நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
வீரப்பன் வரலாறு - வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ???- வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் .............!!! இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர…
-
- 0 replies
- 952 views
-
-
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்; இன்று ஒருவேளை சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடவேண்டிய நிலை! – மட்டு.நகரான் November 2, 2021 மட்டு.நகரான் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதி மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆதிவாசி மக்களாக நீண்டகாலம் குடியிருக்கும் இந்த மக்கள், எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் துயரமான வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர். கரடியன்குளமானது செங்கலடி-பதுளை பிரதான வீதியில் கரடியனாறு விவசாயப் பண்ணையூடாகச் செல்லும் வீதியில் பத்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. குசனார்மலை அடிவாரத்தில் உள்ள இக்கிராமமானது, நீண்ட பழைமையான கிராமமாக காணப்ப…
-
- 0 replies
- 196 views
-
-
குழுவொன்றின் புரட்சியும் போராட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கான ஏனைய வழிகளும் -அம்பிகா சற்குணநாதன் Photo, Selvaraja Rajasegar “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்துசேராது”: வழக்கமான சொல்லாடல் தற்போது இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் இளைஞர்ளது ஆர்ப்பாட்டங்களாக அடையாளம் காண்பிக்கப்படுகின்றன. ஆம், காலிமுகத்திடலை ஆக்கிரமிப்போம் என்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை இளைஞர்களே தலைமை தாங்கி நடத்துகின்றனர். ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கிய இந்த ஆர்ப்பாட்டம் இளைஞர்களின் ஆக்கபூர்வமான மூலோபாயங்களால் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் காலி முகத்திடல் மீதே முழுக்கவனத்தை செலுத்தி இந்த ஆர்ப்பாட்டங்களை இளைஞர் ஆர்ப்பாட்டம் என முத்திரை குத்துவது பிழையானதும் அபாயகரமானதுமாகும். ஏப்…
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கை அரகலய போராட்டங்கள் தோல்வியில் முடிந்துவிட்டதா? August 27, 2022 — கருணாகரன் — Go Home Gota அல்லது அரகலயவின் இன்றைய நிலை என்ன? இதனுடைய நாளைய பயணம் எப்படியாக இருக்கப்போகிறது? ஏனிந்தக் கேள்வி எழுகிறது என்றால், இந்தப் போராட்டத்தை ஆரம்பித்ததற்கான நோக்கம் அல்லது இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. அதாவது இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் பகிரங்கமாக முன்வைத்த அடிப்படையான விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதேவேளை இந்தப் போராட்டமானது, தற்போதைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. போராட்டத்தின் இயங்குவிசைகளாக இருந்த முக்கியச் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றனர். அனைத்துப் பல்கலைக்கழக ம…
-
- 0 replies
- 374 views
-
-
சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!
-
- 0 replies
- 1.4k views
-
-
April 14, 2023 உழைக்கும்போதே செலுத்தும் செலுத்தும் வரி (Pay As You Earn - PAYE) முறையின் கீழ் அரசாங்கம் வேறுபட்ட வருமான வரைமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறது. 100,000 ரூபாவுக்கும் 141,667 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறும் ஒருவர் 100,000 ரூபாவுக்கு மேலாக பெறுகின்ற சம்பளத்துக்கு 6 சதவீத வரியைச் செலுத்தவேண்டும். அதேபோன்றே 141,667 ரூபாவுக்கும் 183,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறுபவர் 12 சதவீத செலுத்தவேண்டும். 183,333 ரூபாவுக்கும் 225,000 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 18 சதவீதத்தையும் 225,000 ரூபாவுக்கும் 226,267 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 24 சதவீதத்தையும் 226,267 ரூபாவுக்கும் 308,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்…
-
- 0 replies
- 589 views
- 1 follower
-
-
ஈழத்தமிழருக்கு நேர்ந்த மனிதப் பேரவலங்களுக்கு ஐ.நா.வினாலோ அல்லது சர்வதேச சமூகத்தினாலோ நீதியைப் பெற்றுத்தர முடியுமா என்கிற கேள்வி இன்று நேற்றல்ல கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கேட்கப்பட்டு வருகிறது. ஐ.நா.வின் பணியாளர்கள் மற்றும் பிற நாடுகளின் ஊழியர்கள் சிறிலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள். குறித்த நாடுகளினாலோ அல்லது ஐ.நா.வினாலோ எந்தவொரு நடவடிக்கைகளையும் சிறிலங்காவிற்கு எதிராக எடுக்கப்படாமல் போய்விட்டது. ஐந்தாம் கட்ட ஈழப் போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேசப் போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் பல உலகநாடுகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பல உலகநாடுகள் தமது இராஜதந்திர காய்நகர்த்தல்களை சிறிலங்காவிற்கு எதிராக கடந்த இரண்…
-
- 0 replies
- 491 views
-
-
தாம் வெற்றி பெறுவதற்காகவன்றி மற்றவர்களை தோற்கடிக்க போட்டியிடுபவர்கள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:14 நாட்டில் எல்லோரது கவனமும் ஜனாதிபதித் தேர்தல் பக்கம் திரும்பியிருக்கும் நிலையில், கடந்த வாரம் அதனோடு தொடர்புடைய இரண்டு முக்கிய செய்திகள் வெளியாகின. கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அக்கட்சியின் பொதுச் செய்லாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணையகத்திடம் அறிவித்திருந்தார். அது தான் அவற்றில் முதற்செய்தி. தாமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ர…
-
- 0 replies
- 289 views
-
-
வலிகாமம் யாழ்ப்பாணத்தில் தொன்மையான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. சிகிரியா குகையோவியத்தில் உள்ள கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று வலிகாமத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த உறவு பற்றிக் கூறுகிறது. 12 ஆம் நூற்றாண்டில் வலிகாமத்தில் உள்ள துறைமுகம் சோழரின் கட்டுப்பாட்டில் இருந்ததை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் அரசமைத்த கலிங்கமாகனின் முக்கிய படைத்துறைகளில் ஒன்று வலிகாமத்தில் இருந்ததாக சூளவம்சம் கூறுகிறது. அக்காலத்தில் முக்கிய குடியேற்றங்கள் நிகழ்ந்த இடங்களாக வலிகாமத்தில் உள்ள மயிலிட்டி, தெல்லிப்பளை, இணுவில், தொல்புரம் ஆகிய இ…
-
- 0 replies
- 418 views
-
-
இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரண மாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று தமிழர் சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி நிறுவனங்களும் புகழாரம் சூட்டி யுள்ளன. ஆனால் அந்த அங்கீ காரம், கவுரவம் தனக்குச் சொந்த மானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார். இ-மெயிலுக்கான காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இந்த விவ காரம் குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய 14-வது …
-
- 0 replies
- 265 views
-
-
[size=3][/size] [size=3]நீங்கள் ஒரு வீட்டில் குடியிருக்கிறீர்கள். உங்களுக்கு வலதுபுறத்தில் ஒரு குடும்பம் குடியிருக்கிறது. இடதுபுறத்தில் ஒருவர் குடியிருக்கிறார்.[/size] [size=3]உங்கள் வலதுபுறத்தில் இருக்கும் குடும்பத்திற்கு நீண்ட நாட்களாக ரவுடிகளிடமிருந்து ஆபத்து உண்டு. திடீரென்று ஒரு நாள் ரவுடிகள் கையில் பயங்கர ஆயுதங்களோடு வந்து தாக்குகிறார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ள தாயை வண்புணர்ச்சிக்கு ஆளாக்குகிறார்கள். மகளையும் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவ்வீட்டின் இரு மகன்களில் ஒருவனின் கண்களை நோண்டிக் கொல்கிறார்கள். மற்றொரு மகனின் காலை வெட்டுகிறார்கள். இவை அனைத்தும் உங்கள் கண்முன்னே நடக்கிறது.[/size] [size=3]அப்போது உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. நீங்கள் நினை…
-
- 0 replies
- 957 views
-
-
இந்திய மத்திய அரசு கடந்த போரில் வீடிழந்த ஈழத் தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பு அறிமுகஞ் செய்தது. ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் ஒரு தொய்வு ஏற்பட்டது. திட்டம் நிறை வேற்றப்படுமோ என்ற ஜயம் எழுந்தது. திடீரென்று இந்த மாத (ஓக்ரோபர்2012) முதலாம் நாள் 43,000 வீடுகள் கட்டும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த வைபவத்திற்கு ஒரு பட்டாளம் இந்தியப் பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு படையெடுத்தனர். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையில் தொடர்பாளராக இருப்பவருமான அதிபர் ராஜபக்சவின் இளவல் பசில் ராஜபக்ச இந்திய ஊடகத்துறையினரின் க…
-
- 0 replies
- 426 views
-
-
சமகால இலங்கையின் சமூக – பொருளாதார - அரசியல் – தளத்தில் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளைஎதிர்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. அரசியல் ரீதியாக இச்சவால்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் நாளாந்தம் அருகிவருகின்றன. எண்ணிக்கை அடிப்படையில் எமது அரசியல் பலம் என்பது சுமார் பத்து சதவீதமானது மட்டுமே. கடந்தகாலத்தில் இப்பலத்தினைக்கொண்டு நாம்நிறைய வேசாதித்திருக்கின்றோம். அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவ்வப்போது கைகூடியிருந்தது. ஆனால் அந்தநிலை தொடர்ந்தும் நிகழப்போவதில்லை.சமூகத்தளத்தில் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஒருசிறுபான்மை சமூகம் என்றவகையில் நமது பொறுப்புக்களைநாம் உணர்ந்து செயற்படவேண்டிய தேவையிருக்கிறது…
-
- 0 replies
- 479 views
-
-
இழந்த செல்வத்தை எப்படி மீட்டெடுக்கலாம் என்று உலகம் கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, ஆப்கானிஸ்தான் மக்கள் உயிருக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இறந்துபோனவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டசாலிகள். கை போய், கால் போய், நெஞ்சின் ஒரு பகுதி மட்டும் பிளந்துகிடக்க, சுவாசம் மட்டும் வந்துபோவதில் என்ன பயன்? வெடித்த கன்னத்துடன் நடந்து செல்லும் குழந்தைகளை யாரால் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கும் ஓட முடியாது. பணம் இல்லை என்பது ஒரு விஷயம். குறைந்தபட்ச வசதியுடன் மருத்துவமனையும் இல்லை. முன்பெல்லாம் தாலிபன்களைக் கண்டால் பயந்து பாய்ந்து வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொள்வார்கள். இப்போது தாலிபன்கள் மீதான பயம் குறைந்துவிட்டது. காரண…
-
- 0 replies
- 722 views
-
-
நச்சு ஊசி பற்றிய செய்தியும் முன்னாள் போராளிகளை பாதிக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறையின் மகளிரணித் தலைவியாக இருந்த தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமியின் பெயர் இரண்டு காரணங்களினால் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களில் அடிபட்டது. முதலாவதாக முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள் என்றதோர் புதிய செய்தியினால் அவரைப் பற்றியும் பலர் குறிப்பிட்டுப் பேசினர். இரண்டாவதாக அவரது தன்வரலாற்று நூலின் மொழிபெயர்ப்பை விற்றுப் பெற்ற பணத்தில் மூன்று இலட்சம் ரூபாய் அவர் இறுதிக் காலத்தில் சிகிச்சை பெற்ற மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமையினால் அவரது பெயர் மீண்டும் அடிபட்டது. நல்லிணக்கப் பொறிமுறைக்கா…
-
- 0 replies
- 251 views
-
-
மேதகு எழுச்சி, வடக்கை நோக்கி நகரும் சீனா அமெரிக்காவில் பசில் ராஜபக்சே|பொய்யா விளக்கு நிராகரிக்கப்படுகிறதா ?AROOS,போர் இயல் ஆய்வாளர் OPEN TALK
-
- 0 replies
- 922 views
-
-
புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்டிருக்கும் “அசுர கானம்” பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற “சின்னவாளு, பெரியவாளு” பாடல். புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு. “உன்னால ஜகத்துக்கு என்னடா பிரயோஜனம்”னு கேட்டா “லோக சேமத்துக்கு தவம் பண்ணுறேன்” என்கிறான். “அட மண்டல் கமிஷனுக்கு என்ன…
-
- 0 replies
- 726 views
-
-
ஒரு நினைவு நூல் வெளியீடும் அதன் அரசியலும்! Posted on November 9, 2022 by தென்னவள் 17 0 யாழ்ப்பாணம் – வலம்புரி நட்சத்திர விடுதியில் கடந்த 5ஆம் திகதி ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அது ஒரு நினைவு கூர்தலாகவும் இருந்தது. அதேசமயம் அதில் ஓர் அரசியலும் இருந்தது. கடந்த ஆண்டு கொழும்பில் உயர்நீத்த கௌரி தவராசாவை நினைவு கூர்ந்து அவருடைய நினைவு நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு அது. கௌரி தவராசா நாடறிந்த ஒரு வழக்கறிஞர். அவரும் அவருடைய கணவனும் ஒன்றாகச் சேர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அகப்பட்டவர்கள் பலரை விடுவித்திருக்கிறார்கள். தமிழ் சட்டத்துறைப் பரப்பில் குறிப்பாக தலைநகரில் துருத்திக் கொண்டு மேலெழுந்த ஒரு பெண் ஆளுமையா…
-
- 0 replies
- 702 views
-
-
சட்டமும் கருணையும் மொஹமட் பாதுஷா / 2019 பெப்ரவரி 03 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:00 Comments - 0 இன, மதம்சார் தொல்பொருட்களும் அடையாளங்களும், அந்த இனத்தின் அல்லது மதத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தின் வரலாற்றை, அடுத்த சந்ததிக்குக் கொண்டுக் கடத்திச் செல்பவையாகும். ஒரு மதப் பிரிவினர், அவ்விடத்தில் வாழ்ந்ததற்கான எச்சமாகக் காணப்படுகின்றமையால், அவை, பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதில், இருவேறு கருத்துகள் கிடையாது. ஆனாலும், இலங்கையைப் பொறுத்தமட்டில், எல்லா மதங்களின் தொன்மையான அடையாளங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கு, சமஅளவான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்று கூற முடியாத அளவுக்கு, நடைமுறை யதார்த்தம் இருக்கின்றது. அந்த வகையில், அநுராதபுரம் ஹொரவப்பொத்தான…
-
- 0 replies
- 518 views
-
-
பிரித்தானிய மகாராணியாரின் வைர விழாவிற்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மான்சன் ஹவுஸில் பொதுநலவாய நாடுகளின் பொருண்மியப் பேரவையில் அவர் நிகழ்த்தவிருந்த உரை, கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. சிங்கக் கொடியோடு வாகனத்தில் பவனி வர முடியாதவாறு பல முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியின் கொடும்பாவியோடு இலங்கை அரசியல் யாப்பும், நடு வீதியில் வைத்து எரிக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த விடுதியும், வந்திறங்கிய ஹீத்ரூ விமான நிலையமும், உரை நிகழ்த்தவிருந்த மாநாட்டு மண்டபமும், பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களால் சூழப்பட்டதால் மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் ப…
-
- 0 replies
- 515 views
-
-
http://thamilkural.net/?p=17695
-
- 0 replies
- 713 views
-
-
-
- 0 replies
- 456 views
-
-
இருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தினை மேற்கொள்ளப் போகின்றார்கள் ? எதிர்த்து வாக்களித்து பழக்கம் இல்லாத காரணத்தினால் இருபதுக்கும் ஆதரவளிப்பார்களா ? அல்லது ஏதாவது அதிசயம் நிகழ்வது போன்று எதிர்த்து வாக்களிப்பார்களா ? அல்லது எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடுநிலை வகிப்பார்களா ? என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக இருபதாவது திருத்தத்தினை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன ? “இருபதாவது திருத்தமானது 1978 இல் ஜே.ஆர் ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை போன்றதுதானே ! இதனை ஏன் எதிர்க்க வேண்டும்” ? என்று சிலர் முட்டா…
-
- 0 replies
- 735 views
-
-
அவலமும் அபத்த நாடகங்களும் [29 ஏப்ரல் 2009, புதன்கிழமை 7:00 மு.ப இலங்கை] இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டி அவ்வப்போது கட்டவிழும் பல்வேறு அபத்த நாடகங்களின் இரண்டு காட் சிகள் நேற்றுமுன்தினம் அரங்கேறியிருக்கின்றன. ஒன்று இலங்கைத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை வைத்து அவ்வப்போது அரசியல் சித்துவிளையாட்டுளை நடத்திவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அரங் கேற்றிய சாகும்வரை உண்ணாவிரதம் என்ற நாடகம். அடுத்தது முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் மீது விமான மற்றும் கனரக ஆயுதங்களின் பிர யோகம் நிறுத்தப்படுவதான கொழும்பின் அறிவிப்பு. சாகும்வரையான உண்ணாவிரதத்தை பெரும் எடுப்பு ஆரவாரத்துடன் காலையில் ஆரம்பித்து நண்பகலி லேயே அதனை முடித்துக்கொண்ட கலைஞரின் "திரு விளைய…
-
- 0 replies
- 660 views
-
-
http://www.perarivalan.com/ இது அநீதி முறுக்கிய தூக்குக்கயிற்றின் கீழே வெகுகாலமாய் நின்று கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கான இணையவெளி. ஏற்கெனவே ஒருமுறை நிச்சயித்திருந்த தண்டனைக்கான நாளை, நாம் எல்லோரும் தெருக்களில் இறங்கி நின்று, ஒட்டுமொத்தமாய்ப் போராடி வெற்றி கண்டோம். தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் ஒரு முறை எழுச்சியில் மரணதண்டனையை முற்றும் முழுதுமாய் இந்தியாவிலிருந்து நீக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை என் உடலின் உள்ளத்தின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இது தான் நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. இன்றைய நிலையில், சமூக ஊடகங்கள் தாம் நம் பக்கபலமாயும் பாதையாகவும் இருக்கமுடியும். பேரறிவாளனின் இணைய வெளியைப் பயன்படுத்தி நாம் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் கைகோர்க்க வேண்டு…
-
- 0 replies
- 315 views
-