Everything posted by satan
-
வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு
இவர்கள் ஒருபுறம், மறுபுறம் எப்படியாவது தமிழருக்கும் அனுரா அரசுக்குமிடையில் ஒரு பிளவை ஏற்படுத்தி நாட்டில் வன்முறையை தூண்டமாட்டோமா என்றொரு பௌத்த இனவாத குழுவும் தையிட்டியில் மோதுது. திருகோணமலையில் சாதித்தவர்கள், இப்போ தையிட்டி நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். சஜித் இப்போ கூவிக்கொண்டு வரப்போகிறார். எத்தனை நகர்வுகள், அத்தனையும் அவர்களின் முடிவு காலத்திற்கே விரைவாய் கொண்டுசெல்லும். எங்கே நம்ம கதாநாயகர்கள், சட்ட வல்லுநர்கள்? அனுரா வெள்ள அனர்த்தங்களை கையாளும்போது, இவர்கள் இங்கே புத்தரை பலி கொடுத்து நாட்டை கொழுத்த விழையுதுகள். இதில ஒரு போலீசு கறுத்த கண்ணாடியோட வீடியோ பிடிக்குது, அங்கே திருகோணமலையில் ஒரு பிக்கு கறுத்த கண்ணாடியோட ஊடக சந்திப்பு நடத்தியது ஞானசார தேரருடன். இவர்கள் ஏன் இந்தகாலநிலையில் கறுத்த கண்ணாடி அணிகிறார்கள்? உண்மையை மறைக்கவா அல்லது தங்களை மறைக்கவா? கறுத்த கண்ணாடி அணிந்தால் தாங்கள் யாரென்பதை யாரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என்று கருதுகிறார்களா? தமிழனை சீண்டி ரசிக்கும் கூட்டத்தை அடுத்துவரும் சுனாமி கொண்டுபோகும் வாய்ப்பேற்படலாம். திருகோணமலையில் பிக்குகளிடம் ஊடகவியலாளர் ஒரு கேள்வி எழுப்புகிறார், இங்கே போலீசார் பிரச்சனைகளை எழுப்புவதாக கூறுகிறீர்கள், அங்கே தையிட்டியில் போலீசாரை வைத்து நீங்கள் பிரச்சனை செய்கிறீர்களே. அதற்கு அந்தப்பிக்கு சொல்லுது, இனிமேல் உங்களது கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன், இந்த ஊடகவியலாளரை பாத்தா எனக்கு கோபம் வருகிறது. ஏன் கோபம் வரவேண்டும்? பதில் சொல்ல முடியாததாலா அல்லது அவர் உண்மையை பேசுவதாலா? இலங்கையில் உள்ள காணிகள் அனைத்தும் புத்தருடையனவாம், அதில் விகாரைகள் கட்டப்படவேண்டுமாம். கொஞ்சமாவது படித்த பகுத்தறிவுள்ள மனிதரை பௌத்த துறவிகளாக்க வேண்டும் அல்லது அவற்றை அளித்து பிக்குகளாக்க வேண்டும். வறிய பெற்றோர் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள், அவர்களுக்கு உண்மையான கல்வியறிவு இல்லை, ஒழுக்கம் கற்றுக்கொடுப்பதில்லை, கட்டுப்பாடு இல்லை, மேற்பார்வை இல்லை, கேள்வி இல்லை, தண்டனை இல்லை, பொறுப்பு இல்லை. எதுவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம். பெரிய துறவிகளால் பாலியல் துஸ்பிரயோகம், சித்திரவதை அனுபவித்து வெளியேறுபவர்கள் அங்கே கற்றதை தாங்களும் செய்கிறார்கள்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இதில பெரும்பகிடி என்னவென்றால்; கிழக்கின் முதலமைச்சர் கனவில் மிதக்கிறவர் சொல்லுறார், இந்த அரசு மக்களை படுகொலை செய்துவிட்டதாம். சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. இயற்கை அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களை, உயிரிழந்த மக்களை நினைத்து அழுவதா? அல்லது அவர்களின் இழப்பிலும் அரசியல் செய்யும் இந்த வியாதிகளை நினைத்து சிரிப்பதா? தமிழ் மக்களை அள்ளை கொள்ளையாக கொலை செய்த கட்சிகளோடு சேர்ந்து இருந்துகொண்டு, அவற்றை கண்டிக்காமல் ரசித்துக்கொண்டிருந்தவர், இப்போது இயற்கையழிவுக்கு அரசை கண்டிக்கிறார் என்றால் பாருங்கோவன் அரசியல் பதவி ஆசையை. மக்களை முட்டாளாக்கும் செயல். ஆமா.... இது விமர்ச்சிக்கும் நேரமா? விமர்சிப்பதால் இழப்புகள் குறைந்து விடுமா அல்லது மக்கள் அதிலிருந்து மீண்டுதான் விடுவார்களா? எப்போது எதை, எங்கே, எப்படி பேசவேண்டும் என்கிற இங்கிதம் தெரியாதவர்கள், சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு இவர்களது தனிப்பட்ட வக்கிரத்தை கொட்டுகிறார்கள். இதன் பலன் வெகுவிரைவில் அனுபவிப்பார்கள். எப்போதும் போலவா ஒவ்வொருதடவையும் பருவகால மழை பெய்கிறது? இவர்கள் தங்கள் மாவட்டங்களில் என்ன தயார் படுத்தல்களை செய்து மக்களை அறிவுறுத்தினார்கள்?
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
தங்களுக்கு வாக்குப்போட்ட மக்களுக்கு, தமது கடமையை செய்வதற்கு அனுராவை விமர்சிக்க வேண்டும். அனுராவுக்கு வாக்குப்போட்ட மக்களையும் குறை கூறுவது. இதற்கு மக்கள் அனுரா கட்சிக்கே வாக்களிக்கலாம். இந்த மனிதர் பிழைப்பு நடத்துவதும் கெடுவதும் அவர் வாயாலேயேதான்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
ஐயா! நீங்கள் சொல்வதில் தப்பில்லை, ஆனால் இதை சொல்வதற்கு நீங்கள் கையாளும் சந்தர்ப்பமே எங்களை சிந்திக்க வைக்கிறது. தமிழ் மக்களுக்கெதிராக, தொடர்ந்து அழிவுகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டபொழுது அதை திசைமாற்றி அழிவுகளை குறைத்து மறைத்து மனிதநேய அமைப்புகளை வெளியேற்றி கோரத்தாண்டவம் ஆடும்போது நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்? ஏன் விமர்ச்சிக்கவில்லை, கேள்வி கேட்கவில்லை? அந்த ஏதிலி மக்களிடமே வாக்கு வாங்கி, அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லி பதவிகளை அனுபவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி அந்த மக்களுக்கெதிராக செயற்பட்டது ஏன்? நீங்கள் நிஞாயம் கேட்டால்; எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் எல்லா அரசாங்கத்திலும் ஒரே மாதிரியாக கேள்வி எழுப்பியிருந்தால் நீங்கள் சொல்வதை நம்பியிருப்போம், அது நிஞாயமானது. ஆனால் நீங்கள் அப்படியல்லவே, இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டுமென்றே கேள்வி கேட்க்கிறீர்கள், குறை கூறுகிறீர்கள், விமர்சிக்கிறீர்கள். சுனாமி நிவாரணத்தை கொள்ளையடித்தனர். மஹிந்த, தான் அரசியலை கைப்பற்றியவுடன் அதற்குள் மறைந்துவிட்டது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் அந்த மக்களின் பிரதிநிதிகளினதும் முக்கிய கடமை. அரசாங்கத்தை விட பிரதிநிதிகளின் பணி முக்கியமானது. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை? முந்திக்கொண்டு அனுராவையோ அரசாங்கத்தையோ குறை கூறினால்; தங்களை மறைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இந்த நேரத்திலும் குறை கூறுவதும் விமர்சிப்பதும் இவர்களது அரசியல். உதவி செய்யும் இவர்களின் கரங்களை அனுரா கட்டிப்போட்டுவிட்டாராம். அனுரா எதுவுமே செய்ய வில்லையா? அப்படியென்றால் ஒரு விமானி, கடற்படை வீரர்கள் இறந்தது, வெள்ளத்திலடித்துச்செல்லப்பட்டது எப்படி? ஒரு இடத்திலா அழிவு ஏற்பட்டது? நாடு முழுவதும் வெள்ளத்திலும் அழிவுகளிலும் தத்தளிக்கிறது. வடக்கில் இவ்வளவுபேரை கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு மக்கள் தொகையை குறைத்து கூறி ஏற்படுத்தப்பட்ட அழிவை, அத்தனை துல்லியமான கணக்கை மறைத்து அழித்த அழிவுகளை மறைத்து சொன்னபோது யாரும் கேள்வி கேட்கவில்லை, விமர்ச்சிக்கவில்லை, அப்போது நிவாரணம் சரியாக சென்றதா? உணவோடு, மருந்தோடு வந்த கப்பலை திருப்பியனுப்பியபோது வராத மனிதநேயம் இப்போது எப்படி வந்தது? எத்தனை பொதுமக்கள், நிறுவனங்கள், விளம்பரம் தேடாமல், விமர்ச்சிக்காமல், குற்றம் கூறாமல், தமது பொறுப்புணர்ந்து செயற்படுகிறார்கள். இவர் படப்பிடிப்பு வைத்து பதவிக்காக, சுற்றி விமர்ச்சிக்கிறார். அதுசரி, இதுவெல்லாம் இவரது சொந்தப்பணத்திலா செய்கிறார்கள்? எதிலும் பதவி, பெயர் வேண்டும். அதற்காகவே கேள்வி கேட்பார், விமர்சிப்பார். அதை அனுரா இவருக்கு வழங்கியிருந்திருந்தால்; இவ்வளவு கேள்வி, விமர்சிப்பு, குறை இருந்திருக்காது. அதனாற்தான் எல்லா ஜனாதிபதிகளும் இவருக்கு பதவி கொடுத்து மக்களின் உரிமைகளுக்கு விலை கொடுத்து இவரை வாங்கி பக்கத்தில் வைத்திருந்திருப்பார்கள் போலுள்ளது. மக்களின் அழிவுகளிக்கிடையில் அரசியல் லாபம் தேடும் சாக்கடைகள். இனிமேலாவது நேரம், இடம், காலம், ஆட்கள் பாராது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கட்டும். இவர் விமர்சிக்கப்போய் தனது சுயரூபத்தை சொல்லிக்காட்டிவிட்டார். இதற்கு பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். உளறுவாயன் தன் வாயால் கெட்டார்.
-
போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
அரசியல் தந்திரம், இராணுவ தந்திரம், இராஜ தந்திரம், இது, வியாபார தந்திரம். எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள். இவர்கள் கொள்வனவு செய்த விலையைவிட இரண்டு மூன்று மடங்கு லாபம் வைத்துதான் விற்பனை செய்கிறார்கள். முடிவுதிகதியை நெருங்கும்போது, மலிவு விலையில் கொடுக்கும்போது நுகர்வோரும் பலனடைவர், வியாபாரியும் நட்டமடையார். தாங்கள் கொள்ளை லாபம் அடைய வேண்டுமென்பதற்காக வியாபார தர்மத்தையே இழந்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள்/ இழக்கிறார்கள்
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
தவறாக விளங்கிக்கொண்டமைக்கு வருந்துகிறேன். பின்னர்தான் நீங்கள் இட்ட குறியீட்டை கவனித்தேன்.
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
தமிழருக்கு இந்த நாட்டில் பிரச்சனையுண்டு, சிங்கள அரசியல்வாதிகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், அநிஞாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள், அது தீர்க்கப்படவேண்டும், அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள், சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாக, அரச கதிரையில் இருந்து கொண்டு பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறார். பதவியிழந்த பின் நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் மத்தியில் காலந்தாழ்த்தியேனும் உணர்ந்தது வரவேற்கத்தக்கது, தைரியமானது. அதை நான் வரவேற்கிறேன், எனது ஆதரவு அவருக்குள்ளது. அதற்காக மற்றவர்களும் ஆதரிக்க வேண்டுமென பரப்புரையோ, வற்புறுத்தலோ பண்ண மாட்டேன். அவரது கை பலம் பெற்றால் நல்லது நிகழ வாய்ப்புண்டு காலந்தாழ்த்தியேனும். அதற்காக அவர் நிறைய சவால்களை சந்திக்க, கடக்க வேண்டியது நிதர்சனம். அவர் தன் சொந்தக்கட்சிக்காரர்களாலேயே விமர்ச்சிக்கவும் பழி சுமத்தவும் படலாம். ஏன் உயிருக்கு கூட உத்தரவாதமில்லை. அப்பாவிபோலிருந்த சஜித் எப்படி குரைக்கிறார் பாருங்கள். மற்றவர்கள் சும்மா விடுவார்களா?
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
இல்லை, தவறு. அரசியல்வாதிகளின் சுயநலத்தை, கோமாளித்தனத்தை, செயலற்ற பேச்சை சுட்டிக்காட்டினேன். வகைதொகையின்றி, மக்களை மூச்சுவிடக்கூட அவகாசம் கொடுக்காமல், இறந்த உறவுகளை அடக்கம் செய்ய விடாமல் கொன்று குவித்தபோது, ஆதரவு, பாராட்டு, முட்டுக்கொடுத்தவர்களும், அதே கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு மூச்சுவிடாமல் நிஞாயப்படுத்தியவர்களும் கூட இயற்கை அழிவை, ஜனாதிபதியின் மேல் குற்றம்சாட்டும் விநோதத்தை கூறினேன், அவ்வளவுதான். விடுதலைப்போர் முடிவுக்கு வந்தவுடன் மஹிந்தவுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாகவும் அவரது செயற்திட்டங்களில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தவர்கள் எல்லாம், இன்று தமது பொறுப்பை, பங்களிப்பை தட்டிக்கழித்துவிட்டு வெளியேறுகிறார்களே, அது ஏன்? அப்படியென்றால் தமிழரை அழிப்பதற்குத்தான் இவர்களது ஆதரவும் பங்களிப்புமா? என்று கேள்வி எழுப்புகிறேன். இதில் அனுராவை எங்கு நான் பாராட்டினேன்? உங்களின் இந்தக்கருத்தை கண்டவுடன் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிக்கொண்டு ஒருவர் ஓடோடி வரப்போகிறார்!
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
அனுரா வெள்ள அனர்த்தத்திற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஏன் ஒவ்வொரு அரசியல்வாதியும் தன பிரிவில் நடவடிக்கை எடுத்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை? அனுரா தடுத்தாரா? இல்லை முன்னெப்போதும் இப்படியான அனர்த்தங்கள் நடைபெறவில்லையா? அப்போ இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருந்தார்கள்? மழையை எச்சரித்திருக்க வேண்டுமா அல்லது குளங்களை உடைப்பெடுக்க வேண்டாமென தடுத்திருக்க வேண்டுமா? எதிலும் எதிர்ப்பு தெரிவிப்பதும் அதில் அரசியல் செய்வதுமே இவர்களது வேலை. அனுரா மக்களை கொலை செய்துவிட்டாராம். இனப்படுகொலை செய்யும்போது பாராட்டு தெரிவித்தார்கள், முன்நடவடிக்கை ஏதுமில்லாமல் மக்களை முட்கம்பி வேலிக்குள் மந்தைபோல் அடைக்கும்போது யாரும் கேள்வி கேட்கவில்லை. இது இயற்கை அழிவுக்கு அனுராவை குற்றம் சாட்டிக்கொண்டு வெளியேறுகிறார்கள். இதுதான் மக்கள் மட்டில், நாட்டில் இவர்களுக்குள்ள பொறுப்பு. தன்னிடம் நாட்டை ஒப்படைக்கும்படி சஜித் அழைப்பு விடுக்கிறார். கோத்தா நாட்டை பொறுப்பெடுக்கும்படி இவரை அழைத்தபோது மறுப்பு தெரிவித்த இவருக்கு, இப்போ ஜானாதிபதியாசை வந்துவிட்டது. அனுரா ஆட்சி நடத்தினால் இனிமேல் யாருக்கும் ஜானாதிபதி பதவி கிடைக்கப்போவதில்லையென்றா? அல்லது இனி அரசியலே செய்யமுடியாதென்றா இந்த ஆசை இப்போ வந்தது?
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
நாடு இந்தபாடு படுகிறது, சேர்ந்து கைகொடுப்போமென்றில்லாமல் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டுகொண்டு வெளியேறுதுகள் மந்தைக்கூட்டம். எதிர் பேரணி என்றவுடன், திருடர் பிடிபட்டவுடன் ஒன்று கூடி தெருவில் இறங்கி, ஆர்ப்பாட்டம் பண்ணி நாட்டை பிளவுபடுத்துதுகள். இதுகளெல்லாம் ஒன்று கூடி இதைவிட பேரழிவை ஏற்படுத்தத்தான் முயற்சி பண்ணுவார்கள். இதே தமிழருக்கெதிரான கலவரம் என்றால்; கட்சி பேதமின்றி ஒன்றுகூடி கைகொடுத்து அழிப்பார்கள், வீரவசனம் பேசுவார்கள். வரலாறு காணாத, நாடு தழுவிய வெள்ளம். இதற்குள் புலிகளை அழித்த படையினர், கொரோனாவை விரட்டிய படையினர், வெள்ளத்தையும் கடப்பர் என்று வீரவசனம் பேசியிருப்பார் மஹிந்தாவாக இருந்திருந்தால்.
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
இந்த இணைப்புகளில் எந்தப்படத்தையும் என்னால் பார்க்க முடிவதில்லை. நான் தாமதித்து பார்க்க முயற்சிக்கிறேனோ தெரியவில்லை. ஒருதடவை இங்கே சொல்லியும் பார்த்தேன் யாரும் பதிலிறுக்கவில்லை. ஒருவேளை அந்த இணைப்பின் கால வரையறை குறுகியதாக இருக்கலாமென எண்ணி அவர்கள் இடும் பதிவுகளை மட்டும் வாசித்தறிந்து கொள்வேன்.
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
தென்பகுதியில் பாதாள போதைக்கும்பல் கொலைச்சம்பவத்தை ஒத்து இங்கு வாள்வெட்டு. விடுதலைப்போரை முறியடித்ததே இவற்றை வளர்க்கத்தான்.
-
மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்
அவர்களது உடல்களையா?
-
காப்பாற்ற சென்றவர்கள் உயிரிழந்த சோகம் - ஒரே பகுதியில் 'புதையுண்ட 23 தமிழர்கள்'
என்ன சோகமிது! இறந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடையட்டும். தன்னுயிரை பொருட்படுத்தாது பிறர் உயிர் காக்க சென்று உயிர் நீத்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
-
அவசர எச்சரிக்கை! கொழும்பு, வத்தளை பகுதியில் வெள்ளநீர் அளவு மேலும் உயர்வு : உடனடியாக வெளியேற வேண்டுகோள் : படகு சேவைகளுக்கான இலக்கங்கள் இதோ !
'சாண் ஏற முழம் சறுக்கும் நிலை.' சதிராடும் பௌத்த பிக்குகளை கொண்டுபோனால் நாடு அமைதியடையும்.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இவருக்கெதிரான நீதிமன்ற விசாரணைகளேதும் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறதோ? இருக்கலாம்! புத்தர் ரேஞ்சுக்கு மக்களுக்கு ஆசீர் அளித்துக்கொண்டிருந்தாரே, அதற்கிடையில் என்ன வந்தது? பாவம் மக்கள் ஆசீர் வாங்க வைத்தியசாலைக்கு கிளம்பப்போகிறார்கள்!
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
எந்தச்சந்தர்ப்பத்திலும் தம் தலைவனை மக்கள் மறந்ததில்லை. எந்தக்கட்டுப்பாடுகள், அச்சுறுத்தல்கள், சலுகைகள் வந்த போதிலும் அவரையும் அவர்தம் சேனையையும் அவர்கள் தந்த பாதுகாப்பையும் அவர்கள் மறுக்கவுமில்லை, விட்டுக்கொடுக்கவுமில்லை. ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று கூவியவர், இன்று மாவீரர் அடியில் மண்டியிட வைத்துள்ளனர் மக்கள். சந்தற்பவாதிகளும் மாவீரரின் தியாகத்தின் முன்னால் அடிபணிந்தேயாகவேண்டும். ஆயிரம் காரணங்கள் கூறி தம்மை நிஞாயப்படுத்தலாம், மாவீரரை புறக்கணிப்போருக்கு தம்மதியில் இடமில்லை என்பதை நிரூபித்து விட்டனர் மக்கள். வாழ்க நம் சேனைத்தலைவரும் அவரது வீரர்களும். நிம்மதியாகத்தூங்குங்கள்!
-
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.
எனது கருத்துக்களை நீங்கள் வாசிப்பதில்லை என்று பலமுறை இங்கு குறிப்பிட்டிருந்தீர்கள். இன்று எனது கருத்துக்களை தொடர்ந்து வாசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிற்க, கைது விசாரணை, மறியல், விடுதலை என்பது நீதிமன்றம் சார்ந்த விடையம். சில அரசியல் தெரியாத கோமாளிகள் நீதிமன்ற விடயங்களில் தலையிடுவதும், நீதிமன்ற உத்தரவுகளை கேலிக்கூத்தாக்குவதும், குற்றவாளி என நீதிமன்றம் தண்டனை அறிவித்தவர்களையும், விடுதலை செய்வதும், விசாரணையின்றி தடுத்துவைப்பதும், நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்புவதும், விசாரணைகளை குழப்புவதும், குறிப்புகளை அழிப்பதும் நடந்துள்ளது. அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுர, ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டார், நீதிமன்ற விசாரணைகளில் தான் தலையிடப்போவதில்லை என. இதில் தலையிட்டு நீதிமன்றத்தை நாடி, அவர்களுக்காக வாதாடி, விடுதலை பெற்றுக்கொடுப்பது சட்டத்தரணிகளின் பணி. அனுராவிடம் போவதைவிட இவர் போயிருக்க வேண்டிய இடம் நீதிமன்றம். ரணிலுக்காக நீதிமன்றம் போக முடியுமென்றால் ஏன் தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை காணாமல் விட்டார்? ஏன் தேவையில்லாத இடத்தில் முறையிடுகிறார்? தனது அரசியல் பேரம் பேசலுக்காக பாக்கி வைக்கிறாரா? நுகேகொடை பேரணியில் தொடங்கி, எங்கெங்கோ போய், அதனுடன் சம்பந்தப்படாத, தேவையற்ற பிரச்சனைகளை நுழைத்து என்னில் தவறு காண முயற்சிக்கிறீர்கள். இதில் எனது நேரத்தை செலவிட்டு வாசகர்களுக்கும் எரிச்சலை கிளப்ப நான் விரும்பவில்லை. உரையாடலுக்கு நன்றி! ஒவ்வொரு அரசு மாறும்போதும் இந்த துருப்புச்சீட்டை தூக்கிக்கொண்டு ஓடுவதும் கோரிக்கை வைப்பதும் அழைப்பு கேட்ப்பதும் தனது கதிரைக்காகவே. நீதிமன்றம் சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண இலகுவான வழி இருக்கு என்பது சில சட்ட மேதைகளுக்கு தெரிவதில்லை.
-
கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத அரசு காலத்தில் செயல்பட்டது போல் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை தவிர்க்க வேண்டும்
அதுசரி, ஏன் மூஞ்சூரொன்று இப்ப குறுக்கால ஓடுது? மஹிந்தவின் காலத்தில், அநிஞாயத்திற்கு அவர்களுக்கு முட்டுக்கொடுத்து நிஞாயப்படுத்தியவர், இப்போ ஏன் மாற்றிப்பேசுகிறார்? எல்லோருக்கும் திடீரென்று அனுரா மேல் பாசம் வந்திட்டுது! இவர் கூறும் காரணங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே.
-
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.
ஆனந்த சுதாகரனை அனுரா கைது செய்யவில்லை. கைதிகள் விடுதலை என்று ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் ஓடித்திருக்கிறவர் அவரின் விடுதலைக்காக என்ன செய்தார்? சும்மா கோரிக்கை வைத்துகொண்டுபோய் கதிரை கண்டவுடன் அமரக்கூடாது, தனது சட்ட வல்லமையையும் காட்ட வேண்டும் அப்படி ஒரு திறமை அவரிடம் இருந்தால். ரணிலுக்காக வழக்காடுவார் கருத்து சொல்லுவார் ஆனால் தனது கதிரைக்கு மட்டும் இவற்றை தூக்கிக்கொண்டு போவார்.
-
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.
நாங்கள் சஜித்தின் இனத்துவேஷத்தைப்பற்றி, இரட்டை வேடத்தைப்பற்றி இங்கு கதைக்கிறோம். கடந்துபோன பஸ்சுக்காக காத்திருக்கவில்லை. அனுராவை ஒரு இனவாதியாக காட்ட முயற்சிக்கிறார்கள். மக்கள் இனவாதத்தை, மதவாதத்தை விட்டு வெளியேறினால், அதைவைத்து பிழைக்கும் கூட்டத்திற்கு வாழ வழியில்லை. அதனால் எப்படியாவது அதை வளர்த்து, ஊதிப்பெருப்பிக்க முயற்சிக்கிறார்கள். தேவையற்ற பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்களுக்கு சென்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.
-
திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை - பௌத்த விகாரையை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?
தாங்கள் வைத்த நெருப்பு மூண்டு எரியவில்லையே என்கிற ஏமாற்றம் சஜித்துக்கு. அதனால் அதை மீண்டும் மீண்டும் ஊதுகிறார். இனவாதத்தை தூண்ட பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாம். யார் அவசரமாக சிலையை நிறுவியது? யாருமே இனவாதம் பேசவுமில்லை, தூண்டவுமில்லை. தாங்களே இனவாதத்தை தூண்ட செய்துவிட்டு, அது தூண்டவில்லை என்பதற்காக சஜித் பேசிப்பேசி தூண்டுகிறார். புத்தரை அந்த இடத்திலிருந்து எடுத்தது பிழையென்கிறார், வைத்தபின்னும் பிழையென்கிறார். இல்லாத ஒன்றுக்கு மன்னிப்பு கேட்க்கிறார். நினைத்தது நடக்கவில்லையேயென்கிற பொருமல். இன்னொன்றும் சொல்கிறார், பௌத்தத்துக்கு முன்னுரிமையாம், அவ்வாறே ஏனைய மதங்களுக்கும் சம உரிமையாம். அப்படியெனில் பௌத்தத்துக்கு எப்படி முன்னுரிமை? இவர்களெல்லாம் ஜனாதிபதியானால் நாடு எங்கே போகும்? தமது திறமை தெரியாமல் ஜனாதிபதிகனவு. எல்லோரின் கனவிலும் மண்ணள்ளி வைக்கப்போகிறார் அனுரா, ஜனாதிபதி முறை ஒழிப்பு!
-
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.
பாவம் சஜித்தும் நாமலும். அவர்கள் நினைத்திருப்பார்கள் அனுரா படையை அனுப்பி தங்கள் பேரணியை தடுக்கும் போராட்டம் வரும் அதனை தங்களுக்கு சாதகமாகலாமென நினைத்திருப்பார்கள் மாறாக அனுரா அவர்களது பேரணிக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து தடங்கல் இல்லாமல் செல்ல வழி அமைத்துக்கொடுத்து போராட்டங்களால் தான் அடிபணியப்போவதில்லை அவர்கள் பாதையில் தான் செல்லப்போவதில்லை என்பதை நிரூபித்து அவர்களை வெட்கமடையச்செய்திருக்கிறார் ராஜபக்ச திருடர்களுக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் பாதாள போதைக்கும்பல், ஊழல் பெருச்சாளிகள் கொலை கொள்ளைக்காரர் இவர்களை பணயம் வைத்து மக்களை திரட்டி தம்மை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். ஓடிகளைக்குமாடும் இவர்களை ஓடவிட்டு வேடிக்கை பார்க்கவேண்டும். மக்களைக்கூட்டுவதற்காக சஜித் தனது பச்சை இனத்துவேசத்தை வெளிக்காட்டி, தன்னை தமிழ் மக்களுக்கு இனங் காட்டியுள்ளாரே தவிர அவர் நினைத்தது நிறைவேறவில்லை, எதுவும் சாதிக்கவில்லை. உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக்கண்ணன் என்கிற கதையாய் சஜித்தின் நிலைமை. தேர்தல் காலத்தில் இவர் எப்படி தமிழரிடம் வாக்குக்கேட்பார்? இவருக்கு தமிழ் மக்களின் வாக்கே அதிகமாக விழுவது, அதையும் இழந்து தனது அரசியல் எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டார். இவருக்கு வாக்குபோடும்படி கேட்ட சுமந்திரன், அரிய நேந்திரனை விலக்கி வைத்த சுமந்திரன் இதற்கு பொறுப்பேற்று, மக்களை தவறாக வழிநடத்திய குற்றத்திற்காக தமிழரசுக்கட்சியிலிருந்து விலக வேண்டும். ஏனையோர் இவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்!
-
சிரிக்கலாம் வாங்க
இங்கு எங்கே மனிதநேயம் தெரிகிறது? விலங்கு நேயத்தை ரசிக்கிறார்களா, வியக்கிறார்களா மனிதர்கள் என்று தெரியவில்லை. மனிதர்கள் நேயத்தை காட்டியிருந்தால், விலங்கேன் இறங்கி போராடுது.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
தொடர்ந்து வாசித்து வருகிறேன் எதிரும் புதிருமாக எழுதுகிறீர்கள்!