Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. "எடுத்தவனுக்கு ஒரு பாவம், கொடுத்தவனுக்கு பல பாவம்."
  2. உண்மை. அலைச்சல், நேரமினக்கேடு, நட்டம் இதனால் கேட்டதை கொடுத்துவிட்டு போய்விடுகிறார்கள். அதையே சாதகமாக வைத்து துரத்துகிறார்கள். ஒருநாளைக்கு கொடுக்க முடியவில்லையென்றால் கதையையே முடித்து விடுகிறார்கள். இவர்களோடு பழக்கம் வைப்பது, கொடுப்பது, நன்மை பெறுவது, உதவி செய்வது எல்லாமே ஒருநாள் ஆபத்திற்தான் முடியும். பொதுவாக இளைஞர்களையே இவர்கள் சிநேகிதம் பிடிப்பார்கள். முன்பெல்லாம் கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகளின் நிலை கவலையாக இருக்கும். ஒவ்வொரு செக் பொயிண்ட்டிலும் கொடுக்க வேண்டும். வாகனத்திற்கு பெற்றோல், அதற்குரிய ஒயில், சேவிஸ், செலவு, சாரதி சம்பளம் இப்படி எவ்வளவோ செலவு. சில நேரம் அவர்களிடம் கொடுக்க முடியாவிட்டால் நீதிமன்றம் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் கதையை கேட்கும்போது கவலையாக இருக்கும். இப்போ எப்படியென்று தெரியவில்லை. தமிழ்ப்பிரதேசத்தில் வேலை செய்வதென்றால் அவர்களுக்கு அவ்வளவு குஷி. மாற்றம் வந்துவிட்டால் தங்களுக்கு தெரிந்த கூலிகளை கொண்டு மாற்றவேண்டாம் என்று கோரிக்கை கடிதம் அனுப்பச்சொல்வார்கள். இங்கே வேலை செய்தால் சம்பளம் கூட, அதைவிட மேலதிக வருமானம். தமிழரில் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கே வினை செய்வது.
  3. போலீசார் சிறிய குறுக்கு வீதிகளிலேயே மறைந்திருந்து கெல்மெட் போடாத உந்துருளி ஓட்டுநர்களிடம் கைலஞ்சம் வாங்குவது வழமை, கொடுத்து செல்வது நம்மவர் வழமை. ஒன்று, நேரமினக்கேடு மற்றது, கொடுக்காவிட்டால் கள்ள கேஸ் போடுவது, போதைப்பொருள் வைத்து கைது செய்வது. இது கள்ளன் போலீஸ் விளையாட்டு. ஒருவராவது நான் தவறு செய்தால் நீதிமன்றுக்கு அனுப்பு நான் அங்கே சரி செய்கிறேன் என்று சொல்வதில்லை, சொன்னாலும் அது நடக்கபோவதுமில்லை. தவறுகளில் இருந்து லஞ்சம் கொடுத்து மீளுவது. நடுராத்திரி லஞ்சம் வாங்குவது சுலபம், இவர்கள் கொடுத்து வேறு பழக்கியிருக்கிறார்கள், நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். தீயவர் நட்பு இப்படித்தான் முடியும். அவர்கள் தவறு செய்திருந்தால் வாகனத்தை நிறுத்த பல வழிகள் உண்டு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதில் என்ன பிரச்சனை பொலிஸாருக்கு? எதையோ மறைப்பதற்காக அவரை சுட்டு, மற்றவர்களை அச்சுறுத்தி, ஆதாரங்களை சோடித்து, என்ன வேலை அது? இருபக்கமும் லஞ்சம் பெற்ற கை ஒருநாள் இப்படித்தான் முடியும். எல்லா ஆவணங்களும் கைவசம் வைத்திருப்பவர்களையே மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இந்த வழிப்பறித்திருடர். சில மாதங்களுக்கு முன் தெற்கில் சில இளைஞர் வாகனத்தில் எங்கோ சென்று விட்டு நடுராத்திரி திரும்பிக்கொண்டிருந்த போது போலீசார் அவர்களை இடைமறித்து லஞ்சம் கேட்டிருக்கிறார்கள், அவர்கள் மறுக்கவே போலீசார் வாகனத்தை சோதனையிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள், அவர்களும் சம்மதித்து வாகனத்தில் இருந்து இறங்கி வழி விட்டிருக்கிறார்கள். ஒரு போலீசார் தனது காற்சட்டை பையிலிருந்த போதைப்பொருளை வாகனத்தில் வைத்துவிட்டு கண்டெடுப்பதுபோல் அவர்களை மிரட்டியுள்ளார், அவர்கள் இளைஞர், விடவில்லை, கடைசியில் போலீசார் கைது செய்யப்பட்டு வேலையிழந்தார். நம் ஊரில் மக்களை பயமுறுத்தி இப்படி பல சேட்டைகள் நடந்துள்ளன. போலீசாரை சோதனைக்கு அமர்த்தும்போது போதைப்பொருள், மது பரிசோதனை, உடமையேதும் அவர்கள் வசம் உண்டா என்பதை பரிசோதித்து கடமைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், அவர்கள் உடலில் கமெரா பொருத்தப்படவேண்டும் இல்லையேல் கடமைக்கு அனுமதிக்க கூடாது.
  4. ஏன் இதுவரை காலமும் தானாக ஆமி விலகவில்லை? புலம்பெயர்ந்தோருக்கு அடிபணிந்து அனுரா வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுகிறார், பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என கதறுகிறதே தெற்கு.
  5. பலபெயர்கள் எனக்கு பலரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே குறிப்பிட்டுள்ளேன். அனுரா காவடி என்றுதான் என்னை சொல்வதாக கூறியுள்ளீர்கள், ஏன் சொல்லாத மற்ற பெயர்களுக்கு உரிமை கோருகிறீர்கள்? புலிகளின் காசை நான் அடித்ததாக சொல்லவில்லை என்கிறீர்கள் பிறகு ஏன் இந்த சந்தேகம்?
  6. "எருதோடு பொருத முடியாதவர்கள் மேழியோடுதான் பொருதுவார்கள்." சுமந்திரன், ஒருவர் மேல் அழுக்காறு கொண்டால் எந்த நிலைக்கும் தாழ்ந்து போவார். அப்படி யாராலும் இறங்கிப்போக முடியாது, சுமந்திரனோடு யாராலும் இணைந்து செயற்படவும் முடியாது. ஆனால் சிறிதரன் புத்திசாலி. தானாக கட்சியிலிருந்து விலகாமல் எல்லா குடைச்சலையும் தாங்கி, சமாளித்து தேர்தலில் வென்று, வலுக்கட்டாயமாக சுமந்திரனாலேயே கட்சியிலிருந்து நீக்கப்படுள்ளார். சுமந்திரன் ஒரு குழப்பி, அழுக்காறு கொண்டவர். தான் அடுத்தவர்க்கு வெட்டிய குழியில் விரைவாகவே விழுவார். அப்போ இவருக்காக யாரும் கவலைப்படப்போவதில்லை ஆரம்பத்திலிருந்தே நான் சொன்னதுதான், தமிழருக்கும் அவர்தம் கட்சிக்கும் குழி பறிக்கவே திட்டமிட்டு புகுத்தப்பட்டவர் சுமந்திரன். எல்லா ஜனாதிபதியையும் வரவேற்றவர் அனுராவை மட்டும் மிரட்டுகிறார், சவால் விடுகிறார், ஏனென்றால் இவரை அழைத்து பதவி வழங்காதவர் அனுரா மட்டுமே. சுமந்திரனோடு சேர்ந்து இயங்குபவர்கள் சுமந்திரனைப்போலவே உண்மைக்கு வெகு தூரமானவர்கள். அவர்களை திரட்டி எதை சாதிக்க முடியும்? அவர்கள் பதவியும் பொறுப்பும் எத்தனை நாளைக்கு? மக்கள் வாக்களித்தால் மட்டுமே இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக முடியும். மக்களே தீர்ப்பளிப்பவர்கள்
  7. இது ஒரு தனிப்பட்ட பிரச்சனையில்லை, அதற்கு என்று சில வரை முறை உண்டு அதற்கேற்ப நடத்தப்படும் என நினைக்கிறன். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கவனிக்க அனுரா ஒன்றும் கடவுளுமில்லை, மாயவித்தைக்காரனுமில்லை. இன்று தெற்கிலும் இதே பட்டப்பகலில் கொலை. அது அதற்கென்று விசாரணைக்குழுக்கள் உண்டு அதன் மூலமாகவே செயற்படுத்த முடியும்.
  8. உட்கட்சி மோதலை சந்தியில் விமர்சிப்பவர், நீதிமன்றத்தில் நிறுத்துபவர், பின் மற்ற கட்சிகள் எங்களை விமர்ச்சிக்கிறார்கள் என்று குறைபாடுபவர்கள், சிங்களவரை வெட்டி ஆட முடியாதவர்கள் சிறிதரனை கட்சியிலிருந்து நீக்குவதுதான் அரசியல் சாதனை. அவரை தெரிந்தெடுப்பது மக்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் கட்சியால் நிராகரிக்கப்பட்டவர் இல்லாத பதவிகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுகிறார். ஓடுகிறவன் எல்லாம் ஜெயிப்பதில்லை.
  9. இல்லை. இன்னும் பலர் விமர்ச்சித்திருக்கிறார்கள், உங்களைத்தொடர்ந்துதான். இதிலிருந்து நீங்கள் கருத்துக்களை சரியாக வாசிப்பதில்லை என புரிகிறது. இங்கு என்னை விமர்ச்சிக்கும் பல பெயர்கள் உண்டு எனவும் அவற்றையும் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் மட்டுந்தான் என நீங்கள் சொல்வதன் பொருள் என்ன?
  10. விசாரணை செய்யாமலா விடப்போகிறார்? எதுக்கய்யா எல்லாவற்றையும் உங்கள் தலையில் கட்டிக்கொண்டு காவடியாடுகிறீர்கள்? கோசானுக்காகவா கருத்தெழுதுகிறீர்கள் என்று கேள்வி வேறு என்னை கேட்க்கிறீர்கள்? நான் யாருக்கோ, எதுக்கோ எழுதும் கருத்துக்கெல்லாம் என்னை வசை பாடுகிறீர்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லையே? நான் பந்திப்பந்தியாக எழுதினால் நீங்கள் கடந்து போங்கள், உங்களை வாசிக்கும்படி நான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லையே அல்லது சுருக்கமாக எழுதுங்கள் என்றும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நான் எப்படி எழுதவேண்டுமென யாரும் என்னை கட்டாயப்படுத்தவும் முடியாது, அதற்கு யாருக்கும் உரிமையும் கிடையாது.
  11. ஏனய்யா எல்லாத்தொப்பியையும் தூக்கி உங்கள் தலையில் மாட்டுகிறீர்கள்? நீங்கள் மட்டுந்தான் இங்கு கருத்து எழுதுகிறீர்களா? எதற்கெடுத்தாலும் எனக்காக கருத்தெழுதுகிறீர்கள், என்னைத்தான் சொல்கிறீர்கள் என்று வில்லங்கத்திற்கு விதண்டாவாதம் செய்கிறீர்கள். அப்படியென்றால் யார் யாருக்காக கருத்து எழுதுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒன்று சொன்னால் அதை பலர் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். இங்கு தவறு செய்பவர் தன் தவறை மற்றவர் மேல் போட்டு விட்டு நீதான் நீதான் என்று திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடுமென நினைக்கிறார்கள். அது, தங்களை காப்பாற்ற தாங்கள் சொல்லிக்கொள்ளும் சமாதானம், போடும் வேஷம்.
  12. கணக்காளர் நியமனத்திற்கு விண்ணப்பித்த ஒரு இராணுவத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதே இராணுவத்தின் பாதுகாப்போடு வலம் வந்த சுமந்திரனுக்கு என்ன தண்டனை? இனவழிப்பு செய்த சிங்களக்கட்சியில் இருந்து வந்து புகுந்த சாணக்கியனுக்கு ஏன் இந்த பதவி உயர்வு? தமிழர் நிலத்தில் புத்தர் சிலை வைத்ததை நிஞாயப்படுத்தி தமிழரை கொச்சைப்படுத்தி பேசிய சஜித்துக்கு வாக்களிக்கச்சொன்ன சுமந்திரன் ஏன் இன்னும் தமிழரசுக்கட்சியில் தொங்கிக்கொண்டிருக்கிறார்? வேறொரு கட்சியை உருவாக்கி வென்று காட்டட்டும் பாப்போம் முடிந்தால். சி .வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து விலத்துவதற்காக சுமந்திரன் செய்த செயல்கள் பேச்சுக்கள் அநாகரீகமானவை. அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை, அதை எல்லோரும் மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள். அதற்கு சுமந்திரன் பாவித்த ஆள் மாவையர், மாவையரை வீழ்த்த சிறிதரனை பாவித்தார், இனி சிவஞானம், அடுத்து யார்? சுமந்திரனுக்கும் ஒரு சுழியோடி வருவார் அல்லது அதற்கு தேவையில்லாமல் கட்சியே இல்லாமற் போகலாம். விதி வலியது. அன்று தேவையில்லாமல் அழுக்காறு கொண்டு விக்கினேஸ்வரனை அவமானப்படுத்தி வெளியேற்றினார்கள், அதன் பயனை இப்போது அறுவடை செய்கிறார்கள். சிவனே என்று இருந்த ஒருவரை வலிய தேடிச்சென்று கொண்டுவந்து சேர்த்து தங்கள் வேலை முடிந்தவுடன் சேறடித்து அனுப்பினார்கள். தமிழரசுக்கட்சியில் புதிதாக இணைபவர்கள் இவற்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கென்ன என்று பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு மௌனம் காக்காதீர்கள். மக்கள் மனம் வைத்தாலே உங்களுக்கு பதவி.
  13. அவர்களை அறியாமல் சில உண்மைகள் வெளிவந்துவிடுகின்றன, அப்பாவிகள் சிலர் அதை நம்பி விடுகின்றனர். அப்பாவிகள் சிலர் அவர்களை நம்பி விடுகின்றனர்.
  14. சரி, ஏன் இவர் வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து குறித்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை? தமக்கு ஏற்பட்ட காயங்களையும் ஊடகவியலாளர் சந்திப்பில் காட்டியிருக்கலாமே உண்மையாயின்? நாட்டில் ஒரு கலவரத்தை தூண்டி ஆட்சி பிடிக்க இந்த குப்பை பிக்குகள் துணை போகுதுகள், இதுகள் அஹிம்சயை போதிக்கவில்லை வன்முறையை பரப்புதுகள். இலங்கையில் இதுகள் சொல்வதுதான் வேதம். இதற்கு முன்னுரிமை கொடுத்தால் என்னவாகும் என்பதை நாங்கள் சொல்லும்போது கேட்கவில்லை இப்போ அது இவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஒரு அநிஞாயத்தை தட்டிக்கேட்காமல், தண்டிக்காமல் நிஞாயப்படுத்தியதன் விளைவு இதுதான். இதன் பின்னும் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அனுரவின் ஆட்சிக்கு இந்த மதமே சவால். எல்லா எதிர்க்கட்சிகளும் இந்த அனுமான்களின் காவியில் கொழுத்திவிட்டு காத்திருக்கிறார்கள் கொழுந்து விட்டு எரிவதற்காக. பிக்குகளின் அடாவடிகளை இப்போதே அடக்கவேண்டும், மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். இதுகளின் கால்களை வேறு தொட்டு கும்பிடுகிறார்கள். கோத்தபாய வேறு பிக்குவாகப்போகிறாராம். செய்கிற அநிஞாயம் எல்லாம் செய்துபோட்டு தண்டனை பெறும் காலத்தில் விகாரைகளில் தஞ்சம் புகுவது. இதுகள் வெளியே இருந்தாலென்ன விகாரையில் இருந்தாலென்ன அழிவைத்தான் போதிப்பார்கள், தூண்டுவார்கள், செய்வார்கள்.
  15. சில காலங்களுக்கு முன், ஒரு கருத்தாளர் கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்த என்னை, புலிகளின் காசை அடித்தது நான் என்றுகூறி எனது கருத்தை மடை மாற்றியிருந்தார் அவர். மடைமாற்றி, கஞ்சா கோஷ்ட்டி, பெட்டிக்கடை, அனுரா காவடி இப்படி பலபெயர். தமது கருத்துக்கு எதிர்க்கருத்து வைப்போரை தடுக்கும் செயல், தம்மை புனிதராக்குவது.
  16. சிறிதரன் இப்போ பதவிகள் பறிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுள்ளார், அவருடன் யாராவது சந்திப்புக்கு போயிருந்தால் கூடபோனவர்களின் பதவியும் பறிக்கப்படும், சிறி நேசனுக்கு என்ன நடந்தது என்பது சிலர் அறியாதது ஆச்சரியமே. ஆனால் சுமந்திரன் யாரையும் கூப்பிடுவதில்லை. அதற்கு வேறு காரணம் கூறுவார். சிறிதரன் என்ன கதைக்கிறார் என்பதை அறிய பிரதேச சபையினர் சாட்சியாக உள்ளனர், அவர் அதைவிட இரகசியமாக என்ன கதைக்கப்போகிறார்?
  17. அரசியல் ஊழல் பெருச்சாளிகளை அழிக்காமல், தண்டனை வழங்காமல் அரசியலில் அனுராவால் ஓரடி கூட நகர முடியாது. அனுராவின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிர்நடவடிக்கை தயாராகி, மக்களை குழப்பும் வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது, வேண்டுமானால் இன்னொரு குண்டுத்தாக்குதல் நடத்தப் பாதாளக் குழுவினரை பயன்படுத்தக்கூடும், எதுவும் செய்வார்கள் தம்மை பாதுகாக்க. இல்லையேல் மக்களே இவர்களை அடித்துக்கொன்று விடுவார்கள்.
  18. போலீசார், இராணுவம், ஒட்டுக்குழுக்களை வைத்து தமது அரசியல் எதிரிகளை அடக்கவும் தமது அரசியலை, அடாவடிகளை தக்க வைக்கவும் ஆய்தப்படைகளுக்கு வரம்புக்கு மீறிய அதிகாரகங்களை வழங்கி, அவர்களது அதிகார துஸ்பிரயோகங்களுக்கு தண்டனை விலக்களித்து பாதுகாத்தது முன்னைய அரசாங்கங்கள். நம்மவர்களும் சிலர் தமது களவுகள் அடாவடிகளை மறைக்க இவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து பழக்கியிருக்கிறார்கள். இது உடனடியாக களையக்கூடியது அல்ல, புரையோடிப்போன ஒன்று. இப்போ அனுராவை தனிமைப்படுத்தும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முன்னைய ஜானாதிபதிகளால் போஷிக்கப்பட்டவர்களுக்கு நீதியாக நிஞாயமாக வேலைசெய்ய முடியவில்லை, தண்டனை அனுபவிக்கவும் விருப்பமில்லை. அதனால் ஒவ்வொருவரும் தம் பழைய நிலையை மாற்ற தயாராக இல்லை. அனுரா எடுக்கும் நடவடிக்கை எல்லாம் அவரை நோக்கி எதிராக திருப்பப்படுகிறது. ஒன்று, அவரும் பழைய முறைக்கு செல்ல வேண்டும் இல்லையேல் பழையவற்றை சுத்தமாக அழித்து புதியதை உருவாக்க வேண்டும். அது சாதாரண விடயமல்ல. இருந்தாலும் அநுர பாத்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்லை. மஹிந்த, ரணில் செய்த ஊழல் அநிஞாயாயங்களுக்கு தண்டனை அளிக்க காலம் தாழ்த்தும் ஒவ்வொரு கணமும் அனுராவுக்கு எதிராகவே மாறும்.
  19. சுமந்திரன் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் போதுகூட எந்த பாராளுமன்ற உறுப்பினரையும் அழைத்துச்செல்லவில்லை. அண்மையில் சாணக்கியனை அழைத்துச் செல்வார், அதற்கு முதல் இது, இரகசியமான கூட்டம் யாரையும் அழைத்து வராதீர்கள் என்று தனக்கு மட்டும் அழைப்பு வைப்பார்களாம். அப்படியெனில் அவர்கள் என்னத்தைப்பற்றித்தான் இரகசியமாக பேசியிருப்பார்கள்? அவர்கள் இரகசியமாக சந்தித்ததை, பேசியதை தான் மற்றைய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வாராம், படத்தையும் பகிரங்கப்படுத்துவாராம். இதிலென்ன இரகசியம், அதற்கு அவர்களில் ஒருவரை அழைத்துச்செல்லலாமே, ஏன் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால்; என்ன பேசினர் என்பதை மற்றவர் நேரில் அறிந்துவிடக்கூடாது என்பதில் குறியாய் இருப்பார் தில்லு முல்லு சுமந்திரன்.
  20. வாகனம் ஒழுங்காகவே நிறுத்தப்பட்டிருக்கிறது. வாகனம் நிறுத்தப்பட்டபின் துப்பாக்கிச்சூடு நடந்ததா என்கிற சந்தேகமும் எழுகிறது. வாகனம் நிறுத்தாமல் சென்றிருந்தால் வாகனத்தின் சில்லுகளுக்கு சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் சாரதியை இலக்கு வைத்து வேண்டுமென்றே சூடு நடத்தியிருக்கிறார்கள். துருப்பிடித்த வாள், மற்றொன்று பிடியற்ற கத்திபோல் தெரிகிறது, அதுவும் கதவுக்கருகில் சாதாரணமாக கிடக்கிறது. மரணத்தை ஏற்படுத்தி அதன்பின் சான்றுகளை சோடித்துள்ளனர். குறிப்பிட்ட பொலிஸாருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்தியிருக்க வேண்டும். கொல்லப்பட்டவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும், உடன் சென்ற மற்றுமொருவர் போதைப்பொருள் பரிசோதனையில் உட்கொண்டிருப்பது பரிசோதனையில் வெளிவந்ததாகவும், குறிப்பிட்டளவு போதைப்பொருளை வாகனத்திலிருந்து கைப்பற்றியதாகவும் போலீசார் முதலில் அறிவித்திருந்தனர், பின்னர் வேறு விதமாக சோடித்துள்ளனர். எதற்காக இத்தனை குழப்பமான வெளிப்படுத்தல்கள்? தங்களுக்கு வேண்டுமென்றால் போலீசார் மாத்தையா சலாம் போடுவார்கள், எது வேண்டுமானாலும் செய்யலாம் போலீசார் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எப்போ வரவு குறைகிறதோ அப்போ இல்லாத குற்றத்தை சுமத்தி சுடுவார்கள். போலீஸ், இராணுவம் பாம்பு போன்றவர்கள் பாலாய் வார்த்து தேனாய் ஊற்றினாலும் ஒருநாள் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராக உயர்த்துவார்கள்.
  21. இவரும் ஒரு தோற்றுப்போன ஜனாதிபதியே. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். எல்லோரும் அனுராவுக்கு பாடம் எடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் யாரும் அரசியலில் சித்தியடைந்தவர்களல்லர். அப்படியாயின் அனுராவின் கையில் ஜானாதிபதி பதவி சென்றிருக்க வாய்ப்பேயில்லை.
  22. இவர்களின் ஊழல் வெளிவரும்போதெல்லாம் அடிச்சு பிடிச்சு ஆட்சியை கவிழ்த்து தம்மை உத்தமர்களாக காட்டுவது இவர்களின் வழமை. இப்போது அனுராவை நல்லது செய்யவிடாமல் தடுத்து, தனிமைப்படுத்தி, பொய்ப்பிரச்சாரம் செய்து, இல்லாததை வெளியிட்டு ஆட்சியை கவிழ்த்தாலுண்டு இல்லை களிதான். இந்தப்போரில் அனுரா வென்றால்; இவரின் ஜனாதிபதி கனவுக்கு முடிவு கட்டப்படும்.
  23. தன் மதக்கொள்கை என்னவென்று தெரியாதவர் எப்படி அதை கடைப்பிடிக்கவோ பாதுகாக்கவோ முடியும்? தன் மதத்தை மதிக்கிறவன் அதைப்போலவே மற்றைய மதங்களையும் மதிப்பான். தன் மதத்தை இழிவு படுத்தி கொள்ளை அடிப்பவன் மற்றைய மதங்களையும் கொள்கைகளையும் அவமதிப்பான். புத்த மத மக்கள் இல்லாத இடத்தில அடுத்த மத வழிபாட்டு தலங்களை இடித்து, அவர்களது வழிபாட்டு உரிமையை பறித்து ஆயுத முனையில் விகாரை கட்டவேண்டும் என நினைக்கிறவன் எப்படி மற்ற மதங்களை மதிக்கிறேன் என்று கூற முடியும்? சட்டவிரோத விகாரைக்காக இத்தனை பிரச்சனைகளும் நாடக்கும் போது ஏன் மௌனமாக இருந்தார்?அடாவடி பிக்குகள் தாங்கள் மஹிந்தவின் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும்போது ஏன் மௌனம் காத்தார் இவர்? அப்படியாயின் அவர்களின் பின்னால் இவர்களே இருக்கிறார்கள். இவர்களின் ஆலோசனையின்படியே எல்லாம் நடந்தேறுகிறது. இப்போ எல்லாவிதத்திலும் அனுராவை குற்றம் சாட்டி தாம் ஊழலில் இருந்து தப்பவும் அரசை கைப்பற்றவும் முயற்சிக்கிறார். பௌத்த அடாவடிகளை எதிர்த்தாலோ இல்லை பாதுகாத்தாலோ எதுவாக இருந்தாலும் அதை வைத்தே அனுராவை அடிக்க முயற்சிக்கிறார். இந்த பௌத்த ஆதிக்கம் விகாரை எல்லாம் இவர்கள் காலத்திலேயே உருவானது, அதற்கு இவர்களையே காரணம் காட்டுகிறார்கள் அதை எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும். நாட்டில் என்னென்ன பிரச்சனை இருக்கிறதோ அதையெல்லாம் அனுரமேல் சாட்டி அவரை எழ விடாது அடிக்கிறார்கள் இந்த நாட்டில் நீதி சமத்துவம் நிலைப்பதை விரும்பாதவர்கள்.
  24. அவர்களுக்குரிய இடத்தில ஒழுக்கமாக இருந்து தமது பணியை செய்திருந்தால் ஏன் இந்த உபத்திரவம் எல்லாம் வருகுது? தவறு செய்யும்போது தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டும்.
  25. கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்? ?? போன பஸ்சுக்காக கைகாட்டி பிரயோசனமில்லை, அது திரும்பி வராது. வருகிற பஸ்ஸில் ஏறினால் ஊர் போய்ச்சேரலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.