Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    7054
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    8910
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    13720
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2957
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/11/23 in all areas

  1. என்னருகே இருக்கும் நிலாவடி நீ... அமாவாசை இருட்டிலும் மிளிரும் நிலாவடி நீ... கொப்பர் கரிச்சட்டி கலர் என்றாலும்... கொம்மாவை போல் ஒளிரும் தங்கமடி நீ... சிரித்தால் பல்லில் நிலா வெளிச்சம்... தெரியும் பல்லழகியடி நீ... காய்ஞ்ச சருகும் கால் சலங்கை ஒலியும் சேர்த்தே இசைக்கும் பாவையடி நீ... மழைக்கால இருட்டிலும் மரகத மணியாய் இருப்பவளடி நீ.... 💘
  2. வொயிஸ் ஒப் அமெரிக்கா ‍ வானொலி அஞ்சல் நிலைய அமைப்பும் சர்ச்சையும் 1983 ஆம் ஆண்டு ஆவணி 13 ஆம் திகதி அமெரிக்காவுடன் புதியதொரு வானொலி பரிவர்த்தனை நிலையம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தில் இலங்கை கைசாத்திட்டமையானது இந்தியாவுக்குக் கடுமையான எரிச்சலையூட்டியது. பாரிய பரப்பளவில் பகிரப்படக்கூடிய 500 கிலோவொட் மற்றும் 250 கிலோவொட் சிற்றலைவரிசை டிரான்ஸ்மிட்டர்களை இவ்வொப்பந்தத்தின்மூலம் அமெரிக்கா இலங்கையில் நிர்மானிக்க வழிபிறந்தது. இப்புதிய வானொலி நிலையத்தினூடாக மொத்த இந்திய உபகண்டம், அரபுலகம், சீனாவின் சில பகுதிகள், சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசிய பகுதிகள், அப்கானிஸ்த்தான், ஈரான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்கு தனது வானொலிச் சேவையினை அமெரிக்காவினால் விஸ்த்தரிக்க முடிந்திருந்தது. இந்த வானொலி நிலையத்தை அமைப்பதன் மூலம் தனது பிரச்சாரத்தை அமெரிக்கா முடுக்கிவிட எண்ணியது. இந்த வானொலி நிலையத்தினை இலங்கையில் இருக்கும் இரண்டாவது அமெரிக்க இராணுவத் தளம் என்று இந்திரா வர்ணித்தார். அவரைப் பொறுத்தவரை திருகோணமலைத் துறைமுகம் இலங்கையில் இருக்கும் அமெரிக்காவின் முதலாவது தளமாகக் கருதப்பட்டது. ஆகவே, இதுதொடர்பான தனது அதிருப்தியினை இந்தியா இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் தெரியப்படுத்தியது. ஆனால் இந்தியாவின் அதிருப்தியினை நிராகரித்த இலங்கை வெளிவிவகார அமைச்சகம் இவ்வொப்பந்தம் 1951 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுடன் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட்டுவரும் ஒப்பந்தமேயன்றி, புதிய ஒப்பந்தம் கிடையாது என்று அது கூறியது. இலங்கையின் நியாயத்தை ஏற்க மறுத்த இந்தியா அமெரிக்காவிற்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த ஒரே வானொலி நிலையம் இதுவே என்றும், இதன்மூலம் இப்பிராந்தியத்தில் இருக்கும் ஏனைய ஒலிபரப்பு நிலையங்களை இதனால் தடுக்க முடியும் என்றும், செய்மதிகளுடனான தொலைத் தொடர்பையும் இந்த நிலையம் முடக்கிவிடும் வல்லமையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில். "அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படவிருக்கும் இந்த வானொலி அஞ்சல் நிலையத்தின் மூலம் இந்திய உபகண்டத்தையும் அருகிலிருக்கும் பல நாடுகளையும் அதனால் இலகுவாக தனது பிரச்சார வீச்செல்லைக்குள் கொண்டுவரமுடியும்" என்று கூறியது. சோவியத் ஒன்றியமும் இந்த வானொலி நிலையம் குறித்து கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இந்தியா வெளியிட்ட அறிக்கை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அமெரிக்காவின் இரண்டாவது தளமே இந்த வானொலி நிலையம் எனும் இந்திரா காந்தியின் கூற்றுப்பற்றி அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த அப்பேச்சாளர், "அது சாதாரண இராணுவத் தளமன்று, அதனைக் காட்டிலும் ஆபத்தானது" என்று கூறினார். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குத் தயாராகவே வந்திருந்த அவர், தான் கொண்டுவந்த வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகைச் செய்தியொன்றின் பிரதிகளை அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் விநியோகித்தார். மரே மார்டர் எனும் பத்திரிக்கையாளரால் வழங்கப்பட்ட இந்தக் கட்டுரை "நிக்கொலொயிடிஸின் ஒப்பந்தம்" என்கிற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. நிக்கொலொய்டிஸ் என்பவர் வொயிஸ் ஒப் அமெரிக்கா நிறுவனத்தின் உப தலைவர் என்பதுடன் "நாம் சாதாரண ஊடக நிறுவனம் அல்ல, எமது நோக்கமே பிரச்சாரம் செய்வதுதான்" என்றும் வெளிப்படையாகக் கூறிவந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. நிக்கொலெயிட்ஸின் அறிக்கையின்படி வொயிஸ் ஒப் அமெரிக்கா நிறுவனம் அது இயங்கும் பிராந்தியங்களில் உள்ள உள்நாட்டு மொழிகளிலேயே நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. அவ்வறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது, "இந்த நாடுகளில் ஆளும்வர்க்கத்திற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை நாம் ஊக்குவிக்க வேண்டும். மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள், மோசமான நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்கள், மக்களின் தேவைகளுக்கு அரசுகள் முக்கியத்துவம் வழங்காமை, அடக்குமுறைகள், கலாசார வேறுபாட்டுப் பிணக்குகள், மத ரீதியிலான பிணக்குகள் குறித்து நிச்சயம் வொயிஸ் ஒப் அமெரிக்கா பேசும்" என்று கூறப்பட்டிருந்தது. ஆகவேதான், இந்திரா காந்தி இந்த உத்தேச வானொலி நிலையத்தினை அமெரிக்காவின் இரண்டாவது தளம் என்று கூறினார் என்று அப்பேச்சாளர் நியாயப்படுத்தினார். அமெரிக்காவின் சிந்தனைகளை, கொள்கைகளை இந்த வானொலி நிலையத்தினூடாக அமெரிக்கா பிரச்சாரப்படுத்தவிருப்பதால் இதனை ஒரு பிரச்சாரத் தளமாக இந்திரா கருதுகிறார் என்றும் அவர் பேசினார். ஆனால், இலங்கையரசு முழுமூச்சுடன் இந்த புதிய வானொலி அஞ்சல் நிலையக் கட்டுமாணப் பணிகளை முடுக்கிவிட்டது. இதற்கென நாத்தாண்டியாவின் இரணவிலப் பகுதியில் இருந்த 800 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட தென்னந் தோப்பு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும் கட்டுமாண முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையுடன் வொயிஸ் ஒப் அமெரிகா வானொலி அஞ்சல் நிலைய ஒப்பந்தத்தினைச் செய்துகொண்டதன் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் கஸ்பர் வெயின்பேர்கர் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஐப்பசி முதலாம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தார். வேறொரு நாட்டிற்கான பயணத்தின்போது தேநீர் அருந்துவதற்காகவே கஸ்பர் இலங்கை சென்றார் என்று அவரின் பயணத்தின் கனதியை குறைத்துக் காட்ட அமெரிக்கா முயன்றபோதும் கொழும்பில் இருந்த இந்திய உயர்ஸ்த்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள் கூறும்போது, அமெரிக்காவிடம் இலங்கை கேட்ட இராணுவ உதவிகளை அமெரிக்கா இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து வழங்க மறுத்த விடயம் குறித்துக் கவலையடைந்திருந்த ஜெயவர்த்தனவை ஆறுதல்ப்படுத்தவே அவர் இலங்கை வந்ததாகக் கூறினர். கொழும்பில் கஸ்பர் தங்கியிருந்தபோது இலங்கையின் கோரிக்கையான இராணுவ உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறினர். ஆனாலும், ஜெயவர்த்தன சலிப்படைந்து காணப்பட்டார். அவர் தொடர்ந்தும் அமெரிக்கா தன்னைக் கைவிட்டு விட்டதாகக் குற்றஞ்சாட்டியபடி இருந்தார்.
  3. இந்தியாவின் நலன்களுக்காக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்கான தீர்வினைத் தேடிய இந்திரா பார்த்தசாரதியின் முயற்சிகளை முறியடிக்க ஜெயவர்த்தன மேற்கொண்டுவந்த செயற்பாடுகள் அமிர்தலிங்கத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் ஒரு மூலைக்குள் முடக்கிவிட்டன. ஐப்பசி மாதத்தில் ஐரோப்பாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமிர்தலிங்கத்தை எதிர்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இந்திய மத்தியஸ்த்தத்தினூடாக இலங்கையரசுடன் பேசுவதற்கு அமிர்தலிங்கம் சம்மதம் தெரிவித்ததற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இலங்கையில் இராணுவ ரீதியில் தலையீடு செய்வதற்கு இந்திராவை வற்புறுத்தவில்லை என்று அமிர்தலிங்கம் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மேலும், ஜெயவர்த்தன தனது இராணுவத்தைப் பலப்படுத்தி இன்னொரு ஜூலைக் கலவரத்தினை கட்டவிழ்த்துவிட சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஐப்பசி 17 ஆம் திகதி தனது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய அமிர்தலிங்கம் தன்னைச் சந்தித்த புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளை இந்திராவுடன் பகிர்ந்துகொண்டார். அதற்குப் பதிலளித்த இந்திரா அமிர்தலிங்கத்தையும் அவருடன் பயணித்த சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன ஆகியோரையும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், வேறு எதனையும் பேச அவர் மறுத்துவிட்டார். ஆனால், தமிழ்த் தலைவர்களைத் தனியாகச் சந்தித்த பார்த்தசாரதி, இந்தியாவின் உண்மையான கவலையினை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அயல்நாடுகளை அச்சுருத்தும் வல்லரசாக தான் கருதப்படுவதை இந்தியா விரும்பவில்லை. தென்னாசியாவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வல்லரசாக பார்க்கப்படுவதையே இந்தியா விரும்புகிறது. ஆகவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் ஒரே கொள்கை சமாதான முயற்சிகளுக்கான நல்லெண்ண உதவிகளை வழங்குவதுதான் என்று விளக்கிய பார்த்தசாரதி, இந்தியாவின் இந்த நல்லெண்ணம் சர்வதேசத்தில் திருப்தியினை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார். "தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதில் ஜெயவர்த்தனவுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளை எவரும் கேள்விகேட்க முடியாது. அதாவது, அவர்கள் எமது பிராந்திய வல்லமையினை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள். எங்களுக்குச் சற்று அவகாசம் தாருங்கள், உங்களுக்கான உரிமைகளை நாம் பெற்றுத் தருவோம்" என்று அவர் கூறினார். ஐப்பசி 17 ஆம் திகதிய கூட்டத்தின்பின்னர் இந்திராவின் கரிசணை மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாகக் குவிந்திருந்தது. முதலாவது, ஒன்றுபட்ட இலங்கையினுள் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது. தொடர்ச்சியான நீண்ட கலந்தாலோசனைகளின் பேறாக இரு விடயங்கள் அவரது கவனத்திற்க் கொண்டுவரப்பட்டன. அரசியலைப்பில் ஆறாவது சட்டத் திருத்தம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மற்றும் பார்த்தசாரதியின் முயற்சிகளை மீள முன்னெடுப்பது ஆகியவையே அவ்விரு விடயங்களும் ஆகும். ஆறாவது திருத்தத்தின் மேல் சத்தியப்பிரமாணம் செய்ய முன்னணியினர் தொடர்ந்தும் மறுத்தே வந்தனர். மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஐப்பசி 20 ஆம் திகதிக்குள் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யாதவிடத்து அவர்கள் தமது பாராளுமன்றப் பதவிகளை இழக்கும் அபாயம் உருவாகியிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது பாராளுமன்ற பதவிகளை இழப்பதென்பது தமிழர்களை இலங்கை அரசிடமிருந்து மேலும் அந்நியப்படுத்திவிடும் நிலையினை உருவாக்கியிருந்தது. ஆகவே இதனைத் தடுக்க பார்த்தசாரதியினூடாக தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்கவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. பார்த்தசாரதி தனது முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு ஜெயார் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கவேண்டிய அவசியமும், அதனூடாக ஜெயாரே பார்த்தசாரதியை பேச்சுக்களுக்கு அழைக்கவைக்கும் சந்தர்ப்பங்களினை ஏற்படுத்தவேண்டிய தேவையும் இருந்தது. இந்திராவின் கரிசணைக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டாவது விடயம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பு. அமிர்தலிங்கமே இந்த சிங்கள ஆக்கிரமிப்புக் குறித்து இந்திராவிடம் முதன்முதலில் அறியத் தந்திருந்தார். இதுகுறித்து பிறிதொரு அத்தியாயத்தில் பார்க்கலாம். எந்த மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை அன்று (1984) இந்தியா எதிர்த்ததோ, அதே மாதுரு ஓயாவில் இலங்கை விசேட படைகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்திய ராணுவம் - 2021 மூன்றாவது, இந்திராவின் வெளியுறவுக் கொள்கையின் பரிமாணங்கள். இந்தியாவுக்கெதிரான சக்திகளை இலங்கையில் அனுமதிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை தமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே அது கருதியது. ஆகவேதான், இந்தியாவுக்கெதிரான நாடுகளிடமிருந்து இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபட முயன்றபோது இந்தியா இதுகுறித்து அதிக அக்கறை காட்டியது. இங்கிலாந்தும் அமெரிக்காவும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க தயங்கியபோதும், அமெரிக்கா இலங்கையைத் தனது செல்வாக்கு வட்டத்தினுள் வைத்திருக்கவே விரும்பியது.
  4. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளை முக்கியமான, தவிர்க்கமுடியாத சக்தியாக ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏதாவதொரு பொதுவான தளம் ஒன்றினைக் கண்டறிவதே தனது தலையாய கடமை என்று பார்த்தசாரதி தீர்மானித்தார். இந்தப் பொதுவான தளத்தினைக் கண்டறியும் தனது முயற்சியில் சில அரசியல்வாதிகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அமைச்சர்கள் தொண்டைமான், லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, லங்கா சமசமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, பேர்னார்ட் சொய்சா, கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியுனுமென் ஆகியோரே அவர்கள். ஜெயவர்த்தனவுடனான மூன்றாவதும் இறுதியுமான சுற்றுப் பேச்சுக்களின்போது மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவது குறித்து மட்டுமே அவர்கள் பேசினார்கள். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களைப் பலப்படுத்துவது குறித்தும் அப்போது ஆராயப்பட்டது. மேலதிகமாக‌ சந்திப்புக்களை நீங்களே ஒழுங்குசெய்யுங்கள் என்று பார்த்தசாரதியிடம் கூறிய ஜெயார், அதற்கான கால எல்லையினையோ அல்லது திகதியினையோ வழங்குவதைச் சாதுரியமாக மறுத்துவிட்டார். தில்லி திரும்பும் வழியில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ராமச்சந்திரைச் சென்று சந்தித்தார் பார்த்தசாரதி. அவ்வேளை பாரத்தசாரதியின் கொழும்பு விஜயம் தொடர்பாக தமிழக சட்டசபையில் மிகவும் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனது சட்டசபைப் பதவியை சில வாரங்களுக்கு முன்னர் இராஜினாமாச் செய்திருந்த தி.மு.க வின் கருநாநிதி, எம்.ஜி.ஆரின் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை முடுக்கிவிட்டிருந்தார். மக்கள் முன் பேசிய கருநாநிதி, ஜெயவர்த்தனவுடன் பேசுவதில் பயனில்லை, வங்கதேசப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு தீர்த்து வைத்ததைப் போன்று இலங்கையிலும் தலையிட்டு தீர்வொன்றினை வழங்குவதன்மூலமே தமிழரைப் பாதுகாக்க முடியும் என்று கூறினார். ஆனால், இப்பிரச்சினையில் இந்திரா காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்து நின்ற எம்.ஜி.ஆர், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமே இப்பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டுக் காவல்த்துறையின் புலநாய்வுப்பிரிவான கியூ பிராஞ்ச் எனப்படும் அமைப்பினை கருநாநிதியின் செயற்பாடுகள் குறித்துக் கண்காணிக்குமாறு பணித்த எம்.ஜி.ஆர், தமிழ் போராளி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் பணித்தார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பொலீஸாரும் செய்துகொடுத்தனர். சிறி சபாரட்ணம் இலங்கையில் தமிழர் மீதான வன்முறைகள் வெடித்துக் கிளம்பியபோது தமிழ் போராளி அமைப்புக்களின் பிரசன்னம் தமிழ்நாட்டில் இருந்தது. நெடுமாறனுக்கும் அவரது கட்சியான காமராஜர் காங்கிரஸுக்கும் புலிகள் நெருக்கமாக இருந்தனர். பிரபாகரன் உட்பட புலிகளின் பெரும்பாலான தலைவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தனர். சென்னையில் அவர்களுக்கென்று முறையான அலுவலகம் கூட அக்காலத்தில் இருக்கவில்லை. டெலோ அமைப்பு தி.மு.க கட்சிக்கு நெருக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் அக்காலத்தில் தங்கியிருந்த டெலோ அமைப்பின் தலைவர் சபாரட்ணம் கருநாநிதியை அடிக்கடி சந்தித்துவந்தார். புளொட் அமைப்பு அ.தி.மு.க அமைச்சரான எஸ் சோமசுந்தரத்தின் ஊடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. சென்னையில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டு அரசின் சலுகைகளை அனுபவித்து வந்ததோடு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக தமிழ்நாட்டில் புளொட் அமைப்பின் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்க நிலங்களும் தமிழ்நாட்டு அரசினால் உமாமகேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இயங்கிவந்த நக்சலைட்டுக்களுடன் , குறிப்பாக கோதண்டராமனின் மக்கள் போர்ப் படையினருடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. அவ்வமைப்பின் தலைவர் பத்நாபா யாழ்ப்பாணத்திலேயே அக்காலத்தில் தங்கியிருந்தார். ஆந்திராவின் நக்சலைட்டுக்கள் ‍- மக்கள் போர்ப்படை பார்த்தசாரதி பின்னர் கருநாநிதியைச் சந்தித்தார். இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கிய பார்த்தசாரதி, இலங்கையின் இனங்களுக்கிடையே சுமூகமான நிலையினைத் தோற்றுவிப்பதென்பது மிகவும் சிக்கலான, உணர்வுரீதியான பிரச்சினை என்று கூறினார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நிதானத்துடனும், மிகுந்த பொறுப்புணர்வுடனும் இவ்விடயம் குறித்து பேசவும் செயற்படவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "இங்கு உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லும் அங்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்" என்றும் அவர் எச்சரித்தார். கொழும்பில் தான் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசிய பார்த்தசாரதி, பிரதமர் இந்திரா காந்தியுடனான பேச்சுக்களுக்காக அவர்களை தில்லி வருமாறு அழைத்தார். இந்தச் சந்திப்பு புரட்டாதி 5 ஆம் திகதி இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டிற்காக கொழும்பு வந்திருந்த அமிர்தலிங்கம் என்னுடன் பேசும்போது, "அது ஒரு சுவாரசியமான, அறிவூட்டும் சந்திப்பாக அமைந்திருந்தது" என்று கூறியிருந்தார். இச்சந்திப்பின்போது இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையினை இந்திரா காந்தி மீளவும் உறுதிப்படுத்தியதாக அமிர் என்னிடம் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்கள் தம்மைத் தாமே ஆள்வதற்கான உரிமையினைத் தான் பெற்றுத்தருவேன் என்று தன்னிடம் உறுதியளித்ததாக அமிர் என்னிடம் கூறினார். "நீங்கள் உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினை முற்றாகவே கைவிட்டு விடுங்கள்" என்று தம்மிடம் இந்திரா உறுதியாக கூறியதாகவும் அமிர் குறிப்பிட்டார். சுமார் இரண்டுமணிநேரமாக த.ஐ.வி மு தலைவர்களுடன் கலந்துரையாடிய இந்திராவும் அவரது ஆலோசகர்களான பார்த்தசாரதியும், அலெக்ஸாண்டரும், உலகில் வேறு பகுதிகளில் நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்டங்கள் பற்றி தமக்கு விளக்கமளித்ததாக அமிர் கூறினார். அந்த நாடுகளில் தீர்வுகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும், அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர். இதன்போது அலெக்ஸாண்டர் இந்திய ஒன்றியப் பிராந்திய அமைப்புக் குறித்துப் பிரஸ்த்தாபித்திருக்கிறார். அதனை உடனடியாக நிராகரித்த இந்திரா, அது முடியாது, வேண்டுமென்றால் இந்தியாவின் மாநிலங்கள் அனுபவிக்கும் அதிகாரங்களை நாம் உதாரணமாகக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். த.ஐ.வி. மு தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இந்திரா, அதற்கு முதல்நாள் கருநாநிதி சென்னையில் ஆற்றிய உரையொன்றினை மேற்கோள் காட்டி, "உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினால் இப்போது நடந்திருக்கும் விபரீதத்தைப் பார்த்தீர்களா? இனி, தி.மு.க வினரும் தனித்திராவிட நாடு கோரிப் போராடப் போகிறார்கள்" என்று கடிந்துகொண்டிருக்கிறார். கருநாநிதி தனது பேச்சில், "தி.மு.க கட்சி தனித் தமிழ்நாட்டிற்கான கோரிக்கையினை 1962 ஆம் ஆண்டு கைவிட்டிருந்தாலும் கூட, தனிநாட்டிற்கான தேவை இன்னமும் அப்படியே இருக்கிறது" என்று பேசியிருந்தார். இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்திரா காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லையென்றும் அவர் விமர்சித்திருந்தார். "தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது இங்கு ஒரு நாய்கூட ஏன் என்று கேட்கவில்லை" என்று கருநாநிதி பேசியிருந்தார். இந்திராவுடனான பேச்சுக்களின் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமிர்தலிங்கம் தனது கட்சி இந்திய மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்தோடு பேசும் என்று கூறினார். "பார்த்தசாரதியின் முயற்சியினால் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வொன்றினைக் காண்பதற்கான சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" என்றும் அமிர் கூறினார். "பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணையாளர் எனும் நிலையிலிருந்து இந்தியா தன்னை செயற்பாடு மிக்க மத்தியஸ்த்தராக உயர்த்திக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் கொழும்பிலோ நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்திய மத்தியஸ்த்தத்தினை எப்படியாவது உதறிவிட ஜெயவர்த்தன உறுதிபூண்டிருந்தார். குறிப்பாக பார்த்தசாரதியின் முயற்சியைத் தடம்புரள வைப்பதே அவரது முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆகவே, வழமைபோல தனது கட்டுப்பாட்டிலிருந்த ஊடகத்துறையினை அவர் இதற்காக முடுக்கிவிட்டார். பார்த்தசாரதி மீது இருவகையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். முதலாவது, அவர் ஒரு தமிழர் ஆதலால் தமிழர்களுக்குச் சார்பாகவே அவர் முன்வைக்கும் தீர்வு இருக்கப்போகிறது என்பதால், நடுநிலையான, ஹிந்திபேசும் வட இந்தியர் ஒருவரை இந்திரா மத்தியஸ்த்தராக நியமிக்கவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்தார். இரண்டாவது, பார்த்தசாரதி முயன்றுவரும் தமிழர்களுக்கான சுயாட்சியுள்ள பிராந்தியசபைகளை சிங்களவர்கள் முற்றாக நிராகரித்துள்ளதனால் அதனைப் பற்றிப் பேச முடியாது என்று அவர் வாதிட்டார். சிங்களவர்கள் வழங்க தயாராக இருப்பது மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டும்தான் என்றும் அவர் ஊடகங்களூடாக சமிக்ஞைகளை வெளியிட்டு வந்தார். இதற்கு மேலதிகமாக, தனது பிரதமரான பிரேமதாசாவை களத்தில் இறக்கிய ஜெயார், "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக ஒன்றையும் கொடுக்கமாட்டோம்" என்கிற தொனியில் கடுமையான பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டார். இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினைத் தடுக்க ஜெயார் மூன்றுவழி தடத்தினைக் கையாண்டார். அவற்றுள் ஒன்றுதான் பார்த்தசாரதி மீதான தாக்குதல்கள். இதுகுறித்து பின்னர்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இந்த அத்தியாயத்தில் இந்திரா காந்தி கைக்கொண்டிருந்த இரட்டை வழிமுறை குறித்துப் பார்க்கலாம். மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்தில் ஆயுதம் தரித்த சிங்களவர்களுடன் குடியேற்றத்திட்டத்தின் பிதாமகன் திம்புலாகல பிக்கு - 1984 அதில் முதலாவது பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள். பார்த்தசாரதி மீதான ஜெயாரின் விஷமத்தனமான தாக்குதல்கள், மட்டக்களப்பு சிறையுடைப்பு, தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்தும் ஜெயாரின் நடவடிக்கைகள், மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் ஆகியவை பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள் குறித்த அரசாங்கத்தின் கவனத்தையும், இந்தியா மற்றும் தமிழ்த் தலைமைகளின் கவனத்தையும் திசை திருப்பி விட்டிருந்தது.பார்த்தசாரதியின் முயற்சிகள் இவற்றினால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. புரட்டாதி , ஐப்பசி ஆகிய மாதங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அமிர்தலிங்கம் உட்பட த.ஐ.வி.மு யினருக்கு ஒரு உண்மையினை உணர்த்தியிருந்தன. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கு படிப்படியாக தேய்ந்துவருவதுடன், போராளிகளுக்கான ஆதரவு தமிழ் மக்களிடையே அதிகரித்து வருகின்றது என்பதுமே அது. ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதில் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கிருக்கும் முக்கியமானதும், தவிர்க்கமுடியாததுமான‌ பாத்திரத்தினை அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார். ஐப்பசி மாதத்தின் இறுதிப்பகுதியில் அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையொன்றில் போராளி அமைப்புக்கள் தொடர்பாக அமிர்தலிங்கம் அதுவரையில் கொண்டிருந்த நிலைப்பாடு மாறத்தொடங்கியிருந்தது தெரிந்தது. இந்திய மத்தியஸ்த்துடன் பேச்சுக்களில் ஈடுபட ஜெயவர்த்தன விரும்பாத பட்சத்தில் தான் போராளிகளுடன் பேச வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "தமிழருக்கான தீர்வு குறித்து ஜெயவர்த்தன த.ஐ.வி. மு யினருடன் பேச விரும்பினால், அவர் முன்வைக்கும் தீர்வு விடுதலைப் புலிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்" என்றும் அவர் கூறினார். இதுவே போராளி அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை முதன்மையான அமைப்பாக அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பமாகும். அக்காலத்தில் புளொட் அமைப்பே போராளி அமைப்புக்களில் அதிகளவு உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுடன் டெலோ அமைப்பு இந்தியாவுக்கு நெருக்கமானதாகவும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் முன்னணி இயங்குசக்தியாக உருவெடுத்தது. இந்தச் சூழ்நிலை உருவாவதற்கு இந்தியாவும் இன்னொரு காரணம். இனிவரும் அத்தியாயத்தில் இந்திரா காந்தி செயற்படுத்தி வந்த இரண்டாவதும், மறைவானதுமான பாதையாகிய தமிழப் போராளி அமைப்புக்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுத உதவிபற்றிப் பேசலாம். தமிழர் மீதான கலவரங்களைத் தொடர்ந்து சில நாட்களில் இலங்கை சென்று திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ இந்திரா காந்தியிடம் இலங்கைச் சூழ்நிலை குறித்து விளக்கியபோதே தமிழ் போராளி அமைப்புக்களுக்கு உதவுவது என்னும் முடிவினை இந்திரா எடுத்திருந்தார். இந்திராவுக்கு ஜெயவர்த்தன அனுப்பிய "காதல்த் தூது" இந்திராவை உடனடியாக இந்த இரண்டாவது பாதையினை எடுக்கத் தூண்டியிருந்தது. "கிழட்டு நரி" என்று இந்திராவினாலும் அவரது ஆலோசகர்களாலும் அழைக்கப்பட்ட ஜெயவர்த்தனவை அடிபணிய வைக்க ஒரேவழி அவரது அரசாங்கத்தை தடம்புரளச் செய்வதுதான் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆகவே, ஜெயார் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பயனபடுத்தலாம் என்கிற முடிவிற்கு அவர்கள் வந்தார்கள். தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு தான் வழங்கும் பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை அமிர்தலிங்கத்திற்கு இந்தியா மறைத்தே வந்திருந்தது. ஆனாலும், போராளிகள் ஆக்ரோஷத்துடன் செயற்பட்டுவருவதையும், ஜெயாரின் அரசாங்கம் தன்னையும் தனது கட்சியையும் பலவீனப்படுத்த பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதையும் அவர் அறிந்துகொண்டார். ஆகவேதான், புரட்டாதி 5 ஆம் திகதி தில்லிச் சந்திப்பிலிருந்து தமிழ்நாடு திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம் போராளி அமைப்புக்கள் தமிழின விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கத் தொடங்கியிருப்பதாகவும், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வீரரான பகத்சிங் இனை ஒத்த பாகத்தினை அவர்கள் வகிப்பதாகவும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஜெயவர்த்தன குறிப்பிடுவதுபோல தமிழ்ப் போராளிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று அவர் கூறினார். தமிழ் மிதவாதத் தலைவர்களை பலவீனப்படுத்தி அவர்களை அடிபணியவைப்பதும், தமிழ்ப் போராளி அமைப்புக்களை சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அவர்களை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்ப‌ட்டுவந்த ஜெயவர்த்தனவுக்கு அமிர்தலிங்கம் கொடுத்த பதிலடியாகவே அவரின் இந்தக் கூற்று அமைந்திருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.