Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியலில் ஜெயலலிதாவிற்கு கிடைத்த துருப்புச்சீட்டு விடுதலைப் புலிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக அரசியலில் ஜெயலலிதாவிற்கு கிடைத்த துருப்புச்சீட்டு விடுதலைப் புலிகள்.

ஜ திங்கட்கிழமைஇ 5 மார்ச் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

சென்றமாதம் தமிழக அரசாங்கத்தின் ஆதரவில் பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் சங்கமம் என்ற நிகழ்ச்சி ஒன்று சென்னையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்ட சங்கமம் நிகழ்சியினை கலைஞர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியே முன்னின்று நடாத்தி இருந்தார். அத்துடன் இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஏற்பாட்டாளராக முன்னைநாள் வெரிதாஸ் வானொலி பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் முக்கிய பங்காற்றி இருந்தார். குறிப்பிட்ட சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக இன்று இரவு ஜெயா தொலைக்காட்சி பரப்பான நிகழ்ச்சி ஒன்றை சங்கமம் திடுக்கிடும் உண்மைகள் அம்பலம் என்ற தலைப்பில் ஒலிபரப்பியது. ஆரம்பத்தில் கலைஞரையும் கனிமொழியையும் விமர்சிக்கும் நிகழ்ச்சி என எதிர்பார்க்கப்பட்டபோதும் குறிப்பிட்ட நிகழ்ச்சியானது முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளை தமிழக அரசே ஆதரிப்பது போலவும் ஜெகத் கஸ்பார் விடுதலைப் புலிகளுக்காக உலகம் பூராகவும் திரிந்து கோடிக்கணக்கில் நிதி சேகரிப்பதாகவும் சென்றவருடம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற்பட்டதாக கூறப்படும் நாச்சிமுத்து சோக்கிரடிஸ் என்பவருக்கும் ஜெயத் கஸ்பாருக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் நிகழ்ச்சியில் பரபரப்பாக ஒலிபரப்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற திருவாசகம் வெளியீட்ட விழாவிற்கு சொகிரடிஸ் இவரை அழைத்திருந்ததாகவும் குறித்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பட்ட அதே வேளை குறிப்பிட்ட சங்கமம் நிகழ்ச்சியின் ஊடாக ஜெயகத் கஸ்பாருக்கு பெரும் தொகையான பணத்தினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும் குறித்த பணம் யாருக்கு கொடுக்கப்பட உள்ளது என்ற கேள்வி குறியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியினை மத்திய மாநில புலனாய்வு துறைக்கு சமர்பிப்பிப்பதாகவும் தெரிவிக்கபட்டது. இவற்றுக்கெல்லாம் மேலாக சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் என்ற கிறீஸ்தவ நிறுவனத்திற்கும் புலி முலாம் பூசியது வேதனைக்குரியது. இதன்மூலம் பார்பன தொலைக்காட்சியான ஜெயாரி.வி கிறீஸ்தவ மதத்திற்கு சேறு பூசும் செயலையே செய்துள்ளதுடன் ஜெயகத் கஸ்பார் ஒரு காங்கிரஸ் காறன் என்பதை சொல்ல மறந்தது ஏனோ?

ஆட்சியை இழந்திருக்கும் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான துரப்பு சீட்டாக விடுதலைப்புலிகள் என்ற நாமத்தை பயன்படுத்தி வருகிறார். தமிழகத்தில் என்ன நடந்தாலும் அது விடுதலைப்புலிகளை ஊடுருவவிட்டுவிட்டார்கள் அதனால்தான் இந்த பிரச்சினை என பிரசாரம் செய்து வருகிறார்கள். வெறும் பதவிக்காக கீழ்தரமான முறையில் ஜெயலலிதா ஈழத்தமிழரின் பிரச்சினையை பயன்படுத்தி வருகிறார். விடுதலைப்புலிகளுக்கும் ஈழத்தமிழருக்கும் எதிராக கீழ்தரமான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜெயலலிதாவுடன் சாமி சேர்ந்திருப்பதுதான் வேதனையான விடயம். சாமிக்கு எப்போது ஞானம் பிறக்கும்? இந்த விடயங்களில் புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் விழிப்பாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும்.

http://www.nitharsanam.com/?art=22197

ஜெயலலிதா தன் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டு கொண்டு இருக்கிறார்... தமிழக மக்களின் நிலைப்பாட்டில் ஈழத்தமிழருக்கான ஆதரவு என்பது புலிகளை ஆதரிப்பது என்னும் அளவுக்கு இருக்கும் போது, இப்படியான புலி எதிர்ப்பு பிரச்சாரம் என்பது கலைஞருக்கு மேலும் நல்ல விளம்பரத்தைத்தான் கொடுக்கும்....

கலைஞர் ஆயுதம் இங்கிருந்து கடத்த கூடாது எண்று அறிக்கை விட்டார். வைகோவும் அதைத்தான் வேறுவிதமாக சொன்னார்... தமிழீழ அரசியல் பொறுப்பாளரும் நாங்கள் அப்படி கடத்த மாட்டோம் எண்று அவர்களுக்கு பதிலும் அளித்து இருக்கிறார்...இது இந்திய ஊடகங்களில் வந்தது....!

படகில் கடலில் பயனித்த இயந்திர கோளாரான படகு புலிகளுக்கு சொந்தமானது, அது இலங்கை கரை ஒண்றில் தாக்குதல் நடத்த வந்ததாகத்தான் இப்போது இந்திய தரப்பு சொல்கிறது.... அதில் வந்த புலிகள் இந்திய படைகளை தாக்கவில்லை, தாக்க முனையவும் இல்லை. இலங்கை படைகளாக இருந்து இருந்தால் அருகில் வந்த காவல் படகை தகர்த்து இருப்பார்கள் என்கிறது இந்திய செய்திகள்.... இவை புலிகள் மீது இந்தியர்கள் நன்மதிப்பை கெடுப்பதாக இல்லை...

பிடி கடத்தினார்கள், சைக்கிள் போள்ஸ் கடத்தல் என்பது சாதாரண மக்கள் ஆண்டாண்டு காலமாக செய்வது.. முன்னர் சாறங்களும் சேலைகளையும் கடத்தினார்கள் இப்போ உதிரிப்பாகங்கள்.... அதை புலிகளுடன் தொடர்பு படுத்துவது சரியானதாக இருக்காது என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்வர்...!

அவவுக்கு சோபன்பாபு கதைக்காவிட்டாலும் அதுக்கு புலிகள்தான் காரணம் எண்ணுவாள்.

சோபன்பாவுவின்ரை கதையை கருணாநிதி சட்டசபையில் கேட்டபோது மயங்கி விழுந்து அனுதாபம் தேடினவள். தூத்தேறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவவுக்கு சோபன்பாபு கதைக்காவிட்டாலும் அதுக்கு புலிகள்தான் காரணம் எண்ணுவாள்.

சோபன்பாவுவின்ரை கதையை கருணாநிதி சட்டசபையில் கேட்டபோது மயங்கி விழுந்து அனுதாபம் தேடினவள். தூத்தேறி

இப்பவும் சோபன் பாபுவோட தொடர்பிருக்கோடா தம்பி? :lol::D:D:D

இப்பதான் அவவுக்கு எல்லாத்துக்கும் உடன்பிறவா தோழி இருக்கின்றா! :lol::D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் அவவுக்கு எல்லாத்துக்கும் உடன்பிறவா தோழி இருக்கின்றா! :lol::D:D:D

அவா பொம்பிளைத்தோழி எல்லோ? :P :P :P

அண்ணை என்ரை வாயை கிளறவேண்டாம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் மிகவும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் எங்களது வாழ்விற்கான போராட்டத்தை இருவரும் தங்களது இத்துப்போன அரசியலுக்காக பயன்படுத்துவது தான்..

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் சென்ற தமிழக சட்ட மன்றத்தேர்தலின் போது ஜெயா தொலைக்காட்சியில், கலைஞ்சர் அவர்கள் கதை எழுதிய தமிழகத் திரைப்படம் மொன்றின் தயாரிப்பாளர்கள் ராஜீவ் கொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று அடிக்கடி கலைஞ்சருக்கு எதிராக செய்தி போட்டார்கள். அப்படி செய்தி போட்டும் கலைஞ்சர் முதலமைச்சர் ஆவதினை ஜெயலலிதாவினால் தடுக்க முடியவில்லை. பதவி ஆசைக்காக எந்த கீழ்த்தரமான பொய்யான செய்திகளையும் வெளியிடுவதற்கு ஜெயலலிதாவின் கட்சியினர் தயங்க மாட்டினம். கனடாவில் எங்கட சனம் காசு கொடுத்து உந்த ஜெயாத் தொலைக்காட்சியினைப் பாக்கினம். அதில் செய்திகளில் அடிக்கடி ஈழ எதிர்ப்பு வந்தாலும் இவைக்கு கவலை இல்லை. சூடு சொறனை இல்லை.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஜெகத் கஸ்பார் அடிகளாரின் பேட்டியினை இங்கே பார்க்கவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20187

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.