Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தைக்கோ..அல்லது யுத்த முனைக்கோ..புலிகள் செல்லாத வரை பாதிக்க போவது அப்பாவி மக்களே..பிரபல தமிழ்தேசிய நாளேட்டின் கட்டுரை...

Featured Replies

வடக்கு, கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதலுக்குத் திட்டம்!

-விதுரன்-

மக்களை மனிதக் கேடயங்களாக்கியும் பணயம் வைத்தும் யுத்தம் நடைபெறத் தொடங்கியுள்ளது. கிழக்கில் மட்டுமல்லாது இன்று வடக்கிலும் இதே நிலைதான். இதனால், யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து தப்பியோடும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்திக்கின்றனர்.

மக்களின் பாதுகாப்பு குறித்து எவருமே அக்கறை கொள்ளாத நிலையில் இனிவரும் யுத்தங்களில் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்கும் நிலை உருவாகப் போகிறது.

கிழக்கில் தொடங்கிய போர் இன்று வடக்கிலும் முழு அளவில் பரவத் தொடங்கியுள்ளது. கிழக்கை புலிகளிடமிருந்து விரைவில் கைப்பற்றிவிடுவோமெனக் கூறி பெரும் போரை ஆரம்பித்த அரசு, இதுவரை அது சாத்தியப்படாத நிலையில் வடக்கிலும் போரைத் தொடங்கியுள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கும் போரெனக் கூறிக் கொண்டு நடைபெறும் தாக்குதலில் மக்களே இலக்கு வைக்கப்படுகின்றனர். மக்கள் குடியிருப்புகள் தினமும் நூற்றுக் கணக்கில் அழிக்கப்படுகின்றன. அப்பாவி மக்கள் வீடு வாசல்களிலிருந்து விரட்டப்படுகின்றனர். மக்கள் பெருமளவில் கொல்லப்படுகின்றனர்.

மக்கள் குடியிருப்புகள் மீது மேற்கொள்ளப்படும் கண் மூடித்தனமான ஷெல் தாக்குதல், பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சுகளால் அவர்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றடையும் நிலை உருவாக்கப்படுகிறது.

முன்னைய யுத்தங்களின் போது, பாரிய படைநகர்வுகளுக்கு முன்னர் ஷெல் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் நடைபெற்றாலும், அது குறிப்பிட்டளவு தூரத்தை பிரதானமாக இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படும். இராணுவ முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் புலிகளின் முன்னரங்க நிலைகளை அழிப்பதாகவும் முன்னரங்க நிலைகளிலும் அதற்கப்பால் படையினரை எதிர்கொள்ளத் தயாராயிருக்கும் புலிகளையும் இலக்கு வைத்தே பெரும்பாலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெறும்.

இதனால் ஷெல் தாக்குதலும் விமானத் தாக்குதலும் நடைபெறும் பகுதிகளிலிருந்து மக்கள் பின் நகர்ந்து பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வர். மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையே படையினரின் இந்தத் தாக்குதல்கள் கடுமையாயிருக்கும்.

ஆனால் அண்மைக்காலப் போரில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மிக நீண்ட தூர ஆட்லறிகள், மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாகவும் கண்மூடித்தனமாகவும் தாக்குதல்களை நடத்தி மக்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள்ளிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தப்பியோடச் செய்வதே நோக்கமாகும்.

புலிகளின் பகுதிகளிலிருந்து மக்களை முற்றாக வெளியேற்றிவிட்டால், அதன் பின் அங்கு இடம்பெறும் தாக்குதல்கள் அனைத்தும் புலிகளுக்கெதிரானதாகவேயிருக

நம்ம சனமும்.... தமிழ் ஊடகங்களுமா கீ கொடுக்க வேண்டும். :unsure:

உலகம் விடுப்பு பார்கத்தான் செய்யும்..... ஈழதமிழரும் அல்ல.... :lol:

நாம் இனித்தான் கனக்க.... யோசித்து.... விலை கொடு(க்க)த்து... எமக்காக...இந்த நவீன உலகோடு

கடைசியாக... செய்ய.... பெறவுள்ளோம் :)

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட எதிர்பார்ப்புக்களும் எதிர்வு கூறல்களும் மாறிமாறிப் பிழைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் எழுதத் தோன்றும்.. விட்டால் புலிகளுக்கு அரசியல் ஆலோசனைகளும் இராணுவ ஆலோசனைகளும் இலவசமாகச் சொல்லப் பலர் நம்மிடையே உள்ளனர். எப்படி மடுப்பகுதியில் சென்றி பார்க்கவேண்டும் என்று அறிவுரை சொல்லுவார்கள்!

இவர்களெல்லாம் தம்முடைய கடைமைகளை சரிவரச் செய்தாலே போது. மக்களை சலிப்புக்கு உள்ளாக்கும் கட்டுரைகளால் ஒரு பயனும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரப்பா இந்த கட்டுரையாசிரியர் விதுரன் ???

பேசாமல் இவரை விதுர நாயக்கா என்று பெயர் மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள் !

இவருக்கு கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்தால் விதுரன் காததுரன்(ம்) ஓடி விடுவார்..

சும்மா நாலு சுவர்களுக்குள்ளே உட்கார்ந்தால் எதையும் பேசலாம் போல!!!....

- கப்பல் பயணி

யாரப்பா இந்த கட்டுரையாசிரியர் விதுரன் ???

பேசாமல் இவரை விதுர நாயக்கா என்று பெயர் மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள் !

இவருக்கு கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்தால் விதுரன் காததுரன்(ம்) ஓடி விடுவார்..

சும்மா நாலு சுவர்களுக்குள்ளே உட்கார்ந்தால் எதையும் பேசலாம் போல!!!....

- கப்பல் பயணி

well . what do you do for tamil struggle?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வதுரன் கூறியதில் ஒன்றும் தப்பில்லையே..அவர் நீண்ட காலமாக தினக்குரலின் பந்தி எழுத்தாளராக கடமை ஆற்றுகின்ற ஒரு பத்திரிகையாளன் பத்திகையாளன் என்பவன் மக்களளோடு மக்களாக இருந்து மக்கள் உணர்வுகளை பத்திகைவாயிலாக உரியவாகளிடம் கொண்டு செல்பவன் விதுரன் எத்தனையோ அச்சுறுத்தலகளுக்கும் மத்தியில் பேரினவாதத்தின் குகைக்குள் இருந்து செயற்படுபவர் தயவு செய்து இப்படியானவர்களை கொச்சை படுத்தாதீhகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

well . what do you do for tamil struggle?

சிந்தனைச் செல்வன்,

ஒரு தமிழகத் தமிழனாக இருந்துகொண்டு கீழக்கண்ட செயல்களை செய்து வருகிறேன்.

1. 1983 கலவரத்தின்போது தமிழகத்தில் என் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு எனக்கு கிடைத்த கைச்செலவு பணத்தை அவர்களுக்காக கல்வி,உணவு,போராட்டம் என்று செலவழித்திரூகிறேன்

2. என் குடும்பம் முழுதும் எங்களாலான பொருள் ம்ற்றும் கல்வி உதவிகளை செய்திருக்கிறோம்

3. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நாட்களிலும் அதற்கு பின்னாலும் ஈழத்தமிழர்களுக்கான ஈரம் ஒரு சிறிதளவேன்னும் குறையவேயில்லை.

4. பல முறை பல்வேறு சூழ்நிலையிலே மிகவும் காட்டமான விமர்சனங்களுக்கு( பயங்கரவாதி முத்திரை) இடையிலும் போராளிகளின் நியாயத்திற்கான காரணங்களை என் தமிழக தமிழர்களுக்கும், மற்ற மாநில நண்பர்களுக்கும் எடுத்துக் கூறியிருகிறேன். கூறி வருகிறேன்

5. தற்போதைய போராட்டத்தின் நியாயத்திற்கான விழிப்புணர்வை என்னுடன் பணிபுரியும் தமிழக வேறு மாநிலத்து நண்பர்களுக்கு போதித்து வருகிறேன்.

6. இதற்கு அப்பாற்பட்டு ஒரு சில பொருளுதவிகளையும் செய்துவற்கிறேன்.

மேற்கண்ட செயல்களில் ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே இந்திய அரசாங்கம் என்னை கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.

இதற்கு அப்பாலும் வேறு எதாவது ஈழத்தமிழர்களுக்காக் நான் செய்யவேண்டுவது எதாவது இருந்தால் தயவு செய்து கூறுங்கள்.

(உங்கள் கேள்வி என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது)

- கப்பல் பயணி

  • கருத்துக்கள உறவுகள்

(உங்கள் கேள்வி என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது)

- கப்பல் பயணி

முதல் கருத்தே காயப்படுத்தும் என்றால் இனி வரும் கருத்துக்கள் எப்படி இருக்கும்? இதற்கெல்லாம் துவண்டுவிடக்கூடாது.. குறை கண்டுபிடிப்பதும், கோள் மூட்டுவதும் பல தமிழர்களின் பொழுதுபோக்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.