Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. ஆம் 😂 ஆனால் கந்தப்பு அமைதிபடை பட தேர்தல் சீன் போல ஒரு மாஜிக் காட்டுவார் முடிவுகளை அறிவிக்கும் போது😂
  2. ஓம்… இன்னும் திமுக கூட்டணியில் எந்த கட்சி என்ன தொகுதி என்பதும், அதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்டுகள் என்பதே முடிவாகவில்லை. Long way to go. நாடாளுமன்ற தேர்தல் கேள்விகள் போல இவையும் ஒருவரின் தமிழக அரசியல் அறிவை நுணுக்கமாக சோதிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.
  3. அவர்களுக்கான கூட்டம் 4% என நினைக்கிறேன். மிச்சம் எல்லாம் முதல் முறை வாக்காளர், ஏனைய கட்சிக்கு போட விரும்பாதவர்கள். இவர்களில் கணிசமாக விஜை எடுப்பார் என நினைத்தேன். ஆனால் இப்போ இதை சரிபாதியாக பிரிக்கலாம் என எண்ணுகிறேன். மிச்சம் எல்லோரும் கட்சிகளோடு அலையன்ஸ் வைக்க, விஜை திரிஷாவோடு அஃபையர் வைக்கிறார்😂 கேட்டேன், 20 வருடமாய் நடக்கும் திருவிழா, இந்தமுறையும் நடக்கும் என உறுதி கூறியுள்ளார் அமைப்பாளர் @கந்தப்பு
  4. இவர் முன்னர் அரச அலுவலராக இருந்த போது அரசாங்க களஞ்சியத்துக்கு கார்பெட் வாங்கிய விதத்தில் டெண்டர் ஊழல் செய்ததாக, ஊழல் ஒழிப்பு ஆணையம் இவர் மேல் வழக்கு போட்டுள்ளது. ஆனாலும் அனுர இவரை பதவி விலக்கவில்லை. @ரசோதரன்
  5. சீலன் அடிக்கடி தமிழ் யூடியூபர்சின் “அதிரடி” “பதிலடி” பதிவுகளை பார்ப்பார் போல் உள்ளது.
  6. பாவம் எவனோ இந்த ஆள் மீது கடுப்பில் உள்ளவன் இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டிருக்கிறானோ😂. கமேனியின் மகந்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றார்களே? அவர் இலண்டனில் பல நூறு மில்லியன் சொத்து வைத்துள்ளார், ஆண்மைகுறைவுக்கு சிகிச்சை எடுத்தார் என்ற செய்திகள் - உள்நாட்டில் பல பிடுங்குபாடுகளை ஏற்படுத்தி விட்டது போலும். இந்த முல்லாக்களை முற்றாக சீனில் இருந்து அகற்றி விட்டு, இராணுவத்தில் நடைமுறை சாத்தியமாக சிந்திக்க கூடிய ஒருவர், அமெரிக்கா, இஸ்ரேலோடு டீல் போட்டால் நாட்டை காப்பாற்றலாம். எகிப்தில் ஜெனரல் சிசி செய்தது போல. இஸ்லாமிக் பிரதர்ஹூட், ஹமாஸ், ஹிஸ்புல்லா, தாலிபான், ஈரானிய முல்லாக்கள், ஹூதி, அல்ஷபாப், ஐசிஸ், அல்கொய்தா இது போன்ற கிருமிகள் உலகில் எங்கும் ஆட்சியில் இருக்க கூடாது, என்பது சர்வதேச மகளிர் தினமான இன்று என் வேண்டுதல்.
  7. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? விஜய்யை கிழித்தெறிந்த தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் Mani Singh SUpdated: Sunday, March 8, 2026, 21:33 [IST] சென்னை: பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா? என தவெக உறுப்பினர் ரஞ்சனா நாச்சியார் விஜய்க்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தனது விவாகரத்து வழக்கு வொர்த்தே இல்லை என விஜய் பேசியதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். எது வொர்த் இல்லை?, உங்கள் மனைவியா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? எனவும் ரஞ்சனா நாச்சியார் கேள்வி எழுப்பியிருக்கிறார். Also Read மனம் திறந்த விஜய் அப்போது அவர், "அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை.. தேவையின்றி நீங்க கஷ்டப்படாதீங்க.. நீங்க கஷ்டப்படுறத பார்த்தா எனக்கு கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா? அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.. முக்கியமாக எங்கள் தலைவர், விஜய் அவர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த மேடையில் தலைவர் பல கருத்துகளை பகிர்ந்தார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டு காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது. Recommended For You "அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை" என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம் தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? ஏழு பொண்டாட்டி கட்டுவான் ஒரு அரசியல் தலைவர் பேசும் ஒவ்வொரு சொல்லும், ஒரு குடும்பத்தில் மட்டும் ஒலிக்காது. அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவி அவர்கள் உங்கள் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன. உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், "வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்" என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா? You May Also Like ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன ? உங்களை தெய்வமாகக் கருதி வாழும் உங்கள் ரசிகர்கள், குறிப்பாக இன்றைய Gen-Z தலைமுறையினர், சமூக ஊடகங்களில் என்ன பேசுகின்றனர் தெரியுமா? "எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான், அதில் தவறு இல்லை" என்று எழுதுபவர்கள் இருக்கின்றனர். "நான் உனக்கு பொண்டாட்டியாக வருகிறேன்; உன் மனைவியை விட்டு விலகிவிடு" என்று எழுதும் பதிவுகளும் இருக்கின்றன.. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே இந்த மொழி யாரால் உருவாக்கப்பட்டது? இந்த மனநிலை எங்கே இருந்து வந்தது? ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். "தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? "திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்" என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா? இது தான் நம் தமிழ் கலாச்சாரமா? தமிழ் பண்பாடு பெண்களை பொருளாக பார்க்கவில்லை. மரியாதையாக பார்த்தது. தமிழ் மரபு பெண்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களை உயர்த்தியது. நம் கலாச்சாரம் என்ன சொல்கிறது? இழவு வீட்டிற்கு சென்று கேதம் கேட்பதே நம் பண்பு. அன்பும் மரியாதையும் காக்கும் வாழ்வே நம் வழி. துயரத்தில் இருக்கும் குடும்பங்களிடம் சென்று, அவர்களின் கண்ணீரை துடைப்பதே தமிழர் மரபு. இது தான் நம் கலாச்சாரமா? அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதே மனிதநேயத்தின் அடையாளம். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை, அவர்கள் துயரத்தில் இருக்கும் அந்த நேரத்தில், அவர்களையே உங்கள் இடத்திற்கு வரவைத்து இரங்கல் தெரிவித்தீர்கள். இது தான் நம் கலாச்சாரமா? இது தான் தமிழர் பண்பாட்டின் வழியா? துயரத்தில் இருக்கும் மனிதர்களிடம் செல்வதே மரபு, அவர்களை அழைத்து வருவது மரபல்ல. அதையும் 'பரவாயில்லை" என்று ஏற்றுக்கொண்டு விட்டுவிட்டதால் இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி விட்டது. ஒரு தலைவர் உருவாக்கும் நடைமுறை, நாளைய அரசியலின் ட்ரெண்டாக மாறிவிடும். அதனால் தான் நான் கேட்கிறேன் -தமிழக அரசியலில் நாம் உருவாக்க வேண்டியது மரபை மதிக்கும் கலாச்சாரமா? அல்லது மரபை மாற்றும் மோசமான ட்ரெண்ட் செட்டிங்களா? தமிழர் கலாச்சாரம் மரியாதையை கற்றுக் கொடுத்தது. அந்த மரியாதையை காக்கும் அரசியல் தான் தமிழகத்திற்கு தேவையான அரசியல் அந்த மரபை மாற்றும் வழியில் நாம் போகக் கூடாது. கண்ணியத்தை காக்க வேண்டாமா? எனது மூதாதையரான வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம். பெண் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல. ஒரு மரியாதை. இன்றைய Gen-Z தலைமுறையின் பெற்றோர்கள் கூட, உங்கள் செயல்-பேச்சுகளை பார்த்து மெதுவாக கவலைப்படத் தொடங்கியுள்ளனர். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் இயக்கம், தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக தேய்ந்து போகக் கூடாது. அது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறீர்களா? "பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா ? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது. முன்னுதாரணமாகவே இருங்கள் ஒரு தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் உருவாக்கும் கலாச்சாரம் தான் ஒரு தலைமுறையை உருவாக்கும். TVK ல் உங்களுடன் இணைந்து பயணிக்கும் நான் அக்கறையுடன் எச்சரிக்க வருகிறேன். மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள். தமிழக இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவே இருங்கள். நம் மதிப்பையும் மரியாதையும் நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அந்த மரியாதையை உயர்த்தவோ அல்லது மெதுவாகக் குறைக்கவோ செய்கிறது. சரியோ தவறோ அதைப் பற்றி பேசாமல் மௌனம் காப்பது அறிவுடைமை அல்ல. நாம் செய்யும் துரோகம் சமுதாயத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஏனெனில் மௌனம் பல நேரங்களில் ஒப்புதலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் நம் மரபையும், நம் மதிப்பையும், நம் மரியாதையையும் காக்க தேவைப்படும் போது குரல் கொடுப்பதே ஒரு பொறுப்புள்ள சமூகத்தின் அடையாளம் மேலும் ஒரு தலைவனின் பண்பு. தமிழக வெற்றிக்கழகத்தில் பயணித்துக்கொண்டே இதை நான் சுட்டிக்காட்டாவிட்டால் அது நம் கழகத்துக்கும், மக்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் இளைஞர்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். https://tamil.oneindia.com/news/chennai/ranjana-nachiyar-slams-vijay-over-divorce-remark-asks-do-you-have-respect-to-speak-on-feminism-779707.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards பிகு விஜை சீமான் கூட்டணி வைத்தால் சகல விதத்திலும் பொருத்தமாய் இருக்கும்.
  8. பிறென்ன மினெக்கெடுறியள்… கூட்டி கழிச்சு கணக்கை பைசல் பண்ணி போட்டு கடையை பூட்டுறானே?😂. எனக்கு மொத்தம் 103 என நினைக்கிறேன். யாழ் கிரிகெட் போட்டியில் நானும் செஞ்சுரி அடித்தேன் என்பது மகிழ்ச்சி. வாதவூரான் வீட்டை கவனமா பாக்கவும். வாடகை தவறாமல் கட்டவும்😂. முதல் 3 இடத்தில் வருவோருக்கு வாழ்த்துக்கள். போட்டியை நடத்திய ஜிக்கும், கலகலப்பாக்கிய உறவுகளுக்கும் நன்றி. வட்டா?👋
  9. சுய ஒழுக்க கேடு தமிழ் நாட்டில் பெரிய விடயம் இல்லை. ஆனால் விஜை ரொம்ப ஆணவமாக இருக்கிறார். ஒரு பெண் விடயத்தில் இப்படி நடப்பது not good optics. 8% வரை போகுமா? இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது தேர்தலுக்கு. அதிமுக/பாஜக கூட்டில் கூட சேரலாம் என சொல்கிற அண்மைய வதந்திகள்.
  10. ஏன் என்றால் சிரியாவில் அமெரிக்கா இஸ்ரேல் நேரடியாக இறங்கவில்லை. யாழ்களத்திலும் நிகர் இப்படி இருக்கிறார்கள். அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் ஏதும் செய்தால் மட்டுமே அவர்களின் ரேடாரில் புலப்படும்😂.
  11. இப்போ கணிக்க கஸ்டம். சங்கீதா பிரளயம் வரமுன் தவெக 16%. சீமான் 4% என நினைத்தேன். மொத்த 20% மாறாது. இப்போ விஜை 14, சீமான்6% என நினைக்கிறேன். வெறும் ஊகம்.
  12. ஆம் ஆனால் சிறிய அளவில் என நினைக்கிறேன். தவெக ஆதரவு பெரும்பாலும் உணர்சிமயப்பட்ட, கொஞ்சம் இன்னசெண்ட் ஆன வாக்காளர் என நினைக்கிறேன். அவர்களை இப்படியான விடயம் குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அநீதி செய்து விட்டு, மற்ற பெண்ணுடன் ஊர் சுத்துவது, பிள்ளைகளை கூட பிரிந்து விட்டு, இதை எல்லாம் வெர்த்தே இல்லை என மேடையில் சொல்வது…. இது எல்லாம் இப்படியானவர்களை பாதிக்கும் என நினைக்கிறேன். வளர்ந்த மேற்கு நாடுகளில் கூட family man image முக்கியமாகிறது. பாதிக்கும். எவ்வளவு என சொல்ல தெரியவில்லை.
  13. யாழ்களத்துக்கான ரஸ்ய தூதுவரும் @vasee …அவரது உதவியாளர் கூகிள் டிரான்சிலேட்டரும் ஒவர் டைம் செய்து உழைக்கிறார்கள் 😂. ஆனால் நம்ம கோமாளி செலன்ஸ்கி…புட்டின், டிரெம்பையே டீல் பண்ணியவர்… ஓபனுக்கு எல்லாம் பீச்சங்கையே காணும்😂… சதாம்…கடாபி…அசாத்…கமேனி வரிசையில் தானும் சேர ஆசைபடுகிறார் ஓபன் 😂. பிரச்சனை ஒண்டும் இல்லை செஞ்சிர்லாம்😂. பிகு ஈரானின் டிரோன்களை எதிர்க்க பல மில்லியன் பெறுமதியான பேறியட் ஏவுகணைகளை பாவித்து அவை கையிருப்பு தீரலாம் என்ற அச்சத்தில்… செலன்ஸ்கியிடம் டிரோன் எதிர்ப்பு டிரோன்களை கோரியது அமெரிக்கா, அரபு நாடுகள். #எரியுதடி மாலா #பேனை 80 ல வையி 😂😂😂
  14. ஓம்…ஆனால் ஈராக், சிரியா, லிபியா போல ஆகக்கூடாது. அதுதான் எனது ஒரே யோசனை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.