நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4200 topics in this forum
-
ஆற்றிங்கல் அரசியின் மகனான மார்த்தாண்டவர்மன் மருமக்கள் தாய முறைப்படி வேநாடு அரசராக 1929 ஆம் ஆண்டு முடிசூட்டப் பெற்றார். அவருக்கு முன் ஆட்சி செய்த மன்னரின் மக்களும் எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர் பிரபுக்களும் நாயர் படையின் பெரும்பகுதியினரும் மார்த்தாண்டரை வீழ்த்த முயன்றனர். ஆனால் மர்த்தாண்டர் முனைப்பாகச் செயல்பட்டு எதிரிகளை வீழ்த்தி நாயர்களின் மேலாண்மையைத் தகர்த்தார். கன்னியாகுமரி முதல் காயங்குளம் வரை நாட்டை விரிவாக்கம் செய்தார் 'நவீன திருவிதாங்கூரை' உருவாக்கும் இப்பணியில் அவர்க்குப் பெரிதும் துணையாக இருந்தவர்கள் தென்பாலுள்ள தமிழர்களே! நாஞ்சில் நாட்டைச் சார்ந்த ஆறுமுகம் பிள்ளை தற்காலிகத் தளவாயாகப் பணியாற்றினார். குமாரசாமிப் பிள்ளை நாஞ்சில் நாட்டார் படைகளின் தலைமை…
-
- 5 replies
- 11.4k views
-
-
முல்லைப் பெரியார் அணை பற்றிய விவரணையை தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறையைச் சார்ந்த மூத்த பொறியாளர்கள் குழுமம் ஒளிப்படமாக வெளியிட்டுள்ளனர்..முள்ளியை வேதனையுடன் கண்ட நாம் முல்லையையும் காண்போமே..அதே மனநிலையில்... (தலைப்பில் இருந்த சிறிய எழுத்து பிழை திருத்தப்பட்டது: நிழலி)
-
- 59 replies
- 14.7k views
-
-
2011: மன்மோகன் சிங் என்ன ஒரு வீழ்ச்சி! மெத்தப் படித்தவர். 1990-களில் இந்தியா அழிவின் விளிம்பில் இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களால் காத்தவர். இடதுசாரிகளுக்கு மட்டும் இவர், சர்வதேச நிதியத்தின் கையாள், அமெரிக்க உளவாளி, இந்தியாவை விற்கும் கயவன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. நியாயமானவர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முதுகெலும்பே இல்லாமல், நாளுக்கு நாள் அவமானப்பட்டுக்கொண்டு, ஏன் இன்னமும் சோனியாவைக்காக்க முற்படுகிறார்? ஊழலில் தோய்ந்த அமைச்சரவை, யாரும் இவரது அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை, பெயரளவுக்கு ஒரு பிரதமர். உலகம் மதிக்கிறது, சொந்த நாட்டில் மட்டும் மதிப்பில்லை. 2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் விவகாரங்களுக்குப் பிறகு, இ…
-
- 2 replies
- 1.1k views
-
-
2008, 2009 ஈழமண்ணில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற உருக்கமான பதிவான உச்சிதனை முகர்ந்தால் என்ற படத்தை எவ்வாறேனும் முடக்கிவிடுவதென்ற முயற்சிகள் தமிழகத்தில் தொடர்கின்றன. இந்த முயற்சியில் படத்தை வெளியிடுவதாக ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கும் பங்கு இருக்குமோ என்ற ஐயம் இருக்கின்றது. திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதிலும், ஊடகங்களில் அதை விளம்பரப்படுத்துவதிலும் படத்தின் விநியோகத்தினரான ஜெமினி நிறுவனம் செய்த குழறுபடிகள் முதற்சுற்று வெற்றியை கடுமையாக பாதித்திருப்பதாகத் தெரிகிறது. பல தொலைக்காட்சிகள் விளம்பரத்தை ஒளிபரப்ப மறுத்துவிட்டதாகவும், பல திரையரங்குகள் படத்தை திரையிட மறுத்து விட்டதாகவும் ஜெமினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரி சைபீரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்ய தூதரை தொடர்புகொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்னையை தீர்க்க இந்தியாவுக்கு உதவும்படி வேண்டு கோள் விடுத்திருந்தார். அவரும் உதவிசெய்வதாக உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக சைபீரிய நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. http://www.saritham.com/?p=45610
-
- 3 replies
- 1.1k views
-
-
இன்று பிற்பகல் கண்ணகி சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி முல்லை பெரியாறு காக்க பல்லாயிரம் பேர் கலந்து கொண்டடனர் . மாபெரும் பேரணியை மக்கள் போராளி வைகோ தலைமை ஏற்று வழி நடத்தினர் . இதில் தமிழர் நலனில் அக்கறை கொண்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர் . இந்த ஆர்பாட்டத்தை மே 17 இயக்க திருமுருகன் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார் . காணொளி மிகவிரைவில் இணைக்கப்படும். இப்போராட்டத்தின் போது பாரதிராஜா பேசுகையில், ‘’முல்லைபெரியார் அணை பிரச்சனை பற்றி நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்? ’’ என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும், ’’தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை கைவிடவேண்டும். தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்று கோரிகை வைத்தார். ‘’தமிழர்கள் இனியும் …
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் நலன்சார் அடிப்படையில் இலங்கை மீது தலையிடுகின்ற சர்வதேசத் தரப்புக்களை எவ்வாறாக நோக்குகின்றன என்பதைக் கடந்த பத்தியில் தெரிவித்திருந்தேன். அப் பத்தியில் சிங்களத் தேசியவாதமானது இலங்கையில் உள்ள தமிழ்த் தேசம் மற்றும் இந்தியாஇமேற்குலகு உள்ளிட்ட தரப்புக்களை எவ்வாறாக எதிரிகளாகக் கருதுகின்றது என்பதைதையும் விளக்கியிருந்தேன். தமிழ்த் தேசத்தினைப் பொருத்தளவில் அது இயல்பாகவே பக்கம் சாரக் கூடிய அதிக வாய்ப்புள்ள தரப்புக்களாக இந்தியாவும் மேற்கு நாடுகளாகவுமே உள்ளன. இந்தியாவுடன் தமிழ்த் தேசம் சார்ந்து கொள்வதற்கு, இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசத்துடன் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொண்டுள்ள பிணைப்பே வாய்ப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று மேற்க…
-
- 0 replies
- 702 views
-
-
இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி ரஷ்ய அரசு பெரும் பாலான இந்துக்களின் புனித நூல் என்று சொல்லப்படும் பகவத்கீதையை தடைசெய்துள்ளது. சைபீரிய நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது ரஷ்ய அரசு. இந்தியா, ரஷ்யா இடையே பல் வேறு ஒப்பந்தங்களைச் செய்யும் விதமான அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.globaltam...IN/article.aspx
-
- 11 replies
- 1.9k views
-
-
இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லை என்றிருந்த ரஷ்யா கூட இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தை யார் தக்கவைத்துக் கொள்வது என்கிற போட்டியில் களமிறங்கியுள்ளது. தென் சீனக் கடற்பரப்பிலேயே தனது ஆளுமையை வைத்திருந்த சீனா, தற்போது இந்தியாவிற்கு சவால்விடும் வகையில் அதனுடைய பகுதிகளை அண்மித்த நாடுகளான சிறிலங்கா, பர்மா, பங்களாதேஸ், நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளை தனக்கு சார்பாக்கி பல வேலைத் திட்டங்களை செய்து வருகிறது. இந்திய, அமெரிக்க அரசுகளுக்கு கவலையை அளித்த செய்தி கடந்த வாரம்தான் கிடைக்கப்பெற்றது. ஒரு மாத காலத்திற்கு மேலாக இ…
-
- 0 replies
- 521 views
-
-
சசிப்பெயர்ச்சிப் பலன்கள்! இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்வரை இப்படியொரு அறிவிப்பை அம்மையார் வெளியிடவில்லை. ஆகவே, நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கினேன். உடன்பிறவா சகோதரி சசிகலா உள்ளிட்ட பதினான்கு பேரைக் கட்சியை விட்டு நீக்கிய அறிவிப்பு வெளியானபோது அதிமுகவினர் அத்தனைபேருமே தங்கள் கைகளைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நம்பமுடியாத அறிவிப்பு. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும், அறிவித்தவர் அம்மா என்பதால்! ஒவ்வொரு கட்சியிலும் நம்பர் டூ என்ற அலங்காரப் பதவி ஒன்று இருக்கும். ஆனால் அதற்கான அதிகாரங்கள் அனைத்தும் இன்னொருவரிடம் இருக்கும். உதாரணம் : திமுகவில் பேராசிரியர் அன்பழகன் வகிக்கும் பதவி. கட்சிப் பதவியைப் பொறுத்தவரை அவர்தான் நம்பர் டூ. ஆனால் உண…
-
- 0 replies
- 908 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான மூன்றாவது பாராளுமன்ற அமர்வு டிச-14 புதன்கிழமை அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. நான்கு நாள் அமர்வாக இடம்பெறவுள்ள இந்தப பாராளுமன்ற கூட்டத் தொடரில் சுதந்திர தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான பல்வேறு விடயங்கள் கலந்தாய்வு செய்யபட இருப்தோடு நா.த.அரசாங்கத்தின் நேசநாட்டு பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். பல்வேறுவழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ள இந்த பாராளுமன்ற அமர்வு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையின் முழுவிபரம்…
-
- 7 replies
- 5k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் மாபெரும் பொதுக்கூட்டம் Date: 2011-12-18 at 5:00 pm Address: ஐயப்பன் ஆலய மண்டபம், 635 Middlefield Road, Scarborough, ON Canada Fee: - Details: நாடுகடந்த தமிழீழ அரசின் மாபெரும் பொதுக்கூட்டம் நாடுகடந்த தமிழீழ அரசின் மூன்றாவது அமர்வு
-
- 1 reply
- 863 views
-
-
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி வடக்கில் நடத்திவரும் தனிக்காட்டு ராஜ்ஜியம் , கையகப்படுத்தல் மற்றும் சொத்தக்குவிப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாளுமன்றில் காரசாரமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அரச காணியொன்றை ஆக்கிரமித்து, சுமார் 10 கோடி ரூபா செலவில் தனக்கென சொகுசு மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். இந்த மாளிகையைச் சுற்றியிருந்த மதில் சுவரையும் அவர் இடித்து அப்புறப்படுத்தியுள்ளார். முன்னாள் இராணுவத்தளபதியான ஆளுநர், மற்றவர்களின் சொத்துகளை இவ்வாறு அழித்து அவ்விடங்களில் பெரும்பான்மை மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. பொதுமக்கள் இருப்பிடம் இன்றித் தவிக்கையில…
-
- 0 replies
- 5.2k views
-
-
அமெரிக்க-இந்திய உறவுக்குள் உடையும் சீனாவின் முத்துமாலை -இதயச்சந்திரன் சீன அரசின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல்களின் பிரகாரம், இலங்கையுடனான பொருளாதார வர்த்தகமானது 2.1 பில்லியன் டொலர்களை கடந்த வருடம் எட்டியுள்ளதெனக் கூறப்படுகிறது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிதி நெருக்கடிக்குள் சிக்குண்டு இருப்பதால், சீனாவின் முதலீடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அதிகரிக்கிறது. ஆகவே, ஆசியாவிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, மியன்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளைக் குறிவைத்தே சீனாவின் நகர்வுகள் அமைகிறதெனலாம். இருப்பினும் துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் இந்தியாவைச் சுற்றி முத்துமாலை தொடுக்கும் சீனாவின் வியூகத்தை உடைக்கும் முயற்சியினை, இ…
-
- 3 replies
- 1.5k views
-
-
மாவீரர் நாள் 2011 டென்மார்க் மாவீரர் நாள் டென்மார்க்கில் கேர்ணிங் கொள்பேக் நகரங்களிலுள்ள பிரமாண்டமான மண்டபங்களில் நவம்பர் 27ம் நாளான்று நடாத்தப்பட்டன. எங்கள் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு பொதுச்சுடரேற்றத்துடன் ஆரம்பமானது. ஆயிரமாயிரமாய் மாவீரர்களின் குருதியில் போற்றியகாவிய நாயகர்களின் கொடியாகிய தமிழீழத்தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது எதிர்வரும் மாவீரர் நாளில் தமிழீழத் தனியரசு ஏற்போம் என்ற உறுதிமொழியுடன் மாவீரர்களின் பெற்றோர்கள்; நண்பரகள்; உறவினர்கள் காவிய நாயகர்களின் கல்லறைக்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினர்கள். இதனைத் தொடர்ந்து மாவீரர் கானங்கள் நடனங்கள் நாடகங்கள் என நிகழ்ச்சிகள் தொடர்ந…
-
- 6 replies
- 2k views
-
-
GTV நேரடி ஒளிபரப்பு http://www.tubetamil.com/view_video.php?viewkey=e524005bc1a8e8101fa3&page=33&viewtype=&category=
-
- 3 replies
- 1.2k views
-
-
வணக்கம் எம் இனத்திற்காகவும், எம் மண்ணுக்காகவும், தமிழீழ தேசியத்தின் விடிவிற்காகவும் தமது உயிர்களை ஈந்த எம் மாவீர செல்வங்களக்காக மாவீரர் நாள் பணிமணை திறப்பு விழா நிகழ்வு நவம்பர் 05ம் நாள் சனிக்கிழமை இடம் பெறும். இன் நிகழ்வு கனடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் 2011 நிகழ்வு சம்பந்தமான தகவல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் மையமாக மாவீரர் நாள் பணிமனை திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் திறப்பு விழாவிற்கு கனடாவில் வதியும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், பொது மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். இன் நிகழ்வினை கனடியத்தமிழர்களினாலும் மாவீரர் நாள் செயல்பாட்டுக் குழுவினரினாலும் மேற்படி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நீங்களும் இ…
-
- 53 replies
- 5k views
-
-
-
- 0 replies
- 818 views
-
-
சமீபத்தில் இணையத்தில் “மோசசு சோனி” (Moses Jony) என்பவர் பனைமரம் தமிழர்களின் அடையாளம் என்று பதிந்து இருந்தார். அது என்னுள் உறங்கி கொண்டிருந்த அதை பற்றி கடந்த காலங்களில் நான் படித்து தெரிந்து கொண்ட விடயங்களை ஆழ்ந்த மையலில் இருந்து தட்டி எழுப்பி விட்டது. அந்த அன்பருக்கு எனது நன்றிகள். பனை மரத்திற்கும் தமிழர்களின் நாகரீகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தமிழ் தேசியம் பேசுகிற போலியான பல அன்னகாவடிகளுக்கு தெரியாத விடயம். பனைமரத்தையும் அதை ஒட்டிய வரலாற்று உண்மைகளையும் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. பனை மரம் என்பது ஒரு மரம் என்ற அளவில் நின்றுவிடாது பண்டைய தமிழர்களின் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவு சார்ந்த கூறுகளை தனது முதுகில் தூக்கி சுமந்த ஓடம். பனையேறும் தொழில் ஏதோ க…
-
- 0 replies
- 2.3k views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரிலேயே நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பில் மறுப்பறிக்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் நாணய மதிப்பு 3 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதனை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் வரவேற்றுள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தையும் பொருளதாரத்தையும் மேம்படுத்த இந்த நாணய மதிப்பிறக்கம் ஏற்படுத்தும் என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப்பிரதிநிதி கோசி மாத்தாய் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தலின் பேரில் இந்த நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டதாக இலங்;க…
-
- 1 reply
- 1k views
-
-
வருடங்கள் வெகுவாகவே உருண்டோடி விடுகின்றன. இக்காலகட்டத்தில் எதனை நாம் சாதித்தோம் எம்பதை வைத்தே அவ் வருடத்தின் வெற்றி, தோல்வியை நிர்மாணிக்க முடியும். தமிழீழ விடுதலையை மூச்சாக சுமந்து மாண்டவர்களின் கனவுகள் அனைத்தையும் சிங்கள ஏகாதிபத்திய அரசின் இராணுவ கட்டமைப்பு மே 2009-இல் அழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்தது. மாவீரர்கள் என்பவர்கள் மரணத்தையும் வென்றவர்கள் என்பதை சிங்கள அரசுகள் உணரவில்லை. புனிதமானவர்கள் எப்பொழுதுமே மக்களுடன் வாழ்வார்கள். அய்யன் வள்ளுவர், புத்தர் போன்ற மகான்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தாலும் அவர்களைப் பூசித்து வழிபடுகிறார்கள் பல கோடி மக்கள். ஆகவே இப்புனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக அவர்களின் குறிக…
-
- 0 replies
- 606 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
மாவீரர் தினம் 2011: தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் வெற்றியாண்டு வருடங்கள் வெகுவாகவே உருண்டோடி விடுகின்றன. இக்காலகட்டத்தில் எதனை நாம் சாதித்தோம் எம்பதை வைத்தே அவ் வருடத்தின் வெற்றி - தோல்வியை நிர்மாணிக்க முடியும். தமிழீழ விடுதலையை மூச்சாக சுமந்து மாண்டவர்களின் கனவுகள் அனைத்தையும் சிங்கள ஏகாதிபத்திய அரசின் இராணுவ கட்டமைப்பு மே 2009-இல் அழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்தது. மாவீரர்கள் என்பவர்கள் மரணத்தையும் வென்றவர்கள் என்பதை சிங்கள அரசுகள் உணரவில்லை. புனிதமானவர்கள் எப்பொழுதுமே மக்களுடன் வாழ்வார்கள். அய்யன் வள்ளுவர், புத்தர் போன்ற மகான்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தாலும் அவர்களைப் பூசித்து வழிபடுகிறார்கள் பல கோடி மக்கள். ஆகவே இப்புனிதர்கள்…
-
- 4 replies
- 905 views
-
-
கீழே எழுதப்பட்ட கடிதம் கனடாவில் குடியுரிமை பெற்று இப்பொழுது சிங்கள நாட்டில் வசிக்கும் தமிழரால் எழுதப்பட்டது. இரண்டு ஊடகங்களில் வெளியாகி உள்ளது, Lankaweb.com and Srilankawatch.com . கனடாவில் உள்ள கனேடிய தமிழர் பேரவையின் தலைவர் உமாசுதன் மற்றும் பேச்சாளர் பூபாலபிள்ளையையும் சந்தித்ததாகவும் அவர்களை 'நல்லிணக்க' நோக்கத்தில் வன்னியில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நண்பர் ஒருவரின் கருத்துப்படி இந்த நபர் கீழ்வரும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்புகள் கொள்ளுகிறார். rdkserendeepam@gmail.com, bishopthiagarajah@gmail.com and cfjrilr@yahoo.com கடிதத்தில் தனது பெயரை Victor annai விக்டர் அண்ணை அல்லது Richards Karunairajan என எழுதியுள்ளார். …
-
- 1 reply
- 1.2k views
-
-
பட்டைக்கிடங்கில் போட்ட கல்லான நோர்வே அறிக்கை.. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் இந்த அவலம் உலகிற்கு தேவையா..? இலங்கைக்குள் நோர்வே பேச்சுவார்த்தை தூதுவனாக போனபோது கடைசியில் நோர்வே படிக்கப்போகும் பாடம் இதுதான் என்று ஆரம்பித்த முதல்நாளே அலைகளில் எழுதியிருந்தோம். இந்த அவலம் வராமல் தடுக்க வேண்டுமானால் சிங்கள அரசு, இந்திய அரசு, விடுதலைப்புலிகள் பயணிக்க வேண்டிய புதிய பாதை எதுவென்று ஐ.பி.சியின் புலம் சஞ்சிகையின் முதாலவது இதழிலேயே எழுதியிருந்தோம். இவை பழைய கதை. இப்போது நோர்வேயின் அறிக்கை வெளியாகியுள்ளது, முறைப்படி பார்த்தால் அதைப்பற்றி புலம் பெயர் ஊடகங்கள் அதிகம் பேசியிருக்க வேண்டும் – பேசவில்லை. மேடைக்கு மேடை புலிகள் பற்றிப் பேசும் வை. கோபாலசாமி தன…
-
- 0 replies
- 662 views
-