Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்வின்,லங்காசிறீ,விஜய்,லெபாரா இணைந்த களியாட்டம் படுதோல்வி!

Featured Replies

vijay_lebara_tamilwin.jpg

 

நேற்று – 20.04.2014- லண்டனில் o2 என்ற பிரமாண்டமான மேடையில் நடைபெற்ற தென்னிந்திய கோப்ரட் சினிமா மற்றும் தொலைக்காட்சிக் கூத்தாடிகளின் களியாட்ட நிகழ்ச்சி தோல்வியடைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சி, லெபாரா தொலைபேசி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தியதாகக் கூறப்பட்ட தமிழ்க் கொலைத் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் நைட் நிகழ்ச்சி தோல்வியடைந்தது. இந்த நிகழ்ச்சி தேசிய வியாபாரம் நடத்தும் தமிழ்வின் லங்காசிறீ ஆகிய தமிழ் வியாபார நிறுவனங்கள் ஆதரவு வழங்கின. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் கலாச்சாரத்தின் பேயரால் அதீத விளம்பரங்கள் வழங்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட போதும் நிகழ்ச்சியை பெரும்பாலான பிரித்தானிய புலம்பெயர் மக்கள் புறக்கணித்துள்ளனர்.

தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் அப்பட்டமான வியாபாரத்தை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறியாகவே இப் புறக்கணிப்புக் கருதப்படுகின்றது. லைக்கா, லெபாரா ஆகிய தமிழ்ப் பல்தேசிய நிறுவனங்களால் ஊட்டி வளர்க்கப்படும் பணவெறி கொண்ட புலம்பெயர் பிழைப்புவாத அரசியலின் தோல்வியே இந்த நிகழ்ச்சியின் தோல்வி.

லைக்கா நிறுவனத்தின் இலங்கை அரசுடனான தொடர்பு இனியொரு இணையத்தினால் பலதடவைகள் தெளிவுபடுத்தப்பட்டன. இதனைப் பயன்படுத்திக்கொண்ட தமிழ்த் தேசிய வியாபாரிகள் லைக்காவின் போட்டி நிறுவனமான லெபாராவுடன் இணைந்து தமது பணவெறியைத் தீர்துக்கொண்டனர். இந்த பல்தேசியப் பண வெறிக்குள் சங்கதி,ஈழமுரசு,தமிழ்வின் ஆகியனவும் அடங்கிப் போயின.

தொலைக்காட்சி, வானொலி, கலைநிகழ்ச்சிகள் போன்ற அனைத்துத் தளத்தையும் களியாட்டமாக மாற்றுவதற்குத் பிழைப்புவாதிகளும், இவ்விரு வியாபார நிறுவனங்களும் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.

 
vijaytv-300x169.jpg
 

 

 

 

 

 

 

சில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். ‘தமிழ்த் தேசிய’ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்வின் லங்காசிறீ இணையங்களும் இதற்காகக் குமுறி வெடித்துக் கண்ணீர்வடித்தன. இவர்கள் வடித்த நீலிக்கண்ணீரின் ஈரம் காயும் முன்பே விஜய் தமிழ்க் கொலைத் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களோடு லங்காசிறீயும், தமிழ் வின்னும் தமது வியாபாரத்தை ஆரம்பித்தன.

இலங்கை அரச படைகளும், இந்திய உளவுத்துறையும் இணைந்து ஏற்படுத்த முடியாத அப்பட்டமான அழிவுகளை இக்கலாச்சார சீர்குலைப்பு ஏற்படுத்தும் வலிமை கொண்டது. அரைத் தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தன்னைத் தமிழ்க் கலாச்சாரம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு புலம்பெயர் குடும்பத்தினதும் வரவேற்பறையில் வந்து நிற்கிறது.

விஜய் தொலைக்காட்சி தனது கட்டண சேவையைப் புலம்பெயர் நாடுகளில் ஆரம்பித்துள்ளது. நாளாந்த செய்திகளைக்கூட வெளியிடாத அருவருக்கத்தக்க அரைகுறை ஆங்கிலத்தோடு தமிழையும் கலந்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளோடு விஜய் தொலைக்காட்சி புலம்பெயர் நாடுகளில் விசம் போலப் படர ஆரம்பித்துள்ளது. இதன் முன்னுரையாகவே, தமிழ்வின், லெபாரா, விஜய் இணைந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

வடக்கிலும் கிழக்கிலும் ஒடுக்கப்படும் தமிழர்கள் தமது வாழ்வின் அவலங்களை கலைவடிவங்களாக்கி வருகின்றனர். புலம்பெயர் நாடுகளின் தேசியப் பிழைப்பு வாதிகளோ தென்னிந்திய விதேசிக் கூத்தாடிகளின் களியாட்டங்களை இறக்குமதி செய்கின்றனர்.

http://inioru.com/?p=39836#comment-41564

 

விஜய் தொலைகாட்சி ரூபர்ட் மேர்டோக்கின் நிறுவனம். ஃபொக்ஸ் நிறுவனம் தான் நிகழ்சிகளை நடத்துகிறது.

மற்றவர்களை ஏசுவதை நிறுத்தி முன்மாதிரியான நிகழ்ச்சியை நடத்தி வழிகாட்டியாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தொல்லைக்காட்சியின் முக்கியமான எடுபிடியான கோபிநாத் தமிழில் வணக்கம் சொல்வதையே "வனக்கம்" எண்டு சொல்லும் ஒரு ஊடக வியாபாரி. தமிழர்களைக் காண்பதே பாவம் என நினைக்கும் ஒரு ஜீவன். அதைவிட தமிழ்நாட்டில் வளந்து கொழுப்பெடுத்து வாழும் பார்ப்பணிய, தெலுங்கர், மலையாளிகளை உள்ளடக்கிய இந்தத் தொலைக்காட்சி தமிழர் விரோதத் தொலைக்காட்சி என்பதை யார் சொன்னாலும், என்னதான் இருந்தாலும் லெமன்பொப் விசுக்கோத்துக்கும் எங்கட நெக்ரோ சோடாவுக்கும்  நாற்றமெடுக்கும் கல்லோயாச் சாராயம்த்துக்கும் (முப்பத்தைந்து புறோமில்லி அல்ககோல் வீதம் எண்டு சொல்லி லிடிலில் விக்கும் கெய்னிக்கன் பியரில் இருக்கும் வெறிப்பிடிப்புக்கூட இதில இராது என்பது வேறவிடையம், எங்கட ஊர் பெரிசுகள் அந்தக்காலத்தில் இதைக்குடித்துவிட்டா சலம்பல் பண்ணியதுகள் என எனக்கு சிலவேளைகளில் யோசனை வாறதுண்டு) ஈடு இணையில்லாமல் எதுவுமே வராது எண்டு கூறிக்கொண்டு திரியும் புலம்பெயர் புறம்போக்குகளுக்கு மத்தியில் என்னத்தச் சொல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க... காது, குளிருது. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.