அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9269 topics in this forum
-
போதையால் தள்ளாடும் தமிழ் இளைஞர் சமூகம் புருஜோத்தமன் தங்கமயில் வடக்கில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பாவனை, கணிசமாக அதிகரித்திருப்பதாக வைத்தியத்துறையினரும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர். இதனால், சமூகக் குற்றங்களும் இளவயதினரின் தொடர் மரணங்களும் பதிவாகி வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும், போதைப்பொருள் பாவனையால் பத்துக்கும் அதிகமான இளவயதினர் நோய்வாய்ப்பட்டும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, நூற்றுக்கணக்கானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளிலும், போதை விடுவிப்பு நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான நாள்கள், வடக்கு - கிழக்கில் போதைப…
-
- 1 reply
- 458 views
-
-
தடுத்து நிறுத்துவது யார்? | Dr.Sathiyamoorthy | Dr.Gadambanathan
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்மொழியப்பட்டுள்ள ‘புனர்வாழ்வுப் பணிமனை’ சட்டமூலத்தின் ஆபத்து Ambika Satkunanathan on October 12, 2022 Photo, Selvaraja Rajasegar நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியினால் அவதியுறும் நிலையைக் கூட பொருட்படுத்தாமல் ஒடுக்கும் வகையில் அமைந்த மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் சட்டங்களை இயற்றும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது, புனர்வாழ்வுப் பணிமனைச் சட்டமூலம் இதற்கான மிகவும் அண்மைய உதாரமாக அமைகின்றது. சட்ட வரைவிலக்கணங்கள் அற்ற நிலை முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் பிரயோகம் மிக்க நபர்களில் முன்னாள் போராளிகள், அழிவை ஏற்படுத்தும் தீவிரமான நாச வேலைகளில் ஈடுபடும் …
-
- 0 replies
- 316 views
-
-
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் படும்பாடு Veeragathy Thanabalasingham on October 11, 2022 Photo, DNAINDIA அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்தவாரம் இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்தது. ஆனால், அது சாத்தியமாகவில்லை. இப்போது அக்டோபர் 20,21 திகதிகளில் அந்த விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானித்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை வலுப்படுத்தும் நோக்கிலான இந்தத் திருத்தச் சட்டமூல வரைவை (நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இது அரசியலமைப்புக்கான 21ஆவது தி…
-
- 0 replies
- 255 views
-
-
வட-கிழக்கு நில ஆக்கிரமிப்பும் நிலைகுலைந்த தமிழர் தலைமையும் கலாநிதி சூசை ஆனந்தன் வடக்கில் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி விகாரை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்திருந்தன.முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் பிக்குவின் உடல் தகன விவகாரம், இப்போது திருகோணமலை கோணேஸ்வர கோயிலை மாசுபடுத்தும் விவகாரங்கள், ஏற்கனவே பறிபோன கன்னியா வெந்நீரூற்று விவகாரம்…இவைகள் இப்பிரபஞ்சத்தில் மிகவும் மோசமான இழி நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு மதவாத தொழுநோய் பிடித்த நாடு சிறிலங்கா என்பதை நிரூபிக்க போதும். வடகிழக்கில் இன்று ஏற்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு,மற்றும் நினைத்தவாறு புத்த விகாரைகள் கட்டுதல் போன்ற அரா…
-
- 0 replies
- 342 views
-
-
உலகெங்கும் உள்ள ஈழத் தமிழ் உறவுகளே! இது இரண்டு மாதங்கள் முன்பு வெளியான மிக மிக மிக முக்கியமான கட்டுரை! வெறும் அரசியல் அலசல் இல்லை இது. தமிழினப் படுகொலை தொடர்பாகப் பன்னாட்டளவில் இடைவிடாது செயல்பட்டு வரும் இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள மிக முக்கியமான கடிதம்! புலம்பெயர் அமைப்புகளுக்கு ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த கோரிக்கை! படித்துப் பார்த்து இதில் உள்ள பரிந்துரையை உடனடியாக முன்னெடுக்க வேண்டுகிறேன்!🙏🏾 * * * * * மாலத் தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து… என்று கோட்டபாயவின் சுற்றுலா தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அடைக்கலம் தேட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. விசாவை நீட்டிக்க ம…
-
- 0 replies
- 561 views
-
-
இலங்கையில் சிறுபான்மையும் ஒற்றைத் தேசிய அடையாளமும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையில், “சிறுபான்மை இனங்கள் இல்லை; பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அண்மையில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கருத்தை, சில தமிழ் அரசியல்வாதிகள் கைதட்டி வரவேற்கிறார்கள். பொதுப்படையாகப் பார்த்தால், இது நல்லெண்ணம் மிக்க கருத்தாகவே தெரிகிறது. அந்தளவில், அதற்குரிய வரவேற்பும் பொருத்தமானதே! ‘அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்’ என்கிற குரல், அனைவரும் ‘ஸ்ரீ லங்கன்ஸ்’ என்ற தேச அடையாளத்துக்குள் வரவேண்டும் என்கிற ‘சிவில் தேசிய…
-
- 1 reply
- 349 views
-
-
முடியாட்சியின் எதிர்காலம் : சில கேள்விகளும் சந்தேகங்களும் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 06:52 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை பிரித்தானியா மக்கள் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் இல்லாத சாம்ராஜ்யத்தில் வாழப் பழகி வருகிறார்கள். கடந்த ஏழு தசாப்தங்களாக, பிரித்தானியா பெருமையாகத் திகழ்ந்த ஆளுமை. வாழ்வுடன் இரண்டறக் கலந்து விட்ட பிம்பம். மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரேளிங் பவுண்கள் இல்லாமல் கொடுக்கல் வாங்கல்களோ, முத்திரைகள் இல்லாமல் தபால்களை அனுப்பவோ முடியாதிருந்த தேசம். தற்போது மகாராணியாரின் மூத்த மகன் மூன்றாவது சார்ள்ஸை படிப்படியாக ஏற்றுக் கொள்வது போன்றதொரு தோற்றப்பாடு காணப்படுகிறது. இந்த தோற்றப்பாட்டுக்கு மத்…
-
- 0 replies
- 671 views
-
-
ஐரோப்பிய மின்சார நெருக்கடி: இலங்கைக்கான படிப்பினைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு, முக்கிய பங்களித்தவற்றில் ஒன்று மின்சார நெருக்கடி. இலங்கையின் மின்சார நெருக்கடிக்கு, தற்காலிகமான தீர்வு எட்டப்பட்டுள்ள போதும், இது நிரந்தரமானதோ நீண்டகாலத்துக்கு நிலைக்கக்கூடியதோ அல்ல; எப்போது வேண்டுமானாலும் இன்னொரு மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் எனும் நிலையிலேயே, நாடு இயங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு சரணாகதிப் பொருளாதார மாதிரியை நோக்கியே, இலங…
-
- 0 replies
- 268 views
-
-
ரசிய உக்ரெய்னில் நடத்திய பொது வாக்கெடுப்புக்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையிலெடுக்க வேண்டிய இந்தியா இலங்கையில் சீன எதிர்ப்பைவிட இந்திய முதலீடுகளுக்கான கடும் எதிர்ப்பைக் கண்டுகொள்ள மறுக்கும் புதுடில்லி உக்ரெய்னின் நான்கு பிராந்தியங்களை ரசிய பொது வாக்கெடுப்பின் மூலம், இணைத்துக் கொண்டமை தொடர்பாக இந்தியப் பேரரசுக்குப் பெரும் இராஜதந்திரச் சோதனை ஏற்பட்டுள்ளது. புதுடில்லி தனது நிலைப்பாட்டை விரைவில் விளக்குவோமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக ரூதமிழ் (totamil) என்ற இந்திய செய்தி இணையத்தளம் தொிவித்துள்ளது. இந்த வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையும்…
-
- 0 replies
- 644 views
-
-
வடக்கை நோக்கி குவியும் கவனம் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:56 PM கபில் விரும்பியோ விரும்பாமலோ, சர்வதேச சக்திகளின் பூகோள அரசியல் ஆட்டக்களமாக இலங்கை மாற்றப்பட்டு விட்டது. சர்வதேச சக்திகள் மோதுகின்ற களமாக இலங்கையைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவந்த எல்லா ஆட்சியாளர்களும், ஏதோ ஒரு வகையில், அவ்வாறான வாய்ப்புகளுக்கு இடமளித்தே வந்திருக்கிறார்கள். அபிவிருத்தியின் பெயராலோ, கொடைகளின் பெயராலோ, முதலீடுகள் என்ற பெயரிலோ திறக்கப்பட்ட இந்த ஆடுகளம், இப்போது புதிய புதிய பெயர்களில் புதிய புதிய களங்களை நோக்கி விரிவடையத் தொடங்கியிருக்கிறது. இப்போது, சர்வதேச சக்திகளின் ஆடுகளம் மெல்ல மெல்ல வடக்கு, கிழக்க…
-
- 1 reply
- 337 views
- 1 follower
-
-
புலிகளை பிரதி செய்த உக்ரைன் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:40 PM சுபத்ரா ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர். ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. வெடிம…
-
- 4 replies
- 751 views
- 1 follower
-
-
ஜெனிவாத் தீர்மானம் 2022 : தமிழ் அரசியலின் இயலாமை? Nillanthan மற்றோரு ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டது சரி என்பதை இப்புதிய தீர்மானம் நிரூபித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஜெனீவாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின. அதில் பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை இணைத்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். இதுநடந்து 20மாதங்களாகிவிட்டன. பொறுப்புக்குகூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகும் முயற்சியில் மூன்று கட்சிகளும் எதுவரை முன்னேறியுள்ளன? நடந்து முடிந்த ஜெனிவா…
-
- 1 reply
- 307 views
-
-
நவம்பர் 18 இல் மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த ? By NANTHINI 09 OCT, 2022 | 09:25 AM (லியோ நிரோஷ தர்ஷன்) மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நவம்பர் மாதம் 18ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் 77ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்கவும், அதே தினத்தில் கட்சியின் மாநாட்டை நடத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பொறுப்பளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 2023ஆம் ஆண்டு என்பது தேர்தல்களின் வருடமாகும். அதனை இலக்கு வைத்தும், அரசியல் ரீதியில் கடும் பின்னடைவுகளை சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை…
-
- 1 reply
- 216 views
-
-
நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக்குழு எதிர்காலத்தில் சாத்தியமா? நிலாந்தன்! கடந்த வாரம் திலீபன் தொடர்பான எனது கட்டுரையில் திலீபனின் படம் ஒன்று காணப்பட்டதனால் முகநூல் நிர்வாகம் எனது முகநூல் கணக்கை 24 மணித்தியாலங்களுக்கு கட்டுப்படுத்தி வைத்திருந்தது.எனது நண்பர்கள் பலரும் அவ்வாறு தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தன்னுடைய கணக்கு முடக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு சமூக வலைத்தளமானது திலீபனின் படத்தை தனது சமூகத் தராதரங்களை மீறும் ஒன்றாகக் கருதுகின்றது.இவ்வாறு உலகளாவிய சமூகவலைத்தளம் ஒன்றினால் தடை செய்யப்பட்ட ஒரு படத்துக்குரியவரை தமிழ் மக்கள் எப்படி அஞ்சலித…
-
- 0 replies
- 163 views
-
-
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு பரிந்துரைப்பதற்கான நேரமிது – புலம்பெயர் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப பரிந்துரைப்பதற்கான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதற்கான நேரமிது என புலம்பெயர் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பாற்றர்சன் தெரிவித்துள்ளார். மனித உரிமை அமைப்புகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான பொதுவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது; இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகர் அறிக்கை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ…
-
- 0 replies
- 239 views
-
-
சீர்திருத்த முடியாத ஒரு சட்டத்தை நீக்க வேண்டிய உடனடித் தேவை Photo, Tamilguardian ஆயுதம் தாங்கிய எழுச்சி ஒன்றின் மூலம் ஏற்பட முடியும் எனக் கருதப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு தற்காலிக சட்டமாக அது கருதப்பட்டது. ஆனால், அச்சட்டம் இப்பொழுது சுமார் 40 வருடங்களுக்கு மேல் அமுலில் இருந்து வந்துள்ளது. எதிரி தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட அது தொடர்ந்து நிலைத்து வருகின்றது. இச்சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் பல வருட காலம், பல தசாப்தகாலம் கூட சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்; பயங்கரவாதம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பலர் வழக்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் அல்லது சித்திரவதைக்கு ஊடாக பலவந்தமாக பெற்றுக்…
-
- 0 replies
- 547 views
-
-
உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன் ஐ நாவும் அனைத்து சமாதான இயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு பின் இனி வேண்டாம் யுத்தம் உலகில் என்று தானே ஆரம்பித்தார்கள். அதன் பின் எத்தனை யுத்தம் உலகில் நடந்தன, நடக்கின்றன, எத்தனை மனிதர் இது வரை இறந்தனர், எத்தனை குழந்தைகள் வாழ்வை இழந்தனர், எத்தனை தேசங்கள் அழிக்கப்பட்டன. எத்தனை ஆக்கிரமிப்பு யுத்தங்கழும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களும் உலகில் நடந்தன. இன்று ருசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக இதை தீர்க்க முடியாமல் அவர் அவர் பூகோள அரசியல் நலன் சார்ந்து பெரும் ஆயத மோதலாக வெடித்துள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பின் ஐரோப்பாவுக்கு பெரும் சவால் மிக்கதாகவும் அவர…
-
- 3 replies
- 585 views
-
-
‘ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி புருஜோத்தமன் தங்கமயில் முன்னாள் போராளிகளை நோக்கி, தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புகளாலும், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில்,“...முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை? தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த போது, நீங்கள் எல்லாம் ஏன் தப்பி ஓடினீர்கள்...” என்பது மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அண்மையில் கூட, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கூட, அது தொடர்பிலான விவாதங்களின் …
-
- 4 replies
- 911 views
-
-
பாடசாலைகளில் போதைப்பொருள்: யாருடைய தவறு? தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் சமூகவலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் கருத்துக்களை கூர்ந்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.என்னவெனில், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்க முடியாதிருப்பதன் விளைவுதான் இது போன்ற சீரழிவுகள் என்ற தொனிப்பட பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள், சட்டவாளர்கள், மருத்துவர்கள், பொறி…
-
- 2 replies
- 531 views
-
-
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனை குறித்து ஒரு மீள்பார்வை Veeragathy Thanabalasingham on October 3, 2022 Photo, AFP எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு அண்மையில் லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் அதில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிய பிறகு லண்டனில் இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் நெவில் டி சில்வா அவருடன் கலந்துரையாடியபோது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிம…
-
- 0 replies
- 276 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமையின்மை என். கே அஷோக்பரன் twitter: @nkashokbharan பலரும் எழுதி எழுதி சலித்துப் போனதொன்றை, மீண்டும் மீண்டும் எழுத வைப்பதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் சதி. ‘குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்; கூறியது கூறல்’ ஆகியவை குற்றம் என்கிறது நன்னூல். ஆனால், எப்படிச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும் புரியாதது போலவே நடிக்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு, வேதாளத்தின் கேள்விகளும் பதில் சொல்லும் விக்கிரமாதித்தனாய், சற்றும் மனந்தளராது, மீண்டும் மீண்டும் கல் செதுக்குவது போல, அது உருப்பெறும் வரை செதுக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தார்மிகக் கடமையாகிறது. இலங்கையில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தற்காப்புத் தேசியமாகவே உருவாகியது. அது, சிங்…
-
- 0 replies
- 352 views
-
-
திட்டமிட்டு சிங்களப் பேரினவாதம் எம்மினத்தின் மீது திணிப்புகளை மேற்கொள்கிறது – தவராசா கலையரன் எம்.பி. -சி.எல்.சிசில்- திருகோணமலை மாவட்டத்தைக் குறிவைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை மிக வேகமாக ஆரம்பித்துள்ளது. தொல்லியல், வனபரிபாலனம் எனத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். திருகோணமலையில் இடம்பெற்ற இந்திய உயர்ஸ்தானிகருடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை – இந்தியா என…
-
- 0 replies
- 296 views
-
-
அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவசரகால நிலையை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தி, ‘இலங்கையை வழமை’க்குக் கொண்டு வந்துள்ளார். வன்முறை, அரசின் அடக்குமுறை, அரசசார்பற்ற நபர்களின் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளை, அவசரகால சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் இலங்கை குறித்த அனுபவத்தில் முன்னிற்கின்றன. இலங்கையின் கொடூரமான நடவடிக்கைகள், வன்முறைச் சுழற்சியை மேம்படுத்தி, ஜனநாயக சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை அழிக்க வழிவகுத்தன. தீவின் வடக்கு, தெற்கில் உள்ள அரச அதிகாரிகளால், கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியதானது, ஏராளமான மரணங்கள், காணாமல்போதல்கள் போன்றவற்றுக்கும் அரசு மீதான பெர…
-
- 0 replies
- 411 views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 393 views
-