Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா தமிழ்ஸ் அறிவது!

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு சிறீ லங்காவின் அறுவதாவது சுதந்திரதினமான பெப்ரவரி நாங்காம் திகதியை கறுப்புப்பட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடும்படி அறிவித்து இருக்கின்றது.

இதை உலகம் முழுதும் தமிழர் கறுப்புபட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடலாம் தானே? இப்படி துக்கதினமாக முன்பு எப்போதோ கொண்டாடியதாக நினைவு இருக்கின்றது.

யாழ் களஉறவுகள், வாசகர்கள் நீங்கள் வாழும் நாடுகளில் சிறீ லங்காவின் சுதந்திர தினத்தை துக்கதினமாக கொண்டாடுறீங்களோ?

உங்கள் நாடுகளிலும் இப்படி துக்கதினமாக கொண்டாடப்படும் தகவல்களை இங்கு இணைச்சுவிடுங்கோ.

எங்கட ஒட்டுமொத்த தமிழரிண்ட வாழ்க்கைகள் நாசமாக்கப்பட்டு இருக்கிது. இண்டைக்கும் மூண்டு பேர தென்மாராட்சியில தமிழ் சினிமா ரவுடிகளிண்ட ஸ்டைலில சாக்காட்டிப் போட்டாங்கள். சிறீ லங்கா எண்டாவே இப்ப துக்கம் எண்டுதான் பொருள்கொள்ள வேண்டி இருக்கிது.

கறுப்புபட்டி அணிந்து உங்கள் துக்கங்களை உலகம் எங்கும் பகிர்ந்துகொள்ளுங்கோ..

நன்றி!

வணக்கம் எல்லாருக்கு அக்சுவலா அவுஸ்ரெலிய யாழ்கள மெம்பர்ஸ் மற்றும் அவுஸ்ரேலிய டமிழ்சே இதை கொஞ்சம் வாசித்து சிந்தித்து செயற்படுவீர்கள் என்று நினைக்கிறேன் :wub: சிறிலங்காவின் சுகந்திர தினமான பெப்பிரவரி 4 திகதி (திங்கட்கிழமை) அவுஸ்ரெலியாவில் இருக்கு டமிழ்ஸ்சை கையில் கறுப்புபட்டி அணிந்து வேலைதளங்களிற்கும்,பாடசாலைகள??ற்கும்,பல்கலைகழங்களிற்கும் செல்லுமாறு அவுஸ்ரெலிய தமிழ் இளையோர் அமைப்பினர் அன்புடன் கேட்டு கொள்கிறார்கள் :) இதற்கு அவுஸ்ரெலிய டமிழ்சின் பூரண ஆதரவை அவர்கள் எதிர்பார்கிறார்கள் :wub:

Wear a black armband on Monday February 4 2008

tyomodui4.jpg

February 4 2008 is the Sri Lankan Independence Day, but since that day 60 years ago, the Tamils inhabiting that island have only witnessed discrimination, suffering, torture and genocide at the hands of the Sri Lankan government. :blink:

Tamil Youth Organisation of Australia encourages you to wear a black armband to work/school/uni on Monday Feb 4 in solidarity with the native Tamils of NorthEast Sri Lanka, and explain to your collegues that whilst many other countries celebrate their independence, the Tamils of the NorthEast are mourning this day as it was day that they were granted their death sentence. They have seen nothing but death, discrimination and destruction over the last 60 yrs. :huh:

We hope to be distributing black armbands to many of the Tamil shops within the next few days. Please direct your family/friends to pick one up over the course of this week, or alternatively, make a black armband themselves. :wub:

For info and statistics to help you answer questions thrown your way on human rights abuses faced by Tamils and the humanitarian catastrophe visit:

www.tyoaustralia.org

www.blackjuly.info

Tamil Youth Organisation of Australia

"Our history...Our people...Our future..."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டமிழ்சே இந்த இனத்திற்கும் சிங்களத்திற்கும் என்ன முரண்பாடா? இவர்களின் பூர்விகம் என்ன?

நான் நினைத்தேன் ஈழத் தமிழருக்கும் சிங்களத்திற்கும் தான் முரண்பாடு என்று

:blink:

Edited by tamillinux

  • தொடங்கியவர்

டமிழ்சே இந்த இனத்திற்கும் சிங்களத்திற்கும் என்ன முரண்பாடா? இவர்களின் பூர்விகம் என்ன?

நான் நினைத்தேன் ஈழத் தமிழருக்கும் சிங்களத்திற்கும் தான் முரண்பாடு என்று

:blink:

தமிழர்களை வெள்ளைக்காரன் மாதிரிதமிழ்ஸ் எண்டு செல்லமாக கூப்பிடும்போதுதான் திரும்பிப் பார்க்கின்றார்கள். எனவே தான் அப்பிடி எழுதி இருக்கிறம்..

வாசிக்கேக்க விளங்கினாச் சரி..

ஜெனரல்!!

உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

டமிழ்சே இந்த இனத்திற்கும் சிங்களத்திற்கும் என்ன முரண்பாடா? இவர்களின் பூர்விகம் என்ன?

நான் நினைத்தேன் ஈழத் தமிழருக்கும் சிங்களத்திற்கும் தான் முரண்பாடு என்று

:wub:

ம்ம்..நீங்க சொல்லுறதும் சரி தான் டமிழ்ஸ் வந்து இருந்து போட்டு தாங்கள் ஈழதமிழர்கள் என்பதனை மறந்து போயிடுவீனம் :huh: சோ அப்படி போட்டா தான் அவைக்கு விளங்கும் பாருங்கோ :wub: ..தமிழ்நக்ஸ் அண்ணா கூட இப்ப டமிழ்ஸ் கட்டகரிகுள்ள தான் வருவார் ஏன் நான் கூட சரியோ இப்ப டவுட் கிளியர் ஆச்சோ!! :blink:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களை வெள்ளைக்காரன் மாதிரிதமிழ்ஸ் எண்டு செல்லமாக கூப்பிடும்போதுதான் திரும்பிப் பார்க்கின்றார்கள். எனவே தான் அப்பிடி எழுதி இருக்கிறம்..

வாசிக்கேக்க விளங்கினாச் சரி..

ஓ அப்படியா. யாழ்களத்திலும் வெள்ளளைகாரங்க வாறாங்களா :huh: யாழ்களம் தமிழை வளர்ப்பதில் முதலிடம் தான் வகிக்கின்றது :wub::wub::wub::)

தேசியத் தலைவர் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார் :wub:

உலகவாழ் தமிழ் மக்களே இனி பொது நிகழ்சிகளுக்கு துண்டு பிரசுரம் பதாதைகள் வெளியிடும் போது கலைஞன் கூறிய அறிவுரையின் படி தமிழ்ஸ் என்று எழுதி வெளியிடுங்கள் :lol: அப்போ தான் எல்லோரும் திருப்பி பார்ப்பினம் :blink:

Edited by tamillinux

  • தொடங்கியவர்

ஜெனரல்!!

உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

அப்ப நான் வரட்டா!!

ம்ம்..நீங்க சொல்லுறதும் சரி தான் டமிழ்ஸ் வந்து இருந்து போட்டு தாங்கள் ஈழதமிழர்கள் என்பதனை மறந்து போயிடுவீனம் சோ அப்படி போட்டா தான் அவைக்கு விளங்கும் பாருங்கோ :wub: ..தமிழ்நக்ஸ் அண்ணா கூட இப்ப டமிழ்ஸ் கட்டகரிகுள்ள தான் வருவார் ஏன் நான் கூட சரியோ இப்ப டவுட் கிளியர் ஆச்சோ!! :huh:

அப்ப நான் வரட்டா!!

எண்ட முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்களோ? ஓம், யோசிக்காதிங்கோ நான் கட்டாயம் சிறீ லங்கா சுதந்திர தினதிற்கு முதல் நாளும் அடுத்த நாளூம் கறுப்பு பட்டி அணிஞ்சு கொண்டுதான் பள்ளிக்கூடம் போவன்.

நான் யோசிக்கிறன் என்ன எண்டால் சும்மா கறுப்பு பட்டி மட்டும் அணிஞ்சால் ஆக்களுக்கு என்ன விசயம் எண்டு விளங்காது. எண்டபடியால கீழ இருக்கிற படங்களில ஏதாவது ஒண்ட சிறிய அளவில பிரிண்ட் அவுட் எடுத்து அத ஜக்கற்றுல குத்திக்கொண்டு போகலாம் எண்டு நினைக்கிறன்..

ஓ அப்படியா. யாழ்களத்திலும் வெள்ளளைகாரங்க வாறாங்களா :wub: யாழ்களம் தமிழை வளர்ப்பதில் முதலிடம் தான் வகிக்கின்றது :wub::):wub::lol:

தேசியத் தலைவர் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார் :lol:

உலகவாழ் தமிழ் மக்களே இனி பொது நிகழ்சிகளுக்கு துண்டு பிரசுரம் பதாதைகள் வெளியிடும் போது கலைஞன் கூறிய அறிவுரையின் படி தமிழ்ஸ் என்று எழுதி வெளியிடுங்கள் : அப்போ தான் எல்லோரும் திருப்பி பார்ப்பினம் :blink:

ஓ தலைவ்ர் பார்த்தால் மகிழ்ச்சி அடைவாரோ.. அப்ப கட்டாயம் செய்யுறம்.. நன்றி!

goblackonfeb4publicvf5.gif

- அவுச்திரெலியா தமிழர் அமைப்பொன்றினால் கிடைக்கப்பட்ட படம்

sl1vh7.jpg

sl2dd2.jpg

sl3gh8.jpg

sl5rc1.jpg

ரொறன்ரோவிலை இருக்கிற இளையோர் அமைப்பு நிச்சயம் ஏதாவது செய்வார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கு கனடியச் சமூகத்தைக் கவரும்வகையில் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவார்கள். ஆனால் கடைசி நேரத்தில்தான் விபரங்களை வெளியிடுவார்கள். அதற்குக் காரணம் ஏற்கனவே வெளியிட்டால், எமக்கு எதிராகச் செயற்படுபவர்கள், இவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு மொட்டைக் கடிதம் போட்டு, அவ்விடம் இவர்களுக்குக் கிடைக்காதபடி செய்துவிடுவார்கள். இப்படி எத்தனையோ தடவைகள் நடந்திருக்கிறது. இதனால், எமது நிகழ்வுகளுக்கு இடங்கள் எடுப்பது மிகவும் கடினம். இந்த முறையும் ஒழுங்குகள் செய்திருப்பார்கள். என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பாடசாலை மாணவர் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும்வகையில் இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆகவே இரண்டையும் சேர்த்து ஏதாவது செய்வார்கள்.

சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக கடைப்பிடிப்போம் - கனடிய தமிழர் பேரவை

சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, கறுப்புப் பட்டி அணிந்து அந்நாளைப் புறக்கணிப்பதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்காவில் சிங்களவர்கள் நடத்தும் தமிழர் மீதான இனப்படுகொலையினை வெளிப்படுத்துவோம் என கனடியத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு ...

சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக கடைப்பிடிப்போம்

சிறிலங்காவிற்கு பிரத்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத்தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது.

தென்தமிழீழத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ‘சிங்களம் மட்டும்’ ஆட்சிமொழிக்கொள்கை அறிவிக்கப்பட்டது. அறவழியில் நியாயம் கேட்ட தமிழ்த் தலைவர்கள் சிங்களக் குண்டர்களால் தாக்கப்பட்டனர். தொடர்ந்து 1958 இல் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கின்ற படலம் சிங்களவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த இனப்படுகொலையின் தொடர்ச்சி வெவ்வேறு வழிமுறைகளில் வளர்ச்சி பெற்று இன்று தீவிரமான ஒருகட்டத்தை அடைந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் தனது முப்படைகளையும் கொண்டு தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சிங்களப்பகுதிகளில் வாழும் தமிழர்களை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றும் வகையில் அவர்களைத் தனது பாதுகாப்புப்படையினரைக் கொண்டும், கூலிப்படைகளைக் கொண்டும் கொலை செய்தும், கடத்தியும், அவர்களின் பொருளாதாரத்தைச் சூறையாடியும் வருகிறது.

தமிழர் தாயகத்தில் சிங்களப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நாளாந்தம் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் தொழில் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி சீரழிக்கப்படுகின்றது.

குறிப்பாக யாழ்.குடாநாட்டு மக்கள் திறந்த வெளிக்கைதிகளாக வாழ நிர்ப்பந்திக்கபட்டுள்ளனர். படை ஆக்கிரமிப்பற்ற வன்னிப்பகுதிகளில் நாளாந்தம் எறிகணை வீச்சுக்களினாலும் வான் தாக்குதல்களினாலும் தமிழ்மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது வன்னி நிலப்பரப்பைச் சுற்றிலும் சிறிலங்காப்படையினர் பாரிய ஆயுதங்களுடன் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் முனைப்பில் சுற்றிவளைத்து நிற்கின்றனர்.

சிறிலங்காவின் அறுபதாவது சுதந்திர நாளை தமிழ் மக்களின் குருதியில் குளித்து கொண்டாடும் ஆவலில் சிறிலங்காவின் சனாதிபதியும் அவரது சகாக்களும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் உடலங்களில் ஏறி நின்று சிங்கக்கொடியினை ஏற்ற அவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலநாட்களே உள்ள சிறிலங்கா சுதந்திர நாளிற்கு முன்பாக வன்னியின் நிலப்பரப்புக்களை வன்பறிப்புச் செய்து அந்த வெற்றிச்செய்தியுடன் தங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முனைப்பில் வன்னியின் எல்லைகளில் கடும் போரை சிறிலங்காப்படைகள் மிகத் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.

இவ்வேளையில் கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களாகிய நாம் எதிர் வரும் பெப்ரவரி மாதம் 4ம் நாளான சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, கறுப்புப் பட்டி அணிந்து அந்நாளைப் புறக்கணிப்பதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்காவில் சிங்களவர்கள் நடத்தும் தமிழர் மீதான இனப்படுகொலையினை வெளிப்படுத்துவோம்.

கனடிய தமிழர் பேரவை

மூலம்: பதிவு இணையத்தளம்

  • தொடங்கியவர்

நன்றி தமிழச்சி உங்கள் தகவல்களிற்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.