நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் புதிய வடிவத்தை எடுத்துள்ளன. இது காலவரை தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளைப் பறிப்பது என்ற இலக்கை நோக்கி நகர்ந்த ஒடுக்குமுறை தற்சமயம் எமது இனத் தனித்துவத்தையும் ஒரு தேசிய இனத்துக்கான தகைமையையும் அழித்து எம்மை ஓர் உதிரித் தன்மை கொண்ட இனக் குழுமமாக மாற்றும் முயற்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக எமது தாயகத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை விரட்டி அவர்களை நிரந்தரமாகவே அகதிகள் நிலைக்குத் தள்ளிவிட்டு அந்த நிலங்களைப் பாதுகாப்பு, அபிவிருத்தி…
-
- 0 replies
- 266 views
-
-
“சுவர்களும் அதற்கு கதவுகளும் கொண்ட எனது வீட்டிற்கு நான் செல்ல வேண்டும், எனக்கான குடியிருப்பு என்று உலகின் எந்த ஒரு மூலையில் கிடைத்தாலும் அதைப் பற்றிய கவலை எனக்கில்லை, அது அட்லாண்டிக் கடலின் மீது இருந்தாலும் சரியே… நான் எனது வீட்டிற்குத் திரும்ப வேண்டும்…" --- சோவியத் குடியரசு உக்ரேனில் இருந்து விரட்டப்பட்ட பெண் அகதி ஒருவரின் வேண்டுதல் இதுதான். இயற்கை தன் மீது வரைந்து கொள்ள விரும்பாத, மனிதன் ஏற்படுத்திய வடுக்கள் எல்லைகள். மனிதனால் ஒரு பறவையைப் போல சுதந்திரமாக எல்லைகளைத் தாண்டி பறக்கமுடிவது இல்லை. எல்லைகள் தாண்டும் மனிதர்களை மனித நேயத்தோடு பார்ப்பதற்கு எந்த நாடும் தயாராக இல்லை. எல்லைகள் தாண்டினால் அது தீவிரவாதமாக மட்டும் தான் பார்க்கப்படுகிறது. பொற்கால ஆட்சி நடக்க…
-
- 0 replies
- 341 views
-
-
யாழ்இணைய செய்தி ஆய்வு நிலமும் புலமும் - ஆக்கம் சுகன் சிங்கள அரசு கிழக்கில் தனது இராணுவ நடவடிக்கையை வெற்றி என பிரகடனப்படுத்தி ஆரவாரம் செய்து அதனூடாக புலிகளை சர்வதேசம் எவ்வாறு அணுக வேண்டும் என்று புதிய ஒரு அளவு கோலை முன்வைக்கின்றது. இந்த அளவு கோலை வைத்தே உள்ளுர் அரசியலையும் நகர்த்தப் பார்க்கின்றது. அதே அளவு கோலை வைத்தே தான் செய்துகொண்டிருக்கும் அவலங்களையும் மறைக்கப்பார்க்கின்றது. போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகாத வண்ணம் யுத்தத்தை முன்னெடுக்கும் போது சர்வதேசத்தில் இருந்து சர்ச்சைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிவரினும், போரில் வென்று விட்டோம் என்ற பிரசங்கத்தால் அவ்வாறான சர்ச்சைகளை அபிவிருத்தி திட்டங்களாக மாற்றும் தந்திரமாக நடவடிக்கைகள் நகர்க…
-
- 7 replies
- 4.5k views
-
-
ஈழத்தின் வலிகாமப்பகுதியில் நிலத்தடி நீரிற் கழிவு எண்ணை கலந்திருப்பது அண்மைக் காலத்தில் அறியப்பட்டுள்ளதுடன் அது ஒரு பாரிய சூழலியல் மற்றும் வாழ்வாதரப் பிரச்சனையாக பலதரப்பாலும் உணரப்பட்டுள்ளது. ஆனால் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களால் உணர்ந்து கொள்ளப்படவில்லை. பெற்றோலிய உற்பத்தியின் வரலாறு 1850 இல் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை மசகு எண்ணையை மூலப்பொருளாகக்கொண்ட உற்பத்திப் பொருட்கள் மனித வாழக்கையில் இருந்து பிரிக்கப்பட முடியாத பலநன்மைகளைத் தருகிற பாகத்தை எடுத்துக்கொண்டுள்ளன. ஆனால் அதே அளவுக்கு எண்ணையானது சூழலியலுக்கும் உலக உயிரினத்துக்கும் பிரச்சனைகளையும் உண்டு பண்ணும் ஒன்றாகவும் மாறி இருக்கிறது. (உலகப்பொருளாதாரமும் அரசியலும் எண்ணையை மையப்படுத்தியதாக இருப்பத…
-
- 4 replies
- 633 views
-
-
நிலம் பறிபோகலாம்... எல்லாமே முடிந்துவிட்டது என்று பொருள் அல்ல: அனிதா பிரதாப் நன்றி: தமிழோசை http://www.tamilnaatham.com/pdf_files/2009...ai_20090427.pdf
-
- 0 replies
- 858 views
-
-
புத்தரின் பெயரால் மீண்டும் ஒருமுறை தமிழர்களின் பூர்வீக நிலத்தை விழுங்கும் படலம் தொடங்கியுள்ளது. மிக நீண்டகாலமாகவே கண்வைத்திருந்த குமுளமுனை தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டபடி நேற்று புத்தரின் சிலையை பிரதிஷ்டை செய்துவிட்டது. ‘புத்தர் வருவார் முன்னே, நிலம் விழுங்கிகள் வருவர் பின்னே’ என்பது இலங்கையில் காலம்காலமாக இடம்பெற்றுவரும் ஒன்றுதான். இப்போதும் அதே பழைய உத்தியோடு குருந்தூர் மலையைக் கொள்ளை கொள்வதற்கு அகலத்திறந்த வாயோடும் படைப்பிரசன்னத்தோடும் பேரினவாதம் கால் வைத்திருக்கின்றது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப்போல காணிபிடிக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு வாய்த்திருக்கிறது தொல்லியல் திணைக்களம். இந்தத் திணைக்களம்தான் தொன்மையான தமிழர் ப…
-
- 1 reply
- 448 views
-
-
உன் உம்மா உம்மா, என் உம்மா சும்மாவா? என்று நம்மவர்கள் பேச்சு வழக்கில் கேட்பதுண்டு! ஒரு நீதியினை ஒருவர் தனக்கு ஒருவாறாகவும், அடுத்தவருக்கு வேறாகவும் பயன்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர் மேற்கண்ட கேள்வியினைக் கேட்பார்! சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கிறது சட்டம்! ஒரு சட்டம் - இரண்டு தரப்பாருக்கு இரண்டு விதமாகப் பிரயோகிக்கப்படுவதில்லை. அவ்வாறு பிரயோகிக்கப்பட்டால் அது சட்டமில்லை! சரி... இப்போது கட்டுரையின் பிரதான கதைக்கு வருவோம்! அஷ்ரப்நகர் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். இது முஸ்லிம் மக்களை நூறுவீதம் கொண்ட ஒரு கிராமமாகும். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில்-01 என்கிற கிராமசேவகர் பிரிவுக்குள் இந்தப் பகுதி வருகிறது. அஷ்ரப்நகர் என்பது மு.காங…
-
- 0 replies
- 813 views
-
-
நிலா என்ற பகீரதி: முழுமையான பின்னணி! பிரான்ஸ் குடியுரிமையை கொண்ட முருகேசு பகீரதி என்ற பெண் அவரது எட்டு வயது குழந்தையுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட விடயம் இப்பொழுது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் உயர்மட்ட தளபதியொருவரை கைது செய்துவிட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு கொண்டிருக்க, தமிழ் ஊடகங்கள் வேறுவிதமாக செய்தி வெளியிட்டு கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான அடக்குமுறை அல்லது ஆட்சிமாறிய பின்னரும் நிலைமைகள் மாறவில்லையென அவை கூறுகின்றன. இந்த அரசியல் விளையாட்டுக்குள் நுழையாமல், கைதான பகீரதியின் பின்னணிகளை மட்டும் அலசுவதே நமது நோக்கம். கைதான முருகேசு பகீரதி என்பவர் விடுதலைப்புலிகளின…
-
- 1 reply
- 1.3k views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 272 views
-
-
நீங்கள் பயிற்சி பெற்றதை ஏற்றுக் கொள்ளுங்கள் – முஸ்லிம் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் May 21, 2020 மூன்று முஸ்லிம் பிள்ளைகளிடமிருந்து கட்டாயப்படுத்தி ஆதாரங்களை பெற்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் அல் சுஹ்ரியா அரபுக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்களது முஸ்லிம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தங்களை காவல்துறை அதிகாரிகள் என அழைத்துக்கொண்டு ஒரு குழு பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை தனியாகப் பிரித்து தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அச்சுறுத்தியுள்ளனர். எங்களிடம் ஒரு …
-
- 0 replies
- 379 views
-
-
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கடந்த 17.12.2013 அன்று நீங்காத நினைவோடு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மற்றும் தாய்த்தமிழகத்தில் 12.05.1995 அன்று ஈழ நெருப்பை மூட்டிய முதல் வீரன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவாகவும் சுடர்வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வில் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.அதை தொடர்ந்து சிறுவர்களால் மாவீரர் நினைவுசுமந்து கவிதை மற்றும் பாடல் பாடப்பட்டது. 7 வது ஆண்டு நினைவாக நடைபெற்ற சுடர்வணக்க நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வரலாற்றுப் பதிவு காணொளி ஊடாக காண்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு…
-
- 0 replies
- 632 views
-
-
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் எம்.ஏ. சுமந்திரன், நீதி அமைச்சர் சப்பிரி தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிப்பதைக் குறித்து சங்கடப்படுகிறார் எனவும் இராஜினாமா செய்ய முயன்றும் முடியாமலிருக்கிறார் என ஊடகங்கள் கூறிவருவதாக தெரிவித்தார். இராஜினாமா செய்ய முடியாமை மிகவும் விசித்திரமாக இருந்தாலும் , அமைச்சருக்கு தன் பதவியை குறித்திருக்கும் சங்கடம் தன்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதென சுமந்திரன் கூறினார். ஏனெனில் அரசாங்கம் நாட்டின் நீதித் துறையின் செயற்பாடுகளில் வெட்கமின்றி தொடர்ந்து தலையிட்டு வருகிறதெனச் சாடினார். "இன்று கடற்படை தளபதி வசந்த காரனாகொட வடமேல் மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்படப் போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இவர் இலங்கையின் ஒர் அடையாள…
-
- 0 replies
- 320 views
-
-
முயற்சிகள் ஏதும் இன்றி முடங்கி மௌனமாக நீட்டிக்கிடக்கும் எந்த இனத்துக்கும் வலியவந்து நீதி தேவதை வரங்கள் ஏதும் தரப்போவதில்லை. உலகில் நடத்திமுடிக்கப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்துக்கும், இனச்சுத்திகரிப்புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்திருக்கா என்றால் இல்லை. இனப்படுகொலைகளின் வடுக்களை தாங்கிய மக்கள் ஓய்வின்றி எழுந்து நீதிக்கான தேடலை ஆரம்பித்தால் நிச்சயம் அது கிடைத்தே தீரும். அது இன்றோ நாளையோ, நாளை மறுநாளோ திடீரென நிகழ்ந்துவிடக்கூடிய ஒன்று அல்ல. அதற்கான நீண்ட பயணங்கள் ஓய்வின்றி நிகழ்த்தப்படும்போது அது பல கதவுகளை திறந்துவைக்கும். நீதியின் கதவு உட்பட. எல்லாவகையான கொடூரமான கொலைகளையும் செய்து முடித்துவிட்டு நீதியின் கண்ணில் இருந்து தூரச்சென்று ஒழித்திருந்த ஒரு போர்க்குற்றவாளியை…
-
- 0 replies
- 573 views
-
-
நீதி கிடைக்கும்வரை ஓயாது தேடியவர்களின் வீரவரலாறு ஒன்று - ச.ச.முத்து Aug 1, 2013 முயற்சிகள் ஏதும் இன்றி முடங்கி மௌனமாக நீட்டிக்கிடக்கும் எந்த இனத்துக்கும் வலியவந்து நீதிதேவதை வரங்கள் ஏதும்தரப் போவதில்லை. உலகில் நடத்திமுடிக்கப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்துக்கும், இனச்சுத்திகரிப்புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்திருக்கா என்றால் இல்லை. இனப்படுகொலைகளின் வடுக்களை தாங்கியமக்கள் ஓய்வு இன்றி எழுந்து நீதிக்கான தேடலை ஆரம்பித்தால் நிச்சயம். அது கிடைத்தே தீரும். அது இன்றோ நாளையோ,நாளைமறுநாளோ திடீரென நிகழ்ந்து விடக்கூடிய ஒன்று அல்ல.அதற்கான நீண்ட பயணங்கள் ஓய்வு இன்றி நிகழ்த்தப்படும்போது அது பல கதவுகளை திறந்துவைக்கும். நீதியின் கதவு உட்பட.எல்லாவகையான கொடும்கொலைகளையும் செய்துமுடித்த…
-
- 0 replies
- 494 views
-
-
நீதிமன்ற உத்தரவு மீறல்களுக்கு முற்றுப்புள்ளி அவசியம் : சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் செம்மலை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது குறித்த நீதிமன்ற உத்தரவு காலதாமதமாகியது என ஞானசாரதேரர் உள்ளிட்டவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டமைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாது விட்டால் விமர்சனங்களைக் கொண்டிருக்கும் இலங்கை நீதித்துறையின் மீதான முழுமையான நம்பிக்கையை மக்கள் இழப்பதற்கு வழியேற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாராதிபதியின் பூதவுடல் …
-
- 0 replies
- 223 views
-
-
நீதிமன்ற தீர்ப்பையடுத்து தீவிரமடைந்துள்ள இலங்கையின் அரசியல் நெருக்கடி - வீ.பிரியதர்சன் இலங்கையில் இன்று எற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து நாட்டு மக்களினதும் குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியிலும் இலங்கையில் ஜனநாயக முறைமை பின்பற்றப்படுகின்றதா என்ற கேள்விகள் மறைமுகமாக எழும்பத்தான் செய்கின்றன. இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற செயல்கள் குறிப்பாக வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம், இன அழிப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் அடக்குமுறைகள். அதைவிட இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் எல்லாம் இலங்கையின் ஜனநாயகத்திற்கு ப…
-
- 0 replies
- 716 views
-
-
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்பதை ஆட்சியாளர்களும் சிங்கள பேரினவாதி களும் ஒருபோதும் விரும்பவில்லை என்பது தெள்ளத் தெளிவு. இதற்கு துணைக் காரணங்கள் பல இருந்தாலும் பிரதான காரணங்கள் இரண்டு. அதில் ஒன்று நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் தலைமையை எடுத்துக் கொண்டால், அவரை ஏமாற்றவோ அல்லது சலுகைகளைக் காட்டி தம்பக்கம் வாலாசப்படுத்தவோ முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்குதெரியும். இதனால் அவரை அவர்கள் விரும்ப வில்லை. இரண்டாவது காரணம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எழுந்து பேசுவாராயின் அதற்கு சர்வதேச சமூகம் நிச்சயம் செவி சாய்க்கும் மதிப்பளிக்கும். அதிலும் குறிப…
-
- 0 replies
- 333 views
-
-
தமிழால் இணைவோம் நீர்.... கடவுளின் முதல் கொடை இந்த உலகிற்கு. 'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்று தெய்வப் புலவரால் சொல்லப் பட்ட ஒரு வஸ்து. உணவின்றி ஒரு மனிதனால் 7 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி 14 மணி நேரத்திற்கு மேல் மனிதனால் தாக்கு பிடிக்க முடியாது. 75% உலகில் நீர் சூழப் பட்டு இருந்தாலும், குடிப்பதற்கான மென்நீர் 2.7% மட்டுமே பூமியில் இருக்கிறது. அதிலும் 2.5% நீர் ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் துருவங்களில் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. ஆக, நாம் வாழ்வது மீதம் உள்ள 0.2% குடிநீர் ஆதாரங்களை கொண்டுதான். மழைநீர் முன்னொரு காலத்தில் சுத்தமான குடிநீராகக் கருதப் பட்டு வந்தது. ஆனால் வானம் மாசுபடத் தொடங்கியதும், அதுவும் மாறிப் போனது. …
-
- 0 replies
- 433 views
-
-
நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன். சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியத…
-
- 6 replies
- 1.3k views
-
-
நுவரெலியாயாவில் ஐந்து வருடங்களில் 52 ஆயிரம் குடும்பக் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன! September 10, 2021 இந்தியா வம்சாவளி தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் (2015 – 2019) சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் 52 ஆயிரத்து 183 குடும்பக்கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தகவல்கள் உறுதி செய்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் குடும்பங்களை ஏமாற்றி குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொடர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற. குறிப்பாக இதுத் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் கடந்தக் காலங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டி…
-
- 0 replies
- 654 views
-
-
நூறு வருடங்களுக்கு முன் முகக்கவசம் அணிய வைத்த ஸ்பானிஷ் காய்ச்சல்": இன்னொரு கொரோனாவா? அதிர்ச்சிக்குள்ளாக்கும்புகைப்படங்கள் ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒருமுறையும் பேரழிவை ஏற்படுத்தும் நோய்கள் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சான்று பகிரும் வகையில் 1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சலின் பாதிப்புகளுடன் எம் கண்முன் அரங்கேரி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புகளும் உள்ளன. ஸ்பானிஷ் காய்ச்சலானது, முதல் உலகப்போருக்குப் பின்னர் தோன்றியதுடன் இந்நோய் விரைவாக பரவி உலகளாவிய ரீதியில் 20 மில்லியனுக்கும் 50 மில்லியனுக்கும் இடைபட்ட உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இது முதன்முதலில் ஸ்பெயினில் கண்டறியப்பட்டது, எனவே இதற்கு ஸ்…
-
- 1 reply
- 532 views
-
-
1990ம் ஆண்டு செப்ரெம்பர் 5 வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரால் 174 தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். வாகனங்களில் வடபுறமாகக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் ஒருகாட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டனர். தமது கைகளாலேயே அவர்கள் புதைகுழிகளை வெட்டுமாறு பணிக்கப்பட்டனர். பின்னர் வரிசைசையில் நிற்குமாறு பயமுறுத்திப் பணிக்கப்பட்டனர். சிங்கள இராணுவ மிருகங்களால் பின்புறமாகச் சுடப்பட்டுப் புதைகுழிகளில் வீழ்த்தப்பட்டனர். நிர்க்கதியாய் நாதியற்றவர்களாய் வீழ்த்தப்பட்டனர். அவர்களது உயிர்பிழியும் குரல்கள் அன்று காட்டுவிலங்குகளையும் மரங்களையும் பதறவைத்திருக்கும். 23 மூன்றாண்டுகள் கடந்துவிட்டது. கிழக்கில் வாழும் புத்திப்பிழைப்பாளர்கள் ம…
-
- 0 replies
- 530 views
-
-
-
- 1 reply
- 2.4k views
-
-
24 நிமிடங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இந்த சம்பவத்தினால் மனமுடைந்த சிலர், கொழும்பு - பொரள்ளை மயானத்தின் இரும்பு வேலியில் வெள்ளை நிறத்திலான துணிகளை கட்டி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பிரிட்டனில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது …
-
- 0 replies
- 333 views
-
-
கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்னர் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று வடக்கு மாகாணசபைக்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி யினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவு பகுதியில் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நெடுந்தீவிற்குச் சென்றுள்ளனர். இதன் போது ஒட்டுக்குழுவின் அடக்குமுறைகளையும் மீறி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மக்கள் பெரும் ஆதரவினை தெரிவித்திருந்ததோட…
-
- 6 replies
- 902 views
-