Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8487
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. அமைதியாகிவிட்ட போராட்டத்தை சொல்லி, யாரை எப்படி ஏமாற்றி காசு பார்ப்பதென்றே.
  2. தமிழரை அச்சுறுத்தி நாட்டை விட்டு துரத்துவதில் கங்கணம் கட்டி, தங்கள் வீரத்தை காட்டுவதில் மும்முரமாக செயற்படுகிறவர்களுக்கு, தங்களது கல்விமான்கள் புத்திஜீவிகள் வெளியேறுவது கண்ணனுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிவதெல்லாம், நெருப்பு வேண்டுவது தமிழரின் ரத்தம், கலவரம். தமிழரை அழித்தபின் நாட்டில் மிஞ்சப்போவது, இனவாதிகளும் பிக்குகளும் விகாரைகளும். பிக்குகள் வெளியேறுவகற்கு, இவர்களது வயிறு வளர்க்க வெளிநாடுகளில் விகாரைகளுக்கு முக்கியமில்லை, உழைத்தே வாழ வேண்டும். இராணுவத்தை எந்த நாடும் ஏற்காது. அதன்பின் தங்களைத்தானே குற்றம் சாட்டி அடிபடவேண்டும். சொறிஞ்ச கை சும்மா இருக்காதே.
  3. முதலில்..... இதைச் சொல்வது யாரென்று கவனியுங்கள்! அது சரி..... நாட்டை கொழுத்தப்போகிறேன் என்று வெளிக்கிட்டவர் இப்போ ரொப்பிக்கையே மாற்றிப் பேசுகிறாரே, வைச்ச நெருப்பும் மூளவில்லை, கொட்டிய இனவாதமும் எடுபடவில்லை. வேறுபக்கம் திரும்பி விட்டார். இவர் எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வியடைவார்.
  4. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சர்வதேச விசாரணைக்கு தான் தயார் என அறிவித்த போது, மஹிந்தவும் இராணுவமும் தங்களுக்கு பணம், ஆயுதம் வழங்கியதை சிவநேசதுரை சந்திரகாந்தனும் உறுதிப்படுத்தியிருந்தார்.
  5. நாட்டில் நீதிபதிக்கே வாழ்வதற்கு பாதுகாப்பில்லை என்பதை இவரின் இந்தக்கூற்று நிரூபித்துள்ளது. கெட்டிக்காரன் போலவும், தமிழரின் ஏதிலி நிலையை பரிகசிப்பதுபோலவும் இவர் கருத்து வெளியிட்டாலும், இவர் ஒரு பயணியாக கூட வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையை தன்னையுமறியாமல் உருவாக்குகிறார். பாவம் இவர் தன் வாயாலேயே அரசியலில் இருந்து தூக்கியெறியப்படப்போகிறார். இன்னும் சிறிது காலத்தில் இவர் வெளியில் நடமாடினாலோ அல்லது போராட அழைப்பு விடுத்தாலோ, மக்கள் இவரை துரத்தியடிக்கும் நிலை உருவாகும்.கம்மன் பிலவுக்கு முன்னாலேயே, பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள் தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்கி உள்ளார்கள். அதையிட்டு நாம் பெருமை அடைய வேண்டும் என கொழும்பு undefined பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையின் பிரதம தேரர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா லொஸ் ஏஞ்சலஸ் தர்ம விஜய பெளத்த விகாரையின் ஸ்தாபக பிரதம தேரர் கலாநிதி பான்டே வல்பொல பியனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
  6. அதில்லை....... துவாரகா, இளவரசியாம், இலங்கையில் பல முன்னெடுப்புகளை செய்ய இருக்கிறாராம் ஆனால் அந்தக்குரலொலியில், தான் பேசவில்லையென யாரோ ஒருவருக்கு தன்னை விளங்க வைக்க முனைகிறார். இது நம்பும்படியாகவா இருக்கிறது? உண்மையான போராளிகள் இன்னும் சிறைகளிலே இளமையை தொலைத்துவிட்டு காத்திருக்கிறார்கள். இவர்கள் இவ்வளவு சுதந்திரமாக அறிக்கைவிடுகிறார்கள். சாதாரண மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வைத்து பணம் பறிக்கும் கூட்டம். அவர்களுக்கு இனத்தை பற்றி கவலையில்லை, மக்களைப்பற்றி அக்கறையில்லை, கவனமெல்லாம் சந்தர்ப்பத்தை உருவாக்கி அதை பயன்படுத்தி பணம் பறிப்பதே. அவரது உடல்மொழி, பேச்சு, ஆத்திரம் அதையே உணர்த்துகிறது.
  7. நன்றி சரத் வீர சேகர! உங்களின் சேவைக்கு. யாரிடம் நீதிபதி முறையிட வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? முறையிடுவதால் என்ன மாற்றமேற்படும் என நினைக்கிறீர்கள்? பாராளுமன்றத்தில் சித்த சுவாதீனமற்றவராக நீங்கள் அவரை விமர்சிக்கும்போது, நாட்டின் தலைவர், சக பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர் எல்லோரும் கேட்டுக்கொண்டுதானே இருந்தார்கள், அவர்கள் உங்களை கேள்விக்குட்படுத்தவில்லை, தடுக்கவில்லை. தமிழ் சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பு செய்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டார்களே, அப்போ ... நீதித்துறை உறங்கிகொண்டுதானே இருந்தது. நீங்களும் உங்கள் பொறுப்பை உணரவில்லை, வரம்புமீறி போனீர்களே, இதற்குமேல் யாரிடம் அவர் முறையிட வேண்டும், அதனால் என்ன பயன் என நீங்களேதான் விளக்க வேண்டும். பொருளாதாரத்தில் வீழ்ந்து தடுமாறும் நாடு, சுற்றுலாத்துறையை நம்பி எழுந்திருக்க காத்திருக்கும் நாடு, எப்படி நடந்து சுற்றுலாப்பயணிகளை கவருவது என தெரிந்திராது, அவர்களை அச்சுறுத்தும் நிகழ்வுகளை அரங்கேற்றிக்கொண்டு எப்படி சுற்றுலாப்பயணிகளை எதிர்பார்க்க முடியும்? முற்றுந்துறந்த துறவிகள் தெருவிலே நின்று நாட்டை கொழுத்துவோமென கங்கணம் கட்டுகிறார்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இரத்த ஆறு ஓடும் என எச்சரிக்கிறார்கள், நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். இவ்வளவும் நடக்கும்போது வெளிநாட்டுத்தூதுவர்கள் இதை பாத்துகொண்டிருக்கிறார்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் இங்கு வருகை தந்திருந்ததோடு நேரடியாக களத்தில் நடப்பதை அவதானித்துக்கொண்டே இருந்தார்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் தன் நாட்டுக்கு மீள முடியாமல் உதவி கோருகிறார். சில நாடுகள், தங்கள் பிரஜைகளை எச்சரிக்கிறார்கள், இலங்கைக்கு சுற்றுலா செய்ய இருப்பவர்கள் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறும் மீறி செல்பவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவ்விடங்களில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறார்கள். இதெல்லாம் முட்டாள்களுக்கு விளங்குவதில்லை தெரிந்திருக்க வாய்ப்புமில்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அழிவை ஏற்படுத்தும் வழிகளே.
  8. ம்..... ஆளாளுக்கு விசாரணை செய்ய வேண்டுமாம் என கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்தது அது ஒன்றே. சம்பவ இடத்திற்கு வருகை தந்து சரத் வீரசேகர நடந்து கொண்ட விதம், பாராளுமன்றத்தில் நீதிபதியை விமர்சித்த விதம், சம்பவ இடத்தில சம்பந்தமற்றவர்கள் வாகனத்தில் வந்து அச்சுறுத்தியது, அவர் பிறப்பித்த ஆணைகளை உதாசீனம் செய்த தொல்பொருள் திணைக்களம் நடந்துகொண்ட விதம், அப்போ விசாரணை கோராதவர்கள் இப்போ தங்களை புனிதப்படுத்த விசாரணை கோருகிறார்களா? பொலிஸாருக்கு அறிவிக்க வில்லையாம், பிடியாணை பிறப்பிக்கவில்லையாம், ஆம்! அவர் முறைப்பாடுஅளித்திருக்கலாம், நடைமுறைப்படுத்துவது யார்? போலீசார் முன்னிலையிலேயே குருந்தூர் மலையில் வழிபாடு நடத்தச்சென்றவர்கள் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர், போலீசார் முன்னிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டார், போலீசார் முன்னிலையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீடு முற்றுகையிடப்பட்டது அப்போ போலீசாரும், சட்டமும், அதன் தலைவர்களும் கை கட்டி வேடிக்கை பாத்துக்கொண்டிருந்தார்களே, ஏன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தவில்லை?அல்லது விரும்பவில்லை? பொய் சொல்லலாம், அதுக்காக ஏக்கர் கணக்கிலெல்லாம் சொல்லக்கூடாது. புகலிட தஞ்சம் தேடுகிறார்கள் என்று சொல்லும்போதே தெரிகிறது, இலங்கையில் சிறுபான்மையினர் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடு என்பதை நீங்களே ஒத்துக்கொள்க்கிறீர்கள். சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்ட அட்டகாசம், விட்ட சவால் கொஞ்சமா? குடிகாரர் போல் உளறிவிட்டு, இப்போ நான் ஏதும் அச்சுறுத்தவில்லை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம் ஆனால் பண்புள்ள சமுதாயம் இதை சகித்துக்கொண்டிருக்கப்போவதில்லை. நீங்களே அதிகார மிடுக்கில் உங்களை இனங்காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சொல்லும் செயலும் உங்களின் இறந்தகால நிகழ்கால வரலாற்றை உலகுக்கு வெளிப்படுத்துகிறது. இனி நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை நீங்களே சாட்சிகளாய் ஆதாரங்களை சமர்ப்பியுங்கள்! உங்களுக்குள்ளேயே முரண்பட்டு அதிலிருந்து நமக்கான விடுதலை பிறக்கட்டும்.
  9. சர்வதேச விசாரணைக்கு ஒத்துக்கொண்டு ஒத்துழைத்தால் நஷ்ட ஈடு தானாக வருமே, எதற்கு இப்படி அரற்றிக்கொண்டு திரிய வேண்டும்?
  10. நீதிபதியே நாட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடுகிறார், இவர் நகைச்சுவை அடிக்கிறார். போராடபோனவர்கள் போராடினார்கள், மாண்டார்கள், சிலர் அமைதியாகிவிட்டார்கள், இவர்களோ அதை வைத்து பிழைக்கிறார்கள். இராணுவத்தை நிரந்தரமாக தமிழர் பிரதேசங்களில் நிலைநிறுத்துவதற்கு இவரின் இந்த காணொளி போதும். இவர் பேச்சு ஒரு போராளியின் பொறுப்பான பேச்சாக தெரியவில்லை.
  11. அதே நேரம் சர்வதேச விசாரணையை தட்டிக்கழிக்கவும் முடியாது, நீதியமைச்சர் பச்சைப்பொய் சொல்கிறார். இதிலிருந்தே இலங்கையின் நீதிபரிபாலனம் எந்தளவுக்கு மலினப்படுத்தப்பட்டுள்ளது என்பது வெள்ளிடைமலை. தாங்கள் விரித்த வலையில் தாங்களாகவே சிக்கிக்கொண்டுள்ளார்கள். எதை மறுக்கிறார்களோ அதற்குள் தாங்களாகவே மாட்டி உண்மையை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இனி சொல்வார்கள், நீதிபதி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக பொய் சொல்கிறார் என்று இன்னொரு பொய்யை சொல்லி மாட்டுப்படுவார்கள். நீதிபதி மனநிலை குன்றியவர் எனும்போதே, அப்படிப்பட்ட நீதிபதியை நியமித்தது தாம்தான் என்பதால் இவர்களும் மனநலம் குன்றியவர்களே. மூடர் தம் வாயாலேயே மாட்டுவர்!
  12. ஆமா.... ஒரு சில மாதங்களுக்கு முன் உங்கள் அமைச்சர் அலி சப்ரி, புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வுத்தகவல்களே உதவின, அவர்களின் ஒத்துழைப்புடனேயே புலிகளின் ஆயுத விநியோகத்தையும், நிதி திரட்டும் நடவடிக்கைகளையும் தடுக்க முடிந்தது, அவர்கள் எங்களுக்கு உதவியிருக்கா விட்டால் எங்களால் விடுதலை புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என்று புகழாரம் சூட்டினாரே! அது எப்படி ஒரே விடயத்தில் ஆதரவாகவும் எதிராகவும் அமெரிக்காவால் செயற்பட முடியும்? இவருக்கு தடை விதித்ததன் காரணம், நாட்டில வன்முறையை தூண்டுவது போல அமெரிக்காவிலும் தூண்டி விடுவாரோவென அமெரிக்கா பயத்திருக்குமோ? இவர்கள் மட்டும் நடுவு நிலையாளர் என்கிற நினைப்பு! அதே போன்று யாரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பது என்று முடிவு செய்வது அவர்கள் உரிமை. நீங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கிறீர்கள், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு விசா மறுக்கிறீர்கள், அது மட்டும் என்ன நிஞாயம்?
  13. சிறந்த விசாரணை அதிகாரிகள் இருந்திருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பேயில்லை, இத்தனை ஆண்டுகள் கர்தினால் விசாரணை அறிக்கையை கேட்டு மல்லுக்கட்டி சர்வதேச விசாரணைக்கு சென்றிருக்க வேண்டியிருந்திருக்காது, சணல் நான்கு வெளியிடும்வரை உங்கள் பதிலும் வந்திருக்காது. நடந்து முடிந்தவை உங்களது விசாரணைக்கு நல்ல சான்றுகள். உங்கள் விசாரணை நம்பகத்தன்மை வாய்ந்ததென்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும்? உண்மையைத்தானே அவர்களும் வெளிக்கொண்டு வருவார்கள். குற்றவாளிகளை தண்டிக்க நீங்கள் ஏன் பதறவேண்டும்?
  14. இலங்கையில் பேச்சுசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டிஸ் தூதுவர் டிரான் அலஸிடம் கேள்வி அவரது கேள்விக்கு டிரான் என்ன பதில் கொடுத்திருப்பார்? அசடு வழிந்திருப்பாரோ இல்லை பிரித்தானியா எங்கள் உள்நாட்டு விடையங்களில் தேவையில்லாமல் தலையிடுகிறது என்பாரோ? எல்லா நாடுகளும் இலங்கையை தேவையில்லாமல், ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்துகின்றன.
  15. வெளிவிவகார அமைச்சுக்கு பதில் எழுத தெரியவில்லைபோலும், அல்லது அந்த தாயாரின் கடிதம் கிடைக்கவில்லையோ அமைச்சுக்கு? வெளிநாடுகளில் இருந்து பணம் வருமென்றால் பதிலும் உடனே வரும்.
  16. அவர்களுக்கு நிஞாயம் அநிஞாயம் என்றால் என்னவென்று தெரியாது, சொன்னாலும் புரியாது. ஆனால் இவ்வளவு காலமும் அழுதோம், அரற்றினோம், கெஞ்சினோம் யாரும் கண்டு கொள்ளவில்லை எங்களை. இடையனால மடையன் கெட்டானாம் என்பதுபோல் இலங்கை எடுக்கும் இந்தியா சார்பால், இந்தியாவின் போலி முகமும், இந்தியா எடுக்கும் இலங்கை சார்பால் இலங்கையின் கொடூர முகமும் வெளிவருகிறது. தாங்களாகவே தங்களை காட்டிக்கொடுத்து கொண்டிருக்கிறார்கள், கைதட்டி வரவேற்போம், அவர்களின் எதிரிகளோடு கைகோர்ப்போம்!
  17. உங்ககளுடன் இருந்த ஒருவரே தகவல் வழங்கியுள்ளார். உங்கள் மேல் தவறில்லையென்றால்; ஏன் விசாரணை அறிக்கையை இதுவரை மறைத்தீர்கள்? சர்வதேச விசாரணையை மறுக்கிறீர்கள்? "முதுகில புண்ணுள்ளவனுக்கு காடு நுழைய பயமாம்."
  18. அது சரி, இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லையென்றால் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதேன்? ஐ. நா. வுக்கு வருடா வருடம் அறிக்கை கொண்டு செல்வதுமேன் என விளக்குவீர்களோ? பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டது என்பதற்காக உலகம் இருண்டு விடாது. உன் நண்பனை பற்றி சொல்லு, உன்னைப்பற்றி நான் சொல்லிறேன் என்பது உங்கள் இருவருக்கும் ரொம்பப் பொருத்தம்.
  19. இலங்கையில் தமிழருக்கு நடந்தத அடக்குமுறையே இந்தியாவில் சீக்கியருக்கு நடக்கிறது. அப்படியிருக்க, எப்படி இந்தியாவை இவர்களால் எதிர்க்க முடியும் அது தங்களையே எதிர்ப்பது போலாகும். அத்தோடு சிங்களம் தமிழரை அழிக்க பெரும் பங்கு கொடுத்து, பாராட்டியது இந்தியா. கனடாவோ அதுபற்றி இலங்கையிடம் கேள்வி எழுப்புகிறது. ஆகவே இவர்கள் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதுதான் சரி. கனடா இவர்களின் ஆதரவை கோரப்போவதுமில்லை என்பதை மிலிந்த மொரகொட விளங்கிக்கொண்டு கருத்து சொல்வது நல்லது. முந்திக்கொண்டு கருத்து வெளியிட்டு மூக்குடைபடாமல் இருக்க.
  20. கொண்டுவரும் இயந்திரங்கள் (எஞ்சின்கள்) ஓடுமா? பழைய இரும்புக்கு போடப்படுமா?
  21. கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தவறிய, நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து காக்கத்தவறிய ஜனாதிபதியை தெரிந்தெடுத்த மக்களே துரத்தினார்கள். இதில், அமெரிக்கா எங்கே வந்தது? தவறான பொருளாதார ஆலோசனையினாலேயே கோத்தா பதவி விலக வேண்டி வந்தது என சம்பந்தப்பட்டவர்களும் ஏற்று விளக்கமளித்துள்ளனர். இவர் தன் தவறை மறைத்து அமெரிக்காமேல் பழி போட்டு, தான் சுத்தம் என நிறுவ முயற்சிக்கிறார். அதைவிட அமெரிக்கா விசா அளிக்காமைக்கான காரணத்தை விளக்கியுள்ளது. விளக்க குறைபாடு போலுள்ளது சரத் வீரசேகரவுக்கு.
  22. ஒரு பராபரப்புக்காக, தான் இதில் சம்பந்தப்படவில்லை என நிறுவுவதற்காக, தன்னை ஓரு நீதிமானாக நிலைநிறுத்தி பிரபல்யம் அடைவதற்காக, சர்வதேச விசாரணையை கோரிய கர்தினால்,வழமை போலவே அந்த கோரிக்கை ஏற்கப்படாது என்று நினைத்தே வைத்திருப்பார். ஆனால் அது உள் நாட்டிலும் சர்வதேசத்திலும் வலுப்பெற்று நடவடிக்கையில் வருமென நினைத்திருக்கவில்லை. இப்போ சிங்களம் மாட்டிவிடும் அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைப்பதை அவர் விரும்பவில்லை. கோரிக்கை வைத்தவரே அது வேண்டாம் என அறிக்கை விடுவார். நாமல், கோத்தா கூட அந்த கனவிலேயே விசாரணைக்கு தயார் என்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இதுதான் சிங்களம்! அக்கினி சொன்னமாதிரி, "இப்படிக்க என்றால் அப்படிக்க என்பார்கள் ............... என்பார்கள்."
  23. கொலைவெறி, அடாவடி இவற்றை தூண்டும் செயற்பாடுகளை மதம் என்று கூறிக்கொண்டு திரிவோர், பின்பற்றுவோர் அதை வைத்து மக்களை ஏமாற்றி, வதைத்து வயிறு வளர்ப்போரே!
  24. தான் இராஜாங்க அமைச்சரல்ல, அதன் போர்வையில் சிங்களத்தின் பலிக்கடா என்கிற யதார்த்தத்தை சிவநேசதுரை சந்திரகாந்தன் கொஞ்சம் உணரத்தொடங்கியிருக்கிறார் போல் தெரிகிறது. உயிர்த்த ஞாயிறு விசாரணை ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்று மறறொன்றோடு தொடர்புபட்டு எல்லோரும் இழுபடப்போகிறார்கள் என்பது தெரிந்ததனாலேயே, இவர் சம்பந்தப்பட்டவர்களையும் பொறி வைத்துப் (எச்சரிக்கை விட்டு) பேசியிருக்கிறார் என தோன்றுகிறது. நான் உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு தயார்! என்னை நீங்கள் காப்பாற்றாது விட்டால், அடுத்த விசாரணையில் உங்களை நான் மாட்டுவேன் எனும் எச்சரிக்கையாக இருக்கலாம். இப்போ இந்தியா வேடிக்கை மட்டும் பாக்குமா அல்லது தன்னை காப்பாற்ற போராடுமா? நான் சொன்னதுபோல், இந்தியா தன்னை காப்பாற்ற போராடும்போது நமக்கு விடிவு தானாக வரும் வாய்ப்புள்ளது. காலிஸ்தான் தனி நாடு கேட்க்கும், அமைக்கும் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். தமிழரில் இருந்து இந்தியா விலகி இருக்க செய்ய வேண்டும். காலமிது கனிந்து வருவதுபோலவே தெரிகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.