Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. விகாரைக்குரிய காணியை தவிர்த்து, பொதுமக்களின் காணியில் விகாரை கட்ட வேண்டிய தேவை என்ன? அது இந மத நல்லிணக்கமா அல்லது அதிகார தோரணையா? தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை, எல்லாவற்றையும் அடித்து பிடுங்குவது என்பதே இவர்களின் அரசியல் கொள்கை.
  2. தயாசிறிக்கே பொறுக்கவில்லை, இராணுவ பின்புலம் கொண்ட இருவரின் நியமனத்திற்கு சிறிதரன் ஆதரவளித்தது. அப்போ மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவத்தினரை தண்டிக்க தயாசிறி ஆதரவு வழங்குவாரா? அல்லது யாரோ சொல்லிக்கொடுத்து கதைக்கிறாரா? அது இருக்கட்டும், தமிழருக்கெதிரான இந அழிப்பின் தளபதியான பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதையும் தயாசிறி தெரிவிக்க வேண்டும்.
  3. அனுரா யாழ்ப்பாணம் வந்து மக்களுடன் பொங்கல் கொண்டாடி, தனது கட்சி அரசியலை முன்னுக்கு கொண்டுபோக முயற்சிக்கிறார். அவர் எதிர்பாராத அளவு மக்கள் அவருக்கு வாக்குப்போட்டு தெரிந்துள்ளனர். அதை ஏன் சிவஞானம் ஷோ காட்டுகிறார்கள் என நினைக்கவேண்டும்? யாருக்கு ஷோ காட்டினார்கள்? அப்படியெனில் இவர்கள் செய்வதெல்லாம் ஷோ காட்டுவதற்காகத்தானா? இவர்களால் ஏன் மக்களோடு பொங்கல் கொண்டாட முடியவில்லை?
  4. இவர்கள் விட்ட தவறே, அனுரா கட்சி வடக்கில் நுழைந்ததும் பொங்கல் விழா கொண்டாடியதும் என்பதையும் ஏற்க முடியவில்லை, அனுரா பொங்கல் கொண்டாடியதை பொறுக்கவும் முடியவில்லை. இவர்கள் இல்லாவிட்டால் என்ன? அவர் மக்களோடு பொங்கல் கொண்டாட வந்தார், கொண்டாடினார், போனார். இவர் ஏன் புலம்புகிறார்? உங்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது மரியாதை அவ்வளவுதான். உங்களை கூட்டி வைத்து கும்மாளம் அடித்தவர்கள் எதை சாதித்தார்கள் மக்களுக்கு? அல்லது நீங்கள்தான் எதை சாதித்தீர்கள்? நீங்கள் நிஞாயமாக நடந்திருந்தால் மக்கள் உங்களை தவிர்த்து அனுராவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பார்களா? மக்களே உங்களை மதிக்கவில்லை, அனுரா ஏன் அழைக்கப்போகிறார்? சிவஞானத்தின் அறிவு அவ்வளவுதான்! இவர்கள் எல்லாம் கட்சி கொள்கை திட்டத்தின் படி அங்கீகாரம் பெற்றா பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்? மக்கள் இவர்களை விட்டு வெகுதூரம் சென்றதே அனுரா வடக்கிற்கு வரக்காரணம் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை பாவம் இவரால். கட்சிப்பிரச்சனை கட்சிக்குள் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்கப்போவதில்லை. கட்சிப்பிரச்சனை வெளியில் வந்தால், நீதிமன்றம் வந்தால் யாரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். நீங்களே உங்கள் உறுப்பினர்களை பகிரங்கமாக விமர்ச்சிக்கிறீர்கள், அவர்கள் மேல் சேறடிக்கிறீர்கள், தெற்கிற்கு செய்தியனுப்பி விசாரணை செய்யச்சொல்லி கேட்க்கிறீர்கள், உங்கள் தவறுகளை மறைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஒரு கட்சியை விமர்சித்து விட்டு உங்கள் தேவைக்காக அந்தக்கட்சியை தேடிச்சென்று கட்டி தழுவுகிறீர்கள், காரணம் என்ன? மக்கள் உங்களை நிராகரித்து விட்டதனாலேயே. இதற்குள் தமிழரசுக்கட்சிக்குள் மறைந்திருந்து போட்ட அட்டகாசம் எல்லாம் போதும். குந்தியிருந்த வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்கே போய் குந்தப்போகிறார்கள்? சிவஞானத்திற்கு தன் முதுகிலுள்ள அழுக்கும் தெரியவில்லை, கட்சியிலுள்ள சர்வாதிகாரமும் புரியவில்லை, இதற்குள் மற்றவர்களை சாட வெளிக்கிட்டு தலைகுனியப்போகிறார்.
  5. ம், அவ அனுமதி பெறாமல் கற்றிருக்கிறார், இவர்கள் அனுமதி கொடுக்காமல் அவரின் பெயரை சரி பார்க்காமல் கற்பித்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் மாணவர் தொகை, வருகை சரிபார்க்காமல் கற்பிப்பார்களோ? அது இருக்க, இப்போ மருத்துவ கற்கை சித்தியெய்திய சான்றிதழ் இல்லாமற்கூட தனியார் மருத்துவ நிலையம் நடத்துகிறார்களாம், அவர்கள் பிடிபட்டவுடன் போலி வைத்தியர் என்கிறார்கள்.
  6. அரியநேந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போதுதான் உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்க, ஜோசவ் பரராஜசிங்கத்தின் நினைவு கூரல் கூட்டத்திற்கு அரியநேந்திரனை அழைத்தமைக்காக நீங்களும் சுமந்திரனால் கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக கூறுகிறார்களே, அதெப்படி? முதலில் உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவது, பின்தான் காரணம் தேடிக் கண்டுபிடிப்பதா? அரசியல் அறிவு, ஒழுக்கம் இல்லாதவர்களின் செயற்பாடு இப்படித்தான் இருக்கும். கட்சிக்காகவே மக்கள் என்பது இவர்களின் முட்டாள்த்தனமான வாதம். கட்சி உறுப்பினர் யாவரும் சேர்ந்து, சுமந்திரன் கட்சியை விட்டு நீங்கினால் கட்சி கூடுவோமென போராடுங்கள், இல்லையேல் எல்லோரும் கட்சியை விட்டு வெளியேறுங்கள். எப்படியிருந்தாலும் சுமந்திரன் உங்கள் எல்லோரையும் வெளியேற்றி வீட்டைப்பூட்டி திறப்பை எடுப்பார். ஆனால் யாரிடம் கொடுப்பது என்பதே கேள்வி. அவருக்கு இந்தப்பணியை பூர்த்தி செய்யச்சொல்லி அமர்த்தியவர்கள் இப்போ அரசியலில் கேள்விக்குறியாக உள்ளார்கள். இப்போ அறிவற்ற சுமந்திரனின் நிலைதான் தொங்குபொறி!
  7. ஆரத்தி எடுப்பது தமிழரின் கலாச்சாரம், ஆனால் காலை தொட்டுக்கும்பிடுவது நம் பண்பாட்டில் அப்படி வழக்கில் இல்லை. ஒருவேளை சந்திரசேகரன் அழைத்து வந்தவர்களோ தெரியாது.
  8. பொதுவாக ஜனாதிபதி ஒருவர் யாழ்ப்பாணம் வந்தால்; கறுப்பு கொடி எதிர்ப்பு காட்டுவது, போராட்டம் நடத்துவது, பகிஷ்கரிப்பு கடையடைப்பு செய்வது, டக்கியார் மக்களை ஏமாற்றி கூட்டம் சேர்த்துகொண்டுபோய் வரவேற்பது, அவர்களும் இராணுவ, போலீஸ் பாதுகாப்போடு வந்து மேடையில் ஏமாற்று வார்த்தைகளை கூறிவிட்டு தென்பகுதிக்குப்போய் வேறொரு விளக்கம் கொடுப்பார்கள். இவர் என்னடாவெண்டால்; சாதாரண உடையில் வாறார், மக்கள் அவரை பாக்க முண்டியடிக்கிறார்கள், அரசியல் வாதிகளை காணேல, மக்களோட கைகுலுக்குகிறார், நடைப்பயிற்சி செய்கிறார், அவர்களோடு கூட இருந்து பொங்கி சாப்பிடுகிறார். தமிழரை அழித்துவிட்டு பாற்சோறு சாப்பிட்ட நினைவு யாருக்கும் வந்திருக்காது. தமிழ், சிங்கள உறவை பிரிக்க புத்தர் சிலையை கொண்டு ஒரு கூட்டம் அலையுது, இவர் என்னடா என்றால் தமிழரோடு பொங்கல் கொண்டாட வடக்கிற்கு வருகிறார், வழமையாக தேர்தல்காலத்திற்தான் பொய்யான வாக்குறுதிகளோடு வருவார்கள். இந்த உறவு நிலைக்க வேண்டும், தமிழரின் அபிலாசைகள் நிறைவேற்றி வைக்கப்படவேண்டும். அதுசரி.... நான்தான் அனுரா காவடி என்று களத்தில் முத்திரை குற்றினார்கள், இப்போ யாரையும் காணல கருத்துப்பரிமாற. நான்தான் மக்களை திரட்டி வரவேற்பளித்தேன் என்று கூறாதவரை சந்தோசம். பாவம் தமிழர்! அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே. அடுத்த தேர்தலின் முடிவுகளை மக்களே சொல்லிவிட்டார்கள். இனி வருங்காலத்தில் சவால் விடும்போது இதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
  9. ஹாஹா..... காலம் மாறிவிட்டது. பெண்களுக்கு மட்டுந்தான் கற்பு, அதுபோனால் வாழமுடியாது என்கிற வாதம் மலையேறிவிட்டது. காலம் எப்படியெல்லாம் மாறுகிறது. இனி இவர் அந்தபெண்ணைதான் கைப்பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட புகைப்படங்களாக இருக்கும், அதுதான் பெடியன் முறைப்பாடு அளித்திருக்கிறான். அதென்ன அசிங்க பழக்கம் நிர்வாண புகைப்படங்களை ஒருவருக்கொருவர் அனுப்புவது? அப்படியே தெருவிலும் போவது, வீட்டிலுள்ளவர்களுக்கும் கொஞ்சம் காட்டி அதன் விளைவு என்னவென்று பார்ப்பது. பெண் முந்திக்கொண்டு விட்டார்!
  10. பொங்கல் விழா கொண்டாட யாழ்ப்பாணம் சென்ற அனுராவுடன் காணொளி எடுப்பதற்கு மக்கள் முண்டியடித்ததை பார்க்கும் போது அனுரா வரக்கூடிய வாய்ப்புள்ளது. இதுவரையில் எனக்குத்தெரிந்து, ஒரு இலங்கை ஜனாதிபதியை தமிழ் மக்கள் இப்படி வரவேற்றத்தை நான் காணவில்லை எப்படியும் ஒரு கலவரத்தை ஆரம்பித்து இந்த உறவை சிதைக்க முயல்வர் இனவாதிகள்.
  11. அனுரா வருவாரோ இல்லையோ பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், ஆனால் அர்ச்சுனாவை கொழும்பில் தேர்தலில் நிற்கும்படி சஜித் வற்புறுத்துகிறாரமெல்லே. சஜித் கேட்டாரோ இல்லையோ, இவருக்கு அங்கே நிற்பதுதான் சௌகரியம். சட்டவிரோத தையிட்டி விகாரை விடையத்தில் இவர் பொய்யான தகவல்களை பரப்பி தென்னிலங்கையை மகிழச்செய்யும் அடுத்த சுமந்திரன் இவர்! ஒருநாளைக்கு பிரபாகரன் எனக்கு கடவுள் என்று முழங்குவார், அடுத்தநாள் ராஜபக்ச குடும்பத்தினர் செய்த கொடுமைகளை நான் மறந்துவிட்டேன், நாமலே அடுத்த ஜனாதிபதி, சிங்களவர் எப்படி மஹிந்தவை மறந்தனர் என்று கேள்வி வேற கேட்பார், இன்னொருநாள் சஜித் என்னை அழைத்தார் என்பார், வேறொரு நாள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வாக்களியுங்கள் என்பார். இவரும் இவரின் நகைச்சுவை பேச்சுகளும், வைத்தியராக இருந்து சாதித்து அரசியலுக்குள் புகுந்தார், இனி தமிழர் தலைவராகினால் அவருக்கு நோய் முற்றிவிடும். மக்களுக்கும் நீதிமன்றத்தில் இருந்து அடிக்கடி அழைப்பாணை அழைப்பாணை வரும்.
  12. இப்போது பயங்கரவாத சட்டத்தை பாவித்து வெளியே வராதவாறு சிறையில் அடைக்கவேண்டும். புத்தபிக்குகளுக்குத்தான் இப்போ நாட்டில் வன்முறை ஒன்று வேண்டும். இவர்களின் காவியை பறித்து வீட்டுக்கு அனுப்பவேண்டும். பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஒரு விஷக்கிருமி!
  13. உதென்ன விசமத்தனமான கேள்வி? நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அதை சொல்லுங்கள் முதலில். அவரை ஆதரிப்பதென்றால்; அவரைப்போல் கொள்கையில்லாமல், நேரம் ஒரு கதை பேசிக்கொண்டு, தான் பேசுவதே என்னவென்று தெரியாதவர்களாக கூத்தாடியாக இருக்கவேண்டும்.
  14. பாராளுமன்றத்தில் இருப்பதெல்லாம் ஊழல்வாதிகளும் , கள்ளரும், குடுகாரரும் கொலை, கொள்ளையாளரும் , பைத்தியங்களும், படிப்பு, பண்பு, அறிவு திறமை இல்லாதவர்களுமே. இவர்கள் போதாது என்று இன்னும் பைத்தியங்களை அனுப்பிவைக்கிறார்கள் மக்கள். இவர்கள் வெளியில் இருந்தால் தங்களுக்கு தொல்லை என்று எல்லோரையும் ஒரே இடத்தில வைத்து, யார் முத்தினது என்று கண்டுபிடிப்பதற்காக. தங்கள் குற்றங்களையும் அழுக்குகளையும் மறைக்க வேண்டுமென்றால் மற்றவர்களை குற்றவாளிகளாக்க வேண்டும் சேறடிக்க வேண்டும் விமர்ச்சிக்கவேண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டும் அவற்றில் இவர்கள் குறைகள் மறைக்கப்பட்டுவிடுமென நினைக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்
  15. நாம் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும் ஆறாது உங்கள் உள்ளம், அந்த இழப்பை ஈடு செய்யவும் முடியாது. மீளாத்துயரில் இருக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அதிலிருந்து மீண்டு வரவும், அவரின் ஆன்மா அமைதியில் இறைவனோடு இளைப்பாறவும் பிரார்த்திக்கிறேன்.
  16. தெரியும், ஒரு தொழில் கூட மிச்சமில்லை, எல்லாமே அவர்கள்தான். தனியார் தொழிற்சாலை, அதில் எப்படி திருட முடிந்தது என்பதே எனது கேள்வி. அதுவும் ஒரு வருடத்தில் ஐம்பது மில்லியன், எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தார்கள்? அரசாங்க நிறுவனத்தில் அரச ஊழியர், அரசியல்வாதிகள் செய்வதுதான் இதுவரைக்கால வழமை. இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.
  17. தங்கள் ஊழல் வெளியில் தெரிவதற்குமுன், மக்களின் கவனத்தை திசைமாற்றுவதற்கே எல்லா அரசியல்வாதிகளும் இப்படி சில்லறை விடையங்களை கையிலெடுத்து விமர்சிப்பதும் போராடி நாடகம் நடத்துவதென்றும் மக்களுக்கு தெரியும். அதனாற்தான் இவர்களது அறைகூவலுக்கு யாரும் இப்போது செவிமடுப்பதில்லை, போராட்டங்களில் பங்கெடுப்பதுமில்லை. ஊழல்வாதிகளும் கூலிக்கு மாரடிப்பவர்களும் இப்படி காலத்தை வீணாக்கி தங்களுக்கு வெள்ளையடிப்பதற்காக பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அடுத்த கருணாநிதி நாடகம்! என்ன ஒரு நாடகம், வந்தவுடன் படுத்துவிட்டார் போலும். படுக்கை எல்லாம் தயாராக்கி வைத்துவிட்டுத்தான் சத்தியாக்கிரகம் தொடங்கியிருக்கிறார். ஏதோ இறுதி வார்த்தை சொல்கிறார் என நான் நினைத்துவிட்டேன். இப்போ இவர்களுக்கு வேலையில்லை, கொள்ளையடிக்க முடியாது, ஊழல் குற்ற விசாரணைகளை எதிர்கொள்கிறார்கள், அதனால் எங்கே ஏதாவது விடையம் கிடைக்கும் தெருவில் இறங்கி கூப்பாடு போடலாமென அலைகிறார்கள்.
  18. விமலுக்கு நன்றாகவே தெரியும், தான் உண்ணாவிரதமிருந்தால் எல்லாரும் சேர்ந்து தன்னை சாக விட்டுவிடுவார்கள் என்பது. அதனாலேயே சத்தியாக்கிரகமாக மாற்றியிருப்பார். அவர் என்ன போராட்டம் செய்தாலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படப்போவதில்லை, இருந்து, எழும்பி, பின் களைத்து வராமலே போய்விடுவார். இவருக்கு இருப்பது வாய் மட்டுந்தான். திஸ்ஸ விகாரைக்கு மக்களை திரட்ட பிக்குகளையும் திரட்டிக்கொண்டு தெருவில நின்று ஊழையிட்டு விட்டு போய் படுத்தவர், இப்போ வந்து கருணாநிதி ஸ்ரைலில் கருப்பு கண்ணாடி, வந்த கணத்திலேயே படுத்துவிட்டார், தூக்கம் கலைய எழும்பிப்போவார். பொதுஅரங்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி அசிங்கமாக பேசிக்கொண்டு, எப்படி கல்வி திட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்ய முடியுது இவரால்? அசிங்கமாக பேசுவது இவர்களுக்கு சர்வ சாதாரணம், பிறகு கல்வி திட்டம் பிழையாம் என்கிற குற்றச்சாட்டு. இவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லை? ஒரு நாட்டின் பிரதமரை பகிரங்கமாக இழிவு படுத்துவதை வேடிக்கை பார்ப்பது தான் பொலிஸாரின் கடமையா? ஐ .நாவின் மனித உரிமையாளரை தான் கலியாணம் கட்டுகிறேன் என்று சொன்னார் மேவின், அது அவரின் கருத்து சுதந்திரமென்று விளக்கமளித்தார் மஹிந்தா. இதுதான் ஒரு நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கருத்துச்சுதந்திரம். நாமல் பேரணி நடத்தினார் எதுவும் சாதிக்க முடியவில்லை. வந்தது இயற்கை சீற்றம். பயமுறுத்தல், இல்லாத விடயங்களை பரப்புதல், சேறடித்தல் வேலைகளை செய்கிறார். பூச்சாண்டி பிடிக்கும் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவதுபோல், அமெரிக்கா இலங்கைக்குள் நுழையப்போகுதாம் என்று அனுராவுக்கு பயம் காட்டுகிறார். இவர் எதிர்கால ஜனாதிபதியாம். இவர் ஜனாதிபதியாக வந்தால் எப்படியிருக்கும்? இனவாதம் மதவாதம் பேசும் அரசியல் கலாச்சாரமே இந்த நாட்டில் இருக்கவேண்டும், அது இல்லாத, பேசாதவர் அரசியல் செய்யக்கூடாது என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம். எப்போ இவர்களின் ஊழல், கொலை, கொள்ளை வெளிவருகிறதோ, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதோ உடனே நாட்டை குழப்பி, ஆட்சியை பிடித்து தம்மை புனிதர்களாக, சிங்கள, பௌத்த காவலர்களாக காட்டுவார்கள். இதில இன்னொரு பகிடி என்னவென்றால்; தேசிய மக்கள் சக்தி பாரியளவில் பொய்பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றியதால்தெய்வ கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியதாம், வஜிர அபேவர்த்தன சொல்கிறார். அப்போ, சுனாமி ஏன் வந்தது? எத்தனை உயிர்களை துடிக்க துடிக்க கொன்று குவிக்கும்போது தெய்வம் மகிழ்ச்சியடைந்ததோ? சரி, இவர்களது பொய்யால் அனர்த்தம் ஏற்பட்டதென்றால் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் அல்லவா அனர்த்தம் நேரிடிருக்க வேண்டும்? பருவகால அனர்தத்திற்கும், தெய்வ கோபத்திற்கும் வேறுபாடு தெரியாத அமைச்சர். கல்வியறிவு இல்லை, திறமையில்லை நாட்டை நிர்வகிக்க. இனவாதம், மதவாதம் பேசி அரசியலை கைப்பற்றி கொள்ளையடிப்பது, கேள்வி கேட்போரை கொலை செய்வது, இவர்கள்தான் சிறந்த அரசியல்வாதிகள். நாட்டில் மக்களை சிந்திக்க விடுவதில்லை, உண்மையை தெரிந்துகொள்ள அனுமதிப்பதில்லை.
  19. தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர், தமிழர் பிரதேசங்களிலும் தனக்கு உயிரச்சுறுத்தல் எனக்கூறி அந்த மக்களை கொன்றொழித்த இராணுவத்தின் பாதுகாப்பு, அதற்கும் மேலதிகமாக போலீஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பெற்று வலம் வந்து, அந்த மக்களின் வாக்கோடு பாராளுமன்றம் சென்ற ஒரு உறுப்பினரை உலகில் வேறெங்காவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இவர் செய்கிற கோமாளித்தனம் அதுதான். அந்தமக்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்லிக்கொண்டு, அந்த மக்களிடம் வாக்கு பெற்று, அந்த மக்களை கைகழுவி, தன் பதவி காப்பவர். அறிவுமில்லை, திறமையுமில்லை, மனச்சாட்சியுமில்லை. ஆனால் எல்லா வசதிகளும், பதவிகளும், தகுதிகளும் தான் அனுபவிக்க வேண்டுமென்கிற பேராசை மட்டுந்தான். அதற்காக அடம்பிடித்து எதுவேண்டுமானாலும் செய்வார்.
  20. தேர்தல் நெருங்கும் வேளையில் இவ்வாறான கெடுபிடிகள் ஏற்படுத்துவது சுமந்திரனின் வழக்கம். அகம்பாவம் கொண்ட சுமந்திரன் ஒரு தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சி, கூட்டுக்கட்சிகளை விட்டு தனியாக போட்டியிடுமென்று தன்னிச்சையாக அறிவித்தார், அடுத்து ரவிராஜின் மனைவியை ஓரங்கட்ட கிளம்பி ஒரு கோமாளியையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க வழியமைத்தார், இப்போ சிறிதரனில் பலகட்சிகள் பயத்தில் இருக்கின்றன. சிறிதரனை, சிறி நேசனை கட்சியிலிருந்து விலக்கிவிட்டால் அந்த வாக்குகள் தமக்குச்சேரும் என கனவு கண்டு, மக்கள் வேறொரு கட்சியை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறார்கள். இவரது கடைசி முயற்சி இது மட்டுமல்ல பொறாமையும் பயமும் கூட. தமக்கு பதவி வேண்டுமென்றால் இல்லாத பதவிகளையும் ஏற்படுத்தி அனுபவிப்பார்கள், மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் இல்லாத குற்றச்சாட்டுக்களும் சேறடிப்புகளும் செய்வார்கள். அங்காலை ஒருவர் ஜனாதிபதி கனவில் என்ன செய்வதென்று தெரியாமல் வெறிபிடித்து ஆடுகிறார், இங்காலை இவர் முதலமைச்சர் கனவில். பதவி கொடுக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்த இவர், பதவியை குறிவைத்து மற்றவர்களை கட்சியை விட்டு வெளியேற்றுகிறார் என்பதே உண்மை. சிறிதரனைதெரிந்தெடுக்கும் மக்கள், அவர் எந்தக்கட்சியில் தேர்தலில் நின்றாலும் தெரிந்தெடுப்பார்கள். இவர்கள் நினைப்பதுபோன்று தமிழரசுக்கட்சி என்பதாலேயே மக்கள் அவரை தெரிந்தெடுப்பது என்பது பொய் என்பதை, சாவகச்சேரியில் மக்கள் நிரூபித்து விட்டார்கள். கட்சியை இல்லாமற்செய்வதே இப்படியான கறையான்கள்தான். மக்கள் தங்களுக்கு சேவை செய்பவர்களைத்தான் தேர்தெடுப்பார்கள், சும்மா இருப்பவர்களையல்ல. நமது கட்சியைத்தான் மக்கள் தெரிந்தெடுப்பார்கள் என கட்சியின் பெயரை குத்தகைக்கு எடுத்துவிட்டு சும்மா இருந்துவிட்டு வாக்குசேகரித்த காலம் மலையேறி பல கட்சிகளை உள் இழுத்து விட்டிருக்கிறார்கள். பின் மக்களை குறை கூறுவது. தாமும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் செய்ய விட மாட்டார்கள்.
  21. எல்லோருக்கும் வாழ்வில் நோய், மரணம் உறுதி, அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எல்லோரின் வாழ்வில் ஏற்படும் நோயைப்பற்றி, மரணத்தைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை. இருந்தபோதிலும் சிலரின் வாழ்வில் இந்த நிலைகள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் தம்மை இழந்து வருத்தி, தம் இன்ப துன்பம், களைப்பு பாக்காமல் அடுத்தவரின் விடிவுக்காக, மகிழ்ச்சிக்காக இடைவிடாமல் உழைப்பார்கள், தங்களால் இயன்றதை செய்வார்கள். அவர்களுக்கு நோயோ, மரணமோ நேரிட்டால் அவரால் பாதுகாக்கப்பட்டவர்கள், பயனடைந்தவர்கள் சொல்வது. "இப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கான இப்படி நேர்ந்தது? அவர் ஒரு தியாகி, அவருக்கு இப்படி வந்திருக்கவே கூடாது,இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாமென வருந்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் இறந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள் தியாகியாக. அதேநேரம் தமது அதிகார திமிரினால், வரட்டுகவுரவத்தினால், பழிவாங்கலினால்,மற்றவர்களை வருத்தி, தாம் இன்பம் பெறுவதற்காக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து வாழ்பவர்களுக்கு இப்படியான நிலை ஏற்படும்பொழுது, பாவி! எத்தனை பேரின் வாழ்வை கெடுத்தார்கள், இப்போ வந்த இந்த நோய், மரணம் பல ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கக்கூடாதா இவருக்கு? எத்தனை பேரின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டிருக்கும் என நினைக்கத்தோன்றும். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள். அவரவர் வாழ்வு எப்படியானதென்பதை அவர்கள் நோயின், மரணத்தின் போது கூடியிருப்போர் கூறும் கருத்துக்களில் இருந்து வெளிப்படும். நாகாசுரனை கொன்றது தெய்வம். அவன் கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக. அதற்காக தெய்வத்தை குறை கூறுவோமா? அல்லது நாகாசுரனால் வதைக்கப்பட்டவர்களை குறை கூறுவோமா?
  22. அப்போ, எதிர்க்கட்சிகள் கூவுவதுபோல் இது அரசியல் பழிவாங்கல் அல்ல. நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கை விசாரித்து பிணை வழங்கியிருக்கிறது. பிணை மட்டுந்தான் விடுதலையல்ல. அரசியல் செய்வார்கள், சவால் விடுவார்கள், கொலை, கொள்ளை, எல்லா குற்றங்களும் செய்வார்கள், கைது, விசாரணை என்று வந்துவிட்டால்; இல்லாத நோயெல்லாம் வந்து வைத்தியசாலையில் படுத்து விடுவார்கள். அவசரசிகிச்சை, சத்திரசிகிச்சை என்று சிபாரிசு வேற. பிணையில் வந்தவுடன் மீண்டும் விறுவிறுப்பான அரசியலை, விட்ட இடத்திலிருந்து தொடருவார்கள். இவருக்காக வாதாடிய சட்டத்தரணி சாலிய பிரீஸ் சொல்லி இவரை பிணை எடுத்த விடயம், முன்பு சிறையில் தாக்கியதால் இவருக்கு ஞாபக மறதி, ஒழுங்காக காதுகேக்காது, பார்வைக்கோளாறு, நீரிழிழிவு இன்னும் பல்வேறு நோய்கள் இருப்பதாக அடுக்கி, இவரால் திருப்பி கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளால் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, அதற்குரிய எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை, சிறையில் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருக்கிறது, அதனாலேயே அரசாங்கம் அவருக்கு மெய்ப்பாதுகாவலர்களை அளித்திருக்கிறது என்று சொல்லி பிணை பெற்று கொடுத்துள்ளார். சொன்னவர் ஒரு வைத்தியரல்ல, இவருக்காக ஆஜரான சட்டத்தரணி. இவரோ தனது அரசியல் பயணம் தடையின்றி தொடரும் என்கிறார். தமிழ் அரசியல் கைதிகள் சிறையில்சித்திரவதைப்படிருக்கிறார்கள்,அடித்துக்கொல்லப்பட்டிருக்கிறார்கள், பல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்றி இறந்திருக்கிறார்கள், அரசியல்வாதிகளால் பலவகை துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக எந்த அரசியல்வாதிகளும் சட்ட வல்லுனர்களும் நீதிபதிகளும் குரலெழுப்பியதுமில்லை, இரக்கம் காட்டியதுமில்லை, பிணை வழங்கியதுமில்லை. எதிலும் பாரபட்ஷம். இவரது சொந்தப்பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள உலக தலைவனிடம் கைமாறியிருக்கிறது. மிகுதிக்கு என்ன நடந்தது என்று சொல்லத்தவறியிருக்கிறார். அதுக்கு என்ன நடந்தது என மறந்துவிட்டாராம். அதை தான் அவரது வக்கீலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் ஞாபக மறதியாம். ஆனால் மக்களால் நிராகரிக்கப்படும்வரை அவர் அரசியல் செய்திருக்கிறார், அன்று எதை சொன்னேனோ அதையே இன்றுவரை சொல்லி வருகிறேன் என்று வேறு அடிக்கடி ஞாபகமூட்டுகிறார். அன்று சொன்னது எதுவென இன்றுவரை ஞாபகமிருக்கிறது, தொடர்ந்தும் தடையின்றி அரசியல் செய்வேன் என்கிறார், இத்தனை வியாதிகள் உள்ளவரால் எப்படி அரசியல் செய்ய முடியும்? அதைவிட இராணுவ புலனாய்வாளரால் இவருக்கு வழங்கப்படாத முப்பத்தொன்பது துப்பாக்கிகளை திரும்ப கையளித்துள்ளாராம். அவை எங்கிருந்து இவருக்கு கிடைத்தன? யாரை கொலை செய்து இவற்றை அபகரித்தார்? புலிகளையா? இராணுவத்தினரையா? விரிவாக விசாரணை நடத்தப்படவேண்டும்!
  23. என்ன செய்வது? இளமையில் அக்களிப்போடும் திமிரோடும் விதைப்பதை முதுமையில் கண்ணீரோடுதான் அறுவடை செய்யவேண்டியிருக்கிறது. "ஏழை அழுத கண்ணீர் ஏழுதலைமுறைக்கும்." என்பார்கள். "ஏழை விட்ட கண்ணீர் கூரிய வாளை ஒத்தது." என்றும் சொல்வார்கள். "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.