Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8910
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87993
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  4. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    5896
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/22/23 in Posts

  1. பேராதனையில் இடம்பெற்ற தாக்குதல்கள் ஜெயவர்த்தன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான அமைச்சர்கள் மத்தியில் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழர் மீதான முழு அளவிலான தாக்குதல்கள் குறித்த வதந்திகளை அரசே தனது தொழிற்சங்கக் காடையர்களுக்கும், மாணவர் அமைப்புகளுக்குள்ளும் வேண்டுமென்று கசியவிட்டது. ஜெயார் தான் பதவிக்கு வந்த நாளிலிருந்து இரு தொழிற்சங்கங்களை தனது அரசியல்ப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக வளர்த்து வந்தார். சிறில் மத்தியுவினால் வழிநடத்தப்பட்ட ஜாதிக சேவ சங்கமய மற்றும் காமிணி திஸாநாயக்கவினால் வழிநடத்தப்பட்ட லங்கா ஜாதிக எஸ்டேட் தொழிலாளர் சங்கம் ஆகியவையே அவை இரண்டு தொழிற்சங்கங்களும் ஆகும். ஆனால், பல்கலைக்கழக மாணவர்களிடம் அதிகம் செல்வாக்கினைக் கொண்டிருக்காத ஐக்கிய தேசியக் கட்சி பல்கலைக்கழகங்களில் பலமாக வேரூன்றியிருந்த இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எதிராக தனது சொந்த மாணவர் அமைப்பு ஒன்றினை உருவாக்கியது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட காலம் முதல் அரச படைகளின் ஆதரவுடனான ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பிற்கும், இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கும் இடையே பல்கலைக் கழகங்களில் மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பு பேராதனைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டதையடுத்து அதுவரையிருந்த இனச் சமத்துவம் பாதிக்கபடலாயிற்று. சுமார் 25 வீதம் தமிழ் மாணவர்களைக் கொண்ட பேராதனைப் பல்கலைக் கழகம் இடதுசாரி மாணவர் அமைப்புக்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் தமிழ் மாணவர்கள் பெருமளவில் இனவன்முறைகளுக்கு உள்ளாவதிலிருந்து தப்பி வந்தனர். ஆனால் வடக்குக் கிழக்கில் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தினுள் தமிழ் மாணவர்களுக்கெதிரான உணர்வு சிங்கள மாணவர்களிடையே, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பினரிடையே அதிகரித்து வரலாயிற்று. சில சிங்கள மாணவர்கள் வெளிப்படையாகவே தமிழ் மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்? உங்களின் ஈழத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்களுக்கு ஈழமும் கிடைக்கப்போவதில்லை, பல்கலைகழகத்திலும் இடமில்லை, விலைமாதருக்குப் பிறந்த தமிழர்களே" என்று வெளிப்படையாகப் பேசத் தொடங்கினர். அக்காலப்பகுதியில் தமிழ் மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட நிழல் இல்லாத மனிதர் எனும் மேடை நாடகத்தினையடுத்து சிங்கள மாணவர்கள் கடும் சினமடைந்திருந்தார்கள். ஜேர்மனிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய பிரெஞ்சுப் போராளிகள் மீது நாஜிகள் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளையே இந்த மேடை நாடகம் பேசியது. இந்த நாடகத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது தமது ராணுவம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதைக் காட்டவே தமிழ் மாணவர்கள் முயல்கிறார்கள் என்று சிங்கள் மாணவர்கள் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். ஆகவே, பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ் மாணவர்களை அடித்து விரட்டும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளின் அறிக்கை குறித்து ராஜன் ஹூல் தனது புத்தகமான "அதிகாரத்தின் மமதை" இல் குறிப்பிட்டிருக்கிறார். "தாக்குதல்களின் நோக்கமே தமிழ் மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து துரத்துவதுதான். சட்டத்தினை அப்பட்டமாக மீறிய வகையிலும், கடுமையான வன்முறைகளைப் பாவித்தும் தாக்குதலாளிகள் தமது நோக்கத்தினை நிறைவேற்றினார்கள்" என்று ராஜன் ஹூல் எழுதுகிறார். தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதலை கென்னத் டி லனரோலே, டொரை கல்னைடொ மற்றும் திருமதி எகநாயக்க ஆகியோர் அடங்கிய குழு விசாரித்தது. பல்கலைக் கழக வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட சின்னத்தில் இருந்த சிங்கள எழுத்துக்களை தமிழ் மாணவர்கள் அழித்தார்கள் என்று குற்றஞ்சாட்டியே அவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்டார்கள். ஆனால், சின்னத்திலிருந்த சிங்கள எழுத்துக்களை பட்டப்பகலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடனான மாணவர் அமைப்பே அழித்தது. ஆனால், இதனைச் செய்தது தமிழ் மாணவர்களே என்கிற வதந்தி சிங்கள மாணவர்களால் பரப்பப்பட்டதுடன், தமிழ் மாணவர்கள் தங்களது அறைகளில் புலிகளின் கொடியினையும், தமிழ்த்தேசியத்தினை ஆதரிக்கும் சுலோகங்களையும் மறைத்து வைத்திருந்தனர் என்கிற இன்னொரு வதந்தியும் திட்டமிட்டே பரப்பப்பட்டது. பல்கலைக் கழகத்திற்கு வெளியில் இருந்த சில சிங்களவர்கள் அன்று மாலை பல்கலைக் கழகத்தினுள் நுழைந்து தமிழ் மாணவர்களை அச்சுருத்தியிருக்கின்றனர். "மிக விரைவில் நாங்களும், மாணவர் அமைப்பினரும் சேர்ந்து உங்களுக்கு ஒரு பாடத்தினைப் புகட்டவிருக்கிறோம்" என்று அவர்களை எச்சரித்திருக்கின்றது அந்தக் கும்பல். அன்றிரவு, அருணாச்சலம் மண்டபத்தில் தமிழ்த் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து கொண்ட விஞ்ஞானப் பிரிவில் நான்காம் ஆண்டில் பயிலும் துள்சி விக்கிரமசிங்க மற்றும் ஏ. எகநாயக்க ஆகிய சிங்கள மாணவர்கள் அம்மண்டபத்திற்குச் சென்றிருக்கின்றனர். அங்கு திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த சில தமிழ் மாணவர்களை வெளியே இழுத்துவந்த அவர்கள், பல்கலைக் கழக வாயிலில் சின்னத்திலிலிருந்த சிங்கள எழுத்துக்களை தமிழ் மாணவர்களே அழித்தார்கள் என்றும், ஆகவே மொத்தத் தமிழ் மாணவர்களும் இதற்குப் பொறுப்பாளிகள் என்று குற்றஞ்சாட்டிக்கொண்டே மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள். பின்னர் தமிழ் மாணவர்களை கலகா சந்தியிலிருந்து கலைப்பீடம் வரையான வீதியில் இருந்த அனைத்துத் தமிழ் எழுத்துக்களையும் தார் கொண்டு அழிக்க வைத்திருக்கிறார்கள். .
  2. கந்தர்மடத்தில் வெறியாட்டம் ஆடிய ராணுவம் யாழ்ப்பாணத்தில் வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் செயலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, தமது சகாவான ராணுவ வீரர் ஜயவர்த்தனவின் மரணத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியது. ரஜரட்ட ரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவத்தினர் தாக்குதல் நடைபெற்ற கந்தர்மடம் பகுதிக்கு வந்து அங்கிருந்த வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். அன்று ராணுவத்தினரால் 64 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மூன்று மினிவான்கள், ஒன்பது கார்கள், மூன்று மோட்டார் சைக்கிள்கள், 36 துவிச்சக்கர வண்டிகள் என்று பல வாகனங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இப்பழிவாங்கல் நடத்தப்பட்ட விதத்தினைப் பார்க்கும்போது முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. மாலை 5 மணிக்கு அவசரகாலச் சட்டத்தை அரசு பிரகடணம் செய்தபோதும், இராணுவத்தினரின் அட்டகாசம் நள்ளிரவு வரை தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் ஓய்வுக்கு வந்தபின்னர், தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அணியை அநுராதபுரத் தளத்திற்குத் திரும்புமாறு ராணுவத் தலைமை உத்தரவிட்டது. இதன்பின்னர் இந்த வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவின. வைகாசி 21 ஆம் திகதி ரஜரட்ட படைப்பிரிவு அநுராதபுரத்திற்குத் திருப்பியழைக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தபால்த் தொடர்வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த தமிழர்களை அநுராதபுரத்தில் ஏறிக்கொண்ட பொலீஸார் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். தமிழ் ரயில் பயணிகள் மீதான தாக்குதல்கள் குறைந்தது ஒரு வார காலம் வரை தொடர்ந்து நடந்தன. தமிழர்களுக்கெதிரான சுலோகங்களும், சுவரொட்டிகளும் அநுராதபுரம் நகரில் பரவலாக ஒட்டப்பட்டன. இவ்வாறே, நாட்டின் ஏனைய இடங்களிலும் ஆங்காங்கே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்தினர். தமது ராணுவ வீரர் ஒவ்வொருவரினதும் இழப்பிற்கு தமிழர்களை மொத்தமாகப் பழிவாங்கவேண்டும் என்கிற வெறி சாதாரண சிங்கள மக்களுக்குள்ளும், பொலீஸார் மற்றும் இராணுவத்தினர் மத்தியிலும் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலப்பகுதியில் பல வதந்திகள் வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் அரசில் உள்ளவர்களால் ஊடகங்கள் மூலம் கசியவிடப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் புலிகளின் இராணுவ வலிமையினை அடக்குவதற்கான ஒரே வழி தமிழ் மக்கள் மீது பாரிய அளவிலான வன்முறைகளை நிகழ்த்துவதுதான் என்கிற முடிவு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கசிய விடப்பட்ட வதந்தி. ஜெயாரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான அதுலத் முதலியே இந்த யோசனையினை அமைச்சரவையில் முன்வைத்ததாகவும் இந்த வதந்திகள் மேலும் கூறின. இஸ்ரேலிய பல்கலைக் கழகம் ஒன்றில் பட்டப்படிப்பினை மேற்கொண்டிருந்த லலித் அதுலத் முதலி, கிளர்ச்சிகளை அடக்குவதற்கான ஒரேவழி மக்கள் கூட்டத்தின் மீது மிகவும் கடுமையான அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஏவிவிடுவதுதான் என்று உறுதியாக நம்பிவந்தார். பாலஸ்த்தீனர்களுக்கெதிரான இஸ்ரேலிய ராணுவத்தினரின் கடும்போக்கினை தமிழர்களுக்கெதிராக தாமும் பாவிக்கவேண்டும் என்கிற கருத்தினை அதுலத் முதலி வெளிப்படையாகவே அமைச்சரவையில் முன்வைத்து வரலானார். மிகக் கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலாக்கப்படுவதன் சூத்திரதாரியே அதுலத் முதலிதான் என்பது குறிப்பிடத் தக்கது. அச்சுலக்கை - லலித் அதுலத் முதலி ஆனி 12 முதல் 27 வரையான காலப்பகுதியில் எகிப்து மற்றும் ரோம் ஆகிய இடங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை ஜெயார் மேற்கொள்ளவேண்டியிருந்தது. ஆகவே, வழமை போல சர்வதேசத்தில் தனக்கு நற்பெயரை உருவாக்க சில கண்துடைப்பு நடவடிக்கைகளை தான் வெளிநாடு பயணமாகுமுன் செய்யவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. தன்னை தூய ஜனநாயகவாதியென்றும், முழுமையான ஒழுக்க சீலன் என்றும் சர்வதேசத்தில் காண்பிக்க வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. ஆகவே, வைகாசி 18 ஆம் திகதி கந்தர்மடத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய ராணுவத்தினரை விசாரிக்கவேண்டும் என்கிற நாடகத்தை ஜெயார் அரங்கேற்றினார். ஜெயாரின் கட்டளைக்கிணங்க ரஜரட்ட ரபிள் படைப்பிரிவைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களை வன்முறைகளைத் தூண்டினார்கள் என்கிற பெயரில் ராணுவத் தலைமை பதவிநீக்கம் செய்தது. 1994 இல் புலிகளால் காலிமுகத்திடலில் ராணுவ தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட அன்றைய ராணுவத் தளபதி சிசில் வைத்தியரட்ண தமது சகாக்கள் நால்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அப்படைப்பிரிவைச் சேர்ந்த சில ராணுவ வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறினர். ரஜரட்ட ரபிள் படைப்பிரிவின் தலைமை அதிகாரியான லெப்டினன்ட் கேணல் கே.எம்.எஸ் பெரேராவைப் பதவிநீக்கம் செய்த ராணுவத் தலைமை அவரின் இடத்திற்கு இன்னொரு லெப்டினன்ட் கேணலான சிசில் வைத்தியரட்ணவை நியமித்தது. ராணுவத் தலைமையின் தீர்மானத்தை எதிர்த்தார்கள் என்கிற பெயரில் பின்னாட்களில் ஐந்து அதிகாரிகளும் 96 ராணுவ வீரர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்கள். அரசியல் சித்து விளையாட்டுக்களில் கைதேர்ந்தவரான ஜெயார், சர்வதேசத்தில் தன்னை சிறந்த ஜனநாயகவாதியாகக் காட்டக் கடுமையாக உழைத்து வந்தார். 1977 ஆம் ஆண்டில் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டிய பாராளுமன்றத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் நீட்டித்துக் கொண்டதையடுத்து சர்வதேசத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. தனது செயலை பொய்யான காரணங்களைக் காட்டி அவர் நியாயப்படுத்த முனைந்தபோதும், சர்வதேசத்தில் அவருக்கு ஏற்பட்ட மாற்றமுடியாத அவமானம் குறித்து அவர் நன்கு உணர்ந்தே இருந்தார். சர்வஜன வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினால் வெற்றிகொள்ளப்பட்ட 18 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்த ஜெயார், அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களையும் நடத்தியிருந்தார். மேலும், இவை தவிர்ந்த ஏனைய தொகுதிகள் எல்லாவற்றிலும் தனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிபெற்றது என்று அவர் கூறிவந்தார். சிங்கள பெளத்த இனவாதப் பெண்மணி - சிறிமாவோ பண்டாரநாயக்க இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 18 தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி 14 இடங்களில் வெற்றிபெற்றது. சுதந்திரக் கட்சி மூன்று தொகுதிகளிலும், மகஜன எக்சத் பெரமுனக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றது. இந்த முடிவுகளையடுத்து ஜெயவர்த்தன தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றிற்குச் சென்றது நியாயமானதுதான் என்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பேசிவந்தார். இது பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்குச் சினத்தை ஏற்படுத்தியிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்க, அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்ததுடன், தேர்தலுக்கு முன்னர்வரை வாக்களர்கள் மீது ஜெயாரின் காடையர்கள் நடத்திவந்த வன்முறைகள் பற்றி தொடர்ச்சியாகப் பேசிவந்தார். பல சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் மீது விடுக்கப்பட்ட மரண அச்சுருத்தலினையடுத்து அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சுதந்திரக் கட்சியின் தேர்தல்ச் சாவடிக்கான பிரதிநிதிகள் அரச குண்டர்களால் வாக்குச் சாவடிகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். வன்முறைச் சூழ்நிலையொன்று வடக்குக் கிழக்கிலும், தெற்கிலும் அரச ஆதரவுடன் உருவாக்கப்பட்டு வந்தது.வடக்குக் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஈழம் புரட்சிகர மாணவர் முன்னணி (EROS) மற்றும் ஈழ புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி (EPRLF) ஆகிய ஐந்து போராளி அமைப்புக்களும் சுயாதீனமாக இயங்க ஆரம்பித்திருந்தன. அதைவிடவும் வேறு மூன்று அமைப்புக்கள் சிறியளவிலான வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. டெலோ அமைப்பிலிருந்து வெளியேறிச் சென்ற ஓபரோய் தேவனால் வழிநடத்தப்பட்ட டெலா (TELA) அமைப்பு, மட்டக்களப்பில் இயங்கிவந்த தமிழ் ஈழ விடுதலை நாகங்கள் (TELC) மற்றும் கெஸ் (GUES) என்று அழைக்கப்பட்ட மூன்று அமைப்புக்களுமே அவையாகும். கெஸ் அமைப்பு வாக்காளர் அட்டைகளைப் பலவந்தமாகப் பறித்துச் செல்ல, டெலா அமைப்பும் விடுதலை நாகங்கள் அமைப்பும் பொதி வெடிகுண்டுகளை மக்கள் நடமாடும் பகுதிகளில் வைப்பது, பேரூந்துகளை எரிப்பது மற்றும் பொதுச்சொத்துக்களை அழிப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. இவ்வகையான வன்முறை நடவடிக்கைகள் பற்றி கொழும்பின் ஊடகங்கள் அதிகளவு பிரச்சாரத்துடன் செய்தி வெளியிட்டு வந்ததுடன், சிங்கள மக்கள் மத்தியில் தமிழரின் போராட்டத்திற்கு எதிராக படிப்படியாக வளர்ந்துவந்த காழ்ப்புணர்ச்சியினை மேலும் கூர்மையாக்குவதிலும் ஈடுபடலாயின. .
  3. மக்கள் ஆணையினை இழந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலிகளின் கைகளுக்குள் அடைக்கலமாகிய தமிழ் மக்களும் குழந்தைகளுடன் தலைவர் பிரபாகரன் தேர்தல் முடிவுகள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு முற்றான தோல்வியினைக் கொடுத்திருந்தன. 1977 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கு மக்கள் இக்கட்சிக்கு வழங்கிய ஆணையினை 1983 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி அது முற்றாகவே தொலைத்திருந்தது. 1977 இல் முன்னணிக்கு தமது ஆணையினை வழங்கியிருந்த தமிழ் மக்கள், 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் தமது ஆணையினை மீளவும் உறுதிப்படுத்தியிருந்தனர். ஆனால், 1983 ஆம் ஆண்டு வைகாசி உள்ளூராட்சித் தேர்தல்களில் புலிகளின் வேண்டுகோளினை முற்றாக ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினை முற்றாகப் புறந்தள்ளியிருந்தனர். தேர்தல் முடிவுகள் முன்னணியினை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணித்திருந்ததைக் காட்டியது. இரு வருடங்களுக்கு முன்னர் 80 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னனி, 1983 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் பத்து வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது. வடமாகாணத்தின் ஒற்றை மாநகராட்சிச் சபையாகத் திக்ழந்த யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் 13 வீதமானோர் முன்னணிக்கு வாக்களித்திருந்தவேளை 87 வீதமானோர் புலிகளின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு தேர்தலினைப் புறக்கணித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்த மூன்று உள்ளூராட்சிச் சபைகளில் சாவகச்சேரியில் 14 வீதமானோர் முன்னணிக்கு வாக்களித்திருக்க 86 வீதமானோர் தேர்தலினை நிராகரித்திருந்தனர். பிரபாகரனின் செல்வாக்கிற்கு உடபட்ட இரு சபைகளான வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறைச் சபைகளுக்கான தேர்தல்களில் வெறும் 2 வீதமான வாக்குகளையே முன்னணி பெற்றிருந்தது. இச்சபைகளில் முன்னணி பெற்ற வாக்குகள், வல்வெட்டித்துறை - 2 %, பருத்தித்துறை - 0.75% என்பது குறிப்பிடத் தக்கது. முன்னணியின் தோல்வி போராளிகளுக்கு மகிழ்வினைக் கொடுத்திருந்தது. 1977 ஆம் ஆண்டு முன்னணிக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையினை அது இழந்துவிட்டது என்று அவர்கள் கூறினர். "தம்மீது மக்கள் வைத்த நம்பிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இழந்துவிட்டனர். மக்களுக்கு தாம் வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட முன்னணியினர் ஜயவர்த்தன வீசியெறியும் அற்பச் சலுகைகளுக்காக அவர் பின்னால் ஓடுகிறார்கள்" என்று சுதந்திரன் பத்திரிக்கையில் எழுதிய கோவை மகேசன், "மக்களால் முன்னணிக்கு வழங்கப்பட்ட தனிநாட்டினை உருவாக்குவதற்கான ஆணை தற்போது அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு போராளிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது" என்றும் எழுதினார். தமிழ் ஈழம் விடுதலை முன்னணியின் உப தலைவரான ஈழவேந்தன் கூறும்போது, "தேர்தல்களுக்கு முன்னர் மக்களுக்கு தான் வழங்கிய வாக்குறுதியை அண்ணை அமிர்தலிங்கம் நிறைவேற்ற வேண்டும்" என்று கேட்டிருந்தார். "இத்தேர்தலில் மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பினை அவர் ஏற்றுக்கொண்டு, போராளிகள் தமது கடமையினை முன்னெடுக்க வழிவிட்டு விட்டு அரசியலில் இருந்து அவர் விலகிச் செல்லவேண்டும்" என்றும் அவர் கூறினார். மக்களிடையே இருந்த பொதுவான உணர்வும் இதனையே வெளிப்படுத்தியிருந்தது. மக்களிடம் கருத்துக்களை வெளியிட்டு வந்த ஈழநாடு பத்திரிக்கையும் இதே வகையான உணர்வுகளையே வெளியிட்டு வந்தது. 1977 ஆம் ஆண்டு மக்கள் அமிருக்கு வழங்கிய ஆணையின் ஊடாக சுதந்திரத் தமிழீழ நாட்டை உருவாக்குவதற்கான செயற்பாடுகளிலும், அதற்கான அரசியலமைப்பினை உருவாக்குவதிலும் ஈடுபடப் போவதாக உறுதியளித்த அமிர் தலைமையிலான தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைச் செய்ய முற்றாகத் தவறியுள்ளதையடுத்து தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆணையினை இன்று அவர்கள் இழந்துவிட்டார்கள் என்பதே சாதாரண தமிழனின் உணர்வாக இருந்தது. "மக்கள் தமக்கு வழங்கிய ஆணையின்படி நடக்க அவர்கள் தவறிவிட்டார்கள்" என்பதே அனைவரினதும் கருத்தாக இருந்தது. நான் இதுதொடர்பாக அமிர்தலிங்கத்தை டெயிலிநியூஸ் பத்திரிகைக்காகப் பேடி கண்டிருந்தேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தோல்விக்கான முக்கிய காரணங்களை அலசுமாறு அவரிடம் நான் கேட்டேன். அதற்குப் பதிலளித்த அமிர், தனக்கு ஜெயவர்த்த அளித்த வாக்குறுதிகளைச் செயற்படுத்த மறுத்தமையே தமது தோல்விக்கான காரணம் என்று கூறினார். " மாவட்ட அபிவிருத்திச் சபைகளைச் செயற்படுத்தப் போவதாக அவர் என்னிடம் உறுதியளித்தார், ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அவர் விரும்பவில்லை. இச்சபைகளை நடத்துவதற்கான நிதியினை வழங்க அவர் மறுத்துவிட்டார். அவர் எங்களுக்குத் தந்ததெல்லாம் வெற்றுக் கோது ஒன்றே அன்றி வேறில்லை. மக்களிடம் சென்று காட்டுவதற்கு எம்மிடம் எதுவும் இருக்கவில்லை. புலிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவும் எம்மிடம் எதுவும் இருக்கவில்லை" என்று அவர் கூறினார். பிரபாகரனின் துண்டுப்பிரசுரத்தில் இருந்த, "தமிழரின் குருதி குடித்து, வாயில் அந்தக் குருதி இன்னமும் சிந்திக்கொண்டிருக்கும் அரச பயங்கரவாத ஓநாய்" எனும் வாக்கியத்தின் பொருளினைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அமைர், "ராணுவத்தினரின் பதில்த் தாக்குதல்களால் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் போராளிகளின் கைகளுக்குள்ளேயே அடைக்கலம் தேடுவார்கள் என்று ஜெயவர்த்தனவை நான் எச்சரித்திருந்தேன்" என்று அவர் கூறினார்.
  4. ராணுவத்திடமிருந்து புலிகள் முதன்முதலாகக் கைப்பற்றிய டி - 56 ரக தானியங்கி ரைபிள் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களையடுத்து பீதியான சூழ்நிலையொன்று தோன்றியது. மீதமாகவிருந்த வேட்பாளர்களும் தமது விலகலை அறிவிக்கும் கடிதங்களுடன் ஈழநாடு பத்திரிக்கைக் காரியாலயத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி தான் தேர்தலில் இருந்து விலகப்போவதில்லை என்று அறிவித்திருந்தபோதிலும், அக்கட்சியின் பெரும்பான்மையான வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டனர். வேட்பாளர்களின் பின்வாங்கலும், விலகிச் செல்லலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும் வெகுவாகப் பாதித்திருந்தது. யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளரான நாகராஜா உட்பட அச்சபையில் போட்டியிட விண்ணப்பித்திருந்த 35 வேட்பாளர்களும் விலக்கொண்டனர். ஆனால், அமிர்தலிங்கமோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். சில வேட்பாளர்கள் விலகிக்கொண்ட போதிலும் தனது கட்சி இத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார். தேர்தல் நடைமுறையில் இருந்த தவறுகளைத் தனக்குச் சாதகமாகப் பாவித்த அமிர்தலிங்கம், வேட்பாளர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர்கள் விலகுவது சட்டத்திற்கு முரணானது என்று அவர் அறிவித்தார். சட்டத்தின்படி, வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து பின்வாங்கினாலும், இறுதியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் தொடர்ந்தும் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அமிர்தலிங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாடு தமக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாக புலிகளின் தலைமையினால் கருதப்பட்டது. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை வெளிப்படையாக எதிர்கொள்வதென்று பிரபாகரன் முடிவெடுத்தார். அதன்படி வைகாசி 8 ஆம் திகதி யாழ்ப்பாணத்த்ம் ஓட்டுமடம் பகுதியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூட்டமொன்றினை அமிர்தலிங்கம் நடத்திக்கொண்டிருந்தவேளை, சீலன் தலைமையில் ஆறு போராளிகள் அங்கு சென்றனர். புலிகளின் தடையினை உதாசீனம் செய்யுங்கள், பயப்படாது தேர்தலில் போட்டியிடுங்கள் என்று அமிர் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட புலிகளின் போராளி ஒருவர், "கடந்த 30 வருடங்களாக நீங்கள் சாதித்தது என்னவென்று கூறுங்கள் பார்க்கலாம்?" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கேட்டார். இன்னுமொரு போராளி, "ஜெயாருடன் தொங்கிக் கொண்டிருப்பதால் எதனைச் சாதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று அமிரைப் பார்த்துக் கோபமாகக் கேட்டார். அமிர்தலிங்கம் திகைத்துப் போனார். தன்னை நோக்கிக் கேள்விகேட்ட புலிகளுக்கு அமிர் பதிலளிக்கும் முன்னமே வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்கள் புலிகளால் தீர்க்கப்பட்ட அங்கிருந்த கூட்டம் கலைந்து ஓடத் தொடங்கியது. மேடையில் வீற்றிருந்த பேச்சாளர்களும் ஓடத் தொடங்கினர். தன்னைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் தன்னை விட்டு ஓடிச்சென்ற நிலையில் அமிர் மட்டும் கையில் ஒலிபெருக்கியுடன் அங்கே நின்றிருந்தார். பின்னர் அமிரின் காரினை ஓட்டிச் சென்ற புலிகள், அதனைச் சேதப்படுத்திவிட்டு மயானம் ஒன்றின் முன்னால் கைவிட்டுச் சென்றனர். நிலைமையினை ஆராய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழு வைகாசி 11 ஆம் திகதி கூடியது. ஆனால், அமிர்தலிங்கம் தேர்தலில் பங்கெடுக்கும் தனது முடிவில் பிடிவாதமாக நின்றார். "நாங்கள் துவக்கைக் கண்டு பயப்படத் தேவையில்லை. மரணம் எங்களுக்கு ஒருமுறை தான் வரப்போகிறது, அது இப்போது வந்தால்த்தான் என்ன? நான் தம்பிமாரிடம் ஒரு சவாலினை முன்வைக்கிறேன், முடிந்தால் அவர்கள் மக்களிடம் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுப் பார்க்கட்டும். மக்கள் அதனை முடிவெடுக்கட்டும். மக்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்று பேசினார். வைகாசி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்துமடம் சந்தியில் நடந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போதும் அமிர்தலிங்கம் இதனையே குறிப்பிட்டார். புலிகளின் புறக்கணிப்புக் கோரிக்கையினை நிராகரித்த அமிர்தலிங்கம், மக்கள் தனது கட்சிக்கு வழங்கிய ஆணையினை புலிகள் மதிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அப்பகுதிக்கு வந்திருந்த புலிகள் வானை நோக்கிச் சில வேட்டுக்களைத் தீர்க்கவே அக்கூட்டமும் பாதியில் கலைந்து போனது. தேர்தல் நாள் அமைதியாக இருந்தது. கடைகள் பூட்டப்பட்டிருந்தன. வீதிகளில் போக்குவரத்து மிகவும் அரிதாகவே காணப்பட்டது. தேர்தலில் அதிக சிரத்தையெடுத்துக்கொண்டிராத பொலீஸாரும் வேண்டாவெறுப்பாகவே வீதிகளில் ரோந்துவந்து சென்றனர். தேர்தல்ச் சாவடிகளில் கடமையிலிருந்த அதிகாரிகள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டு அந்த பிற்பகல்ப் பொழுதைக் களித்துக்கொண்டிருந்தனர். காலையில் காணப்பட்ட ஒரு சில வாக்களர்களின் உற்சாகமும் பிற்பகலில் முற்றாகக் காணாமற் போயிருந்தது. செல்லக்கிளி தேர்தல் சாவடி இலக்கம் 25 இல் நான்கு மணியென்று கடிகாரம் ஒலிக்க, தேர்தல் முடிவடைவதற்கு இன்னமும் ஒரு மணிநேரமே இருக்கிறதென்று அனைவருக்கும் அது கூறியது. யாழ்ப்பாணம் அரசடி வீதியில் அமைந்திருந்த சிவப்பிரகாசர் வித்தியாலயத்திலேயே அந்த தேர்தல் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. தாம் வந்த சைக்கிள்களில் எட்டத்தில் விட்டுவிட்டு நிலையம் நோக்கி சீலனும் செல்லக்கிளியும் இன்னும் இரு போராளிகளும் நிதானமாக வந்துகொண்டிருந்தனர். நிலையத்தின் முற்பகுதிக்குச் சென்ற செல்லக்கிளி தான் கொண்டு வந்த கைக்குண்டை விட்டெறிய, வாயிலில் காவலுக்கு நின்ற ரஜரட்ட ரபிள் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜயவர்தன கொல்லப்பட்டார். மீதியாக காவலுக்கு நின்ற இரு ராணுவ வீரர்களும் பாடசாலையின் உட்பகுதிக்கு ஓடிச்சென்று நிலையெடுத்துத் தாக்கத் தொடங்கினர். அவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. கொல்லப்பட்ட ராணுவ வீரரை நோக்கி ஓடிச்சென்ற செல்லக்கிளி அவர் அருகில்க் கிடந்த டி 56 ரக ரைபிளை எடுத்துக்கொண்டார். ராணுவத்தினர் புலிகளிடம் பறிகொடுத்த முதலாவது தானியங்கித் துப்பாக்கி இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதலை முடித்துக்கொள்ளுமாறு கட்டளையிட்ட சீலன், தனது போராளிகளை அழைத்துக்கொண்டு தாம் வந்த சைக்கிள்களிலேயே தப்பிச் சென்றார். நிதானமாகவும், துணிவாகவும் செயற்பட்ட சீலனையும் போராளிகளையும் பிரபாகரன் பாராட்டியதோடு, புலிகளால் அன்று ராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டி 56 ரக ரபிளையும் போராளிகளுக்குக் காண்பித்து விளங்கப்படுத்தினார்.
  5. இறைவனிடம் கையேந்துங்கள்
  6. நீங்கள் பல்கலையில் இருந்த போது இப்படியான அனுபவங்களை அனுபவித்திருக்கிறீர்களா?
  7. தம்முடன் பல்கலையில் ஒன்றாகப் படித்த சிங்கள மாணவர்களாலேயே தாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் ஏனைய விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மாணவர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பித்தன. தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்துமே ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால், இவை நன்கு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. முதலில் முதலாம் ஆண்டில் பொறியியல் பயிலும் மாணவனான பி. பாலசூரியனைச் சுற்றிவளைத்துக்கொண்டது சிங்கள மாணவர் காடையர்குழு. அவரைப் புலி என்று கூறிக்கொண்டே அவர்கள் தாக்க ஆரம்பிக்கும் போது அவர் முதலாவது மாடியிலிருந்த தனது அறை யன்னலை உடைத்துக்கொண்டு வெளியே பாய்ந்து தப்பித்துக்கொண்டார். ஆனால், அவரை மீளவும் பிடித்துக்கொண்ட சிங்கள மாணவர்கள் , அவரைக் கைகளை மேலே தூக்கி வணங்கும் நிலையில் வைத்திருக்கும்படி வற்புறுத்தித் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரை புலியென்று கூறிக்கொண்டே பல்கலைக்கழக உப பீடாதிபதியின் அறைக்கு அந்தக் கும்பல் இழுத்துச் சென்றது. மறுநாள் உப் பீடாதிபதி தனது கட்டுப்பாட்டில் இருந்த "புலி மாணவனை" பொலீஸாரிடம் ஒப்படைத்தார். தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் பாலசூரியனின் அறையிலிருந்து தாம் கைப்பற்றியதாக பை ஒன்றினை உப-பீடாதிபதியிடம் காட்டினார்கள். அதற்குள் சில புத்தகங்களும், இறப்பர் முத்திரைகளும், தமிழ்ச் சஞ்சிகை ஒன்றும் காணப்பட்டன. இத் தமிழ்ச் சஞ்சிகையே அவர் புலிகள் அமைப்பில் இருந்தார் என்பதற்குச் சாட்சியாக பொலீஸாரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால், விசாரணைகளின்பொழுது, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவனான பாலசூரியன், தான் பாடசாலையில் படித்த நாட்களில் தயாரித்து வந்த சஞ்சிகையான "புதுசு" என்பதே அது என்பதை அறிந்துகொண்டனர். அது ஒரு இடதுசாரிச் சஞ்சிகையாகும். பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பாலசூரியன் பின்னாட்களில் விஸ்வனந்ததேவன் என்பவரால் நடத்தப்பட்ட புலிகளுக்கு எதிரான அமைப்பான தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். சில வருடங்களுக்குப் பின்னர் அவர் இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டார். பெரும்பாலான தமிழ் மாணவர்களும், தமிழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வைகாசி 12 ஆம் திகதி காலையே அங்கிருந்து சென்றுவிட்டனர். மீதமாக இருந்தோர் மீது வைகாசி 13 ஆம் திகதி மீளவும் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தால் பாதுகாப்புத் தரப்படும் என்கிற வாக்குறுதியை நம்பி தமது அறைகளுக்குச் சென்ற தமிழர்கள் மீது வெளிப்படையாகவே சிங்கள மாணவர்கள் தாக்குதல்களை மீளவும் மேற்கொண்டனர். தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களை பல்கலைக்கழக காவலர்களோ அதிகாரிகளோ தடுக்க முயலவில்லை. இத்தாக்குதல்கள் முடிவடைந்த பின்னரே விக்கிரமசிங்க மற்றும் எகநாயக்க ஆகிய மாணவர்கள் இருவரையும் வேண்டா வெறுப்பாக பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிகமாக நிர்வாகம் இடைநிறுத்தம் செய்தது. தனது ராணுவத்தைக் கொண்டும், சிங்கள மாண்வர் அமைப்புகளைக் கொண்டும் ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும் தண்டனையொன்றினை வழங்கலாம் என்று நினைத்த ஜெயாரின் எண்ணம் ஈடேறவில்லை. மாறாக, தமிழர்களை அடக்குமுறைக்கெதிராக மீண்டெழும் உத்வேகத்தை கொடுத்திருந்துடன் அரசிடமிருந்தும், சிங்கள இனத்திடமிருந்தும் அவை அந்நியப்பட வைத்தன. நான் அந்நாட்களில் திருகோணமலையில் தங்கியிருந்தேன். தமது இனம் மீதான தாக்குதல்களையடுத்து கடுமையான வலிகளையும், கடுஞ்சினத்தையும் ஒருங்கே தமிழினம் உணரத் தலைப்பட்டது. ஆங்காங்கே தனித்திருந்த தமிழர்கள் ஒன்றுபடத் தொடங்கினர். இதுவே ஜெயவர்த்தனவின் அரசு பிரபாகரனுக்குக் கொடுத்த பரிசாக மாறியது.
  8. 600 - 700 கிலோ நிறையுடைய இந்த மரை இவ்வளவு உயரமும், நீளமும் பாய்வத்து அதிசயம். வாகனத்தில் மோதினால் நேரே... கைலாயம்தான்.
  9. இந்த யானையை, இப்படியான நிலையில் வதைத்து எடுத்ததை... அறிந்த உலகமே மிகவும் பரிதாபப் பட்டது. உடனே... சிங்களம், யானையின் நோய் குணமாக நேர்த்தி வைத்து கண்டி பெரகரா ஊர்வலத்தில் கலந்து கொள்ள வைக்கப் பட்டதாக சொல்லி தப்பிக் கொண்டது. இந்த யானையின் பெயர் டிக்கிரி. அது நோய் குணமாகாமலே இறந்து விட்டது.
  10. சிறியர், கந்தர்மடம் என்று உங்களையும் சேர்த்து சொல்கிறார். நீங்கள் இருபாலை என்கிறீர்கள், எல்லாம் குழப்பமாக இருக்கிறது. குண்டு வெடித்த பிரதேசத்திலதானம் காணி வாங்குவார்களாம், விலை அப்பிடி. பொறுத்திருங்கள் இருபாலையில குண்டுவெடிக்கட்டும்.
  11. ஏன் சிறியர்... முன்பொருதடவை, கோண்டாவிலில் தொலைபேசி திருட்டு நடந்தபோது நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டமழைத்தாக நினைவு. இப்போ கந்தர்மடம் என்கிறீர்கள், இரண்டும் ஓரிடமா, அல்லது எங்கும் நிலம் வாங்கி விட்டிருக்கிறீர்களா, ஏது உங்களிடம்? சும்மா தமாஸுக்கு! ம்ம்.... தவிச்ச முயல் அடிக்கலாம்! இப்ப இல்லையாம். இங்கு அமளி முடிய இன்னோர் இடத்தில் குண்டு வெடிக்கும், அப்போ; அங்கு காணி வீடு இருப்பவர்கள் விற்க துடிப்பார்கள். இதற்காகவே குண்டு வெடிக்கும் புலம்பெயர் காணி வீடுகளை இலக்கு வைத்து. வாள் வெட்டு சலித்து விட்டதோ அல்லது முன்னேற்றமோ தெரியவில்லையே? நாளாந்தம் ஏமாற்று, களவு, கொலை. எப்படி மாறி எதிரியின் திட்டத்திற்கு வலுச்சேர்க்கிறோம். இழப்பை மறந்து, தேசியத்தை மறந்து, நாளாந்த உயிர் வாழலுக்காக போராட வேண்டியுள்ளது. நம்மை நாமே அழித்துக்கொள்ளப்போகிறோம்!
  12. பிரபாவின் துண்டுப்பிரசுரம் துரோகிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் பின்னால் வழங்கப்பட்ட தண்டனையும் தமிழரின் அரசியல்த் தலைமைத்துவத்தை தான் ஏற்கவேண்டிய தருணம் வந்துவிட்டதை பிரபாகரன் உணர்ந்தார். 1983 ஆம் ஆண்டு சித்திரை மூன்றாம் வாரத்தில் தான் கைப்பட எழுதிய துண்டுப்பிரசுரத்தை அவர் மக்களிடையே வெளியிட்டார். அந்த துண்டுப்பிரசுரத்தில் தமிழர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் "துரோகிகள்" என்றும் விளித்திருந்தார். பிரபாகரன் அன்று வெளியிட்ட துண்டுப்பிரசுரம் இப்படிக் கூறியது, "அரச பயங்கரவாத ஓநாய்ககளின் வாய்களில் இருந்து ஈழத்தமிழ் இனத்தின் குருதி இன்னமும் வழிந்துகொண்டிருக்கும் இந்தவேளையிலும், சிங்கள இனவாத அரசு தனது பயங்கரவாதத்தை சர்வதேசத்தின் முன்னால் நியாயப்படுத்த இந்த உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த முயற்சித்து வருகிறது. சிங்கள இனவாதிகளின் இந்த சதிக்குத் துணைபோகும் தமிழினத் துரோகிகளை நாம் அனுமதிக்கப்போவதில்லை". "சிறிலங்கா தேர்தல் மாயையிலிருந்து ஈழத் தமிழினம் தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். எமது மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரள வேண்டும்". ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரோ அல்லது ஏனைய தமிழ்க் கட்சிகளோ இந்தத் துண்டுப்பிரசுரத்தின் தீவிரத் தன்மையினை உணர்ந்துகொள்ளத் தவறின. ஆகவே, அவர்கள் வழமைபோல தமது தேர்தல்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்ததுடன், பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தி வந்தனர். தனது முடிவுகளை செயலாக்குவதில் எப்போதுமே பின்னின்றிராத பிரபாகரன் தனது திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார். ஆகவே, சித்திரை மாதத்தின் நான்காம் வாரத்தில் தேர்தலில் பங்கெடுக்கும் வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்ற புலிகள், அவர்களை தேர்தல்களில் இருந்து விலகிக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்கத் தொடங்கினர். தமது வேண்டுகோளின் முடிவில் ஒரு எச்சரிக்கையினையும் அவர்கள் முன்வைக்கத் தவறவில்லை, "எமது கோரிக்கையினை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், அதனால் வரக்கூடிய பின்விளைவுகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்" என்பதே அந்த எச்சரிக்கை. புலிகளின் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மறுநாளில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிக்கையில் தொடர்ச்சியாக சில விளம்பரங்கள் வெளிவரத் தொடங்கின. அந்த விளம்பரங்களின் சாராம்சம் இதுதான், " ....இந்தக் கட்சியைச் சேர்ந்த ... ஆகிய நான் இத்தாள் தமிழ் மக்களுக்கு அறியத் தருவது என்னவெனில், நடக்கவிருக்கும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் .... தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பாடியலில் இருந்து நானாக விலக்கிக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல சுயேட்சைக் கட்சிகள் இத்தேர்தலில் இருந்து விலகிக்கொண்டன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலில் தொடர்ந்தும் போட்டியிடுவதில் உறுதியாக நின்றன. இவ்விரு கட்சிகளினதும் தேர்தலில் பங்கெடுப்பதான நிலைப்பாடு தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக புலிகள் எடுத்துக்கொண்டனர். ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக செயலில் இறங்க முடிவெடுத்தனர் புலிகள். ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று வேட்பாளர்களை குறிவைத்து புலிகளின் மூன்று அணிகள் சித்திரை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வலம் வந்தன. இவர்களுள் முதலாமவரான பருத்தித்துறைத் தொகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான 43 வயது நிரம்பிய வைரமுத்து ரத்திணசிங்கம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை சைக்கிளில் வந்த இரு புலிப்போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சன்னங்கள் அவரது தலையினைத் துளைத்துச் செல்ல அந்தவிடத்திலேயே அவர் இறந்து வீழ்ந்தார். அதேநாள், மாலை 4:30 மணிக்கு, சாவகச்சேரி தொகுதியைச் சேர்ந்த 83 வயதான எஸ் முத்தையா தனது நண்பர்களின் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருக்கையில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே மாலை 5:30 மணிக்கு வல்வெட்டித்துறை உள்ளூராட்சிச் சபையின் வேட்பாளரான எஸ் ராஜரட்ணத்தின் வாகனத்தை வழிமறித்த புலிகள் அவரது மெய்ப்பாதுகாவலரை வெளியே இழுத்து விட்டு ராஜரட்ணத்தைச் சுட்டுக் கொன்றனர். ராஜரட்ணத்தைக் கொல்வதற்கான காரணம் அவர் யாழ்ப்பாணத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும், சிங்கள இனவாதியான சிறில் மத்தியூவின் நெருங்கிய சகாவும், யாழ்ப்பாணத்தில் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கெடுக்கவேண்டும் என்று உறுதியாக செயற்பட்டுவந்தவருமான கே கணேசலிங்கத்தின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்ததனால் ஆகும். துரோகிகள் என்று தம்மால் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களின் உடல்களின் அருகில் அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணத்தைப் புலிகள் குறிப்பிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன்படி, கொல்லப்பட்டவரின் உடலின் அருகில் அவரது பெயரும், உள்ளுராட்சித் தேர்தலில் பங்கெடுக்க வேண்டாம் என்கிற தமது எச்சரிக்கையினையும் மீறிச் செயற்பட்டு வந்ததினாலேயே இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
  13. பகிர்வுக்கு நன்றி சுவி அண்ணா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.