Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடர்ந்து தமிழக தமிழர்களை கொச்சைப்படுத்தி வரும் விக்கி, ஆத்திரத்தில் தமிழக தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thirumurugan Gandhi

இலங்கை - இந்தியாவின் ஏகபோக அடிமை தனது சேவையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். மிகவும் கடுமையான கண்டனத்தினை அவருக்கு பதிவு செய்ய விரும்புகிறேன். புலம்பெயர் தமிழீழ குடிமக்கள் இவரது அயோக்கியத்தனமான பேச்சிற்கு எதிர்வினையாற்றுவார்கள் என நம்புகிறேன்.

இவரது "தி இந்து" நாளிதழுக்கான இன்றய பேட்டியில் ” தமிழகத்தில் எங்களது பிரச்சனை பந்துவிளையாட்டினைப்போன்று கையாளப்படுகிறது. பிரிவினைதான் தீர்வு என தமிழக அரசியல் செயல்பாட்டாளார்களால் பேசப்படும் பொழுது எங்களக்கு பிரச்சனை வருகிறது. எங்களுக்குள் (சிங்களவர்- தமிழர்) பிரச்சனை வரும் பின் தீரும், கனவன் மனைவிக்குள் வருவதைப் போல , அதற்காக அடுத்த வீட்டுக்காரன் (தமிழகத் தமிழர்கள்) விவாகரத்தினைப் பற்றி பேசுவதை ஏற்க முடியாது”... என்று சொல்லிச் செல்கிறார்.

ஒரு விடுதலைப் போராட்டத்தினையும் அதற்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த போராட்டத்தினையும் திரு.விக்கினேசுவரனால் புரிந்து கொள்ள முடியாது என்பது கவலைக்குரியவிடயம். ஆனால் தமிழகத்தில் தம்மை தாமே அழித்தும், விரிவான களப்போராட்டத்தினையும் கட்டமைத்தவர்களை கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

18 தமிழர்கள் தங்களது குடும்பம், எதிர்காலம் என எதையும் பற்றிக் கவலைப்படாமல் தாங்கள் வாழ் நாளில் நேரில் பார்த்திராத ஒரு நிலத்தின் விடுதலைப் போராட்டத்திற்உ தம்மை அழித்திருக்கிறார்கள். அந்த காலத்தில் சிங்கள அரசிடம் பொறுக்கித் தின்றவர்களை மனிதர்களாகக் கூட நாங்கள் மதித்தது கிடையாது.

2009ல் இனப்படுகொலை நிகழ்ந்த பொழுது இலங்கை அரசினை எதிர்த்து ஒருவார்த்தைக் கூட பேசாதவர்கள் தமிழகத்தின் தமிழீழவிடுதலைக்கான பங்களிப்பினைப் பற்றினைப் பேச அல்லது விமர்சிக்க எந்தவித யோக்கியதையும் கிடையாது.

திரு. விக்னேசுவரன் அவர்களே! சிங்கள அரசிடம் கையேந்திப் பிழைக்கவும், 60 ஆண்டுகால வரலாற்றினை புதைக்கவும் நீங்கள் முடிவு செய்த பிறகு, தமிழர்கள் உங்களை மரியாதையாக எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்காதீர்கள். தமிழகத்தில் உங்களை விட நரித்தனமாக அரசுக்கு சாமரம் வீசியவர்கள் பலரை கண்டிருக்கிறோம். அவர்களுக்கு என்ன பதில் கிடைத்திருக்கிறது என்பதை கொஞ்சம் தெரிந்துப் பேசுங்கள்...

60வயதில் தனது குடும்பத்தினைப் பற்றியும் தமது எதிர்காலத்தினைப் பற்றியும் கவலையோடு சிந்தித்து ஒரு சமூகத்தின் விடுதலையை புறக்கணிக்கும் உங்களுக்கு , தனது இனத்திற்காக 28 வயதில் தம்மை தீக்கிரையாக்கிய முத்துக்குமாரினை நினைவு படுத்த விரும்புகிறேன்.

இனவெறி சிங்கள அரசின் முன்னாள் வேலையாள் எமது மக்களின் போராட்டத்தினை ஆதாரமற்ற முறையில் தவறாக சித்தரிப்பதும், அவதூறு பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரையில் தமிழீழ மக்களுக்காக தனது வாழ்நாளில் எதனையும் இழக்காத அல்லது இனிமேலும் இழக்க விரும்பாத உங்களைப்போன்றவர்கள் இலங்கையின் இனப்படுகொலை போக்கினை நீண்டகாலமாக வளர்க்க உதவியவர்களே. இலங்கை சிங்கள அரசு நிகழ்த்திய இனப்படுகொலையின் போது மெளனம் காத்து அதை செயல்படுத்த உதவியவராகவே உங்களை நான் பார்க்கிறேன். 2009இல் சிங்கள ஜனநாயகவாதிகள் எழுப்பிய எதிர்ப்புக் குரல் கூட உங்களிடத்தில் இருந்து வந்ததாக நினைவில்லை.

தமிழகத்தின் பங்களிப்பினைப் பற்றி தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் நீங்கள், உங்களது கருத்துக்களை திரும்பப் பெற்று அதற்கான சுயவிமர்சனத்தினையும், மன்னிப்பினையும் கோரவேண்டுமென்று கோருகிறேன்.

http://www.thehindu.com/news/international/south-asia/tn-politicians-exploiting-lankan-tamils-issue-cv-wigneswaran/article5121012.ece

விக்கினேஸ்வரன் அரசில்வாதி இல்லை என்பது இப்படி பேச்சுக்களில் வெளிவருகிறது. ஆனால் இந்து பேட்டியை வெளிவிடாமல் கூட்டமைப்புக்கும் தமிழக தலைவர்களுக்கும் இடையில் ஆப்பு வைக்கிறது. இதைp பார்த்துவிட்டு இந்து சரி விக்கினேஸ்வரன்தான் பிழை என்று ஏன் கூறுவான். விக்கினேஸ்வரனும் சம்பந்தரும் அல்லவா இந்தியா தேர்தலில் வென்று கொண்டு வரச் சொன்னதாகவும் மேடைகளில் பேசுபவர்கள். அந்த படிக்கு இந்தியா இறங்கி வந்தது தமிழகத்தால் தானே. இதை இந்து சுட்டிக் காட்டியிருக்க வேண்டாமா?

 

இந்து தான் கேட்ட கேள்வியையும், கொடுத்த பதிலையும் ஒரு இடத்தில் பிரசுரிக்க வேண்டும். செய்தி கூட்டமைப்புக்கு எதிராக எழுதப்பட்ட செய்தி. இதையேதான் முன்னர் வட இந்திய பத்திரிகையும் செய்தது. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒன்றும் தமிழக தலைவர்கள் ஆத்திரத்தில் இல்லை.

அரசியல் வியாபார இந்து ராம் குடும்பம் சிண்டு முடிய முனைகிறது.

பத்திரிகை தர்மம் எல்லாம் காசோடு ஓடிவிட்டது.

 

ஈழத் தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும்.... சிண்டு முடிய,

சிங்களவனும், ஆரியனும் தயாராகி விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.