Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளித்தாலும், அதனை வைத்துக் கொண்டு அடுத்த படிமுறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் பல உண்டு என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஹரி சங்கரி தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பாக அவர் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். பல தடவைகள் தாங்கள் பின்னுக்குப் போய் அதன்பிறகே முன்னுக்கு வந்துள்ளோம். அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் வரப்போகும் கூட்டத் தொடரில் உண்மையான தரவுகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை வைத்துக் கொண்டு அட…

  2. “என் முப்பாட்டன் முருகன்... நான் முதலமைச்சர் வேட்பாளர்!” - அடடே சீமான் '''450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனில் ஏற்பட்ட பெருவெடிப்பின் குழந்தைகள்தான் பூமியும் அதைச் சுற்றும் கோள்களும்’னு அறிவியல் சொல்லுது. அதைத்தான் என் பாட்டன் 'அகர முதல எழுத்தெல்லாம்...’னு சொன்னான். ஹைட்ரஜன் இரண்டு சதவிகிதமும் ஆக்ஸிஜன் ஒரு சதவிகிதமும் இருந்தா H2O என்கிற நீர் உருவாகும். இதைத்தான் என் முப்பாட்டன் 'நீரின்றி அமையாது உலகு’னு சொன்னான். அந்தத் தண்ணியை, இயற்கையை வழிபட்ட அந்த மரபை இடையில் கைவிட்டதன் விளைவுதான், ஓசோன் மண்டலத்துல ஓட்டை. நம் மொழியை, பண்பாட்டை, இயற்கையை எல்லாத்தையும் மீட்கத்தான் களம் இறங்கியிருக்கோம். நான் போய் தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிச்சுக்குவேன். ஆனா, காட்டுல வ…

  3. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து பௌத்தத்துடன் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 அல்லது 14 அன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புராதன அநுராதபுர நகரத்திற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக திணித்தல் அல்லது பலத்தை பிரயோகித்தலுக்கு பதில் இந்தியா ஏனைய நாடுகளை கவரும் மென்மையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. இலங்கை வரும் மோடி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். அநுராதபுரம் 4ம் நூற்றாண்டு முதல் 11 வரை …

  4. உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்றது. சுப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மிகச் சிறந்த பாடகியாகத் தெரிவு செய்யப்பட்டு அமோக வெற்றியீட்டிய ஜெசிக்கா யூட்டுக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு கிலோ தங்கத்தின் பெறுமதியான பணம்அனைத்தையும் தமிழகத்திலும்,இலங்கையிலும் வாழும் அனாதைக் குழந்தைகளுக்கு வழங்கப்போவதாக ஜெசிக்காவின் தந்தை யூட் சூசைதாசன்,இன்று விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்த பொழுது,அங்கு கூடியிருந்த இரசிகர்கள், பலத்த ஆரவாரம் மூ…

  5. மக்களின் கேள்விகளுக்கு சீமானின் பதில்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது.. முகநூல் அன்பர்களின் கடினமான கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்.

  6. Paris Shootings: Muslim man who hid Jewish supermarket hostages from killer hailed hero http://www.bfmtv.com/mediaplayer/video/prise-d-otage-de-la-porte-de-vincennes-l-employe-qui-s-est-echappe-temoigne-384653.html A young Muslim man who hid Jewish supermarket hostages as they sought refuge from killer Amedy Coulibaly has been hailed a hero. Lassana Bathily, originally from Mali in west Africa, is said to have shepherded terrified customers to safety in a chiller as the Islamic gunman took hold of the Hyper Cacher supermarket in Porte de Vincennes, Paris, yesterday. Coulibaly executed four of the 19 hostages before police stormed the building and ended the…

  7. இன்று இலங்கை ஐக்கிய இராட்சியத்திடமிருந்து விடுதலை பெற்ற நாள். இலங்கை ஐக்கியராட்சியத்திடமிருந்து விடுதலை பெற்ற அதே நாளிலிருந்து ஈழத் தமிழர்கள் அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டார்கள் என்ற வரலாறும் ஆரம்பித்திருக்கிறது. இலங்கையர்கள் இது எங்கள் நாடு. இது எங்கள் தேசியம். இது எங்கள் கொடி. எங்கள் சுகந்திரப் பாடல். இது எங்கள் படைகள் என்று வாழ்த்துக்களை பாடுகிறார்கள். இலங்கை சுகந்திர தினம் என்பது சிங்களவர்களால் கொண்டாடப்படும் நாளாகத்தான் இன்றுவரை இருக்கிறது. உலகத்தில் எங்குமே யாருக்குமே சுகந்திரம் கிடைத்ததைப்போல தெரியவில்லை. மக்கள் எங்கும் ஏதோ ஒரு அதிகாரத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இதைப்போலத்தான் ஈழத்து மக்களுக்கும் விடுதலை கிடைக்காமல் அந்நிய ஆட்சிக்குள் அடக்கி ஒடுக…

  8. கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ் தேசியத் தலைமைகள் தாறுமாறாகவும், காட்டமாகவும் பேசி வருகின்றன. நட்புறவோடு நாங்கள் நடந்து கொள்கின்றபோது, மிகவும் பக்குவமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றபோது தமிழ் தேசியத் தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் காட்டமாக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மத்தியில் ஆலங்குடா ‘பீ’ முகாம் என்ற கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சமகா…

  9. தமிழர்களின் நீதிக்கு எதிரான சக்திகளின் நிகழ்சிநிரலை குழப்பியுள்ள ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ தீர்மானம் Feb 15, 20150 - நிர்மானுசன் பாலசுந்தரம் சர்வதேச தரத்துக்கு இணையான உள்ளக பொறிமுறையை உருவாக்கப் போகிறோம் என்ற பரப்புரையில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா, இன்னொரு பக்கத்தில் சிறீலங்காவில் இருக்கும் வரை கோத்தபாய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இது சிறீலங்கா உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கும் உள்ளகப் பொறிமுறையும், அதற்கமைவாக செயற்படுத்தக்கூடிய பொறுப்புக்கூறும் கடப்பாடும் தமிழர்களுக்கு நீதியை வழங்காது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. இதேவேளை, ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக சமூகம் சிறீலங்காவில் உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க…

    • 0 replies
    • 585 views
  10. மைத்திரி – கூட்டமைப்பு தேன்னிலவும் ஜெனீவாவில் உருவாகும் நெருக்கடியும் Feb 08, 20150 இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் வெளிவிவகார துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இறுதியாகத்தான் சந்தித்தார். அரசாங்கத் தரப்பினருடைய கருத்துக்களை அறிந்துகொண்டு வந்து கூட்டமைப்பின் பிரதிபலிப்பை பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாக இருந்திருக்கலாம். சந்திப்பில் மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, இராணுவக் குறைப்பு என வழமையான விடயங்கள் ஆராயப்பட்டிருந்தாலும் குவியப் புள்ளியாக இருந்தது ஜெனிவாதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாத விடயமல்ல. ஆட்சி மாற்ற…

  11. சிறீலங்கா அரசாங்கத்தின் புதிய வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும் Feb 08, 20150 -நிர்மானுசன் பாலசுந்தரம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர் என்ற கூட்டு உளவியலை (Psychology of collective victimization) உருவாக்கியிருந்தது. அந்த உளவியல், அதிர்ச்சிக்குள்ளும் தமது பொது எதிராளி யார் என்ற விழிப்பு நிலையுடன், எமது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அல்லது ஏக்கம் பல்வேறு தரப்பிடமும் ஆழப் பதிய காரணமாகியது. அந்த நிலை படிப்படியாக போராட…

  12. கிழக்கில் தமிழ்-முஸ்லீம் முரண்பாட்டைத் திட்டமிட்டுத் தூண்டும் ஹக்கீமின் கொலைவெறி: அஜித் கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுத்தார். அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கிழக்கில் பெரும்பான்மைத் தமிழர்களின் விருப்பிற்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத நோக்கங்களுக்குத் துணை போகும் வகையில் முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சரத் தெரிவு செய்துள்ளது. சிங்கள பௌத…

  13. ஈழத்தின் வலிகாமப்பகுதியில் நிலத்தடி நீரிற் கழிவு எண்ணை கலந்திருப்பது அண்மைக் காலத்தில் அறியப்பட்டுள்ளதுடன் அது ஒரு பாரிய சூழலியல் மற்றும் வாழ்வாதரப் பிரச்சனையாக பலதரப்பாலும் உணரப்பட்டுள்ளது. ஆனால் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களால் உணர்ந்து கொள்ளப்படவில்லை. பெற்றோலிய உற்பத்தியின் வரலாறு 1850 இல் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை மசகு எண்ணையை மூலப்பொருளாகக்கொண்ட உற்பத்திப் பொருட்கள் மனித வாழக்கையில் இருந்து பிரிக்கப்பட முடியாத பலநன்மைகளைத் தருகிற பாகத்தை எடுத்துக்கொண்டுள்ளன. ஆனால் அதே அளவுக்கு எண்ணையானது சூழலியலுக்கும் உலக உயிரினத்துக்கும் பிரச்சனைகளையும் உண்டு பண்ணும் ஒன்றாகவும் மாறி இருக்கிறது. (உலகப்பொருளாதாரமும் அரசியலும் எண்ணையை மையப்படுத்தியதாக இருப்பத…

  14. ஜெனிவாத் தொடர்– 13ஆம் திருத்தம் – சம்பூர் அனல் மின்னிலையம் “சீபா” – 50 ஆயிரம் வீட்டு திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி வட்டாரங்களை ஆதாரமாகக் கொண்டு இந்தியாவின் ´தி இந்து´ பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். இதன் பின்னர் 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடியே என்பது குறிப்பிடத்தக…

  15. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகள், தானாக முன்வந்து தங்கள் நாடு திரும்பி செல்வதற்கான அம்சங்கள் குறித்து இந்தியா, இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின்போது, லட்சக்கணக்கானோர் இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். தற்போது, 34 ஆயிரத்து 524 குடும்பங்களைச் சேர்ந்த, 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 அகதிகள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களில், 19 ஆயிரத்து 625 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 924 பேர் 107 அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றத் துக்கு பிறகு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமை…

  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணி ஒன்று அண்மையில் நெடுந்தீவில் கால்பதித்தது... முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையில் சென்ற அணியினர் மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களுடன் உரையாடியிருந்தனர்... இலங்கையில் இருந்தும் ஏன் யாழ் குடாநாட்டில் இருந்தும் கைவிடப்பட்ட தீவுகளாக இருக்கும் தீவுகளில் நெடுந்தீவு பிரதான இடத்தை வகிக்கிறது.... ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினதும், கடற்படையினரதும் இரும்புப்பிடிக்குள் சிக்கித் தவித்த தீவுகளில் நெடுந்தீவும் முக்கியம் பெறுகிறது. அந்த வகையில் தேசிய அரசியலில் மாற்றத்தின் அணியில் பங்கெடுத்த, தேசிய அரசுப் பேரவையில் பங்கெடுக்கும் கூட்டமைப்பு தீவகத்தில் கால்பதித்தமை மக்களுக்கு ஆறுதல் கொடுத்த விடயமாகிறது... அந்த ஆறுதலின்…

  17. சுய நிர்ணயம் பற்றிய அரட்டை -புவனேசுவரி நாட்டில பல வருசமா இனப்பிரச்சனை எரிஞ்சு கொண்டிருக்கு அதில எண்ணெய் ஊத்தி இந்தியாவும் குளிர்காயுது எண்டா அது மிகையில்லை! ஈழத்தமிழ் பெடியளின்ட போராட்டத்துக்கு உதவிறம் எண்ட பேரில ஆயுதங்களும் பயிற்சிகளும் குடுத்து பிறகு அவங்களுக்குள்ளயே அடிபடவிட்டு புலிகளை மட்டும் வைச்சிருந்து கொண்டு இந்தியா தங்கட அரசியல நடத்தினது எண்டு நான் சொல்லி நீங்கள் தெரிஞ்சு கொள்ளுற அளவில இருந்தா நீங்கள் இவ்வளவு காலுமும் கோமால இருந்திருக்கிறியள் எண்டு அர்த்தம். (கோமா எண்டா கிரேக்கத்தில ஆ​​ழ்ந்த உறக்கம் எண்டு அர்த்தமாம்) இதில புலிகளோட மேற்கில இருக்கிற அமெரிக்கா பிரித்தானியா நோர்வே எண்டு இன்னும் சில நாடுகளும் நல்ல உறவில இருந்தவை. இருந்து கொண்டு 2009ல எல்லாத…

  18. தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய குடியரசு தினத்தில் என்னை அழைத்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் புதியதொரு அரசியல் சூழலில் பதவியேற்று வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ள துணைத்தூதுவர் நடராஜ் அவர்களினால் இந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான உறவு மேலும…

  19. சர்வாதிகார அரசாங்கத்தை அகற்றி மக்களுக்கு நல்லாட்சியையும் மாற்றத்தையும் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் மகிந்தராஜபக்ஷவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவத்தினரின் தலையீடுகளும் நெருக்குவாரங்களும் இம்மியளவும் குறைந்ததாக தெரியவில்லை. ரோந்துகளும் புலனாய்வு துறையினரின் மோப்பங்களும் தொடர்கின்றது.இதன் மூலம் இந்த நாட்டிலும் தமிழ் மக்கள் வாழ்விலும் நம்பிக்கை வருமென நம்பி வாக்களித்த மக்களின் மனதில் அச்சமும் நம்பிக்கையின்மையிலும் ஏற்பட்டுவருகின்றது. நேற்று கிளிநொச்சி உருத்திரபுரத்திரம் சாஜிமுன்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொள்ளச்சென்றபொழுது அங்கு இராணுவப் பிரசன்னமே நிறைந…

    • 4 replies
    • 566 views
  20. தேவைக்கும் ஆசைக்கும் இடையில் தமிழீழம் என்ற லட்சியத்திற்க்கு இமக்கிரிகைகள் நடக்கின்றது. இதுவே எமது இனத்தின் வரலாற்றுத் தவறுகளுக்கான தண்டனையுமாகின்றது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என வறுமைப்பட்ட மக்களே இறுதியில் செத்து மடிகின்றனர். வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஒரு மனிதன் பாதுகாப்புடனும் பொருளாதார நொருக்கடிகளை சமாளித்து வாழ்வதற்கும் அவனது சொந்த தேசம் அவசியமா என்று ஒரு கேள்வி…

    • 8 replies
    • 3.1k views
  21. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென் பகுதியை சேர்ந்த இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தவிர ஏனைய எந்த கூட்டணியானாலும் அதனுடன் இணைந்து போட்டியிட தயார் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஈ.பி.டி.பி கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இடதுசாரி கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருவதால், அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஈ…

  22. மகிந்தா ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல கல்லூரிகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் தன்களின் அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி ஆட்டம் போட்டார்கள் அதுவும் தங்களுக்கு பிடிக்காதவர்களை இடம் மாற்றுவது தங்களின் பதவிகளுக்கு போட்டியாக வர கூடியவர்களை வேறு இடத்துக்கு துரத்தி அடிப்பது ....,திறமைகள் மூலம் பதவி கிடைக்க இருந்தவர்களை பின் தள்ளி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பதவியில் அமர்த்தியது ..... போன்றவற்றையும் புதிதாக பொறுப்பெடுத்திருக்கும் கல்வி அமைச்சர் விசாரிக்கணும் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் அரசியல் நுழையாமல் பாத்துக்கணும்..... செல்வாக்கு உள்ளவர்களை விட திறமையானவர்களை பாடசாலைகளின் அதிபராக்கணும் ....

    • 0 replies
    • 518 views
  23. கைதிகளைச் சிறையிலடக்கத் துணை போன டக்ளஸ் இன்று விடுதலை செய்யக் கோருகிறார் பத்துவருடங்களாக இனக்கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தின் அடியாளாகவிருந்து செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென சிறைக் கைதிகள் மீது அக்கறை பிறந்துள்ளது. மகிந்த அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் வாதியாகத் திகழ்ந்த டக்ளஸ் கைதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொள்ள நேரிட்டதும் சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பfடவேண்டும் எனக் பாராளுமன்றத்தில் கோரியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவே தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படுகிறார் என்று கூறிய டக்ளஸ் நேற்றுப் பாராளுமன்றத்தில் மகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.