Everything posted by satan
-
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
தமிழீழ போராட்டத்தில் சுயமாக இணைந்து, பயிற்சிகள் பெற்று போராடிய இவர்கள், பின் அந்த இயக்கத்திற்கு துரோகம் செய்து, அதற்கு எதிராக போராடினார்கள், காட்டிக்கொடுத்தார்கள் அந்த இயக்கத்தை அழிக்க முக்கிய சக்திகளாக இயங்கினார்கள். இயக்க ஒழுக்கங்களை மீறி கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல், பாலியல் வல்லுறவு கலாச்சாரத்தில் ஊறியவர்கள், அரசியலாளர்கள், அமைச்சர்கள் தங்கள் சொந்த பழிவாங்கலுக்காக இவர்களை பயன்படுத்தியவர்கள், அனுராவை அழிப்பதற்கு, நாட்டின் இஸ்திரத்தன்மையை பாதிக்க பயன்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது அவர்களே இயங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? தாங்கள் பாதுகாத்த, நடவடிக்கை எடுக்கத்தவறிய குற்றவாளிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பது இவர்கள் நீதி. அதைத்தானே சர்வதேசமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் இவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு அதுவல்ல, அதை நிரூபிக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அவர்கள்மேல் சட்ட நடவடிக்கை எடுக்காததற்கு முன்னைய அரசுகளும் பொறுப்பு கூற வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்.
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
ஆண்டு சரியாக நினைவிலில்லை, ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது நான்காம் ஆண்டாக இருக்கலாம். ஒரு தமிழர் அன்பளிப்பாக அப்போதிருந்த விகாராதிபதிக்கு கொடுத்ததாக தகவல், அவரோடிருந்த இந்த நயினாதீவு பிக்கு அவருக்கு பிறகு சொந்தம் கொண்டாடினார், அதன் பின் ஒரு பிக்கு இங்கு விகாரை கட்ட முற்பட்ட போது, இவர் மறுப்புத்தெரிவிக்கவில்லை. அவரும் பிழைக்கட்டும் என்று விட்டு விட்டாராம். அதன்பிறகு வேறொரு பிக்குவுக்கு கைமாறியதாம், அவர் இன்னொரு பிக்குவுக்கு கொடுக்க, அவர் பிக்குவிலிருந்து விலகியபோது ஒரு இளம் பிக்கு பொறுப்பானாராம், அவர் பல்கலைக்கழகம் போவதால் இப்போதைய திஸ்ஸ விகாராதிபதி கையில் போயிருக்கிறதாம், இப்படி பல கதைகள். தனது காணி, உறுதியிருக்கிறது, என்றெல்லாம் கதைவிட்டவர் இப்போ பின் வாங்குகிறார். இந்தப்பிக்கு தலைமை பிரச்சனையில் ஏதேதோ பேசி குழப்புகிறார். திஸ்ஸ விகாராதிபதிக்கு பதவி வழங்கிய பின்னே தீவிரமாக இந்தப்பிரச்சனை பற்றி பேசினார். விகாரை கட்டும்பொழுதே இவருக்குத் தெரியும். அப்போ இவர் அதை கண்டிக்கவோ, தடுக்கவோ, அனுமதி பெற்று கட்டுங்கள் என்று அறிவுத்தவோ இல்லை. அதிலும் இப்போதைய காணிக்காரர் ஒருவர் அந்த விகாரைக்கு ஐந்து பரப்பு விட்டுக்கொடுத்திருக்கிறாராம். எல்லாம் நம்முன்னோர் விட்ட தவறு. அவர்கள் நல்லிணக்கத்தோடு பேதம் பாராட்டாமல் வாழ்ந்தார்கள், இப்போ அதுவே இனத்துக்கு மதத்திற்கு பேரிடராக மாறியுள்ளது. அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அது ஒரு இனப்பிரச்னையுமில்லை, அப்படியொரு பிரச்சினையும் நாட்டில் இல்லை, சர்வதேசம் தலையிடத்தேவையில்லை என்று சிங்களமும் நம்மில் சிலரும் அடித்துக்கூறுகின்றனர். அது நடப்பதென்றால் எப்பவோ நடந்திருக்கும், அது நடக்க வாய்ப்பேயில்லை. பிரித்தானியா நம் நாட்டுக்குள் நுழைந்து நமது அரசியல் அதிகாரங்களை, நிலங்களை குழப்பாமல் இருந்திருந்தால்; நாமே நம்மை ஆண்டிருப்போம். இப்போ இந்தப்பிரச்சனை அவர்களுக்கு பொழுதுபோக்கு, பேசுபொருள்.
-
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
முன்பெல்லாம் கண்விழித்து எழுந்தவுடன் புலிகள் பல்லவி,இப்போ புலம்பெயர்ந்தோர் பல்லவி. கைதுசெய்யப்பட்டவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மீண்டும் ஒருக்கா இவருக்கு வாசித்து காட்டுங்களப்பா, இவருக்கு வாசித்து விளங்குவதில் ஏதோ தவறு இருக்கிறதுபோலுள்ளது. இந்தக்குற்றங்கள் நாட்டில் நடந்ததா இல்லையா? சம்பவம் நடந்த சந்தர்ப்பத்தில் அந்தப்பிரதேசத்தில் ஆயுதத்துடன் நடமாடியவர்கள் யார்,யார்? இவர்கள் அந்தக்குற்றத்தை செய்யாது விட்டால் அடுத்த சந்தேகம் இராணுவத்தினர் செய்திருக்க வாய்ப்புண்டு. இவர்களை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்கள் வீட்டில் யாராவது கொலை செய்யப்பட்டிருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா? இவர்களுக்கு ஏன் ஆயுதம் வழங்கப்பட்டது அல்லது ஆயுதத்தை கையாள உரிமை அளித்தது? யார் யார் ஆட்சிக்காலத்தில் இந்தக்குற்றங்கள் நடந்தவை, ஏன் அப்போது அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை? அப்போதே சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போ புலம்பெயர்ந்தவர்கள் தலையிட்டிருக்கவும் தேவையில்லை, அனுரா கைது செய்ய வேண்டியிருக்கவும் தேவையில்லை. கொலைக்குற்றவாளிகளையும் நீதிமன்ற தண்டனைக்கைதிகளையும் விடுதலை செய்தது யார், நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்க நீதிபதிகளை வீட்டுக்கனுப்பியது யார், ஏன்? இவர்கள் பதறியடித்து தங்கள் குற்றங்களையும் கைதுகளையும் மறைக்க முயல்கின்றனரே ஒழிய இந்த ஆயுதக்குழுக்களை காப்பற்றவல்ல. இவர்களை வேண்டுமென்று திட்டமிட்டு பயன்படுத்தியதும் இவர்களே! இவர்களுக்கு ஆயுதம், பதவி, பாதுகாப்பு, வசதி வழங்கியவர்கள் இவர்கள், ஏன் வழங்கினார்கள்? பிரச்சனைக்கு ஒரு தீர்வை அடையாமல் தடுப்பதற்கு, புலிகளை பெலவீனப்படுத்துவதற்கு, மக்களை அழிப்பதற்கு, நீதியின் குரலை நசுக்குவதற்கு இந்தக்குற்றவாளிகளை பயன்படுத்திக்கொண்டார்கள். இவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களுக்காக அழுகிறார்கள் என்றால் இவர்களும் விசாரிக்கப்படவேண்டும். "சோழியன் குடுமி சும்மா ஆடாது." இந்த குற்றவாளிகளுக்குப்பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் இவர்களே இவர்கள் பதறத்தான் செய்வார்கள். உண்மையாகவே இந்தக்குழுக்கள் மேல் நன்றியும், நல்லெண்ணமும் இருந்திருந்தால் அவர்களை இந்தக்குற்றச்செயல்களில் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள். இவர்களை பலிக்கடாவாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பாதாள போதைக்கும்பலை கைது செய்தாலும் விமர்ச்சிக்கிறார்கள், ஊழல் செய்தோரை கைதுசெய்தால் தெருக்களில் இறங்கி சவால் விடுகிறார்கள், கொலையாளிகளை கைதுசெய்தால் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? இந்தக் குற்றங்கள் எல்லாவற்றிலும் இவர்களுக்கு பங்குண்டு, இவைகளின் எஜமானர்கள் இவர்களே, தாங்களே பொறியில் தலையை வைக்கிறார்கள். இவையெல்லா குற்றங்களுக்கு முந்தைய அரசாங்கங்கள், அமைச்சர்களே காரணம். ஏதோ, புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்திலாவது, புண்ணியத்திலாவது நாட்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நீதி, சமாதானம், சமத்துவம் மலரட்டும். அவர்களே நாட்டில் அக்கறையுள்ளவர்கள். கொலை, கொள்ளை, ஊழல் செய்பவர்களோ அவற்றிற்கு பாதுகாப்பு, வாக்காளத்து கொடுப்பவர்களோ அல்ல. தன் இனத்துரோகியை சுயநலத்திற்கே யாரும் பயன்படுத்துவார்கள், அவர்களை யாரும் நம்புவதில்லை. "துரோகி துரோகத்தினாலேயே அழிக்கப்படுவான்."
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
டக்கிலஸை சேர்த்துக்கொண்டு போட்டியிட்டால் தான் முதலமைச்சர் ஆகிவிடலாமென சுமந்திரன் கனவு கண்டார், சுமந்திரனை இணைத்துக்கொண்டால் தான் வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக டக்கிளஸ் எண்ணியிருப்பார், பலதடவை அந்த ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் டக்கிளஸ் சம்பந்தன் இருந்த காலத்தில். அது மக்கள் தன் மீது வைத்திருக்கும் செல்வாக்கை சரிக்குமென நன்றாகவே தெரிந்திருந்த சம்பந்தர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இப்போ, தான் தலைவனாகவேண்டும் முதலமைச்சர் ஆக வேண்டுமென்று சில புல்லுருவிகள் அவரை கட்டியணைத்து விடுதலை வீரர் என புகழாரம் சூட்டுகின்றனர். இத்தனைக்கும் தீவகத்தை தனது உடைமையில் வைத்திருப்பதற்காக தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை கொலை செய்யுமளவிற்கு தாக்கியவர். இவரை விடுதலைக்காக உழைத்தவரென வாய் கூசாமல் கூறுகிறார் சிவஞானம், இவ்வளவுதான் இந விடுதலை பற்றிய அவரறிவு. இவர்கள் என்னதான் பாடுபட்டாலும் அனுராவை ஐந்து வருடத்திற்கு யாராலும் எதுவும் செய்ய முடியாது, அப்படி முயன்றால் அது அவர்களுக்கே ஆப்பாக செருகும். டக்கிளஸ் ஒழிக்கப்படவேண்டியவன் அதையே மக்கள் கொண்டாடுகின்றனர். அதுதான் அவரோடு கூட இருந்தவரே சொல்கிறார், டக்கிளஸ் மக்கள் வாக்குகளால் வெல்லவில்லை, மக்களை பயமுறுத்தி கட்டுக்கட்டாக தானே வாக்குகளை அள்ளிப்போட்டதாக. கடந்த தேர்தலில் வாக்கு எண்ணும்போது அவரது தோல்வியை நிர்ணயித்தது, அவர் நெடுந்தீவு வாக்குகளுக்காக காத்திருந்தார் அதுவும் அவர் கை விட்டுப்போனது. தனக்கு மிஞ்சின ஆசை முதலில் வெற்றியளித்தாலும் இறுதியில் எப்போதும் ஆபத்தையே தரும். மக்களை எழுபத்தாறு வருடங்களாக ஏமாற்றிய தமிழரசுக்கட்சியும் மாற்றியமைக்கப்படவேண்டும் மக்களால்!
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
உப்பிடி பொத்தாம் பொதுவாய் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்ல வேண்டியது. எதை சொன்னார், எது நடந்திருக்கிறது? ஆஹா..... படைத்தளபதியாக இருந்து எதை முறியடித்தார்? அவரது சாதனைகள் ஒன்று இரண்டையும் சொல்ல வேண்டியது. அலன் தம்பதிகளை உள்ளாடையுடன் கடத்தியது? பயங்கரவாதம் என்று அரசால் முத்திரையிடப்பட்ட ஒரு அமைப்பின் தளபதிக்கு எப்படி இத்தனை பதவிகள் கிடைத்தன? இனத்தை விற்று, காட்டிக்கொடுத்து, எதிரிக்கு கால் கழுவி? பிறகு எப்படி அந்த பயங்கரவாத அரசுடன் ஒட்டிக்கொண்டார் என்பதையும், அதை ஜனநாயகம் என்கிறார் என்பதையும் விலாவாரியாக சுட்டிக்காட்டலாம். அப்போ, சிறிலங்கா அரசு பயங்கரமானது என்பதை ஒத்துக்கொள்கிறார், தமிழ்விடுதலைப்போராட்டத்தை எதிர்த்து, நசுக்க சிறிலங்கா அரச பயங்கரவாதத்துடன் இணைந்து அமைச்சுப்பதவியையும் பெற்றுக்கொண்டார். அப்போ அவர் என்னதான் செய்தார் என்பதையும் சொல்லித்தொலைக்க வேண்டியது சொல்பவர். ஆமாம், அதே தான். அவருக்கு உயிரச்சுறுத்தல் இன்றுவரை இருக்கிறதாக ராகவன் சொல்கிறார், தனக்கு புலிகளால் இருந்தது என்று டக்கிளஸ் கூறியிருக்கிறார். சும்மா வள வள என்று பேசாமல், அவரது சொந்த பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி எப்படி தென்னிலங்கை பாதாள குழுவிடம் சென்றது? அதை சொல்ல வேண்டியது. அதை சொல்லாமல் இப்படி போர்த்து மூடுகிறாரே. டக்கிலஸுக்கு சுடத்தெரியவில்லை என்று மதுசிடம் கொடுத்தாரா? அப்படியென்றால் அவரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் எப்படி நடந்தன? அல்லது மதுஸ் கடனாக துப்பாக்கியை வேண்டினாரா? இவரிடம் களவெடுத்தாரா? ஏன் இத்தனை காலமாய் முறைப்பாடளிக்கவில்லை? ஒரு அமைச்சருக்கு சட்ட நடைமுறை தெரியாதா? இவருக்கு சிங்களம் தெரியாமல் ஒருவர் மொழி பெயர்ப்பு செய்ததாக கூறப்படுகிறது, எப்படி இவர் மத்திய அரசின் கீழ் அமைச்சராக இருந்து பணியாற்றினார்? மதுஸுடன் தொடர்புகளை மேற்கொண்டார்? இவரது சொந்த பாதுகாப்புக்கான துப்பாக்கி களவாடப்படுள்ளது, யாரால் அது களவாடப்பட்டது? தெரியாதவருக்கு எதற்கு துப்பாக்கி வழங்கப்பட்டது? ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? ஒரு அமைச்சர், ஒரு விடுதலை இயக்கத்தில் இருந்தவர், அவரது காரியாலயம் எங்கும் பாதுகாப்பு கமரா, பாதுகாப்பு உத்தியோகத்தர் இருந்தும் அவரின் துப்பாக்கிக்கு என்ன நடந்தது என்று சொல்லத்தெரியவில்லை இவரால், அவ்வளவு பொறுப்புள்ளவர்! கை ஒப்பம் இட்டு வாங்கிய துப்பாக்கியை மீள ஒப்படைக்கும் போது என்ன செய்ய வேண்டுமென்கிற நடை முறையை கடைப்பிடிக்காத, தெரியாத அமைச்சரும், பொறுப்பற்ற இராணுவமும் என்று கூறலாமா? மதுஸ் இந்த துப்பாக்கியை அமைச்சரிடமிருந்துதான் பெற்றதாக சாட்சியமளித்துள்ளார். சரி, களவாடப்பட்டது என்றால் எங்கே? எப்படி? எந்த பாதுகாப்புமில்லாத இடத்திலா ஆயுதங்களை களஞ்சியப்படுத்தியிருந்தனர்? கண்டுபிடிக்கப்பட்டது டக்கிலஸின் சொந்தப்பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி. இவரது துப்பாக்கியை கொண்டு சென்றவர் இறந்திருக்கலாம் என்றால், டக்கிலஸ்தான் இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரே? எழுதுபவருக்கு எது நடந்தது என்று தெரியாது அது நடந்திருக்கலாம், இது நடந்திருக்கலாம் என ஊகம் மட்டும் வெளிப்படுத்துகிறார். அதற்கு அவசியம் என்ன? என்ன நடந்தது என்பதை போலீசார் கண்டுபிடிப்பர், அதற்காகவே அவரை கைதும் செய்துள்ளனர். இவர் ஏன் துடிக்கிறார் எனத்தெரியவில்லையே? கூட இருந்து கூத்தடித்த குற்ற உணர்ச்சியினாலா? மக்களிடம் இவர் ஒரு புனிதர் என்று காட்டவா? மக்களுக்கு தெரியும் இவரின் புனிதத்தன்மை, அதனாலேயே வெடி கொழுத்தி ஆரவாரம் செய்கின்றனர். அவை டக்கிலஸிடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியல்ல, டக்கிலஸின் துப்பாக்கி மதுசிடமிருந்து கைப்பற்றப்படுள்ளது, அவர் அதை டக்கிலஸிடமிருந்து பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் என்ன முன்னுக்கு பின் முரணாக உளறுகிறார்? குழம்பிபோயுள்ளார் போலுள்ளது. அது தான் கதை. இப்பதான் விசயத்திற்கே வந்திருக்கிறார், பேசாமல் இவர் ஒரு துப்பறிவாளனாக போயிருக்கலாம். அதை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டியதுதானே! மற்றவர்களை பற்றி யாரும் கேட்கவில்லை, அதை நீதித்துறை பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்தவற்றை, சொல்ல வந்ததை சொல்லுங்கோ! துணைக்குழுவில் துப்பாக்கி இல்லாமலா இராணுவ குழுக்களாக இயங்கினீர்கள்? ஏன் துப்பாக்கியை மதுசுக்கு கொடுத்தார் உங்கள் தோழர்? அப்போ எதற்கு இந்தப்பதிவு? ஜனநாயகத்தில் குதித்தவர்களுக்கு எதற்கு ஆயுதம்? ஏன் இராணுவ குழுவாக இயங்கவேண்டும்? புலிகளை கூண்டோடு அழித்துவிட்டோம் என்று கூவியவர்களுக்கு, ஒத்தாசை புரிந்தவர்களுக்கு அதன் பிறகு எதற்கு ஆயுதம்? டக்கிளஸ் என்ன புலிகளுடனேயா போராடியவர்? யாருக்கு ஆயுதம் கொடுத்தோம், யார் மீள அளித்தனர் என்பது கூட தெரியாத ஜனநாயகம், அரசு. அதன் அமைச்சர். அவர்களோடுதானே நீங்களும் இன்றுவரை கடமையாற்றினீர்கள், ஊதியம் பெற்றீர்கள்? பிறகு பயங்கரவாதம், ஜனநாயகம் என்கிற போர்வை எதற்கு? இது அரச ஒட்டுக்குழுக்களின் பயங்கரவாதம், மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்பதை கடைசியில் ஏற்றுக்கொண்டுள்ளார் போங்கள். அப்பட்டமாக உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார். அதில் தாங்களும் தங்கள் தோழரும் அடக்கம். ஜனநாயகம் இல்லாத, அரச பயங்கரவாதம் உள்ள நாட்டில், பாதிக்கப்பட்டோர் தம்மை பாதுகாக்க, ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தது போலி ஜனநாயகம், அதை கொடூர கரம் கொண்டு அழித்தது ஜனநாயகம், போரில், அரசியலில் சம்பந்தப்படாதோரை கொன்றொழித்து ஜனநாயகம், தன் கோர முகத்தை ஜனநாயக போர்வையால் மறைத்தது. பிள்ளைகளை அனாதைகளாக்கியது, சாதாரண மனிதர்களை காணாமல் ஆக்கியது, விதவைகளாக்கியது, அங்கவீனர்களாக்கியது, புதைக்குழிகளுக்குள் மறைத்தது. ஆனாலும் அவர்களது கர்மா திரும்பி அவர்களை தாக்குகிறது. தம்மை பாதுகாக்க வளமாக்க எடுத்த கர்மா, தன்னை பாவித்துஅப்பாவிகளை அழித்த கர்மா, பாவித்தவர்களையே திருப்பி தாக்குகிறது. இவ்வளவு கஸ்ரப்பட்டு ஒரு கல்லறைக்கு வெள்ளை அடிக்க முயற்சித்திருக்கிறார். அனுரா எது செய்வார், செய்ய மாட்டார் என்பதை பொறுத்திருந்து பாப்போம். ஆனால் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். டக்கிலசோடு கூட இருந்து செயற்பட்டவர்களே தாங்கள் இவரோடு சேர்ந்து செய்த தவறுகளை கூறுகின்றனர். டக்கிலஸிற்கும் அவனது துப்பாக்கிக்கும் அவனது இராணுவத்திற்கும், பயந்து உயிர் பிழைப்பதற்காக இவர்களோடு சேர்ந்து இயங்கியதாக கூறுகின்றனர்.
-
”அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்” – தையிட்டி விகாராதிபதி
பாவம் இவர் அப்பாவி. விகாரை எங்கே கட்டப்பட்டது, எப்படி கட்டப்பட்டது என்பது கூட தெரியாமல் விகாராதிபதியாக இருந்துள்ளார்.
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
ஒரு கொலைகாரனுக்கு வெள்ளை அடிப்பு. இவரின் வண்டவாளங்கள் வெளியில் வரப்போகிறது, இதை எழுதியவரும் வெகு விரைவில் கைதுசெய்யப்படலாம். இவர் எஜமானே இவரை போட்டுக்கொடுப்பார். தனது சொந்த பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி, பாதாள போதை தலைவனிடம் சென்றுள்ளது, அதற்கு சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை இவரால், வைத்தியசாலையில் பொய் படுக்கிறார். என்ன செய்தாலும் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை, விசாரிக்கப்போவதில்லை, தண்டிக்கப்போவதில்லை, எப்போதும் எஜமானின் அடிமைகளாக இருப்பதில் மகிழ்ச்சி, பெருமை என்று நினைத்தப்பாட்டிற்கு அடாவடி புரிந்தவர்கள், தங்களுக்கு சார்பான அரசே மாறி மாறி வரும், இனத்தை அழித்து சேவகம் செய்யலாமென நினைத்து சும்மா இருந்துவிட்டார். அனுராவும் தன்னை பணிக்கு அமர்த்துவார் என கனவு கண்டிருப்பார், மாட்டுப்பட்டு முழிக்கிறார். அவரோடு இருந்தவர்களே அவரை காட்டிக்கொடுக்கிறார்கள். இன்றல்ல, பல ஆண்டுகளாகவே இவரோடு இருந்தவர்கள் இவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்கள், அவர்தான் உயர் பீடத்தின் காவலனாயிற்றே, தப்பித்துக்கொண்டார். அவர்கள் சலித்து விடுவார்கள் தான் ஜனநாயக வாதியாக வலம் வந்துகொண்டிருக்கலாமென நினைத்தது தப்பாக போய்விட்டது.
-
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
அடுத்தவர் நிலத்தை அடாத்தாக அபகரித்து அனுமதியின்றி விகாரை கட்டுவது, அந்த மக்களை சீண்டுவது மதத்தொண்டு. அபகரித்தவர்களிடம் காணியை திருப்பி கேட்டால், அதற்கு துணை நின்றால் அது அரசியல், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் கெடுகிறது. என்ன மாதிரியான தத்துவமப்பா!
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
எங்கள் கிராமமே பயங்கரத்தில் உறைந்திருந்த காலமது, இந்திய அதனுடன் ஒட்டியிருந்த குழுக்களாலும் எமது உறவினர், குடும்ப அங்கத்தினர், நண்பர்கள் என பலரை காரணமின்றி பறிகொடுத்தோம். ஒட்டுக்குழுக்கள் ஓணான் குழுக்களால் கைது செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களை விடுவிக்க போராட வேண்டியிருந்தது, சமயத்தில் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் தங்க நேரிட்டது, அதனால் மற்றைய இடங்களில் நடந்த பயங்கரங்கள், தாக்குதல்களில் கவனம் செலுத்த முடியாமற் போய்விட்டது.
-
தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்!
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற கோமாளிகள் யாரும் நுழையவில்லைபோலும். இல்லையேல், அல்லோல கல்லோலப்பட்டு முடிவு எடுக்கப்படாமலே கூட்டம் முடிவடைந்திருக்கும்.
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
மன்னிக்கவும் நன்னிச்சோழன், இந்திய கடற்படையின் குருநகர் தாக்குதல் பற்றி பெரியளவில் எனக்கு தெரியாது.
-
கிரிபாட்டி தீவில் முதலாவதாக மலர்ந்தது 2026 புத்தாண்டு!
கள உறவுகள் யாவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! அமைதியும் அன்பும் பிறர் அன்பும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மலரட்டும்.
-
ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்
இவர்களில் தவறு இல்லையென்றால் ஏன் ஓடி ஒளிகிறார்கள்?
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
ஏன் சிறியர், டக்கிலஸை கைது செய்து கொண்டு போகும்போது கையில் ஒரு கோப்புடன் போகிறாரே, அதில் என்ன இருக்கும்? தான் கொலை செய்தவர்களின் பெயர்ப்பட்டியலா, தன்னால் இன்னும் கொல்லப்பட வேண்டிய நபர்களின் பெயரா, அல்லது வழக்கு நடத்தப்போகும் சட்டத்தரணி தான் என நினைத்துக்கொண்டாரா? ஒரு வெட்கமேயில்லாமல் போகிறார். எல்லா கூட்டங்களிலும் வலிய புகுந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும், கருத்து சொல்லும் இந்த மனிதன், தன்னைப்பற்றி இப்படியொரு காணொளி வெளிவருமென எதிர்பார்த்திருப்பாரா? அறிவாளியாக இருந்திருந்தால் இதெல்லாம் செய்திருப்பாரா? மக்களை ஏமாற்றி, அழைத்து வந்து சிங்களத்திற்கு காணொளி அனுப்பி கப்பம் பெற்றவர், இனி அடிக்கடி வருவார் பாவம். தெற்கிலிருந்து, அரச தலைவர்களின் காவல் நா* என்று கருத்தெழுதுகிறார்களாம் இவரைப்பற்றி. தெற்கு மக்களும் இவரின் சாதனைகளை பற்றி அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். சிறையில் இவரது உயிருக்கு ஆபத்தென்றால், அது இவரின் எஜமானரின் ஏவல் பிராணிகளாற்தான் வரும்.
-
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
மக்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத அவர்களின் பிரதிநிதிகளை விமர்ச்சிக்காதவர்கள், பிக்குகளின் அடாவடிகளை கண்டுகொள்ளாதவர்கள், யாராவது உண்மையின் பக்கம் நின்றால் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். நிஞாயம் என்பது; சந்தர்ப்பத்திற்கு, ஆளுக்கு, பதவிக்கு, இடத்திற்கு ஏற்ப மாறுபடுவதில்லை, அது எங்கேயும் எப்போதும் ஒன்றையே பேசும். அதுதான் நிஞாயம் நடுவுநிலைமை!
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
ம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் விசாரணையிலிருந்து தப்பி விடலாம், தண்டனை குறைவாக்கப்படும் என நினைக்கிறார்கள் போலும். அதற்காக சில வைத்தியர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். ஒரு துடிப்பான அரசியல், வெளிநாட்டு பிரயாணம் செய்த ஒருவரை, இதய வால்வுகள் பெலமிழந்து விட்டது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், சிங்கப்பூருக்கு மருத்துவத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் சிபாரிசு செய்து மருத்துவ சான்று கொடுத்தார், அவர் சாதாரண மருத்துவர் அல்ல. அவரும் படிக்காமல் அறையில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மருத்துவரோ தெரியவில்லை. ரணிலோ புத்தகம் வாசித்தார், இந்தியா பயணமானார், கூட்டங்கள் நடத்தினார், கட்சிகளை ஒன்று கூட்டி ஆலோசனை கொடுத்தார். தவறு இல்லாதவர்கள் ஏன் விசாரணையை விமர்சிக்கிறார்கள்? வைத்திய சாலையில் போய் படுத்து விசாரணையை தவிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அது இருக்கட்டும், டக்கிலஸின் உயிருக்கு சிறையில் ஆபத்தாம் என சுரேன் ராகவன் துடிக்கிறார். டக்கிலசோ அவரது சொந்த பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கியை போதை, பாதாள உலகத் தலைவன் மதுசிடம் கொடுத்துள்ளார். அப்போ, அவரது உயிருக்கு ஆபத்து இருந்தது என ராகவன் சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? துப்பாக்கி பெறுவதற்காக டக்கிளஸ் அவ்வாறு ஒரு நாடகத்தை நடத்தினாரா? ரணிலுக்கு பிரச்சனை என்றவுடன் நீதிமன்றம் போய், எதிர்க்கட்சி பதவியை இழந்தவர்கள், ரணிலை கைது செய்த போது கருத்து கூறி, விமர்சித்து கண்டித்தவர்கள் இப்போ, மாகாண சபை தேர்தலில் நம்பியிருந்த குதிரை, கட்டியணைத்த நண்பர், அவர்களும் இனத்துக்காக போராடியவர்கள் ஆகவே அவரையும் இணைத்துக்கொண்டு பயணம் செய்வோம் என கட்சியை இரண்டுபடுத்தியபவர்கள், எதுவும் பேசாமல் மௌனம் காப்பது ஏன்? டக்கிளஸ் ஒரு இனத்துரோகி என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது தாங்களும் அகப்பட்டு விடுவோம் என்பதற்காக தவிர்த்துக்கொள்கிறார்களா?
-
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
இங்கு, வேலன் சுவாமிகள் அரசியல் போராட்டம் நடத்தவில்லை, அவரால் வழிநடத்தப்படும் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, அந்த மக்கள் தங்கள் நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து அதை மீட்க்கும் போராட்டத்தில் அமைதி வழியில் தமது நிலையை தெற்கிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களோடு துணையாக வேலன் சுவாமிகள் நிற்பதில் என்ன தவறு? அப்போ சிங்கள குடியேற்றம், விகாரை கட்டுதல், மக்கள் நிலங்களை அபகரித்தல் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்பவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் அவர்களுக்கு இருந்தால், கொடுக்கட்டும் பாப்போம். அந்த சூழலில் உள்ள மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க இவர்களால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? அப்படி இருக்க முடியுமென்றால் ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்கள் இவர்கள்? மக்களின் ஏகோபித்த குரல் நாங்கள் என்று வாக்கு சேர்த்தவர்களும் மக்களோடு இல்லை, மக்களின் தேவைகளை விட அவர்களுக்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்கிறது? மக்களோடு அவர்கள் பிரச்சனைகளில் அவர்களின் பிரதிநிதிகள் துணையாக நிற்க வேண்டுமோ இல்லையோ? மாகாண சபைத்தேர்தலில் யாரோடு கூட்டுச்சேர்ந்து யாரை வீழ்த்துவது என்று முடிவு செய்வதில் அவர்கள் கவனம். வேலன் சுவாமி போலீசாரை அடித்தாரா? ஆயுதம் தூக்கினாரா? அரசியல்தான் பேசினாரா? அன்று, தூஷண பிக்கர் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரை கன்னத்தில் அறைந்தபோது இங்கும் சிலர் அவர் செயலை ஆதரித்து கருத்து எழுதியிருந்தார்கள். இன்று சைவ தலைவருக்கு அவமரியாதை நடந்திருக்கிறது, தாக்கப்பட்டிருக்கிறார் அதுவும் சரியென்கிறார்கள். பௌத்த துறவி அரசியல் பேசுகிறார், சண்டித்தனம் செய்கிறார், நிலங்களை அபகரிக்கிறார், சட்டத்தை மீறுகிறார், அதை கண்டிக்க முடியவில்லை, தாக்கப்பட்டவர்களை கண்டிப்பது கோழைத்தனம். சைவ ஆலயங்கள் தகர்க்கப்படுகின்றன, மக்களின் வாழ்விடங்கள் வாழ்வாதாயங்கள் பறிக்கப்படுகின்றன, அதை கேட்பது தவறாம், இது என்ன நிஞாயம் என்று தெரியவில்லை. சரி தவறு என்பது என்றால் என்ன என்பது புரியாதவர்களா? தன் சார்ந்த மக்கள் தாக்கப்படும்போது, அவர்களுக்கு அநிஞாயம் நடக்கும்போது வேலன் சுவாமிகள் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமோ? அப்படியானால் சட்டம் கைகட்டிக்கொண்டு இருப்பதும் சரியே. வேலன் சுவாமியும் இந்த மக்களிடத்தில் இருந்து தோன்றி, மக்களுக்கு சேவை செய்ய, உண்மையை, நிஞாயத்தை, போதிக்க வந்தவரே. அவரும் மக்களோடு அவலங்களை சந்தித்து இடம்பெயர்ந்தவரே. சிங்களத்துக்கு தமிழரில் துறவியும் இல்லை, கிறிஸ்தவன் சைவன் பேதமுமில்லை, எல்லோரும் தமிழர், அழிக்கப்படவேண்டியவர்களே என்பது மட்டுமே அவர்கள் போதிக்கும், சுவாசிக்கும் மதம் பௌத்தம்.
-
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!
இவர் மாற்றி மாற்றி பேசுவார், தான் சொன்னதை சொல்லேலை என்பார், சொல்லாததை சொன்னது என்பார். அன்று தகாத சொற்பிரயோகங்களை பாவித்து பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் இவர், என்னோடு யாராவது தகராறு செய்தால் மண்டையில் ஓட்டை போட்டுவிடுவேன் என்று இவரே பகிரங்கமாக சொன்னார், அண்மையில் கூட தேரர் ஒருவர் அனுராவைப்பற்றி ஏதோ தன்னிடம் கூறியதாக சொன்னார், பின் அந்த தேரரிடம் மன்னிப்பும் கேட்டார், தேரர் சொல்லாததை சொன்னதாக தான் கூறியதற்காக. இவருக்கு ஏதோ மனக்குழப்பம் என்று நினைக்கிறன், அல்லது எதிலும் நிலைத்து நிதானித்து கவனம்செலுத்தி செயற்படமுடியாத ஒரு நோயாக இருக்கலாம்.
-
டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்
இருந்தாலும், அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார், இவர் என்ன சொல்ல வருகிறார் இப்போ? குற்றவாளிகளை சிறையிற்தானே அடைப்பார்கள். அப்போ ஐந்து நட்ச்சத்திர விடுதியில் தங்க வைக்கவேண்டுமோ? தமிழ் அரசியற்கைதிகள் சிறைச்சாலையில் தாக்கப்பட்ட போதுகூட இவர் அதைப்பற்றி ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லையே? இருந்தாலும் ராகவனையும் விசாரிக்க வேண்டும், அவர் வெளியுலகில் இருந்தபோது ஆபத்து இருந்ததென்றால் சிறையில் யாரால் அவருக்கு ஆபத்து, ஏன் ஆபத்து என்பதை இவர் தெளிவு படுத்தவேண்டும். சிறைச்சாலையில் அவருக்கு பாதுகாப்பு இல்லையாம். அதற்கு யார் காரணம்? ஏன் அவர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார் என்பதையும் இந்த ராகவன் விளக்க வேண்டும்.
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
தேர்தலில் போட்டியிடுவார்கள், அமைச்சுப்பதவி வகிப்பார்கள், ஊடக சந்திப்பு நடத்துவார்கள், மருத்துவமனைப்பக்கமே போயிருக்க மாட்டார்கள். ஆனால் பாருங்கோ.... கைது, விசாரணை என்றவுடன் சொல்லி வைத்த மாதிரி இந்த அரசியல் வியாதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவார்கள். அதெப்படி வியாதி உள்ளவர்களால் அரசியல் செய்ய முடிகிறது?
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டக்கிலஸுக்கு மரணதண்டனை அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? சிலரின் முதலமைச்சர் கனவில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்களே. இப்போ யார் யார் சிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லையே? கடல், விமான நிலையம் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். சாண் ஏற நினைக்கும்போது முழம் சறுக்குகிறதே. அனுராவை இப்போதைக்கு ஒழிக்க முடியாது, அப்படி நினைத்தால், நினைப்பவர்கள் அரசியல் கேள்விக்குறியாகும்போல் உள்ளதே!
-
டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்
ம்.... இந்நாள்வரை அளவுக்கதிகமான கைதிகளை அடைத்து வைத்திருக்கும்போது குரல் எழுப்பாத சுரேன் ராகவன், இந்த ஜனநாயக வீரனுக்கு குரல் எழுப்புகிறார். இவர் வடக்கில் ஆளுநராக இருந்தபோது இந்த டக்கிளஸ் செய்த கொலை, கொள்ளை, சுரண்டல், அதிகாரதுஷ்ப்பிரயோகம் பற்றி அறியாமலா இருந்திருப்பார்? ஒருவேளை இவரும் தனது தேவைகளுக்காக இவரை பயன்படுத்தியிருப்பாரோ? சற்றுப்பொறுங்கள் ஆளுநர் அவர்களே! உங்கள் கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும்போது அவர் நிகழ்த்திய வண்டவாளங்கள் வெளியில் வரட்டும், அவர் அப்படி ஒரு தியாகியல்ல, அவரும் ஏனைய கைதிகள் போலவே சமமாக அடைக்கப்படவேண்டியவர்.
-
அமரசிறி : கருணாகரன்
யாழ்ப்பாணத்திலுள்ள தனது சக ஆசிரியரை சந்திக்க வந்த சிங்கள இந ஆசிரியர் அமரசிறி, அவர் சிங்களச்சிப்பாயல்ல.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஐயோ, இவர் இன்னும் செயல் வீரர் என பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் என்ன ஜனநாயக வழியிலா செயற்பட்டு கொண்டிருந்தார் இவரை முடக்குவதற்கு? வைத்திருந்த கைதுப்பாக்கியையும் இரவல் கொடுத்து மாட்டுப்பட்டிருக்கிறார். இவர் செய்த எத்தனையோ தீவினைகள் இருக்க இப்படி மாட்டுப்படுவேன் என்று கனவிற்கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். அவரது துணைக்கரங்களும் மடங்கி விட்டன. செய்த அநிஞாயம், அக்கிரமம், அதர்மம், வினை மட்டுமே இப்போது இவருடன் கூட இருக்கின்றன. அவரை கேள்வி கேட்டு கஸ்ரப்பட்டு விசாரிக்கத்தேவையில்லை, அவருடன் சேர்ந்தியங்கியவர்கள் அங்கே காத்திருக்கிறார்கள் இவரைக்காண, அவர்களை கண்டதும் இவர் உளறத்தொடங்கி விடுவார். ஒரு கேள்வி கேட்டால் சம்பந்தமில்லாமல் ஒன்பது உளறுவது இவரின் வழக்கம்.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
மலையக மக்களை குடியமர்த்தி வாழ்வளிக்க முன், தம் தேர்தல் தொகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுங்கள் என பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன். சுகாதார சுற்றுச்சூழல் கெடுதல் இதை முதல் கவனியுங்கள் சம்பந்தப்பட்டவர்களே!