Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் கேள்வி!!

Featured Replies

நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் கேள்வி!!
8f6c824a-c454-403b-aa53-57371575a4701.jp

 

'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே தானே'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா அமைச்சர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்றுப் புதன்கிழமை நான்காம் மாடியில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளுக்கும் தனக்கும் கடந்த வருடம் கைத்தொலைபேசி மூலமான தொடர்புகள் இருந்தது எனக் கூறியே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தன்னைத் துருவித்துருவி விசாரணை செய்தனர் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் இன்றைய அமர்வின் மதிய போசன இடைவேளையின் போது அமைச்சர்கள் முன்னிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தன் மேலும் கூறுகையில்,

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரை நான்காம் மாடியில் வைத்து விசாரித்துள்ளீர்கள். நேற்று சிவசக்தி ஆனந்தனை அழைத்து விசாரித்துள்ளீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தன்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே தானே.

ஏன் எம்மைப் புலிகள் என்று நினைக்கின்றீர்களா? அல்லது நான்காம் மாடி விசாரணை மூலம் தமிழர்களை அல்லது கூட்டமைப்பின் உறுப்பினர்களை அச்சமடையச் செய்யலாம் என்று நினைக்கின்றீர்களா? கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ்க் கைதிகளைப் பார்வையிட உரிமை இல்லையா? ஊடகங்களுக்குக்  கருத்துத் தெரிவிக்க உரிமை இல்லையா?  இவ்வாறு கேள்விகளைத் தொடுத்தார் சம்பந்தன்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனைக் கடும் தொனியில் தெரிவிக்கும்போது அமைச்சர்கள் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தனர். பின்னர் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே நான்காம் மாடி விசாரணைக்குப் பொறுப்பு எனவும், அவரே இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டும் எனவும் அமைச்சர்கள் கூறினர்.

உடனே குறுக்கிட்ட சம்பந்தன் 'கோத்தபாயவும் உங்கள் அரசின்  கீழ்தானே இயங்குகின்றார்' என்று பதிலளித்தார்

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=8f6c824a-c454-403b-aa53-57371575a470

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக் கொடியத் தூக்கிப் பிடிச்சு என்ன விளக்கம் சொன்னாலும் நாலாம் மாடிக்குப் போவது போவதுதான் சம்பந்தன் ஐயா. சிங்களத்தின் பேரினவாத வெறி பற்றி அறியாமல்.. நீங்கள் அரசியல் செய்வது வேடிக்கையாக உள்ளது. :icon_idea:

சிறிதரனையும், கஜேந்திரனையும் அழைக்கும்போது பேசாமல் இருந்த சம்பந்தனுக்கு இப்ப தன்னையும் அழைத்தால் பின்னர் சர்வதேசம் தன்னையும் பயங்கரவாதி என்று கருதிவிடுமோ என்று குளிர்க்காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

 

  • தொடங்கியவர்

சம்பந்தரை சிராணி கேஸ் மூலம் உள்ளே எடுக்க முயற்சிகள் நடந்தது. அதில் என்ன சுணக்கம் என்பது வெளியே தெரிய வரவில்லை. சம்பந்தரின் இந்த பேச்சை பார்த்தால் இதோடு அதை ஒப்பிடும் போது அது பல்லில்லாத பாம்பாக கருதுகிறாரோ என்பது தெரியவில்லை. தனக்கும் இந்த பக்கம் தான் சறுக்கலாம் என்கிறார்.


சம்பந்தர் வெறுமனே வரட்சியாக விசையத்தை மட்டும் பேசும் மனிதர். உவமான உவமேய இலக்கண விளங்கங்களில் இறங்குவது வழமை இல்லை. அப்படியாயில் இது வெறுமனே ஒரு உவமானம் இல்லை, அரசு வடமாகாணத் தேர்தல் திட்டங்களை நடைமுறை படுத்த ஆரம்பிப்பதை கூட்டமைப்பு உணர்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கம் "வடக்கில் யாராவது வாய் திறந்தால் ஓட்டு மொத்தமாக உள்ளேதான்" என்று கூட்டமைப்பை மிரட்டுகிறதா?

 

முஸ்லீம் அமைப்புகள், தலையிடாத போது அல்லது தலையிட சுணங்கிய போது அசாத் அலியை பற்றி குரல் எழுப்பியவர் மனோகனேசனும், விடுவிப்பு முயற்சிகளில் உள் இறங்கியவர் சுமந்திரனும் தான் என்பதையும் கவனிக்க வேண்டும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.