததையா வெளிநாட்டுத்தமிழரால விடிவெள்ளி பூக்குமெண்டு வழிநெடுகப் பார்த்த சனம் இப்ப வவுனியாவில் கிடக்குதையா கனிமொழியும் வருவாளோ கனிபழமும் தருவாளோ முள்ளுக்கம்பி பின்னால முளிபிதுங்கி நிற்பவரே மகிந்த ராசபக்சா மகிமைதனைப் பாரீரே" http://unarvukall.blogspot.com/
-
- 13 replies
- 2.1k views
-
-
தலையங்கத்தை பார்த்து பதில் மயங்க வேண்டாம். இது நோர்வேயில் எனக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த வேதனைகள். முடிந்தால் இதனை அடிப்படையாக வைத்து எதாவது அலசுங்கள். 1.நோர்வேயின் புலிகளின் குரல் "தமிழ்முரசம்" எதற்காக சிவப்பு கட்சிக்கு வாக்கு போடுவதுதான் தமிழருக்கு நன்மை என்று பட்டும் படாமல் பிரசாரம் செய்ய முயன்றது??? தொழிற்கட்சியில் புலிகளின் இன்னொரு ஆதரவாளர் போட்டியிடும் போது? 2்். சாதி ரீதியில் இங்கு ஆதரவாளர் பிரிந்துள்ளதாக வந்த தகவல் உண்மையா? 3.கேபி நெடியவன் என நாங்கள் இரு குழுக்களாக இருக்கிறோமா? 4். இதில் எது ஒட்டுக்குகுழு? 5்்். நான் மாதாந்தம் அனுப்பும் பணம் எங்கே போகிறது??????? நேர்மை இல்லாமல் எதை செய்தாலும் அது தற்காலிகம்தான்.
-
- 2 replies
- 902 views
-
-
ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள். முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்…
-
- 2 replies
- 893 views
-
-
இன்ரபோலால் தேடப்பட்ட கேபி எந்த நாட்டில் கைது செய்யப்பட்டார்? எந்த நாட்டு நீதிமன்றத்தால் நாடு கடத்துப்பட்டார்? அல்லது சட்ட விரோதமாக இலங்கை அரசு அவரை கடத்தியதா? அல்லது அவரை காட்டிக் கொடுத்த நாடு தனது நீதிபதிகளை மதிக்க வில்லையா? அல்லது????? சரி எதுவாக இருந்தாலும் இன்ரபோலின் விசாரணை நடந்த பின்னர்தானே அவர் நாடு கடத்தப்பட்டிருக்க வேணும். உண்மையில் என்ன நடந்தது?
-
- 5 replies
- 1.2k views
-
-
ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 965 views
-
-
//தமிழீழத் தேசியக் கொடி. (image:.eelamweb.com)// சிறீலங்கா என்ற நாமம் 1972ம் ஆண்டு வரை உலக வரைபடத்தில் இருக்கவில்லை. அதுவரை அது சிலோன் அல்லது இலங்கை என்றே இருந்தது. 1948 இல் சிலோன் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற உழைத்தவர்களில் சேர் பொன் இராமநாதன்,பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சோல்பரி என்ற ஆங்கிலேயப் பிரபுவின் முன் சிலோனுக்கு சுதந்திரம் அளிக்க முதல் 50:50 என்ற அரசியலமைப்புத் திட்டம் முன் மொழியப்பட்டது. அதில் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தோர் 50% அரசாங்கத்தில் இடம்பெற வாய்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அப்போதைய சில தமிழர்கள் தலைமைகள் அதை ஏற்க மறுத்து சிங்களவர்களும் நாமும் சகோதரர்களாக வாழ்வோம் என்று சொல்லி ஆங்கிலேயர்கள் தர முன்வந்ததைய…
-
- 4 replies
- 1.3k views
-
-
K.P. அண்ணனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எமக்கு ஏற்பட்டு பாரிய பின்னடைவைத் தொடர்ந்து எங்களை மீட்க நல்லதொரு மீட்பன் வரமாட்டாரோ என்ற ஏக்கத்தில் இருக்கும் பல இலட்சம் ஈழத் தமிழ் உறவுகளில் ஒருவனாய் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சிங்கள அரசு இன அழிப்பை ஆணவத்துடன் செய்து முடித்தபின் சொல்லொணாத் துயரத்தில் இருந்த எமக்கு அந்த இறுதிநாட்களில் வன்னியில் நடந்தேறியவற்றை பக்குவமாகச் எடுத்துரைத்து உண்மைகளை உணர்ந்து ஏற்று அடுத்தது என்ன என்று சிந்திக்கவும் வைத்தீர்கள். தொடர்ந்து வந்த உங்கள் அறிக்கைகளில் உலகத்தமிழர் அனைவரிடமிருந்தும் துறைசார் அறிஞரிடமிருந்தும் ஆக்கபு}ர்வமான கருத்துக்களையும் செயல்திட்டங்களையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினீர்கள். பாரிய பின்னடைவுகள் தந்த பாடங…
-
- 7 replies
- 1.1k views
-
-
சுயத்தைத் தொலைத்தவர்கள் ஒட்டகம் புகுந்த வீடு, ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இப்படியான பொழுதுபோக்கான வியங்களை எழுதும்போது அதிகமான களத்துறவுகள் ஓடிவந்து படித்தீர்கள். நாணல் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில் பதில் கருத்துக்களும் மெல்ல எழுதத் தொடங்கினீர்கள். ஆனால் மத்தியஸ்தம். செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது என யதார்த்தமாக சிந்திக்க வேண்டிய அழுத்தமான கருத்துக்களை மீள் ஆய்வு செய்ய வேண்டிய விடயங்களை மெல்ல உங்கள் முன் வைக்கத் தொடங்கியதும். ஒரு சின்ன இடைவெளி. பதில் கருத்தை முன்வைக்கத் தயக்கம். யாரிந்த நாணல்? நல்லவனோ? இல்லைக் கெட்டவனோ? பசுத்தோல் போர்த்திய புலியோ? புலித்தோல் போர்த்திய குள…
-
- 4 replies
- 1.2k views
-
-
தேனி ஆட்களைப்போல் யாழ் கள உறவுகளால் கட்டுரைகள் எழுதமுடியாதா? என்ற கள உறவொன்றின் ஆதங்கத்தைப் படித்தது நெஞ்சைத் தொட்டதில் எனது எண்ணப்பதிவுகளை இங்கு தருகிறேன். நாம் எமது நேரத்தையும் வளங்களையும் அற்பமான ஆக்கங்களிற்குப் பதில் எழுதுவதில் வீணடிக்காமல் ஆணித்தரமான செயற்பாடுகளினால் அவர்களைத் திணறடிப்பதே மேலானதென எண்ணுகிறேன். செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய அந்தக் கொடிய வைகாசி 17...... பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும், எமது கனவு, எமது இலட்சியம் எமது ஏக்கம், எமது கொள்கை, எமது அமைப்பு, எமது தலைமை என அனைத்தையுமே அநியாயமாக் காவுகொண்ட அந்த இருரண்ட வைகாசி 17 கடந…
-
- 0 replies
- 628 views
-
-
”சிந்திய பாலைப்பற்றிச் சிந்திக்காதே” இது ஓர் ஆங்கிலப் பழமொழி. சரி. ஆனால் பசியில் குழந்தை அழுமே அதற்கு என்ன பதில் சொல்வது...? - சிந்திக்க வேண்டியதிருக்கிறதே. ஈழத்தமிழர் பிரச்னையிலும் ‘நடந்தது நடந்து விட்டது இனி நடக்க வேண்டியது என்ன?’ சிலர் யதார்த்தமாக சிந்திப்பதாக எண்ணிக் கொண்டு கேட்கிறார்கள். ‘இதற்கு மேலும் இனி என்ன நடக்க வேண்டும்?’ கொதித்துப்போய் சிலர் எழுப்பும் குமுறல் கலந்த கேள்வி இது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? - பதில் தெரியாது. ஆனால் அவருடையது என்று அரசு காட்டிய உடல் அவரது அல்ல. 2002 ல் நான் நேரில் அவரைச் சந்தித்த போது கூட படத்தில் காட்டப்படுவது போல் அவர் இவ்வளவு இளமையாக இல்லை. ஆறு ஆண்டுகளில் வயது போய் இருக்குமா வந்திருக்குமா ? வரலாற்ற…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் போக்கு தெளிவற்றதாகவே இருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் உறுதியானதும் அலட்சியப் போக்குடையதுமான செயற்பாடுகள் உலக நாடுகளுக்கு தற்போதைய நிலையில் பெரும் சவாலாகியிருப்பதை மறுத்துவிடவும் முடியாது. ஏனெனில், இலங்கை உலக நாடுகளது குறிப்பாக மேலைத்தேய நாடுகளினது அறிவுரைகள், ஆலோசனைகள் மட்டுமன்றி வேண்டுகோள்களைக்கூட காதில் வாங்கிக்கொள்ள தயாரில்லாதது போல செயற்பட்டு வருகிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலை கண்டு மேற்குலக நாடுகள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளார்த்த ரீதியில் விசனம் கொண்டிருக்கின்றன என்பதையும் இதில் மறுத்துவிட முடியாது. அது மட்டுமல்லாது இலங்கை விவகாரத்தில் மேற்குலக நாடுகளின் தற்போதைய நிலை தடுமாற்றத்திற்கும் இதுவொரு முக்கிய காரணமாக அம…
-
- 0 replies
- 821 views
-
-
சே குவாரா பொலிவியாவில்தான் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்த் சி.ஜ.ஏ.,அதிர்ந்து போனது.பலவிதமாக யோசிக்கத் தொடங்கினார்கள்.பொலிவியா எழைமை வேரூன்றியுள்ள ஒரு நாடு. லேசாக உரசினாலும் புரட்சித் தீ பேயாகப் பற்றிக் கொள்ளும்.சே முரட்டுதனமானவர்.அவர் போகிற வேகத்தை வைத்துப் பார்த்தால் ,ஒட்டுமொத்த லத்தீன் அமேரிக்காவயும் முழுவதுமாக விடுவித்துவிட்டுத்தான் ஒய்வார் போல் இருக்கிறது. விடக்கூடாது.சேவைத் தேடும் பணி முழுமூச்சுடன் முடுக்கிவிடப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் பொலிவியாவைச் சேவிடமிருந்து பாதுகாப்பதில் பொலிவிய அரசாங்கத்தைவிட,அமேரிக்காவுக
-
- 5 replies
- 1.7k views
-
-
அதிக அவதானம் எங்கள் போராட்டத்தை மேம்படுத்தும். காந்தி மண் தனது சொந்த நிலையெடுப்புக்கும் பிராந்திய போட்டிக்குமாக தமிழர் நலன்களை தமிழர் உரிமைகளை போட்டு மிதிக்கின்றது என்ற விடயத்தை நாங்கள் உணர சரியாக புரிந்து கொள்ள பிறர் அது பற்றி சொன்ன விடயங்களை ஆமோதிக்க எவ்வளவு நாள் எடுத்தது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எப்போது நாங்கள் அதை புரிந்து கொள்ள ஆரமிபித்தோம்.ஏன் இந்தியா தமிழ் நாட்டு தமிழர் கூட புரிந்து கொள்ள எவ்வளவு காலம் எடுத்துள்ளது என்பது எல்லோரும் தெரிந்து வைத்துள்ள விடையம்.எனவே இதையொட்டிப்பார்தால் எங்களின் தவறுகள் புரியும் எங்கள் பக்கம் உள்ள பலவீனங்கள் புரியும் இப் பல வீனங்கள் எதிரிக்கும் வஞ்சகம் செய்பவர்களுக்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதம்.அதாவது நாங்கள் நினைக்…
-
- 1 reply
- 997 views
-
-
பாலஸ்தீன பிரச்சினை - முழுநீள ஆவணப்படம் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் இருந்து குடியேறிய யூத காலனியவாதிகளால் பாலஸ்தீன நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கு வாழ்ந்த மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டு, எஞ்சியவர்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் அவலநிலையை பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளர் John Pilger ஒரு முழுநீள ஆவணப்படமாக பதிவுசெய்துள்ளார். உலக வல்லரசு அமெரிக்காவை தன் பக்கத்தில் சேர்த்துக் கொண்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை, தமக்கு கிடைக்கும் வளங்களைக் கொண்டு எதிர்த்து போராடும் பாலஸ்தீன மக்களின் விடுதலை உணர்வை தத்ரூபமாக பிரதிபலித்துள்ளார். சில இஸ்ரேலிய சமாதான விரும்பிகளும், பாலஸ்தீன மக்களுடன் இணைந்து போராடுவதையும் இந்த ஆவணப்படம் குறிப்பிடத் தவறவில்லை.
-
- 1 reply
- 944 views
-
-
நேற்று உணவு மேசையில், ஈழப்பிரச்சினை குறித்து பேச்சு வந்தது..அங்கே நடைபெறும் மனித அவலம் பற்றியும், மருத்துவமனைகளில் எறிகணைகளை வீசும் நாஜி இலங்கை அரசு பற்றியும் எதிரே அமர்ந்திருந்த பலநாட்டவர்களிடம் கவலையுடன் விவரித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இந்தி'யர் எதிரே வந்து அமர்ந்தார்.. வந்தமர்ந்தவர், படீரென ஒரு கருத்தை தெரிவித்தார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தேன்.. ஓ ஸ்ரீலங்கா இஷ்யூ ? அங்கே விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ? அதனால் தான் அப்பாவி மக்கள் சாகிறார்கள்...என்றார்.. மருத்துவமனையை நோக்கி பல்குழல் எறிகளைகள் மூலம் பாஸ்பரஸ் குண்டுகளையும், மீயொலி விமானங்களின் மூலம் கொத்து குண்டுகளையும் இலங்கை அரசாங்கம் வீசுவதை புதினத்தையும்…
-
- 2 replies
- 858 views
-
-
ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்.. ஏன் தமிழ் ஈழத்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ? ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ? ஏற்கனவே இருக்கிற மொழிவாரி மாநிலத்தில் ஒன்றாக இணைந்துவிடுங்களேன் ? இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்... 1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்.. 2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...மறுபடி ரஷ்யாவின் உதவியுடன் கிரயோஜெனிக் எஞ்சின் பொருத்தி நிலா நிலா ஓடிவா பாடலை நிஜமாக்கியுள்ளோம்... 3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலிய…
-
- 20 replies
- 3.2k views
-
-
வவுனியாவில் புளொட்டின் வதைமுகாம் கிட்லர் இன்னும் சாகேல்ல. வவுனியா கோவில் குளத்தில் உமாமகேஸ்வரன் வீதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இரகசிய வதை முகாமொன்றைப் பாதுகாத்து வருகின்றனர். கோவில் குளம் பகுதியில் உள்ள சிவன் கோவில் நிர்வாகத்தினர் ஆதரவற்ற பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் ஆதரவில்லம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோவிலின் பின்பக்க மதிலுக்குப் பின்னால் அமைந்திருக்கும் இவ்வதை முகாமானது புளொட் இயக்கத்தினரால் இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் புளொட் இயக்கத்தின் மயானம் அமைந்துள்ளது. இம்மயானத்தில் வருடாவருடம் தமது இயக்கத்தினரின் நினைவுநாள் மற்றும் தங்களின் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றார்கள். இங…
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியாவில் புளொட்டின் வதைமுகாம் கிட்லர் இன்னும் சாகேல்ல.
-
- 0 replies
- 806 views
-
-
எரித்திரியா கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. எரித்திரியா அல்லது எரித்திரிய அரசு ஒரு கிழக்காபிரிக்க நாடாகும். இதன் தெற்கே எதியோப்பியாவும், மேற்கே சூடானும் தென் மேற்கில் சிபூட்டியும் எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கு எல்லை செங்கடலால் அமைக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் சவுதி அரேபியாவும் யேமனும் அமைந்துள்ளன. டலாக் தீவுக்குழுமமும் அனீசுத் தீவுகளின் சிலத் தீவுகளும் எரித்திரியாவுக்கு சொந்தமானவையாகும். எரித்திரியா 1993 மே 23 இல் ஐநாவில் உறுப்பினராக சேர்ந்து கொண்டது. வரலாறு எதியோப்பியாவின் பிடியில் இருந்து எரித்திரியா விடுதலை பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் தாங்கி போராடியது. விடுதலைக்காக இந்த நாடு உச்ச விலை கொடுத்துள்ளது. …
-
- 3 replies
- 2k views
-
-
யாராவது விளக்குவீர்களா ?.............. இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுண்டிக்குளம் என்னுமிடத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் யாழ் குடாநாடு முழுமையாக இராணுவத்தினர் வசமாகியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. [மேலும்]........... யாராவது விளக்குவீர்களா ? சுண்டிக்குளம் எங்கே இருக்கிறது . அது யாழ் மாவட்டத்தில் உள்ள சுண்டிக்குளியா ? எதி பிடித்ததென்று பறை தட்டுகிறார்கள். ஒரே குழப்பமாக் இருக்கு தயவு செய்து விளக்கவும் அன்பான நண்பர்களே .
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய எம் மக்களே! முதற்கண் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்மின விடியலுக்காய் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வரும் உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றோம். இந்தப் பூமிப்பந்திலே எத்தனையோ பல இனங்கள் வாழ்ந்து வந்தாலும் எம்மினத்தின் தனித்துவத்தையும் அதன் தன்மைகளையும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றீர்கள். நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமையாகக…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி இலங்கை வசம்.... கருணாநிதி காங்கிரசார் வசம்..... பொன்னிலா கடந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி ராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள், பாசிச இலங்கை ராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும் இந்த வெற்றியை சுகிக்கும் நிலையில் ராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடது சாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புகளையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார்கள். அதே சமயம் தமிழ் போராளிகள்…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஈழம் & தொடரும் துரோகம் வழக்கறிஞர் காமராஜ் கடந்த இரண்டு மாதங்களாக ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து நடைபெறும் அரசியல் நாடகத்தின் அடுத்த கட்டம் ஆரம்பம் ஆகியுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்களை குண்டுவீசி பூண்டோடு அழிக்கும் சிங்கள ராணுவத்தை, இந்திய அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தமிழக அரசின் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று வலியுறுத்தி ஏறத்தாழ 2 மாதங்கள் நிறைவு பெற்றாலும் ஈழத்தில் நிலைமை மாறவில்லை. ஒரு பயனும் இல்லை. சிங்கள ராணுவம் கருமமே கண்ணாக தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும…
-
- 2 replies
- 1k views
-
-
யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு : கலையரசன் யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை. இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான தோரா, கிறிஸ்தவர்களால் பைபிளில் பழைய ஏற்பாடு என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் …
-
- 1 reply
- 3k views
-