அருமையான வழி, இங்கல்ல, இந்தோனேசியாவில் செய்கிறார்கள் இப்படி... காய்த்தபின் வெட்டிப்போட்ட வாழைமரம் காய்வதற்கு வெகு நாட்களாகிவிடும். அதனுள் இருக்கும் நீரோ அளப்பரியது. ஆதலால், இப்படி அதனைப பயன்படுத்திக் கொண்டால், நீரும் மிச்சம், இடமும் மிச்சம், நல்ல இயற்கை சத்தும் வளர்க்கப்படும் செடிகளுக்குக் கிடைத்துவிடுகின்றன. அத்தோடு, பயிர்செய்கை முடிந்து வாழைமரம் காய்ந்தவுடன் அப்படியே அதனைப் பிளந்து உடன் எருவாகவும் பயன்படுத்தி விடலாம். இதற்குத் தண்டினைச் சமைத்து உண்ணலாமே என்கிறீர்கள். ஆனால் மொந்தன், இரசதாளி போன்ற ஒருசில வாழை மரத்தண்டுகளைத் தவிர மற்றெல்லாவற்றையும் (செவ்வாழை, மலைவாழை போன்ற இன்ன பிறவும்) சமைக்கவியலாது. அவ்வகைகளை இவ்வாறு பயன்படுத்தலாமே!