Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்? Johnsan Bastiampillai / 2020 ஜூன் 06 , அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செ…

    • 1 reply
    • 418 views
  2. தொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்? : மனோ விளக்கம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஏன் செல்லவில்லையென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார். மனோகணேசனின் பதிவு வருமாறு, நண்பர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போது நான் ஒரு வெளிநாட்டு ராஜதந்திரியுடன் உரையாடலில் இருந்தேன். செய்தி கேட்டதும் உடனேயே தலங்கம மருத்துவமனைக்கு ஓடினேன். ஏன் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துமனைக்கு கொண்டு செல்லவில்லை என நினைத்துக்கொண்டேன். நான் போனபோது நான் மட்டும்தான் முதல் எதிர்கட்சிகாரனாக இருந்தேன். அப்புறம் ஒரே ஆளும்கட்சி கூட்டம். பிரதமர் வ…

  3. நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காதவன் எல்லாம் யாழ் நூல் நிலையம் எரித்ததை நினைவு கூர்கிறான் என ஒருவர் கிண்டலாக எழுதியிருந்தார். என்னடா இது? இந்த மகிந்த ராஜபக்சாவின் விசுவாசிக்கு ஏன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து பார்த்தேன். 1981ம் ஆண்டு எரிக்கப்பட்டதை இப்பவும் தமிழர்கள் நினைவு கூர்கிறார்களே என்பதைவிட இம்முறை வழக்கத்தைவிட அதிகளவில் நினைவு கூர்கிறார்களே என்ற எரிச்சல் அது என்பதை புரிந்து கொண்டேன். ஆம். உண்மைதான். இந்த கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் …

  4. கனேடிய பிரதமரின் நீண்ட மௌனத்தின் பின்னான வார்த்தைகள். அமேரிக்க நிலைமைகள் குறித்து என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு, நீண்ட மௌனத்தின் பின், லாவகமாக கையாண்டார் கனேடிய பிரதமர். https://www.bbc.co.uk/news/av/world-us-canada-52900486/george-floyd-protests-trudeau-s-epic-pause-when-asked-about-trump-s-response

    • 0 replies
    • 412 views
  5. •எப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை சிறிலங்கா மக்கள் பெற்றிருக்கிறார்கள்? இரவில் ஊரடங்கு சட்டம்போட்டுவிட்டு பகலில் ஊரடங்கை ஜனாதிபதி தளர்த்தினார். இதன் மூலம் பகலில் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தார். வெள்ளவத்தையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்த ஜனாதிபதி பக்கத்து ஊரான பம்பலப்பிட்டியில் ஊரடங்கை தளர்த்தினார். இதன்மூலம் கொரோனா எந்தெந்த இடங்களில் வரும் என்பதையும் ஜனாதிபதி அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல இறந்தவர்களுக்கு தமிழர் நினைவு அஞ்சலி செலுத்தினால் கொரோனா வரும் என்பதையும் ஆனால் கொழும்பில் போர் வெற்றிவிழா கொண்டாடினால் கொரோனா தொற்று ஏற்படாது என்பதையும் ஜனாதிபதி அறிந்திருக்கிறார். இறுதியாக, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மற்றவர்களுக்குதான் மாஸ…

    • 1 reply
    • 1.4k views
  6. -சுபத்ரா இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்துடன் முறைப்படியான கலந்துரையாடல்களை ஆரம்பித்த கடந்த 26ஆம் திகதி- பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் (Muhammad Saad Khattak) யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். எந்த முன்னறிவிப்பும் இன்றி, பெரிதாக வெளிப்படையான எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், அவரது இந்தப் பயணம் இடம்பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குச் சென்று, பாடசாலை அதிபரைச் சந்தித்து, கிரிக்கெட் மட்டைகள், பாடசாலைப் பைகள் போன்றவற்றை அன்பளிப்புச் செய்திருக்கிறார். யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து, கோட்டையைச் சுற்றிப் பார்வையிட்டிர…

  7. தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது. கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொந்தளித்துள்ளது. சமீபகாலமாக, அமெரிக்காவின் போர்க்கப்ப…

  8. செளமியமூர்த்தி தொண்டமான் , ஆறுமுகன் தொண்டமான் மரபை பேணி பாதுகாக்க மகன் ஜீவன், மருமகன் செந்திலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பாராத மரணம் இ.தொ.கா.வின் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. சிங்கள பெரும்பாண்மைவாத கட்சிகளின் ஆதிக்கத்தினுள் உள்ள இலங்கை அரசியல் முறைமையின் ஊடாக வெற்றிகரமாக பயணம் செய்வதற்கு ஆறுமுகனைப் போன்று துணிச்சலும் அரசியல் செயல் நோக்கும் ஆற்றலும் கொண்ட ஒரு தலைவரை இ.தொ.கா. கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு போட்டிக் குழுக்களாக பிளவுப்பட்டு போகாமல் இ.தொ.கா வை ஒற்றுமையாக வ…

    • 0 replies
    • 555 views
  9. விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்றே தோன்றியது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வயதானாலும் தனது உயிர் இருக்கும் வரை மீண்டும் ஒருமுறை விடுதலைப்புலிகள் அமைப்பு தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிங்கள சமூக வலைத்தள ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்த…

  10. தமிழ்த் தேசிய அரசியல்- தாயக மக்களின் சுயமரியாதை- ஊடகத்துறையை மலினப்படுத்தும் youtube தளத்தில் இயங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாத நிலையில் ஊடக அமைப்புகள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையின் தொழிற்தகுதி (Professional Qualification) மேம்படுத்தும் நோக்கில் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் ஆகிய ஊடக அமைப்புகள் பெரும் முயற்சியை எடுத்திருந்தன. குறிப்பாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் பதிவு இலக்கம் இன்றி எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்துறைப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவராகப் பணிபுரிய முடியாது. அதேபோன்று சட…

    • 0 replies
    • 848 views
  11. குடியரசு நாடுகளில் உள்ள பிரதமரோ அதிபரோ மக்களின் மனநிலையை உதாசீனப் படுத்த முடியாது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து இந்திய அரசு நாட்டின் புது வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தில் காலாபானி என்னும் பகுதி இருப்பதைக் கண்டு நேபாள மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதற்காக நேபாள மக்கள் தங்கள் நாட்டு அரசின் மேல் தங்களுக்கு இருந்த கோபத்தை வெளிப்படுத்தினர். அதனால் நேபாள அரசு இந்திய அரசு வெளியிட்ட இந்த வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதிலிருந்து இந்திய அரசுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஓர் அழுத்தம் நேபாள அரசுக்கு வந்தது. இந்தியாவிலிருந்து சீனா வரையிலான சாலை ஒன்றை லிபுலேக்கில் அமைக்கத் தொடங்கியது இந்தியா. …

  12. தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ் ஹோர்தா தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது …

    • 6 replies
    • 851 views
  13. மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை - கல்வி அமைச்சர் டலஸ் உயர்தர பரீட்சை விடயத்தில் மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாத ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது. மாணவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுக்கவே மாட்டோம். அதனை நான் உத்தரவாத படுத்துகின்றேன். வடக்கின் கல்வி நெருக்கடியை சரியாக தீர்க்க முடியாவிடின் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளுக்கான வசதியின்மை என்பனவற்றை தீர்க்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்று அழைப்பு விடுப்பதாக அமைந்துவிடும் வடக்கு கிழக்கு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை வசதிகள் இன்மை என பல குறைபாடுகள் நிலவுகின்றன. எந்தப் பிரச்சினையுமின்றி ஜூலை மாதம் மூன்றாம் வாரத்…

  14. ட்ரம்ப் வழியில் கோத்தா... இலங்கைப் படையினருக்கு எதிராக அநீதியான முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அழுத்தம் கொடுப்பதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்ளவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லவில் நடந்த போர் வீரர்கள் நாள் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கிறார். இந்தமுறை போர் வெற்றி நாள் நிகழ்வுகளை அரசாங்கம் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்ததில் இருந்தே, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ப…

  15. சமகால இலங்கையின் சமூக – பொருளாதார - அரசியல் – தளத்தில் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளைஎதிர்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. அரசியல் ரீதியாக இச்சவால்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் நாளாந்தம் அருகிவருகின்றன. எண்ணிக்கை அடிப்படையில் எமது அரசியல் பலம் என்பது சுமார் பத்து சதவீதமானது மட்டுமே. கடந்தகாலத்தில் இப்பலத்தினைக்கொண்டு நாம்நிறைய வேசாதித்திருக்கின்றோம். அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவ்வப்போது கைகூடியிருந்தது. ஆனால் அந்தநிலை தொடர்ந்தும் நிகழப்போவதில்லை.சமூகத்தளத்தில் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஒருசிறுபான்மை சமூகம் என்றவகையில் நமது பொறுப்புக்களைநாம் உணர்ந்து செயற்படவேண்டிய தேவையிருக்கிறது…

    • 0 replies
    • 484 views
  16. தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேரையில் தெரிவித்துள்ளார். கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந…

    • 0 replies
    • 563 views
  17. நீங்கள் பயிற்சி பெற்றதை ஏற்றுக் கொள்ளுங்கள் – முஸ்லிம் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் May 21, 2020 மூன்று முஸ்லிம் பிள்ளைகளிடமிருந்து கட்டாயப்படுத்தி ஆதாரங்களை பெற்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் அல் சுஹ்ரியா அரபுக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்களது முஸ்லிம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தங்களை காவல்துறை அதிகாரிகள் என அழைத்துக்கொண்டு ஒரு குழு பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை தனியாகப் பிரித்து தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அச்சுறுத்தியுள்ளனர். எங்களிடம் ஒரு …

  18. தமிழ் மக்களின் புரையோடிப்போன தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் யாவும் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள், எந்த வகையிலும் சாத்தியமற்ற போக்குகளையே எடுத்துக் காட்டுகின்றன. இதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், நீதியையும் இழப்பீடுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வதற்கும், நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும், சர்வதேச …

    • 0 replies
    • 488 views
  19. மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது? கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார். குழம்பிப்போன ஆசிரியர், மறுநாள் மாணவரின் வீட்டைத் தேடிப்போனார். அம்மாணவர், மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார். அவர்களிடம் கணினியோ, திறன்பேசியோ கிடையாது. குறித்த மாணவரிடம் பேச முயல்கிறார்ளூ மாணவர் வெளியே வந்து, ஆசிரியர…

  20. கொடிய போரினால் வன்னிப் பெருநிலப் பரப்பில் உயிர்நீத்த உறவுகளே! இன்று மே 18. நீங்கள் உறக்கம் கலைந்து உங்கள் உறவுகளின் வருகைக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மண்ணில் காத்திருப்பீர்கள். அத்தனை உறவுகளும் உங்களைச் சந்திக்க முடியாத கால சூழல் இப்போது இருக்கிற தாயினும் உங்கள் நினைவோடு ஏற்றப்படும் நினைவுச் சுடர் தரும் ஒளியில் நாங்கள் அனைவரும் சங்கமிப்போம். பதினொரு ஆண்டுகள் நிறைவாகி விட்டன வாயினும் உங்கள் உயிர் பறிப்புக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அந்தோ! இன்றுபோல் இருக்கிறது எங்களைக் காப்பாற்றங்கள் என்று நீங்கள் இரு கரம் உயர்த்தி உலகத்திடம் கேட்டது. மனித உரிமைகள் பற்றியும் சமத்துவ வாழ்வு பற்றியும் மாநாடு வைக்கும் உலகம் ஈழத் தமிழினத்தின் விடயத்தில் மட்டும் மெ…

  21. அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் பேசிக் கொள்வதுண்டு. அதேநேரம் அரசியலின் இயங்குநிலை காரணமாகப் பலரும் அரசியலை வெறுக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு அரசியல் குறித்து மக்களிடையே எழுந்த அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்காக கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலிப் பத்திரிகையில் ஒரு விளக்கக் கட்டுரையை வரைந்தார். அதில் அரசியல் பிழையன்று. அரசியலில் ஈடுபடுவோர் சிலர் அறமின்றி நடந்து கொள்வ தால் அஃது அரசியலுக்கு இழுக்கைத் தந்து விடுகிறது. மற்றும்படி அரசியல் செம்மைப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் வாழ்வு செழுமை பெறும். எனவே மக்கள் அரசியலை ஒதுக்காமல் அரசியலுக்குப் பொருந்தாதவர்களை ஒதுக்க வேண்டும் எனக் கருத்துரைத்தார். கலைஞர் கருணாநிதி வரைந்த விளக்கம் மீது ஈழத் தமிழ் மக்க…

    • 0 replies
    • 438 views
  22. பி.மாணிக்கவாசகம் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறிய பதினோராம் ஆண்டின் நினைவு தினமாகிய இன்றைய தினம் வழமையைவிட இம்முறை விசேட கவனத்தைப் பெறுகின்றது. முள்ளிவாய்க்காலில் மனித குலத்திற்கு எதிரான வகையில் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ஆயுதப்படைகளுக்குத் தலைமை தாங்கிய அதிகாரம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தருணத்தில் இந்த நிகழ்வு நினைவுகூரப்படுகின்றது. இதுவே இந்தத் தினத்தின் விசேட அம்சமாகும். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த காலத்தில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் அவலத்துயரம் அரங்கேற்றப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2014 வரையில் 5 ஆண்டுகள் முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவுகூர்வதற்கு அந்த அரசு அனுமதிக்கவில்லை. முள்ளிவாய்க்காலின் ஊழிக்கா…

    • 0 replies
    • 845 views
  23. தமிழர் தாயகத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட போர் பூமிப்பந்தின் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரும் பேரவலத்தினை ஏற்படுத்தியிருந்தது. 2009ஆம் ஆண்டு மே 18இல் ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டதாக கூறினாலும், முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய மனிப் பேரவலங்கள் ரணமாகியுள்ளன. அவலக்குரல்களும், அழுகை விழிகளும், அன்புக்குரியோரின் பிரிவுகளும், அகதி அவலங்களும் ஆண்டுகள் பதினொன்றாகியும் அனைவர் உளத்திலும் அகலாது உறைந்திருக்கின்றன. அஞ்சலிகள் ஆண்டுதோறும் நடைபெற்றாலும் ஆத்மாக்களின் சாந்திக்கான நியாயமான நீதி எட்டாக்கனியாகவே இருக்கின்றது. அதற்கான பயணங்களும் செல்வழியின்றி முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மற்றுமொரு நீதிக்கான எதிர்பார்ப்புடன் நகர்கி…

    • 0 replies
    • 490 views
  24. குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள் -ப.பிறின்சியா டிக்சி பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன. அவ்வாறின்றேல், காற்றறுத்துக் கொண்டு போய்விடுவதும் மின்கம்பிகளில் சிக்கிக் கருகிவிடுவதும் கூட நிகழ்வதுண்டு. இந்தப் பட்டங்களை வானில் ஏற்றி, காற்றில் மிதக்க வைப்பதென்பது, பெரும் சிரமமான காரியமாகும். இது ஊரடங்கு காலம்; பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்றிருக்கும் காலமிது. அதில், வீடுகளுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் சிறார்கள், எப்போது வெளியில்…

  25. ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கிய பதவிகள் தற்போது ராணுவத்தினர் வசமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது நாட்டை ராணுவமயமாக்கும் முயற்சி என்று அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தாலும், பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக இந்த நியமனங்கள் குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் பதவிக்கு வந்தபின் அவருக்கு கீழுள்ள பல பதவிகளுக்கு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கையின் பல பதவிகளில் ராணுவத்தினர் பதவி வகிக்கின்ற நிலையில், சுகாதார அமைச்சின் முக்கிய பதவியான ச…

    • 0 replies
    • 551 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.