Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46798
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87993
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8910
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    32030
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/05/22 in all areas

  1. சகோதர பாசங்கள் உச்சநிலை அடையும் போது......
  2. அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் அடிப்படையே நான் இதுவரை எழுதிய மூன்று வாழ்க்கை வரலாறுகளினதும் கருப்பொருளாக இருந்தது. அதுவே நான் இன்று எழுதும் பிரபாகரன் எனும் ஆளுமையின் வாழ்க்கைச் சரித்திரனதும் மூலமாக இருக்கிறது. அத்துடன் தமிழர்கள் தமது தாயகத்தைக் காக்கத் தவறுவதும், தமது சனத்தொகையினை வளர்ப்பதில் தவறுவதும், தமது மொழியின் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறுவதும், இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறுவதும் அவர்களின் இருப்பையே முற்றான ஆபத்தில் தள்ளிவிடும் என்பதையே இவ் வாழ்க்கைச் சரித்திரங்களின் மூலம் பதிவிட்டு வருகிறேன். மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, நேர்த்தியாகச் செயற்படுத்தப்பட்டுவரும் முற்றான இனவழிப்பிற்குள் தமிழினம் இன்று உட்பட்டு வருகிறது. அரச ஆதரவுடன் நடந்துவரும் திட்டமிட்ட நிலக்கொள்ளைகள் மூலம் தமிழினம் தனக்குரிய தாயகத்தினை சிறிது சிறிதாக இழந்துவருகிறது. மலையகத் தமிழரின் வாக்குரிமைகளை மறுத்துவிட்டதன் மூலம் அவர்களின் சனத்தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் தனிச் சிங்களச் சட்டம் மூலம் அவர்களை கற்பதிலிருந்தும் தடுத்துவிட்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டினை தாரக மந்திரமாக வரைந்துகொண்டதன் மூலம் சிங்கள அரசுகள் அவர்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இறுதியாக, திட்டமிட்ட ரீதியில் அரசின் பின்புலத்துடன் அவர்கள் மேல் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் வன்முறைகளின் மூலம் அவர்கள் உயிர்வாழ்தலுக்கான அடிப்படை உரிமையினைக் கூட இழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள இனவாதத்தின் கோட்டையென்று கருதப்படும் லேக்ஹவுஸ் பத்திரிக்கையில் நான் செய்தியாளராகக் கடைமையாற்றிய காலத்தில் இக்கதைபற்றி எழுத விரும்பியிருந்தேன். 1957 இல் நான் சாதாரண பத்திரிகையாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பதிப்பான தினகரனில் இணைந்துகொண்டதிலிருந்து 1997 இல் அந்நிறுவனத்தில் ஆங்கிலப் பதிப்பிற்கான மூத்த உப ஆசிரியராக பதவியிலிருந்து ஓய்வுபெறும்வரை எமது இனப்பிரச்சினை குறித்த பல முக்கிய நிகழ்வுகளை நான் பதிவுசெய்து வந்ததோடு, தமிழருக்கெதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த பல முக்கிய சிங்களத் தலைவர்களுடனும் எனக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. செளமியமூர்த்தி தொண்டைமான் முதலாவது வாழ்க்கைச் சரித்திரம், நட்பிற்காக தொண்டைமானுக்காக எழுதப்பட்டது. மலையகத் தமிழர்களின் தலைவரான அவருக்கும் எனக்கும் சுமார் 41 வருடங்களாக நெருங்கிய நட்பு இருந்துவந்தது. 1988 கார்த்திகை மாதத்தில் தனது சரிதை பற்றி எழுதுமாறு அவர் என்னை அழைத்திருந்தார். அவர் விரும்பியவாறே அவரின் சரிதையும் என்னால் எழுதப்பட்டு அடுத்தவருடமே பிரசுரிக்கவும் பட்டது. சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் என்னை மீளவும் அழைத்த அவர், தனது சரிதைபற்றிய தகவல்களை மேலும் விரிவாக்கும்படி என்னிடம் கேட்டுக்கொள்ளவே, அவருக்காக அதனையும் நான் செய்தேன். அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே மேம்படுத்தலின் பிரதி வெளிவந்தது. பின்னர் இணையப் பத்திரிக்கையான ஏசியன் ட்ரிபியூனில் இச்சரித்திரம் ஒரு தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. தொண்டைமான் அவர்களின் சரிதையினை நான் எழுதியபோது, வேண்டுமென்றே இரு முக்கிய விடயங்களை எழுதுவதை நான் தவிர்த்திருந்தேன். தமிழர்களின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த அக்கறை தொடர்பாகவும், சிங்களவர்களால் தனது அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சி எடுத்திருந்த சில நடவடிக்கைகள் தொடர்பாகவும் நான் எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன். முதலாவது சம்பவம் 1986 ஆம் ஆண்டு மார்கழி முதலாம் திகதி நடந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த டொலர் மற்றுன் கென்ட் பாம் எனப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தியிருந்தார்கள். தாக்குதல் நடந்த அன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அலுவலக உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் நான் நுழைந்தேன். "நீங்கள் செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைப்பார்து கேட்டார் தொண்டைமான். அவரது கேள்வியை நான் அவ்வளவாகச் சட்டை செய்யாதது போலக் காட்டிக்கொண்டிருக்க, அவரோ, "சிங்கள அரசு எல்லாவற்றிற்கு மேலானது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர்களை விடப் பலமானவர்களும் இருக்கிறார்கள். பிரபாகரன் அவர்களுக்கொரு பாடத்தினைப் புகட்டியிருக்கிறார்" என்று அவர் முடித்தார். இரு சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு, பல சிங்களவர்கள் கொல்லப்பட்டிருந்தபோதும்கூட, இத்தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் தொண்டைமானுக்கு இருந்தன. 1979 ஆம் ஆண்டு, தொண்டைமான் அவர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கான மலையகத் தொழிலாளர்கள் மீது அரசும் குண்டர்களும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களில் அடித்து விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களைக் குடியேற்றி மீள்வாழ்வளிப்பதற்காகவே கென்ட் மற்றும் டொலர் பாம் எனப்படும் விவசாயப் பண்ணைகளை தமிழ்த் தன்னார்வ அமைப்புக்கள் ஆரம்பித்து நடத்தி வந்தன. ஆனால், 1986 ஆம் ஆண்டு ராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடவடிக்கைகள் மூலம் அப்பகுதியில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அடித்து விரட்டிவிட்டு அப்பகுதிகளை தெற்கில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக அந்நாட்களில் காணி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமிணி திசாநாயக்கா மாற்றியிருந்தார். தனது மக்கள் தமது வாழிடங்களிலுருந்து விரட்டப்பட்டதற்கும், அவ்விடங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டதற்கும் தனது கடுமையான கண்டனத்தினை தொண்டைமான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும்கூட, அவை எதுவுமே சிங்கள் அரசினால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆகவே, தன்னால் செய்ய முடியாது போனதை பிரபாகரன் செய்தது அவருக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்திருந்தது.
  3. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/
  4. தானியங்களை மட்டும் வைத்து கை வண்ணம்.....! 👍
  5. திருச்சிமுகாமில் இருக்கும் ஈழ அகதிப்பெண் திருமதி.நளினிக்கு 12.08.2022 யன்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. தோழர் பாலன்
  6. பிரஜாவுரிமைப் பிரச்சினை தொண்டைமானின் வாழ்வினூடாகவும், அவரது சேவையினூடாகவும் தமிழர்கள் முகங்கொடுத்த முக்கியமான பிரச்சினையான பிரஜாவுரிமைப் பிரச்சினையினை நான் கண்களூடு பார்க்கமுடிந்தது. தமிழர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் நோக்கில் சிங்களத் தலைவர்களால் செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான வஞ்சனை இதுவென்றால் அது மிகையில்லை. தமிழர்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் ஒரே வஞ்சனையுடனேயே இந்தச் சட்டத்தினைச் சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களான டி எஸ் சேனநாயக்காவும், ஒலிவர் குணத்திலக்கவும் சோல்பரி கமிஷனை சூட்சுமத்துடன் வழிநடத்தியதன் மூலம், பிரஜாவுரிமை பற்றிய விவாதங்களை நடத்தவும், அதுதொடர்பான முடிவினை எடுக்கவும் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றமே சிறந்தது எனும் வாதத்தினை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டனர். சுதந்திரம் கிடைத்து சரியாக 6 மாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் உதவியுடன் புதிய சட்டமான இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினைக் கொண்டுவந்து சுமார் பத்து லட்சம் தமிழர்களின் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்தனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மற்றும் இலங்கையின் பிரஜைகளாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் என்கிற அடிப்படைகளில் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமது கைங்கரியத்தினை அவர்கள் அரங்கேற்றினார்கள். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஆகியவற்றில் பூர்வீகமாக பிரஜாவுரிமைக்குத் தகுதியானவர்கள் யாரென்று விபரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாளான 1948, கார்த்திகை 15 இற்கு முன்னர் இலங்கையில் பிறந்த ஒருவரின் தந்தையோ, அல்லது பாட்டனாரோ அல்லது பாட்டனாரின் தந்தையோ இலங்கையில் பிறந்திருப்பின் அந்த நபர் இலங்கையின் பிரஜை ஆவார் என்று கூறுகிறது. அதேவேளை பிரிவு 5 இன்படி, ஒருவர் 1948, கார்த்திகை 15 இற்குப் பின்னர் இலங்கையில் பிறந்திருப்பின், அவரது தந்தையார் இலங்கைன் பிரஜையாக இருந்தால் மாத்திரமே அந்த நபர் இலங்கையின் பிரஜையாகக் கருதப்படுவார் என்று கூறியது. இதன்படி, பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரஜாவுரிமையின்படி சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்களும், இலங்கை முஸ்லீம்களும் இலங்கையின் பிரஜைகளாக வரையறுக்கப்பட இந்தியத் தமிழர்களும், இந்திய முஸ்லீம்களும் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்மூலம் சுமார் 90 வீதமான மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டதுடன், நாடற்றவர்கள் எனும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இச்சட்டத்தின் பிரிவு 11 இலிருந்து 17 வரையானவற்றில், பிரஜைகளாகப் பதியப்பட்டவர்களின் பிரஜாவுரிமை என்பது ஒருவர் பூரண வயதினை அடைந்தவராகவும், புத்தி சாதுரியமானவராகவும், இலங்கையில் வதிபவராகவும், தொடர்ந்தும் இலங்கையிலேயே வதியும் விருப்பினைக் கொண்டவராகவும், அவரது தாயார் இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் பிரஜாவுரிமைக்காக பதிவுசெய்யும் தகுதியினைப் பெற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றது. இதுகூட, ஒருவரின் தாயார் தனது பிள்ளை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் திகதியிலிருந்து குறைந்தது 7 வருடங்களுக்கு முன்னான காலத்தில் இலங்கையில் வசித்திருப்பது அவசியம் என்றும் கூறுகின்றது. இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கையின் பிரஜைகளாக பதிவுசெய்வதை முற்றாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டங்களை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த இனவாதச் சட்டத்தினை எதிர்த்துச் செயற்பட்ட இணைந்த தமிழர்களின் அமைப்பான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் உப தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் இச்சட்டம் நிச்சயமாக இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கவே பாவிக்கப்படுகிறது என்று கூறினார். "இந்தவகையான தமிழர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக அழிப்பதிலோ அல்லது பாக்கிஸ்த்தான் போன்றதொரு தமிழர்க்கான தனியான நாட்டினை இலங்கையில் ஏற்படுத்துவிதிலோதான் சென்று முடியும்" என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அன்றைய பிரத மந்திரி டி எஸ் சேனநாயக்க, இந்தியத் தமிழர்கள் இலங்கையின் தற்காலிக வதிவாளர்கள் என்றும், பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகவே பிரிட்டிஷாரினால் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதோடு, அடிக்கடி தமிழ்நாட்டிலிருக்கும் தமது கிராமங்களுக்கு அவர்கள் சென்றுவருவது அவர்கள் கூட இலங்கையினைத் தமது சொந்த நாடாகக் கருதவில்லை என்பதனையே காட்டுகிறது என்றும் பதிலளித்திருந்தார். மேலும் இந்தியத் தமிழர்கள் இந்தியாவையே தமது காவலனாகப் பார்ப்பதாகவும், அவர்கள்மேல் இந்தியா எப்போதும் ஒரு கரிசணையான பார்வையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியதோடு, அவர்கள் உண்மையாகவே இந்தியாவுக்குச் சொந்தமானவர்கள், ஆகவே அவர்களை இந்தியா மீள அழைத்துக்கொள்வதுதான் சரியானது என்றும் வாதாடினார். ஆனால், இந்தியாகூட அவர்களை அன்று மீள அழைத்துக்கொள்ள முற்றாக மறுத்துவிட்டது.
  7. சிறு பிள்ளையாக பிரபாகரன் தொண்டைமான் பற்றி நான் முன்னர் பதியாத இன்னொரு முக்கியமான விடயம் அடுத்த வருடம் நடந்தேறியது. 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் தரையிறங்கும் என்று கூறப்பட்டது. பலாலி வினாமப்படைத் தளத்தில் வந்திறங்கிய விமானங்களிலிருந்து இறக்கப்பட்ட டிரக் வண்டிகளில் இந்திய ராணுவத்தினர் வந்திறங்கினர். பலாலி யாழ்ப்பாண வீதியில் அவர்கள் பவணி வந்தபோது பலத்த ஆரவாரத்துடனான வரவேற்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், பிரபாகரனை இந்திய அரசு தில்லியில் ஒரு கைதியைப் போல அடைத்து வைத்திருக்கிறது என்கிற செய்தி பரவியபோது இந்திய ராணுவத்தை வரவேற்ற தமிழ் மக்களின் மனோநிலை மாறத் தொடங்கியது. அவர்கள் இந்திய ராணுவத்தின்மீது தமது எதிர்ப்பினைக் காண்பிக்கத் தலைப்பட்டனர். இந்திய ராணுவ வாகனங்களை வீதிகளில் வழிமறித்தனர்.தமது தலைவர் மீளவும் பாதுகாப்பாக தம்மிடம் திருப்பியனுப்பப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். பிரபாகரன் மீது தமிழர்கள் வைத்திருந்த பாசத்தினையும், நம்பிக்கையினையும் கொழும்பிலிருந்தே அவதானித்துக்கொண்டிருந்த தொண்டைமான் அதிசயித்துப் போனார். "பிரபாகரன் ஒரு மக்கள் தலைவனாக உருவாகிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். பிரபாகரன் தொடர்பாக தொண்டைமான் அதுவரை வைத்திருந்த கண்ணோட்டத்தில் இது மிகப்பெரிய வேறுபாட்டினைக் கொண்டிருந்ததாக நான் அப்போது உணர்ந்தேன். அதுவரை பிரபாகரனை ஒரு ராணுவ வல்லுனனாக, ஒரு சிறந்த ராணுவத் திட்டமிடலாளனாகவே அவர் எண்ணியிருந்தார். ஜெயவர்த்தனாவின் அரசையும் ராணுவத்தையும் ராணுவப் பலத்தின் மூலம் முடக்கி சமாதான மேசைக்குக் கொண்டுவருவதில் பிரபாகரன் முயலும் அதேவேளை, ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகள் அரசியலமைப்பினை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றே அவர் நம்பியிருந்தார். பிரபாகரன் தொடர்பாக நீங்கள் கொண்டிருந்த கண்ணோட்டம் மாறக் காரணம் என்ன என்று அவரிடம் வினவினேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார், "மக்கள் அவருடன் இருக்கிறார்கள்". 1989 ஆம் ஆண்டிலிருந்து பிரபாகரனுடன் அவர் தொடர்ச்சியான தொடர்பாடல்களில் ஈடுபட்டு வரத் தொடங்கினார். தனது சரிதையினை விரிவாக்க அவர் என்னை இரண்டாவது முறை அழைத்தபோது பிரபாகரனுக்கும் தனக்கும் இடையே இருந்த உறவினை தனது வாழ்வின் மிக முக்கிய விடயமாகக் குறிப்பிடவேண்டும் என்று என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.