அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
-
- 0 replies
- 476 views
-
-
எதிர்பார்ப்புகளையும் மீறிய தாமதிக்கும் நீதி லக்ஸ்மன் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சம அந்தஸ்தான வாழ்க்கை என்பது, எட்டாக்கனி என்பது நிரந்தரமானதன் பின்னும், ஏன் தமிழ் மக்கள் கிடைக்காத ஒன்றுக்காகப் பிரயத்தனப்படுகிறார்கள் என்றே, நம் போராட்ட வரலாறு தெரிந்தோர் கேள்வி எழுப்புவர். ஐக்கிய நாடுகளின் அமர்வுகள் வருகையில், காலங்காலமாக இலங்கையின் வடக்கு- கிழக்கு தமிழர்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் முடிவுக்கு வந்தவிடும் என்றே ஒவ்வொரு வருடத்திலும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், யுத்தம் நடைபெற்ற காலங்களைவிடவும் அதிக கைதுகள், அதிக நெருக்குதல்கள் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்…
-
- 0 replies
- 607 views
-
-
உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? நிலாந்தன்! September 19, 2021 நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ? என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை. அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை. ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச் சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன். ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து அதிகமாக செய்திகளை வெளியிடுகின்றனர். இச்செய்திகள் உள்நோக்கத்தோடு மிகைப்படுத்தப்பட்டவை என்று இலங்கைத்தீவ…
-
- 38 replies
- 2.8k views
- 1 follower
-
-
Gota Rally at UN * கோhத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று புதன்கிழமை ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது * UNITED NATIONS, NEW YORK CITY, UNITED STATES OF AMERICA, September 24, 2021 /EINPresswire.com/ — சிறிலங்கா அரசுத்தலைவர் கோத்தபாய இராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருக்க, சிறிலங்காவை சர்தேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பினார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. WATCH: https://youtu.be/n2qE4zFXgvU கோhத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் ந…
-
- 0 replies
- 520 views
-
-
ஊசிக் கதைகள் -நிலாந்தன்! September 26, 2021 கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நேற்று முன்தினம் அதாவது கடந்த 24ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடக்கப்படுவதையொட்டி மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். கொரோனா வைரஸ் தோன்றிய காலமிருந்தே அதுதொடர்பான கட்டுக்கதைகளும் தோன்றத் தொடங்கின. கிளிநொச்சியில் நடந்த ஒரு கதை வருமாறு. ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார். காணொளியில் தான் தடுப்…
-
- 0 replies
- 835 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி, ஜனாதிபதியின் அழைப்பு – நிலாந்தன்! ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். உள்நாட்டு பொறிமுறைக்கு ஒத்துழைக்குமாறு உள்நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை நோக்கிக் கேட்காத நாட்டின் தலைவர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி ஏன் கேட்கிறார் ? சில மாதங்களுக்கு முன் அவருடைய அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்து ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. ஒரு பெரும் தொற்றுநோய்க் காலத்தில் மேற்குநாடுகளில் வாழ…
-
- 0 replies
- 678 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் கோட்டாவின் அறிவிப்புகளும் அபத்தங்களும் புருஜோத்தமன் தங்கமயில் உள்ளகப் பொறிமுறை ஊடாகப் பாதிக்கப்பட்ட (தமிழ்) மக்களுக்கு நீதி வழங்க முடியும் என்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரஸ்தாபித்திருக்கிறார். அத்தோடு, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக, புலம்பெயர் (தமிழர்கள்) தரப்புகள் முன்வர வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார். ராஜபக்ஷர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்ற நிலையில், கோட்டாவின் இந்த அறிவிப்புகள் கவனம் பெறுகின்றன. தென் இலங்கையில் பேரினவாதத்தின் காவல் முகங்களாக, ராஜபக்ஷர்கள் பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் ஆட்…
-
- 0 replies
- 348 views
-
-
-
- 0 replies
- 964 views
-
-
ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள் – நிலாந்தன். September 12, 2021 கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில் 14 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்” என்பதாகும். வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையொட்டித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அரசாங்கம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது. முதலாவதாக அனைத்துலக விசாரணை மற்றும் அனைத்துலக தகவல் சேகரிப்பு பொறிமுறைகள் தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டு…
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்? லக்ஸ்மன் கொரோனா வைரஸின் பேகமான பரவல் அச்சம் இருந்து கொண்டிருக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குத் தாக்குதல் அச்சுறுத்தல், நாரேகஹம்பிட்டி வைத்தியசாலைக் கழிப்பறைக்குள் கைக்குண்டு மீட்பு, யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் இரண்டு வெடிகுண்டுகள் மீட்பு, திருகோணமலை, மூதூரில் இரண்டு கிளைமோர்கள் மீட்பு என்றெல்லாம் செய்திகள் கடந்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமிருக்கின்றன. நேரடியாகச் சொன்னால், கடந்த 13அம் திகதி முதல் சர்வதேச ரிதியில் எழுந்திருக்கும் அழுத்தங்கள் இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் வடிவத்த…
-
- 0 replies
- 500 views
-
-
சமத்துவம்- நோர்வே பாரளுமன்ற தேர்தல் “All men and women are born equal in the human sense” மூன்றாம் உலக நாடுகளில் முக்கிய பதவிகளிலும் பாராளுமன்ற அங்கத்துவ பங்கீடுகளிலும் ஏனைய அதிகாரம் மிக்க துறைகளிலும் பெண்களின் சமத்துவ உரிமையானது புறக்கணிக்கப்படுகின்ற போதும் Rousseau என்ற தத்துவவியலாளரின் கோட்பாட்டுக்கு இணங்க பிறக்கும் போதே மனிதன் சகல சமத்துவமான உரிமையோடு தான் பிறக்கிறான் என்ற அடிப்படையில் நோர்வே நாட்டில் பெண்களின் சமத்துவ உரிமையானது அங்கீகரிக்கப்பட்டு மதிப்பளிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீ லங்காவை பொறுத்த வகையில் சிங்கள தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் ஆண்களின் பிரதிநிதித்துவமே அதிகமாக இருக்கிறது. அமைச்சு பதவிகளிலும் பெண்கள் புறக்கணிகப்படுகிறார்கள். அத…
-
- 0 replies
- 516 views
-
-
-
- 0 replies
- 854 views
-
-
கொவிட்-19உம் தடுப்பூசிகளும் சில சிந்தனைகள் என்.கே. அஷோக்பரன் https://www.twitter.com/nkashokbharan இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்று நோய்த் தொற்றாளர்கள் உத்தியோகபூர்வக் கணிப்புக்களின்படி ஐந்து இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையிலும், கொவிட்-19 மரணங்கள் பதினோராயிரத்தை தாண்டிய நிலையில், கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையானளவில் இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதத்தினருக்கு வழங்கிய மைல்கல்லை சில தினங்கள் முன்பு இலங்கை எட்டிப்பிடித்துள்ளது. செய்திக்குறிப்புக்களில் அறிக்கையிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மேற்குறித்த மைல்கல்லை இலங்கை எட்டிப்பிடித்த நாளவில், 8,973,670 பேர் சினோர்ஃபாம் தடுப்பூசிகளும், 949,105 பேர் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளும், 758,282 பேர் மொடேர்னா …
-
- 0 replies
- 621 views
-
-
மனித உரிமைகள் பேரவை, ஈஸ்டர் தாக்குதல், இலங்கை நிலை மற்றும் பல சமகால அரசியல் நகர்வுகள் குறித்து எம். ஏ. சுமந்திரன் கலந்துரையாடியிருந்தார்.
-
- 1 reply
- 278 views
-
-
சிறிதரனின் ‘குறளி வித்தை’ புருஜோத்தமன் தங்கமயில் இன்றைய தமிழர் அரசியலில், தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள், ‘குறளி வித்தை’ காட்டும் அளவுக்கு, வேறு யாரும் காட்டுவதில்லை. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி, அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், நாளொரு வண்ணமும் பொழுதொரு நடிப்புமாக, வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். கடந்த சில நாள்களாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நடிகர் திலகமாகவே மாறி நின்று அரங்காற்றிக் கொண்டிருந்தார். சிறிதரன், அரசியலுக்கு வந்த கடந்த ஒரு தசாப்த காலத்தில், தன்னையொரு நல்ல நடிகரென்று பலமுறை நிரூபித்திருக்கிறார். ஆனால், கடந்த வாரம் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, நடிகர் திலகத்தை மீஞ்சும் அளவுக்கானது. ஐக்கிய நாடுகள…
-
- 0 replies
- 709 views
-
-
அரசாங்கம், ஐநாவை... கையாளத் தொடங்கி விட்டதா? நிலாந்தன்! ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல மீளாய்வு அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது போலவே வெளிவந்திருக்கிறது. அது சிங்கள கூட்டு உளவியலை ஒப்பீட்டளவில் அதிகம் பயமுறுத்தாதவிதத்தில் இலங்கை முழுவதுக்குமான மனித உரிமைகள் தொடர்பான ஓர் அறிக்கை என்ற வெளித்தோற்றத்தை காட்டுகிறது. இந்த அறிக்கை இவ்வாறு அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக வெளிவருவதற்கு உரிய வேலைகளை அரசாங்கம் கடந்த சில மாதங்களாக தீவிரமாகச் செய்துவந்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற ஓர் அரசாங்கமாகவே காட்டிக் கொண்டது. இதன்மூலம் ஏனைய தேசிய இன…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? இனி என்ன நடக்கும்? சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HAKEEM படக்குறிப்பு, எம்.ஏ.எம். ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நிராகரித்ததன் மூலம், இலங்கையின் ராஜதந்திரம் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சர்வதேச சட்டத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம் தெரிவித்த…
-
- 1 reply
- 859 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 477 views
-
-
-
- 0 replies
- 393 views
-
-
ஜெனீவா அமர்வுக்கு முதல் நாள் அநுராதபுரம் சிறைச்சாலையில் நடந்ததென்ன? –போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது– நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையாகின்றன — -அ.நிக்ஸன்- வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது…
-
- 0 replies
- 311 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்- அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி கிளிநொச்சி அலுவலகத்தை நல்லிணக்கச் செயற்பாடு என்று பாராட்டிய ஆணையாளருக்கு மற்றுமொரு நம்பிக்கையா? வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவ…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ் அரசியலில் திட்டமிடல், தூரநோக்குக்கான தேவை என்.கே. அஷோக்பரன் http://www.twitter.com/nkashokbharan உலகத்தையே, ஏறத்தாழ ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, ‘கொவிட்-19’ பெருந்தொற்று ஆட்டம் காணச் செய்துகொண்டிருக்கிறது. ‘கொவிட்-19’ இன் கோரமுகத்தை, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில், இலங்கை வாழ் மக்கள், ஆரோக்கிய ரீதியான சவாலை மட்டுமல்ல, வாழ்வாதார ரீதியான சவாலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கொவிட்-19’ வெறும் பெருந்தொற்று நோய் மட்டுமல்ல; அதன் விளைவுகள், இந்நாட்டின் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் தள்ளாட்டம் காணச்செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில், இலங்கை நின்று கொண்டிருக்கிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என…
-
- 0 replies
- 332 views
-
-
ஐ.நா வரை எதிரொலிக்கும் தமிழர் தரப்புக் குழுப்பம் லக்ஸ்மன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடர் காலத்தோடு உடைந்து சிதறிவிடும் என்ற எண்ணப்பாடு தமிழ்த் தேசிய எதிர்ப்புவாதங்கொண்டவர்களிடம் காணப்படுகிறது. இவ்வாறான சிந்தனை அக் கூட்டமைப்பு உருவானது முதலே இருக்கின்றதொன்றாகும். . இதற்குத் தூபமிடுமாப்போல் தொடர்ந்தும் அது தொடர்பான விமர்சனங்களும் கருத்துகளும் ஊடகங்களில் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன. தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது, ஒருபோதும் தமிழர்களின் இரத்தத்தில் இருந்து இல்லாமல் போகிறதொன்றல்ல என்பது, தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடு. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் 46/1 பிரேரணை பற்றிய மனித உரிமை ஆணையாளரின் வா…
-
- 0 replies
- 370 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆறுமாதத்தில் நடந்த அதிரடி மாற்றம்! இடையில் நடந்தது என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோத அணுகுமுறைகள் ஏற்படுத்தும் பாரதூரமான அரசியல் விளைவுகளை மக்களே முகம் கொடுக்க நேர்கிறது.
-
- 1 reply
- 697 views
-