Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இதென்ன, பாட்டுக்கு பாட்டு போட்டியா நடக்குதிங்க? சுவியர் தனிராகமிசைக்கிறார் நின்று!
  2. வடக்கின் முதலமைச்சர் சுமந்திரன், கிழக்கின் முதலமைச்சர் சாணக்கியன். இது அவர்களின் கனவு. அதற்காக சில போலி அறிக்கைகள், சந்திப்புகள் தயாராகி இருக்கிறது. மக்கள் இன்னும் மூடர்கள் என்கிற மிதப்பு இவர்களுக்கு. தமிழரசுகட்சியென்றாலே; ஏமாற்றுக்கட்சி, மக்களை உசுப்பேத்தும் கட்சி என்பதை மக்கள் புரிந்துள்ளார்கள். வேறு தெரிவில்லாமலே அனுரா அரசை ஆதரிக்கிறார்கள் மக்கள். இத்தனை கட்சிகளை உள்ளிழுத்து விட்டவர்களே தமிழரசுக்கட்சிதான். பின் மக்களை குறை கூறுவார்கள். மக்களுக்கு கடமை செய்யாதவர்களுக்கு உரிமை இல்லை. எதுவும் செய்யாமல் கதிரையில் தொடர்ந்து இருக்க நினைப்பது சுத்த சுயநலம்.
  3. அவரது அனுபவம். வளர்த்து விட்டவர்கள் இப்போ நழுவப்பார்க்கிறார்கள். இவர்களது ஆட்சிக்காலத்திலும் ஆட்கடத்தல், கொலை, கொள்ளை எல்லாம் நடந்தனவே. அப்போ இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தங்கள் தவறை மறைக்க மற்றவர்களை குறை கூறுவது இவர்களது வழமை. இவர்களது நீண்ட ஆட்சியின் வளர்ச்சியே இவையெல்லாம். அரசாங்கத்தின் அனுசரணையோடு நடப்பதென்றால், அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்? சிறையில் அடைத்து விசாரணை செய்ய வேண்டும் அரசாங்கம்? பாதாள உலக போதைக்கடத்தற்காரர் தங்களை பாதுகாத்துக்கொள்ள, தொழில் போட்டி காரணமாக கொலை செய்கிறார்கள். இவர் ஏன் பதறுகிறார்? தன்னையும் போட்டுத்தள்ளப்போகிறார்கள் என்றா?? கைது செய்யபோகிறார்களென்றா???
  4. அன்று, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால்; கிழக்கின் நிலைமைதான் வடக்கிலும் நிகழ்ந்திருக்கும். கோவில்களில் மீன் சந்தையும், கருவூலங்களில் மாட்டிறைச்சிக்கடையும் அமைந்து, பல முஸ்லீம் கிராமங்கள் தோன்றி, பலர் முஸ்லிம்களாக மாறியிருப்பர். அப்போ பெரிய சந்தோசம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள், மீண்டும் மன்னிப்பு கோரி மீள குடியேற அழைத்தார்கள். இவர்கள் அப்படியா? பிச்சைக்காரனின் புண்போல அப்பப்போ பிரிச்சுக்காட்டி, வெவ்வேறு புனைகதைகளை புனைந்து, எந்தக்காலத்திலும் நல்லிணக்கம் ஏற்படாமல் பாத்துக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும்போதே அவர்கள் தம் இருப்பையும் சலுகைகளையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள். இப்போ அதற்கான சந்தர்ப்பம் குறைந்து வருகிறது என்றே நான் நினைக்கிறன். சரி, புலிகள் இல்லாத காலத்தில் ஏன் இவற்றை ஆண்டுதோறும் புதுப்புதுக் கதைகள் புனைகிறார்கள்? அவர்கள் உயிரோடு இல்லாதபடியால் தாம் நினைத்தபடி கதை எழுதலாமென்றா? "உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும்."
  5. இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், சாணக்கியன் முதலில் தமிழரசுக்கட்சியில் வேட்பாளராக களமிறங்கியபோது, தூஷண பிக்கரை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றி மக்களை பயங்காட்டி வெற்றிபெற்றார். இப்போ, மாகாணத்தேர்தல் வரப்போகிறது, முதலமைச்சர் கனவு வேறு இவரை ஆட்டிப்படைக்கிறது. அதற்காக இன்னொரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய தேவை இவருக்கு. இந்தச்செய்தி இவரது முகநூலிலேயே பகிரப்படுள்ளது. வடக்கில் சுமந்திரன், யார் யாரையோ ஓடி ஓடி சந்தித்து, அறிக்கை விட்டு, பேச்சுக்கு அழைத்து தயாராகிறார். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு செய்த சேவை காணாதாம், இனி முதலமைச்சர் பதவியில் தமிழருக்கு எல்லா தீர்வும் பெற்றுத்தந்துதான் ஓய்வார்களாம் இருவரும். பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின்பேரில் சந்திக்கிறார், ஒரு ஊடகவியலாளர் அல்லது இவருக்கு பின்னால் அலையும் பட்டாளம் எதையும் காணோம். சும்மா ஒரு கருத்து சொல்வதனாலும் ஊடகவியலாளரும் கூட்டமுமாக வலம் வரும் இவருக்கு. உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவருமே கண்ணில் படவில்லையா? சரியாகத்தானே சமன்பாடு காட்டியிருக்கிறார் தான் போட்ட கணக்கிற்கு!
  6. சாதாரணமாக உணவு நிலையங்கள் விடுதிகள் வியாபார நிலையங்கள் ஆகியவையே இப்படியான சோதனைகளுக்கு உட்ப்படுத்தப்படுகின்ற வழமை இது அசாதாரணம் ஆகவே அந்த நிலையத்தை சார்ந்த தொழிலாளர்களே இந்த முறைப்பாட்டை செய்திருக்க வேண்டும் எப்படியாகிலும் தவறு எங்கே நடந்தாலும் தவறுதான்.
  7. மாவீரர் வாரம் வருகிறதாம் இந்தக்கதையை நம்பட்டாம். யார் திட்டமிட்டு செய்கிறார்களோ, அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்கள் எதிர்பார்க்கிறார்கள்.
  8. இதை நம்புகிறீர்களா கோஷான் அவர்களே? அடுத்த ஆண்டு இதோடு வேறொரு கதை சோடித்துக்கொண்டு வருவார்கள். ஏதோ தாம்தான் பாதிக்கப்பட்டவர்கள், தமிழர் எதிலும் பாதிக்கப்படவில்லை என்றொரு அனுதாபத்தை தேடுவதும், தமிழரை குற்றவாளிகளாக்குவதுமே அவர்களின் எண்ணம். அவர்களை அன்று வெளியேற்றாமல் விட்டிருந்தால்; கிழக்கை விட பலமடங்கு அழிவு வடக்கில் ஏற்பட்டு நிலைமை மோசமடைந்து இருக்கும். அவர்கள் எப்போதும் தம்மை பெரிது படுத்துவதற்கு, தமது குற்றங்களை மறைப்பதற்கு இப்படியான கூக்குரல்கள் உதவுமென எண்ணுகிறார்கள். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழர் ஒதுக்கப்பட்டும், தாக்கப்பட்டும் ஒழிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆகவே தமிழரை தாக்குவதால் தம்மை யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற துணிவு அவர்களுக்கு.
  9. அவர்கள் அங்குமிங்கும் பார்வையாளராகவும் பங்குதாரராகவும் இருந்து தம்மை வளப்படுத்த நினைக்கிறார்கள். ஹிஸ்புல்லா அறிக்கையை, அண்மையில் ஹக்கீமின் கருத்தை பார்த்தால் புரியும். இந்துக்கோவிலை அழித்து மீன் சந்தை, தமிழர் நிலத்தில் தமது ஆதிக்கம், அதற்கு விசேட அதிகாரம். எங்கிருந்து கிடைத்தது, ஏன் கிடைத்தது? தமிழர் தாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, போராடி தமது விடுதலையை தேடுகிறார்கள், இவர்கள் சும்மாவிருந்து சுகம் தேட நினைப்பது எந்த விதத்தில் நிஞாயம்? அவர்கள் அடித்துக்கொள்கிறார்கள், அணைக்கிறார்கள் இதில் நமக்கென்ன? கோத்தாவின் ஊர்காவற்படையில் இருந்து தமிழரை அழித்தது யார்? ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை நடத்தி கோத்தாவை அரியணை ஏற்றியது யார்? அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. முஸ்லிம்களுக்கும் சிங்கள அரசுக்குமிடையில் 98% உடன்பாடுள்ளது, முஸ்லிம்களுக்கும் தமிழ் பேரினவாதிகளுக்குமிடையில் 98% முரண்பாடுள்ளது என்கிறார் முபாரக் அப்துல் மஜித். முஸ்லீம் ஆண்கள் சிங்களப்பெண்களை மணந்து தங்களோடு இணைந்து வாழ்வதாக சிங்கள அரசியால்வாதியொருவர் கூறுகிறார், பிறகேன் அவர்களுக்கு ஒரு தனியலகு? அவர்கள் கிழக்கில் தங்கள் வியாபர தலங்களை, மத வழிபாட்டு தலங்களை சுதந்திரமாக அமைக்கிறார்கள், தமிழர் நிலங்களை பறிக்கிறார்கள், தமிழர் அப்படி செய்ய முடியுமா? அவர்களுக்கு என்ன பிரச்சனை? தமிழரை எதிர்த்து, அழித்து, தம் இருப்பை தக்க வைத்துக்கொள்கிறார்கள். தமிழர் பிரிந்து போனால், அடுத்த குறி தாம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் எங்களோடு சேர்ந்து வாழவும் மாட்டார்கள், பிரிந்து போகவும் விடமாட்டார்கள்.
  10. ஆட்கடத்தற்காரர் ஆசை காட்டி அவர்களை ஆபத்தில் சிக்க வைக்கின்றனர். ஆட்கடத்தற்காரர் கைது செய்யப்பட்டு இந்த மரணங்களுக்கு பொறுப்பு கூற வைக்கப்படவேண்டும்.
  11. சிங்களவரால் தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது பார்வையாளர், கொள்ளையடிக்கப்படும்போது பங்குதாரர், போர் நடக்கும்போது நாடு இரண்டுபடக்கூடாது, தமிழர் அடிமைகளாக நடத்தபடவேண்டும் தாம் பாதிக்கப்படக்கூடாது ஆகவே தோள் கொடுப்பது. தமிழர் தீர்வு கேட்கும்போது நமக்கும் ஒரு அலகு வேண்டும். அப்போது நாடு இரண்டுபடாது? சிங்களம் அவர்களை அடிக்கும் போது குரல் கொடுக்க, தோள் கொடுக்க தமிழன் வேண்டும். ஏனெனில் தாமும் தமிழராம். சுத்த பச்சோந்தித்தனம்!
  12. இலங்கையில் பொது வெளியில் சட்டத்தை மீறி செயற்பட்ட பிக்கு ஒருவரை போலீசார் தட்டிக்கேட்டபோது, குறிப்பிட்ட பிக்கு சொல்லுறார், சட்டங்கள் பிக்குகளுக்கு அல்லவாம். அப்போ அவர்கள் என்னதான் செய்வார்கள்? இதில பௌத்தத்துக்கு முன்னுரிமை! இவர்கள் தங்கள் வீட்டில் ஒழுங்காக கலியாணம் செய்து குடும்பம் குட்டியோட இருந்திருக்கோணும் அல்லது நாட்டில இருந்திருக்க வேணும். போற இடமெல்லாம் பொது தோட்டமென்று நினைத்து மேய வெளிகிட்டா தண்டனை அனுபவிக்க வேண்டும். இப்போ அவுஸ்ரேலியத்தூதுவரை அழைத்து கண்டனத்தை தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கட்டும் பாப்போம் வெளிவிவகார அமைச்சர்! எடுத்ததற்கெல்லாம் தூதுவரை அழைத்து தமது கண்டனத்தை தெரிவிப்பவர்கள்.
  13. வயிற்றுக்குள் இருந்த குழந்தையை வயிற்றை கீறி எடுத்தனர் என்பதுபோல் இதுவும் ஒரு கதை. கிழக்கில் நடந்த அசம்பாவிதம் வடக்கில் நடந்தேறிவிடக்கூடாது என்பதற்காகவே இது நிகழ்ந்திருக்கலாம். இல்லையேல் வடக்கிலும் அதுதான் நடந்திருக்கும். பேசுவது தமிழ் ஆனால் அவர்களுக்கென்று ஒரு தனித் தீர்வு வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அதற்காக அவர்கள் போராடாமல், தமிழர் தீர்வு கேட்டால் மட்டும் அவர்களுக்கும் குடைச்சல் எடுக்கும். புலிகள் தவறு என்பதை ஏற்று, மன்னிப்பு கேட்டு, மீளவும் குடியேற அழைத்தனர். ஆனால் இவர்கள் தாம் செய்த தவறை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இருபகுதியும் விட்டுக்கொடுத்தாலே நல்லிணக்கம் ஏற்படும். ஆனால் இவர்களோ தமது தவறை மறைத்து எம்மை குற்றவாளிகளாக்குவது இவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவே முடியும்.
  14. செயலமர்வில் கலந்து கொண்டவர்கள், அடுத்து எப்போ, எங்கே தொடர்ந்து பேசுவது என முடிவெடுத்திருப்பார்கள். அதன்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இல்லை தொடர்ந்து பேசாமல் இருக்கவும் கூடும். இவர் வலியச்சென்று ஏன் தன்னையும் அழைக்கும் படி, அல்லது தானே அவர்களை பேச அழைக்கிறார்? இவர் வேண்டாமென அவர்களே முடிவெடுத்திருக்கலாம். அழையா வீட்டுக்கு நுழைய துடிக்கிறார். தன்னை புறந்தள்ளி தனக்கு தெரியாமல் ஏதாவது நடந்து விடுமோ என பதறுகிறார்.
  15. சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை. முன்பு கலந்து கொண்ட பேச்சுவார்த்தைகளில் சுமந்திரன் தனியே சென்று சந்தித்து விட்டு, யாரையும் கூட்டி வரவேண்டாம் என்று என்னையே அழைத்தார்கள், இது ஒரு இரகசிய சந்திப்பு என்று கதை விட்டு, தனக்கு சார்ந்த மாதிரி அறிக்கை விடுவார். அதனாலேயே சந்தேகப்பட்டு, சுமந்திரனே நேரில் சென்று என்ன கதைத்தார்கள், முடிவெடுத்தார்கள் என்று விளக்கம் கேட்டிருக்க கூடும். அதன் பின் ஏதோ தன்னை அழைத்து விளக்கம் கொடுத்த மாதிரி இவர் அறிக்கை விடுகிறார் போலும். இவருக்கு இரகசிய சந்திப்பு, அறிக்கை நடத்தாவிட்டால் உறக்கம் வராது. இதற்கு, என்ன பேசப்பட்டது என அதில் கலந்து கொண்ட தனது கட்சிக்காரரிடமே கேட்டுத்தெரிந்திருக்கலாம். "தான் கள்ளன் பிறரை நம்பானாம்."
  16. எல்லா நாடுகளிலும் இந்த அரசியல் மீறல்களை கட்டுப்படுத்தி மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவும், அநீதியான ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தவும் சட்டங்கள் உண்டு. அதனாலேயே இவர்கள் ஆட்சியைப்பிடிக்க முடிந்தது. ஆனால் அந்தகதிரையில் குந்திய பிறகு அதை விட்டு எழும்பவோ, அல்லது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவோ மனம் வராது. அவ்வளவு சக்தி அந்தக்கதிரைக்கு. அதனாலேயே சட்டத்தை மாற்றி தமக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள். பின் அது தமது சந்ததிக்கு உரிமையாக்கிக் கொள்கிறார்கள். அடித்து விரட்டினாலொழிய அதை விட்டு கிளம்ப மாட்டார்கள். அதற்காக எத்தனையோ தகிடுதத்தங்கள் செய்வார்கள். அதற்கு நம் நாடு சிறந்த எடுத்துக்காட்டு.
  17. பிரான்சில் உணவு தயாரிப்பில் விசேட விருது பெற்ற ஒரு தமிழர் இலங்கைக்கு வந்தபோது விமானநிலையத்தில் வரவேற்பு நடந்தது. ஏன்? லைக்கா இன்னும் கனடா இந்திரகுமார் இவர்களுக்கும் வரவேற்புண்டு. அடித்து கலைப்பது, பின் மாலையளித்து வரவேற்று தங்களை மறைத்து இலங்கையர் என்று உரிமை கொண்டாடி தமிழருக்கு தங்களால் ஏற்பட்ட அழிவுகளையும் கொடூரங்களையும் இழைக்கப்படும் அநீதிகளையும் மறைத்து அவர்களது போராட்டத்தை மழுங்கடித்து தங்களை காப்பாற்றிக்கொள்வது. அதனாற்தான் சிங்களவருடன் வாழ்வது அதிஷ்டமென சிலர் புளகாங்கிதம் கொள்கின்றனர்.
  18. நீங்கள் எல்லோரும், நான் உட்பட உந்தக்கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரது ஊடகப்பிரிவு முந்திக்கொண்டது உங்களுக்கு முதல். அவர், தங்கம் வாங்கவோ கடத்தவோ முயன்றது உண்மை. ஆனாலும் அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும். நடத்துவார்களா?
  19. நீங்கள், ஏன் என்னை காவடி என்று சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. காவடி தூக்குவதென்றால்; ஒருவர் என்ன செய்தாலும் பாராட்டிக்கொண்டே இருப்பது. ஆனால், அனுரா தவறு செய்தாலும் விமர்சிப்பேன், அதே மஹிந்த நல்லது செய்தாலும் வரவேற்பேன். அவர்தான் எதுவும் தமிழருக்கு செய்யவுமில்லை, செய்பவரை விடுவதுமில்லை, தீயதாவது செய்யாமல் இருக்கலாம். இது நடுவு நிலைமை. இன்று மட்டுமல்ல பல தடவை இவர்களின் செயற்பாட்டை நான் விமரிசித்துள்ளேன், நீங்கள் அதை கவனிக்கவில்லைப்போலும். இன்னும் பலதடவை சொல்லுங்கள், அதனால் எனக்கேதும் குறையப்போவதில்லை.
  20. நடந்த ஒன்றை, இல்லையென்று நிறுவ முயற்சித்து தோல்வியை தழுவப்போகிறார்கள். இப்படியான நிலைப்பாட்டில் இவர்கள் இருந்தால்; நாடு முன்னேறவே முடியாது. இவர்களும் நாளை இரண்டாக பிரிய வாய்ப்புள்ளது. படடலந்தை வதை முகாம் பிரச்சனையை ஜெனீவாவுக்கு கொண்டு போகப்போவதாக இவர்களே கூறினார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதை ஜெனிவாவில் முறையிடப்போவதாக மறு பகுதி கூறுகிறார்கள், இதனால் நாட்டின் இறையாண்மை கெடாதா? ஒட்டுமொத்த இனத்தையும் கொத்தாக அழித்து கெத்து காட்டுவதை மட்டும் சர்வதேசத்துக்கு கொண்டுபோகக்கூடாதாம். நாட்டை அழிப்பது என்று அவர்களே முடிவெடுத்து விட்டால், யார் தடுப்பது? நாடு இன்று இந்த நிலைக்கு சீரழிந்ததென்றால் அதற்கு காரணம் சீரற்ற சட்டம், இந அழிப்பு. அழியும் வரை உண்மையை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
  21. நானும் இருக்கிறேன் சேர்! இப்படி ஏதும் சொல்லி தன்னை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது இவருக்கு. அவருக்கு தனது பழைய எஜமானரது நினைவு வருகிறது. பயங்கரவாதிகள் என்று கூறி பட்டப்பகலில் பறவை சுடுவதுபோல் வயது வேறுபாடின்றி தெருக்களில் தமிழரை கொலை செய்து வீசும்போது, வெள்ளை வானில் ஏற்றி சென்று காணாமல் ஆக்கப்பட்டபோது, இந்த நினைவு ஐயாவுக்கு வரவில்லை, கேள்வி கேட்கவில்லை. இப்போதான் பலருக்கு ஞானம் பிறக்குது. முன்பெல்லாம் கதைக்க, விமர்ச்சிக்க பயந்திருந்தவர்கள் இப்போ, விமர்ச்சிக்கிறார்கள். பாதாள போதைக்குழு, தங்களை பாதுகாக்க அதன் பின்னால் இருப்பவர்களை போட்டுத்தள்ளுகிறார்கள். அதன் தலைவன் பிடிபடும்வரை அல்லது கொல்லப்படும் வரை இது தொடரும். இது அவர்களின் தொழில் தர்மமாக்கும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது அதன் விளைவையும் எதிர்பார்த்திருக்க வேண்டும். கைது செய்தாலும் விமர்ச்சிக்கிறார்கள், அவர்களே தங்களுக்குள் மோதிக்கொண்டாலும் அரசை விமர்ச்சிக்கிறார்கள். விமர்ச்சிப்பவர்கள் யார்? இதனால், இவர்களால் பாதிக்கப்பட்டவர்களா?
  22. கேள்வி கேட்பது யார் என்று கவனியுங்கள்! பயங்கரவாதிகளை ஒடுக்குகிறோம் என்கிற பெயரில், வயது வேறுபாடின்றி கண்ட இடங்களிலெல்லாம் தமிழரை சுட்டுக்கொன்றது இவர்களது கட்சிதானே? அன்று அதை செய்தவர்களே இன்றும் செய்கிறார்கள். துப்பாக்கிச்சூட்டின் பின்னால் இருப்பவர்கள் முன்னாள் இராணுவ வீரர். இந்த துணிவை கொடுத்தது, இவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களித்தது யார்? போதைப்பொருள், பாதாள உலகக்குழுவை வளர்த்தது யார்? அதற்குப்பின்னால் இருப்பது யார்? அங்கேயும் போலீஸ், இராணுவமே. இவர்களால் எப்படி இது முடிந்தது? இன்று நேற்றா இந்த குழு இயங்குகிறது? ஏன் அதற்கெதிராக கடந்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முயலவில்லை? காரணம்; இவர்களின் ஆசீர்வாதத்தோடு, ஆதரவோடுதான் இவைகள் இயங்கின. இவர்களின் ஆட்சி வீழ்ந்தவுடன் தங்களுக்கு பாதுகாப்பில்லை என உணர்ந்து, வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளனர். கொலை செய்பவர்களுக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் கிடைத்தன? பெரிய கள்ளரின் தயவில் வாழும் கள்ளர், தங்கள் எஜமானரை காப்பாற்ற துடிக்கின்றனர். அப்போ தாங்களும் காப்பாற்றப்படுவோம் என்கிற நப்பாசையில். இறுதியில் இவர்களே எஜமானரை காட்டியும் கொடுப்பர் தம்மை காத்துக்கொள்வதற்காக.
  23. அவர் பாதுகாப்புடன் செல்வதால் அவரை போட்டுத்தள்ளுவது உங்களுக்கு கொஞ்சம் கஸ்ரமாகத்தான் இருக்கும். ஏன், உங்கள் அப்பா, சித்தப்பாவுக்கு அப்படி பாதுகாப்பேதும் இருக்கவில்லையா கடந்த காலங்களில்? அன்று, லசந்த தனது இறுதித் தருணத்தில், உங்கள் அப்பாவிடம் உதவி கோரினாரே, அப்போ உங்கள் அப்பா என்ன செய்தார்? என்ன கேட்டார்? இப்போ மட்டும் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றி புதுசா கரிசனை எழுகிறது இவருக்கு? அப்படி இருக்கும்போது, இவர் ஏன் தன் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுறார்? எதை விசாரணைக்கு எடுத்தாலும், இவரேன் முந்திக்கொண்டு கருத்து சொல்கிறார்? இனவாதத்தை முன்னிறுத்தி, அதன் பின்னால் மக்களின் கவனத்தை திசை திருப்பி, கொலை, கொள்ளை, ஊழல், போதைப்பொருள் கடத்தல், இராணுவத்தை பயன்படுத்தி பாதாள அமைப்பை உருவாக்கி தங்களுக்கு சவாலானவர்களை, கேள்வி கேட்ப்பவர்களை, ஊழலை வெளிப்படுத்துபவர்களை மௌனிக்கச்செய்தல், இவர்கள் செய்யாதது எது? இல்லையெனில்; இன்று அனுரா செய்வதை, அன்று இவர்கள் செய்து நாட்டை வளப்படுத்தியிருக்கலாமே? இன்றும் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாமென்கிற அச்சத்தில், மக்களை சூழ அழைத்து வைத்துக்கொண்டு உபதேசம் செய்கிறார்கள். இனவாதத்திற்கு பின்னால் எது இருந்ததோ, எவர் இருந்தனரோ, அவர்கள், அவைகள் வெளிப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். அப்போ இனவாதம் தானாகவே முடிவுக்கு வரும். யார் அடுத்து கைது செய்யப்பட இருக்கிறாரோ, அது நடைபெறமுன் அவர் கொலை செய்யப்படுகிறார். அந்தக்கொலையை செய்தவர் அடுத்து கொலை செய்யப்படுகிறார். இந்தக்கலாச்சாரம் இந்த குடும்பத்தாலேயே நாட்டில் அறிமுகமானது. எப்படியும் இதற்குப்பின்னால் இயக்குவிக்கும் தாதா தப்பிப்பாரா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.