Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  2. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33035
    Posts
  3. பகலவன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    7
    Points
    1905
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/12/13 in all areas

  1. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்ட அலை ஓயாது! மீண்டும் எழுச்சி பெறும் என மாணவர்கள் பேட்டி! தமிழ் ஈழ மக்களுக்காக போராடி வரும் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் 12.04.2013 வெள்ளிக்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அக்குழுவைச் சேர்ந்த மாணவி திவ்யா, கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எங்கள் போராட்டங்களை மக்களிடையே கொண்டு சென்ற பெரும் பணியை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் செய்து வருகிறீர்கள். முதலில் உங்களுக்கு மிக்க நன்றி. மாணவர்களின் போராட்டம் சிதைந்து விட்டதாக சிலர் செய்தி பரப்பி வருகின்றனர். மாணவர்கள் பல்வேறு குழுக்களாக இருந்தாலும் கொள்கை, போராட்டத்தின் நோக்கம் ஒன்றுதான். மாணவர்களின் போராட்ட அலைகள் என்றும் ஓயாது. தற்போது கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற இருப்பதால், சற்று படிப்பில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். எனவே, தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களின் போராட்டம் தொடரும் என்றார். எங்கள் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக் குழு கலந்து ஆலோசனை செய்து நடத்தப்போகும் போராட்டத்தை வரைமுறை செய்துள்ளோம். கோரிக்கைகளையும் மத்திய மாநில அரசுகளுக்கு வைத்துள்ளோம். இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இலங்கையை புறக்கணிப்போம் என்ற முழக்கத்தின் கீழ், இலங்கை தூதரகம் வெளியேற்றுதல், ஐபிஎல் போட்டிகள், காமன்வெல்த் மாநாடு புறக்கணித்தல் உள்ளிட்டவற்றை கூறி மக்களிடையே பிரச்சார பரப்புரையை நடத்துவோம். ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரை சிறப்பு முகாம்களை கலைக்கக் கோரியும், இரட்டை குடியுரிமை வழங்கக் கோரியும், தமிழ் ஈழ அகதி முகாம்களை நோக்கிய மாணவர் பரப்புரை நடைபெறும். ஏப்ரல் 29 முதல் மே 5 வரை சிங்களவர்களால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பரப்புரை வழங்கப்படும். மே 6 முதல் மே 18 வரை இந்திய அரசின் தமிழின விரோத கொள்கையை கண்டித்தும், நமது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்களிடையே பரப்புரை நடத்தப்படும். மே 19 அன்று மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் மாணவர்களால் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தனர். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20210:2013-04-12-16-09-40&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
  2. இறுதி யுத்த நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மூத்த போராளிகளை வடிகட்டுவதினில் கருணாவே முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் பங்கெடுத்த படை அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல்கள் பிரகாரம் சரணடைந்தவர்களது பெயர்பட்டியல்கள் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையினில் தடுத்து வைத்திருக்கப்படவேண்டியவர்கள் மற்றும் தீர்த்துக்கட்டப்பட வேண்டியவர்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் தடுத்து வைக்கப்படவேண்டியவர்கள் தொடர்பான பட்டியலில் நூற்றுக்கும் குறைவானவர்களது பெயர்களே இருந்ததை தான் கண்டிருந்ததாக அப்படை அதிகாரி மேலும் தெரிவித்தார். ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் அகப்பட்டுக்கொண்ட பாலச்சந்திரன் சரண் அடைந்திருக்கவில்லையென தெரிவித்த அப்படை அதிகாரி நிராயுதபாணியாக அகப்பட்டுக்கொண்டதாகவே தெரிவித்தார்.எனினும் பாலச்சந்திரன் படுகொலைக்கான ஆலோசனையினை கருணாவே வழங்கியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட அவ்வதிகாரி அப்போது பெரும்பாலும் கோத்தா அனைத்திற்கும் கருணாவின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட வேண்டியவர்கள் தவிர்த்து ஏனையவர்கள் வேறு பிரிவு படை அதிகாரிகளிடம் கையளித்ததாக தெரிவித்த குறித்த படை அதிகாரி அவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் பற்றி கூறமுடியாதிருப்பதாகவும் கூறினார். எனினும் சரணடைந்தவர்களுள் பலர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் ஊடாக படையினரால் கூட்டிச்செல்லப்பட்டு தேவையான தகவல்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். எது எவ்வாறாக இருப்பினும் சரண் அடைந்தவர்களது நிலையினை அறிந்தவர்களுள் கருணாவும் ஒருத்தரென சுட்டிக்காட்டிய அவர் மகிந்த கும்பல் ஓரு வேளை போர்குற்றவாளிகளென அறிவிக்கப்படுமிடத்து அவர்களது பலியாடாக கருணாவே நிச்சயமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். http://www.vivasaayi.com/2013/04/blog-post_692.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.