Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கோரிக்கைகளை வென்றெடுப்பதற்குரிய அகிம்சா வழி ஆயுதம் உண்ணாவிரதங்கள் ! - எஸ்.தவபாலன் ”சிறுபான்மையினர் அனைவருமே ஒன்று சேர்ந்தால் அரசுக்கு எப்படியிருக்கும் என்ற சிந்தனையூற்று அதே சிறுபான்மையினரிடத்தில் தோன்ற வேண்டும். காலம் பதில் சொல்லட்டும்” என்று விட்டுவிடுவோம். “நம் நாட்டு அரசு உண்ணாவிரதம் இருந்த சிறுபான்மையினரை ஒருபோதும் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை இதனை பழைய வரலாறுகள் செப்புகின்றன“. உண்ணாவிரதப்போராட்டங்களும் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் காந்தி வழிவந்தவையாக இருந்தாலும் நம் நாட்டில் அவை கொச்சைப் படுத்தபட்ட வரலாறே இருக்கின்றன” உண்ணாவிரதமிருந்த போராளி “திலீபன் 1987 ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 இல் மரணத்தை தழுவிக் கொண்டார். இது இந்த நாட்டின் சரி…

  2. ‘அரசியல் ஆசை’ மொஹமட் பாதுஷா / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:18 Comments - 0 உலகில் நடந்து கொண்டிருக்கின்ற அனைத்து அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, இனத்துவ நகர்வுகளுக்குப் பின்னால், ஓர் அரசியல் ஆசையும் பதவி மோகமும் ஒளிந்து கொண்டிருக்கிறது. உலக அரசியலின் விளையாட்டுப் பொருள்களாகவே மக்கள் சமூகத்தைக் கருத வேண்டியிருக்கிறது. எனவே, அரசியல், மக்களுக்கு (நல்லது) எதையும் சாதிக்க முடியவில்லை என்றாலும் அரசியலுக்காக ‘அவர்கள்’ எதையும் செய்வார்கள் என்ற அடிப்படையில் புரிதல் இன்றி, உலக அரசியலையோ, இலங்கைச் சம்பவங்களையோ திறனாய்வு செய்ய முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். உலகில் நாமறிந்த நிதர்சனங்களின் அடிப்படையில் நோக்கினால், உரிமைகளுக்காக, இறையாண்…

  3. பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மகிந்த ராஜபக்ஸ கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மண்ணில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது. ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 வருட கால அரசியல் வாழ்க்கையில், சொந்த மண்ணில் அவர்கள் தேர்தலை சந்திக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையில் 3 தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்…

  4. அநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, மு.ப. 10:59 Comments - 0 மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி”யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலி முகத்திடல் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்க ஒரு நாயகனைப் போல, அநுர குமார மேடையேறினார். கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, அரசியலுக்கு வந்த ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திப் பேசிய அவர், “புதிய பாதையைத் தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், மூன்றாவது அணி வேட்பாளர்களாக …

    • 2 replies
    • 525 views
  5. தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம், இந்தியா மீது பழிபோடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது. 2018 உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் இடையில் கூட்டணி அமையவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தட்டிப் போனது. ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்து போட்டியிட்டது. அப்போது, இந்தியாவின் சொற்படியே சுரேஸ் பிரேமசந்திரன் அந்த முடிவை எடுத்தார் என்று குற்றம்சாட்டினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இர…

  6. மழைக்காலத்து தவளைச் சத்தம்போன்று, தேர்தல் என்றவுடன் ஒற்றுமை பற்றிய ஆரவாரங்களும் ஆரம்பித்துவிடும். திரும்பிய இடங்களிலெல்லாம் ஒரே தவளைச் சத்தம். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாயிவின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒற்றுமைபற்றிய சத்தம் தொடங்கிவிட்டது. நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கவேண்டும் – இந்தக் காலத்தில் மாற்றுத் தலைமை கூடாது என்றவாறான அரசியல் வகுப்புக்களும் தொடங்கிவிட்டன. இது பற்றி முதலில் சுமந்திரன் பேசினார். பின்னர்சம்பந்தன் பேசினார். ஆனால் இதே நபர்கள்தான் கூட்டமைப்பிலிருந்து பலரும் வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள். ஓற்றுமைபற்றி பேசுவது தவறான ஒரு விடயமல்ல. அதுதமிழ் மக்களுக்கு அவசியமான ஒன்றுதான். ஆனால் ஒற்றுமைபற்றி பேசுபவர்கள் இதய சுத்தியுடன்தான் பேசுகின்றனரா? இ…

  7. இளையராஜா வருகிறாராம். போகலாம் என்பவர்கள் சிலர். புறக்கணிக்க வேண்டும் என்பவர்கள் சிலர். நமக்கேன் வம்பு என்று இருப்பவர்கள் பலர். இதை கொஞ்சம் விரிவாகச் சிந்தித்தபோது மனதில் தோன்றுவதை இங்கே பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள். ஆயுத அரசியல் என்பது நெகிழ்வுத்தன்மை அற்றது. காலம்தாழ்த்துதல், சகித்துக்கொள்ளல் பாரிய அழிவில் முடித்துவிடும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு இருந்த புலிகள் தப்பிப் பிழைத்து வந்தார்கள். சர்வதேசத்தை அனுசரிக்க ஆரம்பித்தபின் மெல்ல மெல்ல அழிவு வந்தது. இது புலிகளுக்குத் தெரியாதது என்பதல்ல என் கருத்து. அவர்களும் தெரிந்தே ஒரு முடிவுக்கு இட்டுச் சென்றார்கள் என எண்ணுகிறேன். எந்த ஒரு போராட்ட வடிவத்திற்கும் ஒரு கால எல்லை உண்டு. அந்தவகையி…

    • 16 replies
    • 1.2k views
  8. கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன். திருமாவளவனின் யாழ் வருகை பரவலாக வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது இதுதான் முதல் தடவை அல்ல. அதுவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இந்த மேடையில் அவர் பேசுவதும் இதுதான் முதல் தடவை அல்ல. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதே நிகழ்வுக்காக அவர் வந்திருந்தார்;பேசினார். அப்பொழுது வராத எதிர்ப்பு இப்பொழுது வர காரணம் என்ன ? இறுதிக்கட்டப் போரின்போது கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் கொந்தளிப்பை மடைமாற்றி விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதன்பின் அதாவது 2009 மே மாதத்திற்க…

  9. எரிய வைப்பார்களா, அணைய வைப்பார்களா? -இலட்சுமணன் இலங்கை அரசியலில், தேர்தல் நடத்துவது தொடர்பான கருத்தாடல்கள், மோதுகைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம், கிழக்கில் தம்சொந்த நலன்களுக்காக, இன ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பச்சோந்தித்தனமான செயற்பாடுகளும் முன்நகர்த்தப்பட்டு வருகின்றன. தங்களுடைய குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மூலம், ஏதுமறியா பாமர மக்களினதும் அவர்களின் குழந்தைகளினதும் எதிர்கால வாழ்வில், பாரதுரமான பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உருவாகி வருகிறது. கிழக்கைப் பொறுத்தவரையில், மட்டக்களப்பில் பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிடுபவர்களது பட்டியல்களானவை, தமிழர்களாகவே இருக்க வேண்டும் என்ற முயற்சி தோற்றுத்தான் போனது. ஆனால், ப…

  10. விகிதாசரத் தேர்தல்— தற்போதைய நிலையில் கிழக்குத் தமிழர்களுக்கே ஆபத்து- -அ.நிக்ஸன்- தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாகக் கூட வந்துவிடக் கூடாதென்ற நோக்கிலேயே 1982இல் ஜே.ஆர் ஜயவர்தனா விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகம் செய்தார் என்றொரு கதையுண்டு. ஆனாலும் ஆசன எண்ணிக்கையில் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தத் தேர்தல் முறையில் முதன் முதலாக 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சிறந்த உதாரணம். ஆனால் அன்று ஜே.ஆர் நினைத்தைவிட இன்று புதிய புதிய சிங்களக் கட்சிகள் உருவாகி அனைவருமே குறைந்தளவு ஆசனங்களையேனும் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.. அத்துடன் முஸ்லிம் மக்கள் தங்களுக்கெனத் தனித்துவமாகக் கட்சிகளை உருவாக்கிப் பலவ…

  11. கிழக்கு மாகாண மக்கள் விழித்தெழும் நேரம் இது’-மட்டு.நகரான் October 25, 2020 Share 53 Views தமிழ் தேசிய போராட்டத்தில் இழப்புகள் என்பது எண்ணிலடங்காது. கடந்த 35வருட காலத்தில் நாங்கள் பெற்றுக்கொண்டதைவிட இழந்தது அதிகம். வடகிழக்கு இந்த இழப்புகளில் மீள்வதற்கான வழிவகைகள் இன்றி இன்றும் தடுமாறி வருவதை நாங்கள் உணர முடிகின்றது. இந்த இழப்புகளில் அதிகமான இழப்புகளை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டிருந்தது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முஸ்லிம்கள், சிங்களவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறையிலும் தமிழர்கள் பல இழப்புகளை எதிர்கொண்டனர். …

  12. வரவு செலவு வாக்கெடுப்பும் – வழுக்கிய ‘தமிழ்’ கட்சிகளும் – செய்தி ஆக்கம்- பிரபா 120 Views தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கு குரல்கொடுப்பதாக கூறிக்கொண்டு சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வண்ணமே அமைந்துள்ளது. சிறீலங்கா அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. கடந்த 10 ஆம் நாள் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவில்லை. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்ப…

  13. இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் : இதயச்சந்திரன் முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் ,வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். அந்தக் களம், கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 200 மைல் தொலைவில் இருக்கும், 1191 தீவுக்கூட்டங்களை கொண்ட மாலைதீவாகும். அமெரிக்காவின் அணுவாயுதப் படைத்தளமான தியாகொர்காசியா ,இந்தத் தீவிலிருந்து சற்றுத் தொலைவில்தான் இருக்கிறது. பிரித்தானியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு ,2014 டிசம்பரில் காலாவதியாகிப்போவதால் ,மாலைதீவில் மாற்றுத் தளத்தை அமெரிக்கா தேடு…

  14. சுமந்திரனைக் கொல்ல முயற்சி: என்ன தான் நடக்கும்? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி, அண்மையில் வெளியானது. பல்வேறு மட்டங்களிலும் இது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் செய்தியின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவர் செல்லும் வழியில், அவரைக் கொல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், எனினும் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளிலிருந்து அவர், அதிர்ஷ்டவசமாகத் தப்பிக் கொண்டார் என்று…

  15. யாருக்காக இந்த மர்ம மாநாடு?-புகழேந்தி தங்கராஜ்! 90 அகவையைக் கடத்தல் அரிது. இந்த வயதிலும் நிறைந்த நினைவாற்றலோடும் சிறந்த தமிழாற்றலோடும் இருப்பதென்பது அரிதினும் அரிது. இப்படியொரு சாதனையாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சென்ற இதழிலேயே சொல்லியிருக்கவேண்டும். அது முந்திச் சொல்வதாக ஆகியிருக்கலாம்... எனினும் முந்திக்கொள்தல் பிந்திச் சொல்வதைப்போல் பிழையல்ல! தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும் - என்கிற வேண்டுகோளுடன் கலைஞர் வற்றாத உடல்நலத்துடன் சதமடிக்க வாழ்த்துக்கள்! பிறந்த தினத்துக்கு 4 நாள் முன்பு சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் 'தி.மு.க. கோட்டைக்குள் குள்ளநரிகள் நுழைந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று எச்சரித்திருந்தார் கலைஞர். ஆட்டுக்குட்டிகளைக் கவர முயலும் …

  16. தமிழகத்தின் புதிய ஆட்சி ஈழத்தமிழர் நீதிக்கான அமுக்கக் குழுவாக வேண்டும் 103 Views தமிழகத் தேர்தல் களம் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை புதியவர்கள் பக்கம் மக்களின் நாட்டம் அதிகமாக இருந்தமையால், புதிதாகக் களமிறங்கியவர்களுக்கான வாக்குப்பலம் அதிகரித்திருப்பதாகவும், அது எவ்வாறு அமைகிறதோ அதற்கேற்பவே பெரிய கட்சிகளின் வெற்றி அமையும் என்பதும், எந்தக் கட்சி ஆட்சியானாலும் அது கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்தே அமையும் என்பதும் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இம்முறையும் தேர்தல் களத்தில் வழமை போலவே ஈழத்தமிழர் பிரச்சினைகள், தமிழ், தமிழர் என்னும் மொழி இன உணர்ச்சிகளைத் தேர்தல் நேரத்தில் தூண்ட…

  17. திறக்க மறுக்கும் கதவுகள் - முகம்மது தம்பி மரைக்கார் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உலகில் ஏராளம் உள்ளன. விடை காணப்படாத சில கேள்விகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்விகளை, சில சம்பவங்கள் மீது பிரயோகிக்கும் போது, ‘பூமரங்’ போல், அந்தக் கேள்விகள் மீளவும் நம்மையே வந்தடைகின்றன. குறிப்பாக, உலகில் நிகழ்ந்த சில மரணங்கள் இன்னும் மர்மங்களாகவே இருக்கின்றன. இருந்தார்களா? இறந்தார்களா என்று தெரியாமலேயே, வரலாற்றுப் பக்கங்களிலிருந்து சிலர் மறைந்து போய் விட்டனர். உலகில் துலக்கப்படாத மரணங்களும் அதனுடன் தொடர்பான மர்மங்களும் ஏராளமுள்ளன. அவற்றில் பலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இந்தி…

  18. 'சட்டப் புலமைக்காக - முன்னாள் நீதியரசர் என்பதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை' -அ.நிக்ஸன்- 21 அக்டோபர் 2013 "கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல்." சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளும் விக்னேஸவரன் அறிய வேண்டிய தகவல்களும் Notes—13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் தமிழர்கள் தொட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று கூறி விட்டு அந்த சட்டத்தின் கீழான மாகாணசபை முறையை தூக்கிப் பிடித்து அதே மக்கள் முன்னிலையில் நீங்கள் கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல். சர்வதேச அரசியலில் என்ன நடக்கின்றது. இலங்கை இனப்…

  19. இலங்கை தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி! அகிலன் கதிர்காமர் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மீது, வடக்கு மாகாண சபையின் ஒரு பிரிவினர் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆழமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் விக்னேஸ்வரன் கோரியிருந்தார். மேலும், இருவரைக் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்துதான் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது. இதற்கிடையே தமிழ்த் தேசியவாதக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, விக்னேஸ்வரன் தொடர்ந்…

  20. 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமும் தமிழ் மக்களும் முத்துக்குமார் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை இலங்கை ஜனாதிபதி நவம்பர் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் தொடர்பான பெரிய ஒதுக்கீடுகள் ஏதும் இருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் சிறப்பு ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசாங்கம் இதுபற்றி அக்கறை எதையும் செலுத்தவில்லை. வழக்கம் போலவே பாதுகாப்பு அமைச்சிற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கினை பொறுத்தவரை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரங்களை உருவாக்கவேண்டிய தேவை இருந்தது. குறிப்பாக வீடுகளை கட்டுதல், தொழில்களை உருவாக்குதல், பாடசாலைகள் போன்ற பொது நிறுவ…

  21. ஜனநாயகமும் ஜனநாயக துஷ்பிரயோகமும் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் வன்னியில் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. தினமும் சாவு. நூற்றுக்கணக்கானவர்கள் காயம். இரத்தம் பெருக்கெடுத்தோடிய நாட்கள். அவலம் பெரும் நாடகமாடியது. மனிதர்கள் செயற்றுப் போனார்கள். செயலற்றுப் போகும்போது எதுவும் வெறும் சடம் என்ற நிலை உருவாகிறது. அப்படித்தான் மனிதர்கள் அப்போது அங்கே இருந்தார்கள். காற்றில் எற்றுண்டு போகும் சருகுகளாக, ஆற்றில் அள்ளுண்டு போகும் துரும்பாக. அங்கே எவரிடமும் கனவுகளில்லை. எதிர்காலம் பற்றிய எந்த எண்ணங்களுமில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. கண்ணீர் நிரம்பி, அந்தப் பாரம் தாங்க முடியாமல்; கால்கள் புதைய மணலில் தள்ளாடி நடக்கும் மனிதர்களே அந்தச் சிறிய, ஒடுங்கிய கடற்கரைய…

  22. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் நேரடி அரசியல் கலந்துரையாடல்.

  23. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போது இனப்பிரச்சினையில் இருந்து மதப் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் ஆதாரமாக ஜெனீவா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் சிறீலங்கா மீதான (இதனைச் சிறீலங்காவிற்கு எதிரானது என்று சொல்வதுதவறு) பிரேரணை அமையவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமை இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளித்த 25 நாடுகள் இம்முறையும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.