Everything posted by satan
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
அவரவர்க்கு சாதகமான செய்திகள் தமக்கு சார்பானவர்களை உயர்த்தியே கூறும். வளமான மத்திய கிழக்கில் வியாபார ரீதியில், நட்பாக புகுந்து, முழு வளத்தையும் அபகரிக்க நினைத்து, அந்த நாட்டை, வளத்தை, அழித்து, அரசியலை இரண்டுபடுத்தி அவர்களை எழுந்திருக்க விடாமல் அடித்து நொருக்கி ஏதிலிகளாக்கி விட்டு தாம் வந்த வழியே போய்விடுவார்கள். அவர்களுக்கு நன்றியில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பரிகாரமில்லை, தம்மை நிஞாயப்படுத்துவார்கள். அடுத்தவரின் வளங்களை அபகரிப்பது இல்லையேல் அழித்தொழிப்பது. அவர்களின் வளத்தால் பெற்ற ஆயுதங்களை அவர்களிலேயே பரீட்சிக்கிறார்கள். இது எந்த வகையில் நிஞாயம்? உலகம் முழுவதையுமே அழிவில் தள்ளியுள்ளார்கள். இவர்கள் அழிக்கப்படாதவரை ஏதோ ஒரு நாடு தொடர்ந்து இவர்களுக்கு இரையாகிக்கொண்டே இருக்கும்.
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
ஆம். ஒரு ஏவுகணையின் விலை சும்மா இலகுவாக குறிப்பிட்டு இது சாதாரணமானது, இதை விட விலை கூடிய ஆபத்தான ஆயுதம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று கணிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அணுஆயுதத்தை பாவிப்போமென மிரட்டுகிறார்கள், பொது மக்களின் உழைப்பில், அந்த மக்களை, அவர்களின் சீவியகால உழைப்பை, கனவை அழிக்கிறார்கள். இதனால் இவர்கள் காணும் பயன் என்ன? உலகம், மக்கள் இருந்தாற்தானே இவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்ட முடியும். அணுகுண்டை பாவிப்போம் என்று எதிரியை மிரட்டுவார்களே அன்றி பாவிக்க மாட்டார்கள். நெதன்யாகு தலைமறைவு என்றும் சொல்கிறார்கள். உலக நாடுகள் சேர்ந்து ட்ரம்ப், நெதன்யாகுவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒருவேளை ஈரான் தோற்றாலும் ட்ரம்ப் ஈரானால் அழிக்கப்படுவார் அல்லது இந்தப்போரை வலிந்து ஈரான் மீது திணித்ததற்காக வருந்துவார் தவறான முடிவை எடுத்து விட்டொமேயென. மனித குலத்திற்கு எதிரான சாத்தான்கள் களை எடுக்கப்படவேண்டும்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உதவி செய்யும் மத்திய கிழக்கு நாடுகள், தம்மை தனிமைப்படுத்திக்கொள்வதோடு அந்த நாடுகளின் அடுத்த இலக்கு தமக்கு உதவி செய்வோரே. துரோகியை, உதவி பெற்றவனே நம்பமாட்டான். இன்று இவன் தன் தலைவனுக்கு, நாட்டுக்கு, மக்களுக்கு, இனத்திற்கு செய்யும் துரோகம் நாளைக்கு தனக்கெதிராக திரும்பாது என்பது என்ன நிட்சயம்?
-
காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்!
இந்தியா எப்போது உண்மையின் பக்கம் நின்றது? அது, தான் ஆசியாவின் வல்லரசு என்று தன்னைத்தானே கூறிக்கொள்கிறது. அதற்காக மேலெழும் நாடுகளை, இயக்கங்களை தடுக்கிறது. அமெரிக்காவை எதிர்த்தால் தனது வல்லரசு கனவு தகர்ந்துவிடுமென தயங்குகிறது. அமெரிக்காவுக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லை இந்தியா. காஷ்மீர், இலங்கைத்தமிழர் மீதான தாக்குதல், துரோகம் அதற்கு சாட்சி! ஆனால் அமெரிக்காவிற்கு, தாக்க நினைத்தால் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, காரணமும் தேவையில்லை, தானே காரணங்களை தேடிக்கண்டுபிடிக்கும். ஒசாமா பின் லேடன், லிபியா முன்னாள் தலைவர் கடாபி போன்றவர்கள் அமெரிக்காவால் வளர்த்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்கள். தனது லாபத்திற்காகவே உதவி செய்வதாக மாயை காட்டி உள்நுழைப்பவர்கள். அதைத்தான் இந்தியாவும் செய்கிறது.
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
இதுதான் உண்மை! மனித நேயம், அணுகுண்டு தயாரிப்பு குற்றச்சாட்டெல்லாம் சும்மா கூறப்பட்ட காரணங்கள். அந்த கறுப்பாடு பிடிபடாமல் இருந்திருந்தால்; அதுதான் ஈரானின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும்.
-
ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா!
துரோகத்தினால் காட்டிக்கொடுப்பில் கொல்லப்பட்டுள்ளார். முக்கிய தளபதி அயத்துல்லா அலி கமெய்னியுடன் கூட இருந்து குழி பறிக்கப்பட்டது. அலி கமெய்னியுடன் நிழலாக தொடர்ந்தானே. எங்களின் தலைவருக்கும் விடுதலைப்போருக்கும் நடந்தது இதே. இந்தப்போர் நமது விடுதலைப்போருடன், தாக்குதலுடன், அழிவுகள், இழப்புடன், காட்டிக்கொடுப்புடன் ஒத்துப்போகிறது. ஒரு பலமான அரசை, விடுதலை இயக்கத்தை அழிக்க ஒரு துரோகி துணைபோவதுடன் அந்த இயக்கமோ, அரசோ மீள எழாது எதிரியின் காலடியில் விழச்செய்துவிடும் என்பதற்கு ஈரான் தலைவரின் மரணத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த துரோகி பழியை சுமந்தவன், அதி உச்ச பாதுகாப்பு தலைவர் என்கிறார்கள், புரட்சிகர காவல் படையின் தளபதி என்கிறார்கள், பெயர் அலி ஷம்கானி என்று கூறப்படுகிறது. அந்தப்பதவிக்கேஅவமானம்! அவனால் தன் தலைவனை காட்டிக்கொடுக்க முடிந்ததென்றால், அவனை எவ்வளவு நம்பியிருந்திருப்பார்கள், அந்த நாட்டின் முதுகெலும்பாய் நினைத்திருந்திருப்பார்கள், தலைவனுக்காய், நாட்டுக்காய் உயிரை கொடுப்பானென எண்ணியிருந்திருப்பார்கள். இவனுக்கு ஏற்படப்போகும் முடிவுக்கு இவனை பயன்படுத்தியவர்கள் வருந்தப்போவதில்லை, மன்னிப்பு கேட்கபோவதுமில்லை.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இவர்கள் கொல்லப்படும்போது அவரவர் நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இவர்கள் கேட்க முடியாது. ஒரு நாட்டில் பலாத்காரமாக உள்நுழைந்து, அவர்களது வளங்களை சுரண்டி, மக்களையும் அரசியற்தலைவர்களையும் கொன்று, நிர்வாகத்தை, நாட்டை சிதைத்து, செய்வது பயங்கரவாதம், சொல்வது மனிதநேயப்போர். அவர்கள் நாட்டிற்குள் அடாத்தாக புகுந்து இவ்வளவு கோரத்தையும் செய்யும் ட்ரம்ப் தன் நாட்டிற்குள் அவர்கள் வருவதற்கு தடை விதிக்கிறார், காரணம் பயம். அயத்துல்லா அலி கமெனி தங்கியிருந்த இடத்தில ஏவப்பட்ட குண்டு, தரையை தொட்டவுடன் வெடிக்காமல் பல அடி ஆழமுள்ள சீமெந்து மற்றும் பாறைகளை துளைத்துக்கொண்டு உள்ளே சென்ற பிறகுதான் வெடிக்குமாம். நிலத்துக்கடியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு பிறகு தரைப்பகுதி உள்வாங்கப்படுமாம், இதற்கு பங்கர் பஸ்ரர் என்று பெயராம். போராட்டகாலத்தில், நமது ஊர், அண்டைய பல ஊர்களில் இப்படியான பல குண்டுகள் விடியற்காலையில் மக்கள் தூக்கத்திலிருக்கும்போது வீசப்பட்டன. தரை, பல அடி ஆழத்திற்கு கிணறு போல் தோன்றி நீரும் வந்துவிடும், அதற்குள் வீடு முழுதாக அமிழும். இது பல கிராமங்களில் நடந்திருக்கு. தூக்கத்திலிருந்தவர்கள் அதற்குள்ளேயே மாண்டனர். அப்போ, அந்த குண்டுகளை இலங்கைக்கு அளித்தது இஸ்ரேல்! வைத்தியசாலை, சிறுவர் விடுதிகளிற்கு குண்டுகளை வீசிவிட்டு, அங்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்ததனால் தாக்கி அழித்தோம் என்று கூறினார்கள். அதே சம்பவம் காஸா, ஈரானில் இஸ்ரேலால் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனையை இஸ்ரேலே வழங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. இன்று இஸ்ரேலை இலங்கை கண்டிப்பது, மனித நேயம் பேசுவது வியப்பாக இருக்கிறது. தன்னை புனிதன் என்று அறிவிக்கிறதா?
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஒரு பலமான போராட்டம் அழிவது துரோகிகளால் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மொஸாட் கும்பலுக்கு முகவராக ஈரானின் படைத்தளபதியே செய்திகளை அனுப்பியுள்ளார். அந்த தகவலின்படியே இஸ்ரேல் துல்லியமாக தாக்குதலை நடத்தியுள்ளன. அயத்துல்லா அலி கமேனியுடன் கூட இருந்துகொண்டே குழி பறித்துள்ளார், கடைசி நிமிடத்தில் முகமது பக்போர் கூட்டத்திலிருந்து மாயமாகி செய்தி அனுப்பி தாக்குதலை நடத்தியிருக்கிறார். அவரும் கூட்டத்திற்கு பங்குபற்ற சென்றதால் அவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் இப்போ விசாரணையில் உள்ளாராம். ஈரான் மீது கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வைத்துப்பார்க்கும்போது இவர்தான் உளவாளியாக செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது, கடந்த ஆண்டே இவர்மீது விசாரணை ஆரம்பித்த போதும் அயத்துல்லா அலி கமேனியுடன் இவர் நெருக்கமாக இருந்த காரணத்தினால் அது தடைபட்டது அல்லது தடுக்கப்பட்டது, அது யாரால் என்கிற விசாரணையும் தொடர்கிறதாம். இவருக்குப்பின்னால் இன்னும் பலர் இருக்கலாம், இது ஈரானிய படையினரை சந்தேகிக்கும், சோர்வடைய செய்யும், பலவீனப்படுத்தும் செயலாகும்.
-
ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
உங்கள் படையால் அதை தடுத்து நிறுத்த முடியாதோ? உலக நாடுகளுக்கு பயங்கரவாதத்தை எப்படி வெற்றிகொள்வது என்று பாடம் நடத்திய படையல்லவா உங்கள் படை. எல்லா நாடுகளிடமும் உதவி வேண்டி சொந்த மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்கினீர்கள், இப்போ நீங்கள் நசுங்குங்கோ! உங்கள் வாயே உங்களுக்கு எதிரி.
-
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு
எப்படி இவர் இவ்வளவு உறுதியாக சொல்கிறார்? தங்களது கடந்தகால அனுபவம் இப்போ இப்படி மாற்றி பேசுகிறது! அன்று அவர்களை கைது செய்து நிரூபித்திருக்கலாமே, அதிகாரம் உங்கள் கையிற் தானே இருந்தது. ஏன் செய்யவில்லை? "வேண்டாப்பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் இவர்களுக்கு."
-
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
சொந்த நாட்டில், ஒரே மொழி பேசும், ஓர் இனமக்கள் வகைதொகையின்றி கொல்லப்படும்போது முட்டுக்கொடுத்தவர்கள், பால்சோறு உண்டு மகிழ்ந்தவர்கள், அதற்கு எதிராக குரல் கொடுக்க மறுத்தவர்கள், அதை நிஞாயப்படுத்தியவர்கள், எங்கோ இருக்கும் ஈரானுக்காக போராடுகிறார்கள் இது விந்தையே. சமாதானத்திற்காக போராடுபவர்கள், அநிஞாயத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் எங்கே அநிஞாயம் நடந்தாலும் பேதமின்றி இனம், இடம், மதம், மொழி, அந்தஸ்து, சந்தர்ப்பம், சொந்த ஆதாயம், விருப்பு வெறுப்பு எல்லாம் பார்த்து குரல் கொடுப்பதில்லை. அப்படியான குரல்களுக்கு வரவேற்புமில்லை. இது வெறும் கூக்குரல். சந்தர்ப்பவாத அரசியல் வியாதி. அன்று தமது பக்கத்தை நிஞாயப்படுத்த நட்பு நாடென்றார், இன்று அனுராவை பயமுறுத்தி பின்வாங்கச்செய்ய இப்படிச்சொல்கிறார். அன்று இவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்தவர்களை இன்று கைவிடச்சொல்கிறார். பக்கா சுயநலவாதி. இவரை தொடர்ந்து பல அரசியல் வியாதிககளின் சுயநல எச்சரிக்கைகள் கிளம்பும்!
-
ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!
இலங்கையில் தங்கள் கொலை, கொள்ளை, ஊழல்களை மறைக்க இல்லாத புலிகளையும் புலம்பெயர் தமிழரையும் குற்றம்சாட்டி தம்மை மறைத்துக்கொள்வதுபோல், வளம் நிறைந்த நாடுகளை கொள்ளையடிக்க, அடிமைப்படுத்த அணுஆயுதம் தயாரிக்கிறார்கள் என்று அவர்கள்மேல் போர் தொடுப்பது அமெரிக்காவின் வழமை. சரி, அவர்கள் அணு ஆயுதம் தயாரித்தவர்களாகவே இருக்கட்டும் அதனால் அமெரிக்காவுக்கு என்ன பிரச்சனை? அமெரிக்கா தயாரிக்கவில்லையா அணுஆயுதம்? அமெரிக்கா தயாரித்தால், அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து இருந்து தம்மை பாதுகாக்க மற்றைய நாடுகளும் தயாரிக்க உரிமை இல்லையா அவர்களுக்கு? மத்திய கிழக்கு நாடுகளை குழப்பி, அவர்களை அவர்கள் உலகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு இழுத்து விட்டதே அமெரிக்கா தான். ஆதன் பலனை பல நாடுகள் அனுபவித்து வருகின்றன. ரஷ்யா தயாரிக்கிறது, சீனா தயாரிக்கிறது அணு ஆயுதங்களை, அவர்களை தாக்கட்டும் பார்ப்போம்! அமெரிக்கா இடங்கண்ட நாடுகளைத்தான் தாக்குவார்களாம். எனக்கென்னவோ ஈரானால்த்தான் டிரம்புக்கு அழிவுபோல்தெரிகிறது. அமெரிக்கா அநிஞாயமாக பழி சுமத்தி அழித்த வளங்களை, கொள்ளையடித்த நாடுகள் தங்கள் சுயத்தை இழந்து பழிவாங்க துடிக்கின்றன, வாங்குகின்றன. அதற்கு பலியாகுபவர்கள் எந்த விதத்திலும் இதனோடு சம்பந்தப்படாத அப்பாவிமக்களே. அமெரிக்காவின் இந்த அடாத்தான செயல்களுக்கு நட்பு நாடுகள் துணை போகக்கூடாது அமெரிக்காவை தனிமைப்படுத்தி விடவேண்டும். ஐக்கியநாடுகள் சபை பாதுகாப்பு போர்படையை அனுப்பி தாக்கப்படும் நாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும், அல்லது ட்ரம்பை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.
-
கண்டியில் 183 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லம்: ஆளுநர் அடிக்கல் நாட்டினார்!
விகாரையில் கடத்திவிடப்படும் சிறுவர்களை பராமரிக்கவும் இல்லம் அமையுங்கள். அறியாத வயதில் வறுமை காரணமாக பெற்றோரால் கடத்திவிடப்படும் சிறுவர், தாங்கள் விரும்பாமலேயே தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே பிக்குகளாக மாற்றி விடப்படுகிறார்கள். அவர்களுக்குள் எத்தனையோ திறமைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருந்தாலும் யாரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை, தங்கள் எண்ணங்களை திணித்து விடுகிறார்கள். தங்களின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாதவர்கள், தங்களை ஏற்றுக்கொள்ளாத உலகில் அவர்களால் எதை சாதிக்க முடியும்? விரும்பாமலேயே மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களும் சிறுவர்களுக்குரிய குறும்புத்தனம், விளையாட்டுகளை செய்து, சுயமாக கல்வி கற்று, அறிவு தெளிந்து தாங்களாகவே விரும்பிய துறையை தெரிவு செய்யும் வயதுவரை அவர்களை பராமரிப்பதற்கு இல்லங்கள் நிறுவப்படவேண்டும். அப்பொழுதே அறிவுள்ள, பண்புள்ள மத தலைவர்களை உருவாக்க முடியும், உருவாகுவார்கள்.
-
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு..!
ம், எரிக் சொல்ஹெய்ம் சாதித்து விட்டுப்போன மிகுதியை தொடரும்படி பேசுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதில்லை, பேசுவதில்லை. இதில அவர்களின் பிரச்சனை என்னவென்று விளங்கப்படுத்துவர்? மக்களால், கட்சியால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்ல வெட்கம், அதனால் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எனும் பதவியை அடாத்தாக பற்றிப்பிடித்துக்கொண்டு படம் போட்டு அலைகிறார்கள் ஒவ்வொரு தூதுவர்களுக்கும் பின்னால். ஒரு தூதுவரையும் வெளியில் நடமாட விடுவதில்லை. அவர்கள் இனி தூதுவர் வெளியில் சென்றிருக்கிறார் எனும் அறிவித்தலை கதவில் மாட்டி விடப்போகிறார்கள். "ஆடின காலும் பாடின வாயும் சும்மா கிடவாது."
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
ஹா ஹா..... நான் தான் அவர்களின் வழக்குகளை கையாள்கிறேன், எனக்கு பிரதம மந்திரியாக பதவியேற்பதற்கு அழைப்பு வருமென காத்திருப்பதாக அறிவித்திருந்தார், இப்போ இப்படி ஒரு கதை விடுகிறார். கொஞ்ச நாளாய் அமைதி நிலவுகிறதே என நினைத்தேன், அவர் கற்பனையில் இருந்திருக்கிறார் பாவம். ஜனாதிபதி தேர்தலில், தமிழ் வாக்காளருக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால், அது இனவாதமாம். ஆனால் மாகாணசபைத்தேர்தலில், பாராளுமன்றத்தேர்தலில் தமிழர் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும், அதுதான் தமிழரின் ஏகோபித்த கட்சி என்று சொல்வது என்ன வாதம்? அது இருக்க, ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்க கேட்டு விட்டு, அனுராவிடம் பதவி எதிர்பார்க்கிறார். அமைதியாக இருந்த கட்சியில் பிரச்சனையை ஏற்படுத்தி, தெருவுக்கு கொண்டுவந்து, நீதிமன்றத்தில் நிற்கவைத்துவிட்டு நீதியமைச்சர் பதவியை எப்படி இவர் எதிர்பார்க்கிறார்? சிலர் இப்படித்தான் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பது, கிடைக்காத போதுஎச்சரிப்பது, சவால் விடுவது, பயமுறுத்துவது. பின் சீசீ இந்தப்பழம் புளிக்கும் என்பார்கள். எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்பாடு இல்லாமல் பதவிக்காக சாயும் இவருக்கு அனுரா பதவி தருவேன் என்று சொன்னாராம். என்று இவர் சொல்வதிலிருந்து இவர் கடந்த காலங்களில் எதற்காக முண்டு கொடுத்தார் என்பது தெரிகிறது. எந்தக்காலத்திலும் இவர் தனக்கு வாக்கு போட்ட மக்களின் கவலைகளை தேவைகளை முன்னிறுத்தியதேயில்லை, இப்போ அவருக்கு பதவிக்காக மக்கள் நினைப்பு வருகிறது. தமிழ் மக்கள், தங்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல் இல்லாமல் தாங்களாகவே அனுராவை தேர்ந்தெடுத்தனர், யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே தமிழரின் கவலைகளை, அபிலாசைகளை, உணர்வுகளை மதித்து அவற்றிற்கு தீர்வு வழங்குவது அனுராவின் கடமை. அதைவிட்டு சுமந்திரனுக்கு பதவி வழங்குவதால் தமிழரின் பிரச்சனை தீர்ந்துவிடாது என்பது அனுராவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே புரியும். இப்போ தெரிகிறதா யார் பதவிக்காக நாக்கைத்தொங்க போட்டுகொண்டு அலைவது என்பது? இருங்கோ. யார் வேண்டாம் என்றது? அதற்காக என்ன செய்தீர்கள்? அனுரா நீதியமைச்சர் பதவி தருகிறேன் என்று சொல்வதாலோ, அல்லது நிராகரிப்பதாலோ எதுவும் நிகழாது.
-
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
வீட்டுக்காரரும் எதிர்பார்த்து தயாராகவே இருந்திருக்கிறார் போலுள்ளது. கதிரையால் சமயோசிதமாக எறிந்து துப்பாக்கியை விழச்செய்து பின் வாளை எடுத்து தாக்க வந்தவரை விரட்டியிருப்பார். கேவலம் முப்பதினாயிரத்திற்காக கொலை. இப்போ முப்பதினாயிரமும் போச்சு, முன்பு செய்த குற்றச்செயல்கள் எல்லாம் அம்பலமாகப்போகுதே. இவரும் முன்னாள் இராணுவ வீரராய் இருப்பாரோ?
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...
சரி ஏற்றுக்கொள்ளலாம். முன்னைய உங்களின் இரு அரசாங்கங்கள் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க தவறிவிட்டது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க முடியவில்லை அவர்களால். தற்போதைய விசாரணைகளிலும் உங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகவே ஒரு சர்வதேச விசாணைக்கு கோரிக்கை வைப்போமா? கொலை, கொள்ளை, அச்சுறுத்தல் மூலம் அரசியல் லாபங்களை பெற்றவர்கள், தாங்கள் பயன்படுத்தியவர்களை வல்லவர்கள், நல்லவர்கள் என்று சிறப்பு சான்றிதழ் கொடுப்பார்கள், இறுதியில் அவர்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று சாதித்து அவர்களை தனிமைப்படுத்தி விடுவார்கள். ஆரம்ப காலத்தில் கோத்த சலே பற்றி பட்டும் படாத அறிக்கை விட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...
தாக்குதலின் மூளையாக செயற்படுபவர் சம்பவ இடத்திலோ, நாட்டிலோ இருக்கவேண்டுமென்பது அவசியமில்லை. இன்றைய தொழில் நுட்பம் நிறைந்த காலத்தில் இந்த வாதமெல்லாம் செல்லாது என்பதை சுரேஷ் சாலே அறிந்திருக்கவில்லைப்போலும். நாட்டில் தற்போது நடக்கும் கொலைகள் வெளிநாட்டிலிருந்தே இயக்கப்படுகின்றன, வெறும் கருவிகளே இங்கிருந்து இயங்கி மாட்டிக்கொள்கின்றனர். அரசை அடித்து பிடித்து ஆட்சியேறுவது பின்னர் அரசியல் எதிரிகளை அழிப்பது, பழிவாங்குவது, நாட்டின் வளர்ச்சியை சீரழிப்பது, திசை திருப்புவது. விசாரணை கைது என்றவுடன் அரசியல் பழிவாங்கல் என ஓலமிடுவது, ஓலமிட்டு தாங்கள் பிழை செய்தோம் என்பதை சொல்லாமல் சொல்லுவது, அதனால் பழிவாங்கப்படுகிறோம் என பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்கள். இந்தப்பெரிய கள்ளருக்குப்பின்னால் ஒட்டியிருந்து, ஒளிந்திருந்து சுகம் அனுபவித்தவர்கள் தாம் அகப்படாமல் தப்பிப்பதற்காக ஏதோ அவர்களுக்காக அனுதாபப்படுவதுபோல் அவர்களை முன்னிறுத்தி வீராவேச பேச்சுக்கள் பேசுவார்கள், சாதனைகள் என்று செய்த கொலைகளை பட்டியலிடுவார்கள், சவால் விடுவார்கள், நடிப்பார்கள். நிலைமை மோசமடைந்தவுடன் அரச சாட்சியாக மாறி எஜமானரை காட்டிக்கொடுத்துவிட்டு தாம் தப்பிக்க முயற்சிப்பார்கள். சிலர் நாட்டைவிட்டு தப்பியோடுவர், சிலர் கொலைசெய்யப்படவும் கூடும். இதுதான் நாட்டின் நிலைமை. இவர்களை நம்பி வாக்களிக்கும் மக்களே ஏமாற்றப்படுகிறார்கள்.
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
இப்பவே ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சரி, இவர் கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியவர், ஆகையால் அவர் அப்பாவிகள் மேல் நடத்திய இன்னொரு பயங்கரவாத செயலை காணாமல் விட்டு விட வேண்டுமா? இவர் செய்தார் என சந்தேகிக்கப்படும் தாக்குதல் பற்றி விசாரிக்க முன்னமேயே போர்க்கொடி தூக்கும் இவர்கள், போர் முடிவுக்கு வந்தவுடனேயே பொன்சேகா சிறையிலடைக்கப்படும்பொழுது ஏன் இந்த எதிர்ப்பை காட்டவில்லை? அவரும் போரை முடிவுக்கு கொண்டுவர முன்னின்று உழைத்தேன் என்கிறாரே? சுரேஷ் சலே என்ன அரசியல் வாதியா அவரை அனுரா பழிவாங்குவதற்கு? இராணுவ புலனாய்வே இந்த விசாரணையை நடத்தி இவரை கைது செய்திருக்கிறது, புலிகளையும் புலம்பெயர்ந்தோரையும் மகிழ்ச்சிப்படுத்த கைதுகள் நடைபெறுகின்றன என்று கூறுகிறார்களே, அப்புலிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட கொலைகள், கொள்ளைகள் வெளிவருவதனால் எல்லா அ நிஞாயங்களையும், புலிகளை புலம்பெயர்ந்தோரை சாட்டி தப்பித்துக்கொள்ளலாம் என்கிற பிழையான கலாச்சாரம், வரலாறு உருவாக்கப்பட்டதினாலேயே இன்று நாடு கொலைகளால் நிறைந்துள்ளது. முசுறுக்கூட்டை அனுரா குழப்பிவிட்டுள்ளார், இனி கலைந்த கூட்டம் அகப்பட்டவர்களை எல்லாம் தாக்கத்தான் செய்யும் தம்மை பாதுகாத்து கொள்வதற்காக. சலேயின் குற்றம் நிரூபிக்கப்பட்டால்; அவருக்கும் அவரின் எஜமானர்களுக்கும் மரணதண்டனை அளிக்கப்படவேண்டும். எத்தனை அப்பாவிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இவர்களின் அரசியலுக்காக அநிஞாயமாக பலிவாங்கப்பட்டிருக்கிறார்கள்.
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
நாட்டைக்கொள்ளையடித்து பதுக்கிய உலக மகா திருடர்களை பாதுகாத்துக்கொண்டு, ஏதோ சின்னஞ்சிறுசுகள் ஆசையில எடுத்த சொக்லெற்றுகளை பெரிய திருட்டுபோல படங்காட்டுகிறார்கள் போலீசார். இவர்கள் செய்யும் போதைப்பொருள் கடத்தலையும் வெளியிடவேண்டும். அந்த சிறுமிகளை பெற்றோரிடம் அல்லது விடுதி தலைவரிடம் ஒப்படைத்து பிரச்சனையை தகுந்த முறையில் சுட்டிக்காட்டி திருத்தியிருக்கலாம், ஏதோ நாட்டைக்கொள்ளையடித்துபோல் செய்தி. என்ன நாடு இது? "தலைவன் எவ்வழி குடிகள், குழந்தைகள் அவ்வழி."
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
எனது சந்தேகம் என்னவென்றால்; இவ்வளவையும் அந்த சிறுமிகள் எப்படி விடுதிக்குள் கொண்டுபோயிருப்பார்கள், எங்கே மறைத்து வைத்திருப்பார்கள்? பொலித்தீன் பைகளில் இத்தனை ஆயிரம் ரூபா தொகையான பொருட்களை கொண்டு செல்ல முடியுமா? அவர்களுக்கு இருப்பது இரண்டு, மொத்தம் ஆறு கைகள் தானே. வேறு கைகளும் இவர்களின் பின்னால் இருந்திருக்குமோ?
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
விசாரணையை குழப்புபவர்கள் சந்தேக நபர்களை விசாரிக்கும்போது ஏன் குழம்புகிறார்கள்? அவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதே, அப்போது ஏன் கண்டுபிடிக்கவில்லை? இப்போ ஏன் தடைஏற்படுத்துகிறார்கள்? குற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது என்றா, விசாரணை நடைபெறக்கூடாது என்றா, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்றா, இனிமேலும் இப்படியான குற்றங்கள் நிகழ்வதை தடுக்கக்கூடாது என்றா? தடை ஏற்படுத்துபவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட நபர் செய்யவில்லை என்றால், உண்மையான குற்றவாளியை இவர்களுக்கு தெரியும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியது இவர்களின் கடமை. அல்லது சட்டம் தன் கடமையை செய்ய வழிவிட வேண்டும்!
-
நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்
அப்போ, போர்க்குற்ற விசாரணையை தவிற்பதையும் இந்தக்கோணத்தில் நோக்கலாமா? நீதியான விசாரணையை, அதன் கேள்விகளை, எதிர்கொள்ள திராணியற்ற இலங்கை அரசு அதை எதிர்க்கிறது என்பதை சரத் ஏற்றுக்கொள்வாரா? ஒரு இந அழிப்பை செய்த, செய்கிற, போர்க்குற்ற விசாரணையை எதிர்க்கிற குடும்பம் எப்படி நல்லிணக்கம் பற்றிய கேள்விகளுக்கும் அதுபற்றிய கலந்துரையாடல்களிலும் பங்கு பற்றி உண்மையான நீதியான கருத்துக்களை தெரிவிக்க முடியுமென சரத் எதிர்பார்க்கிறார்? றக்பி வீரர் வசீம் அக்ரத்தின்படுகொலையில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் சட்டத்தரணிகள் பரீட்ச்சையில் மோசடி செய்தவர் அதன் சாட்சிகளை அச்சுறுத்தியவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற தகுதியுள்ளவரா? நாட்டில் நீதியும் சமத்துவமும் நிலைக்க முடியாமல் தடுக்கும் பிரிவினைவாத அரசியல்வாதிகள், மதவாதிகளான பிக்குகளுக்கு அடிபணிந்து நாட்டையும் ஒரு இனத்தையும் அழிப்பது வேதனைக்குரியது, வெறுப்பிற்குரியது சரத் வீரசேகர அவர்களே. முதலில் உங்களை திருத்துங்கள், நாட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாமலை பதில் சொல்லச்சொல்லுங்கள், அவருக்கெதிராக வழக்குகளை திசை திருப்பாமல் எதிர்கொள்ளச்சொல்லுங்கள், பின்னர் லண்டனுக்கு போய் பதில் சொல்லலாம். தன் விசாரணையை எதிர்கொள்ள முடியாமல் அரசியல் பழிவாங்கல் என்று திசை திருப்பி கதைப்பவர், லண்டன் போறாராம் பதில் சொல்ல, அதில லண்டன் மாணவர் பயந்து விட்டார்களாம். யாரோ எழுதியதை பாடமாக்கிக்கொண்டு பெரிய கனவோடு போயிருப்பார், எல்லாம் கலைந்தது வருத்தந்தான்.
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...
இவரைத்தொடர்ந்து பல இராணுவ அதிகாரிகள், அரசியல் தலைகள் உருளும்போலுள்ளதே. அதற்கிடையில் சுரேஷ் சலே மேலே போகவைக்க முயற்சிகளும் இடம்பெறும்.