Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன் கனவு நனவாகும்... அதுவரை தூங்காமல் இரு!"-ஆனந்த விகடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உன் கனவு நனவாகும்... அதுவரை தூங்காமல் இரு!"

"உங்களால் இப்போது ஆயுதம் ஏந்திப் போராட முடியுமா?"

"போராடாமல் புலியாக இருக்க முடியாது. மரணம் வராது என்கிற உத்திரவாதத்தோடு எந்த ஈழத் தமிழனும் போராட வருவதில்லை; வரவும் மாட்டார்கள்!"

இதயத்துக்கு நெருக்கமான தனது இரண்டு கரங்களையும் அடுத்தடுத்து இழந்த துயரத்தில் தவிக்கிறது இயக்கம். அண்ணன் ஆன்டனும் இல்லை; தம்பி தமிழும் இப்போது இல்லை!

இருபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் விடுதலைப் போராட்டத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட, 'டி.எஸ்.அண்ணா' என ஈழ மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், இலங்கை ராணுவத்-தின் குண்டுவீச்சில் மரணமடைந்திருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப.தமிழ்ச்செல்வன், 80&களில் களம் இறங்கிய புலி. யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரி மட்டுவில் பிறந்தவர்.

அணி அணியாக ஈழப் போராளிகளைத் தேர்ந்தெடுத்து, இந்திய அரசு ஆயுதப் பயிற்சி கொடுத்தபோது இணைந்தவர் தமிழ்ச் செல்வன். புலிகளின் நான்காவது படையணியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பயிற்சி எடுத்துக்கொண்டு, பிரபாகரனின் தனி இணைப்பாளராக, தகவல் இணைப்பாளராகப் பணியாற்றி யவர்.

1987&ல் ஈழத்துக்குத் திரும்பிய தமிழ்ச்செல்வன், உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த திலீபனுக்-குப் பிறகு யாழ் மாவட்டச் சிறப்புத் -தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவம் இலங்கையில் தங்கியிருந்த காலத்-தில், அப்போதைய அதிபரான பிரேமதாசாவுடன் புலிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய பரமு மூர்த்தி, தமிழ்ச்செல்வனின் அண்ணன். தம்பி தமிழ்ச் செல்வன் அரசியல் துறைப் பொறுப்பாளராக உயர்ந்த பிறகும் பரமு மூர்த்தி இன்றும் ஒரு போராளி-யாக இருப்பது, விசித்திர-மான தியாகம்தான்.

பொதுவாகச் சிரித்த முகமாக வளைய வரும் தமிழ்ச்செல்வன், யுத்த களத்தில் முழு பலத்தோடு போராடும் புலி. 'ஓயாத அலைகள் - மூன்று' என்ற பெயருடன் வன்னிப் பெரு நில மீட்புப் போர் ஓர் உதாரணம்! புலிகளின் போரியல் வரலாற்றிலேயே மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த யுத்தம் அது. சில நூறு போராளிகள் சேர்ந்து, இலங்கை அரசின் 20,000 ராணுவத்தினரைச் சுற்றி வளைத்துத் தாக்கி துவம்சம் செய்த போரில் கட்டளைத் தளபதி-யாகச் செயல்பட்டவர் சுப.தமிழ்ச்-செல்வன். அந்தப் போரில் ஒரு பெண் போராளியாக இருந்து களம் கண்டவர் அவரின் காதல் மனைவி.

நடனம், புகைப்படம், ஓவியம் எனக் கலைகளின் மீதான காதல்-தான் தமிழ்ச்செல்வனையும் அந்தப் பெண் போராளியையும் இணைத்தது. ஒன்பது வருட காதல் வாழ்க்கைக்குச் சான்றாக எட்டு வயதில் ஒரு மகளும், மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை யில் இணைந்தாலும், குழந்தை-களைப் பெற்றுக்கொண்டாலும், அவரின் மனைவி இப்போதும் போராளியாகக் களத்தில் நின்று போராடுகிறார். புலிகளின் தொலைக்-காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்கிறார்.

பூநகரியில் உள்ள இலங்கைப் படைத்தளத்தை 'தவளைப் பாய்ச் சல்' என்ற பெயரில் புலிகள் தாக்கிய-போது, அதில் தளபதியாக நின்று போராடிய தமிழ்ச்செல்வனின் கால்கள் சிதைந்தன. உயிருக்குப் போராடிய அவரைக் காப்பாற்றியது புலிகளின் மருத்துவப் பிரிவு. "ஆரம்ப காலத்தில் சின்ன காயங்களுக்குக் கட்டுப் போடக் கூட நாங்கள் தமிழ்நாட்டுக்-குப் போக வேண்டியிருந்தது. போகிற வழி-யிலேயே எத்தனையோ பேர் கடலில் வீர-மரணம் அடைந்திருக்கிறார்கள்" என்ற தமிழ்ச்செல்வன், புலிகளின் மருத்துவத் துறையை நவீனமய-மாக்கிக் காட்டினார்.

தமிழ்ச்செல்வன் கொல்லப் பட்ட வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் இரவு, கிளிநொச்சியில் உள்ள அவரது இயக்க வசிப்பிட மான கனகாம்பிகைக் குளத்துக்கு அருகில் உள்ள வீட்டில்தான் தங்கி யிருந்தார். புலிகளின் அரசியல் துறை நடுவப் பணியகம் அது. எப்போதும் தாக்குதல் ஆபத்து உள்ள இடமாகக் கருதப்படுவதால், அவசர அவசியமில்லாமல் புலி களின் தளபதிகள் யாரும் அங்கு செல்வதில்லை.

வெள்ளிக்கிழமை குழந்தை களையும் மனைவியையும் பார்த்து-விட்டுத் தனது மெய்க் காப்பாளர்-களுடன் சென்ற தமிழ்ச்செல்வன், வழக்கமாகத் தவிர்க்கும் அந்தக் குடியிருப்பிலேயே ஏனோ அன்று தங்கினார். வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்தரை மணிக்கு அந்த இடத்தின் மீது சில வேவு விமானங்கள் பறக்க, சந்தேக மடைந்த மெய்க்காப்பாளர்கள் சுதாரிப்பதற்குள் பொழிந்தது குண்டு மழை. அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயன்ற-போது, இருபது நிமிட இடைவெளியில், காலை ஆறு மணிக்கு அவர் பதுங்கியிருந்த பதுங்குகுழி மீதே குண்டுகள் வீசப்பட, ஐந்து மெய்க்காப்பாளர்களுடன் இறந்து போனார் தமிழ்ச்செல்வன்.

புலிகளின் தத்துவப் பேராசான் ஆன்டன் பாலசிங்கம் உடல்நலம் குன்றிய பிறகு, அந்த இடத்தை இட்டு நிரப்பக் கிடைத்த ஆலோசக-ராக இருந்தவரின் இழப்பு, இட்டு நிரப்ப முடியாதது.

இப்போது புலிகளின் முன்னால் உள்ள முக்கியமான கேள்வி... ‘தமிழ்ச்செல்வனைக் குறிவைத்துச் சுட்ட இலங்கை அரசுக்கு, உள்ளுக்-குள்ளிருந்தே துப்புக் கொடுத்தது யார்?’

தமிழ்ச்செல்வனைப் பற்றிய யாழ் அகத்தியனின் கவிதை ஒன்று அவரது மரணத்தைப் பாடுகிறது இப்படி...

'உன் கல்லறையில் நீ

தூங்கு முன் நீ கண்ட

தமிழீழக் கனவு நனவாகும்

அதுவரை நீ தூங்காமல் இரு!'

டி.அருள்எழிலன்

-ஆனந்த விகடன்,

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=356799 - கருத்துக்கள உறவு 'யாழ் அகத்தியனின்' கவிதை வரிகள் முழுமையாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.