Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்18Points2958Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்9Points20019Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்4Points46793Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்3Points87990Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/04/24 in Posts
-
ஊருலா
7 pointsசமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன் ஒரு சட்டத்தரணி. இப்பொழுது என்னைப் போலவே அவனும் ஓய்வில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் வெளிநாடு அனுப்பி விட்டு குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். முற்றம் கூட்டவும் எடுபிடி வேலைகளுக்கும், சமையல், துவையல் போன்ற வேலைகளுக்கும் என இரண்டு வேலையாட்களை வைத்திருக்கிறான். ஏகப்பட்ட தமிழ் தொலைக்காட்சிகள் இருப்பதால் பழைய பாடல்கள் திரைப்படங்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனிடம் நான் சிக்கிக் கொண்டேன். நண்பனுக்கு இங்கே நான் வைத்திருக்கும் பெயர் மணியன். இலங்கையில் சுற்றுலாவுக்குத்தான் இம்முறை போயிருந்தேன். பொது வேலைகள் என்று பரந்த நோக்கம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மணியனுக்கு நான் எனது வரவைப் பற்றி அறிவித்திருந்தேன். “நீ சிறிலங்காவில், எங்கே வேணுமெண்டாலும் போ. ஆனால் உன்ரை முக்கிய இருப்பிடம் எனது வீடுதான். என்னுடனேயே தங்குகிறாய்” என்று மணியன் சொல்லி விட்டான். புதுக் கட்டிடங்கள் உயர்ந்திருந்தாலும், தமிழ் பெயர்களுடன் கடைகள் பல இருந்தாலும், பாசி பிடித்து கறுப்பாக இருக்கும் மதில்கள், வீட்டுச் சுவர்கள், பள்ளம் விழுந்த வீதிகள்... என வெள்ளவத்தை முன்னர் போலவே, மாறாமல் அப்படியே இருந்தது. வெள்ளவத்தையில் கடற்கரை ஓரமாக ஆறாவது மாடியில் உள்ள மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டுக்கு மாத வாடகையாக இரண்டு இலட்சங்கள் ரூபா கேட்டார்கள். அப்படி ஒரு வீட்டில் தங்கிக் கொண்டு பல இடங்களைச் சுற்றி வரத்தான் முதலில் தீர்மானித்திருந்தேன். ஆனால் மணியன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவனது விருப்பத்துக்கு ஏற்ப அவனது வீட்டில் தங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மணியன் வீட்டின் மாடியில் ஒரு அறை எனது இருப்பிடமாகிப் போனது. முதல் நாளே இரவு படுக்கப் போகும் போது மணியன் என்னிடம் சொன்னான், “காலையில் ஏழு மணிக்கு கீழே வந்து விடு” என்று. ஏழு மணிக்கு 'சூடாக தேநீர் கிடைக்கும்' என்று மாடியை விட்டு கீழே வந்தால், “வா…வா கடைக்குப் போவம்” என்று மணியன் அவசரம் காட்டினான். பருத்தித்துறை,கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த தாமோதரத்தார், நாகேந்திரத்தின் தேநீர் கடைகள் இரண்டும் நினைவுக்கு வந்தன. இளைஞர்களாக இருந்த போது நானும் மணியனும், பொன்னையா அண்ணனின் உளுந்து வடையை பேப்பரில் வைத்து அழுத்தி எண்ணை நீக்கி, நன்னாரி சேர்ந்த ‘பிளேன் ரீ’யை பல மாலை வேளைகளில் சுவைத்து மகிழ்ந்திருந்திருக்கிறோம். ஆக மணியனும் நானும் இப்பொழுது ஏதோ ஒரு தேநீர் கடைக்குப் போகப் போகிறோம் எனக் கணித்துக் கொண்டேன். மணியனின் காரில் ஏறிக் கொண்டேன். கார் புறப்படும் போது ‘சீற் பெல்டை’ போட முயன்ற போது, “இதெல்லாம் இங்கே அவசியம் இல்லை” என்று மணியன் சொன்னான். காலை நேரம். காலி வீதியில் வாகனங்களின் சத்தம் அதிகமாக இருந்தது. ‘கோன்’ அடிக்காமல் எந்த வாகனங்களும் நகர்ந்ததாகத் தெரியவில்லை. மணியனின் கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பல வாகனங்கள் எங்களைத் தாண்டிச் செல்லும் போது அதில் இருந்தவர்கள் எங்களை முறைத்துப் பார்த்தார்கள். அல்லது எரிச்சலுடன் பார்த்தார்கள். நான் மணியனைப் பார்த்த போது, மணியன் புன்முறுவலுடன் சொன்னான், “கண்டு கொள்ளாதை. எனக்கு என்ரை கார் முக்கியம். அவையளுக்கு அவசரம் எண்டால், என்னை முந்திக் கொண்டு போகட்டும்”. ஊர்ந்து ஊர்ந்து சென்று ஒருவாறு தனது காரை ஒரு தரிப்பிடத்தில் நிறுத்தினான். ஒரு பேக்கரிக்குள் நுளைந்தான். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். பாண் வாங்கும் எல்லோர் கைகளிலும் பிளாஸ்ரிக் பைகள் இருந்தன. ‘Slice Bread என்று கேட்டு அவனும் பிளாஸ்ரிக் பையில் பாண் வாங்கிக் கொண்டான். “மச்சான் சம்பலோடை பாண் சாப்பிட நல்லா இருக்கும்” என்றான். “காலமைக்கு பாண்தான் சாப்பாடோ?” “ஏன்டா, பாண் விருப்பமில்லையே? நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு சரஸ்வதி விலாஸிலே வேண்டின இடியப்பம், வெந்தயக் குழம்பு, சொதி எல்லாம் மிஞ்சிப் போச்சுடா. சூடாக்கித் தாரன். வேணுமெண்டால், நீ அதைச் சாப்பிடு. நான் பாண் சாப்பிடுறன்” சொல்லிவிட்டு என்னைப் பார்த்தவனுக்கு, இதமான காலை வெய்யிலிலும் என் முகம் வாடி இருந்தது புரிந்திருக்கும். “நீ காலமை ரீயும் குடிக்கேல்லை என்ன? வா, பால் வாங்கிக் கொண்டு போவம்” என்றவன், ஒரு பெட்டிக் கடையில் இரண்டு பால் பக்கெற்றுகளும் வீரகேசரி பேப்பரும் வாங்கினான். “வீரகேசரி வாங்கினால் தினத்தந்தி இலவசமடா” என்று சொன்னவன் அடுத்து ஒரு பழக்கடைக்கு முன்னால் நின்று கப்பல் வாழைப்பழத்துக்கு விலை கேட்டான். “ஐயா, இந்தப் பழம் இப்ப உடனை சாப்பிடலாம். இந்தச் சீப்பை வெட்டட்டே?” என்ற கடைக்காரரிடம் “ஆறு பழம் போதும்” என்று சொல்லி வாங்கிக் கொண்டான். “நல்ல பழம்தானேடா. ஒரு சீப்பாவே வேண்டி இருக்கலாம்” என்று கேட்ட என்னை மணியன் உடனே இடை மறித்தான். “நல்ல பழம்தான். நான் ஒரு பழம்தான் சாப்பிடுவன். சீப்பா வேண்டிக் கொண்டே வைச்சால் எல்லாத்தையும் ஒரேநாளிலே சாப்பிட்டு முடிச்சிடுவாங்கள்” மணியன் தன் வேலையாட்களை குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது. அவனுக்கு ஒரு பழம்.அவன் மனைவிக்கு ஒன்று. ஒன்றுதான் எனக்கும் வருமா? இல்லை இரண்டு தருவானா? யேர்மனியில் கிடைக்கும் பெரிய வாழைப்பழத்துக்கு இந்தச் சின்ன கப்பல் பழம் ஈடு கொடுக்குமா? கார் தரிப்பிடத்தில் ஒருவன் பச்சை உடுப்போடு காத்திருந்தான். மணியன் அவனுக்கு ஐம்பது ரூபாத் தாளை எடுத்துக் கொடுத்தான். “எதுக்கு அவனுக்கு ஐம்பது ரூபா ?” “பார்க்கிங் சார்ஜ். காரை ஒருக்கால் நிப்பாட்டி எடுத்தாலே எழுபது ரூபா. ரிசீற்றை வேண்டாமல் விட்டால் ஐம்பது” “அப்போ இந்தக் காசு அரசாங்கத்துக்குப் போகாது” “போகாது” காருக்கு வெளியே பார்த்தேன். அழுக்கான நடைபாதையில் கைகளை நீட்டிக் கொண்டு ஏதாவது கிடைக்குமா என்று பலர் இருந்தார்கள். பச்சை உடையுடன் ஒருவன் ஓடியோடி கௌரவமாக ஐம்பது ரூபாப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். “சமையலுக்குத்தானே வீட்டிலை ஆள் வைச்சிருக்கிறாய்? பிறகேன் கடையிலை வாங்கிச் சாப்பிடுகிறாய்?” என்று மணியனைக் கேட்டேன். “வேலைக்காரரை நாலு மணிக்கு அனுப்பிப் போடுவன். இரவுச் சாப்பாடு எனக்கும் மனுசிக்கும்தானே. ஒருநாள் இடியப்பம், அடுத்தநாள் புட்டு, பிறகு அப்பம், மசாலா தோசை, பொங்கல், கொத்து எண்டு விரும்பினதை வாங்கிச் சாப்பிடுவம். மிஞ்சுறதை அடுத்தநாள் காலமை சூடாக்கி சாப்பிடுவம். அது சுகமான வேலை” “மத்தியானத்தை எதுக்கு விட்டாய். அதுக்கும் கடையிலை வாங்கலாம்தானே?" “வாங்கலாம். எங்களுக்குத் தேவையான மரக்கறிகள் அதுவும் எங்கடை பாணிச் சமையல், மீன்,இறைச்சி எண்டு வேணும்தானே” காலை எழுந்தவுடன் பால்,பாண்,பழங்கள் வாங்குவது. பத்து மணியளவில் மரக்கறிகள், மீன் வாங்குவது, மாலையில் ஏதாவது ஒரு உணவு விடுதியில் இரவுச் சாப்பாடு வாங்குவது என்று ஓரிரு நாட்களிலேயை வெள்ளவத்தை எனக்கு பழகிப் போனது. கூடுதலான வரையில் மணியன் தனது பேர்ஸைத் திறக்காமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.7 points
-
ஊருலா
7 pointsசில காலமாக எனது வலது கை மணிக்கட்டில் ஒரு நோ இருக்கிறது. முதுமை ஒரு காரணமா? அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாமா? என்று எனது குடும்ப வைத்தியரை அணுகிய போது, என்னிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “இளமை விடை பெறும் போது உடலில் அங்கங்கே ஏதாவது பிரச்சனைகள் வருவது இயற்கை. நீங்கள் இரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் வில்லையின் எதிர்தாக்குதலாகவும் இருக்கலாம். கணினியைப் பாவிக்கும் போது நீங்கள் உங்கள் கையை வைத்திருக்கும் நிலையால் கூட மணிக்கட்டுப் பிரச்சனை வரலாம். கணினியில் படம் வரைவதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அதிகளவு பாரமான வேலைகளையும் தவிருங்கள்” என பல ஆலோசனைகளைத் தந்திருந்தார். இப்பொழுது சிறீலங்காப் பயணத்தின் போது 23 கிலோ சூட்கேசை ஏற்றி இறக்கியதில் மணிக்கட்டில் மறைந்திருந்த நோ மீண்டும் எட்டிப் பார்த்தது கூடவே சிறு வீக்கமும் வந்து விட்டது. அங்கே இருக்கும் போது கூடுதலான வரையில் வலது கையைப் பாவிப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். இதை அவதானித்த மணியன், “உன் வலது கைக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான். விடயத்தைச் சொன்னேன். “காரில் ஏறு” என்றான். ஏறிக் கொண்டேன். எங்கே போகிறோம் என்று மணியன் சொல்லவில்லை. இரவு நேரம். மழை பெய்து கொண்டிருந்தது. “ முந்தி இப்பிடி இல்லை. இப்பத்தான். இந்த நேரத்திலை வழக்கமா வடக்கு கிழக்கிலைதான் மழை இருக்கும். எல்லாம் இப்ப இஞ்சை மாறிப் போச்சு” என்று மணியன் சலித்துக் கொண்டான். “இங்கை மட்டுமில்லை. உலகம் முழுக்க இப்படித்தான் நிலமை” என்று அவனுக்குப் பதில் தந்தேன். கார், காலி வீதியில் ஒரு சிறிய தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் நின்றது. வைத்தியசாலையில் கார் நிறுத்த கட்டணம் வாங்கிக் கொண்டார்கள். “மச்சான். நல்ல ஒத்தப்பேடி. களுபோவில ஹொஸ்பிற்றலிலை வேலை செய்கிறார். அங்கை வேலை முடிஞ்சு இரவு எட்டு எட்டரைக்குத்தான் இஞ்சை வருவார். உன்ரை கையை ஒருக்கால் அவருக்கு காட்டு” மணியனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவன் பின்னால் போனேன். நம்பர் எடுத்துக் கொண்டு வந்து கையில் தந்தான். “காசு குடுக்க வேணுமெல்லோ?” என்று மணியனைக் கேட்டதற்கு, “அதை நான் கட்டிட்டேன்” என்றான். நேரம் போய்க் கொண்டிருந்தது. டொக்டர் வரவேயில்லை. நான் சலிப்படைவது மணியனுக்குப் புரிந்து விட்டது. “இன்னும் ஒரு பிரைவேட் ஹொஸ்பிற்றல் அதுவும் வெள்ளவத்தையிலை பக்கத்திலைதான் இருக்கு, டொக்டர் அங்கையும் ஆக்களைப் பாக்கிறவர். வருவார். பொறுமையாக இரு” என்று சொன்னான். பத்து மணியளவில் டொக்டர் வந்தார். கடைசி ஆளாக அவர் அறைக்கு நான் போனேன். மணியனும் கூட வந்தான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ப்ளட் ரெஸ்ற் செய்யோணும். பெயின் கில்லரும் கிறீமும் எழுதித் தாறன். மாறாட்டில் வாங்கோ” டொக்டரின் அறிவுரையை வேதவாக்கா மணியன் எடுத்துக் கொண்டு இரத்த பரிசோதனைக்கு என்னை அழைத்துச் சென்றான். அங்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அதையும் மணியனே கட்டினான். வீட்டுக்குத் திரும்பும் போது மணியனைக் கேட்டேன், “நான்தானே கடைசி ஆள் எதுக்குடா நம்பர் எடுத்தாய்?” என்று. “பழக்கதோசம் “ என்று பதில் வந்தது. அடுத்தநாள் முதல் வேலையாக வைத்தியசாலைக்குப் போய் எனது இரத்தப் பரிசோதனை முடிவையும் பார்மஸியில் டொக்டர் எழுதிய மருந்தையும் மணியன் எடுத்து வந்தான். “இரத்தத்தில் பிரச்சினை இல்லை” என்று சொன்னான். அன்று மாலை அவனது நண்பர் ஒருவர் மணியனைக் காண வந்தார். வந்தவரது இடது கையில் கட்டுப்போட்டிருந்தது. வெள்ளைக் கொடியை கையில் ஏந்திக் காட்டுவது போல கையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். “கையிலை என்ன பிரச்சனை?" என்று அவரை மணியன் கேட்க, “கன காலமா ஊருக்குப் போகேல்லை. புத்தூரிலை இருந்த காணியை கொஞ்சம் துப்பரவாக்கி நல்ல விலைக்குக் குடுக்கலாம் எண்டு போனால், காணிக்குள்ளை இருந்த பள்ளத்திலை விழுந்து கையிலை எலும்பு முறிஞ்சு போச்சு. அப்பிடியே எல்லாத்தையும் போட்டிட்டு வந்திட்டன்” என்று அவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் தன் கதையை விரிவாக்கு முன்னரே மணியன் என் கையின் கதையைச் சொல்லிவிட்டான். “நான் ஒத்தப்பேடியிட்டை எல்லாம் போகேல்லை. இஞ்சை வெள்ளவத்தை மாக்கெற்றுக்குப் பக்கத்திலே (Manning place) மனிங் பிளேஸிலே ஒரு ஆயுர்வேத கவர்ன்மென்ற் ஹொஸ்பிற்றல் இருக்கு. ஒண்டவிட்ட ஒருநாள் போகோணும். எண்ணை பூசி மசாஜ் செய்து பத்தும் போட்டு விடுவினம். இப்ப கையிலை நல்ல முன்னேற்றம்” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணியன் என்னைப் பார்த்தான். நாளை நான் ஆயுர்வேத ஹொஸ்பிற்றலுக்குப் போக வேண்டிய வேலை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். “காலமை ஏழு மணிக்குப் போய் நம்பர் எடுத்திட்டால் வெள்ளெணவா வேலை முடிஞ்சிடும். எட்டரைக்கு டொக்டேர்ஸ் வந்திடுவினம். இரண்டு பேர்தான் டொக்டேர்ஸ். அதிலை லேடி டொக்டர் தமிழ். நானும் நாளைக்குப் பத்துப் போடணும். நீங்கள் நாளைக்கு ஏழு மணிக்கு வாங்கோ. நான் அங்கை நிப்பன். உங்களுக்கு எண்ணைதான் தருவினம் எண்டு நினைக்கிறன். எதுக்கும் வரக்கை ஒரு போத்தலையும் கொண்டு வாங்கோ. பத்துப் போடுறதெண்டால் பஞ்சும், பன்டேஜ்ஜும் பார்மஸியிலை வேண்டிக் குடுக்க வேணும். ஏழு மணிக்கு பார்மஸி திறக்க மாட்டாங்கள். எதுக்கும் நீங்கள் வாங்கோவன்” என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். காலை 6:45க்கே ஆயுர்வேத வைத்தியசாலைக்குப் போய் விட்டேன். அங்கே இருந்த கதிரைகளில் எல்லாம் தமிழ், சிங்களம் கலந்த (என்னைப் போன்ற) முதியவர்கள் இருந்தார்கள். இருப்பதற்கு இடம் இல்லாததால் மணியனின் நண்பனுக்காக காத்திருந்தேன். 7:30க்கு வந்து சேர்ந்தார். “வெள்ளனவே வந்திட்டீங்கள் போல. ஏன், இருக்கிறதுக்கு இடம் கிடைக்கேல்லையே? கடைசி ஆள் இருக்கிற கதிரைக்குப் பக்கத்திலை நிண்டிருக்கலாமே?” என்று தன் ஆதங்கத்தைச் சொன்னார். 7:45க்கு ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். கதவுகளைத் திறந்த பின்னர் இருக்கை இல்லாமல் இருந்தவர்களுக்கு, உள்ளே இருந்து கதிரைகளை எடுத்து வந்து போட்டு அமரச் சொன்னார்கள். கூட்டிப் பெருக்கி, புத்தரை வணங்கிய பின்னர் இலக்கங்களைத் தந்தார்கள். வரிசையில் நின்று அங்கிருந்த யன்னலூடாக இலக்கத்தைக் கொடுத்து மற்றவர்கள் போல் நானும் பதிவு செய்து கொண்டேன். தமிழ் ‘லேடி டொக்டர்’ முகக் கவசம் போட்டிருந்ததார். “உங்களுக்குப் பத்து போட்டால் நல்லது. அது நீங்கள் இங்கே இருக்கிறவரைதான் சாத்தியம். எண்ணை தரலாம். இலவசம் என்றபடியால் ஒரு அவுன்ஸுக்கு மேலே ஹொஸ்பிற்றலிலை தரமாட்டினம். வெள்ளவத்தை மாக்கெற்றில் இருந்து தெஹிவலப் பக்கமாகப் போறவழியிலே பஸ்ஸல் லேனுக்கு முன்னுக்கு உள்ள பில்டிங்கிலே முதலாவது மாடியிலே ஒரு ஆயுர்வேதக் கடை இருக்கு. யேர்மனிக்கு நீங்கள் எண்ணை கொண்டு போறதெண்டால் தேவையானதை அங்கை வாங்கலாம். இரண்டு வகையான எண்ணை எழுதித்தாறன். ஒண்டு வீக்கத்துக்கும் குணமாகிறதுக்கும். மற்றது நோ இருந்தால் பூசுறதுக்கு. நீங்கள் இரண்டையும் சேர்த்தும் பாவிக்கலாம்” என்று அன்போடு சொன்னார். வைத்தியாசாலையில் தந்த ஒரு அவுன்ஸ் எண்ணையுடன் வைத்தியர் சொன்ன ஆயுர்வேத மருந்துக்கடையிலும் இருக்கட்டுமே என்று சில அவுன்ஸ் எண்ணெய் வாங்கிக் கொண்டேன். விலை மலிவாக இருந்தது. ஒரு அவுன்ஸ் எண்ணெய்க்கு ரூபா 200/- தான் கொடுக்க வேண்டி இருந்தது. “இப்பிடி ஒரு கடை இருக்குது, எண்ணை வாங்கலாம் எண்டது எனக்குத் தெரியாமல் போட்டுது” என்று மணியனின் நண்பர் சொன்னார். அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது. அந்த ஆயுர்வேத மருந்துக் கடை ஒரு பழைய கட்டிடத்தின் மேல்மாடியில் மறைவாக இருந்தது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கட்டிடத்தின் வெளிப் பக்கத்தில் இல்லாததும், கடை இருப்பதற்கான அறிவிப்புப் பலகை வெளியில் தெரியாமல் இருந்ததும் அப்படி ஒரு ஆயுர்வேத மருந்துக் கடை இருப்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். நான் மறந்தாலும், “கைக்கு எண்ணை பூசினியோ?” என்று மணியன் நினைவு படுத்திக் கொண்டே இருந்தான். கொழும்பில் இருக்கும் போது கைக்கு எண்ணை பூசிக் கொண்டேன். வீக்கம் குறைந்து மணிக்கட்டில் நோ போய்விட்டது. கைக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்காததாலா? பாரங்கள் அதிகம் தூக்காததாலா? அல்லது எண்ணை பூசிக் கொண்டதாலா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் எண்ணையை யேர்மனிக்கு கொண்டு போவதற்காக சூட்கேசில் பத்திரமாக எடுத்த வைத்துக் கொண்டேன்7 points
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
3 points
- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
https://www.facebook.com/share/v/hYi55bGzpSb4GUvF/?mibextid=gtsPdC யாழ்ப்பாணத்தை என்னிடம் தந்து பாருங்கள். யார் பணமும் தேவையில்லை ,மாற்றுவேன்.2 points- அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன் 1
அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற புத்தகத்தை வாசிக்கும் பொழுது அடியேன் அறிந்து கொண்ட ஒரு சில விடயங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் அந்த வகையில் 1.தென்கிழக்காசியாவின் முதல் வானோலி இலங்கை வானோலி 2.இங்கிலாந்தில் மார்க்கோனி ஆரம்பித்த முன்றாண்டுகளுக்குள் இலங்கையில் வானொலி ஆரம்பமனது. 3.முதலாவது உலக மகாயுத்தம் (ஜூலை 28, 1914_ நவம்பர் 11,1918)முடிவடைந்த் பின்னர்,யுத்த காலத்தில் தரை தட்டியிருந்த ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலில் சிதிலமடைந்திருந்த வயர்லஸ் ரேடிஜோக் கருவியின் பாகங்களை ஒன்றிணைத்து முதலாவது பரீட்சார்த்த ஒலிபரப்பு 1923 ஆண்டிலயே கொழும்பு தந்தித் திணைக்களத்தில் நடைபெற்றது. 4.ஏட்வேர்ட் கார்பர் என்பவரின் தலமையில் உள்ளூர் பொறியியலாளர்கள் ஒன்றிணைந்த் அதை சாதித்தனர். 5.அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்து வந்த மூன்று ஆண்டுகளும் தந்தித் திணைக்களப் பொறியாளர்களின் தொடர்ந்த அயராத முயற்சியால் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 திகதி முறையான வானோலி ஒலிபரப்பு இலங்கையில் ஆரம்பமானது 6.தந்தி திணைக்களத்தின் ஒர் பகுதியாக இயங்கிய இந்த ஒலிபரபுச் சேவையில் ஆரம்பத்தில் ஆங்கில சேவையே கோலாச்சி செய்தது . 7.சிறுது காலத்தின் பின் இடையிடையே இசைத்தடுக்களின் உதவியோடு தமிழ் மற்றும் சிங்கள இசையும் சிறிய அறிவுப்புக்களும் இடம் பெற்றன. 8.இந்த பணியை அங்கு பணி புரிந்த பொறியளார்களும் எழுது விளைஞர்களும் தான் செய்து வந்தனர். 9.தந்தி திணக்களத்தில் இருந்த ஓர் அறை கலையகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 10.1933 ஆண்டு முதல் மும்மொழிகளிலும் கிரமமாக செய்ய தீர்மானிக்கபட்ட பொழுது தமிழ் மொழி அறிவிப்பாளராக வினாயகமூர்த்தி நியமிக்கப்பட்டார்.இவர் தந்தி திணக்களத்தில் எழுது விளஞராக கடமை புரிந்து கொண்டே வானொலி அறிவிப்பு பணிகளை செய்து வந்தார்.2 points- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
உண்மை தான் இவர் கட்டி கொடுத்த வீடுகளை இலங்கை இராணுவம் தங்கள் செய்வதாக அவர்களே கட்டினார்கள். பணம் தியாகி உடையது. முடியாது மிகவும் கடினம். இப்ப செய்யும் வேலைத்திட்டம் கூட செய்ய முடியாது அரசை குற்றம் குறை கூறுவதில்லை2 points- புதிய ஏவுகணையால் ஆயுதப் போட்டியில் இந்தியாவை முந்துகிறதா பாகிஸ்தான்?
சோதனைகளை கடலுக்குள் செய்யாமல் பக்கத்து நாட்டில் பல இலக்குகளை தெரிவு செய்து துல்லியமாக தாக்குகிறதா என்பதை இனிமேலாவது உறுதி செய்யுங்கள்.2 points- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
உதவி செய்கிறார் வாழ்த்துக்கள் அவ்வளவுதான் நோ கொமென்ட்ஸ் .2 points- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
முதியவர் = அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்தவர் வயோதிபர் = அதிக வயதில் வாழ்ந்துகொண்டிருப்பவர் பருவங்கள் மாறினாலும் ஒவ்வொரு நாள் விடியலையும் ஆவலோடு எதிர்பார்த்து வாழ்பவர்களுக்கு இறக்கும் வரை மனதளவில் 70, 80 எல்லாம் கடந்துவந்த ஆண்டு எண்ணிக்கைகள் மட்டுமே 🙂2 points- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
நல்ல செயல், இன்னும் பலருக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும்🙏2 points- ஊருலா
2 points- விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி
2011ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது பேசின காணொளி...............2 points- 300 யானைகளில் தொலைந்த குட்டியின் தாயை வனத்துறை சரியாகக் கண்டுபிடித்தது எப்படி? - ஓர் உணர்ச்சிப்பூர்வமான கதை
பட மூலாதாரம்,SUPRIYASAHUIAS கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகியிருந்தால், குட்டியை விட்டு யானைக் கூட்டம் வெகு தூரம் சென்றிருக்கும். கடைசி வரை அந்த குட்டியால் தாயை பார்த்திருக்க முடியாது, தாய்ப்பால் இல்லாமல் குட்டி உயிர் பிழைப்பதும் கடினமாகியிருக்கும். நல்லவேளையாக தாயிடம் சேர்த்து விட்டோம்", என புன்னகையுடன் கூறுகிறார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது, பன்னிமேடு தேயிலை எஸ்டேட். டிசம்பர் 29 அன்று இந்தப் பகுதியில் தாயைப் பிரிந்து, கூட்டத்திலிருந்து விலகிய ஒரு குட்டியானை சுற்றிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த வனத்துறையினர், சில மணிநேரங்களில் எந்த யானைக் கூட்டத்திலிருந்து குட்டி பிரிந்தது என்பதைக் கண்டறிந்து அதனை தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். கடந்த 5 நாட்களாக யானைக்குட்டி மற்றும் அதன் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது வனத்துறை. இந்நிலையில் நேற்று, தாயின் அருகே அந்த குட்டியானை அமைதியாக படுத்து உறங்கும் காணொளியை வெளியிட்டது வனத்துறை. இணையத்தில் பலரால் பகிரப்பட்ட அந்த காணொளி குறித்தும், 300க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருக்கும் வால்பாறை பகுதியில், ஒரே நாளில் எவ்வாறு குட்டியானை தாயிடம் சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT "மனித வாடை இருந்தால் குட்டியை தாய் விரட்டிவிடும்" "அன்று காலை தகவல் கிடைத்தவுடன் பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு சென்றுவிட்டோம். அங்கு 5 முதல் 6 மாதங்களே ஆன ஒரு குட்டி யானை சுற்றித் திரிந்தது. குட்டி யானை தன் தாயிடமிருந்து பிரிந்து விட்டால், அதை உடனடியாக அதன் தாயிடமோ அல்லது கூட்டத்திடமோ சேர்க்க வேண்டும்." "மனித வாடை அதன் உடலில் பட்டுவிட்டால் யானைக் கூட்டம் அதை சேர்த்துக் கொள்ளாது, தாய் அதனை விரட்டிவிடும்" என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். "யானைகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக வால்பாறை பகுதியில் முகாமிடுவதால், புதிதாக ஏதும் யானைக் கூட்டம் இங்கு வந்தால் எங்களுக்கு தெரிந்துவிடும். டிரோன் மூலமாகவும், கண்காணிப்பு குழுக்கள் மூலமாகவும் யானைகள் எங்கே செல்கின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்." "எந்த யானைக் கூட்டம் ரேஷன் கடைகளைத் தாக்குகின்றன, எவை மக்களின் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன, தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள் எவை என அனைத்து தரவுகளும் எங்களிடம் இருக்கும்" என்றார் மணிகண்டன். தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை டிரோன் மூலம் கண்காணித்து, அதை உறுதிபடுத்திக்கொள்வோம். அப்படி இருக்கையில் அன்று அதிகாலை பன்னிமேடு பகுதிக்கு சென்று குட்டியை மீட்டுவிட்டு, அதன் யானைக் கூட்டத்தை தேடத் தொடங்கினோம்." என்றார். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT 11 யானைகள் கொண்ட கூட்டம் மேலும் அவர் கூறியது, "காலை 8.30 மணிக்கு எங்களுக்கு யானைக்குட்டி பற்றி தகவல் வந்தது, சரியாக மதியம் 1.30 மணிக்கு நாங்கள் அதை தாயிடம் சேர்த்துவிட்டோம். இவ்வளவு துரிதமாக செயல்பட்டதற்கு காரணம் ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டால், யானைக்கூட்டம் வேறு பகுதிக்கு நகர்ந்து விடும். பிறகு குட்டியை கூட்டத்தில் சேர்ப்பது கடினம்." "யானைக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. காரணம் முழுக்க முழுக்க அது தாய்ப்பாலை மட்டும் குடித்து வளர்ந்தது. புல்லைக் கூட உண்ணாது. எனவே நாங்கள் வேறு ஏதாவது உணவு அல்லது லாக்டோ பானம் கொடுத்து அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உடல்நிலை சரியில்லாமல் போய் மேலும் தாமதமாகிவிடும்." "இன்னொரு சிக்கல், யானைக்குட்டி நம்மிடம் பழகிவிட்டால் நம்மை விட்டு போகாது. அது குட்டிக்கு தான் ஆபத்து. இப்படி பல சிக்கல்கள் இருந்ததால், பல குழுக்களாக பிரிந்து தேடுதலில் ஈடுபட்டோம். தேயிலைத் தோட்ட தொழிலார்கள் கூறியது மற்றும் எங்களிடமிருந்த தரவுகள் மூலமாக மூன்று யானைக்கூட்டங்களை பின்தொடர்ந்தோம்." "அதில் பதினோரு யானைகள் கொண்ட கூட்டத்தில் தான், ஒரு குட்டியை காணவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். பின்னர் டிரோனைப் பறக்க விட்டு அந்த குறிப்பிட்ட யானைக்கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். ஆனால் இப்போது தான் இரண்டு பெரிய சிக்கல்கள் உருவானது" என்கிறார் மணிகண்டன். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT ஆக்ரோஷமான யானைகள் தொடர்ந்து பேசிய அவர், "யானைகள் கூட்டத்தை நோக்கி செல்லும்போது, குட்டி சோர்வடைய ஆரம்பித்தது. அதற்கு குடிக்க ஆற்றுத் தண்ணீரை மட்டுமே கொடுத்தோம். அது எங்களுடன் சற்று நெருக்கமாகத் தொடங்கியது. இப்போது எங்களுக்கு பயம் வந்துவிட்டது, நன்றாகப் பழகி விட்டால் அதை கூட்டத்திடம் சேர்ப்பது சிக்கல்." "இன்னொரு சிக்கல், யானைக் கூட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அருகில் சென்று குட்டியை விட முடியாது. அது எங்களை தாக்க வாய்ப்புகள் அதிகம். தேயிலைத் தோட்டம் என்பதால் யானைகளிடமிருந்து தப்பிப்பது இன்னும் கடினம். எனவே மீண்டும் டிரோன் மூலம் கூட்டத்தின் இருப்பிடத்தை உறுதி செய்துவிட்டு, யானையை நன்றாக குளிப்பாட்டி சேற்று மணலை பூசினோம். மனித வாடை இருக்கக்கூடாது அல்லவா." என்று சிரிக்கிறார் மணிகண்டன். "பின்னர் அதை முன்னே செல்ல விட்டோம். கூட்டத்தின் சத்தத்தைக் கேட்ட குட்டி யானை பிளிறியது. உடனே இரண்டு யானைகள் முன்னே குட்டியை அழைத்துக் கொண்டன. அப்போது தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம். ஏனென்றால் இவ்வளவு சிறிய குட்டி தாயைப் பிரிந்தால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது." என்று கூறினார். வைரலான காணொளி குறித்து பேசும்போது, "அது இரண்டு நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட காணொளி, டிரோன் மூலம் தான் எடுத்தோம். எங்களுக்கு இருந்த சந்தேகம் தாய் அந்தக் குட்டியை எவ்வாறு அணுகும் என்பது தான். ஆனால் டிரோன் மூலம் அந்தக் காட்சியை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். பட மூலாதாரம்,FOREST DEPARTMENT வால்பாறையில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்ரமணியனிடம் (ஐஎப்எஸ்) பேசியபோது, "கேரளாவில் சபரிமலை சீசன் என்பதால் அங்கிருந்து வெளியேறிய முன்னூறுக்கும் மேற்பட்ட யானைகள் வால்பாறையில் முகாமிட்டுள்ளன." "அவை தங்களுடைய உணவுக்காக மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லும். எனவே எத்தனை யானைகள் வருகின்றன போகின்றன என்பது குறித்த தரவுகள் எங்களிடம் எப்போதும் இருக்கும்." "இப்போது அந்த குட்டி யானையும் அதன் கூட்டமும் மீண்டும் கேரளாவுக்குள் சென்றுவிட்டது. நாங்கள் இறுதியாக கண்காணித்தவரை குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது." "சில மணிநேரங்களில் அனைத்தும் நடந்ததற்கு எப்படியாவது தாயுடன் குட்டியை சேர்த்துவிட வேண்டுமென்ற குழுவின் எண்ணம் தான் காரணம். ஒருவேளை மீண்டும் அந்த யானைக்கூட்டம் வால்பாறைக்குள் வந்தால் கண்காணிக்கப்படும்" என்றார். காணொளிக் குறிப்பு, வால்பாறையில் கூட்டத்திலிருந்து விலகிய குட்டியானையை மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறை அழிக்கப்படும் யானையின் வாழ்விடங்கள் யானைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவரும் ஆற்றல் பிரவீன்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில், "தாயை பிரிந்த யானையின் கன்று ஒன்று மீண்டும் தனது தாயுடன் சேர்ந்த அழகிய தருணங்கள், தாயின் மடியில் பத்திரமாக இருப்பதாய் குட்டி உணர்கிறது. பெரும் முயற்சிக்குப் பிறகு தமிழ்நாடு வனத்துறை இந்த குட்டியை தாயுடன் சேர்த்து வைத்துள்ளனர்." "தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த இக்குழுவினருக்கு எம்முடைய வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது வாங்கிய தி எலிபெண்ட் விசுபெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய அம்மு குட்டி என்னும் யானைக் குட்டி ஒன்று இன்று வரை தன் கூட்டத்துடன் சேர முடியாமல் அனாதையாகவே உள்ளது. தாயை பிரிந்த வேதனை அதற்கு மட்டும் தான் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "பல ஆறுகளின் மூலமாக இருக்கும் மழைக்காடுகளை துண்டுச் சோலைகளாக மாற்றி விட்டு நாம் தினமும் குடிக்கும் தேயிலைக்காக இங்கு பயிர் செய்து வருகிறார்கள். இழந்துவிட்ட தனது வாழிடத்தை தேடி வரும் யானைகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றன" என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c802d2eggeno1 point- ஊருலா
1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇராணுவ முஸ்த்தீபு இந்தியாவிற்கெதிராக தனது சகாவான பிரேமதாசவைக் களமிறக்கிய ஜெயார் அக்கால கட்டத்தில் ஜெயாருக்கு இருந்த ஒரே நோக்கம் இந்தியாவின் அழுத்தத்தை நிர்மூலமாக்கி இந்தியாவையும், இந்திராவையும் தற்காப்பு நிலையெடுக்கப் பண்ணுவதுதான். இந்தியாவைச் சீண்டுவதில் பெயர்பெற்றவராக விளங்கிய பிரேமதாச, ஜெயாரின் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டார். இருமுனை நடவடிக்கையினை பிரேமதாச மேற்கொண்டார். முதலாவது, இந்தியாவின் அனுசரணையின் ஊடாக முன்வைக்கப்பட்ட பிராந்திய சபைகளினூடான தீர்வினை உள்ளடக்கிய இணைப்பு "சி" யின் அடித்தளத்தைச் சிதைப்பது. இதனைச் செய்வதற்கு பாராளுமன்றத்தையும், ஊடகத்துறையினையும் அவர் களமாகப் பாவித்தார். பாராளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட பேச்சுக்களில் தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலான எந்தத் தீர்வையும் வழங்க அரசாங்கம் தயாராக இல்லையென்று கூறத் தொடங்கினார். மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தவிர வேறு எதனையும் தமிழர்கள் கோரக் கூடாது என்றும் பேசி வந்தார். பிரேமதாசவின் இரண்டாவது முனை தமிழர்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆதரவினைப் பலவீனப்படுத்தி ஈற்றில் முற்றாக அகற்றிவிடுவது என்பதாக இருந்தது. அதற்காக இந்தியாவிற்கு தொடர்ச்சியான தலைவலியைக் கொடுக்க அவர் முயன்றார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "இலங்கை இறையாண்மையுள்ள சுதந்திரமான நாடு. ஆகவே, தனக்குத் தேவையானவற்றை தான் விரும்பும் நாடுகளில் இருந்து, தனக்கு உகந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளும் உரிமை அதற்கு இருக்கிறது" என்று இந்தியாவின் அழுத்தத்திற்கு தாம் அடிபணியப்போவதில்லை எனும் தொனியில் பேசினார். பின்னர், பங்குனி மாதத்தில் பாராளுமன்றத்தில் பேசும்போது, " நாம் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். இந்தியா எம்மை அச்சுருத்துவதை அனுமதிக்கப்போவதில்லை. இதனை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நான் பிரகடனம் செய்கிறேன்" என்று பேசினார். மேலும், இந்தியா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு இயங்குவதாகக் குற்றஞ்சாட்டினார். இந்தியாவில் அது கைக்கொள்ளும் நடைமுறைக்கும், இலங்கையில் அது கைக்கொள்ளும் நடைமுறைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக அவர் விமர்சித்தார். காஷ்மீரிலும், பஞ்சாப்பிலும் பயங்கரவாதத்தினை இரும்புக் கரம் கொண்டு அடக்கிவரும் இந்தியா, இலங்கையை அவ்வாறு செய்யவேண்டாம் என்று போதித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். "எமது குற்றச்சாட்டு என்னவென்றால், எமது நாட்டில் உள்ள மக்கள் கூட்டத்தினரை தமது நாட்டிற்குள் வரவழைத்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களைப் பயிற்றுவித்து, எமக்கெதிராகச் செயற்பட மீண்டும் எமது நாட்டிற்குள் இந்தியா அனுப்பிவைக்கிறது. இதுதான் எமது பிரச்சினை. இந்திய அரசாங்கத்திற்கெதிராகப் போராடிவரும் சீக்கியப் பிரிவினைவாதிகளை நாம் இலங்கைக்கு அழைத்து, பயிற்சியளித்து மீளவும் இந்தியாவிற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட அனுப்பினால் இந்தியா என்ன செய்யும்? எங்களை இந்தியா அப்போது குற்றஞ்சாட்டியிருக்கும். ஆனால், நாம் ஒருபோதும் அதனைச் செய்யப்போவதில்லை. எமது நாட்டையோ அல்லது அல்லது எமக்குச் சொந்தமான எதனையோ பாவித்து எவரும் இந்த உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் எதிராகப் போரிடவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நாம் அனுமதிக்கப்போவதில்லை. அதுதான் எமது கொள்கை. அதேபோல், எந்தவொரு நாடும் எமக்கெதிராகச் செயற்படுவதை நாம் வெறுக்கிறோம். எமது கொள்கையினை மற்றையவர்களும் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறினார். சித்திரை மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் பேசிய பிரேமதாச, " தமிழ்ப் பயங்கரவாதிகளை எதற்காக இந்தியாவிற்கு வரவழைத்து ஆதரிக்கிறீர்கள்? எமது நாட்டை ஆக்கிரமித்து, கபளீகரம் செய்ய நீங்கள் விரும்பினால் அதை நேரடியாகச் செய்யுங்கள், பயங்கரவாதிகளின் பின்னால் ஒளிந்திருந்து செய்யாதீர்கள்" என்று அவர் இந்தியாவை நோக்கி விமர்சனத்தை முன்வைத்தார். பிரேமதாசவின் இந்தியாவுக்கெதிரான தாக்குதலும், இணைப்பு "சி" இற்கெதிரான விமர்சனமும் வைகாசி, ஆனி மாதங்களிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. இதே காலப்பகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கெதிரான தாக்குதலையும் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் நடத்தி வந்த விதமும், தம்மீதான தொடர்ச்சியாக அரச ஊடகங்கள் ஊடாக முன்வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, அரசாங்கத்துடன் ஒத்துழையாமை எனும் நிலைப்பாட்டினை தாம் எடுக்கப்போவதாக அமிர்தலிங்கம் ஊடகங்களுக்கு அறிவித்தார். இதனால் ஜெயார் கடுங்கோபமுற்றார். ஜெயாருக்கும் முன்னணியினருக்கு வளரத் தொடங்கிய கசப்புணர்வை உள்ளூர ஆதரித்த புலிகள் ஆனி 28 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழர் தொடர்பான விடயங்களுக்குத் தாமே பொறுப்பானவர்கள் என்று தொனிப்பட அறிவித்தார்கள். "எம்மைப் புறக்கணித்திவிட்டு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சமரசத்தில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எமது இலட்சியத்தை அடையும் வகையில் தீர்வு அமையப்பெறாத விடத்து எமது ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்" என்று புலிகளின் அறிக்கை கூறியது. புலிகளின் உத்தியோகபூர்வ சஞ்சிகையான விடுதலைப் புலிகள் ஆடி மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் "சர்வகட்சி மாநாடு தமிழர் பிரச்சினைக்கான தீர்வெதனையும் தரப்போவதில்லை. கடந்த 17 வருட கால சரித்திரம் அதனையே உறுதிப்படுத்துகிறது. சிங்களத் தலைவர்களுடன் பேசிவந்த பழைய தலைமுறை தமிழ் அரசியல்வாதிகள் தமது தலைமுடியினை இழந்ததுதான் கண்ட மிச்சம். ஆனால், அப்படியிருந்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழருக்கான தீர்வினை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கையினை மட்டும் அவர்கள் கைவிடத் தயாரில்லை". "புரட்சிகரமான புதிய தலைமுறை ஒன்று அரசியல் களத்திற்குள் வந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தாலோ, அரசியல் நடிகர்களாலோ தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்துவிட முடியாது. தமிழர்களுக்கும் இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இனி இருக்கப்போவதில்லை. ஆகவே, தமீழிழ விடுதலைப் போராளிகளின் சரித்திரம் படைக்கப்போகும் சாகசக் களங்களை நாம் இனிமேல் தரிசிக்கப் போகிறோம். தமிழர்களின் புதிய பிரதிநிதிகள் அவர்களே. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் அல்லாமல், போராளி இளைஞர்களே இனிமேல் தமிழர்களின் கதாநாயர்களாகத் திகழ்வார்கள்" என்று கூறப்பட்டிருந்தது. தமது இறுதி முயற்சியாக சத்தியாகக் கிரகப் போராட்டத்தை கையிலெடுத்த முன்னணியினர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பொறுத்தவரை அரசியல்க் களத்தில் தாமே இன்னமும் முக்கிய கதாப்பாத்திரங்கள் என்பதை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகவே, 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை நிகழ்வின் முதலாம் வருட நினைவு தினத்தினை ஆடி 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரமாகாளியம்மண் கோயிலின் முன்பாக சத்தியாக்கிரக நிகழ்வு மூலம் அனுஸ்ட்டிப்பது என்று முடிவெடுத்தார்கள். இதுதொடர்பாக அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில், "1983 ஆடி தமிழினக் கொலையினை துயருருதல், உண்ணாவிரதம் இருத்தல், பிரார்த்தனைகளில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதனூடாக அனுட்டிக்கப்போகிறோம். தமிழர்களுக்கான உரிமைகளை வன்முறையற்ற வழிகள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாட்டில் நடத்தப்படவிருக்கும் போராட்டங்களின் ஆரம்பமாக இந்தச் சத்தியாக்கிரக நிகழ்வு அமையும்" என்று கூறியிருந்தார். இதுதொடர்பான விபரமான செய்திக்குறிப்பினை சிவசிதம்பரம் ஊடகங்களுக்கு வெளியிட்டார். "தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வுத் திட்டம் ஒன்றினை சர்வகட்சி மாநாடு தரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது என்று அவர் கூறினார். தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான பொறுப்பினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடமே இன்னமும் கையளித்திருக்கிறார்கள். எம்மைப்பொறுத்தவரை இந்தப் பொறுப்பென்பது மிகவும் உன்னதமானது. இதனை அடைவதற்கு நாம் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், இருதரப்புச் சமரசங்கள் மூலமாகவும் பாராளுமன்றத்தில் பேசுவதன் ஊடாகவும் சர்வதேச அளவில் எமது மக்களின் பிரச்சினைகளை அறியச் செய்திருக்கிறோம். ஆனால், இவை எதுவுமே எமக்கான தீர்வினைத் தரவில்லை. உலகில் பலவீனமானவர்கள் முன்னெடுக்கவேண்டிய போராட்ட வழிமுறை குறித்து மகாத்மா காந்தி கற்பித்துச் சென்றிருக்கிறார். ஆடி 25 ஆம் திகதி நாமும் அவ்வழியில் பயணிப்போம். உண்மையான சத்தியாக்கிரகிகளாக நாம் மாறுவோம். இச்சத்தியாக்கிரக நிகழ்வு தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்துமாக இருந்தால், நாமே அந்த அவலங்களுக்கு முதலில் முகம் கொடுப்போம்" என்று அவரின் அறிக்கை கூறியது. முன்னணியினரின் சத்தியாக்கிரகத்தைக் கலைத்துப்போட்ட போராளிகள் 1984 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரகாளியம்மண் ஆலய முன்றலில் கூடிய அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் தலைமையிலான சுமார் 200 பேர் அடங்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், ஆதவாளர்களும் நிலத்தில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடத் தொடங்கினார்கள். மங்கையட்கரசி சுலோகங்களை பாடினார். புலிகள் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களைச் சேர்ந்த சுமார் 200 இளைஞர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி அவர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். "இவ்வளவு காலமும் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? மக்களுடன் நிற்கவேண்டிய தருணத்தில், அவர்களைக் கைவிட்டு ஓடி ஒளிந்துவிட்டு இப்போது வந்து அவர்களின் முன்னால் வந்து உங்களைத் தலைவர்கள் என்று கூறிக்கொள்வது உங்களுக்கு அவமானமாகத் தெரியவில்லையா?" என்கிற கேள்விகளும், கேலிகளும் முன்னணியினரை நோக்கி அங்கு எழுப்பப்பட்டன. உண்ணாவிரதம் இருந்து உரிமைகளை வெல்லும் காலம் முடிவடைந்துவிட்டது என்று இளைஞர்கள் கூறினார்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வினைக் காணமுடியும் என்று இன்னமும் நம்புகிறீர்களா? என்று அவர்கள் முன்னணியினரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்கள். இப்போது துப்பாக்கிகள் சுடத் தொடங்கிவிட்டன என்பதை மறக்கவேண்டாம் என்று நினைவுபடுத்தினார்கள். தமிழர்களின் போராட்டம் இளைஞர்களின் கைகளுக்கு தற்போது வந்துவிட்டது என்று அவர்கள் எச்சரித்தார்கள். "தயவுசெய்து உங்களின் சத்தியாக்கிரகத்தை முடித்துவிட்டு இங்கிருந்து அகன்று செல்லுங்கள்" என்று அவர்கள் அறிவுருத்தினார்கள். சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்ட பலர் அங்கிருந்து விலகிச் சென்றார்கள். வெறும் 20 பேரே அங்கு தொடர்ந்தும் நின்றிருந்தார்கள். அவர்களை சூழ்ந்துகொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. புலிகளின் போராளிகளில் ஒருவரான திலீபன் மதியவேளை, 12 உணவுப் பொதிகளுடன் அங்கு வந்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களின் முன்னால் உணவுப் பொட்டலங்கள் வைக்கப்பட்டன. அவர்களின் அருகில் அமர்ந்துகொண்ட இளைஞர்கள் உணவுப் பொட்டலங்களை திறந்து அருந்த ஆரம்பித்தார்கள். இதனையடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வருவதாக அறிவித்துவிட்டு, தோல்வியுற்றவராய் அங்கிருந்து அகன்று சென்றார் அமிர்தலிங்கம். சமாதான வழிகளிலான போராட்டம் முடிவிற்கு வர, ஆயுதங்கள் மூலமான போராட்டம் களத்திற்கு வந்துவிட்டிருந்தது.1 point- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு இவர் செய்கிறார் என்று நம்புவதற்கு ஏற்றாற்போல இவரது செயற்பாடுகள் உள்ளதாக கருதுகிறேன். 1) law enforces மற்றும் forces ன் ஏகோபித்த ஆதரவு இவருக்கு உண்டு (அவர்களின் அனுசரணையின்றி அங்கு ஏதும் செய்ய முடியாது என்பது உண்மை ) 2) இங்கே எல்லாம் நேரெதிர்.1 point- அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.
பகிர்வுக்கு நன்றி. என் தவறான புரிதலுக்கு வருந்துகிறேன் 🙏1 point- அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- 300 யானைகளில் தொலைந்த குட்டியின் தாயை வனத்துறை சரியாகக் கண்டுபிடித்தது எப்படி? - ஓர் உணர்ச்சிப்பூர்வமான கதை
நற்செயல்கள் பாராட்டுக்கு உரியது.......! 👍 நன்றி ஏராளன் ........!1 point- 300 யானைகளில் தொலைந்த குட்டியின் தாயை வனத்துறை சரியாகக் கண்டுபிடித்தது எப்படி? - ஓர் உணர்ச்சிப்பூர்வமான கதை
நன்றி இணைப்புக்கு எராளன் அத்தி பூப்பது போல் தமிழ் bbc உபயோகமான தகவல்கள் .1 point- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
தனியே உதவிகளை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படியான செல்வந்தர்கள் எமது மக்களை நான் முன்னேற்றுகிறேன் என்றால் அரசும் நல்லது செய் என்று தனது ஆக்களையும் கொண்டுவந்து இருத்திவிடும். பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும். கும்பலில் கோவிந்தாவாக செய்வதை விட கஸ்டப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு உதவிகள் செய்யலாம்.1 point- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர் முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 🤨1 point- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
ஆமாம் நிச்சயமாக ..உதவி தேவையானவர்கள். தொடர்பு கொண்டால் செய்வார் 🙏1 point- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
நானும் இதனை ஆமோதிக்கிறேன் நானும் ஆமோதிக்கிறேன்.1 point- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
நானும் இதனை ஆமோதிக்கிறேன்!!!1 point- தேயும் ஈழத் தமிழ்மொழி
1 pointபேச்சு தமிழும் தமிழ் எழுத்தின் வரி வடிவங்களும் தொடந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியதவை. மாற்றங்கள் என்பது பிரபஞ்ச விதிகளில் ஒன்று. பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்களைப் போல் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியான பூமி பந்திலும் உயிரியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. அதுவே பரிணாமம். (Evaluation) அந்த பூமியின் மக்கட் கூட்டத்தில் ஒரு சிறிய பகுதியில் வாழும் மக்களால் பேசப்படும் தமிழ் மொழியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. அம்மாற்றங்களே தமிழ் மொழியை உலகத்தோடு இணையாக பயணிக்க வைத்துள்ளது. அம்மாற்றங்கள் இல்லையெனில் தமிழ் மொழி என்றோ காணாமல் போயிருக்கும்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- பக்கத்து வீடு
1 pointவரவுக்குநன்றி புத்தன். இங்கும் பலர் கடைப்பிடிப்பதில்லை. என் பக்கத்து வீட்டுக்காரர் போல சிலரே பிரச்சனை ஆக்குவது. வாடைக்காய் வீட்டில் இருப்போர் இதையெல்லாம் கவனித்து வீட்டு உரிமையாளருக்குச் சொல்லப் போவதில்லை. ஒரு ஆரை மீற்றர் கூடினாலும் பக்கத்து வீடுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.1 point- அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.
1 point- ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
கெல்லி Ng பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் எரிந்து கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த பயணிகள், விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தலின்படி தங்கள் கைப்பைகளை விட்டுவிட்டு ஆபத்து கால வழிகளை நோக்கி ஓடினர். விமானப் பணியாளர்களின் பேச்சைக் கேட்டு, அவர்கள் தங்கள் பொருட்களை கைவிட்டு தப்பி ஓடியதே விமானத்திலிருந்த 379 பேரும் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்கின்றனர் வல்லுநர்கள். பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516 தரையிறங்கிய போது ஒரு கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. இந்தச் சிறிய விமானத்திலிருந்து 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி? இவ்விபத்தில் ஒரு சிறு தடங்கலுமின்றி விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டது உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. விமானவியல் நிபுணர்களும் விமானப் பணியாளர்களும் இது மிகச் சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்டிருந்த விமானப் பணியாளர்களாலும், அவர்களது பாதுகாப்பு அறிவுறுத்தலைக் கேட்டு அதன்படி நடந்த பயணிகளும்தான் இதற்குக் காரணம் என்று பிபிசியிடம் கூறினர். கிரீன்விச் பல்கலை கழகத்தின் தீவிபத்துப் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் எட் கலீயா கூறுகையில், “நான் பார்த்தவரையில் தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது பயணிகள் வெளியேற்றத்தை தாமதப்படுத்தி மிகப்பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும்,” என்கிறார் அவர். மேலும், “இந்த விபத்து மிகச் சிக்கலான முறையில் நடந்தது, விமானத்தின் மூக்கு கீழ்நோக்கி இருந்தது. இது பயணிகள் வெளியேறுவதைக் கடினமாக்கியது,” என்கிறார் அவர். வெளியேறுவதற்கான காற்று நிரம்பிய சறுக்குகள் மூன்று மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஆனால், விமானம் நின்றிருந்த கோணத்தால் அவையும் சரியாகச் செயல்படுத்தப்பட முடியவில்லை. அது மிகவும் செங்குத்தாக இருந்திருக்கும். "விமானத்தின் அறிவிப்புப் பொறிமுறையும் செயல்படாமல் போனது. அதனால் விமானப் பணியாளர்கள் ஒலிபெருக்கிகள் மூலமும், சத்தமாகக் கத்துவதன் மூலமும் அறிவிப்புகளை வழங்கினர்" என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஒரு பயணிக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டதாகவும், 13 பேர் உடல் அசௌகரியத்திற்காக மருத்துவ பரிசோதனையைக் கோரியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. "பெரும விபத்து நேரிட்டிருந்தாலும் வெறும் ஐந்தே நிமிடங்களில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்" என்று அதில் பயணித்த யமகே என்ற பயணி கூறினார். தீ மளமளவென விமானம் முழுவதும் பரவ பத்து பதினைந்து நிமிடங்கள் ஆனதாக அவர் கூறினார். 28 வயதான சுபாசா சவாதா (Tsubasa Sawada) "இது ஒரு அதிசயம், ஒருவேளை நாங்கள் இறந்திருக்கக் கூடும்" என்றார். "தீ எப்படி ஏற்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன், பதில் கிடைக்கும் வரை எந்த விமானத்திலும் பயணிக்க மாட்டேன்" என்று சவாதா மேலும் கூறினார். விபத்துக்குள்ளான விமானம், ஜப்பானின் வடக்கிலிருக்கும் சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்குக் கிளம்பியது. இரண்டு மணி நேரத்தில் ஹனேடாவில் தரையிறங்கியது. அவ்விடத்தில், புத்தாண்டன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்க ஒரு சிறிய கடலோரக் காவல்படை விமானம் நின்றிருந்தது. அதனோடு பெரிய விமானம் எப்படி மோதியது என்பதைப் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு பிபிசியிடம் பேசிய ஒரு முன்னாள் ஜப்பானிய விமானப் பணியாளர் தப்பித்த பயணிகள் ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ என்றார். “பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டதை அறிந்து நிம்மதியாக இருந்தது. ஆனால் ஆபத்து கால வெளியேற்ற வழிமுறைகளை நினைத்தால் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. இந்த விபத்தில் விமானங்கள் மோதிக்கொண்ட விதத்தையும், தீ பரவியதையும் பார்க்கையில் இந்த விபத்து மிக மோசமாக இருந்திருக்கக் கூடும்,” என்கிறார் அந்தப் பெண். நிஜத்தில் பயணிகளை பதற்றமடையாமல் இருக்க வைப்பது மிகக் கடினம் என்ற அவர், அவர்கள் காப்பாற்றப்பட்டது கற்பனை செய்ய முடியாத அளவு கடினமானது என்றார். “இது பணியாளர்களின் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்த பயணிகள் ஆகியவற்றால் சாத்தியப்பட்டது,” என்றார். கைகொடுத்த பயிற்சிகள் விமானப் பணிப்பெண்கள் மூன்று வார தீவிரப் பயிற்சிக்குப் பிறகே பணியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். இது ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். “எழுத்துத் தேர்வு, நிஜ சம்பவங்களைப் பற்றிய விவாதங்கள், செய்முறைப் பயிற்சிகள் ஆகியவை இதில் அடக்கம். விமானம் கடலில் விழுந்தால் என்ன செய்வது, விமானத்தில் தீப்பிடித்தால் என்ன செய்வது, போன்றவை கற்றுத்தரப்படும். பராமரிப்புப் பணியாளர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது,” என்றார் 10 வருடங்களுக்குமுன் பணியிலிருந்து விலகிய அந்தப்பெண். தென்கிழக்கு ஆசிய விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் விமானியும் விமானப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த மீட்புப் பணியில் உதவியது என்றார். “இங்கு பயிற்சி மிக முக்கியப் பங்காற்றியது என்று நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் யோசிப்பதற்கு நேரமே இருக்காது. பயிற்சியில் கற்றுக்கொண்டதைச் செயல்படுத்த மட்டுமே முடியும்,” என்றார் அவர். பயணிகள் விமானங்கள் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்கு, விமானத்தில் இருக்கும் அனைவரும் 90 வினாடிகளில் வெளியேற முடியும் என்று விமானத் தயாரிப்பாளர்கள் காண்பிக்க வேண்டும். சில சமயம் பரிசோதனை மீட்பு முயற்சிகள் உண்மையான பயணிகளை வைத்து செய்யப்படுகின்றன, என்கிறார் அவர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை கடந்த கால விபத்துகள் கடந்த கால விபத்துகளுக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் அந்த விமானி. உதாரணமாக, 1977-ஆம் ஆண்டு ஸ்பெயினில் இரண்டு போயிங் 747 ரக விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 583 பேர் கொல்லப்பட்டனர். இது விமான வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது. இது விமானப் பணியாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிர்வாகிகள் ஆகியோரிடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில் இருந்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்திலிருக்கும் விமானி அறை மற்றும் ரேடியோ தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டன. 1985-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு விபத்தை எதிர்கொண்டது. டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குக் கிளம்பிச் சென்ற 123 என்ற விமானம், கிளம்பிய சற்றி நேரத்திலேயே ஒரு மலையில் மோதியது. அந்த விமானத்தில் பயணித்த 524 பேரில் 4 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர். இவ்விபத்திற்கான காரணமாக போயிங் நிறுவனம் விமானத்தில் செய்த பழுதுவேலையைச் சரியாகச் செயவில்லை என்று சொல்லப்பட்டது. 2006-ஆம் ஆண்டு இந்த விபத்தின் இடிபாடுகளை வைத்து ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு அருங்காட்சியகம் அமைத்தது. இது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. “அந்த விபத்திற்குப் பின், குடும்பத்தாரை இழந்து தவித்தவர்களின் வலி, வேதனை ஆகியவற்றைப் பார்த்தபின், அதுபோன்ற ஒரு சம்பவத்தை மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டோம்,” என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. ஜப்பான் விமானத்தில் இருந்த 379 பேரும் வெறும் ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி? - BBC News தமிழ்1 point- ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
உங்களுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன் கப்பித்தான். சிலநாட்களுக்கு முன்னரேதான் அவதானித்த விடயம் என்பதால் மறந்திருக்கவும் சந்தர்ப்பம் இல்லை. இன்னுமொரு சுவாரசியமான விடயம் - "துப்பினால் 250 ரூபாய் தண்டம்"- என்றும் மெட்ரோ நிலையங்களில் ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டி வைத்திருக்கிறார்கள். எவராவது மெட்ரோ நிலையங்களில் துப்பி நான் காணவில்லை. முந்தைய வருட(2022) இறுதியில் பாரிஸ் மெட்ரோவை பல நாட்கள் உபயோகித்திருந்தேன். டெல்லி, பாரிஸ் மெட்ரோ இரண்டிலுமே அறிவித்தல் மொழியை விட வித்தியாசம் வேறேதும் கண்டிலேன்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஆபத்து!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பக்கவாதமாககூட இருக்கலாம்
இன்று உலகில் அதிகளவில் ஏற்பட்டுவரும் மிகவும் அச்சுறுத்தக்கூடிய பிரதான தொற்றா நோய்களில் பக்கவாதமும் ஒன்றாகும். இன்று 6 பேரில் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பக்கவாதம் வருமுன் காக்கப்பட வேண்டிய ஒரு பிரதான நோயாகும். இருந்த போதிலும் பக்கவாதம் பற்றிய போதிய விழிப்புணர்வு பொது மக்களிடம் மிகக் குறைவாகக் காணப்படல் ஒரு வருந்தக் கூடிய விடயமாகும். இது மிகவும் அச்சுறுத்தக் கூடியதும்இ உயிரிழப்பைத் தோற்றுவிக்கக் கூடியதுமான ஒரு தொற்றா நோயாகும். நவீன மருத்துவத்துறை எவ்வளவு சிறப்பாக முன்னேற்றமடைந்திருந்தாலும் நாளுக்கு நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நேயாயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது கடவுளுடைய அதிசயமான படைப்பிலே உருவான மனிதப் பிறவியில் மிகவும் பிரமிக்கக் கூடிய பல பிரமாண்டமான ஆற்றல்களை உள்ளடக்கியுள்ளதும் இ மிகவும் சிக்கலானதும் அதிக குருதிஇ நரம்பு விநியோகம் கொண்ட உறுப்பு மனித மூளையாகும். மனிதனில் அனைத்து விதமான செயல்பாடுகளையும் கட்டுப்படுகின்ற உயர் கட்டமைப்பு இ தொழிற்பாட்டு மையமும் அதுவேயாகும். மனிதனின் ஒவ்வொரு தொழிற்பாடுகளும் மூளையின் குறித்த ஒரு பகுதியால் கட்டுப்படுத்தப்படும். மூளையானது உயர் ஒட்சிசன் தேவையுள்ள குருதிக் குழாய்களின் சிக்கலான வலைப்பின்னலால் உருவான அமைப்பாகும். அதே வேளை ஒட்சிசன் விநியோகம் தடைப்படும் போது முதலாவதாக இறக்கின்ற உறுப்பும் அதுவேயாகும். பக்க வாதம் அல்லது பாரிசவாதம் என்றால் என்ன???? மூளையின் குறித்த சில பாகங்கள் சடுதியாக செயலிழப்பதால் உடலின் சில பாகங்களை அசைக்க முடியாத நிலை உண்டாகின்றது. பொதுவாக மூளையின் வலது பகுதி உடலின் இடது பாகங்களையும் மூளையின் இடது பகுதி உடலின் வலது பாகங்களையும் கட்டுப்படுத்துகின்றது. மூளையின் குறித்த பகுதி செயலிழப்பதால் அப் பகுதியால் கட்டுப்படுத்தபடுகின்ற உடலின் குறித்த பாகம் செயலிழந்துவிடுகின்றது. மூளைக்கு குருதியை கொண்டு செல்கின்ற நாடிகளில் ஏற்படும் திடீர் அடைப்புக்களால் மூளைக்கான சீரான குருதி சுற்றோட்டம் பாதிக்கப்படும். தொடரும் இன் நிலையானது மூளையின் விரைவான செயலிழப்புக்கு வழிகோலும். இதனால் மூளையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட குறித்த பாகத்துக்கான நரம்பிணைப்பு துண்டிக்கப்படுவதால் அப் பாகம் செயலிழக்கின்றது. இந்நிலை பக்கவாதம் எனப்படும். இதன் விளைவாக உடலில் பின்வரும் மாற்றங்கள் நிகழும் • சுய நினைவற்ற நிலை • புலனுணர்வுகள் உடலின் இயக்கம் என்பன பாதிக்கப்படும் • உடலின் ஒருபக்கம் செயலிழக்கும் • உடல் தசைகளுடைய அசைவு பாதிக்கப்படும் • உடல் பலவீனமடையும் • சுவாசிப்பதில் சிக்கல் நிலை தோன்றும் • மூட்டுகள் விறைப்புத்தன்மையாக மாறும் • முகம் மற்றும் வாய் சமச்சீரற்று காணப்படல் அல்லது வாய் சற்று கோணலாக மாறல் • வுழமையான பேச்சில் தெளிவின்மை • உணவை விழுங்குவதில் சிக்கல் • நினைவாற்றல் குறையும் • சடுதியான மயக்கம் கடும் தலைவலி ஏற்படும் இன்று கீழ்வரும் காரணிகள் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது. • வயது- வயது அதிகரிக்கும் போது ஆண் பெண் இருபாலாருக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் • இலிங்கம்- ஆண்கள் பெண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் • மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் பக்கவாதம் ஏற்படுவதை பன் மடங்கு அதிகரிக்கும் • நீரழிவு நோய் ,உயர் குருதி அமுக்கம், மன அழுத்தம் போன்ற நிலைமைகளும் பக்கவாதத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும் • போதிய அளவு உடற்பயிற்சியின்மையால் குருதி சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு காலபோக்கில் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும் • முறையற்ற உணவு பழக்கங்கள் அதாவது நிரம்பிய கொழுப்பமிலங்கள் நிறைந்த உணவுகள் குருதி கலன்களில் கொலத்திரோல் படிவுகளை ஏற்படுத்துவதால் இது பக்கவாதத்திற்கு வழிகோலும் • பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் நிறமுர்த்தங்களாலும் இவை ஏற்படுத்தப்படும் • அதிகளவில் கருத்தடை மாத்திரைகள் பாவித்தல் கொகையின் (ஊழஉயiநெ) பாவித்தல் அதிக உடற் பருமன் போன்ற பல காரணிகளும் பக்கவாதம் ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்துகின்றது. பக்கவாதத்தில் பொதுவாக இரண்டு வகை உள்ளது • இஸ்கேமிக் (Ischemic stroke) • கீமோறேஜிக் (Hemorrhagic stroke) இஸ்கேமிக் (Ischemic stroke) மூளைக்கு செல்லும் இரத்தகுழாய்களில் கொழுப்பு பைபிரின் நார்கள் கல்சியம் ஆகியன படிவதாலும் இரத்தக்கட்டிகள் உறைவதாலும் கருதிக்குழாயின் பருமன் குறைவடைந்து மூளைக்கான குளுக்கோசு ஒட்சிசன் விநியோகம் தடைப்படுகிறது இதனால் மூளையின் கலங்;கள் காலப்போக்கில் இழக்கப்படுகின்றது. கீமோறேஜிக் (Hemorrhagic stroke) மூளையில் காணப்படுகின்ற சில குருதிக்குழாய்களின் சுவர் மென்மையடைந்து உயர் குருதி அமுக்கத்தின் காரணமாக ஏற்படுத்தப்படும் இரத்தக் கசிவினால் இந்நிலை உருவாகின்றது. சுpல வேளைகளில் குருதி மயிர்த்துளைக் குழாய் வெடிப்பினால் இது ஏற்படுகின்றது. இதற்கு தலையோட்டிலுள்ள அமுக்கமும் காரணமாகும். சில தடுப்பு முறைகள் • தினந்தோறும் ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளை றே;கொள்ளுதல். • ஆரோக்கியமான உணவுமுறைகளை கையாளுதல் • புகைத்தல் மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல் • நீரழிவு நோய் இதய நோய்களிலிருந்து விடுபடுதல் பக்கவாத புனர்வாழ்வு சிகிச்சையில் இயன் மருத்துவர்களின் பங்களிப்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு புனர்வாழ்வளித்து வழமையான நிலைக்கு கொண்டு வருவதில் இயன் மருத்துவம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பக்கவாதத்தினால் யாராவது பாதிக்கப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலையை உடனடியாக நாட வேண்டும். அதன் பின்னர் வைத்தியசாலையில் அந் நோயாளி உயிர் ஆபத்தை தாண்டிய பின்னர் இயன் மருத்துவ சிகிச்சைக்காக பொது வைத்திய நிபுணரால் சிபார்சு செய்யப்பட்டு இயன் மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும். இயன் மருத்துவர்களினால் தொடர்ச்சியான சரியான ஆலோசனைகளும் உடற்பயிற்சிகளும் வழங்கப்படும். பல்வேறு வகையான கையாளுதல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு உரிய வேளையில் பொருத்தமான புனர்வாழ்வளித்து வழமை நிலைக்கு திரும்பும் இயன் மருத்துவ நுணுக்கங்கள் கையாளப்படும். இதன் மூலம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடர்ச்சியாக பயிற்சி வழங்கப்பட்டு குணமடைய இயன் மருத்துவர்கள் துணை புரிவார்கள். பக்கவாதம் என்பது வரும் முன் தடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். சரியான உடற் பயிற்சியும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கமும் பக்கவாதம் வராமல் தடுக்க சிறந்த எளிய வழிகளாகும். ஆகையால் இதன் தோற்றத்துக்கு காரணமாகும் காரணிகளிலிருந்து முற்காப்பு எடுத்துக்கொள்வதுடன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு திறமையான இயன் மருத்துவரின் உதவியை நாடி தொடர்ச்சியான சிகிச்சைகளை பெறுவதன் மூலம் ஒரு முன்னேற்றகரமான நிலையை அடைய முடியும். எனவே பக்கவாதம் எனும் கொடிய நோயிலிருந்து எம்மையும் எம் அயலவர்களையும் பாதுகாத்து ஒரு ஆரோக்கியமான சமுகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பக்கவாதத்தை வராமல் விரட்டியடிப்போமாக.. க.ஹரன்ராஜ் இயன் மருத்துவர் (physiotherapist ) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை https://www.manithanfacts.com/1 point- விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி
நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது. காலம் எவ்வளவு விந்தையானது.1 point- தேயும் ஈழத் தமிழ்மொழி
1 pointபேச்சுத்தமிழ்களில் எவ்வளவுதான் குளறுபடிகள் இருந்தாலும்..... நிதர்சன விடயங்களில் எழுத்து தமிழ் மாறாமல் இருந்தால் சந்தோசம்.1 point- ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
எங்கட இலங்கை இந்திய சனம் என்றால் , கைப்பையை மட்டுமல்ல விமானத்தில் பாவிக்க கொடுத்த ear phone, blankets எல்லாவற்றையும் அந்த அவசரத்திலும் தூக்கி கொண்டு இறங்கி இருக்கும்.1 point- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
60 வயது எண்டால் வயோதிபரா?1 point- தூக்கு மேடையில் சதாம் உசேன் என்ன பேசினார்? கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?
உலகின் பெரும் இனப்படுகொலையாளர்கள் கண்ணாடி மாளிகையிற் காவலர்கள் புடைசூழ மக்களது வரிப்பணத்தில் ஒய்யார வாழ்வோடு இருக்கிறார்கள்.அமெரிக்காவும் அனைத்துலகும் இவர்களை எப்போது தூக்கிலிடுவார்களாம் என்று பிபிசி அறிந்து தெளிவுபடுத்தலாமே. உலகில் இனஅழிப்பை மேற்கொண்ட, மேற்கொண்டுவருவோரென மகிந்த, கோத்தா, சவேந்திரசில்வ, நெதன்யாகு...... இப்படிப் பெரும் பட்டியல் உள்ளதே.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!
இப்படி எல்லாம் முழுதும் கோணலாக நினைக்கப்படாது. பார்கேல்லையோ….13 மைனஸ்…மைனஸ்..மைனஸ் ….அட அதுதான் இமாயலப்பேய்க்காட்டல்…. மார்ச்மாதம் 2024 க்கு பின்….வழுக்கையாற்றில் பாலும் தேனும் ஓடப்போது….. ரிக்கெட் போட ரெடியாகுங்கோ…. Raw1 என்ற டிஸ்கவுட்ன் கோர்ட்டை பாவித்தால், கனடாவில் இருந்து புக் பண்ணும் ஆக்களுக்கு 100% விலை கழிவு🤣1 point- திருப்பூர்: 'சாமி பயம் காட்டி' பட்டியலின மக்கள் செருப்பு அணிவதை தடுத்த ஆதிக்க சாதியினர்
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 29 டிசம்பர் 2023 திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில், ஆன்மிகத்தின் பெயரால் இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுவதால், பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வீதியில் செருப்பு அணியாமல் நடக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சாதி தீண்டாமை நடைபெறுவதாகப் புகார் கிடைத்ததால், கிராமத்தில் ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகத்தினர் பட்டியலின மக்களை செருப்பு அணிய வைத்தும், கோயிலுக்குள் கூட்டியும் சென்றுள்ளனர். என்ன நடக்கிறது கிராமத்தில்? திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்து அமைந்துள்ளது கொண்டவநாயக்கன்பட்டி கிராமம். அங்கு இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுகிறது, பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பொதுவான வீதியில் செருப்பு அணிந்து நடக்க முடியவில்லை, அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவிலுக்குள் நுழைய முடியவில்லை எனக் கூறி, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பட்டியலின மக்களை, ஆதிக்க சாதி வீதியில் நடக்க வைத்தும், கோவிலுக்குள் அழைத்துச் சென்றும் வழிபட வைத்துள்ளனர். இப்படியான நிலையில், டிசம்பர் 27ஆம் தேதி, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் இந்தக் கிராமத்துக்கு வந்து, தீண்டாமை பின்பற்றப்படும் கோவில் மற்றும் ஆதிக்க சாதியினரின் வீதியைப் பார்வையிட்டு, மக்களிடம் விசாரணை நடத்தினார். உண்மையில் இந்தக் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய பிபிசி தமிழ் கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது. உடுமலை நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவு பயணித்து, சுற்றிலும் தென்னை மரங்கள், சோளம் சாகுபடியென இருந்த விளைநிலங்களுக்கு மத்தியில் அமைந்திருந்த கொண்டவநாயக்கன்பட்டி என்ற ராஜவூரை அடைந்தோம். அங்கு ஆதிக்க சாதியினர் 90 குடும்பங்களும், பட்டியலின மக்கள் 60 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். ஆதிக்க சாதி மக்களின் விவசாய நிலங்களில் விவசாயத் தொழிலாளர்களாக வேலைகளுக்குச் சென்று பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து 700 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது தீண்டாமை பின்பற்றப்படும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜகாளியம்மன் கோவில். தீண்டாமை பின்பற்றப்படும் கம்பள நாயக்கர் வீதி கிராமத்தின் மையப் பகுதியில் வெறும் எட்டு அடி அகலத்தில் அமைந்திருந்தது. கோவிலையும் வீதியையும் பிபிசி தமிழ் பார்வையிட்டது. அங்குள்ள பட்டியலின மக்களிடம், ‘ஏன் நீங்கள் கோவிலுக்குள் செல்வதில்லை? கம்பள நாயக்கர் வீதியில் செருப்புடன் நடப்பதில்லை, காரணம் என்ன?’ என விசாரித்தோம். 'பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறோம்' பட்டியலின மக்களுக்காக பிபிசி தமிழிடம் பேசிய முத்துலட்சுமி, ‘எங்கள் ஊரில் நடந்த குடும்பப் பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றிவிட்டார்கள். நாங்கள் எப்போதும் போல சாதிப் பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம்,’’ என்றார். ‘ஒற்றுமை எனச் சொல்கிறீர்கள். ஆனால் ஏன் அந்த வீதியில் செருப்பு அணிவதில்லை, கோவிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைவதில்லை? யாராவது மிரட்டுகிறார்களா?' என்று கேட்டோம். அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி, ‘‘செருப்பு போட வேண்டாம், கோவிலுக்குள் வர வேண்டாம் என ஆதிக்க சாதியைச் சேர்ந்த யாரும் சொல்வதில்லை. ஆனால், எங்கள் அப்பா, தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் பரம்பரையாக செருப்பு அணியாமல்தான் கம்பள நாய்க்கர் வீதியில் நடக்கிறோம். கோவிலுக்கு வெளியில் இருந்துதான் சாமி கும்பிடுகிறோம். பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறோம். இது பாரம்பரியமாகத் தொடர்வதால் எங்களுக்கு அதை மீறுவதில் விருப்பமில்லை, இனியும் இப்படித்தான் இருப்போம்," என்றார் அவர். 'சாமிக்கு பயந்துதான் போவதில்லை' பிபிசி தமிழிடம் பேசிய காளியம்மாள், ‘‘எனக்கு 60 வயதாகிறது. எனக்குத் தெரிந்த வரையில் நாங்கள் பல ஆண்டுகளாக ராஜகாளியம்மன் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபடுகிறோம். ஆண்டுதோறும் இந்தக் கோவிலின் பண்டிகையின்போது கம்பள நாயக்கர் வீதி வழியாகத்தான் அம்மன் சிலை எடுத்து வரப்படும். இந்த வீதியில் நாங்கள் செருப்பு அணியாமல்தான் சென்று வருகிறோம். அது பல ஆண்டுகளாக இருக்கும் கட்டுப்பாடு. நாங்கள் சாமிக்குப் பயந்து அதை மீறுவதில்லை, கோவிலுக்கு உள்ளேயும் போவதில்லை,’’ என்பதுடன் முடித்துக்கொண்டார். ஆன்மிகத்தின் பெயரால் மிரட்டல்! நம்மிடம் பேசிய பெயர் தெரிவிக்க விரும்பாத பட்டியலின இளைஞர்கள் சிலர், அங்கு தீண்டாமை நிலவுவதாகக் கூறினர். ‘‘நாங்கள் இந்தத் தீண்டாமையைத் தகர்த்து கோவிலுக்குள் சென்று வழிபடவும், செருப்பு அணிந்து பொதுவான அந்த வீதியில் நடக்கவும் முயன்றாலும், எங்கள் பெற்றோரே ஆதிக்க சாதியினருக்குப் பயந்து எங்களைத் தடுக்கின்றனர். அந்த அளவுக்கு இங்குள்ள பட்டியலின மக்கள் மனதில் தீண்டாமை கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் மீறி தீண்டாமையை நாங்கள் தகர்க்க நினைத்தால், ஆதிக்க சாதியினர் பில்லி சூனியம் நடக்கும், காளியம்மாள் தண்டிப்பாள் என ஆன்மிகத்தின் பெயரிலும், தோட்ட வேலை தரமாட்டோம் எனவும் மிரட்டுவதாக,’’ அவர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். ‘பாரம்பரியத்தை அனைவரும் பின்பற்றுகின்றனர்’ ஆதிக்க சாதியினர் சார்பாக பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ண குமார், ‘‘நாங்கள் பட்டியலின மக்களிடம் செருப்பு அணிய வேண்டாம், கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என யாரும் தெரிவிப்பதில்லை. எங்கள் ஊருக்குள் காலம் காலமாகப் பழைய நடைமுறை, பாரம்பரியம் எப்படி இருக்கிறதோ அதை அனைவரும் பின்பற்றுகின்றனர். அதனால், பட்டியலின மக்கள் அவர்களாக செருப்பு அணிவதில்லை, கோவிலுக்குள் வருவதில்லை,’’ என்றார். ஆன்மிகத்தின் பெயரில் மறைமுக ஆதரவு? பிபிசி தமிழிடம் பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, ‘‘கம்பள நாயக்கர் வீதியில்தான் காளியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. கடவுளுக்குப் பயந்துதான் பட்டியலின மக்கள் வீதியில் செருப்பு அணிய மாட்டார்கள்; காளியம்மன் கோவிலுக்குள் வரமாட்டார்கள். நாங்கள் யாரும் அவர்களை கோவிலுக்குள் நுழைய வேண்டாம், செருப்பு அணிய வேண்டாம் எனக் கூறுவதில்லை,’’ என்றார். ராஜலட்சுமி நம்மிடம் பேசிக்கொண்டருந்த போதே கோபத்தில் திடீரென, ‘‘அசலூர்காரங்க சொல்லிக் கொடுத்துதான் இப்படியெல்லாம் பிரச்னை நடக்குது. இங்க அவுங்க (பட்டியலின மக்கள்) செருப்பு போட்டுட்டு வரமாட்டாங்க, அதையும் மீறி வந்தா அவுங்கள (பட்டியலின மக்கள்) காளியாத்தா பாத்துக்கும், அப்றம் அனுபவிப்பாங்க,’’ என மிரட்டும் தொனியில் பேசினார். ஆதிக்க சாதியைச் சேர்ந்த பலரிடம் பிபிசி தமிழ் பேசியதில் பெரும்பாலானவர்கள், ‘பட்டியலின மக்கள் செருப்பு அணிந்து வந்தாலோ, கோவிலுக்குள் வந்தாலோ ராஜகாளியம்மாள் தண்டிப்பார், அவர்கள் எப்போதும் ஊர் கட்டுப்பாட்டை மீற மாட்டார்கள்,’ என, ஆன்மிகத்தின் பெயரால் தீண்டாமையை மறைமுகமாக ஆதரிக்கும் மனநிலையில்தான் இருந்தனர். மாவட்ட நிர்வாகம் சொல்வது என்ன? இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், ‘‘ஒரு குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கின் போதுதான், இந்தக் கிராமத்தில் தீண்டாமை நடப்பதாகப் புகார் வந்தது. விசாரித்தபோது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது, செருப்பு அணியக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர் என்பது தெரிய வந்தது. ஆனால், அவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லை. இப்போது யாரும் கட்டுப்பாடுகள் விதிப்பதும் இல்லை. ஆனால், பல ஆண்டுகளாக தீண்டாமையைப் பின்பற்றிய பட்டியலின மக்கள் இன்னமும் அதைப் பின்பற்றுகின்றனர்,’’ என்கிறார் அவர். மேலும், ‘‘தீண்டாமை தொடர்பான புகாரைப் பெற்ற பின் டிசம்பர் 23ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாங்கள் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றும், கம்பள நாயக்கர் வீதியில் செருப்பு அணிய வைத்து நடந்து அழைத்துச் சென்றும் தீண்டாமையைத் தகர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கிராமத்தைக் கண்காணித்து வருகிறோம், தீண்டாமையை யார் கட்டவிழ்த்தாலும் நடவடிக்கை எடுப்போம்,’’ என்றார் ஜஸ்வந்த் கண்ணன். ‘மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ தீண்டாமை நடந்ததாகக் கூறப்பட்ட கோவில் மற்றும் வீதியில் ஆய்வு செய்த, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் தீண்டாமை பின்பற்றப்படுவதாக புகார் எழுந்ததால் ஆய்வு செய்துள்ளோம். நாங்கள் பார்த்த வரையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய முடிகிறது. செருப்பு அணிந்து நடக்க முடிகிறது, இதில் மற்ற சாதியினரால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பட்டியலின மக்களாக முன்வந்துதான் இதைப் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்,’’ என்றார். பேட்டியின்போது, ‘கோவில் நுழைவு, செருப்பு அணிந்து நடக்க பட்டியலின மக்கள் முயன்றால், வேலையைக் காரணம் காட்டி ஆதிக்க சாதியினர் மிரட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது’ என்ற கேள்வியை இயக்குநர் ரவிவர்மனிடம் முன்வைத்தோம். அதற்கு விளக்கமளித்த ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன், ‘‘போலீஸார், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்துதான் இந்தக் கிராமத்தில் ஆய்வு செய்துள்ளோம். அப்படி யாரேனும் மிரட்டினால், பட்டியலின மக்கள் எங்களிடம் புகாரளிக்கலாம். மிரட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார் அவர். சுதந்திரமாக உணர்ந்தேன்! அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து வீதியில் செருப்புடன் நடந்து தீண்டாமையைத் தகர்த்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர், தனது அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எனக்கு 40 வயசாகுது. இத்தனை ஆண்டுகளாக நான் கம்பள நாயக்கர் வீதியுடைய நுழைவுப் பகுதியிலேயே செருப்பை விட்டுவிட்டு வெறும் காலில்தான் அந்த வீதிக்குள் போய் வருவேன். அந்த வீதியில் ஒரு கடை இருக்கிறது. அங்கு பொருட்களை வாங்கக்கூட செருப்பைக் கழற்றிவிட்டுத்தான் செல்வேன். ராஜகாளியம்மன் கோவிலுக்குச் சென்றால் குடும்பத்துடன் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் சாமி கும்பிடுவேன். அதிகாரிகள் சமூக செயற்பாட்டாளர்கள் முயற்சியால் செருப்பு அணிந்து அந்த வீதியில் முதல் முறையாக நடந்தேன். கோவிலுக்குள் சென்று வழிபட்டபோது, சுதந்திரமாக உணர்ந்தேன். எங்கள் கிராமத்தில் எப்போதும் நாங்கள் இதேபோல் சுதந்திரமாக இருந்தால் நன்றாக இருக்கும்," என்றார் மகிழ்ச்சியுடன். https://www.bbc.com/tamil/articles/cv2m84l79jdo1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.