Everything posted by satan
-
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை செய்து வழக்கு முடிவுறுத்தப்படவேண்டும் எனும் சட்டம் கொண்டுவரப்படவேண்டும், வழக்காளியோ எதிராளியோ இறக்கும்வரை இழுத்தடித்து, அதை அடுத்த சந்ததிக்கு திணிக்கும் வரை நீடிக்கக் கூடாது. அத்துடன் வழக்கிற்கு இவ்வளவு தொகைதான் சட்டத்தரணிகள் வசூலிக்க வேண்டுமென்கிற வரையறை கொண்டுவரப்படவேண்டும். இதனால் ஏழைமக்களும் சட்ட உதவியை பெற வாய்ப்புண்டு. சட்டத்தரணிகள் அதிக பணத்தை வசூலிப்பதும் வழக்கை இழுத்தடிப்பதும் சட்ட தர்மத்திற்கு எதிராக செயற்படுவதும் தமது வாடிக்கையாளரின் வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை பணத்திற்காக எதிர்தரப்பிற்கு காட்டிக்கொடுப்பதும் விற்பதும் பின் வழக்கிலிருந்து பின்வாங்கி எதிர்தரப்பிற்கு ஆயராவதும் ஊழல் செய்வதும் வழக்குகள் குவியவும் மக்கள் நீத்துறையின்மீது நம்பிக்கை இழக்கவும் காரணமாகிறது. சட்டத்தரணிகள், போலீசாரே பகற் கொள்ளைக்காரர். சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவும் இவர்களே காரணம்.
-
றோசா முள்ளா? மலரா??
நலமே வீடு சேர்ந்தது சந்தோசம். இனிமேலாவது ரோஜாவைதொடும்போது இருமுறை யோசித்தித்தபின் தொடவும். மென்மையானவை தேவையேற்படின் வலியையும் ஏற்படுத்தும்.
-
திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம்
அதாவது, சட்டவிரோத செயற்பாடுகளை மூடி மறைக்க, நிஞாயப்படுத்த அரசியல்வாதிகள், பிக்குகளையும் புத்தரையும் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது. இதற்கு ஏன் சட்டம் அடிபணிகிறது? ஒருமுறை பணிந்தால் தொடர்ந்து குனிந்து குடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும்.
-
பிரபாகரன் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை, துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை; இன்று நிலைமை தலைகீழ்! - இராதாகிருஷ்ணன்
தங்கள் ஊழல் அரசியலை தக்க வைக்க, எதிரிகளை அழிக்க பயன்படுத்திய ஆயுதப்படைக்கு கொடுத்த அதிகாரம், அவர்கள் செய்யும் தவறுகளை நிஞாயப்படுத்தியதே இன்று நாட்டை அழிக்கிறது. இராணுவம், போலீஸ், அரசியல்வாதிகள், முன்னைய சில ஜனாதிபதிகள் இதை தொழிலாக செய்தனர், ஊக்கப்படுத்தினர், ஒரு பெண் அரசியல்வாதி வைத்த கருத்துக்களே அதற்கு ஆதாரம். இப்போ அதை தடுக்கும் அனுரவை கவிழ்க்க இல்லாத கதைகளை பரப்புதல், சவால் விடுதல், அச்சுறுத்துதல் நடக்கிறது. மக்கள் ஒத்துழைத்தால் இந்த களைகளை இலகுவாக அகற்றலாம். எதற்காக பயங்கரவாத சட்டத்தை அகற்றாமல் வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்? ஒன்று அகற்றவேண்டும் இல்லையேல் இந்த ஊழல்வாதிகளை இந மதவாதிகளை அதன்கீழ் கைது செய்து விசாரிக்க வேண்டும். ஊழல்வாதிகள் தைரியமாக நினைத்ததை சாதித்தார்கள், இவர்கள் அவர்களை தண்டிக்க ஏன் தயங்கவேண்டும்? துணிந்து இறங்கினால் உண்டு இல்லையேல் அவர்கள் கரம் ஓங்கும்.
-
பிரபாகரன் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை, துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை; இன்று நிலைமை தலைகீழ்! - இராதாகிருஷ்ணன்
அதற்கு காரணம், அரசியால்வாதிகளின் ஆசீர்வாதத்தோடும் அவர்களே முன்னின்றும் போதைப்பொருள் கடத்தல் விநியோகம் நடந்தன, அதற்கெதிராக அனுர அரசு கடும் நடவடிக்கை எடுப்பதால் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒருவரையொருவர் போட்டுத்தள்ளுகின்றனர். போதைக்கடத்தல்காரருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்போது விமர்சிப்பவர்களைப்பாருங்கள் யாரென்று, பெரும்பாலும் அவர்களின் பாதுகாவலர், பிரதேசசபை உறுப்பினர், சாரதி, முன்னாள் இராணுவத்தினர் இப்படியே தொடர்கிறது. கொலை நடப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லையே. நூறு கோடி சொத்து நாமலின் பெயரில் காட்டப்படுள்ளது, அது எப்படி வந்ததென்றால் சரியான பதில் இல்லை.
-
அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் அதிருப்தி
அரசியல்வாதிகள் பிக்குகளுக்கு அடங்கிபோகும்வரை அவர்களும் அடக்கியாள்வார்கள். அரசியல்வாதிகள் தயவில் பிக்குகளும், பிக்குகள் தயவில் அரசியல்வாதிகளும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர். ஞானசார தேரரை அடைத்ததுபோல் அடைத்து, எதற்கும் அடிபணியாமல் சட்டம் தனது கடமையை செய்தால்; இவர்கள் தங்கள் போலிக்காவியை களைந்துவிட்டு சென்றுவிடுவார்கள். இனவாத அரசியல்வாதிகளை சிறைக்குள் தள்ளினால் இவர்கள் வீதிக்கு இறங்குவார்கள், இவர்களையும் பிடித்து போட்டுவிட்டால் தானே அடங்கிவிடுவார்கள். எப்போ இனவாதம் அழிகிறதோ அன்று பௌத்தமதமும் துகிலுரிக்கப்படும்.
-
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது
இவர் பல பெண்களோடு பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக விசரணைகள் நடந்தன, தாயார் கூட இவரை பல நிகழ்வுகளில் தவிர்த்திருந்ததாக செய்திகள் வெளிவந்தன. அரச குடும்பம் என்கிறபடியால் அடக்கி வாசிக்கிறார்கள்!
-
றோசா முள்ளா? மலரா??
மென்மையான மனதுள்ளவர்களைத்தான் ரோஜா முள்ளு குத்தும். விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன்.
-
விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு
முதலில் சிறைக்குள் போட்டார்கள் இவரை, இனிமேல் பைத்தியத்திற்கு மருத்துவம் பாக்க வைத்தியசாலையில் அனுமதிப்பார்கள். பாவம், ஜனாதிபதி கனவில் சிறைக்கு சென்றார், இப்போ விரக்தியில் சித்தம் கலங்கி மாற்றி மாற்றி பேசுகிறார். ஆமாம், இவருக்கு வாக்களிக்க சொல்லிய கட்சிதான் இன்று சிறிதரனை கட்சியிலிருந்து பதவி நீக்கியுள்ளது.
-
அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் அதிருப்தி
எங்கு போய் எதை கதைக்கிறார்கள்,இவர்கள் யார்? இவர்களை நியமித்தது யார்? முன்னைய ஜனாதிபதிகள் செய்த தவறுகளை இவர்களிடம் போய் ஏன் தெரிவிக்கவில்லை? இவர்கள் மகா நாயக்கர்களா அரசாங்கத்தை கட்டுப்படுத்துபவர்களா, மத போதனை செய்பவர்களா அரசியல் செய்பவர்களா? இவர்கள் அரசியல் செய்வதென்றால் விகாரைகளை இழுத்து மூடுங்கள்.
-
விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு
ஆமா.... நடேசன், அவருடன் பல போராளிகள், பாதிரியார் அவருடன் சரணடைந்த போராளிகள், பாலச்சந்திரன், பல பொதுமக்கள் யாரிடம் சரணடைந்தனர்? அவர்களை கொன்றது யார்? அவர்கள் என்ன ஆனார்கள்? சரணடைவோரையெல்லாம் கொன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று யார் கட்டளையிட்டது? சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர வற்புறுத்தியது, ஆனால் நாம் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோமென கோத்தாவே பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் அப்பப்போ தூக்கத்தால் எழும்பியதுபோல் ஒவ்வொரு கதை சொல்வார். தெரிவிக்கப்படாமல் எப்படி இவருக்கு எல்லாம் தெரிந்தது? இட்டுக்கட்டினாரா? சரத் பொன்சேகாவின் பெரிய பகிடி! போரில் ஈடுபடாத பொதுமக்கள், பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர்களை காப்பாற்ற விரும்பவில்லை என்கிறார், பின்னர் அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால் அவர்கள் உயிருடன் இருந்திருப்பர், தலைவர் முதலமைச்சராக இருந்திருப்பார் என்கிறார், ராஜபக்சக்கள் விடுதலைப்புலிகளை காப்பாற்ற எண்ணினர், இராணுவத்தினர்தான் அதற்கு எதிராக இருந்து அழித்தனர் என்கிறார். அப்போ, போரில் இறந்தவர்கள், பாலியல் கொலை, சிறுவர் கொலை எல்லாவற்றையும் இராணுவத்தினர்தான் திட்டமிட்டு செய்தனர் என்பதை ஒப்புக்கொண்டு ராஜபக்சக்களை காப்பாற்றுகிறாரா? இவர் என்னதான் சொல்ல வருகிறார்? இவரே இராணுவத்தினரின் போர்க்குற்றத்தை ஏற்றுக்கொள்கிறாரா? சொல்லுங்கள் இன்னும் தளபதியாரே! கேட்கத்தான் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம் நாங்கள்.
-
சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று ; தமிழரசுக்கட்சி பங்கேற்காது
ஏக்கிய ராஜ்ய சட்ட வரைபை ஏற்படுத்துவதில் முன்னிலை வகித்து, வக்காலத்து வாங்கியவர் தமிழரசுக்கட்சியின் உத்தியோகப்பற்றற்ற பதில் பொதுச்செயலாளர். அது நடைமுறைப்படுத்தாவிடில் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என சவால் விட்டவர், அதை அனுரா நடைமுறைப்படுத்துவார், தனக்கு அழைப்பெடுப்பார் எனக்காத்திருந்தவர், இன்றுவரை தனக்கும் அழைப்பு வருமென்றே எல்லோரையும் பதவி நீக்கி கட்சியை அபகரித்து காத்திருக்கிறார். பதில் தலைவர் இப்படிச்சொல்கிறார். இந்தக்கட்சியில் ஆளுக்கொரு கொள்கை, நடைமுறை, பேச்சு, முடிவு. இதில பாரம்பரியக்கட்சி என்று கூவல் வேறு.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
"எடுத்தவனுக்கு ஒரு பாவம், கொடுத்தவனுக்கு பல பாவம்."
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
உண்மை. அலைச்சல், நேரமினக்கேடு, நட்டம் இதனால் கேட்டதை கொடுத்துவிட்டு போய்விடுகிறார்கள். அதையே சாதகமாக வைத்து துரத்துகிறார்கள். ஒருநாளைக்கு கொடுக்க முடியவில்லையென்றால் கதையையே முடித்து விடுகிறார்கள். இவர்களோடு பழக்கம் வைப்பது, கொடுப்பது, நன்மை பெறுவது, உதவி செய்வது எல்லாமே ஒருநாள் ஆபத்திற்தான் முடியும். பொதுவாக இளைஞர்களையே இவர்கள் சிநேகிதம் பிடிப்பார்கள். முன்பெல்லாம் கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகளின் நிலை கவலையாக இருக்கும். ஒவ்வொரு செக் பொயிண்ட்டிலும் கொடுக்க வேண்டும். வாகனத்திற்கு பெற்றோல், அதற்குரிய ஒயில், சேவிஸ், செலவு, சாரதி சம்பளம் இப்படி எவ்வளவோ செலவு. சில நேரம் அவர்களிடம் கொடுக்க முடியாவிட்டால் நீதிமன்றம் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் கதையை கேட்கும்போது கவலையாக இருக்கும். இப்போ எப்படியென்று தெரியவில்லை. தமிழ்ப்பிரதேசத்தில் வேலை செய்வதென்றால் அவர்களுக்கு அவ்வளவு குஷி. மாற்றம் வந்துவிட்டால் தங்களுக்கு தெரிந்த கூலிகளை கொண்டு மாற்றவேண்டாம் என்று கோரிக்கை கடிதம் அனுப்பச்சொல்வார்கள். இங்கே வேலை செய்தால் சம்பளம் கூட, அதைவிட மேலதிக வருமானம். தமிழரில் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கே வினை செய்வது.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
போலீசார் சிறிய குறுக்கு வீதிகளிலேயே மறைந்திருந்து கெல்மெட் போடாத உந்துருளி ஓட்டுநர்களிடம் கைலஞ்சம் வாங்குவது வழமை, கொடுத்து செல்வது நம்மவர் வழமை. ஒன்று, நேரமினக்கேடு மற்றது, கொடுக்காவிட்டால் கள்ள கேஸ் போடுவது, போதைப்பொருள் வைத்து கைது செய்வது. இது கள்ளன் போலீஸ் விளையாட்டு. ஒருவராவது நான் தவறு செய்தால் நீதிமன்றுக்கு அனுப்பு நான் அங்கே சரி செய்கிறேன் என்று சொல்வதில்லை, சொன்னாலும் அது நடக்கபோவதுமில்லை. தவறுகளில் இருந்து லஞ்சம் கொடுத்து மீளுவது. நடுராத்திரி லஞ்சம் வாங்குவது சுலபம், இவர்கள் கொடுத்து வேறு பழக்கியிருக்கிறார்கள், நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். தீயவர் நட்பு இப்படித்தான் முடியும். அவர்கள் தவறு செய்திருந்தால் வாகனத்தை நிறுத்த பல வழிகள் உண்டு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதில் என்ன பிரச்சனை பொலிஸாருக்கு? எதையோ மறைப்பதற்காக அவரை சுட்டு, மற்றவர்களை அச்சுறுத்தி, ஆதாரங்களை சோடித்து, என்ன வேலை அது? இருபக்கமும் லஞ்சம் பெற்ற கை ஒருநாள் இப்படித்தான் முடியும். எல்லா ஆவணங்களும் கைவசம் வைத்திருப்பவர்களையே மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இந்த வழிப்பறித்திருடர். சில மாதங்களுக்கு முன் தெற்கில் சில இளைஞர் வாகனத்தில் எங்கோ சென்று விட்டு நடுராத்திரி திரும்பிக்கொண்டிருந்த போது போலீசார் அவர்களை இடைமறித்து லஞ்சம் கேட்டிருக்கிறார்கள், அவர்கள் மறுக்கவே போலீசார் வாகனத்தை சோதனையிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள், அவர்களும் சம்மதித்து வாகனத்தில் இருந்து இறங்கி வழி விட்டிருக்கிறார்கள். ஒரு போலீசார் தனது காற்சட்டை பையிலிருந்த போதைப்பொருளை வாகனத்தில் வைத்துவிட்டு கண்டெடுப்பதுபோல் அவர்களை மிரட்டியுள்ளார், அவர்கள் இளைஞர், விடவில்லை, கடைசியில் போலீசார் கைது செய்யப்பட்டு வேலையிழந்தார். நம் ஊரில் மக்களை பயமுறுத்தி இப்படி பல சேட்டைகள் நடந்துள்ளன. போலீசாரை சோதனைக்கு அமர்த்தும்போது போதைப்பொருள், மது பரிசோதனை, உடமையேதும் அவர்கள் வசம் உண்டா என்பதை பரிசோதித்து கடமைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், அவர்கள் உடலில் கமெரா பொருத்தப்படவேண்டும் இல்லையேல் கடமைக்கு அனுமதிக்க கூடாது.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
ஏன் இதுவரை காலமும் தானாக ஆமி விலகவில்லை? புலம்பெயர்ந்தோருக்கு அடிபணிந்து அனுரா வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுகிறார், பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என கதறுகிறதே தெற்கு.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
பலபெயர்கள் எனக்கு பலரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே குறிப்பிட்டுள்ளேன். அனுரா காவடி என்றுதான் என்னை சொல்வதாக கூறியுள்ளீர்கள், ஏன் சொல்லாத மற்ற பெயர்களுக்கு உரிமை கோருகிறீர்கள்? புலிகளின் காசை நான் அடித்ததாக சொல்லவில்லை என்கிறீர்கள் பிறகு ஏன் இந்த சந்தேகம்?
-
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!
"எருதோடு பொருத முடியாதவர்கள் மேழியோடுதான் பொருதுவார்கள்." சுமந்திரன், ஒருவர் மேல் அழுக்காறு கொண்டால் எந்த நிலைக்கும் தாழ்ந்து போவார். அப்படி யாராலும் இறங்கிப்போக முடியாது, சுமந்திரனோடு யாராலும் இணைந்து செயற்படவும் முடியாது. ஆனால் சிறிதரன் புத்திசாலி. தானாக கட்சியிலிருந்து விலகாமல் எல்லா குடைச்சலையும் தாங்கி, சமாளித்து தேர்தலில் வென்று, வலுக்கட்டாயமாக சுமந்திரனாலேயே கட்சியிலிருந்து நீக்கப்படுள்ளார். சுமந்திரன் ஒரு குழப்பி, அழுக்காறு கொண்டவர். தான் அடுத்தவர்க்கு வெட்டிய குழியில் விரைவாகவே விழுவார். அப்போ இவருக்காக யாரும் கவலைப்படப்போவதில்லை ஆரம்பத்திலிருந்தே நான் சொன்னதுதான், தமிழருக்கும் அவர்தம் கட்சிக்கும் குழி பறிக்கவே திட்டமிட்டு புகுத்தப்பட்டவர் சுமந்திரன். எல்லா ஜனாதிபதியையும் வரவேற்றவர் அனுராவை மட்டும் மிரட்டுகிறார், சவால் விடுகிறார், ஏனென்றால் இவரை அழைத்து பதவி வழங்காதவர் அனுரா மட்டுமே. சுமந்திரனோடு சேர்ந்து இயங்குபவர்கள் சுமந்திரனைப்போலவே உண்மைக்கு வெகு தூரமானவர்கள். அவர்களை திரட்டி எதை சாதிக்க முடியும்? அவர்கள் பதவியும் பொறுப்பும் எத்தனை நாளைக்கு? மக்கள் வாக்களித்தால் மட்டுமே இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக முடியும். மக்களே தீர்ப்பளிப்பவர்கள்
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இது ஒரு தனிப்பட்ட பிரச்சனையில்லை, அதற்கு என்று சில வரை முறை உண்டு அதற்கேற்ப நடத்தப்படும் என நினைக்கிறன். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கவனிக்க அனுரா ஒன்றும் கடவுளுமில்லை, மாயவித்தைக்காரனுமில்லை. இன்று தெற்கிலும் இதே பட்டப்பகலில் கொலை. அது அதற்கென்று விசாரணைக்குழுக்கள் உண்டு அதன் மூலமாகவே செயற்படுத்த முடியும்.
-
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!
உட்கட்சி மோதலை சந்தியில் விமர்சிப்பவர், நீதிமன்றத்தில் நிறுத்துபவர், பின் மற்ற கட்சிகள் எங்களை விமர்ச்சிக்கிறார்கள் என்று குறைபாடுபவர்கள், சிங்களவரை வெட்டி ஆட முடியாதவர்கள் சிறிதரனை கட்சியிலிருந்து நீக்குவதுதான் அரசியல் சாதனை. அவரை தெரிந்தெடுப்பது மக்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் கட்சியால் நிராகரிக்கப்பட்டவர் இல்லாத பதவிகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுகிறார். ஓடுகிறவன் எல்லாம் ஜெயிப்பதில்லை.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
இல்லை. இன்னும் பலர் விமர்ச்சித்திருக்கிறார்கள், உங்களைத்தொடர்ந்துதான். இதிலிருந்து நீங்கள் கருத்துக்களை சரியாக வாசிப்பதில்லை என புரிகிறது. இங்கு என்னை விமர்ச்சிக்கும் பல பெயர்கள் உண்டு எனவும் அவற்றையும் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் மட்டுந்தான் என நீங்கள் சொல்வதன் பொருள் என்ன?
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
விசாரணை செய்யாமலா விடப்போகிறார்? எதுக்கய்யா எல்லாவற்றையும் உங்கள் தலையில் கட்டிக்கொண்டு காவடியாடுகிறீர்கள்? கோசானுக்காகவா கருத்தெழுதுகிறீர்கள் என்று கேள்வி வேறு என்னை கேட்க்கிறீர்கள்? நான் யாருக்கோ, எதுக்கோ எழுதும் கருத்துக்கெல்லாம் என்னை வசை பாடுகிறீர்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லையே? நான் பந்திப்பந்தியாக எழுதினால் நீங்கள் கடந்து போங்கள், உங்களை வாசிக்கும்படி நான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லையே அல்லது சுருக்கமாக எழுதுங்கள் என்றும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நான் எப்படி எழுதவேண்டுமென யாரும் என்னை கட்டாயப்படுத்தவும் முடியாது, அதற்கு யாருக்கும் உரிமையும் கிடையாது.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
ஏனய்யா எல்லாத்தொப்பியையும் தூக்கி உங்கள் தலையில் மாட்டுகிறீர்கள்? நீங்கள் மட்டுந்தான் இங்கு கருத்து எழுதுகிறீர்களா? எதற்கெடுத்தாலும் எனக்காக கருத்தெழுதுகிறீர்கள், என்னைத்தான் சொல்கிறீர்கள் என்று வில்லங்கத்திற்கு விதண்டாவாதம் செய்கிறீர்கள். அப்படியென்றால் யார் யாருக்காக கருத்து எழுதுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒன்று சொன்னால் அதை பலர் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். இங்கு தவறு செய்பவர் தன் தவறை மற்றவர் மேல் போட்டு விட்டு நீதான் நீதான் என்று திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடுமென நினைக்கிறார்கள். அது, தங்களை காப்பாற்ற தாங்கள் சொல்லிக்கொள்ளும் சமாதானம், போடும் வேஷம்.
-
சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?
கணக்காளர் நியமனத்திற்கு விண்ணப்பித்த ஒரு இராணுவத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதே இராணுவத்தின் பாதுகாப்போடு வலம் வந்த சுமந்திரனுக்கு என்ன தண்டனை? இனவழிப்பு செய்த சிங்களக்கட்சியில் இருந்து வந்து புகுந்த சாணக்கியனுக்கு ஏன் இந்த பதவி உயர்வு? தமிழர் நிலத்தில் புத்தர் சிலை வைத்ததை நிஞாயப்படுத்தி தமிழரை கொச்சைப்படுத்தி பேசிய சஜித்துக்கு வாக்களிக்கச்சொன்ன சுமந்திரன் ஏன் இன்னும் தமிழரசுக்கட்சியில் தொங்கிக்கொண்டிருக்கிறார்? வேறொரு கட்சியை உருவாக்கி வென்று காட்டட்டும் பாப்போம் முடிந்தால். சி .வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து விலத்துவதற்காக சுமந்திரன் செய்த செயல்கள் பேச்சுக்கள் அநாகரீகமானவை. அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை, அதை எல்லோரும் மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள். அதற்கு சுமந்திரன் பாவித்த ஆள் மாவையர், மாவையரை வீழ்த்த சிறிதரனை பாவித்தார், இனி சிவஞானம், அடுத்து யார்? சுமந்திரனுக்கும் ஒரு சுழியோடி வருவார் அல்லது அதற்கு தேவையில்லாமல் கட்சியே இல்லாமற் போகலாம். விதி வலியது. அன்று தேவையில்லாமல் அழுக்காறு கொண்டு விக்கினேஸ்வரனை அவமானப்படுத்தி வெளியேற்றினார்கள், அதன் பயனை இப்போது அறுவடை செய்கிறார்கள். சிவனே என்று இருந்த ஒருவரை வலிய தேடிச்சென்று கொண்டுவந்து சேர்த்து தங்கள் வேலை முடிந்தவுடன் சேறடித்து அனுப்பினார்கள். தமிழரசுக்கட்சியில் புதிதாக இணைபவர்கள் இவற்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கென்ன என்று பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு மௌனம் காக்காதீர்கள். மக்கள் மனம் வைத்தாலே உங்களுக்கு பதவி.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அவர்களை அறியாமல் சில உண்மைகள் வெளிவந்துவிடுகின்றன, அப்பாவிகள் சிலர் அதை நம்பி விடுகின்றனர். அப்பாவிகள் சிலர் அவர்களை நம்பி விடுகின்றனர்.