நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
கொரோனா வைரஸ் உருவானதா?, உருவாக்கப்பட்டதா?- வெளியானது தகவல்! கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை எனவும் பலரும் சொல்வதுபோல் இது மனிதன் உருவாக்கியது அல்ல என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு குழப்பமான கருத்துகள் உலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை எட்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 2 இலட்சம் பேரை இந்நோய் தாக்கியுள்ளது. இந்த சூழலில் சமீப நாட்களாக இந்த வைரஸ் சீனாவின் ஒரு ஆய்வு நிறுவனத்திலிருந்து உருவானதாகவும் அது வேண்டுமென்றே பரப்பப்பட்டதாகவும்கூட கருத்துகள் கூறப்பட்டன. ஆனால், அமெரிக்க விஞ்ஞானிகள் இதனை மற…
-
- 7 replies
- 1.2k views
-
-
அம்பாறையில் மிகவும் திட்டமிட்டவகையில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி மாவட்டத்தில் நடந்துமுடிந்த கலவரங்கள் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், மறந்துபோனதனை மீட்டுப் பார்பதுதான் இந்த கட்டுரையாகும். கண்டி மாவட்டத்தில் முற்றாக எரிக்கப்பட்ட தங்கள் வியாபாரத் தளங்களை மீளவும் கட்டியெழுப்பும் பணிகளை முஸ்லிம் வர்த்தகர்கள் துவங்கியபோது முதற்கட்டமாக அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், இழப்பீட்டினை மதிப்பீடு செய்ததன் பின்பு உரிய நிவாரண உதவிகளைச் செய்வதாகவும் அறிவித்திருந்தது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட இந்த இழப்பீட்டு தொகையானது எரியூட்டப்பட்டதை சுத்தப்படுத்தும் வேலைக்கே போதாமலிருந்தது. அன்று பல பள்ளிவாசல்கள் முழுமையாகச் சேதமடைந்…
-
- 0 replies
- 287 views
-
-
பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 மார்ச் 18 , கொவிட்-19 எனப்படும், தற்போது உலகை உலுக்கும் நோயின் மரண வீதம், ஆபிரிக்காக் கண்டத்தின் சில நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய, ‘எபோலா’ எனப்படும் நோயின் மரண வீதத்தைப் பார்க்கிலும், மிகவும் குறைவானதாகும். ‘எபோலா’ தொற்றியவர்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமானவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், ‘கொவிட்-19’ தொற்றிவர்களில் மூன்று சதவீதமானவர்களே மரணமடைகின்றனர். ஆனால், ‘கொவிட்-19’ பரவும் வேகத்தைப் பார்க்கிலும், உலகளாவிய ரீதியில், அதைப் பற்றிய பீதி பரவும் வேகம், மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. ‘கொவிட்-19’ நோய் பரவும் வேகம், ஏனைய எந்தவொரு நோய் பரவும் வேகத்தைப் பா…
-
- 0 replies
- 315 views
-
-
தினச் செய்திகளை கேட்கும் போது கொரோனா குறித்த விடயங்கள் முக்கிய இடத்தினை வகிக்கும் நிலையில் இது எமது பிரதேசத்தினை தாக்கினால்? எனும் மனதில் தோன்றிய எதிர்காலம் குறித்த வினாவுக்கு பதிலாக தற்போது எமது மனங்களில் எழும் கேள்வி என்னவென்றால் இந்த வைரஸ் எம்மை எப்போது தாக்கப்போகின்றது? என்பதேயாகும். அந்தளவுக்கு கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது. தினமும் புதிதாக பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்திகள், இவ் வைரஸானது ஓர் சமூகத் தொற்றின் விளைவு என்பதனை எடுத்தியம்புகின்றது. எனவே இது இலங்கையர்களாகிய எமக்கு எதனை உணர்த்துகின்றது, எவ்வாறான தயார்படுத்தல்களை கோரி நிற்கின்றது? மருத்துவத் துறைக்கு அப்பால் உள ரீதியாகவும் பலமாக இருக்கவேண்டிய அவசியத்தினை இத…
-
- 0 replies
- 369 views
-
-
நூறு வருடங்களுக்கு முன் முகக்கவசம் அணிய வைத்த ஸ்பானிஷ் காய்ச்சல்": இன்னொரு கொரோனாவா? அதிர்ச்சிக்குள்ளாக்கும்புகைப்படங்கள் ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒருமுறையும் பேரழிவை ஏற்படுத்தும் நோய்கள் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சான்று பகிரும் வகையில் 1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சலின் பாதிப்புகளுடன் எம் கண்முன் அரங்கேரி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புகளும் உள்ளன. ஸ்பானிஷ் காய்ச்சலானது, முதல் உலகப்போருக்குப் பின்னர் தோன்றியதுடன் இந்நோய் விரைவாக பரவி உலகளாவிய ரீதியில் 20 மில்லியனுக்கும் 50 மில்லியனுக்கும் இடைபட்ட உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இது முதன்முதலில் ஸ்பெயினில் கண்டறியப்பட்டது, எனவே இதற்கு ஸ்…
-
- 1 reply
- 522 views
-
-
கொரோனா வைரஸ் ஆபத்தானதாக இருந்தாலும் இது குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்ைககள் மூலம் பாதுகாப்புப் பெறலாம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள் தும்மும் போதும், இருமும் போதும் உடலிலிருந்து ‘கொரோனா’ வைரஸ் வெளியேறுவதால், ஏற்கனவே வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும். அதன் மூலம் ‘கொரோனா’ வைரஸ் உடலிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியும். அதேவேளையில், ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். ஏற்கனவே ‘கொரோனா’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களைக் கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொள்பவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்காக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கண்கள், மூக்கு, வாய் ஆகிய பக…
-
- 0 replies
- 798 views
-
-
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி விட்ட போதும், அந்தச் செய்திகளை விட மக்களிடம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருப்பது கொரோனா வைரஸ் தான். கடந்த வியாழக்கிழமை 22 மாவட்டச் செயலகங்களில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஆரம்பித்து விட்டன. வழக்கத்தில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கினால், ஊடகங்களில் அதுபற்றிய செய்திகளே முதன்மை பெற்றிருக்கும், எந்தக் கட்சி எந்த இடத்தில், எந்தக் கட்சியில் எந்தெந்த வேட்பாளர்கள் என்ற விலாவாரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும். வாசகர்களும், அத்தகைய செய்திகளை தேடிப்பிடித்து வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், கடந்தவாரம் நடுப்பகுதி வரையில் முதலாவது கொரோனா நோயாளி இ…
-
- 0 replies
- 558 views
-
-
உலகின் இருதயங்களை துண்டாடும் கொரோனா: தீபச்செல்வன் மனிதன் தனித்து வாழ முடியாத காரணத்தினால்தான் குடும்பம் என்ற அலகாகவும் சமூகம் என்ற நிறுவனமாகவும் வாழத் துவங்கினான். மனிதனுக்கு உணவும் உறையுளும் எப்படி முக்கியமோ அப்படித்தான், சக பாடிகளும் ஜோடிகளும் உறவுகளும் முக்கியமானவர்கள். மனிதர்களுக்கு உறவின் தீணியாக, உணர்வின் தீனியாக சக மனிதர்கள் தேவைப்படுகின்றனர். உலகம் இந்த கூட்டிணைவின் புள்ளியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித நாகரிகங்களும் வாழ்க்கையும் இந்தப் புள்ளியில் புதிய உலகை படைத்துக் கொண்டிருக்கின்றது. கிறிஸ்துவுக்குப் பிற்ப்ட்ட இந்த உலகத்திற்கு 2020 வருடங்கள் வரலாறு. இந்த வரலாறு முழுவதும் பல்வேறு கொள்ளை நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேரழிவுகளும் நடந்திருக்கி…
-
- 0 replies
- 440 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரன்.? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய அரசியலமைப்புப் பற்றிய விவாதங்கள் பல இடங்களிலும் அமர்க்களமாக நடந்தன. ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்குள்ளிருக்கும் அபாயத்தைப்பற்றிய கடுமையான – சர்ச்சைக்குரிய விவாதங்கள் அவை. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களே தடுமாறும் அளவுக்கு அந்த விவகாரம் அதிக சங்கடத்தைக் கொடுத்திருந்தது. ஏனென்றால் அந்த அரசியலமைப்பு விவகாரம் நிறைவேற்றப்படாத ஒரு சரக்கு என்பதை மறைப்பதற்கு இட்டுக்கட்டப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உண்மைபோலாக்குவதற்காக ஒரு சீரியஸ் தன்மையைக் கூட்டமைப்பு உருவாக்கியிருந்தது. இதற்காக நடந்த விவாதங்களில் சும…
-
- 3 replies
- 613 views
- 1 follower
-
-
நைஜீரிய விடுதலைப் போராட்டத்தில் ஈழப் பெண் போராளி: கவல்கணன். பெண் போராளிகள் எங்கே? மாதர் தினம் என்றதும் பெண் விடுதலை பற்றி பலரும் பேச ஆரம்பித்து விடுவார்கள். பெண் விடுதலை பற்றி பேசுவதை விட விடுதலைக்காகப் போராடிய பெண்கள் பற்றிப் பேசினால் என்ன என்று எனது சிந்தனையில் ஒரு போராட்டம். அந்தத் தேடலின் பதிவு தான் இது. சிறு வயதிலிருந்து விதைக்கப்படும் சிந்தனைகள் தாம் நாம் வளர்ந்த பின்னர் எம் நடத்தையினை முடிவு செய்கின்றன என்று நம்புபவன் நான். “வீண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை” என்று சொல்லி வளர்த்தால் வளர்ந்த பின் அந்த ஆண் பிள்ளை தான் என்னவும் செய்யலாம் என்று சிந்தப்பதைத் தடுக்க முடியாது தானே. “கற்காலத்தில் ஆண்வேட்டையில்ஈடுபட,பெண்உணவுசேகரிப்பதிலும், குழந்தைகளைக…
-
- 0 replies
- 558 views
-
-
உலகை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலிருந்து உருவானதாக சீன வெளியுறவுத்துறை அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி மக்களைக் கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுகானில் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அங்குதான் வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சீனாவிலிருந்துதான் வைரஸ் பரவியது என்பதற்கான உண்மையான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கொரோனா இந்நிலையில், அமெரிக்க ராணுவம் கொரோனா வைரஸை சீனாவில் பரப்பியிருக்கலாம் என்று சீன உயர் அதிகாரி ஒருவர் பக…
-
- 0 replies
- 420 views
-
-
கொரோனாவை பாண்டமிக் எனப்படும் உலகளாவிய நோய் தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பாண்டமிக் என்றால் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம். உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த கொரோனா 6 ஆயிரம் பேரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் பாண்டமிக் வகையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக வைரஸ் பரவுதலை எண்டமிக், எபிடெமிக் மற்றும் பாண்டமிக் என 3 வகைகளாகப் பிரிக்கலாம். இதில் எண்டமிக் என்பது காலவரையின்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பரவக் கூடிய வைரஸ் வகைகளாகும். அம்மை மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் இதில் அடங்கும். இரண்டாவதாக குறிப…
-
- 2 replies
- 1.6k views
-
-
"எம்.பிக்களின் எண்ணிக்கை அவசியமில்லை": உரிமைகளை கேட்க தைரியமும் அக்கறையுமே தேவை- சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு நேர்காணல் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது * ரணிலை விட சில விடயங்களை ஜனாதிபதி கோத்தாபயவிடம் எதிர்பார்க்கலாம் * எமது பிரசாரங்கள் மூன்று அடிப்படைகளில் அமையும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றால் அது தவறான எண்ணமாகும். சரியான சந்தர்ப்பத்தில் நிபந்தனைகளுடன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் திடமாகவும் கொள்கை பிடிப்போடும் கேள்வியெழுப்பும் திராணி கொண்ட ஒருவர் அல்லது இருவர் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலே போதுமானது. அவ்வாறானவர்கள…
-
- 0 replies
- 272 views
-
-
2 ஆம் கட்ட மரண ஆட்டத்துக்குத் தயாராகிறது கொரோனா! அமெரிக்கா எச்சரிக்கை! | COVID-19
-
- 0 replies
- 239 views
-
-
நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இங்கு வாழும் பல இன மக்களது வாழ்விலும் துன்பங்களை விட்டுச் சென்றுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் துன்பங்களில் வாழ்ந்து வருகின்றனர். இழப்புக்களை அதிகம் சந்தித்தவர்களாக முல்லைத்தீவு மக்கள் வாழ்கின்றனர். நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீள்குடிேயற்றப்பட்ட நிலையில் தமக்கு ஏற்பட்டஇழப்புகளை ஈடுசெய்ய முடியாது திண்டாடுகின்றனர். அங்கவீனர்களாகியவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பலர் தமது இளமை வாழ்வைத் தொலைத…
-
- 1 reply
- 259 views
-
-
உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடூர வைரஸ். சமீபத்திய ஆண்டுகளில் மக்களை கொன்று குவித்த பெரும்பாலான தொற்று நோய்கள், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி மக்களை காவு வாங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உருவான பெரும்பாலான உயிர்கொல்லி வைரஸ்கள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தான் உருவாகியுள்ளன. தற்போது உலக மக்களை மரண பீதியில் வைத்துள்ள COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ், ஆசியாவின் முக்கிய நாடான சீனாவில் உருவானதாக நம்பப்படுகிறது. வரலாற்றில் அவ்வப்போது தொற்றுநோய்கள் வந்து கூட்டம் கூட்டமாக மனிதர்கள் மாண்டு போவது நடக்க கூடியதே என்றாலும் கூட, தற்போது இந்த அபாயம் மிகவும் அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் கொரோனா வைரஸ்கள…
-
- 1 reply
- 567 views
-
-
பன்மொழி கலைஞர் செல்வி அனு சிவலிங்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * பன்மொழி கலைஞர் தோழியர் அனு சிவலிங்கம் வன்னியை சேர்ந்தவர். போர் சூழல்லால் சின்னவயசில் அவரது குடும்பம் கொழும்புக்கு புலம்பெயர்ந்தது. அங்குதான் தமிழ் சிங்களம் ஆங்கிலமென மும்மொழி புலமையும் பெற்றார், ஜனநாயக ஆர்வலரான பன்மொழிக் கவிஞர் அனு சிவலிங்கத்தின் தமிழ் சிங்கள புலமையும் சமூக அக்கறையும் மலையக மக்கள்மீதன கரிசனையும் எனக்கு அனுமீதான பெருமதிப்புக்குக் காரணமானது. வன்னி மண் வன்னி மற்றும் மன்னார் மக்களதும் வன்னி முஸ்லிம்களதும் குடியேறிய (1950பதுகளின்பின்) யாழ்ப்பாணதமிழரது வம்சாவழியினரதும் குடியேறிய மலையகத் தமிழரதும் பூமியாகும். எங்கள் குட்டித் தோழி அனு வன்னியை சேர்ந்தவர். எவ்வித சமரசங்களுமற்ற ஜனநாயக வாதியான…
-
- 0 replies
- 509 views
-
-
‘கோவிட் 19’ கொரோனா வைரஸின் அச்சம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரட்சி என்பன தற்போது மக்களை சோதனைக்குள் தள்ளியிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், எட்டாவது பாராளுமன்றம் கடந்த 2ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்டு 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது இதன் பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தவுள்ளன. 9ஆவது பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்யவுள்ள நிலையில் அரசியல் கட்…
-
- 0 replies
- 245 views
-
-
பாராளுமன்றத் தேர்தல் வரப்போவது உறுதியாகியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ்ப்பாணத்தில் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பெரியளவிலான கருத்தரங்கு நடத்தப்பட்டது. வடமராட்சி, வலிகாமம், தென்மராட்சி என பிரதேச ரீதியாகவும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கெல்லாம், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தான், பிரதான பேச்சாளராகப் பங்கேற்று வருகிறார். கருத்தாளர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்தார். பிறர் மீது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் தவறவில்லை. அதேவேளை, தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்படப் போகிறது என்பதை, யாழ்ப…
-
- 0 replies
- 220 views
-
-
அறிவியல் சாதனையினால் வெல்ல முடியாத சவால்! இதுவரை காலமும் உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் உள்ள நாட்டில் தடிமன் ஏற்பட்டால், உலகமே தும்மத் தொடங்கும் அவலத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான நோய்த் தொற்று இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பை எதிர்கொள்வதற்காகத் தனது வட்டி வீதத்தை அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைத்திருக்கிறது. ஏற்கனவே 0.5% வட்டி வீதக் குறைப்பை அவுஸ்திரேலியா அறிவித்து விட்டது. ஜி-7 என்று அழைக்க…
-
- 1 reply
- 938 views
-
-
முன்னாள் மைத்திரி – ரணில் அரசு 2015 ஆம் ஆண்டு ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையில் ஏற்றுக்கொண்ட 30/1 ஆம் 34/1 ஆம் 40/1 ஆம் பிரேரணைகளுக்கு இணை அனுசரணையிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவே இப்போது கோத்தபாய – மஹிந்த அரசு அங்கு கூறியிருக்கிறது. அதற்குப் பின்வரும் காரணங்களையும் கூறியிருக்கிறது. 30/1ஆம் 34/1ஆம் 40/1ஆம் பிரேரணைகள் இலங்கையின் யாப்புக்கு எதிரானவையாகும். அவை இலங்கையின் இறையாண்மையையும் மீறுகின்றன. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி பெறாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அதற்கு அப்போதைய அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறப்படவும் இல்லை. அதைப் பாராளுமன்றத்தில் அறிவிக்கவும் இல்லை. இவற்றால் ஜனநாயக விழுமியங்கள் மீறப்பட்டிருக்கின்றன. இதை இலங்கைய…
-
- 0 replies
- 334 views
-
-
லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 02 பிற்பகல் 04.15) மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியை தழுவிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அன்று கூட்டணி சேர்ந்து இருந்த கட்சிகளை விடவும் குறைந்த அளவான கட்சிகளைக் கொண்டு 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி இன்று கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சிகளில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ராதாகிருஷ்ணன் …
-
- 1 reply
- 222 views
-
-
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு தேர்தல் களம் சூடாகி விட்டது. தாம் தயார் செய்த வேட்பாளர் பட்டியல்களை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் அறிவிக்கவுள்ளன. இவை நாடளாவிய ரீதியான பொதுவிடயம். மாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் தேர்தல் களம் எவ்வாறாக இருக்கும் என்று ஆராய்ந்தால், முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் இறங்கவுள்ளன. இவ்வாறு தமிழர் தாயகத்தில் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கன்னை பிரிந்து பிர சாரம் செய்யும்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்வதான நிலைமைகள் உருவாகும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு அப்பால், ஊடகங்கள் கூட தத்தம் சார்புநிலைகளை அறம் பிழைத்து வெளிப்படுத்த ம…
-
- 1 reply
- 322 views
-
-
படத்தின் காப்புரிமை SAJITH MEDIA Image caption சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த புதிய கூட்டணியொன்று நேற்று (திங்கட்கிழமை) உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது. கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப்…
-
- 1 reply
- 657 views
-
-
இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதற்கு விசேட கூட்டத்தொடர் ஒன்றை நடத்துமாறு இணை அனுசரணை வழங்கிய நாடுகளிடத்தில் கோருவதே பாதிக்கப்பட்ட தரப்புக்கு உடன் காணப்படும் நடைமுறைச்சாத்தியமான வழியாகும் என்று; தமிழர் இயக்கத்தின் அனைத்துலக வெளியுறவுத்துறைக்கான ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ தெரிவித்தார்.; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள அவர் ஜெனீவாவிலிருந்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்தார் அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,; கேள்வி:-ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் வலுவற்றதொன்றாகும் என்று …
-
- 0 replies
- 222 views
-