நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
தமிழர், முஸ்லிம்கள்: சில குறிப்புகள் -சிறு எதிர்வினை- இளங்கோ-டிசே 1. இலங்கையில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நடைபெறுகின்ற இவ்வேளையில் தமிழ் X முஸ்லிம் விவாதங்கள் நடைபெறுவதையும் அதனால் மனம் நொந்து சில முஸ்லிம் நண்பர்கள் எழுதியிருக்கின்ற சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இந்த விவாதம்(கள்) தொடங்கிய அடி நுனி எதுவும் தெரியாதபோதும் (அவற்றைத் தேடிப் போக விருப்பமுமில்லை) சிலவற்றை எழுதிவிட விரும்புகிறேன். நம் தமிழ்ச்சூழலில் கருத்துக்களை உதிர்ப்பதென்பது -அதுவும் முக்கியமாய் அரசியல் சார்ந்து- மிகவும் எளிதானது. அவ்வாறு அரைகுறையுமாய் எழுதுபவர்களே பின்னாட்களில் அரசியல் ஆய்வாளர்களாகவோ அல்லது ஊடகங்களில் எளிதில் நுழைந்துவிடக்கூடியவர்களாகவோ அல்லது ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படுபவ…
-
- 2 replies
- 723 views
-
-
ஜெர்மனி பல்கலைக் கழகங்களின் அழைப்புகளையேற்று திராவிட இயக்கமும் - தந்தை பெரியாரின் கொள்கைகளையும் விளக்கி கருத்துரை ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார் ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் உரையாற்றுகிறார் கொலோன் (ஜெர்மனி) ஜூன் 7- ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகம் மற்றும் கல்வி நிறு வனங்களின் அழைப்பையேற்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ஜெர்மனி கொலோன் மய்யப் பகுதியில் உள்ள நியூமார்க்கெட் ஜோய்ஸ்ட் அருங் காட்சியகத்தில் பொது மக்களிடையே, பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறி…
-
- 2 replies
- 687 views
-
-
பாதுகாப்பு வழங்கத் தவறிய ஜனாதிபதி செல்வராஜா ராஜசேகர் படம் | @ShammasGhouse “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.” “புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.” பௌத்தரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வெசாக் செய்தியில் மேலுள்ளவாறு கூறியிருந்தார். மேல்கூறப்பட்டுள்ள புத்தரின் போத…
-
- 1 reply
- 541 views
-
-
கொல்கத்தா: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்திய நிலையில் மேற்கு வங்க ஆளுநர் பதவியை எம்.கே. நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டனர். ஹெலிகாப்டர் ஊழல் வழக்கால் நெருக்கடி.. மே. வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் ராஜினாமா!! இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச ஆளுநர் ஜோஷி, சத்தீஸ்கர் ஆளுநர் சேகர்தத், நாகாலாந்தின் அஸ்வனிகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். கர்நாடகா ஆளுநராக இருந்த பரத்வாஜ்-ன் பதவிக் காலம் முடிவடைந்தது. ஆனால் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். மேலும் மேற்கு வங்க ஆளுநரான எம்.கே. நாராயணன் தாம் பதவி விலக கால அ…
-
- 3 replies
- 828 views
-
-
தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களர்கள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அதோடு, முஸ்லிம்கள் மீதும் தொடர் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகளும் இந்தத் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. 'திடீர் என முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் ஏன்? இவ்வளவு பெரிய பிரச்னை எதனால் நடந்தது?’ என இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா-அத் துணைச் செயலாளர் ரஸ்மினிடம் கேட்டோம். ''கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்கள் என்றாலோ, முஸ்லிம்கள் என்றாலோ இங்கு இருக்கும் சிங்களர்களுக்கும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிடிப்பது இல்லை. எங்கள் நிம்மதியை மெள்ள மெள்ள பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது பிரச்னை வெடித்ததற்குக் காரணமே ஒரு புத்த பிக்குவால்தான். ஒன்ற…
-
- 6 replies
- 946 views
-
-
ஒரு மரத்தில் வெளவாலும் காகமும் தங்கியிருக்கின்றன. ஒருநாள் காகத்தைப் பார்த்து காக்கையாரே... காக்கையாரே... நீங்கள் ஏன் தலைகீழாய் நிற்கிறீர்கள் என்று வெளவால் வினவியது. அதற்குக் காகம் வெளவாலாரே, நான் நேராகத்தான் நிற்கிறேன். நீர்தான் தலைகீழாய் தொங்குகிறீர் என்றது காகம். வெளவாலுக்கு ஒரே கோபம். காக்கையாரே காக்கையாரே ஒரு போதும் பொய் சொல்லக் கூடாது. நீர் தலைகீழாய் நிற்பது தான் உண்மை என்று வெளவால் இறுக்கமாகக் கூறியது. காகம் மீளவும் சொல்லிற்று, வெளவால் அண்ணே! நீங்கள் தலைகீழாய்த் தொங்குவது இந்த உலகம் முழுவதற்கும் தெரியும். எனவே நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் தான் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறீர்கள் என்றது காகம். காகத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத வெளவால், காக்கையார…
-
- 0 replies
- 482 views
-
-
கடந்த 5 வருசமா சிறீலங்காவில் இருந்த பிபிசி நிருபர் சொல்லுறார்.. நாடு துண்டுபட்டு போய் இருக்கென்று. ஆனால் அகதியா ஓடியாந்திட்டு ஊருக்குப் போய் வாற வெளிநாட்டுத் தமிழன் சொல்லுறான்.. எல்லாம் நல்லா இருக்காம்.!!!! Sri Lankan journey. About 300 miles separate the old Dutch fort of Galle on Sri Lanka's southern tip and Mullivaikal, the strip of land in the north where an army assault on Tamil rebels ended a civil war five years ago. The BBC's Charles Haviland travelled up the coast passing fish markets and seaside resorts, eventually turning inland towards the ancient capital and ending up in a desolate former war zone. காணொளிப் பதிவை கீழுள்ள இணைப்பில் காண்க.. …
-
- 4 replies
- 755 views
-
-
பிரித்தானியா பிரஜாவுரிமைப் பரீட்சை - மோசடிக் கூட்டமும், அவர்களிடம் சிக்கிய பல, நம்மவர்கள் உட்பட்ட, குடிவரவாளர்கள் குறித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டு இருந்தேன். பிரித்தானியா பிரஜாவுரிமை பெற இரு வழிகள் (கடந்த அக்டோபர் வரை) இருந்தன. முதலாவது: 82 பக்கங்கள் கொண்ட 'Life in the UK' எனும் புத்தகம் படித்து பரீட்சை. இரண்டாவது: முதலாவது முறையில் படித்து சித்தி அடைய முடியாத ஆங்கில அறிவு இல்லாதோருக்கு ஒரு சலுகையாக 'ஒரு அங்கீகரிக்கப் பட்ட' ஆங்கிலம் கற்பிக்கும் நிறுவனத்தில் சேர்ந்து, குறைந்தது மூன்று மாதம் படித்து ஆங்கில பரீட்சை (ESOL - B1 Level) எழுதி, அந்த சான்றிதழை அனுப்பினால் ஏற்றுக் கொண்டார்கள். இங்கே இரண்டாவது முறையில் பெரும் மோசடிகள், மூன்று மா…
-
- 28 replies
- 2.2k views
-
-
இலண்டன் 'பாலியல் வன்முறைகளைத் தடுக்கும்' மாநாடும் பாதிக்கப்பட்ட கதாநாயகர்களும் [ புதன்கிழமை, 18 யூன் 2014, 06:56 GMT ] [ நித்தியபாரதி ] தனக்கு நடந்த கொடுமையான சம்பவத்தை நாடகத்தின் மூலம் பிறிதொருவர் நடிக்கும் போது அதனை நேரில் பார்த்துக் கொண்டு அந்த சிறிலங்காத் தமிழ் இளைஞர் இருந்தபோது இது ஒரு நம்பமுடியாத துணிச்சல் மிக்க நிகழ்வாக இருந்தது. இவ்வாறு ASIAN CORRESPONDENT இணையத்தளத்தில் Frances Harrison எழதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த வாரம் 'பாலியல் வன்முறைகளைத் தடுக்கும்' உச்சிமாநாடு லண்டனில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட நான் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றேன். இந்த உச்சி மாநாட்டில் சிறிலங்கா…
-
- 0 replies
- 459 views
-
-
பதிக்கப்டட்ட முஸ்லீம் சகோதரனே, சகோதரியே, உங்களுக்காய் நான் இறைவனை வேண்டிகொள்கிறேன். வலி எல்லோருக்கும் பொது, இதில் இருந்து நீ மீண்டு வருவாய் அது நிச்சயம் ...தெளிந்து வருவா ..அது ஒன்றே என் ஆதங்கம். என் சிறு வயதில் மூன்றுக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு எதிரான சிங்கள காடையர்களின் வன்செயல்களை நேரில் கண்டவன் நான். ஒன்று 1977 மற்றையது 1983 .. 1977 - கண்டி இரயில் நிலையத்தில் (3 ஆம் பிளாட்போரம்) என் கண் எதிரே பிளாட்போரத்தில் அமர்ந்து வெற்றிலை சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஒரு ஆண், அவரோடு இருந்த ஒரு பெண், மற்றும் 3 தமிழர்கள் எங்கோ இருந்து கூட்டமாய் வந்த காடையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்கள்... வெள்ளை வெட்டி போன்ற சாரம் அணிந்த பெரியவர் நொடியில் அம்மனமாகப்பட்டார், அவரின் பின்புறத்த…
-
- 4 replies
- 797 views
-
-
இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம் படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” - கலகொட அத்தே ஞானசார தேரர் (15.06.2014) “தன்னுடைய கைகளையும் கால்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனை, சுயகட்டுப்பாடுள்ளவனை பிக்கு எனக் கூறுங்கள்.” - புத்தபெருமான் மேடையில் கலகொட அத்தே ஞானசார தேரர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். வாயிலிருந்து நஞ்சும் நெருப்பும் கொட்டுகின்றன. கீழே பெருமளவு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பொதுமக்களும் பௌத்த துறவிகள…
-
- 1 reply
- 662 views
-
-
SAVE ALUTHGAMA MUSLIM FROM THE SINHALA NEO NAZI FORCES SUCH AS BBS I BEG MY FRIENDS TO SHARE THIS. PLEASE TAKE THIS MASSEGE TO THE TAMILS OF THE WORLD AND TAMILNADU. உலகத் தமிழர்களே தமிழ் நாடு தமிழ் உணர்வாளர்களே தமிழக அரசியல் கட்சிகளே இந்திய முற்போக்காளர்களே பொதுபல சேன போன்ற இலங்கை சிங்கள பெளத்த பாசிச சக்திகள் அழுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்புத் தாக்குதல்களுக்கு எதிடராக குரல் கொடுங்கள். உலகத் தமிழர்களும் தம்ழக தமிழ் உணர்வாளர்களும் தமிழக அரசும் தமிழ் பேசும் முஸ்லிம்களை சிங்கள பேரினவாதக் கொலைக்கரங்களில் இருந்து காப்பாற்றிடக் கொதித்தெழுந்து குரல் கொடுக்க வேண்டிய தருணமிது உலகம் முழுவதிலும் தமிழகத்திலும் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ் ஊடகங்களு…
-
- 29 replies
- 2.1k views
-
-
இந்தியப் பகையை விலைகொடுத்து வாங்கும் முயற்சி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் இலங்கையை பிரித்து தமிழீழத்தை அமைக்க முனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியது தான் வேடிக்கையான விடயம். நரேந்திரமோடியின் பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்ட கட்சி. அப்படியான நிலையில் கூட சிங்களத் தேசியவாதிகள், இப்படியான கோசங்களை முன்வைக்கிறார்கள் என்றால், சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்த முனைகிறார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். அதைவிட,13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களே, இந்தியாவுக்கு எதிரான சிங்களத் தேசியவாதிகளின் போராட்டத்த…
-
- 0 replies
- 853 views
-
-
http://youtu.be/LOdOCYMIi1c
-
- 2 replies
- 665 views
-
-
விடுப்பு மூலை: விக்கியும் கம்பவாருதியும் நந்தி முனி வன்னியப்பு வேட்டியை லோன்றியில் மினுக்கக் கொடுத்துவிட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பேப்பர் மாமா அந்தப் பக்கமாக வந்தார். பேப்பர் மாமா பல பத்திரிகைகளில் றிப்போட்டராக இருக்கிறார். ஒரு பழுத்த ஊடகவியலாளர். அப்புவைக் கண்டதும் அவர் சைக்கிளை நிறுத்தினார். பேப்பர் மாமா: என்னப்பு உதில குந்திக்கொண்டிருக்கிறியள்? அப்பு: வேட்டியை அயர்ன் பண்ண வந்தனான். பேப்பர் மாமா: வீட்டில பேரப்பிள்ளையள் அயர்ன் பண்ணாதே? அப்பு: செய்யலாம் தான். ஆனா கறன்ற் பில் எகிறுதே. ஒவ்வொரு 30 யுனிற்றுக்குப் பிறகு கறன்ற் பில் ரொக்கற்றைப் போல ஏறுதே? அதைவிட இஞ்ச அயர்ன் பண்ணலாம். பேப்பர் மாமா: அதுவும் சரிதான்... வேற என்னப்பு புதினம்? …
-
- 2 replies
- 611 views
-
-
12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்! [Friday, 2014-06-13 08:07:28] ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார் – செய்தி. (கறுப்பி யாழ் இணையம்) சரியான திசையில் அவசியமான நகர்வு. ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆமையின் முதுகில் சவாரி செ…
-
- 1 reply
- 497 views
-
-
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்பட்ட தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியான ‘எழுச்சிக்குயில் 2014′ நிகழ்வானது 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஆதரவில் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இளைய தலைமுற…
-
- 0 replies
- 511 views
-
-
கடத்தியவர்கள் பயங்கரவாதிகள் ஜெரா அரச வைத்தியசாலை ஒன்றுக்குள் நுழைவதை கற்பனை செய்து கொள்ளுங்கள். முறிந்தும், கால் தொங்கியும் இருக்கும் இரண்டு நிரலில் அடுக்கப்பட்ட மரத்தொடர் இருக்கைகள். இட நிரப்புதலுக்காக இடையிடையே பிளாஸ்ரிக்கதிரைகள். நோயாளக்காதலன் – காதலிகளால் கூரிய ஆயுதங்களால் கீறிக்கீறிப் பெயர் பொறிக்கப்பட்ட கதிரைக் கைப்பிடிகள், அதற்கு வெளியே மோட்டார் சயிக்கிள்கள், சயிக்கிள்கள், அதன் சீற்களில் அமர்ந்திருந்து காத்திருக்கும் ஆண்களும், சிறுகுழந்தைகளும் என அந்தச் சூழலை அச்சு அசலான வைத்தியசாலை ஒன்றாக கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் அது வைத்தியசாலையல்ல. மேலதிகமாக இருமல்கள், மூக்குறிஞ்சல்கள் மற்றும் குழப்பமான கதைகளும் கேட்கின்றன. இன்னும் கொஞ்சம் கூர்மையாக அவதானித்தாால் …
-
- 0 replies
- 617 views
-
-
https://www.youtube.com/watch?v=Hs9g0-s4bPg#t=89
-
- 0 replies
- 818 views
-
-
போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் ந…
-
- 0 replies
- 657 views
-
-
ச. வி. கிருபாகரன்> பிரான்ஸ் பல ஆலோசனைகள்> பேச்சுவார்தைகள்> வாக்குவாதங்கள்> நாசகாரவேலைகளுடன்> அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா மீதான கண்டனப்பிரேரணைக்கு சார்பாக 23வாக்குகளும்> எதிராக 12 வாக்குகளும்> நடுநிலையாக 12 வாக்குகளுடன் ஐ. நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில் வெற்றிகரமாக நிறைவேறியாது. சார்பாக நிட்சயம் 23 வாக்குகள் கிடைக்குமென> வாக்கெடுப்பிற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியி;ல் குறிப்பிட்டிருந்தேன். இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலேயே> இப் பிரேரணை நிட்சயமாக எவ்வித ஐமிச்சமும் இல்லாது வெற்றிபெறும் என ஆரூடம் கூறியிருந்தது சகலருக்கும் நினைவிருக்கலாம். இவ் தீர்மானம் பற்றி நாம் ஆராயுமிடத்தில்> …
-
- 4 replies
- 1.3k views
-
-
கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளில் அவ்வப்போது வேறு பெயர்களில் பதிவிடுவது எனது பொழுது போக்கில் ஒன்று. அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தில் பின்னூட்ட பதிவு ஒன்றில் ஒரு சிங்கள தீவர இனவாதி பின்வருமாறு பதிந்திருந்தார். "இது முற்று முழுதான சிங்கள நாடு, மலேயர்களுக்கு மலேசியா, சீனர்களுக்கு சீனா போல, தமிழர்களுக்கு தமிழகம் போல சிங்களவர்களுக்கு ஸ்ரீ லங்கா. தமிழர்கள் அனைவரையும் திருப்பி தமிழகத்துக்கு அழைத்து சிங்களவர்கள் நிம்மதியாக வாழ வழி செய்வதே நீங்கள் (ஜெயலலிதா) எமக்கு செய்யக் கூடிய உதவி" என்பதாக பதித்திருந்தார். அவருக்கு பின்வருமாறு பதில் கொடுத்து இருந்தேன்: "நல்லது நண்பரே, போர்த்துகேயர் திரத்தி வரும் போது, படைகளை, மக்களை விட்டு விட்டு தப்பி ஓடி மரப் பொந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கையும் இந்தியாவும் முட்டிக்கொள்ளப் போகின்றனவா? 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில், கருத்து முரண்பாடுகள் தோன்றுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்தவாரம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.என்கின்றார் இன்போ தமிழ் குழுமத்தின் பிராந்திய அரசியல் இரானுவ ஆய்வாளர் ஹரிகரன் அவர்கள். கடந்தமாதம் 27ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதுடெல்லியில் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13வது திருத…
-
- 0 replies
- 705 views
-
-
பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்? ஜெரா இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக அறிக்கை சொல்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காணிக்கான உறுதி இல்லை என்பதும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதும் இராணுவ பேச்சாளரின் மேலதிகக் குற்றச்சாட்டுக்களாக அமைந்திருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கவையல்ல. வன்னியில் பிரபாகரனின் அல்லது புலிகளின் காணிகள் என்று எதுவும் இருக்கவில்லை. வருட அடிப்…
-
- 0 replies
- 556 views
-
-
ஒருபக்கம் "நரேந்தி்ர மோடி" மறுபக்கம் "நவநீதம் பிள்ளை"- மகிந்த அரசை சூழும் சவால்கள் வரப்போகும் நாட்களில் இலங்கை அரசாங்கம் முக்கியமான இரண்டு பிரச்சினைகளை எதிர்கொள்ளப்போகிறது. முதலாவது பிரச்சினை சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகளின் ஒரு அங்கமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வரப்போகிறது. இரண்டாவது பிரச்சினை இந்தியாவிடமிருந்து வரப்போகிறது. என்கின்றார் இன்போ தமிழின் கொழும்பு செய்தி ஆய்வாளரான சஞ்சயன் அவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான குழு அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம…
-
- 1 reply
- 696 views
-