Jump to content

இது தேவையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தேவையா?

புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும்

உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியச்

சடங்கும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு பெண் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும்

மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும்

பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில்

பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில்

நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில்

இருக்கிறோம்.

இந்த விஞ்ஞான யுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச்

சுூழ்நிலையில் இந்தச் சாமத்தியச் சடங்குகள் அவசியந்

தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில்

ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்ற

தான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ

அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான

முறையில் கிடைக்கவில்லை.

பல பெரியவர்களுடன் சாமத்தியச்சடங்கு பற்றிப் பேசிப்

பார்த்த போது ஒவ்வொருவரும் சொன்ன அதற்கான

காரணங்கள், ஒவ்வொரு விதமாகவே இருந்தன.

ஆண் பெண் பாகுபாடின்றி விளையாடித் திரிந்தவளை

ஆண்களில் இருந்து பிரித்து வைப்பதற்காக..

எனது வீட்டில் ஒரு குமர் இருக்கிறாள். மணமகன்மார்

பெண் கேட்டுடுவரலாம் என்பதைத் தெரியப்படுத்து

வதற்காக..

ருதுவானால்தான் அவள் முழுமையான பெண் என்ற

உடல் ரீதியான அங்கீகாரம் சமூகத்திடம் இருந்து

கிடைக்கும் என்பதற்காக...

இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள்தான் அவளைக்

காக்க வேண்டும்'

என்று சொல்லி ஊர்மக்களிடம் பிள்ளையை

ஒப்படைப்பதற்காக...சாமத்தியச் சடங்கு நடக்கிறது.

என்றும் ஒரு புலம் பெயர்ந்த பெரியவர் சொன்னார்.

இப்படியானதொரு கருத்தைக் கேட்க...,சிரிப்பாக

இல்லை...! கற்றவர் ஆழ்ந்து ஆராய்ந்து ஆக்க

புூர்வமானதொரு கருத்தை ஆணித்தரமாகத் தருவார்

என்றுதான் எதிர்பார்த்தேன்.கருத்துக்கள

Link to comment
Share on other sites

  • Replies 184
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய சடங்கு தேவைதான்

கடந்த வார பெண்கள் பக்கத்தில், இது தேவையா? என்ற தலைப்பின் கீழ், பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்திய சடங்கும் ஒன்று எனவும், அனாவசியமான எந்தவிதமான தர்க்காPதியான காரணங்களும் அற்ற இந்தச்சடங்கைக் களைவதற்கு முன்வருவோமா? என்ற கேள்வியுடன் சந்திரவதனா தனது வாதத்தை முன் வைத்திருந்தா.

இந்த விஞ்ஞானயுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சுூழலில் இந்த சாமத்திய சடங்கு இன்னும் அவசியமாகுகிறது. பெண்கள் உள hPதியாகவும், உடல் hPதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும் பருவம்தான். இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அநுபவம் உள்ள உறவுப்பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் கேட்டு கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டி, இனிச் சிறுமி அல்ல இளம் பெண்ணென புடவை கட்டி, பெருமை கூட்டி அவளைப் ஒரு பெண்ணாக்குகிறார்கள்.

ஏமது கலாச்சாரத்தின் பெருமையை பலர் புரிந்து கொள்வதில்லை. எம் மத்தியில் செத்த வீடு நடத்தால் கூட நாம் ஊழரளெநடடiபெ போகாமல் இருப்பதற்கு எங்கள் சமூக சடங்குகள் (கட்டி பிடித்து, வாய்விட்டளுது, ஒப்பாரி வைத்து, சாப்பாடு சமைத்து கொடுத்து, அத்திரட்டி, ஆட்டதிவசம், திவசம் என) பாதிக்ப்பட்டவரை தனித்திருக்க விடாது சடங்குகள் சமூகத்தின் நிழலில் துயர் ஆற வைக்கின்றன.

“இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள் தான் அவளைக்காக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பது” என ஒரு பெரியவர் விளக்கம் சொன்னது நகைப்புக்கு இடமாக கலாச்சாரத்தை அவமான படுதுவதாக இருந்தது எனக்குறிப்பிட்டிருந்தா.. இதில் நகைப்பதற்கு ஒன்றுமே இல்லை. சாமத்திய சடங்கின் மூலம் இன்னாருக்கு இத்தனை பிள்ளைகள், அதில் இந்த பிள்ளை வயதிற்கு வந்த பிள்ளை என அவளை வாழ்த்தும்போது அவள் உருவமும் மனதில் படிகிறது. ஊர் மக்கள் அவளை நமது ஊரின் பெண்ணாக வரித்தெடுத்து ஏதும் சிக்கலில் அப்பெண் மாட்டு படப்போகிறாள் என்று தெரியும் இடத்து அதை குடும்பத்திற்கு தெரியப்படுத்தியோ அல்லது அவளைக்கு புத்தி சொல்லியோ அவளைப் பேரிளம்பெண் பருவத்திற்கு வழி நடத்துகிறார்கள்.

இங்கு வெளிநாட்டில் நாம் இன்னும் ஆளை ஆள் சொந்த பந்தங்களைத் தெரிந்து கொள்வதே இப்படியான சடங்குகளின் மூலம்தான். முன்பு பிள்ளை பிறந்தல், 11ம்நாள் , 31ம் நாள் தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பெயர் சுூட்டுதல், ஏடு தொடக்குதல், சாமத்தியம், கொழுக்கட்டை கொடுத்தல்(நிச்சயதார்தம்), கல்யாணம், செத்தவீடு, என பலப் சடங்குகள் எம்மத்தியில் இருந்தன. இப்போ அவை எல்லாம் எதற்கும் பெண்ணியம் பேசி தாங்களும் குழம்பி எங்களையும் குழப்பும் மேதாவித்தனத்தாலோ, நேரம் இன்மையாலோ சுருங்கி ஏதோ ஓன்று இரண்டு மட்டும் நடைமுறையி;ல் உள்ளன.

அத்தோடு வெளிநாட்டு முறையிலான (கேக் வெட்டி சம்பெயின் உடைத்து) பேத்டே பார்ட்டிகள், முதலாவது, 18வது, 21வது, அதைவிட முப்பது, நாற்பது என எண்பது, தொண்ணுhறுவரையும், அத்தோடு கல்யாண நாளுகளும் அதுவிட பாபிக்கியுூ பார்ட்டி, கிறிஸ்மஸ் பாhட்;டி வெடிங் ரிசப்சன் என எல்லா புலம் பெயர் மக்களும் வயது, பால், சாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு கொண்டாடுவது பற்றி சந்திரவதனா ஒன்றுமே சொல்லாது. சாமத்திய சடங்கை மட்டும் பொய்யான திணிப்புகளின் போலிக்கலாச்சாரத்தில் பொசுங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறா.

சாமத்திய வீடு ஏன் செய்கிறார்கள் என சந்திரவதனா சொன்ன அதே காரணத்தையே நானும் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்கிறேன்.

1) வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக

கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்ரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக்கொண்டு இருப்பீர்களா?

ஒரு சபையில் அந்த பெரிய குடும்பத்தின் முழு வாரிசுகளையுமே காணவும், வேறு வேறு நாடுகளில் வசிப்பவர்கள் கூட இச்சந்தர்பத்தில் ஒன்று கூடவும் வாய்பாகிறது. சடங்குகளின் வீடியோ பார்த்து இரண்டு மூன்று கல்யாணங்கள் கூட சரிவந்திருக்கிறது என்றால் பாருங்களேன். எனது அனுபவத்தில் நடைபெற்ற எல்லாச் சாமத்தியங்களிலும் அப்பெணும் விரும்பி பங்குபற்றுவதை காணக்கூடியதாகவுள்ளது.

2) என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டை விடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்காக

இது சாமத்திய வீட்டுக்கு மட்டும் தான் பொருந்துமா? மனித இயல்பே மற்றவனிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி உயர்த்தி வைக்க முயல்வது தான். பேத்டே கேக்கைக் கூட மற்றவர்கள் செய்யாத புது டிசைனில் செய்வதைத்தான் விரும்புகிறார்கள்.. பாபிக்கியுூவில் அங்கை புதிதாக நண்டு சுட்டார்கள் நல்லா இருந்தது என்று சொல்வதைத்தான் மனம் வரவேற்க்கும். அது சடங்கின் பிழையா?

3) இப்படிப் பெரிதாகச் செய்யாவிட்டால் என்ன நினைப்பார்கள் என்ற போலிக்கௌரவத்திற்காக

போலிக்கௌரவம் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள் ஆகவே அது சடங்கின் தவறாகாது.

4) கொடுத்த மொய்யை திருப்பப் பெற்று கடன் கழிப்பதற்காக

அவரை விட இவர் ஆடம்பரமாக செய்கிறார்; என்று சொல்கிறீர்கள், அப்போ கொடுத்த கடனுக்கு மேலாலே அல்லவா செலவு போகும்.!

சாமத்திய சடங்கு நான் முதலே கூறியது போல, உளவியல் காரணங்களோடு, குடும்பத்தின் ஒற்றுமையை அதிகரிக்கவும் சமூக நெருக்கத்தை கூட்டவும் வழிமுறையாகுகின்றது. ஆனால் அதில் உள்ள சில இடையிட்டு நுழைந்தவைகள் தவிர்க்கபட வேண்டியவையே.

உதாரணமாக சாமத்தியத்தில் முதலில் தமிழ் முறைப்படி புடவை அணிந்து விட்டு பிறகு வடஇந்திய முறைப்படி முன்னால் தொங்கலைவிட்டு இன்னுமொரு புடவை அணிவது. (இரண்டாவது புடவையை வடஇந்திய முறைப்படி கட்டுவது இப்போ எழுதாத சட்டமாகிவிட்டது !)

சாமத்திய சடங்கில் கேக் வெட்டுவது, ஆள் உயரத்தில் ஆண்டாள் மாலை போடுவது ( வீடியோகாரும் கமராகாரரும் மேக்கப் லேடியும் சேர்ந்து சடங்கை சில இடங்களில் சடம்பமாக்கி விடுகிறார்கள்.)

இதை விட இதை ஆங்கில அகராதிக்குள் புகுந்து அப்பிடியே மொழி பெயர்க்க தேவையில்லை. Pரடிநசவல உநசநஅழலெ என்பதை யுபந யவவயinஅநவெ உநசநஅழலெ என்றோ அல்லது ளுயசநந உநசநஅழலெ என்றோ அழைக்கலாம். (இடியப்பத்தை வெள்ளைகாரன் தற்செயலாக அவித்தாலும் என்று ளுவசiபெ உழிpநச என்று அழைப்பவர்கள் அல்லவா நாம்!!)

விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பது எல்லாச்சடங்குக்குமே நல்லது. வீட்டை மீள் அடகு வைத்தோ, தகுதிக்கு மீறி கடன் எடுத்தோ, கடினப்பட்டு உழைத்த சேமிப்பெல்லாவற்றையும் செலவழித்து ஆரம்பரமாக செய்வதை தவிர்த்து கொள்வது எல்லாச்சடங்குக்குமே நல்லது. உண்மையான சடங்கை மாற்றாது, திரிக்காது சிக்கனமாகவும் சிறப்பாகவும் குடும்ப சமூக ஒற்றுமை பேணும் வகையில் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.

-சுந்தரி-

http://www.orupaper.com/issue56/london_edi...ages_K___27.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய சடங்கு தேவைதான்!

கடந்த வாரங்களில் பெண்களுக்குரிய பக்கத்தில் வந்த சந்திரவதனாவின் சந்தேகங்களுக்கு விடை கிடைக்க வேண்டும். அது தர்க்கரீதியானதாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

சந்திரவதனாவின் சந்தேகத்திற்கு விடை, ஒரு ஆண்மகன் பிறக்கும் போதே விதைகளின் தொழிற்பாடு செயற்படுவதால் அவன் எந்த நேரத்திலும் விந்தினை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் பெண் கரு உற்பத்திக்கு தயாராக இருக்கும் பருவம் சாமத்திய சடங்குதான். ஆணின் வி;ந்து உற்பத்தியின் முடிவுக்காலம் இல்லை. ஆனால் பெண்ணின் கரு உற்பத்தி ஒரு குறிக்கப்பட்ட காலப்பகுதி தான். இதை சுந்தரி அவர்களும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். சிறுவர், சிறுமிகளுடன் ஓடித் திரிந்து விளையாடிய சிறுமிக்கு வறிய நாடுகளாகிய எங்கள் நாட்டில் சீதனம் என்ற பதம் நடைமுறையில் இருப்பதால், பெற்றோர்கள் அந்த சிறுமிக்கு சாமத்திய சடங்கு மூலம் வாழும் வழிமுறைகளைக் கற்று கொடுப்பதோடு கூடித் திரிந்து விளையாடிய சிறுவர் சிறுமிகளிடத்து வேறுபடுத்திக் காட்டுவதுடன் உற்றார் உறவினர் அயலவர் அனைவர்க்கும் இவளுக்கு இனி பாதுகாப்புத் தேவை என்பதை தெரியப்படுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த சாமத்திய சடங்குகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இல்லாததினால் தான் எத்தனை சிறுமிகள் முதல் கருவிலேயே கர்ப்பம் தரித்து குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள் என்பதை சந்திரவதனா உணரவேண்டும். உலகிலேயே மிகச் சிறிய வயதில் குழந்தையை பெற்றது என்றால் அது இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் தான. எந்தளவிற்கு மருத்துவ வசதிகள் இருந்தும் இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்படி குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் என்றால் வளர்ச்சியடைந்து வரும் எங்கள் நாட்டில் எப்படி இருக்கும்? இதற்காகத்தான் எமது இன மக்கள் எமது பாரம்பரியத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.

வீடியோ என்பது பொதுவாக எல்லா வைபவங்களுக்கும் எடுப்பது நன்று. ஏனெனில் ஒரு நாளில் நடக்கும் விடயம் அதை எப்போதுமே பார்த்து சந்தோசமாக இருக்கவும் அந்த வைபவத்திற்கு சமூகமளிக்காதவர்கள் பார்ப்பதற்கும் நன்று என்பதால் எடுக்கப்படுகிறது.

மற்றது சுந்தரி அவர்கள் கூறிய ஒரு விடயம். இந்த வெளிநாடுகளில் இப்படியான வைபவங்களை சந்திரவதனா குறைகூறவில்லையே என்று சில சம்பிரதாயங்களை எடுத்து கூறினார். இந்த வைபவங்களில் திருமணம் என்ற ஒரு விடயத்தில் எனக்கு ஒரு சந்தேகம். திருமண வீடன்று எழுத்தும் நடக்கிற வைபவத்தில் பந்தி இருத்தும்போது மாமிச உணவு பரிமாறப்படுவதில்லை. சைவ உணவுதான் பரிமாறப்படுகிறது. அதே இடத்தில் எழுத்திற்கு கேக் வெட்டி உணவாக பரிமாறுகிறார்களே. அதுதான் விளக்கமில்லை. ஏன் இந்த இரட்டை வேடம்?

மற்றது சந்திரவதனாவின் புரியாத புதிர் ஒன்றை முன்னைய இதழில் கேட்டிருந்தா. அதாவது நம்ம ஊர் காதல் மட்டுமா காதல் என்று கேட்டு. அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தா. நம்ம ஊரில் பேசி செய்யப்பட்ட திருமணங்களால் எத்தனையோ பெண்கள் துன்பங்களை சுமந்து கொண்டு விவாகரத்துப் பெறாமல் வாழ்கிறார்கள் என்றும் காதலித்து திருமணம் செய்தவர்களும் துன்பப்பட்டு வாழ்கிறார்கள் என்றும் கூறியிருந்தா. அதேநேரம் இங்கு நீண்டகாலமாக ஒருவரோடு பேசி அவரைப் புரிந்துகொண்டு திருமணம் செய்து நீண்டகாலமாக வாழ்கிறார்கள் என்று கூறியிருந்தா.

இந்த நாடுகளில் எத்தனை காதலை விவாகரத்து செய்து புதுப் புதுக் காதலை உடன் தேவைகளுக்காக வளர்க்கிறார்கள் தெரியுமா? ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டு விட்டால் அதை ஒரு சாட்டாக வைத்து புதிய காதலை உருவாக்குகிறார்கள் தெரியுமா? சந்திரவதனா கூறிய கலந்து பேசி காதலிக்கிறார்கள் என்பது பொய். இங்கு கண்டதும் காதல் ஒன்று. காசு இன்னொன்று, கார், பங்களா, இன்னொன்று உடலமைப்பு. இவைகளைக் கண்டதும் காதல். இங்கு வெள்ளையினப் பெண்கள் கறுப்பின ஆண்களை கூடுதலாக நாடுவது ஏன்? கலந்து பேசிய காதலா? தயவுசெய்து எங்கள் நாட்டு கலாச்சாரத்தை இங்கே ஒப்பிடாதீர்கள். அந்த கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் மனம் தளரக்கூடாது. தரமான கேள்விகளை கேட்டு தரமான பதில்களை மக்களுக்கு உரைத்து நல்ல சமுதாயம் மலர வைப்பீர்களாக.

“கிளியின் கண் ஊரான்”

http://www.orupaper.com/issue57/pages_K__37

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உஹூம்.. உது பெண்கள் சமாச்சாரம். நான் உதுக்கு பதில் சுட்டுப்போட்டாலும் சொல்ல மாட்டன். ஏனெண்டா பிறகு டிஸ்கிறிமினேஸன் எண்டு சாஜ் பண்ணுப்பட விருப்பமில்லை.

Link to comment
Share on other sites

உஹூம்.. உது பெண்கள் சமாச்சாரம். நான் உதுக்கு பதில் சுட்டுப்போட்டாலும் சொல்ல மாட்டன். ஏனெண்டா பிறகு டிஸ்கிறிமினேஸன் எண்டு சாஜ் பண்ணுப்பட விருப்பமில்லை.

ஹா ஹா என்ன பிரின்ஸ் அண்ணா இவ்வளவு பயமா? தங்கை சப்போர்ட்டுக்கு இருக்கு அப்புறம் என்ன துணிஞ்சு சொல்லுங்கோ உங்கள் கருத்தை :wink: :lol::lol:

கோபிதா இவ்வளவும் வாசிச்சு இப்ப பதில் சொல்ல ஏலாது ஆறுதலா வாசிச்சு இதைப் பற்றி பதில் சொல்லுறன். ஒகே இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு பேப்பரில் தற்போது நடைபெற்றுவரும்

ஓரு தலை போகிற

விவாதம் :!:

இத் தேவை

தேவை தானா?

:roll: தேவையில்லையா? :roll:

ஓ..அல்லது...எமக்கு இப்போ..நேரமில்லையா??? :lol: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் கேள்விகள், சந்தேகங்கள் கேட்டவர்களுக்கும், அதற்கு விளக்கம் சொன்னவர்களுக்கும் வணக்கம்.

தயவு செய்து தயவு செய்து, நீங்கள் எல்லாம் வயது வந்தவர்கள், அனுபவசாலிகள், இப்படியான கேள்விகள் சந்தேகங்களை கேட்பது தவறு. அதுவும் நமது கலாச்சாரத்தை மற்றைய கலாச்சாரத்துடன் ஒப்பிடுவது தவறு. நீங்களே இப்படி சந்தேகங்களை எழுப்பினால், புலத்தில் பிறந்து வளரும் நமது எதிர்கால சந்ததி எப்படி உருவாகும். ஒரு கலாச்சார சடங்கை தவறு அல்லது தேவை தானா என்று பெரியவர்கள் கேட்டால், எதிர் காலத்தில் நமது கலாச்சாரம் அழிந்து போவதற்கு வழி கோலும், சந்திரவதனா அவர்கள் எழுதி இருந்ததை வாசிக்கும் போது அது சரியாகவே என் மனதில் பட்டது. ஏனெனில் சுந்தரியினதும் கிளியின் கண் ஊரானினதும் விளக்கங்களை வாசிக்கும் வரை எனக்கு சாமத்திய சடங்கு எதற்கு செய்கின்றார்கள் என்று தெரியாது.

விஞ்ஞான காலம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது விஞ்ஞான காலம் தான். ஆனால் ஒன்றை நினைத்துபாருங்கள்... சீனர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களது கலாச்சாரங்களை கொண்டாட்டங்களை சீனாவில் எவ்வாறு கொண்டாடுகின்றார்களோ அதே சிறப்புடன் கொண்டாடுவதை காணக்கூடியதாக இருக்கும்.... இந்த விஞ்ஞான யுகத்த்தில்..... விஞ்ஞான உலகை ஆழப்போகின்றார்கள்... பொறுத்திருந்து பாருங்கள்...

மற்றையது காதல்.... மேலை நாடுகளில் காதல் இல்லை.. வெறும் மோகம்...கிளியின் ஊரான் சொன்னது போல, கலந்து பேசி காதலிப்பது என்பது பொய். ஒரு உறவை கலத்து பேச முடியாது... கலந்து பேசி வியாபாரம் தான் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உஹூம்.. உது பெண்கள் சமாச்சாரம். நான் உதுக்கு பதில் சுட்டுப்போட்டாலும் சொல்ல மாட்டன். ஏனெண்டா பிறகு டிஸ்கிறிமினேஸன் எண்டு சாஜ் பண்ணுப்பட விருப்பமில்லை.

தங்கை ரசிகை துணையிருக்க பயமேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஙரழவநசிறீ"சுயளமையi"ஸஜஙரழவநசிறீ"Pசiளெ"ஸஉஹூம்.. உது பெண்கள் சமாச்சாரம். நான் உதுக்கு பதில் சுட்டுப்போட்டாலும் சொல்ல மாட்டன். ஏனெண்டா பிறகு டிஸ்கிறிமினேஸன் எண்டு சாஜ் பண்ணுப்பட விருப்பமில்லை.ஜஃஙரழவநஸ

ஹா ஹா என்ன பிரின்ஸ் அண்ணா இவ்வளவு பயமா? தங்கை சப்போர்ட்டுக்கு இருக்கு அப்புறம் என்ன துணிஞ்சு சொல்லுங்கோ உங்கள் கருத்தை :றiமெ: :னு :னு

கோபிதா இவ்வளவும் வாசிச்சு இப்ப பதில் சொல்ல ஏலாது ஆறுதலா வாசிச்சு இதைப் பற்றி பதில் சொல்லுறன். ஒகே இணைப்புக்கு நன்றிஜஃஙரழவநஸ

உங்கள் ஆறுதலான ஆழமான பதிலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் :lol:

Link to comment
Share on other sites

:idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea: :shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித வாழக்கை வட்டத்தில் பிறப்பு, யௌவனப்பருவம் எய்துதல், மரணம் எனபன உட்பட அடையாளம் காணக்கூடிய நிகழ்வுகளை வைபவங்கள் மூலம் கொண்டாடி மகிழும் வழக்கம் ஆதி காலந்தொட்டு உள்ளது. குறிப்பாக ஆசிய ஆபிரிக்க யுத கலச்சாரங்களில் உள்ளது. யுூத- கிறிஸ்தவ பண்பாட்டில் வந்த ஐரோப்பியரிலும் இது நடைமுறையில் இருந்ததோ தெரியவில்லை.

இந்தவகையில் பராயம் எய்துவதை கொண்டாடும் பழக்கம் தமிழரைப்போல யுூதர்களிடமும் இன்னமும் இருக்கிறது. நாளடைவில் மாறி வரும் நாகரிகத்தில் அவை குறைந்து போயின. குறிப்பாக நகரப்புறங்களில் வாழ்பவரிடம் அருகி வருகிறது. இதில் பெண்ணடிமைத்தனம் ஏதும் இருப்பதாக தெரியாவிட்டாலும் இதனை பெண் அடிமைத்தனத்தின் வடிவமாக மேற்கத்தைய (அ)நாகரிகத்தில் மூழ்கியிருக்கும் சில பெண்ணியவாதிகள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

சிலவருடங்களுக்கு முன்னர் போராட்டத்தில் தமிழ்பெண்களின் பங்கு என்பது பற்றி ஒரு விரிவுரையாற்றிய ராதிகா குமாரசாமி லண்டனிலும் புலம்பெயரந்த நாடுகளிலும் தமிழர்கள் சாமத்திய சடங்குகள் செய்வதை சுட்டிக்காட்டி தமிழ் பெண்கள் இன்னமும் விடுதலையடையவில்லை என குறிப்பிட்டிருந்தார். பொதுவாகவே கிராமத்து பழக்க வழக்கங்களை படித்தவர்கள் மற்றும் மேட்டுக்குடியினரும் விமர்சிப்பது வழக்கம் அந்த வகையில் இந்தச் சடங்கும் விமர்சிக்கப்படுகிறது.

புலம் பெயரந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் இனப்பிரச்சினையின் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள். அவர்கள் வேறுபட்ட சமூக பொருளாதார தளத்திலிருந்து வந்தவர்கள். கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் நகரப்புறங்களிலிருந்து வந்தவர்களைப்போல் தங்களது பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுப்பதில்லை. அந்த வகையில் இந்தச்சடங்கும் கொண்டாடப்படுகிறது.

இங்கு நடைபெறும் வைபவங்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட இளம்பெண் உட்பட பெண்களின் புூரண விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது. ஆகவே பெண்ணடிமைத்தனம் என்று கூறுவதற்கு எதுவுமில்லை.

வெறுக்கத்தக்க வி;டயம் என்னவென்றால் இந்த வைபவங்கள் வெறுமனே பகட்டுக்கு செய்யும் சங்கதியாகி விட்டது. இதனால் பணம் வீணாக விரயம் செய்யப்படுகிறது. பண்பாடு பழக்க வழக்கம் என்பதற்கு பதிலாக இவை ஒரு சினிமாத்தனமான போலியாக மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

சாமர்திய சடங்கு குறித்து முன்பும் களத்தில் பல விவாதங்கள் நடைபெற்றன. அதில் ஒரு தலைப்பை கீழே இணைக்கின்றேன் படித்து பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=235

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசி என்ன படம் மட்டும்தானா:?: :?: :!: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இப்பிடி சொல்கிறீர் :shock: :shock:

அப்போ இப்ப எந்த பக்க ஆசனத்தில் :?: :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் கேள்விகள்இ சந்தேகங்கள் கேட்டவர்களுக்கும்இ அதற்கு விளக்கம் சொன்னவர்களுக்கும் வணக்கம்.

தயவு செய்து தயவு செய்துஇ நீங்கள் எல்லாம் வயது வந்தவர்கள்இ அனுபவசாலிகள்இ இப்படியான கேள்விகள் சந்தேகங்களை கேட்பது தவறு. அதுவும் நமது கலாச்சாரத்தை மற்றைய கலாச்சாரத்துடன் ஒப்பிடுவது தவறு. நீங்களே இப்படி சந்தேகங்களை எழுப்பினால்இ புலத்தில் பிறந்து வளரும் நமது எதிர்கால சந்ததி எப்படி உருவாகும். ஒரு கலாச்சார சடங்கை தவறு அல்லது தேவை தானா என்று பெரியவர்கள் கேட்டால்இ எதிர் காலத்தில் நமது கலாச்சாரம் அழிந்து போவதற்கு வழி கோலும்இ சந்திரவதனா அவர்கள் எழுதி இருந்ததை வாசிக்கும் போது அது சரியாகவே என் மனதில் பட்டது. ஏனெனில் சுந்தரியினதும் கிளியின் கண் ஊரானினதும் விளக்கங்களை வாசிக்கும் வரை எனக்கு சாமத்திய சடங்கு எதற்கு செய்கின்றார்கள் என்று தெரியாது.

விஞ்ஞான காலம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது விஞ்ஞான காலம் தான். ஆனால் ஒன்றை நினைத்துபாருங்கள்... சீனர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களது கலாச்சாரங்களை கொண்டாட்டங்களை சீனாவில் எவ்வாறு கொண்டாடுகின்றார்களோ அதே சிறப்புடன் கொண்டாடுவதை காணக்கூடியதாக இருக்கும்.... இந்த விஞ்ஞான யுகத்த்தில்..... விஞ்ஞான உலகை ஆழப்போகின்றார்கள்... பொறுத்திருந்து பாருங்கள்...

மற்றையது காதல்.... மேலை நாடுகளில் காதல் இல்லை.. வெறும் மோகம்...கிளியின் ஊரான் சொன்னது போலஇ கலந்து பேசி காதலிப்பது என்பது பொய். ஒரு உறவை கலத்து பேச முடியாது... கலந்து பேசி வியாபாரம் தான் செய்யலாம்.

சும்மா...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி :lol:

சீனர்கள் அவர்களது உணவுமுறையையும் மொழியையும் கூட விடமாட்டார். இரு சீனர்கள் சந்தித்தால் அவர்களின் மொழியில் தான் கதைத்து கொள்வதை காணமுடிகிறது :idea:

நீங்கள் என்ன சொல்;கிறீர்கள் எமது கலாச்சாரங்களையும் கொண்டாட்டங்களையும் அப்பிடியே தொடர்ந்தும் கொண்டாடவேண்மும் என்றா..உங்கள் அகராதியில் காதல் எப்பிடி இருக்க வேண்டும் என்று சும்மா சொல்லுங்கள்... :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் கேள்விகள்இ சந்தேகங்கள் கேட்டவர்களுக்கும்இ அதற்கு விளக்கம் சொன்னவர்களுக்கும் வணக்கம்.

ல் காதல் இல்லை.. வெறும் மோகம்...கிளியின் ஊரான் சொன்னது போலஇ கலந்து பேசி காதலிப்பது என்பது பொய். ஒரு உறவை கலத்து பேச முடியாது... கலந்து பேசி வியாபாரம் தான் செய்யலாம்.

சும்மா...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி :lol:

சீனர்கள் அவர்களது உணவுமுறையையும் மொழியையும் கூட விடமாட்டார். இரு சீனர்கள் சந்தித்தால் அவர்களின் மொழியில் தான் கதைத்து கொள்வதை காணமுடிகிறது :idea:

நீங்கள் என்ன சொல்;கிறீர்கள் எமது கலாச்சாரங்களையும் கொண்டாட்டங்களையும் அப்பிடியே தொடர்ந்தும் கொண்டாடவேண்மும் என்றா..

வணக்கம் கோபிதா, உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிகின்றேன்.

அதற்கு முன்னர் ஒரு சிறிய அனுபவத்தை சொல்ல நினைக்கின்றேன். 2002 ம் ஆண்டு நீண்ட காலத்தின் பின்பு யாழ்ப்பாணத்துகு தரைவழியாக சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட அனுபவம். இலங்கையில் எல்லைகளைக் கடந்து, ஈழத்தின் வரிக்கட்டுப்பாடு சோதனைச்சாவடி. எங்கும் தமிழ் எதிலும் தமிழ். தமிழ் மட்டுமே. அதை விட நாம் சென்ற வாகனத்தை பதிவதற்காக ஒரு படிவம் கொடுக்கப்பட்டது. அந்தப்படிவம் ஜப்பானிய பயண அனுபவங்களை நினைவு படுத்தின. படிவம் முற்றிலும் தமிழில் இருந்தது. நான் ஒரு கணம் திகைத்து விட்டேன். காரணம் அந்த படிவத்தில் அடிச்சட்டக இலக்கம் என்க்கேட்கப்பட்டிருந்தது. நான் அறிந்திராத சொல்லாக இருந்தாலும் ஊகிக்க கூடியதாக இருந்தது. அப்போது ஜப்பானியரின் மொழிக்கொள்கையைப்போல ஈழத்திலும் இருப்பதாக தோன்றியது. ஜப்பானியர்கள் அவர்களது அந்த கொள்கையால் அடைந்த நன்மைகள் பல. எந்த ஒரு வேற்று நாட்டு மொழி ஆதிக்கமும் இல்லாமல் உலக சந்தையில் கோலோச்சினார்கள்... காரணம் அவர்கள் திறமையோடு அவர்கள் வேற்று கலாச்சாரங்களுக்கும் மொழிப்பரவல்களுக்கும் இடங்கொடுக்காமையுமேயாகும்.

நாம் ஜப்பானியர்களுக்கோ சீனர்களுக்கோ சிறிதும் சழைத்தவர்கள் அல்ல. சில ஜப்பானிய மற்றும் சீன நண்பர்களே இதனைத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் நம்மில் பலர், வேற்று கலாச்சார மோகத்திலும், வேற்று மொழிகளின் பேர் கொண்ட ஆர்வங்களிலும் நேரத்தையும் திறமைகளையும் காட்ட முன் நிற்பதால் எம்மால் சாதனைகள் பல செய்து நமக்கென ஒரு இடம் பிடிக்க முடியவில்லை. ( ஈழத்தில் இருப்பவர்கள் சாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது)

ஒரு முக்கியமான் விடயம், நான் அறிந்த வரை, குடியேற்ற நாடுகாளாகிய கனடா, ஆஸ்திரேலியா தவிர்ந்த அனேக நாடுகளில் இன்றும், ஒவ்வொரு மனிதனையும் அவனது வம்சாவளியினை சுட்டிக்காட்ட சொல்கின்றார்கள். முக்கியமாக படிவங்களில். ஒரு 3 வாரங்களின் முன்னர் நடந்த உண்மைச்சம்பவம். ஒரு இந்திய வம்சாவளிப்பெண் தனது படிவம் ஒன்றில் ஆங்கிலேயர் என் பதிவு செய்ததை எதிர்த்தார்கள். அந்தப் பெண் சொன்ன காரணம். அவர் இங்கிலாந்தில் பிறந்தவர், இந்தியா எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.. நான் எப்படி இந்தியர் ஆவேன். ஆன போதிலும் இந்திய வம்சாவளி என்று பதிந்த பின்னர் தான் அந்த படிவம் முழு மனதுடன் ஏற்றுக்க்கொள்ளப்பட்டது.

ஆக நாம் என்ன தான் கலாச்ச்சாரதினை மாற்றினாலும் எங்கு சென்று வாழ்ந்தாலும் நமது வம்சாவழி மாறப்போவது இல்லை.

ஒரு மனிதனை, அவனது கலாச்சார பழக்க வழக்கங்கள், மொழி, வம்சாவழி ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு, தமிழர், ஆங்கிலேயர், ஒல்லாந்தர், சீனர் என அழைக்கின்றோம். எமது கலாச்சார பழக்கவழக்கங்களை நாம் தொடராது விட்டால், இன்று புலத்தில் உருவாகிய எமது சந்ததியின் நிலை இன்னும் ஒரு சில வருடங்களில் இது தான். ஒரு வம்சாவழி, இன்னொரு அல்லது கலந்து பட்ட ஒரு கலாச்சாரம், வேற்று மொழிப்பாவனை. இது தான் அவர்களின் வாழ்க்கை முறையாக இருக்கும். ஆக இன்னும் சில காலத்தில் நமது சந்ததியினை எப்படி அழைப்பது? கலாச்சாரத்தை தொடராத நமது சந்ததியினை பார்ப்பவர்களை இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ண வைக்கும். அது புதியதொரு இனத்தினை உருவாக்கும் ( பல நாடுகளின் எல்லைகளில், பல புதிய இனங்க்கள் தோன்றி இருக்கின்றன். பெயர்கள் வாயில் கூட நுழைய கஸ்டமாக இருக்கின்றன) . ஆக நீங்கள் சுயமாக சிந்தித்து செயல்ப்படுங்கள்.

என்னுடைய அகராதியில காதல் என்பதுக்கு சும்மா ஒரு விளக்கம் குடுத்து இருக்கின்றன். அதை அப்படியே இங்கு தருகின்றேன். தப்பாக இருந்தால் அடிக்க வராதீர்கள்.

உண்மைக்காதல் அழியாது என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றன்..... அது என்ன உண்மை பொய் என்று எனக்கு தெரியவில்லை.

ஒரு மனைவி கணவனிடமும், ஒரு கணவன் மனைவியிடமும் சந்தர்ப்ப சூழ் நிலைக்களுக்கு ஏற்ற மாதிரி உறவு முறையினை வளர்க்க வேண்டும் .(சந்தர்ப்பவாதிகளாக அல்ல) அதாவது ஒரு அன்னையாக அல்லது தந்தையாக, நண்பனாக அல்லது நண்பியாக, காதலனாக அல்லது காதலியாக, ஒரு நல்ல ஆசானாக இருக்க வேண்டும். கணவன் அல்லது மனைவி ஒரு தப்பு செய்தால், அன்னையாக அல்லது தந்தையாக அல்லது நண்பனாக அல்லது நண்பியாக எண்ணி, அந்த தப்பு எதிர்காலத்தில நடக்கா வண்ணம் அறிவுரை கூறி அல்லது அன்புக்கட்டளை இட்டு வாழ வேண்டும். இப்படி வாழும் கணவன் மனைவிக்கு இடையில் அல்லது காதலன் காதலிக்கு இடையில் இருப்பது தான் காதல்.... இதில நல்ல காதல் கெட்ட காதல், உண்மைக்காதல் பொய்க்காதல் எல்லாம் இல்லை.....

Link to comment
Share on other sites

ஒரு முக்கியமான் விடயம், நான் அறிந்த வரை, குடியேற்ற நாடுகாளாகிய கனடா, ஆஸ்திரேலியா தவிர்ந்த அனேக நாடுகளில் இன்றும், ஒவ்வொரு மனிதனையும் அவனது வம்சாவளியினை சுட்டிக்காட்ட சொல்கின்றார்கள். முக்கியமாக படிவங்களில். ஒரு 3 வாரங்களின் முன்னர் நடந்த உண்மைச்சம்பவம். ஒரு இந்திய வம்சாவளிப்பெண் தனது படிவம் ஒன்றில் ஆங்கிலேயர் என் பதிவு செய்ததை எதிர்த்தார்கள். அந்தப் பெண் சொன்ன காரணம். அவர் இங்கிலாந்தில் பிறந்தவர், இந்தியா எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.. நான் எப்படி இந்தியர் ஆவேன். ஆன போதிலும் இந்திய வம்சாவளி என்று பதிந்த பின்னர் தான் அந்த படிவம் முழு மனதுடன் ஏற்றுக்க்கொள்ளப்பட்டது.

வணக்கம் சும்மா குறுக்கிடுவதற்க்கு மன்னிக்கவும்

சுவிற்சலாந்திலும் நீங்கள் பிரஐாவுரிமை பெற்றால் சுவிற்சலாந்தவர் எண்டு தான் பதியனும் இலங்கை வம்சாவளி எண்டு பதிய இயலாது ஏனெனில் சுவிற்சலாந்து பிரஐாவுரிமை உங்கள் கைகளில் கிடைத்த மறுநிமிடம் உங்கள் இலங்கை பிரஐாவுரிமை கையை விட்டு போய்விடும்

(சிலர் சொல்கிறார்கள் 2உம் வைத்திருக்கலாம் எண்டு நான் கேட்டதுக்கு சொன்னார்கள் தக்கவைக்க இயலும் எண்டு ஆணால் பாவனை செய்ய ஏலாது எண்டு வம்பர் தான் சொல்லனும் பதிலை)

சும்மா உங்கள் தலைப்பை குளப்புவதாக என்ன வேண்டாம்

நன்றீ

வணக்கம்

:oops: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

உண்மைக்காதல் அழியாது என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றன்..... அது என்ன உண்மை பொய் என்று எனக்கு தெரியவில்லை

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

மகனே காதலித்து இருக்கிறீரா ????

இல்லையாாாா அப்ப அத முதலில செய்யும்

:evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகனே காதலித்து இருக்கிறீரா ????

இல்லையாாாா அப்ப அத முதலில செய்யும்

யோவ் சின்னப்பு சார் இப்ப்டி மொட்டையா சொன்னா எப்படி அதற்கு வழியும் பண்ணிக் கொடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சும்மா குறுக்கிடுவதற்க்கு மன்னிக்கவும்

சுவிற்சலாந்திலும் நீங்கள் பிரஐாவுரிமை பெற்றால் சுவிற்சலாந்தவர் எண்டு தான் பதியனும் இலங்கை வம்சாவளி எண்டு பதிய இயலாது ஏனெனில் சுவிற்சலாந்து பிரஐாவுரிமை உங்கள் கைகளில் கிடைத்த மறுநிமிடம் உங்கள் இலங்கை பிரஐாவுரிமை கையை விட்டு போய்விடும்

(சிலர் சொல்கிறார்கள் 2உம் வைத்திருக்கலாம் எண்டு நான் கேட்டதுக்கு சொன்னார்கள் தக்கவைக்க இயலும் எண்டு ஆணால் பாவனை செய்ய ஏலாது எண்டு வம்பர் தான் சொல்லனும் பதிலை)

சும்மா உங்கள் தலைப்பை குளப்புவதாக என்ன வேண்டாம்

நன்றீ

வணக்கம்

:oops: :oops: :oops: :oops: :oops:

சின்னப்பு வணக்கம்.

பிரஜாவுரிமை, வம்சாவளி, இனம் என்பன வெவ்வேறு. பிரஜாவுரிமை அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கும் நாட்டினது இறைமைகளுடனும் சம்பந்தப்பட்டது.

பிரஜாவுரிமை Nationality

வம்சாவளி Ethnic Origin

இனம் Race

ஒரு உதாரணம், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், பிரித்தானியாவில் 3 மொழிகள் இருந்தன. ஆங்கிலம், வெல்ஸ், கேலிக். கேலிக் என்ற மொழி காலப்போக்கில் இல்லாமல் போய் விட்டது.. இன்றும் சிலர் பிரித்தானியாவின் வடக்கு தீவுகளில் பேசுகின்றார்கள்.

ஆங்கிலம் பேசுபவர்கள் ஆங்கிலேயராகவும், வெல்ஸ் பேசுபவரை வெல்ஸ் என்றும், கேலிக் பேசியவரை ஸ்கொட்டிஸ் என்றும் அவர்களுடைய கலாச்சார பழக்க வழக்கங்களினதும் மொழியின் அடிப்படையிலும் அழைத்தார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் பிரித்தானிய பிரஜைகள் தான். சின்னப்பு... ஸ்கொட்டிஸ் காரர்கள், அதாவது ஆண்களின் கலாச்சார உடை கில்ட் என்று பெயர். நம்மூரில் நமது பெண்கள் போடும் முழங்கால் அளவு பாவாடை போல இருக்கும்... அதில ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், அதனை அணியும் போது, உள்ளாடை அணிவது கிடையாது. அது அவர்களின் உடை சம்பந்தமான கலாச்சாரம். இன்றும் கூட திருமணங்களுக்கு அந்த கில்ட் தான் அணிகின்றார்கள்.... நாம் சூட்ஸ் போடுறம்...இல்லை என்றால்... என்னவோ குர்த்தாஸ் என்ற ஒன்றை அணிகின்றோம்.

உங்களுடைய பிரதான பிரஜாவுரிமையின் நாட்டின் சட்டத்துக்கு அமைய இரண்டு பிரஜாவுரிமையை இருக்காலாம். உதாரணத்துக்கு நீங்கள் இலங்கை குடியுரிமையை விரும்பினால், இலங்கைக்கு சென்று, குடியுரிமை பெறலாம் உங்கள் தற்போதைய குடியுரிமையை பொறுத்து, பணம் வேறு படலாம். எந்த ஒரு பிரஜாவுரிமை உடையவரும் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெறலாம், அத்தோடு தனது பிரஜாவுரிமையையும் தக்க வைக்கலாம். residentship or second home என்று சொல்லுவார்கள். நாட்டுக்கு நாடு பெயர் மாறுபடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

மகனே காதலித்து இருக்கிறீரா ????

இல்லையாாாா அப்ப அத முதலில செய்யும்

:evil: :evil:

கேள்வியையும் கேட்டு பதிலையும் நீங்களே சொல்லிட்டு...செய்ய வேண்டியதை மட்டும் என்னை செய்ய சொன்னால் எப்படி சின்னா...... :oops: :oops: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சின்னப்பு சார் இப்ப்டி மொட்டையா சொன்னா எப்படி அதற்கு வழியும் பண்ணிக் கொடும்

பாருங்க கறுப்பி....சின்னா இப்படி நடு றோட்டில விட்டிட்டார்...... ஆசையைக்காட்டி மோசம் பண்ணுற மாதிரி இருக்கு....... யாரும் கிடைத்த்திருந்தால் லவ் பண்ணாமல் விட்டிருப்பேனா......... நானே கவலையில இருக்கின்றன்... இதுக்குள்ள சின்னப்பு வேற......

Link to comment
Share on other sites

சின்னப்புக்கு இப்ப 60ம் கலியாணமாம் சும்மா இவரிட்டை கேளும் கலியாணத்தை பற்றி அதுவு காதல் கலியாணத்தை பற்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.