Everything posted by satan
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மஹிந்த பீடத்தின் தலைவர் என்றால் இப்படித்தான் இருக்கும். நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடிகட்டிப்பறக்கிறது அவரது பெயர். போதாதற்கு அவர் விழுந்தால், காவி கழன்று விழுந்து விடுமோ என்று இத்தனை காவலர்கள் பாதுகாப்பு வேலியை பிடித்தவண்ணம். அவரோ நிறை தண்ணியில்.
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
சுமந்திரன், ஒவ்வொரு ஜனாதிபதியையும் சந்தித்து தன்னை முதன்மைப்படுத்துவதற்கு இந்தகாரணங்களை கையாளுகிறார். அவர் முண்டு கொடுத்த ஜானாதிபதிகளின் காலத்திலும் இந்தப்பிரச்சனையையே காவிக்கொண்டு திரிந்தார். ஏன் அதற்கு தீர்வை காண அவரால் முடியவில்லை? அன்றே அதை தீர்க்க முடியாதவர் இன்று அனுராவை சந்தித்து தீர்த்துவிடவா போகிறார்? இந்தப்பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. அது தீர்க்கப்படாது என்று அவரே உறுதி செய்ததை, காவிக்கொண்டு ஒரு வருடமாக அனுராவை சந்திக்க மெத்த பிரயத்தனப்பட்டு, இப்போதான் மெல்ல உள் நுழைந்திருக்கிறார், பாப்போம் கதிரை கிடைக்குமா அல்லது வெளிவருவரா என்று? அதற்குள் எதற்கு ஆரவாரம்?
-
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
தப்பிச்சான் சாத்தான். இதைவிட விரிவாக யாராலும் விசாரித்தறிய முடியாது. அதுதானே. "கூரை மீதேறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்." தன்ர நாட்டில படிச்சு பட்டம் பெற முடியாதவரெல்லாம், வெளிநாட்டில படிச்சு பட்டம் பெற்று நாட்டின் மானத்தை வாங்குகிறார்கள். இந்தக்குடும்பத்தால நாடே நாறுது. இதுக்குள்ள பிக்குகள் காவடி தூக்குதுகள் இவர்களுக்கு.
-
யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்
சிங்களவன் மோடையன் என்று நம்ம தலைவர்களும் நினைத்து நம்பி ஏமாந்து எல்லாவற்றையும் அவனிடமே பறிகொடுத்து, இன்று அவனை வெல்ல முடியாமல் தவிக்கிறோம். நினைப்பு வேறு நிஜம் வேறு சிறியர்.
-
திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை
இது நிகழ வேண்டுமென எதிர்பார்த்தே இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டது. இப்போ, அதன் சூத்திர தாரிகள் கைது செய்யப்படலாமென அறிந்தவுடன், தமிழ் முஸ்லீம் மக்களுடன் எங்களுக்கு பிரச்சனையில்லை, போலீசாரே தம்முடன் மோதியதாக இதனுடன் சம்பந்தப்பட்ட பிக்கு அறிக்கை விடுகிறார்.
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
சில நாடுகளில் இல்லாத புலிகளுக்கு தடை அறிவிக்கிறார்கள். இப்போ, கனடாத்தூதுவருக்கு கஸ்ர காலம். பக்கத்துவீட்டு சகுனிக்கு வயிறு எரியப்போகிறதே. தான் செய்ய மறுத்ததை, இல்லாமற் செய்ததை கனடா செய்து விட்டது என்கிற கடுப்பு அதற்கு.
-
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
சாத்தானுக்கு இப்போ அட்டமத்தில சனியனாம். நீங்கள் பயப்படாமல் விசாரித்து பெறுபேற்றை கையோடேயே கொண்டுவாருங்கள். அனுரா தாராளமாக வாங்கிப்பார்ப்பார். அவர் அறியாத விடயமா நாடுமுழுவதும் பேசப்படுகிறது. ஆனால் நாமலோ அவர் சார்ந்தவர்களோ மறுப்புத்தெரிவிக்கவில்லை. அப்போ, விஷயம் உண்மைதான். அந்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் உள்நாட்டிலேயே படிக்காமல், யாரோ இவருக்காக பரீட்சை எழுத, இது தாஜுதீனை போட்டுத்தள்ள ஓடித்திரிந்ததும், பாதாள போதைப்பொருள் கடத்தற்காரரிடம் கப்பம் பெற்று சொத்து சேர்த்ததும் தான் செய்த வேலை. ஒரு சட்டத்தரணிக்கு இப்படியான வேலைகள் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியாதா? அதெல்லாம் தெரியாத இவர், தன்பெயரில் உள்ள சொத்து எனக்காட்டி விட்டு பின், அது மனைவியின் சொத்து என்கிறார். மனைவியின் சொத்து என்றால் ஏன் தன் பெயரில் காட்டினார்?
-
திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை - பௌத்த விகாரையை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?
ம் ....வணக்கத்துக்குரிய புத்தரை கண்ட கண்ட இடமெல்லாம் நிறுவுவது பத்தி எரியாவிட்டால் தாமே வைத்த சிலையை உடைத்தெறிவது நாட்டில் ஒரு கலவரம் வேண்டுமென்றால் புத்தர் இப்படியான வேலையில் முன் நிற்பார். புத்தருக்கு பிக்குகளாற்தான் ஆபத்து, அவமரியாதை. இவர்தான் பிரச்சனையின் கதாநாயகன். தூஷண பிக்கர் தாங்கள் மஹிந்தவுக்காக காவி தரித்ததாகவும், மஹிந்த பீடத்தை சார்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். அப்படி ஒரு பீடம் இருக்கிறதா? இதுகள் உண்மையான பிக்குகள் தானா என்பதை ஜனாதிபதி ஆராய்ந்து, அந்தப்பிக்கை கைது செய்து விசாரிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு பிக்குகள் ஏவல், அடிமை வேலை செய்வதும், பிக்குகளுக்குப்பின்னால் அரசியல்வாதிகள் ஒளிந்து கொள்வதும் நிறுத்தப்படவேண்டும். பிக்குகள் விகாரையில் இருந்து தர்மத்தை போதிக்க வேண்டுமேயொழிய அதர்மத்தை வளர்க்க இடமளிக்க கூடாது. அவர்களுக்கு ஒழுக்கத்தை, பொறுப்பை கற்பியுங்கள். அவர்கள் பணி என்ன என்பதை வரையறுங்கள். தகுதியற்றவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள். சும்மா இருந்து சாப்பிடுவதை தடுத்து நிறுத்துங்கள். சும்மா இருந்து சாப்பிட்டால் இப்படித்தான் எதையாவது செய்யத்தோன்றும் இதுகளுக்கு. இரந்து உண்ண விடுங்கள். அதைத்தான் புத்தரும் செய்தார். நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தபிக்குகளின் அட்டகாசம் பெருகிக்கொண்டே போகிறது. அதற்காக சட்டங்களை ஏற்படுத்தவில்லை, தடுத்து நிறுத்தவில்லை. இதை செய்ய முடியாதவர்கள் வேறு எதை சாதிக்கப்போகிறார்கள்? பிக்குகளை அடக்கினால் அரசியல் வாதிகள் அடங்குவார்கள். நாடு அமைதியடையும்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இதைச்சொன்னது யார்? கோசானா? ஆச்சரியமாக இருக்கிறது. சுமந்திரனை விட திறமைசாலி வேறு யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி அடிக்கடி யாரோ கேட்பார்கள் அதனால் ஒரு சந்தேகம். பல்கலைக்கழக மாணவர் சந்திப்பில் அந்த உண்மையை ஏற்றுக்கொண்டவர் சுமந்திரன், ஐம்பது வீதமல்ல எண்பது வீத தமிழரின் உரிமைகள் பறிபோய்விட்டது என்றார். தெரிந்தும் வாக்கு கேட்க்கிறார், பேசுகிறேன் என்கிறார். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஒரு வருடத்திற்குள் ஏக்கிய ராஜ்ய சட்டமூல அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்படும், இல்லையேல் நான் பதவி விலகிவிடுவேன் என்று வீராப்பு பேசியவர், இப்போ பதவியும் இழந்து தனக்கென ஒரு பதவியை உருவாக்கி நிர்வகித்துக்கொண்டு அரசியல் தீர்வு கேட்க்கிறார் என்றால் பாருங்கோவன் அவரது விடா முயற்சியை! இதைவிட அவருக்கு வேறு தெரிவோ, உழைப்போ இல்லை சுமந்திரனுக்கு . இதையே முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் செய்திருந்தால், சுமந்திரனின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்திருக்கும்? தமிழரசுக்கட்சியை விட்டு இவர் வெளியேறவில்லை, ஆனால் மக்கள் நிராகரித்து விட்டனர் இவரை. வேறொரு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் பாப்போம்? இவர் முன்னையவருக்கு சவால் விட்டபடியினால் அந்த சவாலை தானே ஏற்று நிறைவேற்றி காட்டட்டும் பாப்போம்!
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
- இலஞ்சம் பெற முயன்ற நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன் கைது!
கைலஞ்சம் பெற முயன்ற போலீசார் கைது செய்யப்பட்ட படியால், நடந்த அனுபவங்களை வைத்துக் கூறுகிறார் போலுள்ளது. கல்வியறிவை விட பட்டறிவு அனுபவம் உறுதியானது.- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
வணக்கத்துக்குரிய புத்தரை கைது செய்து விட்டார்களாம். வணக்கத்துக்குரியவர், வணக்கத்துக்குரிய இடத்தில இருந்தாற்தான் அது வணக்கத்துக்குரியது. அதைவிட்டு மலம் சலம் கழிக்குமிடம், விவசாயம் செய்யுமிடம் எல்லாம் வைத்து கேலிக்கூத்தாக்கினால் நாய்கூட கழித்துவிட்டுத்தான் செல்லும். இந்தபிக்குகளை உழைத்துச்சாப்பிடச்சொல்லுங்கள். மக்களின் வரிப்பணத்தில் தின்றுவிட்டு முன்னுரிமை கேட்டு சும்மா இருந்து திமிர் பிடிச்சாடுதுகள். அப்படி ஒரு சட்டம் கொண்டுவந்தால்; ஒருத்தனும் காவிஉடுத்தி விகாரையில் இருக்க மாட்டான். குடு காரன், காவாலி, காடை எல்லாத்துக்கும் காவியும், இராணுவ சீருடையும் போத்தி தங்களை பாதுகாக்க அரசியல் வாதிகள் வளர்க்கிறார்கள், போஷிக்கிறார்கள். பிக்குகள் விகாரைக்குள் அடங்கி பௌத்த தர்மத்தை போதிக்காத வரை சலுகைகள் இல்லை, அவர்களும் சாதாரண மனிதர்களே என்று அறிவியுங்கள். அவர்கள் போதைப்பொருள் கடத்துகிறார்கள், பாலியல் சேட்டை விடுகிறார்கள், சண்டித்தனம் காட்டுகிறார்கள், நாட்டை கொழுத்துகிறார்கள், சாதாரண மக்களை விட கேவலமாக நடந்து மக்களை பிழையான வழியில் வழிநடத்துகிறார்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் முன்னுரிமை? சட்ட விலக்கழிப்பு? இதை யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அதனாற்தான் இவர்களுக்கு இந்தகொழுப்பு. குற்றம் புரிந்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். அது அரசனாக இருந்தாலென்ன, ஆண்டியாக இருந்தாலென்ன, ஆசானாக இருந்தாலென்ன. அப்போதுதான் நாடு சமநிலை பெறும். இதை அனுரா சட்டமாக பிரகடனப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாட்டில் சமாதானம், சமஉரிமை என்பது வெறும் பேச்சுக்கு மட்டுமே. துறவிகளை கண்டால் கையெடுத்து கும்பிட மனம் வர வேண்டும். இதுகளை கண்டால் பயந்து அலறியடித்து ஓட வேண்டியுள்ளது. எங்கும் எதிலும் மதவாதம், இனவாதம். நாடு அழிந்தும் மாறாத இரும்பு மனமெல்லாம் அன்பை போதிக்கினமாம்! அவர்களை அரசு போஷிக்குதாம்.- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
மஹிந்தவோ தானே பயங்கரவாதிகளை அழித்தவர் என சிங்களமக்களிடம் பாராட்டு வாங்குகிறார், அர்ச்சுனாவோ நாமலுக்காக வக்காலத்து வாங்குகிறார், தேசியத்தலைவர் தனது கடவுள் என்கிறார், இதை மஹிந்தவின் அரசாங்கத்தில் இவரால் சொல்ல முடிந்திருக்குமா? முடிந்திருந்தால் பயங்கரவாத சட்டத்திலோ, வெள்ளை வானிலோ காணாமல் ஆக்கப்பட்டிருப்பார். தனது நலனிற்காக எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் யாரோடும் பேசுபவர்தான் அர்ச்சுனா. மக்களுக்காக இவர் செய்ததை விட, தனது அடாவடியினால் காவற்துறை சென்றதே அதிகம். இவரை நம்பி வாக்களித்த மக்கள்தான் பாவம். இந்த லட்ஷணத்தில ஜனாதிபதி கனவோடு இவர் பின்னால் சுற்றுகிறார் நாமல். இவரோ தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநிதி தானென்கிறார். நாமலும் நம்பி விட்டார் போலும். தங்களின் அரசியற் செல்வாக்கு சரியும்போதெல்லாம் கையிலெடுக்கும் ஆயுதம் பௌத்தம், இனம். இதனாலேயே இவர்கள் அழியப்போகிறார்கள்.- புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை - உதய கம்மன்பில சாடல்
இப்ப என்ன சொல்ல வருகிறார் இவர்? புத்தரை கைது செய்யவில்லை என்கிறாரா? புத்தரை கைது செய்ய முடிந்தால் இவர்கள் எதற்கு அவருக்கு இடம் பிடிக்கிறார்கள்? புத்தரை வைத்து, பலி கொடுத்து வயிறு வளக்கும் கூட்டம். ஓஓ, பிக்குகளை கைது செய்யவில்லை என பொருமுகிறாரா? அதுதான் போலீசாரை தாக்கிவிட்டு தாங்களே போய் நீட்டி நிமிர்ந்து கிடக்குதுகள்.- ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
அப்படி இவர் என்னத்தை பெரிதாக சாதித்து விட்டார், சாத்தான் வந்து கருத்தெழுதுவதற்கு? எப்போதும் உள்ளதையே செய்திருக்கிறார்கள், மாற்றி ஒன்றும் செய்யவில்லை. இதோ பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அழைப்பு வரப்போகிறது எனக்காத்திருந்தார், வரவில்லை. சவால் விட்டுப்பார்த்தார் பயனில்லை, எச்சரிக்கை செய்தார், மசியவில்லை. நாமலோடு பேச்சுவார்த்தை நடத்தினார், எதுவும் நடைபெறவில்லை. கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்து ஒருமாதிரி கதவு திறந்தாயிற்று. உள்நுழைந்தவர்கள் ஏதாவது கதிரை எதிர்பார்ப்பார்கள், ஒரு ஓரத்தில் பார்வையாளராக அனுமதித்தாலும் பரவாயில்லை என்பார்கள். மாகாண தேர்தலை நடத்த வேண்டுமாம், தான் முதலமைச்சர் கதிரையில் அமரவேண்டும். ஏன் ராஜபக்ச காலத்தில் மாகாண தேர்தல் கிரமமாக நடத்தப்பட்டதா? அப்போது இவர் தனது அதிருப்தியை வெளியிட்டாரா? ஏன் வெளியிடவில்லை? அன்று வெளியிட்டிருந்தால் பதவியில்லை, இன்று பதவி கொடுத்திருந்தால் இந்த கோரிக்கை எழுந்திருக்காது. இங்கு இரண்டுபேர் சுமந்திரனுக்காக காவடி எடுக்கிறார்கள் அதிலும் தூக்குக்காவடி! இன்றுதான் இந்தப்பிரச்சனைகள் உருவாகியதா? கடந்தகாலத்தில் இதை வலியுறுத்த மறந்ததேன்? இப்போ என்ன? அனுராவோடு கைகுலுக்கி படம் போட வேண்டும் அவ்வளவுதான். அது நடந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என அறிக்கை வரும், வந்து கொண்டே இருக்கும்.- புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை - உதய கம்மன்பில சாடல்
அவசரமாக புத்தரை பலிகொடுத்து விளம்பரம் செய்த அரசியல் செய்யும் பேரணி. பாவம் இவர் தன்வாயாலேயே அகப்பட்டுக்கொண்டார்.- தற்போதைய அல்லது எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மீண்டும் ஒருபோதும் இனவாதத்தின் மீது எழுதப்படாது - ஜனாதிபதி
அன்பையும் அமைதியையும் போதிக்க வேண்டியவர்கள், நாட்டில் வன்முறையை தூண்டுகிறார்கள், அதற்கு அடிபணிந்தார் ஜனாதிபதி. நாங்கள் மஹிந்தவின் சேனை, அவருக்காக காவி தரித்தவர்கள் என்கிறார் ஒரு பிக்கு. அப்படியானால் அவர் பௌத்த பிக்கு அல்ல, மஹிந்தவின் அடிமை. பாதாள போதைப்பொருள் கடத்துபவனெல்லாம் மஹிந்தவின் பாதுகாப்பு படை, மகா சங்கம். நாட்டில் வன்முறையைத்தூண்டும் பிக்குகளை கைது செய்யுங்கள், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் இனவாதிகளையும் அரசியல் வாதிகளையும் வெளியில் கொண்டு வாருங்கள், பௌத்த சங்கத்தை தூய்மைப்படுத்துங்கள், சட்டம் யாவருக்கும் சமமாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். பௌத்தத்திற்கு முன்னுரிமை என்றால்; அது பிக்குகளுக்கல்லவா? அதனாற்தான் அவர்கள் எல்லா ஒழுக்கக்கேடுகளிலும் முன்னிற்கிறார்கள். இவர்கள் எதை போதிப்பார்கள்? நீங்கள் வழ வழ என்று பேசிக்கொண்டிருக்கும் போது அரசியலை நம்பி சுகம் கண்டவர்கள் உங்களுக்கு முன் பலம் பெற்றுவிடுவார்கள். முதலில் குற்றவாளிகளை கைது செய்யுங்கள், அம்புகளை கைது செய்து காலத்தை விரையமாக்கும் ஒவ்வொரு வினாடியும் எதிரி தன்னை பாதுகாத்துக்கொண்டு பலமடைகிறான். தங்களை சுற்றி மக்களை அரணாக வைத்திருக்கிறார்கள், தமக்கு வரும் ஆபத்தை மக்களை கொண்டு முறியடிப்பதற்காக.- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
அவசர அவசரமாக பிக்குகளை சந்திக்கிறார் நாமல். எங்கே, வைத்த நெருப்பு புகையோடு அணைந்து விடப்போகிறதோ, அதை முளாசி எரியப்பண்ண எதை ஊற்றவேண்டுமென ஆலோசிக்கிறார். சஜித் புத்தரை வெளியேற்றியது தவறென்றார், இப்போ அவரை அரியணையில் ஏற்றி வைத்தாயிற்று, அப்பவும் குற்றம் சுமத்துகிறார். தூஷண பிக்கர் சொல்லுறார், தாங்கள் மகிந்தாவுக்காக காவி தரித்தவர்களாம். பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. மக்கள் போய் அவரின் காலைத்தொட்டு வணங்குகிறார்கள். எவ்வளவு அபத்தம்? அடாத்தாக புத்தரை நிறுவிப்போட்டு, பிரித் ஓது துகள். பற்றி எரிய வேண்டும் என்று ஓதுதுகளா? அனுரா, இதில் விட்டுக்கொடுத்தால் அவர்கள் பிக்குகளை வைத்து கலவரம் செய்வார்கள், அனுரா எல்லாவற்றிலும் அடிபணிந்து போயே தீரவேண்டும். முதலிலேயே சரியான நடவடிக்கை எடுத்தால், பின் இப்படியான சொறிச் சேட்டை செய்யத்தயங்குவார்கள். இவர் செய்திருக்க வேண்டியது; புத்தரை வைத்து, நெருப்பு வைத்தவர்களை கைது செய்து, பின்னணியை மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இவர்களை விகாரைக்குள் அடங்கியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வீட்டுக்கனுப்ப வேண்டும். இவர்களுக்கு ஒரு கொள்கையில்லை, கட்டுப்பாடு இல்லை, ஒழுக்கமில்லை, தலைமை இல்லை, கேள்வியில்லை, பொறுப்பு இல்லை, அன்பு கருணையில்லை. துறவிகள் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி, நாட்டை எரித்து, வயிறு வளக்குதுகள்.வெட்கமில்லாமல், மஹிந்தவுக்காக காவி உடுத்தினோம் என்று பகிரங்கமாக ஒரு பிக்கு சொல்லுது, இதுகளை பின்பற்ற ஒரு கூட்டம். அனுரா பிக்குகளின் காலில் விழுந்து அவர்களுக்குப் பின்னாலுள்ள தோத்துப்போன அரசியல் வாதிகளிடம் சரணடைந்து விட்டார். இனிமேல் இவர் சாதிப்பது கஸ்ரம். உடனேயே பிக்குகளை கைது செய்திருந்தால் மற்றவர்கள் பின்வாங்கியிருப்பர்.- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இனவாதம், மதவாதத்தை கடந்து இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது என்பதையே இந்தச்செயல் காட்டி நிற்கின்றது. தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்தால்; இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. இருபத்தோராந்திகதி பேரணிக்கு அச்சாணி பூட்டியாயிற்று. இதை பிடுங்கினால்; இவர்களது எதிர்ப்பு பூதாகரமாக மாறும். இதற்கு அடிபணிந்தால் எல்லா அடாவடியும் இந்த முறையிலேயே அரங்கேறும். இதற்கு செய்ய வேண்டியது; மக்களுக்கு விழிப்புணர்வு, விசேடமாக புத்தரை வைத்து அரசியல் நடத்தும், வயிறு விளக்கும் பிக்குகளுக்கு மத அறிவை போதிப்பது. அன்பை போதிக்கும் பௌத்தம் அடாவடியை வளர்க்கிறது. அதை எதிர்பார்த்து தூபமிட்டது யார்? அடுத்தவன் காணியில், தேவையற்ற இடத்தில், காரணமில்லாமல் சிலை வைப்பது, விகாரை எழுப்புவதுதான் சஜித்தின் நல்லிணக்கமா? அதை கேட்டால் நல்லிணக்கம் கெடுகிறது கேட்காவிட்டால் நாடுமுழுவதும் விகாரை எழுப்புவது, பின் இது சிங்கள பௌத்தநாடு என வரலாறு திரிப்பது. அது சரி சாணக்கியன் அண்மையில் ஒரு கதை எழுதினாரே, அதற்கு என்ன நடந்தது? இதே சஜித்துக்கு செம்பு தூக்கிய சுமந்திரன் இப்போ அருண் ஹேமச்சந்திரா பதவி விலகவேண்டுமென கூவி தன்னை மறைக்க பாக்கிறாரா? அல்லது சஜித் சொன்னவை சரியென்கிறாரா? இவர் ஒரு சட்ட மேதை என்று சிலர் கூவுகின்றனரே, எங்கே தன் சட்டத்திறமையை நிரூபித்து அந்த புத்தரை வெளியேற்றட்டும் பாப்போம்! ம், இன்று பதினெட்டாந்திக்காதி, இன்னும் மூன்று நாள் இருக்கிறது, தமக்கு சார்பாக மக்களை திரட்டி பேரணியை நடத்துவதற்கு. அதற்கு, கேவலம் மதத்தை பயன்படுத்துவதும், பிக்குகள் அடாவடி செய்வதும் உண்மையான மதமா? எனக்கென்னவோ இதற்குப்பின்னால் சஜித் இருப்பதுபோல் தோன்றுகிறது. நீதிமன்ற உத்தரவு வரும்வரை புத்தர் சிலை நிறுவுவதை நிறுத்தியிருக்கலாம், அதற்காக அடாவடிக்கு அடிபணிந்து எல்லாவற்றுக்கும் அடிபணியும் தோத்துப்போன அரசியலே நடைபெற வாய்ப்புள்ளது. அடாவடிகள் இதே அடாவடியை, தந்திரத்தை பாவித்து தமது காரியத்தை நிறைவேற்றுவார்கள்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பொறுமையின் சிகரமே சுவியர்தானே!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அட, அவரையா வாத்தியார் என குறிப்பிடுகிறார் சுவியர்? இது தெரியாமல் நான் வேறு யாரையோ தேடுகிறேன். சும்மா பகிடிக்கு சுவியர். இவ்வளவு எழுதுகிறீர்கள், இடையில் வந்து, மரியாதைக்காகவாவது ஏதாவது கருத்து சொன்னால் குறைந்தா போவார் அந்த வாத்தியார்? இவருந்தான் தேடுகிறார்.- நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
நாமல், ரொம்ப பொறுப்போடும் அவசியத்தோடுந்தான் பேசுறார். அதற்குமுதல் தங்கள் குடும்ப ஆட்சியின்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதையும் ஆராய்ந்து விளக்கமளிக்க வேண்டும். இதில் எது உண்மை? இதெல்லாம் இவர்கள் சொல்லும் காரணங்கள், ஆனால் இவர்கள் வேண்டுமென்றே தொலைத்த அரசியலை திரும்பப் பெற அலைகிறார்கள், கூடுகிறார்கள், விளக்கம் அளிக்கிறார்கள். இந்த காரணங்கள் முன்னைய ஆட்சிகளிலும் இருந்தனவே, அப்போது ஏன் இவர்கள் பேசவில்லை, கூடிக்கதைக்கவில்லை?? அப்போதும் இப்போதும் பதவி முக்கியம் இவர்களுக்கு. ஆண்டிகள் கூடி மடம் கட்ட முயற்சிக்கிறார்கள். சாவு வீட்டில் அரசியல் கதைக்கிறார்கள், அழைப்பு விடுகிறார்கள், ஏற்கிறார்கள். எங்கும் எப்போதும் எதிலும் இவர்கள் செய்வது அரசியல்!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அது சரி, வாத்தியார் என்று வாய்க்கு வாய் விளித்து எழுதுகிறீர்கள், யார் அவர்? அவர் ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்? அவர் இதை பார்ப்பதில்லையா, அல்லது பார்த்துவிட்டு கடந்து போகிறாரா??- அச்சமின்றி மாவீரர்களை நினைவுகூரமுடியும் : NPP அமைப்பாளர் தெரிவிப்பு
அதை குழப்புவதற்கும் ஆட்கள் உண்டு!- தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு -இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை!
இந்த சகுனிக்கு, குற்ற உணர்வு தலைக்கேறி பயத்தில் அப்பப்போ புலிகள் என்று உளறுது. இலங்கை அரசு, தாய்லாந்து, நேபாள் போன்ற இடங்களில் போய் போதைப்பொருள் வியாபாரிகள், கடத்தற்காரரை கைது செய்யும்பொழுது, இது இங்கே புதுக்கதை எழுதுது. இந்தியாவில் புலிகள் போதைப்பொருள் வர்த்தகம் செய்கிறார்களாம். புலிகளே இல்லை அழித்துவிட்டோம் என்கிறது இலங்கை. இந்தியாவில் வர்த்தக பரிமாற்றம் நடந்தால் அது யாரின் தவறு? அதை தடுக்க வேண்டியது யாரின் கடமை? - இலஞ்சம் பெற முயன்ற நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன் கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.