Everything posted by satan
-
ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
இன்றுதான் உங்களுக்கு இந்த உண்மை புரிந்ததா? அல்லது புரியாததுபோல் இருந்தீர்களா? இணைந்திருந்த வடகிழக்கை நீதிமன்றம் மூலம் பிரித்தது உங்கள் கட்சிதானே. சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்போது ஆர்ப்பாட்டங்கள் செய்ததும் உங்கள் கட்சிதானே. சரி, நடந்தது நடந்து கடந்து போயிற்று. இனியாவது நீதியோடு, இதய சுத்தியோடு நசுக்கப்பட்ட இனத்திற்கு தீர்வை வழங்குங்கள். உங்கள் கட்சியில் அதிதீவிர சிந்தனையுடையவர் நீங்கள். இனியாவது உண்மை வரலாற்றை ஏற்று, திரிபுபடுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை வழங்குங்கள். நீங்களும் தவறினால் இலங்கை கடனால் மூழ்கி மீள முடியாத நிலைக்கு செல்லும், அதற்கு நீங்களும் காரணமாவீர்கள். நீதியுடன் செயற்பட்டால்; சிங்கப்பூருக்கு ஒரு லீகுவானி போல, இலங்கையில் நீங்கள் போற்றப்படுவீர்கள். உங்களால் நாடு எழுச்சி பெறும்.
-
ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல் - விஜித்த ஹேரத்
சொந்தம், இறையாண்மை என்று சொல்லிக்கொண்டு, சர்வதேசத்தை கூட்டி வைத்து நீங்கள் ஆடிய ஊழிக்கூத்து மறந்து, மறைத்து பேசுகிறார். அலுவகங்களை திறப்பதாலோ, ஆணையகங்களை நிறுவுவதாலோ, உறுதிப்பாடுகளை அளிப்பதாலோ, ஆளையாள் மாறி மாறி குற்றஞ்சாட்டுவதாலோ நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. ஏதாவது ஒரு அரசாங்கம், எதிர்க்கட்சி பொறுப்பு எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. எல்லோரும் பங்காளிகளாகவே இருந்து ஒரு இனத்தை போட்டிப்போட்டு அழித்தீர்கள். நீங்கள் அவர்களை தடுத்தீர்கள், அவர்கள் உங்களை தடுப்பார்கள். நல்லிணக்கத்தை இலங்கையில் உங்கள் யாராலும் ஏற்படுத்த முடியாது, வீர வசனம் மட்டுமே பேச முடியும். அப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த நினைத்தால் அது யாராய் இருந்தாலென்ன நிறைவேற்ற அனுமதி கொடுக்க வேண்டும். நாம் செய்வோம் என கூறி பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்டன, இனியா நிறைவேற்ற போகிறீர்கள்? போரின் கதா நாயகர்களை, கொலைகாரர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படையுங்கள். அவர்களே சொல்கிறார்கள்; எங்களுக்கு மின்சாரக்கதிரையே தண்டனை என்று. இதைவிட வேறு ஆதாரம் தேவையென்ன? அந்த நடவடிக்கைகள் என்னவென்று விளக்கினால்; புரிந்து கொள்ள முடியும். முந்தைய ஆட்சியாளர்களும் இவ்வாறு சுற்றியவர்கள் தான். ஆனால் இன்றும் ஒரு இம்மியளவு கூட நகரவில்லை, நகரப்போவதுமில்லை. இந்த ஏமாற்றும் தந்திரம், பிடிவாதம் நாட்டையும் இனத்தையும் அழிப்பதோடு சாபமும் சூழும்.
-
தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்
ஒரு நீதிமன்றம் அளித்த தண்டனையை, இன்னொரு நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி, அந்த நீதிமன்றத்தை கேலிக்குள்ளாக்குகிறது. எதற்கு இத்தனை நீதிமன்றங்கள்? குற்றவாளிகள் துணிந்து தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவார்கள். இந்த நீதிமன்றத்தில் இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் விடுதலையாகிவிடலாமென்கிற துணிவு. இவர் நாளைக்கே பயமில்லாமல் இன்னும் எத்தனை பேரை சீரழித்து கொலை செய்யபோகிறாரோ? அப்படி நடந்தால்; அவரை விடுதலை செய்த நீதிபதியே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்
-
பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி
அவருக்கெதிராக போர்குற்றச்சாட்டுக்களை கூட பணியாற்றியவர்கள் வைக்கலாம், நிரூபிக்கலாம். கூட்டாக போயிருந்தது வீரக்கதைகளை பரிமாறலாம். குற்றச்சாட்டுக்கள் இன்னும் சூடு பிடிக்கவில்லை. பிடிக்கும்போது எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம், அதற்காகவே காத்திருக்கிறோம்!
-
உதய கம்மன்பில இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
அடுத்தது யார்? அரச சாட்சியா அல்லது சிறையா? இவர்களின் வாக்கு மூலம் அடுத்தவர் யார் என முடிவு செய்யும்.
-
விமல் வீரவன்ச பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலை!
இனியென்ன, போட்டுக்குடுத்து விட்டு வெளியேறவேண்டியது. பசிலை போட்டுக்கொடுத்ததும் இவர்தானாமே, பேசிக்கொள்கிறார்கள். முகத்தில் அவ்வளவு கலக்கம், வெளியில் சவால் விட்டுக்கொண்டு திரிந்தார்.
-
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !
பேச்சுவார்த்தை நடத்துபவர்களும் அதில் பங்குபற்றுவோரும் தமிழரை வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள். அவர்களது பிழைப்புக்கு உதவுவது தமிழர் விவகாரம். கூத்தாடிகள் தேடுவது ஊத்தைவாளிகளையே! இல்லையென்றாலும் இதுகள் வாசலில் போய் நின்று தட்டுகிறார்களே.
-
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !
தமிழரின் வாழ்வாதாரத்தை அழித்து, குடும்பங்களை கலைத்து, நிற்கதியாக்கியதே இந்தியாதான். அனைத்தையும் செய்து ரசித்துவிட்டு, இப்போ உதவியாம். அதற்கு சுமந்திரனுடன் பேச்சாம். தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்து, அவர்களுக்குரிய தீர்வை நீத்துப்போகச்செய்தவர் சுமந்திரன். தமிழர் எழுந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து குட்டுகிறார்கள். தமிழரின் துயரில், எழுச்சியில் எந்த பங்கும் பாகமும் வகிக்காத சுமந்திரனுடன் பேச்சா? அல்லது சுமந்திரனே வலியப்போய் சந்தித்து படம் காட்டுகிறாரா? பாடின வாயும் ஆடின காலும் சும்மா கிடவாது. தமிழரின் விடிவிற்காக உழைத்ததை விட, ஓடியோடி பின்கதவால் சந்திப்புகளை நடத்தி படம் காட்டினதுதான் இவர் சாதித்தது.
-
இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது
அடிப்படை எழுத்தே தெரியாதவனை கட்டுரை எழுதச்சொல்வது போல் உள்ளது ஐ. நா. வின் அறிக்கை. இலங்கையர்களுக்கு சமாதானம், ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாமல் ஆரம்பத்திலிருந்தே, எதிரான விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் வருகிறார்கள். ஐ. நா. வால் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. காலத்தை இழுத்தடிப்பதை விடுத்து, சமாதானம், ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமை என்றால் என்ன, அதற்கு முக்கியமானது என்ன, அதை எப்படி இனங்களிடையே கட்டியெழுப்புவது என்கிற பாடத்தை இவர்களுக்கு எடுத்து விளக்குவது பிரயோசனமானது என்பது எனது கருத்து. இல்லையெனில், ஒவ்வொரு கூட்டத்திற்கும் இதே பல்லவியை எழுதிக்கொண்டு வந்து வாசிப்பார்கள். அவர்களது கலாச்சாரமே; அடித்து, கொலை செய்து, பறித்து வாழ்வாதாரம் நடத்துவது. அது தான் சரியானது என்பது அவர்களது தரப்பு வாதம்.
-
இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது
இவர்களுக்கு அதை சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? ஒரு இனம் கொத்துக்கொத்தாக அழிக்கப்படும்போது மவுனமாக இருந்தார்களே, அப்படி இருக்க வேண்டியதுதானே. ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டுமானால், இவர்கள் ஐ. நா. கூட்டத்தொடருக்கே வந்திருக்கத்தேவையில்லை, தங்கள் நாட்டில் இருந்து தங்கள் இறையாண்மையை கவனித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
-
யாழில். சில காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்!
இன்னும் எதிர்பார்க்கிறேன். இவர்களுக்கெல்லாம் எதற்கு இடமாற்றம்? வீட்டுக்கு அனுப்ப வேண்டும், இடம் மாறினாலும் குணம் மாறாது.
-
யாழில் புதுவித மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் செல்ல தயக்கம்!
பணத்தினை இழந்தவர்களையும் கைது செய்ய வேண்டும். நோய் காவிகள்!
-
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா
அரச இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன், அங்கிருந்த அரச உடமைகளை திருடிச்சென்று விட்டாராம் மஹிந்தா. எங்களிடம் ஒன்றுமேயில்லை என அவரது இளைய புதல்வர் புலம்புகிறார். நாமலோ தன்னிடமுள்ளதெல்லாம் தனது மனைவியின் சொத்துக்கள் என்கிறார். மஹிந்தவோ தனக்கு வசிப்பதற்கு கொழும்பில் வீடு இல்லை என மக்களைப்பார்த்து அழுகிறார். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கை நிலையை மறக்கவில்லை என புரிகிறது. இவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, பல மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி. இவர் பிச்சைப்பாட்டுப்பாடுகிறார். நாட்டில் அனிஞாயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது குமுறுகிறார்கள், ஏன்? இவர்களுக்கெல்லாம் எஜமானர் இவர்கள். இவர்கள் நாட்டை ஆண்டார்களா? சுடுகாடாக்கி சூறையாடினார்களா? தங்கள் ஏவல் நாய்கள், தங்களை காட்டிக்கொடுப்பதற்கு முன் சுட்டுக்கொல்கிறார்கள். இவர்களுக்கு முன் முந்திக்கொள்பவர்கள் இவர்களை காட்டிக்கொடுத்து தாம் தப்புவர். எங்கள் பெற்றோர் தம் பிள்ளைகளை இழந்து தனிமையில் தவிப்பதுபோல் இவர்களும் தவிப்பார்கள். அதுதான் தர்மத்தின் வேலை.
- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
-
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா
அரசியல் திருடர்களை கைது செய்தால், தெருவுக்கு இறங்கி ஊளையிடுகிறார்கள். பாதாள உலகைச் சேர்ந்தவர்களை கைது செய்தால், அது தேவையில்லை என்கிறார்கள். போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்தால், பதறுகிறார்கள். கொலைகாரரை கைது செய்தால், அவர்களின் சொந்த வாழ்க்கையை அசிங்கப்படுத்தி விமர்ச்சிக்கிறார்கள். அப்போ; இதில் எல்லாம் இவர்களுக்கு பங்குண்டு. தங்கள் ஊழல், கொலை, களவுகளை மறைக்க பயங்கரவாதிகளை அழித்தோம் என்று மக்களை திரட்டி ஏமாற்றுகிறார்கள். சந்திரிகா சொன்னார், ராஜபக்சக்கள் திருடர் என்று. ஆனால் இவர்கள் திருடர் மட்டுமல்ல கொலை, கொள்ளை, கடத்தல், திருட்டு என்று செய்யாத வேலையே இல்லை. அரசியலுக்கு எள்ளளவும் தகுதியற்றவர்கள். தமிழரை மட்டுமல்ல, தமது அடாவடிகளை தட்டிகேட்ப்பவர்கள், விமர்ச்சிப்பவர்கள், தங்களுக்கு உதவியவர்களையே கொலை செய்து தம்மை காத்துக்கொண்டவர்கள். மக்களின் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் அதைப்பற்றி கணக்கெடுக்காமல், தங்கள் பணப்பெட்டியை நிரப்புவதிலேயே குறியாக இருந்தனர். அதை மக்களிடமிருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை காட்டி தங்களை வீரர்களாக சித்தரித்தனர். யார் எதை களவெடுக்கிறார்கள், அதை எப்படி தடுப்பது என்கிற அறிவு கூட இல்லாத முட்டாள்கள். இவர்கள் தான் நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள். இதில குட்டிச்சாத்தானுக்கு ஜனாதிபதி கனவு வேறு. இவர்களுக்குப்பின்னால் பல திருடர் பதுங்கி காத்திருக்கிறார்கள், இவர்கள் அடாவடி, அரசியல் சூழ்ச்சி செய்து தம்மையும் காப்பாறுவார்களென. முடியாவிட்டால், அரச சாட்சிகளாக மாறி தங்களை காத்துக்கொள்வார்கள்.
-
சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
அது மட்டுமா? அவர் அறிவித்த கடையடைப்பு, படுதோல்வி! இவருக்கு அளிக்கும் வாக்கு, மஹிந்தவையோ, ரணிலையோ குஷிப்படுத்தி இவருக்கு பதவி பட்டாடை கிடைக்கும். மக்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. அதிலும் பார்க்க மக்கள் தமக்கு பிடித்த அனுராவை தெரிவதில் தப்பில்லையே. அப்போதும், அனுரா அலையில் அடிபட்டுப்போனாலும் நமக்கு வெற்றியே என்று பிதற்றுவார். இனிமேல் இவர் வென்றாலென்ன தோற்றாலென்ன? இவருக்கு பதவி கிடைக்கப்போவதில்லை, ஆளுநர் மூலமாகவே காரியங்கள் நடைபெறும். முன் போல் தேர்தல் நேரம் வந்து வாக்கு அறுவடை செய்ய முடியாது. உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவர்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது. இருந்தமாதிரி தன் தொழிலையே செய்து கொண்டிருந்திருக்கலாம், தேவையில்லாமல் அரசியலில் செருகப்பட்டு, சொந்த தொழிலையும் இழந்ததுதான் மிச்சம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய்ப்போச்சு இப்போ சுமந்திரனின் தொழில்.
-
’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம்
சிவஞானம் யாரைப்பார்த்து இந்தக்கேள்வியை கேட்கிறார்? யாரிடம் கேட்க வேண்டிய கேள்வியிது? கேட்க வேண்டிய இடத்தில் கேட்பதற்கு பயப்படுகிறாரோ? நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள். தமிழரை பிரித்தாளுவதே இந்தியாவும் இலங்கையுந்தானே. அவர்களுக்கு தெரியும் யாரைபிரித்தால் தீர்வை கிடைக்காமல் செய்ய முடியும் என்பது. முடிந்தால் இந்தியாவிடம் நேராக இந்த விளக்கத்தை சொல்லலாம் சிவஞானம் அவர்கள்.
-
இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்
குற்றவாளியின் கோரிக்கைகள் மதிப்பளிக்கப்படுகின்றன, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், கோரிக்கைகள் கவனிப்பாரின்றி இழுத்தடிக்கப்படுகின்றன. சொல்லில் மாற்றமேயொழிய பொருளில் மாற்றமில்லையென்றால்; ஏன் அதை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? ஏக்கிய ராஜ்ய ஏமாற்றுக்கதைதான். எங்கள் விடுதலையை நாங்களே போராடி பெற்றுக்கொள்ள விட்டிருக்க வேண்டும். இல்லையேல் தாம் அதை பெற்றுத்தந்திருக்க வேண்டும். தங்கள் தேவைக்கு, பொழுதுபோக்கிற்கு ஒரு சபை, இது கலைக்கப்படவேண்டும். இது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று இனி கனடா சொல்ல முடியாது என இலங்கை எதிர்பார்க்கிறது. தமிழ் இனம் என்கிற ஒரே காரணத்திற்காகவே, இவ்வளவு அவலங்களை நம் இனம் சந்தித்தது. அதை மாற்றியமைக்க இவர்களுக்கு என்ன அதிகாரமிருக்கிறது? இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நம் பக்கம் யாருமில்லை, சந்திப்புகள் இல்லை, விளக்கம் அளிக்க ஒருவருமில்லை. இலங்கைக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க பலர் நம்பக்கமேயுண்டு. இந்த சொல் இலங்கைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. இதை விட கொடூரமான சொல் பயன்படுத்தப்படுவதுதான் பொருத்தமானது. காரணம் ஒரு இனத்தை அழித்து, மவுனமாக்கி விட்டு எதுவுமே நடக்காத மாதிரி, விடுதலை வேண்டியவர்களை மட்டும் குறி வைத்து தடைகளை ஏற்படுத்துவதும் குற்றம் சாட்டுவதும் எந்த வகையில் நிஞாயமானது? இவர்கள் எல்லாம் எங்களுக்கு நிவாரணம், நிஞாயம் பெற்றுத்தரப்போகிறார்களாம் நம்புவோம். இனி இனிப்பிரச்சனை ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை, பொருளாதார பிரச்சனை மட்டுமேயுண்டு, அதற்கான அபிவிருத்தி ஏர்படுத்தப்படுமென அறிவிக்கப்படும். ஐ. நா. இலங்கை பிரச்சனை பற்றி இனி விவாதிக்கப்போவதில்லை. எது நடந்ததோ அதுவே தொடர்ந்தும் நடைபெறும். போராட யாரும் இல்லை. இது தான் சர்வதேசத்தின் நடுவு நிலை. இதைத்தான் நம் தலைவர்கள் மௌனமாக இருந்து சேர்ந்தியங்கி சாதித்தது. இனிமேல் இவர்களுக்கு அரசியல், பதவி, பணம் எதுவுமிருக்கப்போவதில்லை. அப்பப்போ குரல் எழுப்பி விட்டு போக வேண்டியதுதான்! இது ஒரு சர்வாதிகார ஆட்சியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்லாட்சி மஹிந்தவை காப்பாற்றியது, இந்த ஆட்சி இனப்பிரச்சனை நடைபெறவேயில்லை என சாதிக்கும்.
-
ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்!
இவர்கள் சொல்வதை மற்றைய நாடுகள் அங்கீகரித்து செயற்படுத்த வேண்டும். ஆனால் சர்வதேசத்துக்கு தாம் கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்ற மாட்டார்கள், அதற்கு சம்பந்தமில்லாத ஆயிரம் காரணங்களை, அறிக்கைகளை வெளியிடுவர். இலங்கைக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் சொல்ல வேண்டியது; உங்கள் சட்டங்களை உங்கள் நாட்டோடு நிறுத்திக்கொள்ளுங்கள், எங்கள் இறையாண்மையில் தலையிடுவதையோ, நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எங்களுக்கு கட்டளையிடுவதையோ நிறுத்திக்கொள்ளுங்கள் என அறிவிக்க வேண்டும்.
-
அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? - உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?
சரி, உங்களையாவது நினைவில் வைத்திருந்தாரா? வெளியே உரத்துச் சொல்லிப்போடாதேயுங்கோ பிடிச்சுக்கொண்டுபோய் பரிசோதனை எலியாக்கி விடுவார்கள் உங்களை.
-
இலஞ்சம், ஊழலுடன் தொடர்புடைய பொது சேவைகளில் முதலிடத்தில் பொலிஸ் - இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர்
அது மட்டுமல்ல, சமூக சீர்கேடுகளை வளர்ப்பது, போதை கலாச்சாரத்தின் கதாநாயகர்கள், சமூகங்களிடையே முரண்பாடுகளை வளர்ப்பது, ஊக்குவிப்பதும் இவர்களே. இவர்கள் அரசியல்வாதிகளின், தலைவர்களின் செல்லப்பிள்ளைகளாய் இருப்பதும் ஒரு காரணம். நாட்டில் சட்டம், நிஞாயம் நிலைக்க வேண்டுமாயின் இந்த துறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமானது.
-
அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி!
மேற்குலகு, ஐ. நாவின் இயலாத்தன்மை, குற்ற உணர்வு மேலோங்கி, அதை நசுக்கி தம்மை நிஞாய வாதிகளாக காட்டுகின்றனர். எல்லா சிங்கள தலைவர்களும் பாதிக்க பட்ட மக்களுக்கு நிஞாயம் வழங்குவதை விட்டு மேற்குலகையும், ஐ. நாவையும் குஷிப்படுத்துவதிலேயே முக்கியம் செலுத்துகின்றனர். தர்மம், நீதி இல்லாதவர்கள் அந்த பதவிக்கு தகுதியற்றவர்கள். அன்று இலங்கையில் நடந்த இனவழிப்புக்கு தக்க நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் இன்று காஸாவில், உக்ரேனில் இப்படியான அத்துமீறல்கள் நடக்க வாய்ப்பிருந்திருக்காது. இல்லையேல் அதை செயற்படுத்த தவறியவர்கள் அந்த சபையை கலைத்திருக்க வேண்டும். இந்தச்சபை இருப்பதால் என்ன லாபம் யாருக்கு? ஏன் இந்தச்சசபை கூடுகிறது? அறிக்கைகளை விடுகிறது? இனப்பிரச்சனை இல்லை என்பவர்கள் ஏன் அந்த இந மக்களை அழித்தார்கள்? அவர்களின் வாழ்விடங்களை கலைத்தார்கள்? இப்போ அனுரா சொல்கிறார், வடக்கில் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்கிறார். வடக்கில் இருந்த பொருளாதாரத்தை அழித்தது யார்? ஏன் அழித்தார்கள்? எங்களுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுங்கள் என்று கேட்டோமா இவர்களிடம்? எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிஞாயம் வழங்குங்கள் என்றுதானே கேட்க்கிறோம். தாங்கள் நினைப்பதுதான் எங்கள் பிரச்சனையென அவர்களே முடிவெடுக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தது?
-
குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?
நீங்கள் அப்பாவி, அப்படியே நம்பிவிட்டீர்கள் அவரை. எதுக்கு? உடனேயே குளியலறைக்கு கூட்டிகொண்டுபோய் ஒரு முக்கு முக்கி எடுத்து விடுங்கள் ஆளை, வேண்டுமென்றால் கொஞ்சம் நெருப்புத்தண்ணியையும் கலந்து விடுங்கள் . ஆள் கொஞ்சம் திமிறுவார் விடாதைங்கோ. அதைச்சொல்லுங்கோ! எதுக்கு பாவம் சிவன் கோவில் சாத்திரியாரை அழைக்கிறீர்கள்? அவரோடு என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனை உங்களுக்கு?
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சியா? சென்னையில் இலங்கை பெண்ணிடம் விசாரணை
ரோச் பற்றி வாங்கித்தான் புலிகள் ராஜீவை கொலை செய்தார்கள் என்று ஒருவரை ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்த வீரர்கள். அவர்களுக்கு இலங்கையை தங்கள் கைக்குள் வைத்திருப்பதற்கு புலிகள் மீள எழுகிறார்கள் என்கிற புனை கதை வேண்டும், சிங்களமக்களை ஏமாற்றுவதற்கு இனவாதிகளுக்கு புலிகள் வேண்டும், மொத்தத்தில் இல்லாத ஒன்றை இவர்களே உருவாக்கி தன் லாபம் தேடுகிறார்கள்.
-
குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?
தண்ணியில கண்டம் போல தெரியவில்லை, தண்ணிப்பஞ்சம், சோம்பேறித்தனம் போலல்லவா தெரிகிறது.