Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய எம் மக்களே! முதற்கண் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்மின விடியலுக்காய் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வரும் உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றோம். இந்தப் பூமிப்பந்திலே எத்தனையோ பல இனங்கள் வாழ்ந்து வந்தாலும் எம்மினத்தின் தனித்துவத்தையும் அதன் தன்மைகளையும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றீர்கள். நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமையாகக…

    • 0 replies
    • 1.4k views
  2. ஈழம் & தொடரும் துரோகம் வழக்கறிஞர் காமராஜ் கடந்த இரண்டு மாதங்களாக ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து நடைபெறும் அரசியல் நாடகத்தின் அடுத்த கட்டம் ஆரம்பம் ஆகியுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்களை குண்டுவீசி பூண்டோடு அழிக்கும் சிங்கள ராணுவத்தை, இந்திய அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தமிழக அரசின் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று வலியுறுத்தி ஏறத்தாழ 2 மாதங்கள் நிறைவு பெற்றாலும் ஈழத்தில் நிலைமை மாறவில்லை. ஒரு பயனும் இல்லை. சிங்கள ராணுவம் கருமமே கண்ணாக தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும…

  3. யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு : கலையரசன் யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை. இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான தோரா, கிறிஸ்தவர்களால் பைபிளில் பழைய ஏற்பாடு என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் …

  4. ஈழச் சிக்கலும் நாமும் இராசேந்திர சோழன் ஈழச் சிக்கல் நாளுக்கு நாள் கடும் நெருக்கடிக்குள்ளாகி வருவதாகவே தோன்றுகிறது. என்னதான் சிங்கள இனவெறி அரசும், ராணுவமும் போராளிகளின் இறப்பு பற்றி பொய்ச் செய்திகள் பரப்புவதாகக் கொண்டாலும், ஒரு இனம் தன் விடுதலைப் போராட்டத்தில் தனக்கு ஆதரவாக எந்த பின்புலனும் இன்றி, சுற்றிலும் எதிர் நடவடிக்கைகள் சூழ எத்தனை காலம்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் துணையாகவும் நிற்க வேண்டியது தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலையாய கடமையாகும். இந்தத் தருணத்தில் நமது சிந்தனைக்காகவும் பொது மக்களுக்குத் தெளிவூட்டும் முகமாகவும் சில கருத்துகள்: ஈழ மக்கள் கடந்த முப்பது …

  5. நவம்பர்-7, 1917 ரசிய சோசலிசப் புரட்சி: நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துகள்! “ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க வரும்புவதாய் எங்களை ஏசுகிறார்கள்…..” “பாடுபட்டுப் பெற்ற, சொந்த முயற்சியால் சேர்த்த, சுயமாய்ச் சம்பாதித்த சொத்தாம் இது!…” “தனிச்சொத்தை ஒழித்த்தும் எல்லாச்செயற்பாடுகளும் நின்று போய்விடும், அனைத்து மக்களும் சோம்பேறித்தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது. இது மெய்யானால் முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்கவேண்டும். ஏனெனில் முதலாளித்துவ சுமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர…

  6. காஷ்மீர் பிரச்சனை : மதமா? அரசியலா? இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இங்கு 500 குறுநில அரசுகள் இருந்தன. இந்த குறுநில அரசுகளுக்கு மூன்று வகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டன: 1. இந்தியாவுடன் இணைவது 2. பாகிஸ்தானுடன் இணைவது 3. தற்சார்புடன் இருப்பது. அந்த அரசுகளின் பரப்பளவு மற்றும் அந்தந்த மக்களின் விருப்பம் சார்ந்து முடிவுகள் எடுக்க, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஏறக்குறைய அனைத்து அரசுகளும் தங்கள் முடிவுகளை விரைவாக எடுத்துவிட்ட போதும், அய்திராபாத் மன்னரும், ஜுனாகர் -காஷ்மீர் மன்னர்களும் தயக்கம் தெரிவித்தனர். அய்தராபாத் மற்றும் ஜுனாகர் அரசுகள் ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைக்கப்பட்டன. ஜம்மு -காஷ்மீர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக (80 சதவிகிதம்) வசிக்கும் மாநிலமாகும் எனவே, கா…

  7. ஈழத் தமிழர் என்ற அடையாள உணர்வே சிறந்த பாதுகாப்பு மறவன்புலவு க. சச்சிதானந்தன் இடம்- ஏறாவூர்; நிகழ்ச்சி- ஐக்கிய மீலாத் விழா; முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்- தலைவர். கொள்கை பரப்புச் செயலாளர் சேகுதாவூது பசீர்- பேச்சாளர். "முஸ்லீம்களின் பாதுகாப்புக் குறித்த சந்தேகம் தொடர்ந்து நீடிக்குமானால் இன்று ஆளணி இன்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தின் ஆளணித் தளத்தை அதிகரிக்கச் செய்யும் கைங்கரியத்தை முஸ்லிம்கள் செய்ய வேண்டி ஏற்படும்" என அவ்விழாவில் பசீர் பேசியுள்ளாராம். ரவூப் ஹக்கீம், சேகுதாவூத் பசீர் இருவரும் கொழும்பு அரசில் அமைச்சர்கள். கொழும்பு அரசுக்கு உண்மையாக நடக்க உறுதி பூண்டவர்கள். கொழும்பு அரசுக்கு எதிராகப் போரிட என்றே அமைந்த தமிழர் படை…

  8. தமிழ் தேசியமும் பெண் விடுதலையும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி, ஓர் அவதானம் யதீந்திரா எழுதாத என் கவிதையை எழுதுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை. - கப்டன் வானதி 1 இவ்வாறான ஒரு தலைப்பில் கட்டுரையொன்றை எழுத வேண்டுமென, நான் எண்ணிய நாளிலிருந்து இதற்கான குறிப்புக்களை சேகரிப்பதற்காக பல நூல்களைப் புரட்டி வந்திருக்கிறேன் எனினும் அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கையைத் தவிர வேறு எங்கும் எனது அவதானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான கருத்துக்களை காண முடியவில்லை. ஒரு வகையில் இது ஏலவே நான் எதிர்ப்பார்த்த ஒன்றும்தான். சில வேளை எனது பார்வைக்கு அகப்படாதவைகள் பல இருக்கலாம். குமாரி ஜெயவர்த்த…

  9. இந்திய மாயையில் இருந்து தமிழ்மக்கள் விடுபட வேண்டும்! இலங்கையின் இனநெருக்கடி பற்றி இந்தியாவின் அணுகுமுறை என்ன? அதன் கோட்பாடு என்ன? இந்தியா அதில் தலையிடுமா? இது போன்ற கேள்விகளே இப்போது தமிழ் மக்களது மண்டையைக் குடைந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கை பதிலாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக…

    • 0 replies
    • 825 views
  10. எங்கள் புரட்சி வெற்றி பெற்றது! மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் பிரசன்ட அண்மைக்காலத்தில் ஆயுத மோதல்கள் நடைபெற்ற பல நாடுகளில் சமாதானத்துக்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அவ்வாறு சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் இலங்கைக்கு அண்மையில் உள்ள நேபாளமும் ஒன்று. அங்கு இரண்டு தசாப்தங்களாக அரசுக்கு எதிராக மக்கள் விடுதலைக்காக போராடி வந்த மாவோயிஸ்ட் போராளிகளுக்கும் நேபாள அரசாங்கத்திற்குமிடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. அவ் வுடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியல் இத்தாலியப் பத்திரிகை ஒன்றுக்கு நேபாள மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் பிரசண்ட வழங்கிய நேர்காணல் இது. நேர்கண்டவர் அலெக்ஸ்ஸான்ரா கிலியோலி. பிரசண்ட, நாங்கள் தற்போதைய ந…

    • 0 replies
    • 989 views
  11. வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் அவள் ஓடியது. http://www.youtube.com/watch?v=EvTO3SCaJcg

    • 15 replies
    • 6.9k views
  12. தற்கொலைப் போராளிகளும் சமயப் பின்னணியங்களும்: சில எண்ணங்கள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சச்சிதானந்தன் சுகிர்தராஜா, இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பின்-காலனியத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். ஐந்து தனி நூல்களை எழுதியுள்ள சுகிர்தராஜா, சில தொகை நூல்களின் ஆசிரியருங்கூட. இவரது நூல்களை ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களும் சில அமெரிக்கப் பதிப்பகங்களும் வெளியிட்டுள்ளன. கணையாழியில் தொடர்ச்சியாக எழுதிய சுகிர்தராஜா, இலங்கையிலிருந்து வெளிவரும் உயிர்நிழல், கூடம் ஆகிய இதழ்களிலும் சமீபத்தில் எழுதியுள்ளார். n லண்டனிஸ்தான் என்னும் பெயர் இதுவரை உலக விமானநிலையப் பட்டியலில் சேர…

    • 0 replies
    • 858 views
  13. மனித உயிர் மகத்தானதா? மலிவானதா? இன்று நாமெல்லாம் ஒட்டு மொத்தமாகப் புலம்பிக் கொண்டிருக்கும் பொதுவான விஷயம் தமிழ்ப் பண்பாடு மாறிக்கொண்டு வருகிறது. இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது என்பதுதான். ஆனால் உலகமெங்கும் இன்று நல்ல குணங்கள், நல்ல பண்புகள், மனிதநேயம், மன்னிக்கும் தன்மை இவையெல்லாம் மிகவும் குறைந்து வருவதை நாம் உணரமுடிகிறது. நல்ல காரியங்கள் நான்கு நடக்குமுன்பு நாற்பது தீய காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தேறிவிடுகின்றது. அதுவும் வெட்டுவது குத்துவது என்பதெல்லாம் சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. நாய் சேகர் மாமா மாதிரி ‘எல்லோரும் கேளுங்கள். நான் கொலை செய்யப் போறேன். கொலை செய்யப் போறேன்.’ என்று அறிவிப்பு செய்து நடத்தும் நிகழ்ச்சியாகி விட்டது. அப்படியென்ன மனித உய…

    • 0 replies
    • 1k views
  14. இன்று அமெரிக்காவின் பிழையான அரசியல் முடிவுகள் பற்றி, நல்ல ஒரு பேச்சொன்று பார்க்கக் கிடைத்தது. நீங்களும் அந்த பேச்சைப் பார்க்க விரும்பினால் கீழ்வரும் இணைப்பை அழுத்தி 50 வது நிமிடத்திலிருந்து (இரண்டாவது பேச்சாளரின் அறிமுகத்திலிருந்து) பார்க்கவும். http://www.c-spanarchives.org/library/incl...=&clipStop=

    • 3 replies
    • 2k views
  15. இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-1 தமிழ்மணத்தில், இஸ்ரேலுக்கு எதிராக வந்த/வந்து கொண்டிருக்கும் சில பதிவுகளில், எழுதப்படும் கருத்துக்கள் யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ளானர் ஐரோப்பாவில் இருந்து வந்தேரிய யூதர்கள், பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர் இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான செயல்களே, அரபு-இஸ்ரேலியர்களின் பிரச்சனைகளுக்கு மூல காரணம் யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது ஏன்? (இது இஸ்ரேல் ஆதரவாக வந்த கேள்வி என்றே வைத்துக் கொள்ளலாம்) யூதர்கள் என்றுமே, Two state solution ஐ ஏற்றுக் கொண்டதில்லை. ஹோலோகாஸ்ட் சம்பவத்தை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுள்ளனர். பாலஸ்தீன …

    • 0 replies
    • 1.1k views
  16. காசுமீர் : புதைக்கப்பட்ட உண்மைகள் ""துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிணங்களே இங்கு வருகின்றன. பெரும்பாலும் அடையாளம் தெரியாதவாறு சிதைந்து போயிருக்கும் அவற்றைப் போலீசு அதிகாரிகளின் ஆணைக்கேற்ப நாங்கள் புதைத்து விடுவோம்'' என்கிறார் இக்கல்லறையை நிர்வகிக்கும் குழுவின் தலைவரான முகமது அக்பர் ஷேக். இக்குழு புதைக்கப்படும் பிணங்களைப் புகைப்படமெடுத்து ஆவணமாக்குவதற்கு முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி இராணுவத்தால் தடை செய்யப்பட்டது. இறந்து போனவர்களைப் பற்றிய விவரங்கள் குப்வாராவில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கின்றன என்று தடைக்கான காரணம் கூறப்பட்டது. ""யாரேனும் காணாமல் போன தனது உறவினரை தேடிக் கொண்டு குப்வாரா காவல் நிலையத்திற்குச் சென்றால், அவர்கள் புகைப்படங்…

    • 0 replies
    • 897 views
  17. மொரோக்கோ , முரண்பாடுகளின் தாயகம் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு morocco சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின் சொந்த நாட்டிற்கு சென்று வந்ததை, இந்த அடியேனுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி, எனது குறிப்புகளை எழுதி வைக்கிறேன்.மொரோக்கோவில் மரகேஷ் என்ற நகரம் சரித்திர பிரசித்தி பெற்றது. ஒரு களத்தில் வடமேற்கு ஆப்ரிகவையும், ஸ்பெய்னையும் ஆட்சி செய்த மூர்களின் பேரரசு, மரக்கேஷ் தலைநகராக கொண்டு தான் தன் தனது படையெடுப்புகளை ந…

    • 0 replies
    • 1.2k views
  18. கலைஞர் குற்றச்சாட்ட வேண்டியது இந்திய உளவுத்துறையே! Fri, 05/02/2008 - 06:58 — அரசியல் அலசல் - வி. சபேசன் `இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போதுசர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டு விட்…

    • 0 replies
    • 913 views
  19. கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ........... தாயாக மண்ணில் இருந்து ..விரும்பியோ விரும்பாமலோ . .புலம் பெயர்ந்து வந்த எங்களை ,ஆதரித்த இம் மண்ணுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ,கொடியவனின் குண்டுமழை இல்லாமல் , உணவு உடை உறையுள் தந்த ஆண்டவனுக்கும் நன்றிகள் நிலாமதி i

    • 30 replies
    • 4.8k views
  20. கொசோவோவின் வரலாறு -லோமேந்திரன் டிம் ஜூடா என்ற எழுத்தாளர் “பரம்பரை பரம்பரையாக கொசோவொவின் பிரச்சினைகளுக்கு அந் நாட்டின் மலைப் பகுதிகளே காரணமாக இருந்து வந்துள்ளன” என்று குறிப்பிடுகிறார். பல பரம்பரைகளாக கொசோவோ என்ற ஐரோப்பிய நாடு சேர்பியர்களினதும் அல்பேனியர்களினதும் கருத்து வேறுபாடுகளின் சமர்க்களமாக இருந்து வந்துள்ளது. சேர்பிய அல்பேனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் பல காலங்களாக கொசோவொவின் வரலாறு சம்பந்தமாக தத்தம் கடும் வாதங்களினை முன்வைத்து வருகிறார்கள். அல்பேனியர்கள் கூற்றுப்படி அவர்களே கொசோவோவின் உண்மையான குடிமக்கள். அவர்கள் இலைரியன்கள் எனப்படும் ஆதிவாசிகளின் வழிவந்தோர்களாவர். சேர்பியர்களோ, கி.பி.1500 களிலிருந்த அவர்களின் பல்வேறு இராச்சியங்களின் இ…

    • 0 replies
    • 1.3k views
  21. இது வெறும் போர்வையா? ஒரு பெரிய தேசம். பற்பல மொழிகள், மதங்கள், ஜாதிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், நகராட்சிகள், கிராமங்கள்; இதைப் போல இன்னும் பல பிரிவுகள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, நான்காவது பெரிய ராணுவம், என்றெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லலாம். ஆனாலும் இந்தியா இப்போது எதிர்நோக்கியுள்ள சிலப் பிரச்சினைகளின் தொகுப்பு. காஷ்மீர் பிரச்சினை சீனாவுடன் எல்லைப் பிரச்சினை ஸ்ரீலங்காப் பிரச்சினை நேபாள மாவோயிஸ்டுகளின் தொல்லை இந்து - முஸ்லீம் - கிருஸ்த்தவ பிரச்சினை [மும்பை, குஜராத், கோயம்புத்தூர், பிரிவினை, இன்னும் சில) காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் பிரச்சினை உள்நாட்டுத் தீவிரவாதிகள் (உல்ஃபா, நக்சலைட்டுகள், ...) மொழிப் பிரச…

    • 1 reply
    • 1.5k views
  22. சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது என் வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க நாயகர்களின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்தது எனக்கு தெரியவந்தது. நான் வாசித்த கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா? என்ற கேள்வி எனக்கு எழும். 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்' என்ற மனநோய் எனக்கு இருக்கிறதா தெரியவில்லை, அக்கதைகளில் வில்லன்களாக சித…

    • 1 reply
    • 2.2k views
  23. நாளொன்றுக்கு ஐந்து பேர்: இலங்கை தாங்குமா?. இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஐந்து பேர் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக மூன்று மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் நாளொன்றுக்கு குறைந்தது இருவர் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். மக்கள் கண்காணிப்புக் குழு, சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில், 662 படுகொலைச் சம்பவங்களும், 540 கடத்தல் சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.