நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
இன்னுமொரு இனக்கொலைக்கு தூண்டுதலா - வ.ஐ.ச.ஜெயபாலன். இந்திய நாடாளுமன்றத்தில் திரு டி ஆர் பாலு “விடுதலைப் புலிகளால் சோனியாவுக்கு ஆபத்துள்ளது” என்று ஒரு பாதகமான அபாண்டத்தை தெரிவித்தது மீண்டும் ஒரு இனக்கொலையை தூண்டும் முயற்சியா? இந்தியாவையும் ஈழத் தமிழரையும் பிழவு படுத்தும் முயற்ச்சியா? விடுதலைப் புலிகள் இன்னும் இயங்குகிறதா? அது குறித்த தலைவரை இலக்கு வைக்கிறதா? இந்த தகவல் டி.ஆர்.பாலுவுக்கு எங்கிருந்து கிடைத்தது? இது தீமுக வின் சம்மதத்துடன் தெரிவிக்கப்பட்டதா? திரு.ஸ்டாலின் இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?” இது அரசின் முந்தைய தகவல் என்றால் இப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையென்ற அரசின் நிலைபாட்டை ஏன் தி.மு.க ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவரின் பாதுகாப்பை வ…
-
- 4 replies
- 756 views
-
-
இலங்கை ஆதிக்குடிகள்: 200 ஆண்டுகள் பழமையான வேடர்களின் மண்டை ஓடுகள் ஒப்படைப்பு.! தங்களது வசமிருந்த இலங்கையை சேர்ந்த பழங்குடிகளின் ஒன்பது மண்டை ஓடுகளை அவர்களது வழித்தோன்றல்களிடம் எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்துள்ளது. இலங்கையிலுள்ள வேடர் இனத்தைச் சேர்ந்த இந்த மண்டை ஓடுகள் 200 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் சேகரிப்பின் அங்கமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இந்நிலையில், இந்த ஒன்பது மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த விழாவில் வேடர் இனத்தின் தலைவர் வன்னியா உருவாரிகேவிடம் ஒப்படைக்கப்பட்டது. "எங்களது இனத்தில் இறந்தவர்களு…
-
- 0 replies
- 310 views
-
-
சிசிர பின்னவல (DAILY NEWS) இந்து சமுத்திர பிராந்தியத்தில் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்பட வேண்டும். நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் இல்லை. எனினும் எந்தவிதமான அச்சுறுத்தலையும் முறியடிக்க அரசு தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் சுமார் பத்தாண்டு காலத்துக்கு தேசிய பாதுகாப்புக்கு இலங்கையில் முன்னுரிமை தரப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு முதலில் அச்சுறுத்தல் ஏற்பட்டது 1962 இல் ஆகும். அப்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க பாதுகாப்புப் படையினரைக் கொண்ட ஒரு குழு முயற்சி செய்த போதே முதலாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்…
-
- 0 replies
- 255 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவாரென ஜனாதிபதித் தேர்தலின் போது ஆரம்பத்திலேயே தெரியவந்தது. சூழலைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தி தனது தேர்தல் பிரசாரங்களுக்கு போஸ்டர், பொலித்தீன் என்பவற்றை அவர் பாவிக்கவில்லை. இதனை ஏனைய வேட்பாளர்களும் பின்பற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் தனது அரசியல் மேடையை ஏனைய வேட்பாளர்கள் மீது சேறு பூசுவதற்காக பாவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தனது எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையே மக்களுக்குத் தெரிவித்தார். தேர்தல் போட்டிக்கு முகம்கொடுத்து எதிராளியைத் தோற்படிப்பது அரசியலில் இடம்பெறும் சிறப்பு விடயமாகும். அதற்குப் பதிலாக அதிகாரத்திலிருந்த கட்சி பலவிதமான தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்தது. அது கோட்டாபயவை தேர்தலில…
-
- 0 replies
- 617 views
-
-
கோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா? அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 29-ம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லிக்க…
-
- 1 reply
- 304 views
- 1 follower
-
-
இலங்கையில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லப்போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவித்தார். இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில், சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய …
-
- 5 replies
- 730 views
- 1 follower
-
-
நியுஸ் இன் ஏசியா இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை , இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மிகவும் உறுதியாகவுள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது. நவம்பர் 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த பெரும்பான்மை சிங்களவர்கள் இலங்கை ஜிகாத் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலின்கீழ் உள்ளது என்ற அச்சத்தின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சியடைவது குறித்தஅச்சத்தின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதும், முடிவடைந்துள்ள தேர்தல் வாக்களிப்பின்போக்கைஅடிப்ப…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போலத் தான் இன்றைய தமிழர்களின் நிலைமை ஊசலாடுகிறது. ஆண்ட தமிழினம் என்ற வீர வலாற்றை கொண்ட எம்மினம், இன்று அடிமைகளாகவும் உடமைகளை இழந்தவர்களாகவும் அடிப்படை உரிமைகளுக்கே மற்றவர்களிடம் கையேந்துபவர்களாகவும் மாறியிருப்பது காலத்தின் கொடுமையாகும். நேற்று முன்தினம் இரவு கேகாலை எட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் பதிவான சம்பவமே, இன்று தமிழ் மக்களிடத்தில் இவ்வாறான எண்ணங்களையும் ஆதங்கத்தையும் மனக்கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர். வாக்குரிமை என்பது ஜனநாயக உரிமை. வாக்குரிமை என்பது முறைகேடானவர்களை தண்டிக்கும…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று, முன்னாள் ராணுவ அமைச்சரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ளார். 2020-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Narendra Modi ✔ @narendramodi புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @GotabayaR அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன். -…
-
- 1 reply
- 813 views
-
-
இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்? 8 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆக…
-
- 0 replies
- 745 views
- 1 follower
-
-
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்குத் துரோகம் செய்யாதவாறு வந்துள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் கோத்தபய ராஜபக்ஷே, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவை 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ஷே பொறுப்பேற்றிருக்கிறார். ராஜபக்ஷே குடும்பத்தில், மகிந்த ராஜபக்ஷேவுக்குப் பிறகு இலங்கை ஜனாதிபதி ஆகியிருக்கும் இரண்டாவது நபர் கோத்தபய ராஜபக்ஷே. தமிழர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு இலங்கையில் சஜித்தும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள தென்னிலங்கையில் கோத்தபயவும் முன்னிலை பெற்றிருக்கின்றனர். இலங்கைத் தேர்தல் தொடர்பா…
-
- 0 replies
- 669 views
-
-
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்ட நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். 1949 ஜூன் 20ம் திகதி மாத்தறை, பாலட்டுவவில் பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தண்டினா திஸாநாயக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பத்தில் உள்ள 9 பேரில் இவர் ஐந்தாமவர். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயின்ற கோட்டாபய 1971 இல் இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார். அவரது இராணுவ சேவையின் போது பாதுகாப்புக் கல்வி தொடர்பான முதுமாணி பட்டத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றார். அத்துடன் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உயர் பயிற்சிகளைப…
-
- 0 replies
- 376 views
-
-
என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 18 , மு.ப. கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட, ஆனால், முன்னரிலும் அந்த அதிகாரங்கள் சற்றே மட்டுப்படுத்தப்பட்ட, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு விட்டார். வாக்களிப்புப் பாணியை அவதானிக்கும் சிலர், கோட்டாபய, சிங்களவர்களால் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்று கருத்துரைப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மெய்யர்த்தத்தில், ‘சிங்களவர்களால் மட்டுமே’ என்பது, மிகைப்படுத்தல் எனினும், யதார்த்தத்தில் சிறுபான்மையின வாக்குகளின் ஆதரவின்றியே, கோட்டா வெற்றிபெற்றிருக்கிறார் என்பது வௌ்ளிடைமலை. இது, சில மாதங்களுக்கு முன்னர், சிறுபான்மையினரே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள் என்ற மாயை தொடர்பில், நான் எழுதியிருந்த…
-
- 1 reply
- 2.6k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ள அவருக்கு, 52.25 சதவீத பெருவெற்றி கிடைத்திருக்கிறது. அநுராதபுரத்திலுள்ள வரலாற்றுப் பெருமை மிக்க புனிதத் தலமான ருவான் வெலிசயவில் வைத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று திங்கட்கிழமை பதவியேற்றுக் கொள்கின்றார் கோட்டாபய ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 55,64,239 ஆகும். இத்தேர்தலில் 41.99 சதவீத வாக்குகளே அவருக்குக் கிடைத்துள்ளன. நீதியாகவும் நேர்மையாகவும், எதுவித…
-
- 0 replies
- 382 views
-
-
- இலைஜா ஹூல் - ஜனவரி 9, 2015 காலையில் மனதில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு. ஒரு வித அமைதி. சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் ஒரேயிரவோடு விலகியது போன்ற தோற்றம். மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்று போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருந்தார். இரவு பூராகவும் நான் வானொலிப் பெட்டியில் தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பாரிய சுமையொன்றை இறக்கி வைத்ததைப் போன்ற நிம்மதியை நான் அன்றை காலை உணர்ந்தேன். ஒரு நாடாக நாம் கொடியதோர் தசாப்தத்தைத் தாண்டி விட்டதாக நான் நம்பினேன். சமத்துவமும், சமாதானமும், நியாயயும் நிறைந்த சமூகமொன்றை நாம் கட்டியெழுப்புவோம். கடந்த ஆட்சியில் பொதுமக்கள், ஊடகவியலாளர், முரண் சிந்தனை கொண்டோருக்கு எதிராகக…
-
- 0 replies
- 460 views
-
-
இலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ், கொழும்பிலிருந்து 10 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைOLEKSII LISKONIH / GETTY நவம்பர் 16ஆம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்கள் அந்நாட்டிற்கும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலா…
-
- 2 replies
- 479 views
- 1 follower
-
-
RI LANKAN ELECTION - MY OPINION - V.I.S.JAYAPALAN இலங்கை தேர்தல் - இந்துவில் என் கருத்தது. - வ.ஐ.ச.ஜெயபாலன் . Sri Lanka elections: In the south, hopes on Gotabaya run high - Meera Srinivasan- . , https://www.thehindu.com/news/international/sri-lanka-elections-in-the-south-hopes-on-gotabaya-run-high/article29947009.ece#comments_29947009 . Jaya Palan . More and more Sinhalese voters are supporting Gotabaya. But this is not a News. The very very Important news is the raising support of the Tamils to Gatabaya.. In the Indian Ocean race China is very slow lik…
-
- 0 replies
- 341 views
-
-
எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). …
-
- 0 replies
- 595 views
-
-
விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார் காரை துர்க்கா / 2019 நவம்பர் 12 எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும். 1983ஆம் ஆண்டு, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா - புலிகளுக்கு இடையிலான போரும், மீண்ட…
-
- 0 replies
- 563 views
-
-
இராணுவ பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் இன்றும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ…
-
- 3 replies
- 522 views
-
-
இலங்கையில் 2005ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்வீடன் நாட்டை ச் சேர்ந்த பெண் ஒருவரின் கொலை வழக்கின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னணியில், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தது, தமிழர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இந்த சமயத்தில் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டு போரின் போது கைது செய்யப்பட்டு பல தசாப்தங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதி…
-
- 1 reply
- 416 views
-
-
இன்னும் சில நாட்களில் அலறி மாளிகையிலிருந்து ஃபெயார் வெல் பெறக் காத்திருக்கின்ற நம்ம நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு என்ன ஒரேயடியாக என்னாச்சு என்று யோசிக்கின்ற அளவுக்கு இருக்கின்றது அவரது சிரிசேனத்தனமான செயற்பாடுகள். சட்டவாட்சியை சாக்கடையாக்கி அதனை புத்தளம் அருவாக்காட்டுக்கு அனுப்பி வைக்கின்ற அவரது அயோக்கியத்தனம் ஹை டெஸிபலில் அலற வைக்கின்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் (Contempt of Court) பதினெட்டு வருட காலம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பளித்து சட்டவாட்சியை கதறக் கதற பாலியல் வன்புறவு செய்த சிரிசேன இப்போது கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டணை அளிக்கப்பட்டவருக்கு பொது மன்னிப்பென்ற ஒன்றை வழங்கி பொறம்போக்குத்தனம் செய்து அதுக்க…
-
- 2 replies
- 759 views
- 1 follower
-
-
300 பேரை கடத்தி முதலைக்கு இரையாக்கி கோத்தா!- வெள்ளை வான் சாரதியின் பகீர் வாக்குமூலம் [Sunday 2019-11-10 17:00] மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும், 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வெள்ளை வான் ஒன்றின் சாரதியாக பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார். கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் இன்று அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குற…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
கோத்தாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணிக்கலாம் - சஜித் சிறந்த ஜனாதிபதியாக விளங்குவார் அகிம்சா விக்கிரமதுங்க தமிழில் ரஜீபன் இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர். ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன். தோற்கடிக்க முடியாத, அற்புதமான, அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன். கண்டிக்கத்தக்க - கோழைத்தனமான பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன். தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கி…
-
- 1 reply
- 328 views
-
-
மனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது? ஹெலன் பிரிக்ஸ்பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVELIZAR SIMEONOVSKI பரிணாம வளர்ச்சி குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதன் முதலாக இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது, எப்படி என்று அறிந்து கொள்ளும் …
-
- 0 replies
- 342 views
- 1 follower
-