Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87993
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/10/23 in all areas

  1. தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க செல்வா முயன்ற தடுப்புச் சுவரும், அவரை இருமுறை ஏமாற்றிய சிங்களவர்களும் செல்வாவை ஏமாற்றுமுன் நமட்டுச் சிரிப்புடன் கைகொடுக்கும் சிங்கள இனவாதத்தின் பிதாமகன் பண்டாரநாயக்க 1957 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவுடன் தந்தை செல்வா செய்துகொண்ட ஒப்பந்தத்தில், குடியேற்றத்திட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்படவிருக்கும் பிராந்திய கவுன்சில்களுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். இதுகுறித்த ஒப்பந்தத்தின் பகுதி "பி" இன் சரத்து 6 பின்வருமாறு கூறுகிறது, 6. குடியேற்றத்திட்டங்களில் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரமும், இத்திட்டங்களில் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் அதிகாரமும் பிராந்தியக் கவுன்சில்களுக்கே இருக்கும். இந்த ஆணையினை நடைமுறையில் இருக்கும் கல்லோயாக் குடியேற்றத்திட்டத் திட்டத்தில் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்படும். மேலும், 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கவுடன் செல்வா செய்துகொண்ட உடன்படிக்கையில் தமிழர் தாயகத்தை பாதுகாப்பதற்காக மேலும் இரு விடயங்களை கோரி டட்லியின் இணக்கப்பாட்டினையும் பெற்றிருந்தார். அவையாவன, 4. நடைமுறையில் இருந்த காணி அபிவிருத்திச் சட்டம் மாற்றப்பட்டு, இலங்கைப் பிஜைகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்கும் நடைமுறையினை சட்டத்தினுள் கொண்டுவருவது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் குடியேற்றத்திட்டங்களில், 1. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் குடியேற்றத் திட்டங்களில் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுகே முன்னுரிமை அளிக்கப்படும். 2. அதன் பின்னர், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இக்குடியேற்றத்திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். 3. மூன்றாவதாக இலங்கைப் பிரஜை ஒருவருக்கு, குறிப்பாக தமிழ் பேசும் பிரஜை ஒருவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆகிய மூன்று சரத்துக்களுக்கும் தந்தை செல்வாவிடம் தனது சம்மதத்தை டட்லி வழங்கியிருந்தார். ஆனால், இந்த ஒப்பந்தங்களின் தோல்வியின் மூலம் தந்தை செல்வா செய்ய எத்தனித்த தமிழர்களின் தாயகத்தைப் பாதுகாக்கும் தடுப்புச் சுவர் எனும் நோக்கம் முற்றாக இல்லாமலாக்கப்பட்டது. இதன் மூலம் சிங்களத் தலைவர்கள் தாம் விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தமிழர் தாயகத்தைப் பகுதி பகுதியாகச் சிங்கள மயமாக்கவும், தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலினைச் சிதைக்கவும் வழிசமைத்துக் கொடுக்கப்பட்டது. இலங்கை - இனப்பரம்பல் வரைபடம் தமது தாயகம் பறிபோவதைத் தடுக்க தம்மாலான வழிகளில் முயன்ற தமிழர்கள், சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வந்த பகுதிகளுக்கு அண்மையாகத் தாமும் குடியேறத் தொடங்கினர். இவ்வாறானவர்களின் அருளரின் தகப்பனாரான அருளப்பு முக்கியமானவர். ஆசிரியராகக் கடமையாற்றி வந்த அருளப்பு ஒரு தீவிர சமஷ்ட்டிக் கட்சி ஆதரவாளர். மன்னார் மாவட்டத்தில், கண்ணடிப் பகுதியில் அமைந்திருந்த கத்தோலிக்கத் தேவாலயத்திற்குச் சொந்தமான காணியொன்றினைக் கொள்வனவு செய்த அருளப்பு, 1964 ஆம் ஆண்டு அங்கு ஒரு பண்ணையை நிறுவி நடத்தி வந்தார். மேலும், இனப்பற்றும், ஆர்வமும் உடைய தமிழர்களை விவசாயம் செய்வதற்கு செழிப்பான வளங்களைக் கொண்ட வன்னிப் பகுதிக்கு வந்து குடியேறுமாறும் ஊக்கப்படுத்தி வந்தார். இரு வருடங்களுக்குப் பின்னர், சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணியினரால் திருகோணமலை மாவட்டத்தின் கித்துள் ஊற்று எனும் பகுதியில் தமிழர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டது. அப்பகுதியில் புணரமைக்கப்பட்ட குளம் ஒன்றினைச் சுற்றிச் சிங்களவர்களைக் குடியேற்ற அரசு எடுத்துவந்த முயற்சியினால் கோபமடைந்த தமிழ் இளைஞர்கள் இப்பகுதியில் குடியேறிக்கொண்டனர். திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபராக இருந்த சிங்களவர் தமிழ் இளைஞர்களை உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவரின் கோரிக்கைக்கு தமிழ் இளைஞர்கள் செவிமடுக்க மறுக்கவே ராணுவத்தினரையும் பொலீஸாரையும் அனுப்பி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் கொட்டகைகளும் எரியூட்டப்பட்டன. ஈற்றில் அந்த இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர். டட்லி சேனநாயக்கவின் அரசில் பங்காளிக் கட்சியாகவிருந்த சமஷ்ட்டிக் கட்சி, இக்குடியேற்றத் திட்டத்தில் சில பகுதிகள் தமிழர்களுக்கும் ஒதுக்கப்பட டட்லியின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டது.
  2. விடுமுறையில் நின்றதால் பல பதிவுகளை இன்னமும் பார்க்கவில்லை. தொடருங்கள் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன்.
  3. குடியேற்றங்களுக்கான தமிழரின் எதிர்ப்பு சிங்களக் குடியேற்றங்களின் பிதாமகன் - டி எஸ் சேனநாயக்க தமிழர் மீதான சிங்களவர்களின் ஆதிக்கத்திற்கெதிரான தமிழர்களின் எதிர்ப்பென்பது கல்லோயா குடியேற்றத்திட்டத்தினை சேனநாயக்க ஆரம்பித்து வைத்த ஆறு மாதங்களின் பின்னர், 1950 ஆம் ஆண்டு பங்குனி மாதம் முன்னெடுக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் திகதி தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்ட்டிக் கட்சி, கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தில் முதலாவது தொகுதி சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டபோது தனது போராட்டத்தினை ஆரம்பித்தது. மேலும் தமிழருக்குச் சொந்தமான பட்டிப்பளை ஆற்றினை கல்லோயா என்று சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்படுவதையும் சமஷ்ட்டிக் கட்சி எதிர்த்தது. சமஷ்ட்டிக் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் தமிழரின் மனதில் ஆளமாக வேரூன்றிக் கொண்டதுடன், தமது தாயகத்தினை கபளீகரம் செய்யவே சிங்களவர்கள் முனைகிறார்கள் என்பதனையும் உணரச் செய்தது. இந்த உணர்வே அவர்களை ஒற்றுமையாகப் போராடும் மனோநிலைக்குக் கொண்டுவந்தது. கல்லோயாக் குடியேற்றத் திட்டத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டம் தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் இணைத்து வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையே சகோதரத்துவத்தையும் தோழமையினையும் ஏற்படுத்தியது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்துவந்த தமிழர்கள் இப்போராட்டங்களில் மும்முரமாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர். தமது தாயகத்தை அபகரிக்கும் சிங்களவரின் ஆக்கிரமிப்பிற்கெதிராகத் தமிழர்கள் இரு வழிகளில் தமது எதிர்ப்பினைக் காண்பிக்கத் தொடங்கினர். அரசு தொடர்ச்சியாக தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தியதுடன், சிங்கள அரசுத் தலைமைகளோடு ஒப்பந்தங்களை செய்துகொண்டபோது, குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான சரத்துக்களையும் சேர்த்துக்கொண்டனர். அடுத்ததாக, சிங்களக் குடியேற்றங்களில் எல்லைகளில் தமிழ் விவசாயிகளை குடியேற்றுவதையும் தமிழ் தலைமைகள் செய்ய ஆரம்பித்தன. 1951 ஆம் ஆண்டு சித்திரையில் திருகோணமலையில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் முதலாவது தேசிய வருடாந்த மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களே பிரதான பேசுபொருளாகக் காணப்பட்டது. இக்குடியேற்றங்கள் மூலம் எதிர்காலத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து தந்தை செல்வா தனது பேச்சில் எச்சரித்திருந்தார். "எம்மைப்போன்ற சிறுபான்மை இனம் ஒன்றிற்கு அவர்களின் சனத்தொகையும், தாயகமுமே பாதுகாப்பு அரண்களாகும். சிங்கள அரசுகள் இவை இரண்டையும் தாக்க ஆரம்பித்து விட்டன. மலையகத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன் மூலம் தமிழர்களின் எண்ணிக்கையினை அவர்கள் குறைத்து விட்டார்கள். கல்லோயாவிலும், கந்தளாயிலும் சிங்களக் குடியேற்றங்களை நடத்திவருவதன் மூலம் எமது தாயகத்தின் மீதும் அவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று கல்லோயாவிலும், கந்தளாயிலும் நடப்பது நாளை பதவியா, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கும் பரவப் போகிறது" என்று அவர் எச்சரித்தார். தமிழரின் பூர்வீகத் தாயகத்தில் அவர்களைச் சிறுபான்மையினர் ஆக்கும் நோக்குடன் அரசினால் நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து பிரேரணை ஒன்றும் சமஷ்ட்டிக் கட்சியினால் நிறைவேற்றப்பட்டது. பல சந்ததிகளாக தாம் வாழ்ந்துவரும் தாயகத்தின் மீது தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையினை எவராலும் அகற்றிவிட முடியாது. சிங்களவர்களை மட்டுமே குடியேற்றும் நோக்கில் தமிழரின் தாயகத்தில் அரசு மேற்கொண்டுவரும் குடியேற்றத் திட்டங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். தமிழர்களின் தாயகத்தில் அவர்கள் சரித்திரகாலம் தொட்டு வாழ்ந்துவரும் வாழ்வை அழிக்கவே சிங்கள அரசு இக்குடியேற்றங்களைச் செய்துவருகிறது என்று தனது முதலாவது தேசிய மாநாட்டில் சமஷ்ட்டிக் கட்சி கடுமையான கணடனத்தைப் பதிவுசெய்கிறது. தமிழரின் சனத்தொகைப் பலம் மீதான சிங்களவரின் தாக்குதல் என்று தந்தை செல்வா குறிப்பிட்டது டி. எஸ் சேனநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தினூடாக ஏறக்குறைய பத்து லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதுத்துவம் குறைக்கப்பட்டதோடு, அவர்களின் அரசியல்ப் பலமும் வீழ்ச்சி கண்டது. 1950 ஆம் ஆண்டு கல்லோயாக் குடியேற்றத்திட்டத்திற்கெதிரான தனது போராட்டத்தினையடுத்து, தமிழரின் தாயகத்தினைப் பாதுகாப்பதே தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டதுடன், "சுவர் இருந்தால்த் தான் சித்திரம் வரையலாம்" எனும் சுலோகத்தினையும் தனது பிரச்சாரங்களில் முக்கிய கருப்பொருளாகவும் வரிந்துகொண்டார். சிங்களக் குடியேற்றங்களுக்கெதிரான தடுப்புச் சுவரைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்ததுடன், சமஷ்ட்டிக் கட்சியின் ஒவ்வொரு வருடாந்த மாநாடுகளிலும் இதனையே முக்கிய பிரச்சினையாக அவர் பேசிவந்தார். மேலும், சிங்களத் தலைவர்களுடன் அவர் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களிலும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக அவர் நிபந்தனைகளையும் இட்டு வந்தார். இருவேறு சிங்களப் பிரதமர்களோடு தந்தை செல்வா செய்துகொண்ட ஒப்பந்தங்களின் கருப்பொருளே இச்சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாகவே இருந்தது.
  4. தமிழர்கள் மீதான சிங்களக் குடியேற்றங்களின் தாக்கம் அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்களினால் தமிழர்கள் மூன்றுவிதமான சிக்கல்களை எதிர்கொண்டார்கள். முதலாவதாக தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின், முக்கியமாகக் கிழக்கு மாகாணத்தின் சனத்தொகைப் பரம்பலினை இக்குடியேற்றங்கள் மாற்றிப்போட்டன. இரண்டாவது, தமிழரின் விளைச்சல் நிலங்கள் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டதனால், தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாயிற்று. மூன்றாவதாக, தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் இப்பிரதேசங்களிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையலாயிற்று. கீழ்வரும் அட்டவணை 1 இல், கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட முறையில் அரசு நடத்திவரும் சிங்களக் குடியேற்றங்கள் இனவிகிதாசாரத்தினை எந்தவகையில் மாற்றியமைத்திருக்கிறது என்பது காட்டப்பட்டிருக்கிறது. Demographic change in the Eastern Province (1881- 1981) Year Sinhalese Tamils Muslims 1827 250 1.3% 34758 75.65% 11533 23.56% 1881 5947 4.5% 75408 62.35% 43001 30.65% 1891 7512 4.75% 87761 61.55% 51206 30.75% 1901 8778 4.7% 96296 57.5% 62448 33.155% 1911 6909 3.75% 101181 56.2% 70409 36% 1921 8744 4.5% 103551 53.5% 75992 39.4% 1946 23456 8.4% 146059 52.3% 109024 39% 1953 46470 13.1% 167898 47.3% 135322 38% 1963 109690 20.1% 246120 45.1% 185750 34% 1971 148572 20.7% 315560 43.9% 248567 34.6% 1981 243358 24.9% 409451 41.9% 315201 32.2% அட்டவணை 1 அட்டவணை 2 இல், தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் சிங்களக் குடியேற்றங்களால் எவ்வகையான பாதிப்பினை கொண்டிருக்கின்றன என்பதனைக் காட்டுகிறது. Change in the racial composition in the North-East (1881-1981) 1881 1946 1981 Sinhala Tamil Muslim Sinhala Tamil Muslim Sinhala Tamil Muslim Jaffna District 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.6 97.7 1.7 Mannar District 0.67 61.6 31.1 3.76 51.0 33.0 8.1 63.7 26.6 Vavuniya District 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 76.3 6.9 Batticaloa District 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.4 72.0 23.9 Amparai District N/A N/A N/A N/A N/A N/A 38.1 20.0 47.0 Trincomalee District 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 36.4 29.0 அட்டவணை 2 தேர்தல் முறையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதையடுத்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் சிங்களவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து இரு சிங்களவர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்கள். அம்பாறை மற்றும் சேருவில ஆகிய தொகுதிகளிலிருந்தே இவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 1978 ஆம் ஆண்டு தேர்தல்களின்போது, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து ஐந்து சிங்களவர்களும் வட மாகாணத்திலிருந்து ஒருவரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
  5. தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பை அறுத்தெறிந்த சிங்களக் குடியேற்றங்கள் சேனநாயக்கவின் திமிரான பேச்சு தமிழர்களை ஆத்திரப்பட வைத்தது. தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தில் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட குடியேற்றங்கள் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அனைத்துச் சிங்கள அரசுகளாலும் தொய்வின்றி கொண்டுசெல்லப்பட்டன. 1956 ஆம் ஆண்டு வவுனியாவின் கிழக்கில் பதவியா எனும் புதிய சிங்களக் குடியேற்றத்தினை சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரதமாரன S W R D பண்டாரநாயக்கா ஆரம்பித்து வைத்தார். சுதந்திரத்தின் பொழுது திருகோணமலை துறைமுகம் ஆங்கிலேயரிடமிருந்து இலங்கையரசிற்குக் கைமாறிய வேளை, துறைமுகத்தில் பணியாற்றி பின்னர் வேலையிழந்த தொழிலாளர்களை மீளக் குடியமர்த்தும் நோக்குடனேயே பதவியா எனும் சிங்களக் கிராமம் வவுனியாவில் அமைக்கப்பட்டது. பதவியா திட்டத்தின் ஆரம்பப்படியில் 595 தமிழ்க் குடும்பங்களும், 453 சிங்களக் குடும்பங்களும் இப்பகுதியில் குடியேற்றப்பட்டன. ஆனால், சிங்களவர்களுடன் இப்பகுதியில் குடியேறிய பெளத்த பிக்குவும், சிங்களக் குடியேற்றக்காரரும் தமிழர்கள் இப்பகுதியில் குடியேறுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், தமிழர்களுக்கென்று அமைக்கப்பட்ட கொட்டகைகளில் சிங்களவர்களைக் குடியேற்றினர். அரசும் இதற்குத் துணைபோகவே, பதவியா எனும் புதிய கிராமம் முற்றுமுழுதான சிங்களக் கிராமமாக உருப்பெற்றது. பின்னர், 1960 ஆம் ஆண்டு சிறிமா பண்டார்நாயக்க மொறவெவ எனும் சிங்களக் குடியேற்றத்தை உருவாக்கினார். புராதன தமிழ்ப் பிரதேசமாக விளங்கிய முதலிக் குளம் எனும் பகுதியே சிறிமாவினால் மொறவெவ என்று சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில் முதலிக் குளமான மொறவெவவில் வாழ்ந்துவந்த 9,271 மக்களில் 5,101 பேர் தெற்கிலிருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்ட சிங்களவர்களாக இருந்தனர். தமிழர்களின் இன்னொரு பூர்வீகக் கிராமமான பெரியவிளான்குளம் ஜெயவர்த்தனவினால் மகா-திவிலுவெவ என்று சிங்களத்தில் பெயர்மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றமாக உருப்பெற்றது. தமிழர்களின் பூர்வீக நீலியம்மன் ஆலயம் - திருகோணமலை அரசாங்கத்தின் முன்னெடுப்புடன் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்களக் குடியேற்றங்களுக்கு மேலதிகமாக, அப்பகுதியில் அமைச்சர்களாகவிருந்த பலரின் தலைமையில் சட்டத்திற்குப் புறம்பான வகையிலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். அமைச்சர்களால் தனிப்பட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்களின் ஒரே இலக்கு திருகோணமலை மாவட்டத்தினை சிங்களவர்களின் பெரும்பான்மை மாவட்டமாக மாற்றுவது தான் என்றால் அது மிகையில்லை. 1972 ஆம் ஆண்டுவரை தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக விளங்கிவந்த நொச்சிக்குளம், சிங்களவர்களால் நொச்சியாகம என்று பெயர் சூட்டப்பட்டு தூய சிங்களக் கிராமமாக அபிஷேகம் செய்துகொண்டது. இப்பகுதியில் 5000 ஏக்கர் நிலப்பகுதியில் இச்சிங்களக் குடும்பங்கள் குடியேறிக்கொண்டன. 1973 ஆம் ஆண்டு பேரினவாத அரசுகளின் ஆசீர்வாதத்துடன் புதியவகை குடியேற்றத்தில் சிங்களவர்கள் ஈடுபடலாயினர். தமிழக் கிராமங்களைச் சுற்றியிருக்கும் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் முதலில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பகுதிகளான குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், தென்னைமரவாடி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றன. சுமார் 10,750 சிங்களக் குடும்பங்கள் இந்த சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத் திட்டங்களினூடாக தமிழர் தாயகத்தில் குடியேற்றப்பட்டனர். இத்தொடரின் மூன்றாவது அட்டவணையின்படி திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரம் எவ்வாறு இச்சிங்களக் குடியேற்றங்களினால் மாற்றப்பட்டு வந்தது என்பதனைக் காட்டுகின்றது. அரசினால் மறைமுகமாக ஆதரிக்கப்பட்டு வந்த சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்களுக்குப் பின்னால் இன்னொரு சூழ்ச்சியும் இருந்தது. திருகோணமலையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கே மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலான நிலத்தொடர்பை உடைப்பதுதான் அது. வெருகல் ஆற்றுக் குடியேற்றம் தமிழக் கிராமங்களைச் சுற்றியிருக்கும் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் முதலில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பகுதிகளான குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், தென்னைமரவாடி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றன. சுமார் 10,750 சிங்களக் குடும்பங்கள் இந்த சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத் திட்டங்களினூடாக தமிழர் தாயகத்தில் குடியேற்றப்பட்டனர். இத்தொடரின் மூன்றாவது அட்டவணையின்படி திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரம் எவ்வாறு இச்சிங்களக் குடியேற்றங்களினால் மாற்றப்பட்டு வந்தது என்பதனைக் காட்டுகின்றந்து. அரசினால் மறைமுகமாக ஆதரிக்கப்பட்டு வந்த சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்களுக்குப் பின்னால் இன்னொரு சூழ்ச்சியும் இருந்தது. திருகோணமலையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கே மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலான நிலத்தொடர்பை உடைப்பதுதான் அது. சேருவில சிங்களக் குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தினை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் நான்கு பிரதான நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. திருகோணமணலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் அல்லைக் குடியேற்றத்திட்டமும், திருகோணமலை - வவுனியா வீதியில் மொறவெவ குடியேற்றத்திட்டமும், திருகோணமலை - முல்லைத்தீவு வீதியில் பதவியா குடியேற்றத் திட்டமும் அமைக்கப்பட்டன. திருகோணமலையில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடக்கும்பட்சத்தில், அவர்கள் தப்பியோட முடியாதபடி அனைத்துத் திசைகளினாலும் சிங்களக் குடியேற்றங்களால் சூழப்பட்டு முற்றுகைக்குள் வைத்திருப்பதும் இதன் ஒரு நோக்கமாக இருக்கிறது. திருகோணமலையினைத் தமிழ் ஈழத்தின் தலைநகராக்குவோம் என்கிற தமிழரின் நிலைப்பாட்டிற்குப் பதிலடியாகவே சிங்கள அரசுகள் திருகோணமலையினைச் சிங்களக் குடியேற்றங்களால் முற்றுகைக்குள் கொண்டுவந்திருந்தன. முற்றாகச் சிங்களமயமாக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதி திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களால் குடியேற்றப்பட்ட பகுதிகளையும், அவற்றினைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் பாதுகாப்புக் கோட்டைகளாக மாற்றுவதிலும் சிங்கள அரசுகள் வெற்றிகண்டன. திருகோணமலைத் துறைமுகத்தில் பாரிய கடற்படை முகாம் ஒன்று உருவாக்கப்பட்டதுடன், சீனன்குடாவிலும் மொறவெவவிலும் விமானப்படைத் தளங்கள் அமைக்கப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 300 இற்கும் அதிகமான அரச படை முகாம்களில் அரைப்பங்கிற்கும் அதிகமானவை திருகோணமலை மாவட்டத்திலும், அதற்கு அண்மையாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன (இத்தொடர் எழுதப்பட்ட 2005 ஆம் ஆண்டுக் காலப்பகுதியின் நிலவரத்தின்படி இது கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழர் தாயகம் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் இன்றைய நிலையில் இம்முகாம்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பல மடங்கு என்பது குறிப்பிடத் தக்கது). சிங்கள பெளத்தமயமாக்கலுக்கு உள்ளாகிவரும் திருகோணமலை வவுனியா மாவட்டமும் சிங்களக் குடியேற்றங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு, பதவியா போன்ற சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதுடன், வவுனியாவில் குடியேற்றப்பட்ட சிங்களக் கிராமங்களுக்கென்று வவுனியா தெற்கு பிரதேசச் செயலகத்தையும் சிங்கள அரசுகள் நடத்தி வருகின்றன. இவ்வாறு, பல தமிழ்ப் பிரதேசங்களை ஊடறுத்து நடைபெற்றுவரும் பல சிங்களக் குடியேற்றங்கள் மூலம், தமிழர் தாயகம் கூறுபோடப்பட்டு சிங்கள மயமாக்கப்படுவதுடன், இப்பகுதிகளில் வாழும் தமிழர்களின் விகிதாசாரமும் திட்டமிட்டவகையில் கீழிறக்கப்பட்டு வருகிறது. சிங்கள பெளத்தமயமாக்கலுக்கு உள்ளாகிவரும் திருகோணமலை வவுனியா மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்களும் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வவுனியா மாவட்டத்தில் 13,164 தமிழர்களும் 1157 சிங்களவர்களும் வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இது 1981 ஆம் ஆண்டு 54,179 தமிழர்களாகவும் 15,794 சிங்களவர்களாகவும் காணப்பட்டது.
  6. திருகோணமலைக்கு வைக்கப்பட்ட பொறி கந்தளே வெவ என்று சிங்களத்தில் பெயர் மாற்றப்பட்ட தமிழரின் கந்தளாய்க் குளம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதுடன் மட்டுமே சேனநாயக்க நின்றுவிட விரும்பவில்லை. திருகோணமலை மாவட்டத்திலும் சிங்களவர்களைக் குடியேற்ற அவர் விரும்பினார். சரித்திர காலத்திலிருந்தே வடமாகாணத்தின் வன்னிப்பகுதியும், கிழக்கும் மிகவும் சிறப்பான அணைக்கட்டுகளைக் கொண்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் வலையமைப்புக்களைக் கொண்ட செழிப்பான நெல்விளையும் விவசாயப் பிரதேசங்களாகக் காணப்பட்டன. இவ்வாறான நீர்ப்பாசனத் திட்டங்கள் தெற்கில் சிங்களப் பகுதிகளிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலும் காணப்பட்டு வந்தது. அணைகளைக் கட்டி நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பது பாரம்பரியமாக தமிழர்களாலும் சிங்களவர்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விவசாய நடைமுறையாகும். திருகோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே பல அணைக்கட்டுக்களும் நீர்பாசனத் திட்டங்களும் காணப்பட்டன. இவ்வாறான பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் கந்தளாய்க் குளமும் ஒன்று. திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்க் கிராமங்களான தம்பலகாமம் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கு கந்தளாய்க் குளத்திலிருந்தே நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், 1948 ஆம் ஆண்டு கந்தளாய்க் குளத்தை "கந்தளாய் அபிவிருத்தித் திட்டம்" எனும்பெயரில் மேலும் ஆளமாக்கி மேம்படுத்திய சேனநாயக்க புதிதாக காணிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவந்து சிங்களவர்களைக் குடியேற்றினார். கந்தளாய்க் குடியேற்றத் திட்டத்தின மூலம் மிகப்பெருமளவில் சிங்களவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள அரசுகளினால் குடியேற்றப்பட்டனர். கந்தளாய்க் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 1981 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்துவந்த 86,000 சிங்களவர்களில் 40,000 பேர் கந்தளாய்க் குடியேற்றத்திற்காக தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கந்தளாய்க் குடியேற்றத் திட்டத்தின் மூலம் பெரு வெற்றியைச் சம்பாதித்துக் கொண்டதாக உணர்ந்த சேனநாயக்க, அல்லைக் குடியேற்றத் திட்டத்தினை 1950 ஆம் ஆண்டு ஆர்ம்பித்து வைத்தார். 1952 ஆம் ஆண்டு தமிழரின் நில அபகரிப்பின் தந்தை என்று அறியப்பட்ட சேனநாயக்க இறந்துவிட, அவரது மகனான டட்லி சேனநாயகா அத்திட்டத்தினைத் தொடர்ந்து நடத்தினார். அல்லை அபிவிருத்தித் திட்டம் சேனநாயக்கவினால் மகாவலி ஆற்றின் ஒரு கிளையான வெருகல் ஆற்றிற்குக் குறுக்கே, திருகோணமலை குடாவிற்கு தெற்காக அணையொன்றினைக் கட்டுவதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பகுதி தமிழர்களால் பூர்வீக காலத்திலிருந்து கொட்டியார் என்று அழைக்கப்பட்டு வந்தது. தமிழர்களும் சிங்களவர்களும் இப்பகுதியில் வாழ்ந்துவந்தபோதும், இப்பிரதேசம் தமிழரின் பெரும்பான்மைப் பிரதேசமாகவே விளங்கிவந்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொட்டியார் பகுதியில் ஒரு பிரதேசச் செயலகமே இருந்தது. அது கொட்டியார் பிரதேசச் செயலகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்பகுதியில் மூன்று பிரதேசச் செயலகங்கள் இயங்கி வருகின்றன. மூதூர், சேருவிலை மற்றும் வெருகல் என்பனவே அந்த மூன்று பிரதேசச் செயலகங்களும் ஆகும். 1960 ஆம் ஆண்டு சேருவிலை பிரதேசச் செயலகமும், 1980 இல் வெருகல் பிரதேசச் செயலகமும் அப்பிரதேசங்களில் அரசினால் குடியேற்றப்பட்ட சிங்களவர்களின் நலன்களைக் கவனிக்கவென்று உருவாக்கப்பட்டன. 1981 ஆம் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி சேருவிலை பகுதியில் வாழ்ந்த 20,187 மக்களில் 11,665 பேர் தென்பகுதிகளில் இருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்ட சிங்களவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழருக்குச் சொந்தமான, ஆனால் மக்கள் வாழ்ந்துவராத காணிகளில் மட்டுமே சிங்களவர்களை அரசு குடியேற்றவில்லை. தமிழர்கள் பூர்வீகமாக வழ்ந்துவந்த தமிழ்க் கிராமங்களிலும் சிங்களவர்களைக் குடியேற்றிய அரசுகள் அவற்றிற்குச் சிங்களப் பெயர்களை இட்டதன் மூலம், அவை பாரம்பரியமான சிங்களக் கிராமங்கள் என்று சரித்திரத்தினை மாற்றி எழுதுவதிலும் வெற்றி கண்டன. இப்பகுதியில் சிங்களமயமாக்கப்பட்டுள்ள கிராமங்களான புளஸ்த்திகம, காங்கேயப்பட்டுன என்பவை புராதன தமிழ்க் கிராமங்களாக இருந்து முற்றான சிங்கள மயமாக்கலுக்கு உள்ளானவற்றிற்கு உதாரணங்களாகும். புராதன தமிழ்க் கிராமமான அரிப்பு எனும் பிரதேசத்திற்கு சேருவில எனும் சிங்களப் பெயர் சூட்டப்பட்டது. அவ்வாறே கல்லாறு எனும் தமிழ்க் கிராமம் சோமபுற என்றும், நீலப்பளை எனும் தமிழ்க் கிராமம் நீலபொல என்றும், பூநகர் எனும் தமிழ்க் கிராமம் மகிந்த புர என்றும், திருமங்கலை எனும் தூய தமிழ்க் கிராமம் சிறிமங்களபுர என்றும், இலங்கைத் துறை எனும் தமிழ்க் கிராமம் லங்கா பட்டுண என்றும் சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டன. 1951 ஆம் ஆண்டளவில் கிழக்கில் தமிழ்ப் பிரதேசங்களில், அரச முன்னெடுப்புக்களால் ஏற்படுத்தப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகளுக்கு முக்கிய காரணமாக உருவாகியிருந்தன. 1951 ஆம் ஆண்டு மாசி 4 ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றிய பிரதமர் சேனநாயக்க கிழக்கில் முடுக்கிவிடப்பட்ட குடியேற்றங்களே தனது அரசின் முக்கியமான வெற்றிகரமான செயற்பாடு என்று பெருமிதத்துடன் கூறியிருந்தார்.
  7. தமிழ் இனச் சுத்திகரிப்பு நிகழ்த்தப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் கல்லோயாக் குடியேற்றம் அழகரட்ணம் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படியில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றினை உருவாக்கிய பிரதமர் சேனநாயக்க, இத்திட்டத்தினை நடத்துவதற்கு விசேட பணிக்குழு ஒன்றினை உருவாக்கினார். இத்திட்டத்திற்கு கல்லோயா அபிவிருத்திச் சபை என்று அவர் பெயரிட்டார். பட்டிப்பளை ஆறு என்று சரித்திர காலத்திலிருந்து தமிழில் அழைக்கப்பட்டு வந்த ஆற்றிற்கு கல்லோயா என்று சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டது. சிங்கள கல்விமான்களின் ஆசீர்வாதத்துடனும் ஆராய்ச்சிகளுடனும் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சிங்களப் பெயரிடும் செயற்பாடுகள் இங்கிருந்தே ஆரம்பிக்கின்றன. தமிழரின் நிலம் அபகரிக்கும் சிங்கள முன்னெடுப்பின் தந்தை - டி எஸ் சேனநாயக்க கல்லோயா திட்டத்தினை 1949 ஆம் ஆண்டு ஆவணி 28 ஆம் திகதி சேனநாயக்க இங்கினியாகலை பகுதியில் ஆரம்பித்து வைத்தார். ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடகாலத்தில் இத்திட்டம் நிறைவுபெற்றது. இந்த நீர்த்தேக்கத்திற்குச் சிங்களவர்களின் அரசு சேனநாயக்க சமுத்திரம் (சிங்களத்தில் சேனநாயக்க சமுத்ர) என்று பெயரிட்டது. சேனநாயக்க சமுத்திரமாக மாற்றப்பட்ட தமிழரின் பட்டிப்பளை ஆறு இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் 120,000 ஏக்கர்கள் நிலம் 40 குடியேற்றக் கிராமங்களுக்கிடையே பிரிக்கப்பட்டது. இந்த கிராமம் ஒவ்வொன்றிலும் 150 விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 ஏக்கர்கள் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், இந்த 40 குடியேற்றக் கிராமங்களில் 6 கிராமங்கள் மட்டுமே தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் வெறும் 900 தமிழ்க் குடும்பங்களுக்கு தமிழரின் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதேவேளை 7,000 சிங்களக் குடும்பங்கள் இத்திட்டத்தினூடாக தமிழ்ப் பிரதேசங்களில் அரச ஆதரவுடன் குடியேற்றப்பட்டார்கள். இச்சிங்களக் குடும்பங்கள் அனைத்துமே தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். நாட்டின் தந்தையென்று சிங்களவர்களால் அழைக்கப்பட்ட சேனநாயக்க, "தமிழரின் நிலம் அபகரிக்கும் சிங்கள முன்னெடுப்பின் தந்தை" யென்று ஆனதுடன், நாடு முற்றான இனப்போரிற்குள் புதைந்துவிட அடித்தளம் இட்ட சிங்களவர்களில் முதன்மையானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கு முன்னர் கிழக்கு மாகாணம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தினையும், திருகோணமலை மாவட்டத்தையும் இணைத்தே அழைக்கப்பட்டு வந்தது. அம்பாறை மாவட்டம் 1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை இரண்டாகப் பிளந்து உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்பட்டது. 1911 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அம்பாறை மாவட்டம் அமைக்கப்பட்ட பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்ததுடன், தமிழர்கள் இரண்டாம் நிலையிலும், சிங்களவர்கள் மூன்றாம் நிலையிலும் வாழ்ந்துவந்திருந்தார்கள். 1911 ஆம் ஆண்டில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை 36,843 (55 %), தமிழர்கள் 24,733 (37%) மற்றும் சிங்களவர்கள் 4,762(7%) ஆக இருந்தது. ஆனால், 1921 ஆம் ஆண்டு சனத்தொகைக் கண்க்கெடுப்பின்போது முஸ்லீம்களின் எண்ணிக்கை 31,943 ஆகவும் தமிழர்களின் எண்ணிக்கை 25,203 ஆகவும் சிங்களவர்களின் எண்ணிக்கை 7,285 ஆகவும் காணப்பட்டது. பின்னால் வந்த வருடங்களில், முக்கியமாக கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தினூடாக இப்பிரதேசத்தில் சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தினை பின்வரும் சனத்தொகைக் கணக்கெடுப்பின் விபரங்கள் கூறுகின்றன, 1953 இல் : முஸ்லீம்கள் 37,901, தமிழர்கள் 39,985, சிங்களவர்கள் 26,459 1963 இல் : முஸ்லீம்கள் 97,990 (45.6%), சிங்களவர்கள் 62,160 (29%), தமிழர்கள் 49,220 (23.5%) 1971 இல் : முஸ்லீம்கள் 123,365 (47%), சிங்களவர்கள் 82,280 (30%), தமிழர்கள் 60,519 (22%) 1981 இல் : 166,889 (47%), சிங்களவர்கள் 146,371 (38.01%) தமிழர்கள் 78,315 (20%). 2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கண்க்கெடுப்பின்படி சிங்களவர்களின் எண்ணிக்கை 252,458 ஆக இருக்க முஸ்லீம்களின் எண்ணிக்கை 281,702 ஆகவும் தமிழர்களின் எண்ணிக்கை 113, 3003 எனும் பலவீனமான நிலையிலும் காணப்பட்டது. அன்றிலிருந்து இம்மாவட்டத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை முதலாவது இடத்திற்கு அரச ஆதரவுடன் முந்தள்ளப்பட்டுவிட்டதும் குறிப்பிடத் தக்கது. கல்லோய அபிவிருத்தித் திட்டத்தின்படி தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆறு குடியேற்றக் கிராமங்களில் வசித்துவந்த தமிழர்களை அரசும் சிங்களக் குடியேற்றவாசிகளினால் உருவாக்கப்பட்ட காடையர்களும் இணைந்து அடித்து விரட்டினர். 1956 ஆம் ஆண்டு ஆனியில் நடைபெற்ற இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பின்போது குறைந்தது 200 தமிழர்கள் சிங்களவர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். முதலாம் கட்ட ஆக்கிரமிப்பு நிறைவுக்கு வந்தபின்னர் இப்பகுதிகளில் குடியேறுவதற்கு மீண்டும் எத்தனித்த தமிழர்கள் இரண்டாவது கட்டமாக 1958 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல்களினால் நிரந்தரமாகவே இப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனாலும் சில குடும்பங்கள் மீண்டும் தமது வீடுகளில் குடியேறும் நிலை ஏற்பட்டபோதும் கூட, 1990 களில் இலங்கை ராணுவம் நடத்திய படுகொலைகளின் பின்னர் இப்பிரதேசத்திலிருந்து தமிழர்கள் முற்றாக துடைத்தழிக்கப்பட்டுவிட்டனர். அன்றிலிருந்து கல்லோயாத் திட்டத்தின் மூலம் பூர்வீகத் தமிழ்ப் பிரதேசமாகவிருந்த இப்பகுதியில் குடியேற்றப்பட்ட இறுதி 900 தமிழ்க் குடும்பங்களும் திட்டமிட்ட படுகொலைகளினூடாகவும் கலவரங்களினூடாகவும் இப்பகுதியிலிருந்து முற்றாக அடித்து விரட்டப்பட்டதுடன் இப்பகுதியில் தமிழ் இனச் சுத்திகரிப்பொன்றினை சிங்கள அரசுகள் செய்து முடித்திருக்கின்றன. தமிழரின் பூர்வீகப் பிரதேசத்தில், தமிழினம் முற்றாக அடித்து விரட்டப்பட்டு சிங்கள விவசாயிகள் குடியேறி வாழ்ந்துவருகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.