Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    2957
    Posts
  2. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1887
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/07/24 in all areas

  1. 2 எந்த விசாரணைகளூடும் பொலிசாரால் முன்னேற முடியாமல் இருந்தது.. ஆனால் பத்திரிகைகள் விடவில்லை. அதுவும் உள்ளூர் பத்திரிகை ஓடியோடிச் செய்திகளைச் சேகரித்து, முதன்மைச் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருந்த து . அதிலும் ஒரு நிருபர், ஆழமாக உள்ளிறங்கி, எடித் லாங்கியின் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது மரணத்தைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து பத்திரிகையில் வெளியிட ஆரம்பித்தார். எடித் லாங்கைப் போலவே ஹைடமேரி(77)யும் தனியாக வாழ்ந்து வந்த விதவைதான். வோக்கர் (Walker) இல்லாமல் அவரால் நடமாட முடியாது. அவரின் நண்பராக இருந்தவர் ஹூர்ட் (89). அவரும் தனிமையில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கதைத்துக் கொள்வார்கள். ஹைடமேரி இருந்த குடியிருப்பின் வாசல் கதவின் பூட்டு இரண்டு வாரங்களாகப் பழுதாகி இருந்தது. அதைத் திருத்துவதற்கு, அடுத்தநாளான வியாழக்கிழமையே வேலையாள் வருவதற்கு குடியிருப்பின் மேற்பார்வையாளர் ஏற்பாடு செய்திருந்தார். வாசல் கதவு எப்பொழுதும் சாத்தப்பட்டிருப்பதால் வெளியாட்கள் யாருக்கும் கதவின் பூட்டு உடைந்திருப்பது தெரிய வாய்ப்பில்லை. அப்படி யாரேனும் உள்ளே வந்தால் கூட, அவரவர்கள் தங்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டே உள்ளே இருந்தால் ஆபத்துக்கள் இல்லை. ஹைடமேரியின் மூப்பு மற்றும் தனிமை காரணமாக அவரது வைத்தியரிடம் இருந்து, ஒரு சாதனம் அவருக்கு கிடைத்திருந்தது. அவருக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதில் உள்ள பட்டனை அழுத்தினால், உடனடியாக அவசர மருத்துவர் தொடர்பு கொள்வார். அவரது மகள்மாரும் ஒவ்வொரு நாளும் வந்து அவரைப் பார்த்து அவருக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள். அன்று புதன் கிழமை, ஹைடமேரியை அன்றைய மாலையில் சந்திப்பதாக ஹூர்ட் சொல்லி இருந்தார். நண்பர் வருவார், அவருடன் மாலையில் கோப்பி அருந்தலாம், நிறையப் பேசலாம் என்று கணக்குப் போட்ட ஹைடமேரி, அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள Nah&Gut கடைக்கு மதியம் சென்று, இரண்டு துண்டு கேக்குகளும்,ஒரு பத்திரிகையும், கிறிஸ்மஸ் தாத்தா வடிவில் உள்ள சொக்கிலேற் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வந்தார். ஆனால், ஹைடமேரி வாங்கிய இரண்டு கேக் துண்டுகளை அன்று யாருமே சாப்பிடவில்லை. சமையலறை மேஜையில் கேக்குகள் மட்டுமல்ல, கோப்பி போடுவதற்குத் தயாராக கோப்பி பாட் (Coffee pad) போடப்பட்டிருந்த மெசினும் இருந்தது. அவரது நண்பரான ஹூர்ட் உடன் சந்திப்பு அன்று மட்டுமல்ல என்றும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது. ஹூர்ட் மாலையில் வீட்டுக்கு வரும் பொழுது, ஹைடமேரியின் வீட்டில் விளக்குகள் எரிவதைப் பார்த்திருக்கிறார். அதுவும் ஹைடமேரியின் குளியலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததாலும், கிறிஸ்மஸ் காலம் என்பதாலும் யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கலாம் என்ற நினைத்து, அவர் தன் வீட்டுக்குப் போய்விட்டார். ஹூர்ட், தனது வயது மூப்புக் காரணமாக அதிகளவு வெளியே போவதில்லை. ஹைடமேரியுடன்தான் அவர் பழக்கங்களை வைத்திருந்தார். வியாழக்கிழமையும் ஹைடமேரியிடம் இருந்து அவருக்கு அழைப்பு வரவில்லை. கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நெருங்குவதால் எல்லோரிடமும் ஒரு பரபரப்பு இருக்கும். அதனால் இந்தக் காலகட்டத்தில் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஹூர்ட்டும் அந்த நினைப்பில் பேசாமல் இருந்து விட்டார். வெள்ளிக்கிழமை காலையில் அன்றைய தினசரியைப் பார்த்த ஹூர்ட்டுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரை அதிர்ச்சியாக்கிய செய்தி, புதன்கிழமை மாலை ஹைடமேரி கொலை செய்யப்பட்ட செய்திதான். ‘பேஸ்போல் துடுப்பு அல்லது அதுபோன்ற ஒரு பொருளால் 20 தடவைகள் வரை தலையில் தாக்கப்பட்டு ஹைடமேரி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் வீட்டில் இருந்து 1500 யூரோக்கள்வரை களவாடப்பட்டிருக்கின்றது’
  2. அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அதிகமான வருடங்கள். சரி விடயத்துக்கு வருகிறேன். சனிக்கிழமைகளில் வரும் பத்திரிகையில்தான் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன. வீடு விற்பனைகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்று ஏகப்பட்டவை அடங்கி சனிக்கிழமைப் பத்திரிகை ஊதிப் பெருத்துப் போய் இருக்கும். 17.12.2022 அன்று வந்த பத்திரிகையிலும், வழமைபோலவே எல்லா விடயங்களும் இருந்தன. அதில், மரண அறிவித்தல்கள் பகுதியில் எடித் லாங் (86), 14.12.2022, புதன்கிழமை காலமாகிவிட்டதாகவும் அவரது உடல் 19.12.2022 அன்று தகனம் செய்ய இருப்பதாகவும் தகவல் இருந்தது. என்னைப் போலவே, எடித் லாங்கினைத் தெரியாதவர்கள் அந்த அறிவித்தலைக் கடந்து போயிருப்பார்கள். ஆனால் எடித் லாங்கின் மரணம் ஒரு கிழமை கழித்து செய்தி ஒன்றைச் சொல்லக் காத்திருந்தது. எடித் லாங்கின் வீட்டில் இருந்து 315 மீற்றர் தூரத்தில் வசித்த இன்னும் ஒரு மூதாட்டி, எடித் லாங்கின் இறப்புக்குப் பின் ஒரு கிழமை கழித்து 21.12.2022,புதன் கிழமை அன்று இறந்து போனார். ஒரு கிழமை இடைவெளியில் அதுவும் சொல்லி வைத்தது போல் புதன்கிழமையில் அருகருகே வசித்த இரு மூதாட்டிகளுக்கு மரணம் சம்பவித்திருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரணைகளின் பின்னர், எடித் லாங்கின் மரணம், அவர் தரையில் தவறி விழுந்ததால் ஏற்பட்டது என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மற்றைய மரணம் ஒரு கொலை என்று அறிவிக்கப்பட்டது. நகரில் சந்தைக்கு வந்தவர்கள், வீதிகளில் சந்தித்துக் கொண்டவர்கள் என எல்லோர் வாய்களும் இந்த மரணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டன. “ஒருவேளை எடித் லாங்கின் மரணமும் கொலையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் மெதுவாக எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது. அமைதியாயிருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம் மெது மெதுவாக அதை இழந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான், நகரத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மிஹேல்பாக் என்ற கிராமத்தில் 89 வயதான இன்னுமொரு மூதாட்டி, இறந்து போனார். 'அவரது இறப்பும் கொலைதான்' என விசாரணைகளை முடித்த பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார். யேர்மனியின் ஒரு ஓரமாக அமைதியாக இருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம், அரச, தனியார் வானொலிகளில்,தொலைக்காட்சிகளில். இணையத் தளங்களில், சமூக வலைத்தளங்களில்... என்று எல்லாவற்றிலும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கொலைச் செய்திகளை வாங்கி, வெளி நாடுகளிலும் தங்கள் தங்கள் மொழிகளில் ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் புதன் வந்தாலே நடுக்கம் வர ஆரம்பித்திருந்தது. வயோதிபம் வந்தாலே நடுக்கம் தானாக வந்து விடும். புதன் வந்தாலே ஸ்வேபிஸ் ஹாலில் முதியவர்கள் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில் இன்னொரு கொலையும் எல்லோர் கவனத்துக்கும் வந்தது. ஏற்கெனவே திகிலாகப் பேசப்பட்ட அந்தக் கொலை 2020 இல் நடந்தது. எல்பிரிடே கூகெர் என்பவர் ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் தனிமையில் வசித்து வந்தவர். அவர் பியர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரி. பெரும் செல்வந்தரான அவர் கொலை செய்யப்பட்டிருந்ததும் ஒரு புதன் கிழமைதான். ‘புதன் கிழமைகள் கொலையாளிக்குப் பிடித்த நாள் போல’ என்று பத்திரிகையும் ஒரு குண்டைத் தூக்கிப் போட எழுபதுக்கு மேலே உள்ளவர்கள், அடுத்த புதன் “ நீயா?, நானா? எதுக்கும் வியாழக்கிழமை இருந்தால் பார்ப்போம்” எனப் பேச ஆரம்பித்தார்கள். “கொரோனா வந்து கனக்க வயது வந்தவர்களை அள்ளிக் கொண்டு போயிட்டுது. இப்ப கொலையாளி ஒருத்தன் வந்திருக்கிறான். பொலிஸ் என்னதான் செய்து கொண்டிருக்கு?” என மக்களிடம் இருந்து முணு முணுப்பு வர ஆரம்பித்தது. “தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்..
  3. வாவ்......வாட் எ ஸ்டைல் ஹெயர் ஐ லவ் யூ டியர்.......! 😂
  4. யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார் சோக்கான கதை எல்லாம் சொன்னாராம் சேர்ந்து பல பேருடன் நின்று செல்பியும் எடுத்தாராம் நல்லவன் போல நடிப்பார் நாம் நினைப்பது போல அவர் இருக்கார் அது தருவன் இது தருவன் என்றாராம் அவர் அருகோட நின்று தலை ஆட்டிப் பொம்மைகள் தாளங்கள் போட்டாராம் அவர் சொன்னதை செய்வார் என்றும் சொன்னாராம் போன சுதந்திரத்துக்கு முன் ஏதோ தருவன் என்றாராம் இந்த சுதந்திரத்தோட என்னதான் தருவாராம் எல்லாமே மறந்தாராம் எதுகுமே பேசாராம் நம்புங்கள் ரணிலை நல்லது நடக்கும் என்றாராம் சேர்ந்து தாளம் போடும் சில சில்லறை மனிதர் தந்திரக்கார ரணிலார் தான் ஒரு சமாதான காரன் போல் காட்டியும் நடிப்பார் புலம் பெயர் தமிழரை கூப்பிடப் பார்ப்பார் குள்ள நரி போல கள்ளத் தனமாக காரியம் முடிப்பார் அபிவிருத்தி என்றெல்லாம் பேசி அரசியல் தீர்வை மறக்கவும் செய்வார் அறிவோட தமிழ் இனம் இப்போ ஆழமாய் சிந்திக்க வேண்டும் பேரினவாதத்தில் என்றும் இப்போ பெரிதாய் மாற்றங்கள் வராது இந்தியா சொன்ன 13 ம் தீர்வுக்கும் எந்தப் பதிலும் இதுவரை இல்லை இதக் கூட தராத ரணிலார் பின்ன எதக் கூடத் தருவார் வடக்கு கிழக்கு என்று இனி வலம் வருவார் தேர்தல் வருகிறது திரும்பவும் வருவார் தீர்வு வரும் ஆனால் வராது என்றனர் மக்கள். பா.உதயன்✍️
  5. ம்.......வெளியே போனால் போயிடும் சுவாசம் என்று இன்று வீட்டினுள் வாசம்......! 😁
  6. அது வந்து ராஜபக்சேக்களின் காலத்தில் இறக்குமதி செய்யப்படட கார்கள் என்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் போய் விடடதாம். ரணில் சிறிசேன ஆட்சி குளறுபடியால் ஒன்றும் செய்யவில்லை. பின்னர் கோத்தாவின் ஆட்சி. அதன் பின்னர் நாடு வங்குரோத்து. இப்படியாக போய் வேறு வழி இல்லாமல் எப்படி பணம் பார்க்கலாம் எண்டு கடந்த வருடம்தான் தேடுதல் வேடடைகள் தொடங்கி இப்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் எழுதப்படாத சடடமாக, அவர் கொள்ளையடித்தல் இவர் பாதுகாப்பார் , இவர் கொள்ளையடித்தல் அவர் பாதுகாப்பார். எனவே இங்கு கொள்ளையடிப்பது என்பது அரசியல்வாதிகளுக்கு சர்வ சாதாரணம். இனி கொஞ்சம் சிரமமான விடயம்தான்.
  7. பொதுவாக ஜேவிபி நடத்தும் கூட்ட்ங்களில் பெருமளவான மக்கள் கூடடத்தை காணலாம் . கடந்த காலங்களில் நிறையவே அப்படி நடந்து இருந்தது. அனாலும் கடந்த தேர்தலில் கூட அவர்களால் அதனை வாக்குகளாக மாற்றிக்கொள்ள முடியவில்லை. இருந்த பாராளுமன்ற எண்ணிக்கையும் குறைந்ததே ஒழிய கூடவில்லை. அவர்களுக்கு 3 % வாக்குகள்தான் கிடைத்தது. எனவே இப்போது அவர்கள் ஒரேயடியாக 50 % இட்கு மேல் வாக்கு பெறுவார்கள் என்ற கருது கணிப்பு சரியாக இருக்க முடியாது. அவர்களது கடந்த கால நடவடிக்கைகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ராணுவ குடும்பங்கள், அவர்களால் பாதிக்கப்படட மக்கள் என நிறைய எதிர் வோட்டுக்களாக காணப்படுகின்றன. நிச்சயமாக இம்முறை அவர்கள் கூடுதல் வாக்குகள் பெறுவார்கள் என்பது உண்மை. ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லை என்பதை நிச்சயமாக கூறலாம். ராஜபக்சேக்களால் இனி முடியாது என்பதை அறிந்து கொண்ட சீன இவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதட்கு பெருமளவு பணத்தை செலவு செய்கின்றது.
  8. தேர்தல் நெருங்கும்போது அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் நிச்சயமாக அரசாங்கம் வீரசேகராவை அங்கு அனுப்பவில்லை என்று கூறலாம். அவரை அனுப்பி இருக்கிற வாக்கு வங்கியையும் ரணில் அரசு இழக்க விரும்பாது
  9. ஒரு குட்டிக்கதை : கருடன் பறந்து வந்து ஒரு மரத்தில் இருந்தது..... சற்று தூரத்தில் எமன் கயிற்றுடன் யோசித்துக் கொண்டு நிற்பதைக் கண்டது..... கீழே மரப்பொந்தில் ஒரு குருவி பயத்துடன் அமர்ந்திருந்தது..... கருடனுக்கு குருவியின் கதை முடியப்போகுது என்று தெரிந்தது..... உடனே அதைத் தூக்கிக் கொண்டு பறந்தது....... அடுத்தமலையில் உள்ள ஒரு பொந்துல விட்டது.... அதில் இருந்த பாம்பு லபக்கென்று குருவியைப் பிடித்து விழுங்கியது..... கருடன் கவலையுடன் அங்கிருக்க அங்கு எமன் வந்தார்.....சிரித்தார்..... என்ன யோசிக்கிறாய் கருடா என்றார் ....... குருவியை உன்னிடமிருந்து காப்பாற்ற நினைத்தேன் முடியவில்லை ...... சரி நீ ஏன் அப்போது யோசித்துக் கொண்டு நின்றாய்...... அதுவா.....இந்தக் குருவியின் மரணம் அடுத்த மலையில் உள்ள பாம்புக்கு இரையாக வேண்டும்..... அது எப்படி நிகழும் என்று யோசித்தேன்..... நல்ல காலம் நீ வந்து அதை முடித்து வைத்தாய்......! அங்கு இங்கு ஓடுவதைவிட வீட்டிலேயே அவள் கையாள சாப்பிட்டுட்டு இருக்கிறேன்.....! உங்கள் அன்புக்கு நான் அடிமை கந்தையர் ......! 🙏
  10. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு! தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை – தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் நேற்று அதனை திறந்து வைத்துள்ளனர். சுமார் 3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் எட்டயபுரம் – குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. 2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இநட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும் சிவகாசி – ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368732
  11. Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
  12. கனடாகாரர்களுக்கு நேரம் சரியில்லை போல...
  13. அடுத்து வரும் சில தேர்தல்களில், சனாதிபதி ஒரு கட்சியாகவும், பிரதமர் இன்னொரு கட்சியுமாகவே தெரிந்தெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அங்கு உள்ளது. எவருக்கும் இறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என நினைக்கின்றேன். பாராளுமன்ற தேர்தல் நடந்தால், சஜித் இன் கட்சி அதிக இடங்களில் வெல்லும், ஆனால் பெரும்பான்மை கிடைக்காது. சனாதிபதித் தேர்தலில் ஜேவிபி வெல்லும்.
  14. சிங்கள மக்கள் பாணுக்கும் பருப்புக்குமாக போராடினார்கள். இப்போது விலை கூடினாலும் ஓரளவு கிடைக்கிறது. இந்த நிலைக்கு ரணில் காரணமல்ல. எல்லாவற்றையும் விட போராட்டத்தை தூண்டிவிட்டு கோத்தபையாவை நாட்டைவிட்டு போக வைத்தவர்களே மேற்கத்தையர். கோத்தபையாவைக் காப்பாற்ற வேண்டிய ராணுவம் கையைக் கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்த்தது என்பது மிகவும் வேதனையான சம்பவம். வரும் தேர்தலில் மகிந்தா கம்பனி முஸ்லீம் கம்பனி தமிழ்க கம்பனி என்று ரணில் வெல்வதற்கு தேவையானதை மேற்கு செய்து கொண்டிருக்கிறது. சயித்தை பலவீனப்படுத்த மேற்கு ஆரம்பித்து விட்டது. ஆடுகளம் இனிமேல்த் தான் சூடு பிடிக்கும்.
  15. இவர் சொன்னதும் ஐனதிபதி ஆகி விட முடியுமா?? அதுவும் ரணில் முடியாதே !!மக்கள் சிங்கள மக்கள் அவரை பாராளுமன்ற உறுப்பினராக கூட தெரிவு செய்யவில்லை ஐனதிபதியாக தெரிவு செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?? போர் பெற்று தந்த கடன் பஞ்சம் விலையேற்றம் பொருள்கள் தட்டுப்பாடு .......இதனால் இலங்கையில் மக்கள் போராட்டம் மூலம் பதவி காலம் இருக்கும் போது ஒரு ஐனதிபதி போராடி கலைக்கப்பட்டார் அந்த வெற்றிடத்தை அனுபவிக்கிறார் இப்போது போட்டியில் உள்ள எவரும் சிறந்த வேட்பாளர்கள் இல்லை நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கும் துணிவு திறமை அற்றவர்கள் யார் ஐனதிபதி ஆனாலும் தமிழர்கள் பிரச்சனை தீரப்போவதில்லை இது அயல்நாட்டுக்கு நடக்கும் தேர்தல் 🤣😂
  16. இரவில் அதிக நேரம் தூக்கமில்லாது இருப்பதும் இவற்றுக்கு ஒரு காரணம்..நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்..மேலதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்திய குழந்தை நல வைத்தியர்கள் அருண்குமார் மற்றும் சிவபிரகாஸ் போன்றவர்களும் இவ்வாறன விளங்களை யூருப்பில் கொடுத்திருக்கிறார்கள் போய் பார்க்கலாம். இரவு ஏழு, எட்டு மணிக்கு மேல் எதுவும் குடிக்காமல் நித்திரைக்கு போக முயற்சியுங்கள் அய்யா.✍️
  17. சென்ற மாதம் ரணில் யாழ் வந்த போது முதல் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்று முரண்டு பண்ணினார். இப்போது மூடிய அறைக்குள் பேசிவிட்டு ரணில் தான் திறம் என்கிறார். ம் என்ன மாஜாஜாலம் நடந்ததோ?
  18. Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 01:56 PM இவ் வருடத்திற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள் விருதினை பிரித்தானியாவைச் சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞர் நிமா சரிகானி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) வழங்குகிறது. நிமா சரிகானி ஒரு அமைதியான சூழலில் இளம் துருவ கரடி பனிப்பாறையில் உறங்கும் காட்சியை புகைப்படம் எடுத்துள்ளார். இதற்கு "ஐஸ் பெட்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சுற்றுச்சூழலின் அழகு, பாதிப்பு மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. “வியப்பூட்டி மனதை உருக்கிய புகைப்படம் நமது பூமியின் அழகையும் பலவீனத்தையும் பார்க்க அனுமதிக்கிறது நிமா சரிகானியின் சிந்தனையைத் தூண்டிய குறித்த புகைப்படம் ஒரு விலங்குக்கும் அதன் வாழ்விடத்திற்கும் இடையிலான ஒருங்கிணைந்த பிணைப்பு, காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதல் மற்றும் வாழ்விட இழப்பின் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களின் காட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் கலாநிதி டக்ளஸ் குர் தெரிவித்துள்ளார். நிமா சரிகானி நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில் அடர்ந்த மூடுபனி வழியாக துருவ கரடிகளைத் தேடி மூன்று நாட்கள் மேற்கொண்ட பயணத்தை தொடர்ந்து இந்த புகைப்படத்தை பிடித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு புகைப்பட கலைஞர்களின் 25 புகைப்படங்கள் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது. அதில் நிமா சரிகானி புகைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், போட்டியில் பங்கேற்ற மற்றைய நான்கு சிறந்த இறுதிப் போட்டியாளர்கள் மிகவும் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175782
  19. உண்மை, நீங்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தையும் கடந்து போயிருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த இடத்தைத் சுற்றியுள்ள தேக்கு மரங்களைப் பார்த்த பொழுது எனக்குள் ஏற்பட்ட உணர்வு ஒவ்வொரு மரமும் ஒரு மாவீரரது உயிர் என்றே கோப்பாயிலிருந்து உரும்பிராய் மருதனாமடம் ஊடாக பயணிக்கும் போது சாலையின் இருபக்கங்களிலும் தேக்கமரங்கள் வரிசையாக காணப்பட்டன. அதைப்பற்றி கேட்ட போது எல்லாமே பெரிசுகளால் நடப்பட்டவை என்று மச்சான் சொன்னார். அவருக்கு பெயரைச் சொல்லி கதைக்க கூட பயமாக இருந்தது.
  20. நான் படம் பார்க்கிறேனோ இல்லையோ தெரியாது ஆனால் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் என்னைக் கவர்ந்துள்ளன. “காலு மேல காலு போடு இராவணன் குலமே” மற்றும் “ரயிலின் ஒலிகள்” இரு பாடல்களும் கேட்க நன்றாக உள்ளன.
  21. உண்மை, நீங்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தையும் கடந்து போயிருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த இடத்தைத் சுற்றியுள்ள தேக்கு மரங்களைப் பார்த்த பொழுது எனக்குள் ஏற்பட்ட உணர்வு ஒவ்வொரு மரமும் ஒரு மாவீரரது உயிர் என்றே.. எனக்கும் உங்களைப் போல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது, நீங்கள் போன இடங்களுடன் மணலாறு, தென்னமாவரடி வழியாக திருகோணமலைக்குப் போயிருந்தேன், இந்த இடங்களை எல்லாம் பார்த்த பொழுது, காற்றை சுவாசித்த பொழுது ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளால் என்னால் விபரிக்கமுடியாது.. அந்த இடங்களில் மனம் பலரைத் தேடியது.. இல்லை என அறிவுக்குத் தெரியும் ஆனாலும் இப்படி நடந்திருக்குமோ அப்படி இருந்திருப்பார்களோ என்ற எண்ணங்கள் ஏற்பட்டதை தடுக்க முடியவில்லை. நீங்கள் உங்களது உணர்வு கலந்து எழுதிய உங்களது பயண அனுபவம், எனது கடந்த அனுபவத்தை மீண்டும் நினைக்கவைத்துள்ளது. உங்களது பயண அனுபவத்தையும், நீங்கள் சென்றிருந்த இடங்களில் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களையும் தொடர்பையும் பகிர்ந்தமைக்கு நன்றி.
  22. யூரோவலயம் வந்த பிறகு எல்லைகள் திறந்து விட்டார்கள் கிழக்கு ஐரோப்பியர்கள் எந்தவொரு தடையுமின்றி வந்து போகலாம் அதன் பின் இப்படியான குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் அவர்கள் செய்திருந்தால் பிடிப்பது கொஞ்சம் கடினம் இது எனது கருத்துகள் ஆனால் கவியர் அழகுகாகவும். விபரமாகவும் எழுதுகிறார் எழுதுவார் வாழ்த்துக்கள் தொடரவும் 🙏
  23. கவிதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணை ஆனால் இப்படி ஒரு மாமி. தவம் இருந்து தேடினாலும். கிடையாது
  24. அப்படியே யாழ் ஆஸ்பத்திரிக்கும் செய்தால் என்ன, இந்த கொளுத்துற வெயிலை பயன்படுத்த வேண்டும்
  25. இவர்களைத் தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சீனா அல்ல,....... AUS ஆச்சரியமாய் இருக்கலாம், ஆனாலும் அதுதான் உண்மை. @Cruso சித்தாந்த ரீதியாக அ அவர்கள் சோசலிசம் , பொதுவுடமைக் கொள்கையில் இருந்து விலகி பலநாளாகிவிட்டது. ..😀 சீனா ஒருபோதும் சிங்களத்துடன் சண்டையிடவில்லை, அவர்கள் மீது படையெடுக்கவில்லை, ஆதலால் அவர்களுக்கு சீனாவும், அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் ஒன்றுதான். எதிரி இந்தியா மட்டும்தான். இந்தியாவின் போடுதடியாக ஈழத்தமிழர் இருப்பதால் எங்கள் மீது சிங்களத்திற்கு எப்போதும் ஒரு பயம். இந்தியா அவர்களின் காலில் விழுவதற்குக் காரணம் அவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பதுதான். ஆனாலும் இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் JVP ஒருபோதும் பதவிக்கு வரப்போவதில்லை. நாம்தான்(அரசியல் தலைகள்) இந்தியாவின் சீலையில் தொங்கிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவிற்கு ஈழத்தமிழர் ஒரு பொருட்டே அல்ல. அவர்களுக்கு இலங்கையில் தனது பாதுகாப்புக்கு குந்தகமான எதுவும் நிலைகொள்ளக் கூடாது என்பது மட்டுமே குறிக்கோள். அதற்காக நாம் அவர்களுக்கு ஒரு போடுதடி அவ்வளவே. இந்திராகாந்தி இறந்துபோன விடயம் இன்னும் எமதாட்களுக்குட்த் தெரியவில்லை என்பது கவலையளிக்கும் விடயம்.
  26. இவர்கள் சீனாவை ஒரு நாளும் எதிர்த்தது இல்லை. இந்தியாவைதான் எதிர்த்தார்கள். கடந்த வரம் கூட ஜேவிபி ராமலிங்கம் சந்திரசேகர் கிளிநொச்சியில் சீன வழங்கிய உதவிய உணவு பொருட்களை வழங்கும் போது சீன அரசியல் கட்சியுடன் தங்களுக்கு சிறந்த உறவு இருப்பதாக கூறினார். சில வேளைகளில் இந்தியர்கள் அப்படி கூறி ஆறுதல் பட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு பண பலமாக இருப்பது சீன என்பது ஊர் அறிந்த உண்மை
  27. இந்தியா; உங்கள் Demands என்ன அனுர, சோல்லு ..சொல்லு,..சொல்லு. நீதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, ..... அனுர; ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,....... No North and East இணைப்பு , No 13th Amendment, No மாகாண சபை இந்தியா; Yes yes,... yes. Okay, Bye Bye 🥶
  28. எனக்காக நீயே ராஜா ........! 😍
  29. ஐயா இந்தக் கதையை நாளைன்டைக்கு வியாழக்கிழமை எழுதக்கூடாதா........நாளைக்கு புதன் நான்வேற நடுங்கிக் கொண்டிருக்கிறன்.......சாரி....சரி மிகுதியையும் எழுதுங்கள்......! 😂
  30. இன்றுதான் வாசித்தன் ரகுநாதன் உங்கள் ஆதங்கம் நினைவுகள் அனைத்தும் அருமை அடிக்கடி வாருங்கள் இலங்கைக்கு
  31. சார்வாள் ஈழம் அழிந்ததற்கு எவருமே காரணமில்லாமல் இருக்கலாம். ஆனால் யார் யார் ஈழத்தமிழருக்கு ஆதரவில்லாதவர்கள் என்பதை சொல்லிக்கொண்டேயிருக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு உண்டல்லவா. அவர்களது வாயில் ஈழம் வந்தால் எங்களது வாயில் அவர்களது வண்டவாளங்கள் வரும் அதை தவிர்க்க முடியாது அண்ணன் திருமா 2 சீட்டு மட்டன் குருமாவாகி பலகாலம், மணிப்பூருக்கு பாய்ந்து பாய்ந்து தவிலடிக்கும் சமூகநீதி போராளி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகனாலும் மருமகளாலும் சொல்லெண்ணா கொடுமைகளை அனுபவித்த பட்டியல் இனப்பெண் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை. வழமை போல அந்தப்பெண் கூறிய அத்தனைக்குற்றச்சாட்டையும் போலியானவை என்று தி.மு.க கைவரிசையை காட்டி அப்படியே அமுக்கிவிட்டது
  32. சீன இங்கு வந்தால்தான் இந்திய பிரச்சினைபடுத்தும். அமெரிக்கா பிரச்சினையாக இருந்தாலும் இந்திய அந்தளவுக்கு கவலை படாது. அமெரிக்கா இப்போது தனது இலங்கை தூதரக எல்லையை மிக பெரிய அளவில் விஸ்தரித்துள்ளது. இந்த பாதுகாப்பு கருவிகளை வழங்குவதன் மூலம் எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயட்சிக்கிறது. எப்படியோ முய்ஸ்சுவின் ஆட்சிவர முன்னர் எல்லா ஒப்பந்தங்களையும் முடித்துவிட இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக செயட்பட்டு கொண்டு வருகின்றது.
  33. இந்தியா இப்போது குழம்பி போய் இருக்கிறது. அதாவது அரசியலில் உள்ள யாரையுமே விட்டு வைக்காமல் எல்லோரையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இன்னுமொரு முயிஸு உருவாகிவிடா கூடாதென்ற எண்ணத்தில் இந்திய அரசு செயல்படுகின்றது. உண்மையாகவே முயிஸுவை உருவாக்கியது இந்தியாதான். அவர் ஒரு தீவிர இஸ்லாமிய பற்றுள்ளவர். இந்தியாவில் சங்கிகளால் அங்குள்ள முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயத்தை பார்த்து தீவிர இந்திய எதிர்ப்பாளராக மாறினார். சீனா அதனை நன்றாக பயன்படுத்தி கொண்டது. இப்போது சீன ஜேவிபி இனருக்கு பண உதவி செய்வதுடன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதையும் இப்போதுதான் இந்திய அறிந்ததோ தெரியவில்லை. கடந்த வாரம் கூட சீனா வழங்கிய உதவி பொருட்களை கிளிநொச்சி மக்களுக்கு JVP வழங்கி வைத்தது. இப்போதைக்கு ஜேவிபி இந்தியாவுடன் அனுசரித்து செல்லவே முயட்சிக்கும். ஆட்சிக்கு வந்தால் எல்லாமே இன்னுமொரு மாலைத்தீவாக மாற சந்தர்ப்பம் உருவாக்கலாம் . அந்த நாள் தொடக்கம் இந்திய எதிர்ப்பு கொளகையை உடையவர்கள் ஜேவிபி இணர். இப்போது அரசியல் காரணங்களுக்காக இந்தியா சென்றிருப்பதை இந்தியா தவறாக புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
  34. அறிந்தேன். தமிழ் தொழிலாளர்கள், தமிழ் பாட்டாளிகளையும் சேர்த்து புறந்தள்ளிய கம்யூனிஸ்ட்டுகள்.
  35. தக்காளியின் விதைகளை நீக்கி விட்டு சாப்பிடலாம். விதைகளில் தான் ஒக்சலேற் இருக்கிறது. சின்ன வெங்காயத்திலும் ஒக்சலேற் இருக்கிறது (ஆனால், அதை நிறையச் சாப்பிடச் சொல்கிறது பதிவு), "முந்தானை முடிச்சு புகழ்" 😎முருங்கைக் காயிலும் ஒக்சலேற் இருக்கிறது. ஆனால், கல் உருவாக வெறுமனே ஒக்சலேற் அதிகரிப்பது மட்டும் போதாது, சிறு நீரில் கல்சியமும் அதிகரிக்க வேண்டும் - அப்படி அதிகரிக்காமல் தவிர்க்க மேலே இணையவன் சொன்ன வழிகள் தான் நிரூபணமான வழிகள்!
  36. சிங்களம் இன்னும் தன்னை எவ்வாறு பாதுக்காக்கின்றது என்பது இதில் இருந்தே புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஜே.வி.பி இன்றைய உலக ஒழுக்கையும், முக்கியமாக தென்னாசியாவில் இந்தியாவின் பங்கையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கின்றது. நாளைக்கு சீனா அழைத்தாலும், மாலைதீவு அழைத்தாலும் அது அங்கும் செல்லும். அரசியல் நிரந்தர பகைவர்கள் என்றும் நிரந்தர நண்பர்கள் என்றும் எதுவும் இல்லை. எமக்கு இந்த அடிப்படை கூட புரியாது இருக்கும் எல்லாவற்றையும் இழந்து கொண்டு இருக்கின்றோம்.
  37. முதலாவது சுய ஆக்கத்தைப் கவிதையாகப் பதிவிட்ட சுவி அண்ணாவுக்கு வாழ்த்துகள்.
  38. ஏதாவது பல்கலைக்கழகங்கள் டக்ளசுக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்கலாம். 😂 பத்தோடை பதினொன்றாய்.... அவரும் டாக்டராக இருந்திட்டு போகட்டுமன். உங்களை அவரிட்ட வைத்தியம் பார்க்க போகச் சொன்ன மாதிரி ஏன் ரென்சன் ஆகுறீங்க. 🤣
  39. ஓரிரு முறை இப்படி எழுத்து பிழை விட்டு எழுதினால் அதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தையே உண்மை என்று நம்பி அதைத் தொடருவதுடன் அடுத்த தலைமுறைக்கும் அதையே கிளிப்பிள்ளை மாதிரி கூறப்பழக்கும் வகையிலேயே தமிழ் மக்களின் அரசியல் பொது அறிவு தமிழர் அரசியலில் தமிழ் அரசியலைப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் எல்லாத் தலைமைகளாலும் கட்டி வளர்க்கப்படுகிறது.
  40. முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் நான் கண்ட இன்னொரு முக்கியமான இடம் புலிகளால் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த தேக்கங்காடு. காட்டுவளத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கென்றும் புலிகளால் தாயகத்தின் சிலவிடங்களில் இவ்வாறான காட்டு வளர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இச்சாலையூடாகப் பயணிக்கும்போது இதனழகைத் தரிசிக்க முடியும். ஆனால், இன்று இத்தேக்கங்காடுகளை வெட்டி விற்பதற்கு தெற்கிலிருந்துந்து வரும் வியாபாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருப்பதாக சாரதி கூறினார். அதன்படி இக்காட்டின் ஒருபகுதி தற்போது வெட்டப்பட்டு வருகிறது. இதன் முழு நீளத்திற்கும் வீடியோப் பதிவொன்றினைச் செய்திருந்தேன். இக்காட்டின் மத்தியில், பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவப்போது இவ்வீதியால் பயணிப்போரை மறித்து விசாரிப்பதும் நடக்கும். எனது ஒளிநாடாவிலிருந்து எடுக்கப்பட்ட படம் கீழே. பரந்தன் முல்லைத்தீவு பாதையிலிருந்து கண்டல் வழியாகக் கடற்கரை நோக்கிச் செல்லும்போது இறுதி யுத்தத்தின் இனக்கொலை நாட்களின் அவலங்களைத் தன்னகத்தே அமிழ்த்தி வைத்திருக்கும் சிலவிடங்கள் வருகின்றன. அவற்றுள் முக்கியமானது புதுமாத்தளன் பகுதி. துரதிஸ்ட்டவசமாக அப்பகுதியில் இடம் பார்க்கும் அவதியில் படமெடுக்கமுடியாது போய்விட்டது. ஆனால் அம்பலவன் பொக்கனைப் பகுதியில் நின்று, நிதானித்து சில படங்களையும், ஒளிப்படங்களையும் பதிவுசெய்துகொண்டோம். அவற்றுள் சில கீழே. அம்பலவன் பொக்கனைப் பகுதியில் கடற்கரையினை அண்மித்ததாக சிறிய பற்றைகள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அகோர பல்குழல்த் தாக்குதலிலும், விமானக் குண்டுவீச்சிலும் கொல்லப்பட்ட பலரை இவ்வாறான பற்றைக்காடுகளுக்குள் மக்கள் கைகளால் மணலைத் தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு இப்பகுதியில் வைத்தே அறுவைச் சிகிச்சை மயக்கமருந்தின்றி நடைபெற்றிருக்கிறது. இப்பகுதியில்த் தோண்டிப் பார்த்தால் கொல்லப்பட்ட மக்களின் எச்சங்கள் இன்னும் இருக்கும் என்று மைத்துனர் கூறினார்.
  41. மாவீரர் நாள் வளைவு கிளிநொச்சி மாவீரர் நாள் நினைவு இடம் அக்கராயன் மாவீரர் கொட்டகை கிளிநொச்சி உயர்ந்த மரம், அக்கராயன் ஜெயரட்ணத்தின் விருந்தினர் வீட்டின் வாய்க்காலின் மேலான சீமேந்துக் கட்டு
  42. படம் 1,2 & 3 : அக்கராயன் சாலையும் ஓரத்தில் சோலையும் படம் 4 : அக்கராயம் கமம் படம் 5 : அக்கராயன் தென்னந்தோட்டம்
  43. தாங்க முடிலைடா சாமி. ரொம்ப சிரிப்பூட்டுறீங்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.