Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46808
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    88020
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1570
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/18/21 in Posts

  1. பிரபாகரனின் மரணம் தொடர்பாக இலங்கை ராணுவத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு சந்திரப்பிரேமவினால் எழுதப்பட்ட "கோட்டாவின் போர்" எனும் இறுதியுத்தகால சம்பவங்களின் தொகுப்பினை இலங்கை ராணுவத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான முக்கிய காரணம் இப்புத்தகம் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபயவினதும், அவரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இலங்கை ராணுவத்தினதும் முழுமையான ஆசீர்வாதம் இப்புத்தகத்தினை எழுதவும், வெளியிடவும் கிடைத்தது என்பது. பிரபாகரனின் மரணம் தொடர்பாக இப்புத்தகம் வெளியிட்ட நிகழ்வினை , இப்புத்தகம் தொடர்பான எனது முந்தைய விமர்சனத்தில் சேர்த்துக்கொள்ள முயலவில்லை. ஆகவே அப்புத்தகத்தின் 488 ஆம் 489 ஆம் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் பிரபாகரனின் மரணம் தொடர்பான செய்தியிலிருந்து இதனை ஆரம்பிக்கிறேன். "மே 18 அன்று பிற்பகல் 59 ஆவது டிவிஷன் படையினர் புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் பாணு ஆகியோரின் தலைமையில் முன்னேறிவந்த புலிகளின் அணியொன்றினை எதிர்கொண்டு , அவர்கள் அனைவரையும் கொன்றனர். மறுநாள் அதிகாலை, நந்திக்கடல்ப் பகுதியில் அமைந்திருந்த 800 மீட்டர்கள் நீளமும், 20 மீட்டர்கள் அகலமும் கொண்ட சதுப்பு நிலப் பற்றைக்காடுகளுக்குள் தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்கென்று 4 ஆவது விஜயபாகு ரெஜிமென்ட்டினதும், 8 ஆவது சிறப்புப் படைகள் அணியினதும் வீரர்கள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டது. ராணுவ அணி உள்நுழைந்தவுடன் தமது அணிகளைவிட்டு சிதறி தனித்தனியாக இயங்கிவந்த புலிகளுக்கும் ராணுவ அணிக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் ஆரம்பமானது. கேணல் ரவிப்பிரியவின் கருத்துப்படி சுமார் 30 புலிகள் வரை அப்பற்றைக் காட்டுகளுக்குள் ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதன்பின்னர் மேலும் இரு கொமாண்டோ அணிகளை பற்றைக்காட்டினுள் இறக்கிய ரவிபிரிய மூன்று புலிகளை உயிருடன் கைதுசெய்தார். அவர்களின் கூற்றுப்படி பிரபாகரனும் இன்னும் 30 புலிகளும் அப்பற்றைக்காடுகளுக்குள் ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பற்றைக்காட்டினை நோக்கிக் கடுமையான தாக்குதலை அங்கிருந்த படையினர் நடத்தினர். எதிர்த்தாக்குதல்கள் முற்றாக நிற்கும்வரை படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதன்பின்னர் இப்பற்றைக்காடுகளுக்குள் தேடுதலினை ஆரம்பித்த படையினரின் தளபதி பிரபாகரனின் உடலைக் கண்டுபிடித்தார்" . "பிரபாகரனின் உடல் இன்னமும் சற்று வெப்பமாகவே இருந்தது அவர் அப்போதுதான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. அன்று காலை பிரபாகரன் சவரம் செய்யாததனால், அவரின் முகத்தில் வெண்ணிறமான முடிகள் மெதுவாக முளைக்க ஆரம்பித்திருந்தது தெரிந்தது. 4 ஆவது விஜயபாகு அணியின் வீரர்கள் பிரபாகரனின் உடலைத் தோள்களில் சுமந்துவந்து தமது உயர் அதிகாரிகளின் முன்னால் அடையாளப்படுத்தலுக்காக வைத்தனர். உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாதிகளின் தலைவனின் உடலை பிரிகேடியர்கள் ஜகத் டயஸ், சவேந்திர சில்வா, சகி கல்லகே மற்றும் கமால் குணரட்ன ஆகியோர் பார்வையிட்டனர். பிரபாகரனின் உடலை பார்வையிட நூற்றுக்கணக்கான படையினர் ஆர்வம் மிகுதியால் , ஒருவர் மீது ஒருவர் ஏறி முண்டியடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அன்று பிற்பகல் புலிகளின் முன்னாள்ப்பேச்சாளர் தயா மாஸ்ட்டர் மற்றும் கருணா அம்மான் ஆகியோர் கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் அங்குவந்து இறந்தது பிரபாகரன் தான் என்பதை உறுதிப்படுத்தினர்". சரி, சந்திரப்பிரேமவினால் இங்கே தரப்பட்ட இத்தகவல்களை நாம் ஆராயலாம். முதலாவது பந்தியின் இறுதிப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள விடயங்களின்படி, 1. பிரபாகரனின் நெற்றியில் பட்ட துப்பாக்கிக் குண்டினாலேயே அவர் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிப்பதற்கான கண்ணால் கண்ட சாட்சியங்கள் இராணுவத்திடம் இல்லை. 2. பெயர் குறிப்பிட விரும்பாத குறிபார்த்துச் சுடும் வீரர் கூட தான் பிரபாகரனைக் குறிவைத்தே தாக்கியதாகக் கூறமுடியவில்லை. 3. ஆக, முதலாவது பந்தியின் சாராம்சம் என்னவெனில் பிரபாகரனின் உயிரற்ற உடல் ராணுவ அணித்தளபதியினால் கண்டெடுக்கப்பட்டது என்பதுதான். 4. கொழும்பின் சில சிங்கள ஆங்கில ஊடகங்கள் பிரபாகரனின் உடல் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தபோதும்கூட, சந்திரப்பிரேம இதுபற்றி தனது புத்தகத்தில் மூச்சுக் கூட விடவில்லை. ஆக, பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டியவர்கள் கருணாவும் தயா மாஸ்ட்டரும் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவரும் புலிகளால் வெளியேற்ரப்பட்டவர்கள் என்பதும், தமது பிழைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ராணுவம் தமக்குச் சொல்லிக்கொடுத்த "இது பிரபாகரன் தான்" எனும் கிளிப்பிள்ளைப் பாடத்தினை தவறாமல் ஒப்பிவிப்பார்கள் என்கிற சிந்தனையில்லாமலேயே இவர்களை மேற்கோள் காட்டி சந்திரப்பிரேம இதுதொடர்பாக உறுதிப்படுத்தியதுதான்.
  2. ஆகவே விதி வலியது......! 😁
  3. சேகுவேரா, கடாபி மற்றும் பிரபாகரன் ஆகியோரின் மரணங்களை ஒப்பிடுதல். சேகுவேராவினதும் கடாபியினதும் மரணங்களுக்கிடையில் 44 வருடங்கள் இடைவெளி இருந்தாலும், இவை இரண்டுமே ஒரேவையானவை. இணையத்தில் காணப்படும் ஒளிப்படங்களைப் பார்க்கும்போது கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு அவரின் எதிரிகளால் சித்திரவதை செய்யப்படுவது தெரிகிறது. அவரைக் கொன்றபின்னர், அவரின் எதிரிகள் அவரின் உடலின் மேற்பகுதி வெளித்தெரியும் வண்ணமே புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இதேவகையான கொடூரத்தையே சேகுவேராவும் சந்தித்தார். ஆனால், பிரபாகரனுக்கும் அவர் உயிரோடு இருக்கும்பொழுதோ அல்லது இறந்தபின்னரோ இதேவகையான கொடூரம் நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எமக்குக் கிடைக்கவில்லை. பல நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினருக்கிடையே காணப்பட்ட பிரபாகரனின் உடல் என்று ரொயிட்டர் வெளியிட்ட புகைப்படம் வேறுவகையான செய்தியைச் சொல்கிறது. அவரது உடல் கொடுமைப்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்களோ அல்லது கடாபியின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களோ பிரபாகரனின் உடலில் தென்படவில்லை. சந்திரப்பிரேமா "நூற்றுக்கண்க்கான வீரர்கள் முண்டியடித்துக்கொண்டு பிரபாகரனின் உடலை பார்க்க ஒருவர் மேல் ஒருவர் ஏறியதாக" கூறியிருந்தாலும்கூட, புகைப்படத்தினைப் பொறுத்தவரை பிரபாகரனின் உடலுக்கு அவர்கள் போர்க்களத்தில் மரியாதை செய்ததுபோலவே தென்பட்டது. உலகின் மிகக்கொடிய பயங்கரவாதியின் உடல் என்று சந்திரப்பிரேம கூறியிருந்தாலும், அதனை உறுதிப்படுத்துவதுபோல பிரபாகரனின் உடலை அலங்கோலப்படுத்தி, அவரின் சீருடையினைக் களைந்து, வெற்றுடம்பாக மாற்ற அவர்கள் முயற்சித்திருக்கவில்லை. இதற்கான காரணம் என்ன? சிலர் பெளத்த மதத்தில் இறந்தவருக்கான மரியாதையினைச் செலுத்துவதற்காகவே அப்படி அவர்கள் நடதுகொண்டார்கள் என்று கூறலாம். ஆனால், பிரபாகரன் எனும் சரித்திரத்தை தாம் கண்களால் கண்டது தொடர்பான ஆச்சரியமும், வியப்பும், தமது வாழ்விற்கான அர்த்தத்தினை அம்மனிதன் தந்திருந்தான் எனும் உணர்வுமே அவர்களை ஆட்கொண்டிருக்கலாம். கடைநிலைச் சிங்களச் சிப்பாய்கள் பிரபாகரனின் உடலுக்கான மரியாதையினை வழங்கியபோது, மகிந்தவும் அவரது வட்டத்தினருமே பிரபாகரனை அவமானப்படுத்தி தமது மேலாதிக்கத்தினை வெளிக்காட்ட அவரின் சீருடையினைக் களைந்து நிர்வாணப்படுத்தியிருப்பது தெளிவாகிறது. அவரை நிர்வாணப்படுத்தி அவமரியாதை செய்து, தமது அரசியல் பெருமையினை காட்டிக்கொண்டதுடன், தமது விருப்பத்தின் பேரிலேயே அவரது உடலினை தகனம் செய்து தமிழ் மக்கள் தமது தலைவனை இறுதியாகக் கண்டு வணக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தினையும் மறுத்திருந்தனர். முஸ்லீம்கள் இறந்த ஒருவரது உடலை 24 மணித்தியாலங்களுக்கு மேல் வைத்திருப்பதில்லை என்றபோதும், கடாபியின் உடல் பலநாட்கள் குளிரூட்டியில் வைக்கப்பட்டே அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் பிரபாகரனின் உடலை அவசர அவசரமாக மகிந்த வட்டம் தகனம் செய்திருப்பது அவர் கொல்லப்பட்ட விதம்பற்றி தாம் புனைந்த பொய்கள் வெளிப்பட்டுவிடும் என்கிற அச்சத்தினாலேயே என்பது தெளிவாகிறது.
  4. மனிதன் பின்வரும் நான்கு வழிகளில் ஒன்றில்த்தான் மரணிக்க முடியும். அவையாவன, இயற்கைச் சாவு, விபத்து, கொலை அல்லது தற்கொலை. இதன்படி முதல் இரு வழிகளின்மூலம் பிரபாகரன் இறந்திருக்கலாம் என்பது சாத்தியமற்றது. மற்றைய இரு வழிகளில், பிரபாகரன் தம்மாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால், கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு பார்க்கும்போது பிரபாகரன் தற்கொலைசெய்துகொண்டு இறைந்தார் என்பதே மிகவும் சாத்தியமானதாகத் தெரிகிறது. ஆர்ஜன்டீனாவில் பிறந்த மருத்துவரும், கெரில்லா தலைவருமான சேகுவராவின் 45 ஆவது நினைவுதினம் ஐப்பசி 9 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறே, ஐப்பசி 20 ஆம் நாள் லிபியாவின் நீண்டநாள் தலைவர் முகம்மர் கடாபியின் முதலாவது நினைவுநாளும் அனுட்டிக்கப்படுகிறது. இவர்கள் இருவருமே கைதுசெய்யப்பட்டபின்னர் எதிதிரிகளால் கொல்லப்பட்டவர்கள். இவர்களின் உடல்களின் மேற்பகுதியினை புகைப்படமாகக் காண்பித்து செய்திவெளியிட்டிருந்தார்கள். அவர்களின் உடல்களில் இருந்த காயங்களும், இரத்தப் பெருக்குமே என்னை பிரபாகரனின் மரணம் தொடர்பாக மீளாய்வு செய்யவேண்டிய உந்துதலினைக் கொடுத்தது. பிரபாகரனின் மரணம் தொடர்பான எனது முதலாவது கட்டுரையினை 2010 இல் எழுதியதன் பின்னர் , மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரிந்த, பலவிடயங்கள் தொடர்பான அறிவும், தெளிவான பார்வையும் கொண்ட ஊடகவியலாளர் ஒருவருடன் நான் நடத்திய சம்பாஷணையின் எழுத்துவடிவினை இங்கே பகிர்கிறேன். சச்சி : பிரபாகரனின் மரணம் தொடர்பான உங்களின் நிலைப்பாட்டினை நான் அறியலாமா? நீங்கள் அண்மையில் நியூ யோக்கர் பத்திரிக்கையில் ஜொன் லீ அண்டர்சன் அவர்களின் இதுதொடர்பான கட்டுரையினையும், அதற்கான எனது பதிலையும் படித்திருப்பீர்கள். அவர் தனது கட்டுரையில் பிரபாகரனின் உடலின் புகைப்படங்கள் தனக்குக் காண்பிக்கப்பட்டதாகவும், குண்டு அவரின் மண்டையோட்டினை துளைத்து வெளியேறும் "எக்ஸிட் வூண்ட்" காணப்பட்டதாகவும் எழுதியிருந்தார். அவரின் இந்த கூற்று என்னைக் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இணையத்தில் கிடைக்கப்பெற்ற இப்புகைப்படங்களின்படி அவரின் இரு கைகளிலும் சுருக்கங்கள் தெரிகின்றன. அதாவது தண்ணீரில் பல மணித்தியாலங்கள் தோய்ந்த நிலையில் அவை சுருக்கங்களுடன் காணப்பட்டன. சாதாரண மரணங்களில் இவ்வகையான தோல்ச் சுருக்கங்கள் காணப்படுவது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை பிரபாகரன் பொட்டாஸியம் சயனைற்றினை உட்கொன்டு முன்னரே மரணித்துவிட்டிருக்க வேண்டும். உயிரற்ற அவரது உடலை எடுத்துவந்த ராணுவத்தினர் தாமே அவரைக் கொன்றதாகக் காட்டுவதற்காக, பின்னரே அவரின் தலையில் துப்பாக்கியினால் சுட்டிருக்க வேண்டும். இவ்விடயம் தீர ஆராயப்படவேண்டிய தேவை இருப்பதாலும், அவரின் உடலை இனிமேல் எம்மால் பார்க்கமுடியாது என்பதாலும், அவரது நெற்றியில் ஏற்பட்ட காயம் அவர் உயிருடன் இருக்கும்போது ஏற்பட்டதா அல்லது மரணம் அடைந்தபின்னர் உருவாக்கப்பட்டதா என்பதை உங்களால் கூறமுடியுமா? என்னைப்போன்றே, உடல்த் தடயவியல் நிபுணரான பேராசிரியர் கீத் சிம்ப்சனும் இதனை நிச்சயம் அவதானித்திருக்கிறார். எனது வாதத்திற்கு வலுச்சேர்க்கும் தடயங்கள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். 1. பிரபா உண்மையாகவே உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால், அவரைக் குறிபார்த்துச் சுட்டவர் இன்றைக்கும் தனது வீரப்பிரதாபங்களை வெளியே பறை சாற்றிக்கொண்டு இருந்திருப்பார். ஆனால், இதுவரை சிங்கள ராணுவத்தில் ஒருவராவது பிரபாகரனைச் சுட்டது தானே என்று உரிமை கோரவில்லை. 2. பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய கருணா வேண்டுமென்றே "அவரது உடலில் சயனைட் வில்லை காணப்படவில்லை" என்று கூறியிருந்தான். இது தனது எஜமானர்களின் கட்டளைப்படியே கருணாவினால் கூறப்பட்டது என்பது தெளிவாவதுடன், கருணா கூறியததற்கு எதிர்மாறாக, பிரபாகரன் சயனைட் உட்கொண்டே மரணித்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது. அந்த ஊடகவியலாளர் : மரணமானவுடன், நீர்ப்பற்றுக் குறைவதால் தோல் சுருங்கிவிடுகிறது. அதேவேளை, மரணமானபின்னர் உடல் நீரிற்குள் இருந்திருந்தால் தோல் வீங்கியதாகவோ அல்லது நீர் கட்டியது போன்றறே தென்படும். ஒருவர் உயிருடன் இருக்கும்போது ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கும், இறந்தபின்னர் ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குமிடையே வேறுபாட்டினைக் கன்டறிவது சாத்தியமானதே. உயிருடன் இருக்கும் ஒருவர் சுடப்படும்போது சூட்டுக்காயப்பகுதியில் தோலும் அதன் கீழான பகுதிகளும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், சுடப்பட்டதாகக் கூறப்படும் தலைப்பகுதியின் சிதறல்களும், குருதிக் கசிவும் ஏற்பட்டிருக்கும். இறப்பின் பின்னர் குருதி கசிந்துவிடுவதால் பெரும்பகுதி இரத்தம் கொல்லப்பட்டவரின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகிறது. பெரும்பகுதி இரத்தம் கட்டியாகிவிடுவதால், வேறு பகுதிகளுக்கு இரத்தம் செல்வதும் தடைப்பட்டு விடுகிறது. ஆனால், இது எவற்றையுமே எம்மால் இப்போது உறுதிப்படுத்த முடியாது. சச்சி : நான் முன்னர் உங்களுக்குக் கூறியதன்படி, இலங்கை ராணுவத்தால் வெளியிடப்பட்டிருக்கும் பிரபாகரனின் இரு புகைப்படங்களை அனுப்பி வைக்கிறேன். இப்படங்களில் பிரபாகரனின் கைகளிலும் கால்களிலும் காணப்படும் வெண்ணிறத்தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில் : மரணத்துடன், உடலின் பகுதிகளுக்கான ரத்த ஓட்டத்தை இதயம் நிறுத்திவிடுகிறது. இரத்தம் இறந்தவரின் உடலின் சில பகுதிகளில் தேங்கிவிட்டபின்னர் கட்டியாகிவிடுகிறது. உடல் அண்ணாந்து கிடக்குமாயின் இந்த இரத்தச் சேர்ப்பு பெரும்பாலும் அடிப்பகுதியிலேயே நடக்க வாய்ப்பிருக்கிறது. படத்தின்படி, மேற்சட்டைக்கும், காற்சட்டைக்கும் இடையிலான பகுதியில் ஊதா நிறத்திலான பகுதியொன்றினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதேவகையான ஊதா - நீல நிற பகுதி அவரின் தலைப்பகுதியிலும், காதுக்கு அருகிலும் காணப்படுகிறது. அதேவேளை, உடலின் அவசியமற்ற பகுதிகளான கை கால்களிலிருந்து இரத்தம் வெளியேறிவிடுவதாலேயே அவை வெண்ணிறத்தன்மையுடையனவாகக் காணப்பட்டிருக்கலாம். மரணத்தின் பின்னர் இப்படி நடப்பது இயல்பானது. உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால், மரணம் உடனடியாக நடந்திருக்கும், இரத்தக் கசிவும் அதிகம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், மேலே படத்தில் காணப்படும் காயங்களைப் பார்க்கும்போது அவர் மரணமடைந்தபின்னரே சுடப்பட்டதாகத் தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் சில நேரத்தின்பின்னர் உடல் ஒரேவிதமாகவே தென்பட்டிருக்கும். உடலில் இருந்து ரத்தம் வெளியேறிவிடுவதனால் உடலின் சில பகுதிகள் வெண்மையாகக் காட்சிதருவது இயல்பானது. சச்சி : உடலின் அனைத்துப் பாகங்களும் வெண்மையாக இருப்பதற்கும், உயிருடன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் தொடர்பிருப்பதாக நினைக்கிறீர்களா? உடலின் சில இடங்களில் காணப்பட்ட ஊதா - நீல நிறப் பகுதிகள் கூறும் விடயம் சயனைட் உட்கொண்டதன் விளைவுதான் என்று நம்புகிறீர்களா? பதில் : தடயவியல் பரிசோதனையிலிருந்து தோலின் தோற்றத்தினைப் பயன்படுத்தி மரணம் இயற்கையானதா அல்லது கொலையா என்பது கண்டறிவது கடிணமானது. சில இடங்களில் இரத்தம் தேங்கிவிடுவதாலேயே ஊதா நிறத் தோல்கள் தெரிகின்றன. சிலவேளை இரத்தத்தில் ஒக்சிஜன் குறைபாட்டினால் இது ஏற்பட்டிருக்கலாம். ஆனால், சயனைட் உட்கொண்டால் கடும் சிவப்பு நிறத்திலேயே இப்பகுதிகள் இருந்திருக்கும். உடலில் ரத்தம் முற்றாக ஓடிவிடுவதால் அவை வெண்மையாகக் காட்சியளிக்கும் என்று நான் கூறினாலும், சிலவிடங்களில் இரத்தம் தேங்கி நீல நிறமாகக் காட்சியளிப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். ஆகவே, நான் அவதானித்தவை நிச்சயமாக நடந்திருக்கும் என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது. சச்சி : உங்களின் விளக்கத்திற்கு நன்றி. உண்மையாக நடந்ததைக் கண்டறிய முடியாதிருப்பது துரதிஷ்ட்டமே.
  5. சேகுவேரா கேணல் கடாபி போன்றவர்களின் வாழ்வினூடு வேலுப்பிள்ளை பிரபாகரணின் மரணத்தை மீளாய்வு செய்தல் ஆக்கம் : சச்சி சிறிகாந்தா காலம்: புரட்டாதி, 2012 இணையம் : தமிழ்ச் சங்கம் அமெரிக்கா நான் இன்றுதியாக பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றி எழுதியது ஜூன் மாதம் 2 ஆம் திகதி, 2010 இல் என்று நினைக்கிறேன். "பிரபாகரனின் மரணம் தொடர்பான கதையினை பகுப்பாய்வு செய்தலும், பொய்யர்களை வெளிப்படுத்துதலும்" எனும் தலைப்பில் அதனை நான் எழுதியிருந்தேன். சுமார் 28 மாதங்கள் கடந்த நிலையில் அந்த நிகழ்வினை நான் மீண்டும் மீளாய்வு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த 28 மாத காலத்தில் நடந்த சில முக்கியமான காரணங்களுக்காக இதனை மீலாய்வுச் செய்வது அவசியம் என்று கருதுகிறேன். அவற்றுள் முதலாவது 2010 ஆமாண்டு புரட்டாதியில் நடத்தப்பட்ட லிபியாவின் நீண்டகால அதிபரான கேணல் முகம்மர் கடாபியின் படுகொலை. இரண்டாவது இறுதிப்போர்க்காலத்தில் ஐ நா வின் பேச்சாளராக கொழும்பில் தங்கியிருந்த கோர்டன் வைஸ் எழுதிய "தி கேஜ் - சிறிலங்காவுக்கான போரும், தமிழ்ப் புலிகளின் இறுதிநாட்களும்" எனும் புத்தகத்தின் வெளியீடு. மூன்றாவது, மே மாதம் 2012 இல் சந்திரப்பிரேம என்பவரால் புனையப்பட்ட "கோட்டாவின் போர்" எனும் தலைப்புடன் வெளியான, இறுதியுத்தம் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டது என்பதுபற்றிய இலங்கை ராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட சில நிகழ்வுகளின் தொகுப்புக்கள். முன்னுரை மேலும் இதுதொடர்பாக நான் எழுதுவதற்கு முன்னர் சில விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. திரு பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் பல தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் அவர்களின் கூட்டத்தைச் சார்ந்தவன் அல்ல. ஆகவே, 2009 மே மாதத்தில் பிரபாகரன் அவர்கள் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களைக் கொண்டே நான் இதனை எழுதுகிறேன். ஆனால், பிரபாகரன் என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு இடத்தில் மீண்டு தோன்றினால் பல லட்சக்கணக்காணோர் ஆச்சரியப்படலாம், அதிர்ச்சியடையலாம், ஆனால் நான் இந்த லட்சக்கனக்காணோரில் ஒருத்தன் அல்ல. அதேவேளை, நான் விடயங்கள் இவ்வாறுதான் நடக்கும் என்று எதிர்வுகூறும் பூசாரியும் அல்ல. நான் ஒரு விஞ்ஞானி. கிடைக்கும் தகவல்களைக் கொண்டு எனது முடிவுகளை நிறுவுகிறேன். சில முக்கியமான தகவல்கள் எனக்குக் கிடைக்காதவிடத்து, வேறு வழிகளில் அத்தகவல்களுக்கு நிகரான தகவல்களைக் கொண்டு நான் எனது முடிவுகளை அடைகிறேன். அதேவேளை, எனக்குத் தேவையான சரியான தகவல்கள் கிடைக்கப்பெறும் இடத்து, அதற்கேற்றாற்போல் எனது முடிவுகளையும் மாற்றிக்கொள்கிறேன். புலிகளை விட்டு பிரிந்தோடிய குமரன் பத்மநாதன் மற்றும் அவரின் ஏவலாளிகள் தற்போது பிரபாகரனின் மரணம் தொடர்பாகப் பேசவேண்டிய அல்லது மீளாய்வுசெய்யவேண்டிய தேவை என்னவென்று என்னைக் கேட்கலாம். ஆனால், அதுபற்றி தற்போது பேசவேண்டிய தேவை இருப்பதாகவே நான் கருதுகிறேன். சுமார் 190 வருடங்களுக்கு முன்னதாக மரணமடைந்த நெப்போலியனின் மரணம் தொடர்பாக இன்றுவரை பேசப்பட்டும், மீளாய்வுசெய்யப்பட்டும் வரும் நிலையில், தமிழரில் பிறந்து நெப்போலியனின் தரத்திற்கு நிகராக வாழ்ந்த பிரபாகரனின் மரணம் பற்றியும் நிச்சயம் பேசப்படவும், ஆழமாக மீளாய்வு செய்யப்படுதலும் அவசியமானது.
  6. இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்........! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.