நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
விடுப்பு மூலை: தடுப்பால வந்தவன் நந்தி முனி வன்னியப்பு ஆஸ்பத்திரிக்குப் போனவர். திரும்பி வரேக்க சைக்கிள் காத்துப் போயிற்று. கிட்ட இருந்த சைக்கிள் திருத்தும் கடைக்குள் நுழைந்தார். அங்கே கிளாக்கர் அமர்ந்திருந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு காத்துப்போயிற்று. திருத்துநர் யாரோ ஒரு பொடியனின் சைக்கிளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். வன்னியப்புவுக்கு அந்தப் பொடியனை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது. வன்னியப்பு யோசித்துக் கொண்டே கிளாக்கருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். திருத்துநர் பொடியனிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தார்.... கிளாக்கர் வன்னியப்புவைப் பார்த்து எதையோ சாடையால் உணர்த்தினார்... வன்னியப்பு: என்ன கிளாக்கர் அந்தப் பொடியன விடாமல் பார்க்கிறியள்... கிளாக்: ஓம…
-
- 0 replies
- 453 views
-
-
விடுப்பு மூலை: தேசியத் தொண்டு நந்தி முனி பல ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த நெருங்கிய உறவினர் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். 'காரைநகரில் நேவி நடாத்தும் ஒரு ஹொட்டல் இருக்கிறதாமே. அங்க குடும்பத்தோட போய் லஞ் எடுப்பமா?' என்று கேட்டார். நானும் அந்த ஹொட்டலைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனான். அதை ஒருக்காப் பார்ப்பம் என்று தோன்றியது. எனவே, அவருடைய அழைப்பை ஏற்று போனோம்... கடற்காற்றில் சாப்பாடு சுமாராயிருந்தது... ஆனால் உறவினர் அமைதியிழந்தவராகக் காணப்பட்டார். அவர் சாப்பாட்டை ருசிச்சு ரசிச்சுச் சாப்பிடவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவாறு யந்திரத்தனமாகச் சாப்பிட்டார். பில் வந்தது. ஒவ்வொருவருக்கும் சுமாராக ஆயிரத்து ஐநூறு வரும். எனக்குத் திகைப்பாக இருந்தது. சாப்பிட்டது செமிக்காது …
-
- 4 replies
- 760 views
-
-
விடுப்பு மூலை: படம் பார்க்கப் போன தேசியர்கள் நந்தி முனி தேர் முட்டியடியில் ஓய்வூதியர்கள் வழமைபோலக் கூடினார்கள். அன்றைக்கு வன்னியப்புவோடு கிளாக்கரும், சிங்கள மாஸ்டரும் இருந்தார்கள். கிளாக்கர் 83 யூலை மட்டும் தென்னிலங்கையிலேயே இருந்தவர். நிறையச் சிங்களத் தொடர்புகள் உண்டு. பின்னாளில் தமிழர்களுடைய போராட்டத்தின் தீவிர விசுவாசியாக மாறியவர். சிங்கள மாஸ்டர் சிங்கள ஊர்களில் அரச ஊழியராக இருந்தவர். மூன்று மொழிகளிலும் புலமை கொண்டவர். ஒரு கலாரசிகர். சிங்களத் திரைப்படங்களோடு அதிகம் பரிச்சயமுடையவர். 83 யூலையோடு ஊருக்குத் திரும்பி இயக்கங்களில் மொழிபெயர்ப்பாளராயும் சிங்கள ஆசிரியராயும் இருந்தவர். அதனாலயே சிங்கள மாஸ்டர் என்று அறியப்பட்டவர். முதலில் கிளாக்கர் தான் கதையைத் தொடக்கினார். …
-
- 1 reply
- 1k views
-
-
விடுப்பு மூலை: புத்தாண்டுச் சந்தை நிலவரம் நந்தி முனி வன்னியப்பு வருசப் பிறப்புக்கு புது உடுப்பு போடவில்லை. சித்திரை வெய்யில் உச்சியைப் பிளந்தது. கள்ளுக் குடித்தால் குளிர்ச்சியாய் இருக்குமெண்டு தவறணைக்குப் போனார். அங்க பெரிய கடை முதலாளியும் தாக சாந்தி செய்துகொண்டிருந்தார்.... முதலாளி: வாங்கே அப்பு! கன காலத்துக்குப் பிறகு.... எங்க புது உடுப்பக் காணேல்ல? வன்னியப்பு: நந்திக்கடலால வந்தவனுக்கு வருசமும் இல்ல. பொங்கலும் இல்ல. முதலாளி: சரிதான். வன்னியால வந்தவைக்கும் வருசமில்ல. எங்களுக்கும் வருசமில்ல. தெற்கால வந்தனுக்குத்தான் இப்ப வருசம். வன்னியப்பு: என்ன சொல்ல வாறியள் எனக்கு விளங்கேல்ல? முதலாளி: இந்த முறை எங்களுக்கு யாவாரம் படுத்திட்டுது. தெற்கால வந்தனுக்குத்த…
-
- 1 reply
- 602 views
-
-
விடுப்பு மூலை: மெய்யான வணக்கம் நந்திமுனி மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. வன்னியப்பு சாய்மனைக் கதிரையில் படுத்திருந்தபடி வாசற்கேற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். பேப்பர் வாங்கப்போன பேரன் இன்னும் வரவில்லை. மாவீரர் நாள் புதினம் என்னவாயிருக்கும்? அப்பு பேரனுக்காகப் பார்த்துக் கொண்டிருந்தார்.... யாரோ கேற்றைத் திறக்கிறார்கள்... அதோ பேரன் வந்துவிட்டான். அப்பு: என்னடா மோனே இவ்வளவு நேரம்...? பேரன்: வழியில கம்பஸ் பொடியளக் கண்டனான் அதான்... அப்பு: என்னவாம்? பேரன்: உனக்கு ஒரு புதினம் தெரியுமே அப்பு...? கொமென் வெல்த்துக்காக அரசாங்கம் எலலாப் பல்கலைக்கழகத்துக்கும் குடுத்த லீவோட சேர்த்து எங்கட பல்கலைக்கழகம் மேலும் ஒரு கிழம லீவு குடுத்திருக்காம்...? அப்பு: அப்ப அது அரசாங்க…
-
- 1 reply
- 554 views
-
-
விடுப்பு மூலை: லாபம் தேசியம் நந்தி முனி மேலுலகத்தில் ஒரு மதுக் கடையில் சிவராமும் லசந்த விக்கிரமதுங்கவும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக்கொண்டார்கள். நாட்டில் ஜெனிவாக் காய்ச்சல் உச்சத்தில் நிற்கும் ஒரு காலத்தில் சந்திக்க நேர்ந்தது, அதுவும் மதுச்சாலையில் அப்பிடியொரு கொம்பனி கிடைத்தது. இருவருக்குமே ஆனந்தம்தான். சிவராம்: இருங்கோ லசந்த. என்ன குடிங்கிறீங்கள். லசந்த: நீங்கள் என்னத்துக்கு ஓடர் பண்ணினனீங்களோ அதையே குடிப்பம், அதையே சாப்பிடுவம். குடிக்கிறதவிட எதக் கதைக்கப்போறம் எண்டதுதான் இஞ்ச முக்கியம். அதுவும் இந்த நாட்களில. சிவராம்: உண்மைதான்... லசந்த: அப்ப சொல்லுங்கோ உங்கட பக்கம் என்ன புதினம்? சிவராம்: புதினமென்ன? ஊடகங்கள் தாற புதினத்தவிடவும் ஊடகங்கள் தான் ப…
-
- 0 replies
- 546 views
-
-
விடுப்பு மூலை: வன்னியிலிருந்து ஓர் அலைபேசி அழைப்பு நந்தி முனி இம்முறை மாசிப் பனி மூசிப் பெய்யவில்லை. எனினும், விடியப்புறம் எழும்ப மனமில்லாமல் சுருண்டு கிடந்தேன். அலைபேசி அலறியது. திடுக்கிட்டு எழும்பி யார் என்று பார்த்தேன். புதுக்குடியிருப்பில் இருந்து ஒரு சிநேகிதன் எடுத்திருந்தான். சிநேகிதன்: என்னடாப்பா நித்திரையை குழப்பிட்டனே? நந்திமுனி: இல்லை. பறவாயில்ல கத. சிநேகிதன்: என்ன புதினங்கள்? நந்திமுனி : ஒண்டுமில்ல. எல்லாம் வழம போலதான்... அது சரி அதென்ன பின்னணியில ஒரு இசைபோகுது? சிநேகிதன்: ஓ..அதுவா? அதுதான் பேக்கரிக்காரர்களின் தேசிய கீதம். நந்திமுனி: தேசிய கீதமோ. சிநேகிதன்: ஓம். பருத்தித்துறையில இருந்து தெய்வேந்திரமுனை வரைக்கும் ஒரே இசைதான். கொழும்பில…
-
- 0 replies
- 447 views
-
-
விடுப்பு மூலை: வலி தெரியாதவரின் அரசியல் நந்தி முனி வன்னியப்புவின் உறவினர் ஒருவர் இறந்து போய்விட்டார். வன்னியப்பு சாவீட்டுக்குப் போனார். ஐயர் இன்னமும் வரவில்லை. சனங்கள் ஆங்காங்கே வெற்றிலை பாக்குத் தட்டத்தை சுற்றியிருந்து வெற்றிலையோடு அரசியலை சப்பித் துப்பிக் கொண்டிருந்தார்கள். வன்னியப்பு இதில் எதிலும் இணைய விரும்பாது ஒதுங்கிப்போய் தனிய இருந்தார். ஆனாலும் பேப்பர் ரிப்போட்டர் அவரைக் கண்டுவிட்டார். கிளாக்கரும் கண்டு விட்டார். இருவரும் ஒரு வெற்றிலைத் தட்டத்தையும் தூக்கிக் கொண்டு அப்புவுக்கு அருகே வந்து குந்தினார்கள். ரிப்போட்டர் - என்னப்பு தனிய வந்து குந்திட்டீங்க அப்பு - உதுகளுக்குள்ள போயிருந்தா வெத்தலையோட அரசியலையும் சப்பித் துப்ப வேண்டியது தான். அது தான் தனிய வந்த…
-
- 0 replies
- 583 views
-
-
விடுப்பு மூலை: விக்கியும் கம்பவாருதியும் நந்தி முனி வன்னியப்பு வேட்டியை லோன்றியில் மினுக்கக் கொடுத்துவிட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பேப்பர் மாமா அந்தப் பக்கமாக வந்தார். பேப்பர் மாமா பல பத்திரிகைகளில் றிப்போட்டராக இருக்கிறார். ஒரு பழுத்த ஊடகவியலாளர். அப்புவைக் கண்டதும் அவர் சைக்கிளை நிறுத்தினார். பேப்பர் மாமா: என்னப்பு உதில குந்திக்கொண்டிருக்கிறியள்? அப்பு: வேட்டியை அயர்ன் பண்ண வந்தனான். பேப்பர் மாமா: வீட்டில பேரப்பிள்ளையள் அயர்ன் பண்ணாதே? அப்பு: செய்யலாம் தான். ஆனா கறன்ற் பில் எகிறுதே. ஒவ்வொரு 30 யுனிற்றுக்குப் பிறகு கறன்ற் பில் ரொக்கற்றைப் போல ஏறுதே? அதைவிட இஞ்ச அயர்ன் பண்ணலாம். பேப்பர் மாமா: அதுவும் சரிதான்... வேற என்னப்பு புதினம்? …
-
- 2 replies
- 610 views
-
-
விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார் காரை துர்க்கா / 2019 நவம்பர் 12 எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும். 1983ஆம் ஆண்டு, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா - புலிகளுக்கு இடையிலான போரும், மீண்ட…
-
- 0 replies
- 562 views
-
-
விடைகாணமுடியாத மரணச்சான்றிதழ் பிரபாகரன் தான் என்று காட்டிய உடல் முன்னுக்குப்பின் முரண்பட்டு மக்களுக்கே சந்தேகத்தைக் கிளப்பியது சிங்களம் தான். முதல்முறை கண்கள் மூடி இருந்தன. பின்னர் யாரும் சாகும்போது அப்படி முளித்துக்கொண்டு சாவானா? சீனாவில் தயாரிக்கப்பட்ட முகமூடி. உக்கிரமான சண்டை நடக்கும்போது நந்திக்கடலருகே பிரபா சவரம் செய்து கொண்டிருந்தாரா? அப்படி உடல் கிடைத்திருந்தால் சிங்களம் உடலைக் கொழும்பிற்கு கொண்டுவந்து மக்களைப் பார்வைக்கு விட்டு காகத்தைப்போல் கொண்டாடியிருப்பார்கள். இருக்கின்றார் என்று சொல்லும் ஒரு சாரார். இல்லாவிட்டாலும் உடம்பு கிடைக்கவில்லை என்பது உறுதி. டிஎன்ஏ சோதனைகூட செய்யவில்லை. ஏன்? எப்படிக் கொடுப்பது மரணசான்றிதழ்? நாளை பிரபா உயிருடன் வந்தால…
-
- 7 replies
- 1.5k views
-
-
இது சரித்திரத்தில் ஒரு வியப்பு மிக்க தருணம். பிரித்தானியாவின் அரச குடும்பத்திலிருந்து வில்லியமும் கேம்பிரிட்ஜின் சீமாட்டியும் வில்லியமின் மனைவியுமான கேட், நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி மண்டேலா மற்றும் பல அரசியல், திரைத்துரைப் பிரபலங்கள் செங்கம்பள வரவேற்பில் வரவேற்கப்பட்டு, இரண்டு வாரங்களிற்கு முன்னர் தென்னாபிரிக்காவில் வெளியாகிய பிரித்தானிய ஆபிரிக்கத் தாயாரிப்பான ‘LONG WALK TO FREEDOM’ எனும் திரைப்படத்தின் சிறப்பு முதற்காட்சியைக் காண்பதற்காகத் தயாராகவும் ஆவலுடனும் காத்திருக்கின்றார்கள். தந்தை உடல் நலத்துடன் உள்ளதாக ஜிண்ட்சி மண்டேலா விருந்தினர்களிற்குத் தெரிவிக்கின்றார். அங்கு இத்திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்த பிரபல நடிகர் Idris Elba மற்றும் அவரது மனைவியான …
-
- 0 replies
- 603 views
-
-
விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள் சே குவேரா…,பல பேர் இவர் யாருன்னே தெரியாம அவர் படம் போட்ட பனியனோடு சுத்துவதைக் காணமுடியும். சே வரலாறு என்பதைப் பார்ப்பதைவிட அவரது சொற்கள் துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்றவை என்பதைப் பார்க்க வேண்டும். சே -வின் குரல் – எல்லா மனிதருக்கும் மனிதம், அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும். நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைனன். நான் யாருக்கும் குறையாத லத்தீன் அமெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வித்தியா கொலை வழக்கு: தடயப்பொருளை பயன்படுத்திய பொலிஸ் பரிசோதகர்- விசாரணைகள் ஆரம்பம் யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். தடயப் பொருளாக மோட்டார் சைக்கிள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படாமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்…
-
- 0 replies
- 405 views
-
-
யப்பான் நாட்டைச் சேர்ந்த மாயா ஜால வித்தைக்காரன் ஒருவர் ஐ-பாட் ஐ பயன்படுத்தி ஏராளமான மாயா ஜாலங்களை தலைநகர் டோக்கியோவில் கடந்த முதலாம் திகதி மேற்கொண்டார். இவை மிகவும் புதுமையானவையாகவும், வித்தியாசமானவையாகவும் பார்வையாளர்களுக்கு பட்டன. படங்களைப் பாருங்கள். http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1296684524&archive=&start_from=&ucat=1&
-
- 2 replies
- 5k views
-
-
இசைப்பிரியாவின் வல்லுறவுப் படுகொலையில் பெருக்கெடுத்தோடிய குருதியைக் காணமறுத்த மனிதர்கள்:- 31 May 2015 at 14:46 யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு தெற்கில் உள்ள பல்வேறு சமூகக் குழுமங்களையும் பாதித்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், அது தெற்கில் வழமையாக வழங்கிவரும் “எதிர்ப்புக் கலாசாரத்தின் ” மற்றோர் அங்கமே என்று யாரேனும் கூறுவார்களெனில், அதனை அப்படியே ஒப்புக்கொள்வதற்கு முன் அவர்கள் தத்தமது மனசாட்சியை ஒருதரம் தொட்டுப்பார…
-
- 2 replies
- 1.5k views
-
-
விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன் தேசம்நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தனது அறுபதாவது வயதில் யூன் 4 பிரான்ஸில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவ்வாறான ஒரு போராளியின் மறைவையொட்டி ஒருசாரார் இரங்கலைத் தெரிவிக்க இன்னுமொரு சாரார் அவரின் மரணத்தை ‘துரோகத்தின் பரிசு’ என்று எள்ளி நகையா…
-
- 2 replies
- 449 views
-
-
வினவண்ணாவுக்கு அட்வான்ஸ் மன்னிப்புக் கடிதம்! தினமலரின் காசுவெறி - காமவெறி! - வினவு http://www.vinavu.com/2012/08/24/dinamalar-sucks/ <கேரளாவைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை செகாநாத் என்று தினமலர் குறிப்பிடுகிறது. மற்ற பத்திரிகைகள் சகானாஸ், சகானா என்றும் அழைக்கின்றன.> அப்படி என்றால் தினமலர் தவிர மற்ற பத்திரிகைகள்தாம் அந்தப்பெண்ணை மதரீதியாக அடையாளம் காட்டுவதில் முனைப்பாய் இருக்கின்றன என்றல்லவா பொருள்படுகிறது. இப்படி சேம்சைட் கோல் போடுவதற்கே மார்க்ஸ் எங்கல்ஸ் மாவோ என்று எவ்வளவு படிக்கவேண்டி இருக்கிறது. புரட்சிகர வாழ்க்கை நடத்துவதுதான் எத்துனை சிரமமானது? <மற்ற பத்திரிகைகள் காதல் வலையில் இளைஞர்களை வீழ்த்திய கேரள அழகி என்பதாக முடித்துக் கொள்…
-
- 0 replies
- 1k views
-
-
மும்பை கடற்படைத் தளத்தில் விபத்துக்குள்ளான ஐஎன்எஸ் சிந்துரக்சக் (INS Sindhurakshak) நீர்மூழ்கிக் கப்பல் 1997ம் ஆண்டு ரஷ்யாவில் கட்டப்பட்டதாகும். டீசல் என்ஜினால் இயங்கும், 283 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவின் மிகப் பிரபலமான போர் கப்பல்களை கட்டும் செவ்மாஸ்க் (Sevmask) தான் உருவாக்கியது . மணிக்கு 31 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கடியில் 300 மீட்டர் வரை மூழ்கும் திறன் கொண்டது. இந்த நீர்மூழ்கியில் 200 கி.மீ. வரை சென்று போர்க் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்ட கிளப் எஸ் (Klub-S) வகையிலான ஏவுகணைகளும், சாம் வகை ஏவுகணைகளும், நீரில் மூழ்கிச் செல்லும் டார்பிடோ ரக ஏவுகணைகளும் உண்டு இந்தியா உருவாக்கிய USHUS hydro-acoustic ரக சோனார் உதவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
விமர்சனங்களை விடுத்து செயலாற்ற வேண்டிய தருணமிது
-
- 0 replies
- 359 views
-
-
விக்கினேஸ்வரன் கஜீபன் பிபிசி தமிழுக்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தடை பட்டிருந்த யாழ்ப்பாணம் - இந்தியா இடையிலான விமான சேவை 41 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் ஒத்து…
-
- 0 replies
- 589 views
-
-
கடந்த மாதம், 29-ம் திகதி எகிப்து நாட்டை சேர்ந்த “எகிப்து ஏர்” என்ற பயணிகள் விமானம், அதே நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு, விமானக் குழுவினர் உள்பட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களுடன் புறப்பட்டபோது மர்ம நபர் கடத்தியது நினைவிருக்கலாம். பிறகு சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டு பயணிகள் விடுவிக்கப்பட்டனர். விமானத்தைக் கடத்திய சயிஃப் அல்தின் முஸ்தஃபா, சைப்ரஸ் நாட்டில் தஞ்சமடைய கடத்தியதாகவும், சைப்ரஸில் உள்ள தன் முன்னாள் மனைவியைச் சந்திக்க வேண்டி கடத்தியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த அப்து அல்லாஹ் இ ஆஸ்மாவி என்ற 31 வயதுடைய அறுவை சிகிச்சை நிபுணர், அந்த விமானப் பயண அனுபவத்தை…
-
- 0 replies
- 456 views
-
-
சிஎன்என் தமிழில் வீரகேசரி இணையம் ஈரானில், யுத்தம் குறித்த அச்சங்களிற்கு மத்தியில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் ஈரான் ஜனாதிபதி 1988 இல் இடம்பெற்ற சம்பவத்தை உலகம் மறக்ககூடாது என வேண்டுகோள் விடுத்தார். 1988 ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலொன்றின் தாக்குதலில் 290 பேருடன் பயணித்த ஈரானின் விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவத்தையே அவர் நினைவுகூர்ந்தார். ஈரானின் எயர்பிளைட் 655 எனும் எயர்பஸ் 300 ரக விமானம் 290 பேருடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை அமெரிக்காவின் யுஎஸ்எஸ் வின்செனஸ் என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை அந்த விமானத்தை தாக்கியது. 1988 ம் ஆண்டு யூலை 3 ஆம் திகதி துபாயிலிருந்து ஈரானிற்கு பாராசீக வளை…
-
- 1 reply
- 981 views
-
-
வியாழேந்திரன் ஏமாற்றப்பட்டாரா?; இன்று மட்டக்களப்பு செல்கிறார்! November 6, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அண்மையில் கட்சி தாவி, மஹிந்த அணயை ஆதரிப்பாக அறிவித்துள்ளார் சதாசிவம் வியாழேந்திரன் எம்.பி. மட்டக்களப்பில் அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று அவர் மட்டக்களப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கட்சி தாவியதால் மட்டக்களப்பில் அவருக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தனக்கு நெருக்கமானவர்களை இன்று மந்திராலோசனைக்காக அழைத்துள்ளார். இதேவேளை, கட்சி தாவ வைக்கப்பட்டு தம்மை ஏமாற்றி விட்டார்கள் என வியாழேந்திரன் தரப்பு உணர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வியாழேந்திரன் தரப்பிலிருந்த சிலர் இது குறித்து ஓரளவு வெளிப்படையாக தமது அதிருப்தியை பதி…
-
- 0 replies
- 409 views
-
-
ராஜன்கூல், கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகியோர் 2007ம் ஆண்டிற்கான மாட்டின் இன்னல்ஸ் (Martin Ennals) விருதுக்கு தெரிவாகியுள்ளார்களாம். :P :angry: ஆனந்த சங்கரிக்கு பன்னிக்கு யுனெஸ்கோ விருது கொடுத்திச்சு.. இப்ப அடுத்தது... :angry: Rajan Hoole and Kopalasingham Sritharan (Sri Lanka). As co-founders of the UTHR(J), they have addressed human rights abuses by both the government and the Tamil Tigers (LTTE). At great personal risk they have reported on the effects of armed conflict on children, women, minorities and displaced persons. Often alone in exposing abuses by all parties, both men are under death sentences from the LTTE, and their co-founder, Rajani Thirana…
-
- 36 replies
- 7k views
-