Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19125
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38756
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20018
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/22/23 in all areas

  1. @ஈழப்பிரியன் ஐயா, போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வருகின்றதோ அப்போது பார்க்கலாம். குறைந்தது பத்துபேர் கலந்துகொண்டால்தான் நடத்தமுடியும்
  2. ரஸ்ய கணக்காளர்/வருமான வரி நிபுணர். ரஸ்ய அரசின் நிர்வாகத்திற்குள்ளிருக்கும் நிதி மோசடிகளை வெளிப்படுத்தியதற்காக தண்டனை விதிக்கப்பட்டவராக மேற்கால் கொண்டாடப்படுபவர். ஆனால், ரஸ்யாவோ இவர் மிகப்பெரிய நிதி மோசடியை செய்த கூட்டத்தில் ஒருவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும்போது இறந்ததாக அறிவிக்கப்பட்டவர். மேற்கிற்கு இவர் பெயர் ஒரு துருப்புச் சீட்டு. இவர் பெயரில் ஒரு சட்டத்தை US & UK கொண்டுவந்து தமக்குப் பிடித்தமில்லாத செல்வந்தர்களை குறிவைக்கிறது. ரஸ்யாவுக்கோ இவர் ஒரு மோசடிப் பேர்வழி. அம்புட்டுதே.
  3. நான் இதை பற்றி மேலோட்டமாக தெரிந்து வைத்திருந்தேன்…..யாழில் விளக்கமாக எழுத அந்த அறிவு போதாது. ஆனால் இதை பற்றி வரும் நாட்களில் கொஞ்சம் நோண்டி பார்க்க உள்ளேன். ஜஸ்டின் அண்ணா எழுதினால் நல்லம், இல்லை என்றால் நான் முயல்கிறேன். கேட்டதும் கொடுப்பவரே @Justin அண்ணா, கேள்வியின் நாயகனே….😀. பிகு கனடாவில் தமிழரை குஷிப் படுத்த ஒரு price war இரு பெரிய கட்சிகள் இடையேயும் வருவது மிக நல்ல அறிகுறி. ஆளும் தரப்பில் கரி போல் பழமைவாதிகளில் இன்னொருவர் தேவை. இருக்கிறார்களா?
  4. நல்லதொரு வினா. இலங்கையில் ஓர் தீர்வு வேண்டுமென்றால் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டிய தரப்புக்கள் எவை? அடுத்ததாக, யார் யாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால் தீர்வு கிடைக்காது? முதலில் தமிழ் தரப்புக்களை மட்டுமாவது ஒரு நேர்கோட்டில் இணைக்க முடியுமா? இது சாத்தியமா? இல்லை என்றால் இன்னும் நூறு வருடங்களின் பின்னரும் பிணக்குகள் தொடரும்.
  5. அடுத்த சந்ததியை யாரும் பேய்க்காட்ட முடியாது என்ற நம்பிக்கை வருகிறது. ஏஜென்ட்டுகளுக்கு அத்தனை முயற்சியும் வீண் என்பதால் ஒரு கோவம், பதட்டம் வருவதும் புரிகிறது.
  6. போட்டிகளை இப்போதிருந்தே தயார் படுத்துமாறு திரு @கிருபன் அவர்களை யாழ் போட்டியாளர் சார்பாக வேண்டுகிறேன்.
  7. பணம் பாதாளம் வரை பாயும் என்றால் அதுவும் ஒரு ஆயுதமே. .
  8. இந்தியாவின் மாநிலமாகிறதா வடக்கு கிழக்கு? தாயக ஊடகவியலாளர் இரா.மயூதரன்
  9. பிற்சேர்க்கை: பல்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள் 'தலைவர் மாமாவும் சாள்ஸ் (மாவீரர்) அவர்களும் அமர்ந்திருந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர்'
  10. இதை எப்போதும் செய்யலாம். ஆனால் தீர்வு அப்படி அல்ல. அதை காலம் தாழ்த்தும் ஒவ்வொரு வருடமும் எமக்குத்தான் ஆப்பு அதிகரிக்கிறது. நாம்தாம் புலிகள் என கருதும் வரைதான் இலங்கை இந்த அட்வாண்டேஜ்ஜை எடுக்க முடியும். புலிகள் பயங்கரவாதிகளா? நாம் அதை பற்றி எங்கே கதைத்தோம்? நாம் 2009 இன் பின்னான தமிழர்கள், எமக்கு நீதியான தீர்வை தாருங்கள் என நாம் கேட்டால், இந்த advantage, neutralize பண்ணபட்டு விடும். ஓம். இராதிகா இந்த கட்சியா?
  11. கிருபனைத் தவிர்த்து!😁
  12. இப்பவே 4 பேர் தயார் தானே! ஈழப்பிரியன் அண்ணை சுவியண்ணை கிருபனண்ணை ஏராளன் அப்பிடியே 15-20 பேர் வந்து குதிப்பினம் பாருங்கோ.
  13. நான் எழுதும் போது யாருடன் பேசணும்?? யாருடனும் பேச கூடாது என்றும் எழுதியிருந்தேன். ஆனால் அதை அழித்து இருந்தேன். காரணம் அதை சொல்லும் பலம் தற்போது எம்மிடம் இல்லை. ஒரு காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனே சொன்னது தான் பேயுடனும் பேசுவேன் சேர்வேன்.
  14. 2009 ற்கு பின் தாம் ஆயுதத்தை மெளனித்து விட்டதாக புலிகளே அறிவித்த பின். தலைவரும் குடும்பமும் கூட உயிரோடு இல்லை எனும் போது, புலிகள் என்ற பெயருக்கு நம்பகமான வாரிசுகள் இல்லை என்றாகிவிட்ட பின்பு, புலிகள் மீதான தடையை நாம் ஏன் இத்தனை வருடங்களின் பின்னும் தமிழர் மீதான தடை என கருத வேண்டும்? இது புலிகளின் மெளனிப்பின் பின்னான 15 வருடத்தின் பின் உருவாகியுள்ள புதிய தமிழ் தலைமை - நாம் எமது உரிமைகளை கோருகிறோம் - பழைய சிலுவைகளை நாம் சுமக்கதேவையில்லை என்ற நிலையை நாம் எடுத்தால் - அது வினைதிறனாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
  15. எந்த அடிப்படையில் சுரேன் சுரேந்திரனின் பயணத்தை பிழை என்கிறீர்கள்? இதே வேகத்தில் இலங்கை நிகழ்வுகள் செல்லுமானால் இன்னும் 20 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் எமது நிலையை கொஞ்சமாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? யார் குற்றினாலும் எங்களுக்கு அரிசிதானே தேவை? விடயம் என்னவென்று தெரியுமுன்பே அதனை பிழையென்று எவ்வாறு கூறுவது?
  16. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் கோவிலை இடிக்கலாமோ? மற்றவர்கள் நம்பிக்கையுடன் செய்வதை குழப்பாமலாவது இருப்போமே பிளீஸ்.
  17. கொஞ்ச மாதங்களுக்கு முதல் நான் இருக்கிற றோட்டுக்கு பக்கத்து றோட்டில இரவு ஒருமணி போல ஒரு கசமுசா சம்பவத்தாலை 100 பொலிசுக்கு மேல வந்து அதிரடி நடவடிக்கைகள் நடந்தது. ஆனால் அந்த இடத்து சனங்களுக்கு ஒரு கோதாரியும் தெரியாது. அடுத்த நாள் பேப்பர் பாத்துத்தான் அட பக்கத்து வீட்டிலை ஒரு சம்பவம் நடந்திருக்கு எண்டு அறிஞ்சிருக்குதுகள். நான் என்னமோ பிறந்த மண் குணமோ தெரியேல்லை. சுடச்சுட அந்த இடத்திலை நிண்டு கண்கொள்ளா காட்சிகளை கண்டு ரசிச்சன். 😎
  18. ஆமாம் ஒத்துக் கொண்டமைக்கு நன்றி நான் வயோதிபர் ஆறுதல் தான் அது இயற்கையானது 🙏
  19. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 12/07/1990 பக்கம்: 1 கல்முனையில்‌ இராணுவம்‌ - ஜிகாத்‌ காட்டுத் தர்பார்‌; 31 தமிழர் படுகொலை (கல்முனை) கல்முனையில்‌ நேற்று முன்‌னம்‌ மாலை முப்பத்தியாரு தமிழர்களைச்‌ சிறிலங்கா இராணுவத்தினரும்‌ ஜிகாத்‌ இயக்கத்‌தினரும்‌ சேர்ந்து வெட்டிக்‌ கொலை செய்துள்ளனர்‌. பின்னர்‌ கொலை செய்யப்பட்டவர்கள்‌ தீ வைத்துக்‌ கொழுத்தப்பட்‌டுள்ளனர்‌. இவ்வாறு கொலை செய்‌யப்பட்டவர்‌களில்‌ ஒரு பெண்‌ மானபங்கப்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்‌பட்டுள்ளார்‌. இக்‌கொலைகளில்‌ கறுப்புச்‌ சட்டைகளுடன் இருந்த சிறிலங்கா அரசின்‌ மறைமுக கொலைகாரப்‌ படையினர்‌ ஈடுபட்டதாகத்‌ தெரிகிறது. டாக்டர்‌ சண்முகநாதனும்‌, அவரது மனைவியும்‌ இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில்‌ அடங்குகின்றார்கள்‌. அதேவேளை கல்‌முனை வாடிவீட்டிற்கு அருகிலிருந்த வீடுகளுக்குச்‌ சொந்தமான தமிழர்கள்‌ கொலை செய்யப்‌பட்டு வீடுகள்‌ யாவும்‌ தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்‌தோடு சிறிலங்கா இராணுவத்தினர்‌ அங்கு முகாம்‌ அமைத்துள்ளதாகவும்‌ செய்‌திகள்‌ தெரிவிக்கின்றன. கல்முனைக்கும்‌ நிலாவரைக்‌கும்‌ இடையில்‌ தமிழர்‌ எவரும்‌ இல்லை என்றும்‌, அவர்‌கள்‌ ஜிகாத்தால்‌ துரத்தப்பட்‌டுள்ளனர்‌ எனவும்‌ செய்திகள்‌ தெரிவிக்கின்றன. *****
  20. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 28/06/1990 பக்கம்: 1 கல்முனையில்‌ தமிழர்‌ படுகொலை 75ஆக உயர்வு (கல்முனை) கல்முனையில்‌ ஜிகாத்‌ இயக்‌கத்தினரும்‌ சிறிலங்கா இராணுவத்தினரும்‌ சேர்ந்து படுகொலை செய்த தமிழரின்‌ எண்ணிக்கை எழுபத்‌தைந்தாக உயர்ந்துள்ளது. இவர்கள்‌ நடுவீதியில்‌ நிறுத்திவைத்து சுட்டுக்‌ கொன்றுள்ளனர்‌. இச்சம்பவம்‌ கடந்த இருபத்‌திதான்காம்‌ திகதி நடைபெற்‌றதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள்‌ தெரிவிக்‌கின்றன. (லோ) *****
  21. நன்றக அறிந்தபின்பே அறிக்கை விட்டிருப்பார்கள்...இவர்களின் தேடல் அளப்பரியது...அர்ப்பணிப்பும் அள விடமுடியாது....அறிவால் புலம்பெயர் தேசத்தில் சாதிப்பார்கள்... அதுக்காக ஆயுதம்தூக்கப் ப்போகினம் என்று நக்கல் அடிப்பது உங்கள் எஜமான் விசுவாசம்...இதை அவர்களிடம் காட்டாதீர்கள்.... அவர்கள் உங்களைப்போலன்றி ..யாருடைய தூண்டுதலுமன்றி .. சுய அறிவிலேயே செயற்படுகின்றனர்...இது என்னுடைய குடும்ப அனுபவம் ...நீங்கள் முந்திரிக்கொட்டை மாதிரி..சுகுனப் பிழையாக கருத்து எழுதாமல் இருப்பதே ..எமது இனத்துக்குச் செய்யும் பேருதவி....ஏனெனில் எந்த நல்ல விடயத்துக்கும் ..உங்கள் கருத்து தடவிக் குத்துவதுபோல் தான் இருக்கிறது..அதாவது அறிவாளி போல்காட்டி அடக்கி ஒடுக்க நினைப்பது🙃 சுப்பர்...இந்த நாளுக்காகத்தான் சிங்களவன் காத்திருந்தான்...சுரேன் என்ற கோடரிக்காம்பு உதவ வெளிக்கிட்டிருக்கு...இன்னும் ஆர்ரார் கொலிடேக்கு போகினமோ தெரியாது..
  22. இதே கேள்வியை 1983 கலவரத்தின் பின்னர், குமுதம் அரசுவுடன் கேட்க, இன்று இரவு 250 மில்லி அடித்தால், நடக்கும் என்று பதில் சொன்னார் என்று வீரகேசரியில் வாசித்திருக்கிறேன். நல்ல கலந்துரையாடல். இந்தியாவின் மெத்தனமான அணுகுமுறையே சிங்களத்தின் சீன நட்புக்கு காரணம் என்கிறார். சீனாவுடன் நல்ல தொடர்புகளை பேணவேண்டும். தமிழர்கள் போடு தடி என்று நினைக்க இடம் கொடுக்கக்கூடாது என்பதாக சொல்கிறார்.
  23. ஊரிலே யாரும் இறந்தால் கொஞ்ச நேரத்தில் ஊருக்கே தெரியும். வெளிநாடுகளில் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறதென்பதையே அறிய முடியாது. நல்ல கதை சுமே.
  24. புகையிரத திணைக்களத்திடம் நிதி இல்லாததால்… உதிரிப்பாகங்கள் இல்லாமல் இருக்கின்றதை வைத்து சமாளிப்பதாக எங்கோ வாசித்தேன்.
  25. சில விடயங்களை நிக்சன் மிகவும் எளிமைப்படுத்துகிறார். தமது இந்தோபசிபிக் பிராந்திய நலனே மேற்கு நாடுகளுக்கு முக்கியம் என நிக்சன் சொல்வது சரியே. ஆனால் நிக்சன் சொல்வது போல் மேற்குக்கு இலங்கை மேல் ஒரு பாசமும் இல்லை. இலங்கயில் ஒரு சுயநிர்ணய தமிழ் மாநிலம் அமையகூடாது (தமது நலனுக்கு தீங்கு ஏற்படாவண்ணம்) என்பதிலும் அவர்கள் உறுதியாக இல்லை. ஒஸ்லோ பிரகடனம் மேற்கு அனுசரணையில் வந்ததுதான். இந்தியாவோ, சீனாவோ, ரஸ்யாவோ அப்படி ஒரு தீர்வை இலங்கையில் கனவிலும் நினைக்காது. ஆனால் அது நாம் வலிமையாக இருந்த போது இலங்கையும், மேற்கும், வேறு வழி இன்றி இந்தியாவும் இறங்கி வந்த நிலை. அதன் பின் இலங்கை+இந்தியா தந்திரமாக செயல்பட்டு, மேற்கின் நலனுக்கு புலிகள் அழிப்பு இன்றி அமையாதது என்ற முடிவுக்கு மேற்கை வரப்பண்ணினார்கள். புலிகளின் அனுகுமுறையும் இந்த முடிவுக்கு வருவதை இலகுவாக்கியது. காஸா வில், தமது நலனுக்கு ஹமாஸ் அழியவேண்டும், அதற்காக மக்கள் அழிவதும் ஏற்புடையதே என்ற மேற்கின் அணுகுமுறையை காணும் நமக்கு, 2009 இல் அவர்கள் எடுத்ததும் இதுவே என்பதை புரியமுடியும். புலிகளின் அழிவுக்கு பின், நாம் பலமற்று போன நிலையில் - அவர்களுக்கு எம்மை நோக்கி வர எந்த தேவையும் இல்லை. ஆனால் இலங்கை கிட்டத்தட்ட சகல துருப்பு சீட்டையும் தன்னகத்தே வைத்திருந்தது. தொடர்ந்தும் சீன பூச்சாண்டி காட்டுகிறது. இந்த நிலையில்தான் கொவிட், ஏனைய காரணிகள் + கொவிட்டால் நெருக்கடி அதன் வழியே அறகளை என மேற்கு இலங்கையில் இறங்கி ஆடுகிறது. ஒன்றுபட்ட இலங்கை என்பது எப்போதும் மேற்கு வலியுறுத்தியதே. பாலா அண்ணைக்கு கூட இது விளங்கியது. எமது விடயத்தில் மேற்கு ஒருபோதும் ஒரு பிரிந்துபோகும் வாக்கெடுப்பை முன் மொழியவோ, ஆதரரிக்கவோ இல்லை. ஆனால் உள்ளக சுயநிர்ணயத்தை ஏற்க மேற்கு தயாராக இருந்தது. இப்போ எம்மை மேற்கு அதை கூட கைவிட நிர்பந்திக்கிறது என்றால் - அதற்கு எமது 2009 பின்னான பலமில்லா நிலையே காரணம். 2009 ற்கு பின் நாம் ஆயுதம் இல்லா வழிகளில் எமது கூட்டு பேரம் பேசும் வலுவை அதிகரிக்க என்ன செய்தோம்? எதுவுமில்லை. என்ன செய்யலாம்? 1. எம்மில் எம்பிகள் உள்ள ஒரு கட்சியாவது சீனாவை அணுகியே ஆக வேண்டும். இது இலங்கைக்கு தேள் கொட்டிய நிலையை கொடுக்கும். மேற்குக்கும், இந்தியாவுக்கும் இலங்கையை வழிக்கு கொண்டு வந்து எமக்கு ஒரு நியாமான தீர்வை தர வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்கும். 2. புலம்பெயர் நாட்டில் ஏனை நாட்டு உளவு அமைபுகளுக்கு விலை போகாத தலைமைகளை, அடி மட்டத்தில் இருந்து உருவாக்கி (இப்போ உள்ளோர் அனைவரையும் தூக்கி அடித்து விட்டு) அடிப்படைகளை விட்டு கொடாமல் பேரம் பேசலாம். லாபி பண்ணலாம். 3. மேற்கின் பாராளுமன்ற, நிர்வாக, அரச, இராஜதந்திர, பொருளாதார கட்டமைப்பில் தனி நபர்களாக உள்ளிட்டு மேலே வந்து அழுத்தம் கொடுக்கலாம். இவற்றை செய்ய புலத்திலும், மேற்கிலும் நமது தலைவர்கள், பிரமுகர்களாக கொள்கை பிடிப்புள்ள, விலை போகாதோர் தேவை. அதை நாம் செய்யும் வரை நாம் எல்லோருக்கும் கிள்ளுகீரைகள்தான். எமக்கான நியாயமான தீர்வு ஒரு கட்டிடம் என்றால் - அதன் அத்திவாரமாக அமையப்போவது எமது புலம், புலம்பெயர் அரசியலை இனத்துக்கு நேர்மையான மனிதர்கள், வெளிப்படைத்தன்மையுடன் முன்நகர்துவது. அத்திவாரத்தையே நாம் போடாமல், மேற்கு யன்னலை தர மறுக்கிறது, சீனா கூரையை தரவில்லை, இந்தியா சுவரை இடிக்கிறது என்பதில் ஒரு பயனும் இல்லை. மேற்கிற்கு வேண்டப்பட்டவர்களாவதும், ஆகாமல் விடுவதும் எமது கையில்தான் இருக்கிறது. இந்த அத்திவாரத்தை நாம் சரியாக போட்டால், மேற்கே வீட்டை கட்டித்தரும் நிலையை காலம் உருவாக்கும்.
  26. பலஸ்தீனாவில் மேற்குலக செய்தி ஊடகங்கள் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு பல கொடூரங்கள் நடந்தேறுகின்றன. உண்மைகளை சொல்லும் ஊடங்களை தடை செய்து விட்டு பொதுமக்கள் மீதான அழிவுகளை செய்கின்றார்கள்.ஒரு இனத்தையே அழித்து முடிப்பார்கள் என பேசிக்கொள்கின்றார்கள். கவிதை பல கதைகளை சொல்லுகின்றது நொச்சி......🙏🏼 We wish you a Merry Christmas and a Happy New Year.
  27. யாரோ நம் சீடப்பிள்ளைகள், டிஜே நைற்றில் பலூன் கட்டி அழகுபடுத்த என எடுத்து போயுள்ளார்களோ தெரியவில்லை🤣. 🪩🕺💃🎈🎈🎈
  28. இளைப்பாறிய ஆசிரியரான அமரர் மனோன்மணி அவர்களுடன் தலைவர் மாமாவின் குடும்பத்தினர் காலம் : இரண்டாம் ஈழப்போர்
  29. உங்களிடமே விடையுள்ளது...பழி பாபத்தை நான் சுமக்க வ்ரும்பவில்லை...நன்றி... உலக தமிழர் பேரவை தகவல் இந்நிலையில், ''கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டங்களில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, எதிர்மறையான விளம்பரங்கள், கருத்துக்களை வெளியிட்டதால் குறித்த நபரை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பு இடைநிறுத்த முடிவு செய்துள்ளது.'' என அந்த அமைப்பு கூறியுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.