Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: தி.மு.க வெற்றியின் பரிமாணங்கள்! மின்னம்பலம்2021-07-05 ராஜன் குறை நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து அணிகளில் கமல்ஹாசன், சீமான், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை முதல்வர் வேட்பாளர்களாகக் கொண்டு களம் இறங்கிய அணிகளைக் குறித்து கடந்த நான்கு வாரங்களில் விவாதித்தோம். இந்த வாரம் இறுதியாக தி.மு.க-வின் வெற்றியைக் குறித்து சிந்திப்போம், மத்தியில் ஆளும் கட்சி, மாநிலத்தில் ஆளும் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்த கூட்டணியை எதிர்த்து தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இரண்டும் ஆளும் கட்சிகள் மட்டுமல்ல; பணபலம் மிக்கவை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படியிருந்தும் தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன், தன…

  2. தேர்தல் அரசியலுக்கு வந்த பிரியங்கா எம். காசிநாதன் / 2019 ஜனவரி 28 திங்கட்கிழமை, பி.ப. 04:43 Comments - 0 இந்திரா காந்தியின் பேர்த்தியும் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி, காங்கிரஸ் சார்பில், திடீரென்று களமிறக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்துக்கான, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகள், மத்திய அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான 272 எம்.பிக்கள் கொண்ட பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவை. இதை நன்குணர்ந்துள்ள அரசியல் கட்சிகள், தேர்தல் தந்திரங்களையும் கூட்டணி முடிவுகளையும் அவசர அவசரமாக எடுத்து வருகின்றன. அதன் ஒரு…

  3. தேர்தல் சட்டங்கள் இருந்தும் என்ன பயன்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 நவம்பர் 06 , மு.ப. 02:24 இதுவரை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், அவற்றின் ஆதரவாளர்கள், தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை, இம்முறை 2,500க்கும் அதிகம் எனத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு, அரசியல் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, அடிக்கடி ஊடகங்கள் மூலம், எச்சரிக்கை விடுத்தும் வருகிறார். அந்த எச்சரிக்கைகள் வீண் போகவில்லை என்றும் கூறலாம். ஏனெனில், இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களோடு, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலை ஒப்பீட்டுப் பார்க்கையில், இதுவ…

  4. தேர்தல் பிரசாரத்தில் ‘விடுதலைப் புலிகள்’ -கபில் தேர்தல் பிரசாரங்களில் விடுதலைப் புலிகளே முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்யும் போக்கு இன்று நேற்று உருவானதல்ல. நீண்டகாலமாகவே இவ்வாறான வழக்கம் இருந்து வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட போதும், அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேடுக்கின்ற போக்கு இன்று வரை தொடர்கிறது. தெற்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இலாபம் பெறுகிறார்கள். வடக்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் மூலம் அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள். அரசியல்வாதி…

  5. மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் பின் தங்கி இருந்தாலும், சித்தாந்தரீதியாக அந்தக் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. …

  6. தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா? April 16, 2021 — எழுவான் வேலன் — தேர்தல் முடிந்து வெல்பவர்கள் வென்று பதவியை எடுப்பவர்கள் எடுத்ததன் பின் அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டோம். இனி அடுத்த தேர்தலுக்கு பழைய கொப்பியை எடுத்து தூசி தட்டி அரசியல் பாட ஆரம்பித்து விடுவோம். கொஞ்சம் பேர் தங்களால் வென்றவருக்கு மீண்டும் கொடிபிடிப்போம் அல்லது ஆளை நம்பி ஏமாந்து விட்டோம் எனப் புலம்பி அடுத்தவரையோ அல்லது அடுத்த கட்சியையோ ஆதரிக்க ஆரம்பித்து விடுவோம். வேட்பாளர்களும் வாக்காளர்களின் மறதியை நம்பி அடுத்த தேர்தலிலும் சென்ற தேர்தலில் கூறப்பட்ட வாக்குறுதிகளை புதிய வடிவம் கொடுத்து வாக்குக் கேட்பார்கள். நாமும் புதிய வடிவத்துக்கு முன்னையதிலும் பார்க்க …

  7. மக்களுக்கு உள்ள தெளிவு அரசியல்வாதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகெலைகளினதும் போரின் முடிவின் காரணமாகவும் மேலெழ இருக்கும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை முற்றாக புறந்தள்ளி பூகோள – பிராந்திய அரசியலை கவனமாக உள்வாங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சாத்தியமான எதிர்ப்பு அரசியல் வடிவம் குறித்த உரையாடலை தொடாந்து பேணுவது குறித்தே தமிழர் தரப்பு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக போரில் நாம் தோற்கடிக்கப்பட்ட முறைமையும் அதன் விளைவான அவலமும் எம்மை அரசியலே வேண்டாம் என்ற ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது இதன்விளைவாக சிங்கள நிகழச்சி நிரலை தெளிவாக வழி நடத்துபவர்களாக நாம் மாறியிருந்தோம். …

  8. தேர்தல்கள் கரிசனை விரைவில் நாட்டில் முக்­கிய தேர்­தல்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. இத்­தேர்­தல்­களில் வெற்­றியை தம­தாக்கிக் கொள்ளும் பொருட்டு அர­சியல் கட்­சிகள் காய் நகர்த்தத் தொடங்கி இருக்­கின்­றன. இது கால­வரை மக்­களை மறந்­தி­ருந்த சில அர­சி­யல்­வா­தி­களின் கவனம் தேர்தல் காலம் என்­பதால் இப்­போது மக்­களின் பக்கம் திரும்பி இருக்­கின்­றது. மக்­களின் வறுமை நிலை மற்றும் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிந்து இப்­போது பலர் நீலிக்­கண்ணீர் வடிக்­கத்­தொ­டங்கி இருக்­கின்­றார்கள். இந்த வகையில் மலை­யக மக்கள் மீதும் இப்­போது பல­ருக்கு கரி­சனை வந்­தி­ருக்­கின்­றது. “இம்­மக்­களின் பல்­வேறு பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­ப­டா­தி­ருப்­ப­தாக இப்­போ­துதான் இவர்­கள் வாய் திறக்­கின்­றார்கள். எ…

  9. அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் பேசிக் கொள்வதுண்டு. அதேநேரம் அரசியலின் இயங்குநிலை காரணமாகப் பலரும் அரசியலை வெறுக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு அரசியல் குறித்து மக்களிடையே எழுந்த அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்காக கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலிப் பத்திரிகையில் ஒரு விளக்கக் கட்டுரையை வரைந்தார். அதில் அரசியல் பிழையன்று. அரசியலில் ஈடுபடுவோர் சிலர் அறமின்றி நடந்து கொள்வ தால் அஃது அரசியலுக்கு இழுக்கைத் தந்து விடுகிறது. மற்றும்படி அரசியல் செம்மைப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் வாழ்வு செழுமை பெறும். எனவே மக்கள் அரசியலை ஒதுக்காமல் அரசியலுக்குப் பொருந்தாதவர்களை ஒதுக்க வேண்டும் எனக் கருத்துரைத்தார். கலைஞர் கருணாநிதி வரைந்த விளக்கம் மீது ஈழத் தமிழ் மக்க…

    • 0 replies
    • 440 views
  10. தேர்ந்தெடுக்கப்பட்ட அநீதி by vithaiJuly 23, 2021089 1 எங்களுடைய உயர்தரப்பாடத்திட்டத்தில் எழுபதுகளில் அறியப்பட்ட எழுத்தாளர் செ. கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ என்ற சிறுகதை இருந்தது. கதையில் கிளிநொச்சியில் குடியேற்றப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற சிறுமியொருத்தி தன்னுடைய வறிய வீட்டில் கிடைக்காத ‘இறைச்சி, மீன், முட்டை’ ஆகிய நல்லுணவுகளை தினமும் கிடைக்கும், என்ற கனவுடன் கொழும்பிலுள்ள பணக்கார வீடு ஒன்றுக்கு வேலைக்குச் செல்கிறாள். ஆசிரியர் இறைச்சி, மீன் , முட்டை என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி அவளுடைய கனவாக விபரிக்கிறார். இப்படியாகக் கதை வளர்ந்து சென்று அவள் வேலையை விட்டு விட்டு சுதந்திரமாக தந்தையுடன் வீடு திரும்புவதாகக் கதை முடியும். பிள்ளை இறுதியி…

  11. வடக்கு மாகாணசபை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கால இழுபறிகளும் கூடவே சூடு பிடித்திருக்கின்றது. முதலமைச்சர் வேட்பளார் இழுபறிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் வேட்பாளர்கள் தெரிவில் இழுபறிகள் ஆரம்பித்திருப்பதே தமிழர் தாயகத்தின் வடபுலத்தின் சமகால அரசியல் போக்கில் நிறைந்திருப்பதை நாம் கண்டுணர்கின்றோம். மாகாணசபைத் தேர்தலை கூட்டமைப்பு எதிர்கொள்ளக் கூடாது, சுயேட்சையாக களமிறங்கி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்ற விவாதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தைப் போன்றே வடக்கிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாகத் தேர்தல் திருவிழாவில் கடைவிரித்திருக்கின்றது. இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாகாண…

    • 2 replies
    • 524 views
  12. Courtesy: ஜெரா தேவைதானா தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுவாகவே நம் மத்தியில் புழக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை அல்லது விடயத்தை அதன் தேவைப்பாடு முடிந்ததும் வீசியெறிந்துவிடுவோம். அதனைக் கவனமாக வைத்திருக்க வேண்டும் எனக் கருதினால் ஆவணக்காப்பகத்தில் வைத்திருப்போம். இந்த விடயங்கள் நாம் நாளாந்தம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மாத்திரமானவையல்ல. அரசியல், பொருளாதாரம், சமூக விழுமியங்கள் என அனைத்திற்கும் பொருந்திவரக்கூடியவை. இந்தப் பின்னணியில் ஈழத்தமிழர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்கிற அரசியல் பேரியக்கத்தையும் வைத்துப்பார்க்கலாம். புலிகளின் கோரிக்கை வேறு தமது கோரிக்கை வேறு இந்தப் பேரியகத்தின்…

  13. பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவைப் பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கான, முயற்சிகளில் இறங்கி யுள்ள நிலையில், அவர் நாட்டின் பெயரைக் கெடுத்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவிடம் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிப்புச் செய்து தருமாறு இந்தியாவிடம் கோரியிருப்பதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இயலாமல் உள்ளது, அதற்கு மேலதிக காலஅவகாசம் தர வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவிடம் கோரவில்லை. …

    • 0 replies
    • 284 views
  14. தேவைக்கும் ஆசைக்கும் இடையில் தமிழீழம் என்ற லட்சியத்திற்க்கு இமக்கிரிகைகள் நடக்கின்றது. இதுவே எமது இனத்தின் வரலாற்றுத் தவறுகளுக்கான தண்டனையுமாகின்றது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என வறுமைப்பட்ட மக்களே இறுதியில் செத்து மடிகின்றனர். வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஒரு மனிதன் பாதுகாப்புடனும் பொருளாதார நொருக்கடிகளை சமாளித்து வாழ்வதற்கும் அவனது சொந்த தேசம் அவசியமா என்று ஒரு கேள்வி…

    • 8 replies
    • 3.1k views
  15. தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு என்பது முடிந்த முடிவு! மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று தமிழக அரசு முடிவு செய்து 1.2.2008 அன்று அதற்குச் சட்ட வடிவம் கொடுத்தது. ஆனால் அதற்குப் பின்னரும் சித்திரை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று ஒரு விரல் விட்டு எண்ணக் கூடிய இந்து்த்துவ வாதிகள் மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தாராளமாக சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடலாம். யாரும் வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் சித்திரை தமிழ்ப் புத்தாண்டல்ல. சூரியன் மேட இராசி, அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாளே சித்திரை ஆண்டுப் பிறப்பு என்கிறார்கள். அதுவே வேனில் காலத்தின் தொடக்கம் என்கிறார்கள். இவை முழுதும் சரியல்ல. இன்று வேனில் காலம் …

    • 2 replies
    • 2.5k views
  16. தைப்பொங்கல் நினைவாகும் தமிழ்ஈழப் (பிரகடனப்) பொங்கல்கள்! இயக்கங்கள்முதல் இதழ்கள்வரை... சிலநினைவுகள் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நியூசீலாந்தில் இருந்து எஸ் எம் வரதராஜன்:- லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் பிரகடனம் செய்யப்பட்ட தமிழ் ஈழப் பிரகடனம் காற்றோடு காற்றாகி இந்தத் தைப் பொங்கலுடன் 34 வருடங்களாகிவிட்டன. 1982 இல் செய்யப்பட்ட இந்தப் பொங்கல் பற்றிப் பேசும்போது அமரர் கிருஷ்ணா வைகுந்த வாசனின் பெயர் என்றும் பேசப்படும்! ஏனெனில் 1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார். அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்த…

  17. தொங்கவிடப்படும் கோப்பி மற்றும் உணவுவகைகள் .. (Suspended coffee & food ) அண்மையில் அறிந்தது .. நீங்கள் உணவகத்திற்கு செல்லும் நேரங்களில் , சில இடங்களில் உணவு வகைகட்கு நீங்கள் பணம் செலுத்தி தொங்க விடலாம் ( suspend ), தேவையுள்ள வேறு எவராவது அந்த உணவகத்திற்கு வந்து அதனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பல வகைகளில் நன்மை .. தேவையுள்ளவர் பொது இடங்களில் இரந்து கொள்வதை தவிர்க்கலாம் , உதவியவருக்கு முகம் தெரியாமலேயே உதவி செய்யும் திருப்தி , பணப் புழக்கம் அதிகரிப்பு என ... எவருக்காவது அனுபவம் இருக்கின்றதா , இலங்கையிலோ அவுஸ்திரேலியாவிலோ நான் செல்லும் இடங்களில் இது வரை சந்தித்ததில்லை …

  18. தொடரும் அரசியல் போட்டி ; பேராபத்தை தடுத்த பேராயர் - எம்.டி.லூசியஸ் உலக கிறிஸ்த்தவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு என்பது சந்தோசம் நிறைந்த ஒரு பெருவிழா ஆகும். ஆனால் அன்று ஆலயங்களுக்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களால் கிறிஸ்த்தவர்களே கண்ணீரில் கரைந்து போனார்கள். மனித குலம் செய்த பாவங்களுக்காக தன்னை பலியாக்கி சாவையே வெற்றி கொண்ட இறைமகன் யேசுவின் உயிர்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி, இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். 450 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். சுமார் 50 தொடக்கம் 60 வரையிலான உடல்கள் அடையாளம் காணமுடியாத அவலம். இந்த தாக்குதல்க…

  19. தொடரும் தெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்! "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என சோனியா காந்தித் தரப்பினரினால் பிரசாரத்துறை சார்ந்த நிபுணர்கள் 50 பேர் வியுகம் வகுக்க இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் பிரபல தேர்தல் பிரசார நிறுவனங்களில் ஒன்றான விப்லவ் கம்னிகேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். -குமுதம்" இவனுங்களுக்கு தனக்கு கீழே வலிமைகுறைந்த யாராவது நன்றாக இருந்தால் பிடிக்காது..நன்றாக அல்ல மூன்று வேளை நன்றாக உண்டாலே இந்தி அடிப்பொடிகளுக்கு வயிறுவாயெல்லாம் எரிய …

  20. லிங்கேஸ்வரன் விஸ்வா தொடர்ந்து தமிழக ஊடகங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை மூடிமறைத்தும், அவற்றைத் திசைதிருப்பியும் வருகின்றன. தமிழகத்தில் உள்ள திருடர்களின் ஊடகங்கள் சிபிஐக்குப் பயந்து இயங்குகின்றன. அதனைப் போன்று வடவர்களின் அடிவருடிகளின் ஊடகங்களும் இயங்குகின்றன. இவை தொடர்ந்து பாகிஸ்தான் அல்லது சீனாவைப் பற்றித் தான் அதிகம் பேசிக்கொண்டே இருக்கின்றன. இவை பாகிஸ்தான், சீனாவின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டப்படவேண்டும் என்று விவாதங்களை நடத்தி உரக்கக் குரல் எழுப்பி வருகின்றன. வடவர் அடிவருடிகளே, திருடர்களே தமிழர்களுக்கும் தமிழினத்திற்கும் எதிராக தினமும் அட்டூழியங்களை மேற்கொள்ளும் சக்திகளைப் பற்றி ஏனடா வாய் திறக்க மறுக்கிறீங்க? தமிழக மீனவர்களுக்கு தமிழக கடல் எல்லையில் சிங்கள அ…

    • 1 reply
    • 652 views
  21. தொடர்ந்து தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சினிமாத்துறையின் நோக்கம் என்ன? – அருட்தந்தை ஜெகத் கஸ்பர் June 2, 2021 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் ஒரங்கட்டும் நோக்கத்துடன் தமிழர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதற்கான ஆதரவுகளை வழங்குவதில் இந்திய சினிமாத் துறை முன்னணி வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக வேற்று மாநில கலைத் துறையினர் தொடர்ந்து இவ்வாறான இழிவான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியே தற்போது அமசோனில் வெளிவரவுள்ள Family man -2 (பமிலி மான்- 2) என்ற தொடர் நாடகம். இது தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்தி…

  22. உலகிலேயே யாரும் செய்யாத காரியத்தை இலங்கை இராணுவம் செய்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற வல்லமை வாய்ந்த அமைப்பு ஒன்றை வேறெந்த நாடும் அழித்ததில்லை என்றும், கடந்த 11 ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும், பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படையையும், வான்பிரிவு ஒன்றையும், பீரங்கிப் படைப்பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புகளையும் கொண்ட, நிழல் அரசு ஒன்றை நடத்தி வந்த, ஒரு வலிமையான இராணுவ அமைப்பு என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. அதுபோலவே, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இலங்கை இராணுவத்தின் திறமையையும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. போர் வெற்றி கொள்ளப்பட்ட வழிமுறைகளில் தவறுகள், விமர்சனங்கள் இருக்கலாம்…

  23. தொடர்ந்தும் ஏமாற்றப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் – ஹப்லுல்லாஹ் புகாரி March 25, 2019 நாட்டில் கடந்த முப்பது வருடகாலமாக தொடர்ந்த யுத்தமானது ஒரு இனத்தின் உரிமைக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், யுத்த முடிவில் அது பல பாதக விளைவுகளையும் ஏற்படுத்தி இருந்தது. இதனை நடுநிலையாக சிந்திக்கும் எவரும் மறுதளிக்க முடியாது. அத்துடன் யுத்தம் முடிந்த பிற்பாடு அந்த யுத்தம் ஏற்படுத்தி சென்ற பாதகமான வடுக்கல் இன்று வரை தொடர்வது கவலையளிக்கின்றது. அந்தவரிசையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, வெள்ளைக்கொடி விவகாரம், இராணுவ அத்துமீறல்கள், காணி அபகரிப்புகள், மனித உரிமையை மீறும் இராணுவத்தின் செயற்பாடுகள் எனத் தொடரும் பட்டியலில் இந்த காணாமல் ஆக…

  24. தொடர்பாடல் திறன், தீர்மானமெடுத்தல் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ச.சேகர் கொவிட்-19 தொற்றுப் பரவலினால் இலங்கையில் நாளாந்தம் சராசரியாக 150க்கும் மேலான மரணங்கள் பதிவாகும் நிலையில், ஒரு புறத்தில் நாட்டை முடக்குமாறு கோரிக்கைகள் சுகாதாரத் தரப்பிடமிருந்து வலுக்கும் நிலையில், மறு புறத்தில் பொருளாதாரத்தையும், நாட்கூலியை பெறும் தொழிலாளர்களின் வருமானத்தையும் கவனத்தில் கொண்டு, பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ள அரசாங்கத்தினால் அவ்வாறானதொரு பொது முடக்கத்துக்கு செல்லாமல், படிப்படியாக கட்டுப்பாடுகளை விதித்து, இயலுமானவரை நாட்டை திறந்த நிலையில் நடத்திச் செல்ல முற்படுவதை காண முடிகின்றது. இதில் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கும் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறிரு…

  25. தொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்? : மனோ விளக்கம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஏன் செல்லவில்லையென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார். மனோகணேசனின் பதிவு வருமாறு, நண்பர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போது நான் ஒரு வெளிநாட்டு ராஜதந்திரியுடன் உரையாடலில் இருந்தேன். செய்தி கேட்டதும் உடனேயே தலங்கம மருத்துவமனைக்கு ஓடினேன். ஏன் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துமனைக்கு கொண்டு செல்லவில்லை என நினைத்துக்கொண்டேன். நான் போனபோது நான் மட்டும்தான் முதல் எதிர்கட்சிகாரனாக இருந்தேன். அப்புறம் ஒரே ஆளும்கட்சி கூட்டம். பிரதமர் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.