Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88034
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    11531
    Posts
  3. Ahasthiyan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2127
    Posts
  4. ஜீவன் சிவா

    வரையறுக்கப்பட்ட அனுமதி
    6
    Points
    4464
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/14/17 in all areas

  1. 1919 ஆம் ஆண்டு ஜாலியான்வாலாபாக்கில் ஒரு மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ,துப்பாக்கி குண்டுகள் தீரும் வரைக்கும் சுடச் சொல்லி சுட்டுக் கொல்ல ஆணையிட்டான், ஜெனரல் டயர் ஆங்கிலே பரங்கித் தலையன்.350 பேருக்கும் மேல் செத்துப் போனார்கள்..! இந்த படுகொலையை.... மனசு வெடிக்க... உதடுகள் துடிக்க துடிக்க ... தன் மகனுக்கு சொல்லிப் போனாள்,தாய்! அந்த சிறுவன் அந்த மைதானம் போய் ,அந்த ரத்தம் தோயிந்த மண்ணை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டான் . இளைஞானாக வளர்ந்து,இங்கிலாந்துக்கு கப்பல் ஏறினான். ஜெனரல் டயர் முன்னால் தோன்றி கேட்டான். ஜாலியான்வாலாபக் நினைவிருக்கிறதா என்று "இந்தா,இந்திய பரிசு!" என்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்! இங்கிலாந்து நீதி மன்றத்து ,நீதிபதி கேட்டான். "உன் கடைசி ஆசை என்ன?" நான் இறந்த பிறகு என் உடலை இங்கிலாந்து மண்ணில் புதைக்க வேண்டும்! வியப்படைந்து காரணம் கேட்டான் ,நீதிபதி. "6 ஆயிரம் கிமீ பரவியுள்ள இந்தியாவை நீங்கள் 200 ஆண்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டீர்கள்! இங்கே புதைக்கப்பட்டால் ,இங்கிலாந்தின் 6 அடி மண்ணையாவது ,நான் ஆக்கிரமிப்பேன்!"என்று சொன்னான். அந்த இளைஞனின் பெயர் தான் உத்தம்சிங்!
  2. இறந்த பின்னரான வாழ்க்கை - மம்மிபிகேஷன் மம்மிகள் நாம் சினிமாவில் பார்த்ததோடு சரி . அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றிய நம்பிக்கை பற்றியோ அவர்களின் ரகசியம் பற்றியோ அறிந்ததில்லை . மம்மிகள் சீனா மம்மிகள் , அரசியல் வாதி மம்மிகள் , குரு மம்மிகள், மிருக மம்மிகள் , உரிந்த மம்மிகள் , காய்ந்த மம்மிகள் என எத்தனையோ வகை . அவற்றையும் இறந்த பின் வாழ்க்கையையும் , பிரமிட்டையும் அவர்களின் முறைகளையும் பார்ப்போம் . உலகத்தில் எத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும் பெரும்பாலான விடயங்கள் எகிப்த்தியர்களின் வழிகாட்டலிலேயே தோன்றியுள்ளது . ஏன் இப்போது உலகில் உள்ள இரு பெரிய மதங்களும் அவற்றின் கதைகளும் எகிப்தியர்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை என்றும் கூறலாம் .அதன் காரணம் எகிப்தியர்கள் அனைத்து விடயங்களையும் தமது கல் வெட்டுகளில் பொறித்து விட்டு சென்றமை . எகிப்த்தியர்களின் (கி மு (4650 - 3050 )) கல் வெட்டுகளில் அவர்களின் பொருளாதாரம் , விஞ்ஞானம், கணிதம் , போக்குவரத்து என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது . இவை அனைத்தையும் பொறித்து விட்டுசென்றவர்கள் அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் இறந்த உடல்கள் பாதுகாத்தல் தொடர்பையோ எந்த குறிப்புகளையும் எழுதி வைக்க வில்லை . எழுதி வைக்காததன் மர்மம் என்ன ? அதற்க்கான கேள்வி மனதில் நிற்கட்டும் . இவ்வாறு எழுதி வைக்காத முறைமை கிரேக்க சுற்றுலாப்பயணி(கி மு 2500 ) ஒருவரால் அடிப்படை விடயங்களை வைத்து ஊகித்து எழுதப்பட்டது தான் மம்மிபிகேஷன் . அனைத்து தொழில்நுட்பவியலாளர்களும் , தற்ப்போதைய கட்டிட நிபுணர்களும் பார்த்து வியந்த பிரமிட்டுகள் ஆயிரமாயிரம் தொழிலாளர்களை வைத்து கட்டப்பட்டது . அதற்க்கான காரணம் அவர்களது இறந்த உடல்களை பாதுகாக்கவும் இறந்த பின்னரான வாழ்க்கையை உறுதி செய்யவுமே . இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைக்கும் முறையில் எகிப்தியர்களை பார்த்து வியந்து நிற்க்கிறது மருத்துவ உலகம் . மம்மிபிகஷோன் நடந்த மம்மி 18 ஆம் நூற்றாண்டுகளில் கண்டு பிடிக்கப்பட்டது . இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைப்பது தான் மம்மிபிகாஷோன் . மம்மிபிகேஷன் நைல் நதியை தாண்டி கொண்டு செல்லப்படும் இறந்த உடல்களுக்கான மம்மிபிகாஷோன் உயர்ந்தமலையில் வைத்து நடத்தப்படுகிறது . மம்மிபிகேஷன் ஆரம்பமாக அவர்களுடைய குருமார்களால் பிரார்த்தனை நடத்தப்படுவதுடன் ஆரம்பிக்கிறது . பின்னர் மூக்கினூடாக ஒரு நீண்ட கம்பி போல ஒன்றை வைத்து மூளை இழுத்து எடுக்கப்படும் . வயிற்றிலிருந்து ஏனைய முக்கிய உறுப்புகளும் எடுக்கப்படும் . அவை தான் உடல் கெட்டுப்போக காரணமானவை . பின்னர் கழுவப்பட்ட உடல் நீரை உடலில் இருந்து உறிஞ்சும் உப்புக்களால் முழுமையாக மூடி நாப்பது நாட்களுக்கு விடப்படும் . நாற்ப்பது நாட்களுக்கு பின்னர் நைல் நதியில் இருந்து எடுக்கப்படும் நீரால் உடல் கழுவப்பட்டு உடலை லாஸ்டிக் போல வைத்திருக்க எண்ணெய் வகை பூசப்படுகிறது . எடுக்கப்பட்ட உள் உறுப்புகளிட்க்காக வேறு பொருட்கள் இட்டு உடல் நிரப்பப்பட்ட பின்னர் , எடுக்கப்பட்ட உறுப்புகள் சாடிகளில் இடப்படும் . அதாவது அவர்கள் வணங்கிய கடவுள் ஹோறச்சின் நான்கு மகன்கள் என அழைக்கப்படும் ஜாடிகளில் இட்டு வைக்கப்படும் . வாசமான திரவியம் உடலை சுற்றி பூசப்பட்ட பின் துணியால் சுற்றப்படும் . அவர்களின் சுற்றும் முறையே தனி . சுற்றிய பின் சடங்குகள் இடம் பெற்று அவை உறவினர்களிடம் விடப்படும் . அங்கு அவர்களுக்கு இறுதி உணவு , இறுதி சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு அவர்களுக்காக செய்யப்பட்ட பிரமிட்டுகளில் வைக்கப்பட்டு மூடப்படும் . இதில் நெகிழ வைக்கும் விடயம் என்னவென்றால் . அரசன் மறுபடியும் வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கை இருந்தவர்கள் பணம், பொருள் , உணவு என அணித்தையும் இட்டு அனுப்புவர் .அதனுடன் வேலை செய்பவர்களையும் காவலாளிகளாக உயிருடன் வைத்து மூடுவதே . காரணம் இறந்த பின்னரும் அரசன் உயிரித்து எழுந்தால் காவலுக்கு காவலாளிகள் தேவை என்பதே . எகிப்தியர்கள் இறந்த உடல்களை வரிசையாக பிரமிட்டுகளுக்குள் இறக்கும் விதம் . அப்போதே இத்தகைய தொழில் நுட்பம் . ஆனால் நமக்கெல்லாம் தெரிந்தது எகிப்திய மம்மிகள் தான் . அவை தான் பிரபல்யமும் கூட . ஆனால் தேன் அமெரிக்காவில் கடற்க்கரை பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன . இதுவரை கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் 6000 ஆண்டுகள் பழமையான சின்ன குழந்தை ஒன்றின் மம்மியே மிக மிக பழமையானது . எகிப்திய ராஜாக்களால் தாம் இறக்கும் முன்னர் தாம் இறந்ததன் பின்னான வாழ்க்கைக்கு தேவையான இடத்தை அவர்களே இருந்து கட்டுகின்றனர் . மிகவும் பணம் செலவழிக்கும் விடயம் என்றால் இது தான் . நவீன மம்மி (லெனின் ) உலக புரட்ச்சியாளன் லெனின் இறந்த பின்னர் (1924 ) அவருடைய உடலை பக்குவப்படுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது . காரணம் மக்களால் அனைவராலும் அதிகமாக விரும்பப்பட்டவர் , தம்முடனேயே இருக்க வேண்டும் என முடிவு செய்தனர் . முதலில் அடியில் வைத்து -30 டிகிரியில் புதைக்கப்பட்ட அவரது உடல் மீண்டும் எடுக்கப்பட்டு மருத்துவர்களால் மேலும் நிறைய காலம் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டது . ஆனால் அவரது உடலுக்கு மம்மீகளுக்கு செய்யப்பட்ட அதே வேலைகள் மாற்றமில்லாமல் இடம் பெற்றது . ஆனால் ரகசியமாக ஒரு முறை இன்று வரை பேணப்பட்டு வருகிறது ரஷ்ஷியர்களால் . இறந்த அவரது உடல் 70 வருடங்களாக அப்படியே இருக்கிறது . இப்போதும் பேணப்பட்டு வருகிறது . ஒரு வேலை லெனினின் உடலும் நிலத்துக்கடியில் செல்லலாம் . காரணம் கம்யுனிஸ்ட் ஆட்சி இல்லை . அனைத்து மம்மிகளும் , அது எகிப்திய மும்மியோ ,6000 வருடங்கள் பழமையான குழந்தை மம்மியோ!!. இவை அனைத்தும் காலத்தால் கூறும் ஒரே பதில் . எமது இறந்த காலத்துக்கான எயக்ச்டயினின் நேர பயணம் . பல விடயங்கள் மர்மமாகவே தொடர்கிறது . http://ethamil.blogspot.ca/2010/05/blog-post_20.html
  3. நாம் நிமிடத்திற்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறோம். தெரியுமா உங்களுக்கு? [size=2] [/size][size=3] நீங்கள் இப்போது நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா? உங்கள் நாற்காலியை இறுகப்பிடித்துக்கொண்டு ஒரு பெருமூச்சு விடுங்கள். இந்த நேரத்தில் (4 வினாடிகள்) நீங்கள் 100 கிலோ மீட்டர் தாண்டி விட்டீர்கள். மீண்டும் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விடுங்கள். இப்போது மேலும் 100 கிலோ மீட்டர் தூரம் தாண்டிவிட்டீர்கள். இது உண்மை. நாம் வசிக்கும் இப்பூமி சூரியனைச் சுற்றி வினாடிக்கு (per second) 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பூமி இந்த குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதனால்தான் சூரியனின் பயங்கரமான ஈர்ப்பு சக்தியினால் இழுக்கப்பட்டுச் சூரியனுடன் மோதி அழிந்து விடாமலிருக்கிறது. இதைவிட சற்றுக் குறைந்த வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனால் இழுக்கப்பட்டு எரிந்து விடும். இதைவிட சற்று அதிக வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனைவிட்டு அதிக தூரம் விலகிப்போய் மிகவும் குளிர்ந்து விடும். விறைத்துச் சாகவேண்டியதுதான் (பனிக்கட்டி மூடிவிடுவதினால்). ஆகவே, பூமி சுற்றும் வேகம் சிறிது மாறினால் கூட போதும். பூமியின் மீது எந்த ஜீவராசியும் (தாவரம், மிருகம், மனிதர்) உயிர் வாழவே முடியாது. இவ்விதமாகவே இப்பூமி இவ்வித இரண்டு பயங்கர ஆபத்தான நிலைமைகளுக்கு இடையே மயிரிழையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வினாடிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நம்மால் பிரயாணம் பண்ணக் கூடுமானால், நாம் ஐந்தரை நிமிட வேகத்தில் பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்தையோ அல்லது தென் துருவத்தையோ அடைந்துவிடலாம். ஆனாலும் அப்பிரயாணம் அலுப்பு மிக்கதாகவும், சலிப்புடையதாகவும் இருக்கும். ஏன் தெரியுமா? அவ்வளவு வேகத்தில் செல்லும்போது நம் கண்களால் எதையுமே பார்க்க முடியாது. பார்த்தாலும் எல்லாமே மிகவும் மங்கலாகவும், அதிவேகமாகவும் ஓடுபவையாகவும் காணப்படும். சாதாரணமாக இப்பூமியின் மீது நாம் எங்கேனும் பிரயாணம் செய்யும்போது, நாம் கடந்து செல்கின்ற பொருட்களைக் கொண்டுதான் நாம் பிரயாணம் செய்யும் வண்டியின் வேகத்தையும், அசைவையும் நம்மால் அறிய முடிகிறது. நாம் தொடர்ந்து செய்யும் விண்வெளிப் பிரயாணத்தைக் குறித்த உணர்வு நமக்கு ஏன் இல்லாமல் இருக்கிறது என்பது இதிலிருந்து நமக்கு புரிகிறதல்லவா? இந்த பூமி எப்போதுமே இப்படித்தான் தொடர்ந்து அண்டவெளியில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறது. நாம் யாவரும் இதன்மீது பிறந்தவர்களும், இப்பூமியின் வாழ்வாகவும் இருக்கிறோம். வேகத்தைப் பொறுத்தமட்டில் நாமும் இப்பூமியும் ஒன்றுதான். மேலும் இப்பூமியானது அருகிலுள்ள அநேகப் பொருட்களினூடே கடந்து செல்லுமானால் பூமியும் நாமும் அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் உணர முடியும். அப்படியில்லாது பூமிக்கருகில் நாம் காணக்கூடிய எப்பொருளும் இல்லாதிருப்பதினால் நாம் இப்பூமியோடு சேர்ந்து அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் சற்றேனும் உணர முடியவில்லை. எவ்வளவு வியப்பாக இருக்கிறது. இல்லையா?[/size]
  4. அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர். ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மிஸ் கமலா; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி. இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ். புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் அமேலியா ஏர்ஃகாட் காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை. இந்தியக் கடலோரக் காவல்படை 1978ல் உருவாக்கப்பட்டது. முன்னாள் இசுரேலியப் பிரதமர் கோல்டா மேயர் அந்நாட்டு அரசியலின் “இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்பட்டார். மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ டபிள்யூ. டி. அமரதேவ. தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை சிறப்பு வான்சேவை என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் பனிக்குட நீர். சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி. கடம்பினி கங்கூலி பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில்மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார். பயிற்சிபெற்ற முதல் பெண் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல்அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர். கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் ஏற்றப்பாட்டு எனப்படுகிறது. சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு கன்பூசியசு அமைதிப் பரிசு என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது. தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார். சின்த்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானில் பின்பற்றப்படும் ஒரு மதம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது. சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும். இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது. வெள்ளை ரோசா என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன. எகிப்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. மகடூஉ முன்னிலை என்பது, எதிரில் உள்ள பெண்ணொருத்திக்குச் சொல்வதுபோல் பாடல்களை எழுதும் ஒரு முறையைக் குறிக்கும். இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது. திருவிதாங்கூர் சமத்தானத்தால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. ஆலோவீன் பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் . கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இரகுவம்சத்தைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கிபி 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவர். இது 1887 இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது. கற்காலம் என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. இந்தியாவில் முதல் தொடருந்துப் போக்குவரத்து 22 டிசம்பர் 1851-ல் ரூர்க்கிக்கு கட்டுமானப்பொருட்களைக் கொண்டு செல்ல துவங்கப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.