Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ட்ரம்ப் ஈரானுக்கு மூன்று நாள் கெடு விதித்தார், பின் பத்து நாள் என்கிறார். அவ்வளவு வீரமுள்ளவர், நடந்து கொண்டிருக்கும் போர், தானே தன்னிச்சையாக தொடங்கிய போருக்கு, இன்னும் களத்துக்கு வீரரை அனுப்பிக்கொண்டிருப்பவர், சவால் விடுபவர், எதற்காக கெடு விதிக்கிறார், கெடுவை நீட்டிக்கிறார் என்பதற்கு அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். தன்னிச்சையாக, காரணமின்றி போரை தொடங்கினார், தன்னிச்சையாக பேசுகிறாராம், அதேபோல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுகிறார். இதென்ன நோய் என்று தெரியவில்லை?
  2. ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே, அதற்கு என ஒரு இறையாண்மை உள்ளது, அது ஏன் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்? தேவையில்லாமல் வலுக்கட்டாயமாக அந்த நாட்டுக்குள் போரை திணித்து, அழித்து விட்டு சும்மா தெனாவட்டாக செல்ல முடியுமா? எத்தனை பேரின், எத்தனை கால கனவு, உழைப்பை அழித்திருக்கிறார்கள் தமது வீம்புக்காக. ஆனால் அமெரிக்காவின் நிபந்தனை ஏற்றுக்கொள்ளக்கூடியவையல்ல. அவர்களின் நாட்டில், அவர்களின் வளங்களை எப்படி கையாள வேண்டுமென்று அமெரிக்கா கட்டளையிட முடியாது. அவர்களை கட்டிப்போட்டு சுதந்திரம் என்று சொல்ல முடியுமா? அதைவிட ட்ரம்ப், நேரம் ஒரு மாறாட்டப் பேச்சு பேசுகிறார். ஈரானில் பேசுவதற்கு தகுந்த ஆட்கள் யாருமில்லை எல்லோரையும் அழித்து விட்டோம் யாரோடு பேசுவது என்பதே பிரச்சனை என்றார். அப்படியென்றால் போர் எப்படி தொடர்கிறது? யாரோடு பேசுகிறேன் என்கிறார்? இப்போது தகுந்த நபர்களோடு பேசுகிறோம் என்கிறார். இரான் தனக்கு சிறந்த பரிசு தந்திருக்கிறது என்கிறார். தனக்கு அதியுயர் பதவியை இரான் அளித்ததாகவும் தான் மிக்க நன்றி ஆனால் வேண்டாம் என்றாராம். ஈரானோ இவை எல்லாவற்றையும் மறுக்கிறது. அதுவே உண்மை. போர் தொடர்கிறது, அமெரிக்க படைகள் ஈரானை நோக்கி விரைக்கின்றன. இப்படியான மாறாட்ட நோயாளியை நம்பி தம் பிள்ளைகளை, பிரஜைகளை அமெரிக்கர் பலி கொடுக்கின்றனர், மற்ற நாடுகளையும் அழிக்கின்றனர்.
  3. சும்மா ஒரு சம்பிரதாயத்திற்கு கண்ட இடத்தில் அழைப்பு விடுவது வழமை, அதற்காக அதிகார பூர்வ அழைப்பில்லாமல், நாட்டின் இன்றைய இக்கட்டு நிலையை மனதிற் கொள்ளாமல், யாரும் வந்த வழியில் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று செல்வதற்கு அவர்கள் ஒன்றும் வழிப்போக்கர்கள் அல்ல. இந்தியாவில் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பியவர்கள் என்று கூறப்பட்டது பின் அவர்கள் இசைக்கலைஞர்கள் என்கிறார்கள். இப்போ அதுவல்ல பிரச்சினை, இரானே இலங்கையின் மனிதாபிமான செயலை பாராட்டியிருக்கிறது. அனுரா எதை செய்தாலும் அதை அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரை ஆட்சியிலிருந்து துரத்தியடிப்பதே நாட்டில் இன்றைய பெரும் பிரச்சனை. இல்லையென்றால்; இவர்களது ஊழல்கள் வெளிவரும், மக்களிடம் இவர்களுக்கு இருந்த செல்வாக்கு சரியும், சிறை செல்ல வேண்டி வரும், அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கும், சும்மா இருந்து மக்களை வதைத்து நாட்டை சூறையாடும் கலாச்சாரம் மாறும் என்கிற பயப்பீதியில் என்னென்னவோ தந்திரங்கள், குற்றச்சாட்டுக்கள். இவர்களின் எந்த தந்திரமும் பலிக்காது. எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது. இவர்கள் எதையெதை நினைத்து பயப்படுகிறார்களோ அதுவெல்லாம் நடந்தேறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகின்றன.
  4. தெரிந்துதான் நுளம்புத்தொல்லை அதிகரித்து விட்டது. அதை சொல்ல இந்தச்சபை அப்பப்போ கூடி பேசுகிறது.
  5. இந்தச்சபையையும் கலைக்க வேண்டும். இது வேடிக்கை பார்த்துவிட்டு அறிக்கை மட்டும் விடுவதற்கு எதற்கு இந்தச்சபை?
  6. கர்ஜனையோடு போரில் இறங்கியவர்கள், இப்போ போர் நிறுத்தம் கேட்டு முனகுகிறார்கள். ஒரு சில நாட்களுக்கு முன், ஈரானில் தலைவர்களை அழித்து விட்டோம், தளபதிகளை கொன்று விட்டோம், இராணுவத்தை அழித்து விட்டோம், கடற்படை இல்லை, யாரோடு பேசுவது என்பது தான் பெரிய பிரச்சனை என்றார். இப்போ என்னவென்றால், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். யாருமே இல்லாத ஈரானில் யாருடன் பேசுகிறார் ட்ரம்ப்? தன்னோடுதான் பேச வேண்டும். நாங்களே உலகில் சிறந்த படையென அறிக்கை விட்டிட்டு இப்போ, வெளிநாடுகள் தங்களுடன் போரில் இணைய வேண்டுமென்று வெட்கமேயில்லாமல் கேட்க்கிறார். நெதன்யாகுவுக்கு பயம் அதிகரித்து விட்டது. அமெரிக்காவுக்கு பின்னால் மறைந்திருந்து ஈரானை அழிக்கலாமென்று நினைத்தவர், இப்போ அமெரிக்கா விலகிக்கொண்டால், தன்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்கள் என்று அவர் ஒருபக்கம் ஈரானை அழிக்க எல்லோரும் ஓடி வாருங்கள் என்று ஒப்பாரி. யாரும் காதில் வாங்குவதாக இல்லை. நீங்கள் கொழுத்த நாங்கள் சாம்பல் உண்ணவேண்டுமா என்கின்றனர், எண்பது வயது மூளை சரியில்லாத ஒருவரின் சண்டித்தனத்துக்கு தமது மக்களை பலிகொடுக்க தயாரில்லை என்பதோடு, ஈரானை ஆதரிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். இப்போ ஆழம் தெரியாமல் காலை விட்டு தொடர்ந்து நின்று ஆடவும் முடியாமல், காலை எடுக்கவும் முடியாமல் திணறுகிறார் ட்ரம்ப். இவரை போய் தெரிவு செய்த மக்கள்தான் இதற்கு பொறுப்பு!
  7. இந்தச்செய்தியில் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாக இருக்கிறது. இது ட்ரம்பின் போர்த்தந்திரம்.
  8. இது ட்ரம்பின் ஒரு ஏமாற்றும் உளவியற் போர்த்தந்திரம்!
  9. இலங்கையில் நடந்த தமிழர் அழித்தொழிப்பு போரில், முக்கிய பங்காற்றியது இஸ்ரேல் என்பது ஈரான்மீதான தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்கள், தாக்குதல் நடத்திய இடங்கள், விதம், காட்டும் உக்கிரம் என்பவற்றை வைத்து பார்க்கும்போது தெளிவாகிறது. ராஜபக்சக்களின் ஆட்சியாக இருந்திருந்தால்; இஸ்ரேலின் நண்பர்கள் என்றே அறிவித்திருப்பார்கள், ஏனெனில் தமிழரை இல்லாதொழிப்பதே அவர்களின் அரசியல் இலக்கு. ஆனால் அனுரா, எல்லோரும் சமம் என்கிறார். அப்படியென்றால் உங்கள் அழிவுகர நட்பு இலங்கைக்கு தேவையில்லை என்றே நினைக்கிறன். இவர், இலங்கையை ஈரானோடு கோத்துவிடப்பார்க்கிறார்.
  10. ஒன்று அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சொல்லியிருக்கலாம், நான் போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என ஏமாற்றுகிறேன், நீ உனது அழிவை தொடர்ந்து செய்யென, அல்லது போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று வந்தால், தான் தனித்துவிடுவேன், இரான் தன்னை பழிவாங்கும் என்கிற பயத்தினால் இந்தச்சந்தர்ப்பத்தை வைத்து ஈரானை துவம்சம் செய்துவிடலாமென நெதென்யாகு நினைத்து தொடரலாம். இதில், போரில் ஈடுபடாத மக்களும் நாடுகளும் துன்பத்தை எதிர்கொள்கின்றன. இவர்கள் இதை ஒரு உலக யுத்தமாக மாற்ற முனைப்பு காட்டுகின்றனர். இந்த இரு சாத்தான்களையும் கைது செய்யும் வரை அல்லது அழிக்கும்வரை இந்த தாக்குதல்கள் அழிவுகள் தொடரும். இது அமெரிக்காவின் மானப்பிரச்சனை, இஸ்ரேலின் பொறாமை பயத்தின் வெளிப்பாடு.
  11. அமெரிக்க படைகளுக்கு ஒரு ஓய்வு நிலை தேவைப்படுகிறது, ஆயுதங்கள் சேகரிக்க குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க ஒரு நேரம் தேவையாகலாம், அல்லது நான் போர் நிறுத்தம் கோரினேன் இரான் மறுத்துவிட்டது எனும் ஒரு மாயையை ஏற்படுத்தி மற்றைய நாடுகளை போரில் இழுக்கும் தந்திரம், கச்சா எண்ணெய் விலை சரிவு, இதனால் தன் நிதி நிலையை ஸ்திர படுத்தல், ஈரானை பேச்சு என ஏமாற்றிக்கொண்டு மறு வழியில் போரை உக்கிரமாக தொடர்தல். ட்ரம்பே சொல்லிவிட்டார், எனது எண்ணம் அடிக்கடி மாறுமென. இவர் தெரியாமல் காலை வைத்து விட்டு இப்போ வெளியேற முடியாமல் வேறு வழியுமில்லாமல் தவிக்கிறார். இவ்வளவு தூரம் இந்த போர் தொடருமென அவர் நினைத்திருக்க மாட்டார், வெனிசுலா மாதிரி ஒரு இரவில் முடித்து விடலாமென நினைத்தே தொடங்கியிருப்பார். இவரது அழைப்பையே மற்றைய நாடுகள் உதாசீனம் செய்து விட்டன, இப்போ நெத்தன்யாகு ஈரானை அழிக்க உலக நாடுகளை ஒன்று சேரும்படி அழைக்கிறார். இவர்களால் முடியவில்லை உலக நாடுகள் வரவேண்டுமாம். ட்ரம்ப் சொல்வதுபோல் எந்தப்பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று இரான் அறிவிக்கிறது, ட்ரம்ப் ஒருதலைபட்சமாய் பேசுகிறாரே என்னவோ? இரான் விரும்பாத, எதிர்பாராத போரை தொடங்கியவர்கள் இவர்கள், இப்போ எதற்காக போர் நிறுத்த வேண்டுமென்கிறார் ட்ரம்ப்? ஈரான் அழிக்கப்படவேண்டிய நாடு, எங்களுக்கு அச்சுறுத்தலானது என்று கூறி சும்மா இருந்த ஈரானை வம்புக்கிழுத்தவர்கள் இவர்கள், அதே மாதிரி இரான் நினைப்பதில் தவறில்லையே, அவர்கள் கெட்டவர்களாகவே இருக்கட்டும், அவர்கள் தாங்கள் யாரென்பதை நிரூபிக்கவே செய்வார்கள். அதோடு இவர்களின் அச்சுறுத்தலை முறியடித்து தன்னை பாதுகாத்துக்கொள்வதில் தப்பில்லை. இல்லை, ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
  12. 2019 ம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அதன்பின் இரண்டு முறை ஆட்சி மாற்றம் நடந்துள்ளன, கள்ளனும் சேர்ந்து தேடுதல் நடத்துவதுபோல் ஒவ்வொரு அரசும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி ஒப்புக்கு விசாரணை நடத்தின. அப்போதெல்லாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் ஏன் வரும் 31 ம் திகதிவரை காத்திருக்கிறார்? சரி, அனுரா இவரை கைது செய்யப்போகிறார் என்றால், இன்றைக்கே அந்த சூத்திர தாரியை அறிவிக்கலாமே, ஏன் காலம் தாழ்த்துகிறார் இந்த உளறுவாயன்? யாரையாவது கைது செய்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரித்தார்களா என்று ஏன் இவர் விசாரிக்கிறார், பதறுகிறார்? இவர், சானி அபயசேகர, ரவி செனவிரத்தின ஆகியோரை குற்றம் சாட்டிவிட்டால் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடலாமென நினைக்கிறார். அவர்களை ஏன் முந்தைய அரசுகள் விசாரித்திருக்கலாமே. இப்போ இவர் குற்றவாளியை வெளிப்படுத்த வேண்டும் அல்லது குற்றவாளியை மறைத்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்படவேண்டும். நுணலும் தன் வாயால் கெடும். புலி புலி என்றவன் கதையாய் இவர் தன் வாயாலேயே மாட்டப்போகிறார்.
  13. ஈரானில் மத ஆட்சிக்கு எதிரானவர்கள் கூட இந்தப்போரில் அனிஞாயமாக கொல்லப்பட்டுள்ளனர், அழிவை சந்தித்துள்ளனர், ஆட்சி முறையை காரணம் காட்டியே எதிரிகள் நாட்டை சூறையாடவும் அழிவுகளுக்கும் வழி வகுத்தன. ஆகவே இரானிய ஆட்சியாளர்கள் இதனை மனதிற்கொண்டு தங்கள் கடும் போக்கை தளர்த்தி, மாற்றி அனைத்து அரபு நாடுகளையும் அணைத்து ஒன்றிணைந்த பலமான சக்தியாக இயங்க முன்வரவேண்டும். இதுவே எதிர்கால வளமான ஈரானுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் சிறந்தது!
  14. சும்மா இருந்த நாட்டை சீண்டி, அவர்கள் கையில் அதிகாரம் கொடுத்துள்ளார்கள். பத்து ஆண்டுகளுக்கு தமக்கு இரானால் அச்சுறுத்தல் இல்லை என்றார் நெத்தன்யாகு, இரான் அமெரிக்காவோடு ஒத்து உறவாட வேண்டும் என்றார் ட்ரம்ப், இப்போ அமெரிக்கா இஸ்ரேலோடு தொடர்புள்ளவர்களுக்கே பாதுகாப்பே இல்லை என்கிறது இரான், அரபு நாடுகள் அமெரிக்காவோடு சேர்ந்து இயங்குவது பற்றி ஆலோசிக்கின்றன. இரண்டு முட்டாள்கள் சேர்ந்து சாதித்தது இவைதான். அதிக தலைக்கனம் இப்படித்தான் தலைகுனிவை ஏற்படுத்தும். தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென நினைத்து ஒதுங்க வேண்டும் இவர்கள்.
  15. எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து செய்பவர்கள் பெற்றோர். பிள்ளைகளோ; பெற்றோரை யோசியாமல், தங்கள் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்காமல், முடிவுகளை எடுத்து கடைசியில் அந்த முடிவால் பெற்றவர்களையே கொலைசெய்யுமளவுக்கு துணிகின்றனர், பின்னர் மீளாத துயரம், பழி, வாழ்க்கையில் இவர்களுக்கு கைகொடுக்க யார் வருவார்? தாய் வேண்டாமென ஓடிப்போன மகளை மீண்டும் கைகொடுத்து ஏற்றதே இந்த தாய் செய்த தவறு.
  16. காகிதப்புலிகளை இவர் எதற்காக அழைத்தார்? அவர்களின் உதவி இவருக்கு தேவைப்படிருக்கு. ட்ரம்பின் தோல்வி, ஏமாற்றம், அவமானம் இப்படி வெளிவருகிறது. கோழைகளை அழைத்த இவர் மட்டும் வீரனாம்.
  17. வடக்கில் நாலு தமிழருக்கு ஒரு இராணுவம் எனும் வீதத்தில் தமிழர் நிலங்களிலேயே இராணுவம் குடியிருக்கு, வடக்கில் வசிக்கும் சிங்கள மக்களுக்கும் அதிகமான விகாரைகள் அதுவும் தமிழரின் நிலங்களில் எழுந்து நிக்குது, தமிழரோ நிலம் இருந்தும் உறவுகள் வீட்டில், வாடகை வீட்டில், அகதிகளாக வாழுகிறார்கள். அப்படி இவர்களுக்கு என்னதான் பிரச்சனை? அப்படி பிரச்சனை இருந்தால், இங்கே காவற்துறை இருக்கிறது, நீதிமன்றங்கள் இருக்கின்றன. பிரச்சனை இருந்தால் அங்க முறையிடாமல் கொழுப்புக்கு ஏன் நடைபயணம்? ஓ.... அங்கே உள்ளவர்களை உசுப்பிவிடவேண்டுமென பிக்குகள் துடிக்கிறார்கள். அவர்களது போராட்டங்கள், மகாநாடுகளெல்லாம் பிசுபிசுத்துப்போனதால் இப்படி கிளம்பியிருக்கிறார்கள். படத்தில் தமிழிலும் எழுதி தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்கள் கொழுப்பிலிருந்து இறக்கப்பட்டவர்கள். அதில் சில பெண்கள் பொட்டு வைத்திருக்கிறார்கள், அருண் சிர்த்தாத்தின் ஆட்கள் போலிருக்கிறது. அடுத்து கோத்தா கைதை திசை மாற்றுவதற்கு பல நாடகங்கள் அரங்கேற்றுவார்கள் கள்ளர், கொலைகாரர் கூட்டம். ஏதேதோ செய்து பார்க்கிறார்கள், சவால் விடுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், ஒன்றும் யாரிடமும் எடுபடுவதாக தெரியவில்லை. விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது.
  18. ட்ரம்ப், ஓவரா கெத்துக்காட்டி வெனிசுலா மாதிரி, அயத்துல்லா அலி கொமெய்னியை கொலை செய்தவுடன் போர் முடிந்துவிடுமென தப்புக்கணக்கு போட்டு வாங்கிக்கொண்டதுதான் மிச்சம். போர் முடிந்தவுடனேயோ, இவர்களின் பதவிக்காலம் முடிந்தவுடனேயோ இரண்டு சாத்தான்களையும் சிறையில் அடைத்து, சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையேல் சர்வதேச குற்றப்புலனாய்வு நீதிமன்றம் இவர்களை கைது செய்து தண்டிக்கவேண்டும். இந்த நெத்தன்யாகு, ட்ரம்ப் ஐ விட இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் முட்டாள்கள், போர் வெறி பிடித்தவர்கள்.
  19. ட்ரம்ப், ஈரானை வெனிசுலா போன்றே நினைத்து மற்றைய நாடுகளை ஆச்சரியப்படுத்த நினைத்து தொடங்கியிருப்பார், அதைவிட, எல்லா நாடுகளும் தானாகவே தனக்கு ஆதரவு தருமெனவும் கனவு கண்டிருப்பார். ட்ரம்ப் மற்றைய நாடுகள் மீது தேவையற்ற வரிகளை சுமத்தி அவர்களை கடுப்பேற்றிவிட்டு உதவியை எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம். இப்போ சீனா, ஜப்பானை கெஞ்சவேண்டிய நிலைமை. "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல் இவ்வளவு காலமும் வல்லரசு கனவில் மிதந்த அமெரிக்காவுக்கு அவமானம். இனி வருங்காலத்தில் அரபு நாடுகள் அமெரிக்காவை நம்பவோ அல்லது தமது நாடுகளுக்குள் அனுமதிக்கவோ விரும்பாது. அமெரிக்காவின் படை பலமோ, அதிகாரமோ அவர்களை பாதுகாக்கவில்லை. மாறாக அமெரிக்காவை உள்நுழைத்ததன் விளைவை அது தனது சக்திக்கு மேல் சந்தித்துள்ளது. வருங்காலத்தில் வளைகுடா நாடுகள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கூட்டாகசெயற்பட முயற்சிக்க வேண்டும்.
  20. நான்தான் உலக வல்லரசு என கொக்கரித்த, மற்றைய நாடுகளை அச்சுறுத்திய அமெரிக்காவின் முகத்திரை கிழிந்தது. ட்ரம்ப் சொல்லுவார், தனது திட்டம் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் என்று, எவ்வளவு காலம் தான் உயிரோடு இருப்பேனோ தெரியாது என்றும் சொன்னார். இன்று இரானியர்களையும் அவர்களது போர்த்திறமைகளையும் போற்றுகிறார். நெதன்யாகுவோ, எங்களின் இலக்குகளை அடையும் வரை போர் செய்வோம் என்றவர், விழுந்தவன் மீசையில மண் ஒட்ட வில்லையாம். ஈரானின் அச்சுறுத்தலுக்குரிய காரணிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்தது வெளியேறுகிறோம் என்கிறார். நெதென்யாகுவும் ட்ரம்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஈரானை அழிக்க ஒன்றுபட்டு புறப்பட்டவர்கள், வேறுபட்டு நிற்கிறார்கள். இந்தப்போரினால் ட்ரம்ப் உலக நாடுகளாலும் சொந்த மக்களாலும் கைவிடப்படுகிறார். நெதன்யாகுவின் பேராசை, பயம், அவரின் நாட்டுக்கும் அழிவை கொடுத்துள்ளது. ஈரான் இதை, சும்மா விடப்போவதில்லை. இனிமேற்தான் அது தனது பழிவாங்கலை தொடங்கும். அதை தாங்க ட்ரம்பும் நெதன்யாகுவும் தயாராக இருக்க வேண்டும். இனி அமெரிக்கா தலைக்கனம் காட்ட முடியாது. முட்டாள் ட்ரம்பால் அமெரிக்காவை எந்த நாடும் மதிக்காது, இனிமேல் நட்பு நாடுகளை நம்பி வலிச்சண்டைக்கு போகாது அமெரிக்கா. உண்மையிலேயே நட்பு நாடுகள் எடுத்த முடிவே சரியானது. நட்பு நாடுகள் எந்தச்சந்தர்ப்பத்தில் உதவி புரியும், சும்மா எதேச்சாதிகாரமாய் பிடிக்கும் சண்டைகளுக்கு எங்கள் வீரர்களை நாங்கள் இழக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். இது கூட தெரியாத ட்ரம்ப், சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்படாதவர் உலக தலைவராம், அவர் எப்படி மற்றவர்களின் உதவியை மட்டும் எதிர்பார்க்கலாம்?
  21. கிறிஸ்தவ மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது என்பது, பிழையாக விளங்கப்படுள்ளது, இல்லை வேண்டுமென்றே திரிபு படுத்தப்பட்டுள்ளது என்றுதான் நான் நினைக்கிறன். கல்வி சம்பந்தப்பட்ட துறை இருக்கும்போது போலீசார் தீர்த்து வைத்தனர் எனக்கூறி பொலிஸாருக்கு பொன்னாடை போர்த்துவதிலிருந்தே தெரிகிறது. பொலிஸாருக்கு அந்தப்பிரச்சனையில் தலையிடவோ அல்லது போலீசாரிடம் இதைப்பற்றி முறையிடவோ தேவையில்லை, அப்படி போலீசார் தீர்த்து வைத்திருந்தாற்கூட பொன்னாடை போர்த்துவதன் அவசியமென்ன? அவர்களுக்கு அரசாங்கம் எதற்கு சம்பளம் வழங்குகிறது? மாறி மாறி கொழுத்துவோமென சவால் விடுகிறார்கள். அன்பையும் கருணையையும் சமத்துவத்தையும் பொறுமையையும் போதிக்க வேண்டியவர்கள் எடுத்ததற்கெல்லாம் கொளுத்துவோம் என்று எச்சரிக்கிறார்கள்.
  22. அமெரிக்காவுக்கு நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, தன் அதிகாரமே பெரிது. நாளைக்கே இஸ்ரேலுக்கு எதிரான அறிக்கையும் வரலாம், அதே போலவே நெத்தன்யாகுவும், ஈரான் தனது சொந்த தாக்குதலாலேயே வீழ்ந்தது என்று உரிமை கொண்டாட நினைக்கிறார். இவர்களில் யாருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையானவர்களுமில்லை. சிலர் நெத்தன்யாகுவை வாலாட்டும் நாய் என்று விமர்ச்சிக்கிறார்கள். ட்ரம்புக்கு பெருத்த அவமானம், நட்பு நாடுகள் அவருக்கு கை கொடுக்க மறுத்தது. அவர் போய் சீண்டுவார் மற்றைய நாடுகள் அவரை காப்பாற்ற தங்கள் வீரரை பலி கொடுக்க வேண்டும். இப்படி இவரை தனித்து விட்டாற்த்தான் பாடம் படிப்பார். இது எங்கள் போரல்ல, எங்களை கேட்டு போர் தொடங்கப்படவில்லையென முகத்தில் அறைந்தாற்போல் கூறிவிட்டன.
  23. அதை இப்போதே வளைகுடா நாடுகள் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட நல்லதொரு சந்தர்ப்பம். இல்லையேல் ஒருநாள் அவர்களும் அமெரிக்காவால் தீக்கிரையாக்கப்படுவார்கள்.
  24. இந்தப்பிரச்சினையை போலீசார் விசாரிக்க முடியுமா?யார் யார் விசாரிக்கபட்டார்கள்? என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று எதுவும் கூறவில்லை, பொலிஸாருக்கு எதுக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள்? மக்களின் சமூக பிரச்சனைகளை தீர்க்க முடியாத போலீசார், கல்விசார் பிரச்சனைகளை தீர்க்கமுடியுமா? சைவ ஆலயங்களை இடித்து பௌத்த விகாரைகளை அமைப்போரையும் போலீசார் விசாரித்து பிரச்சனைகளை தீர்த்து சமூகத்தில் இந, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமே? என்ன கோமாளிக்கூத்தெல்லாம் நடத்துது சிவசேனை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.