Jump to content

இனிப்புத் தோடம்பழத்த கடையில எப்பிடி பாத்து வாங்குறது?


Recommended Posts

வணக்கம்,

இண்டைக்கு அப்பா நல்ல இனிப்புத் தோடம்பழங்கள் கொஞ்சம் கடையுல வாங்கி வந்தார். உறிச்சுச் சாப்பிட அந்தமாதிரி இருந்திச்சிது. நானும் கடையில் தோடம்பழம் வாங்கிறதுதான் ஆனால் நல்ல இனிப்பா கிடைக்காது. எப்பவாவது இருந்திட்டி நல்ல இனிப்பு தோடம்பழம் கிடைக்கும். கடையில தோடம்பழத்த வாங்கேக்க நல்ல இனிப்பானதா எப்பிடி பாத்து வாங்கிறது எண்டு உங்கள் யாருக்கும் தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்கோ. ஹிஹி

நல்ல இனிப்புத் தோடம்பழம் எண்டால் நல்ல செம்மஞ்சள் நிறத்தில இருக்குமோ? தோல் கொஞ்சம் பாரமாக இருப்பதோட உள் பழத்துடன் இறுக்கமாக ஒட்டிப்பிடிக்காமலும் இருக்குமோ? உங்கட ஊருகளில இனிப்புத் தோடம்பழம் வாங்க ஏலுமோ?

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிப்பாக இருக்க வேண்டும் என்றால் சீனியை சாப்பிடலாம்.

தோடம்பழத்தில் நல்ல பழம் என்றால்.. தோல் கடும் ஒரேஞ் கலரில் இருக்கும். வெளித்தோல் சொரசொரப்பு குறைவாய் ஓரளவு அழுத்தமானதாக இருக்கும். மற்ற படி வாங்கும் பிராண்டிலும் விலையிலும் உள்ள்ளது

Link to comment
Share on other sites

இனிப்பாக வேணுமெண்டால் சீனி சாப்பிடலாம் ஆனால் தோடம்பழம் சாப்பிடேக்க வார சுவை வராது தானே.

ஓம் நீங்கள் சொல்லிறமாதிரி காசு இருந்தால் நல்ல தரமான பழங்கள் வாங்கலாம். கொஞ்சக்காசு எண்டால் கொஞ்சம் புளியா அப்பிடி இப்பிடி பழம்தான் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழம் நடுதர அளவில் இருக்கவேண்டும் நல்ல ஆரஞ்சு வர்ணத்திலும் தோல் மெல்லியதாகவும்,சதை அதிகமாகவும் இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

ஓ..அப்படியோ சங்கதி.. :D (அது அத வாங்கிறவன் வாங்கினா தான் இனிப்பா இருக்கும் பாருங்கோ குருவே)..சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன :D ..ஓ கடையில வாங்கக்க எப்படி இனிப்பா தோடம்பழம் வாங்கிறது என்டா குருவே எல்லாத்தையும் உரித்து பார்த்து சாப்பிட்டு எது சுவையா இருக்கோ அத வாங்கிறது..(எப்படி நம்ம ஜடியா).. :D

ஒருக்கா இதையும் செய்து பாருங்களேன்...(அட இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நான் பொறுபில்ல சொல்லிட்டன்).. :lol:

அட நம்மன்ட ஊரில பேஷா வாங்கலாம் நான் சொன்னது சிட்னி ஊரில ஆக்கும்..(நன்ன இனிப்பாவும் இருக்கும்) :lol: ..தியாகம் அங்கிள் சொன்ன மாதிரி காசிற்கேற்ப ருசியும் வேறுபடும் பாருங்கோ..(நான் சொன்னது தோடம்பழத்தை சரியோ).. :D

நம்மளிற்கு உந்த பிரச்சினை இல்ல பாருங்கோ ஏனேன்டா புத்து மாமாவின்ட தோட்டத்தில மரம் நிற்குது அல்லோ அதில நான் சுவை பார்த்து சாப்பிட்டு கொள்வன் :lol: ..(இப்ப நேக்கு அலுத்து போச்சு)..குருவே நீங்களும் ஒரு மரத்தை உண்டாக்கிறது தானே..(கனடா காலநிலைக்கு மரம் வருதோ தெரியாது வந்தாலும் ருசியில மாற்றம் இருக்கும் என்டு தான் நினைக்கிறன்). :D .

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில இனிப்பு நம்மள தேடி வராது நாமளா உருவாக்கி கொள்ளனும்"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஓம் கடையிலயே ரெண்டு தோடம்பழத்த உறிச்சுச் சாப்பிட்டால் பிரச்சனை இல்ல. ஆனால் திராட்சைப்பழம் வாங்கேக்க நான் வாயில நாலஞ்சு பழத்தப்போட்டு இனிக்கிதோ எண்டு பார்த்து வாங்கிறது.

ஊரில எண்டால் சந்தையில பழங்கள் வாங்கேக்க பழம் விக்கிற ஆச்சியிட்ட மாம்பழமோ, பலாப்பழமோ சின்னத்துண்ட வெட்டித்தரச்சொல்லி வாங்கிச்சாப்பிட்டு ருசியா இருந்தால் வாங்கலாம். இஞ்ச அப்பிடிச் செய்ய வசதி இல்ல.

Link to comment
Share on other sites

இங்கு சந்தையில் உறித்து பார்க்க அனுமதிப்பார்கள். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.