Everything posted by valavan
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
புலிகள் காலத்திலேயே புலிகள் பணத்தை ஏப்பம் விட்டு சுதந்திரமா இருந்திருக்கிறார் பலே கில்லாடிதான். அந்த உரிமையாளர் பெயர், பெட்ரோல் நிலையங்கள் அமைந்திருக்கும் இடங்கள் , வியாபார நிறுவனங்களின் பெயரை கூற முடியுமா? அனைவரும் அறிந்தால் அந்த உரிமையாளரை அவர் வருமானம் ஈட்டிய விதம் பற்றி விசாரிக்க சொல்லி அரசுக்கு அறிவிக்கலாம், ஆக குறைந்தது பொதுவெளியில் அறிவித்தால் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
போராட்டத்தின் நிதி நெருக்கடி காலத்தில் கிழக்கு மாகாணத்தைவிட பல மடங்கு அதிகமாக வடக்கில் நிதி அறவீடுகள் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன, வரிகள் விதிக்கப்பட்டன, வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டன, அப்பிளுக்கு கூட வரி விதிக்கப்பட்டது, அதனால் பலர் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளானார்கள், இதில் மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை. இந்த நிதி அறவீட்டில் வசதியுள்ள மாவீரர் குடும்பங்களும் தப்பவில்லை. அதற்கு உதாரணமாக ஒரே குடும்பத்தில் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்து மாவீரர்களான ஜேம்ஸ் , வாசு, சுந்தரி குடும்பமும் அடக்கம். போராளிகள் சுயமாக நிதி வசூலிப்பில் ஈடுபடுவதில்லை, தலைமைபீடம், தளபதிகளின் கட்டளைப்படியே செயல்பட்டிருக்கிறார்கள், அக்காலத்தில் மட்டு அம்பாறை தளபதியாக இருந்த கருணாவின் மீது இந்த நிதி வசூலிப்பு தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தலைமைப்பீடத்தின் உத்தரவுப்படி கருணா செயற்பட்டார் என்று சடைந்து விடாதீர்கள், தலைமைப்பீட உத்தரவுப்படிதான் அவர் காலம் முழுவதும் செயற்பட்டார் என்றிருந்தால் போராளிகளையே வடக்கு கிழக்கு என்று பிரித்திருக்கமாட்டார். ஒரு ஆயுத போராட்ட போர் காலத்தில் தவறுகள் இல்லாமல் எதுவுமே ,எங்குமே அனைவரின் விருப்பப்படியே எல்லாம் நடந்தது என்று உலகின் ஒரு மூலையில்கூட நீங்கள் உதாரணம் காட்ட முடியாது. வசூலித்த விதங்கள் தவறுதான், ஆனால் வசூலித்த பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? பயன் படுத்தப்பட்டிருந்தால், உலகிலேயே வசதியானவர்கள் வரிசையில் புலிகளின் அமைப்பும் சிங்களவனுக்கு கால் கழுவியபடி இன்று உயிருடன் இருந்திருக்கும். போராளியை கம்பியால் குத்தி உயிர் ஊசலாட ஜீப்பில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே சேர்ந்து ஜெயவேவா என்று கோஷம்போட்டு மகிழ்ந்து ஆரவாரித்ததா? கேட்கும்போதே புல்லரிக்கிறது, சரி ஊர் ஊராக சுற்றி வளைத்து கொத்து கொத்தாக எம்மக்களை சிங்களவன் கொன்று குவித்தபோது என்ன சொல்லி ஆரவாரித்தார்கள்? கண்கண்ட சாட்சியான நீங்கள் இதையும் கண்டிருக்க வாய்ப்புண்டு அதனால் கேக்கிறேன். கப்பம் வசூலித்த போராளி கிழக்கில் எத்தனை பங்களாக்கள் கட்டியுள்ளார் என்று ஏதாவது தகவல்கள் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் பகிர்ந்து கொள்ளூங்கள் அதுவும் உங்கள் சாட்சிகளில் ஒன்றாய் அமையும். ஜேவிபி ஆயுத போராட்டத்தின்போது மிக குறுகிய காலத்தில் வகை தொகையின்றி சிங்கள இளைஞர்கள், அவர்கள் குடும்பங்கள் வகை தொகையின்றி இலங்கை பாதுகாப்பு படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர், ஆனால் எந்த சிங்களவனும் புலிகளால் இலங்கை ராணுவம் கொன்று குவிக்கப்பட்டபோது, தமிழில் வெற்றி வெற்றி என்று முழங்கவில்லை, மாறாய் இலங்கையின் ஆளும்கட்சிகளைவிட ஜேவிபியே தமது ராணுவத்தின் பக்கம் உறுதியாக நின்றது, காரணம் ஒன்றேதான், போராட்டகாலத்தில் தவறுகள் இருக்கத்தான் செய்யும் ஆனால் எமது இனம் எமது ராணுவம் என்ற ஒன்றை அவர்கள் எதற்காகவும் விட்டுகொடுக்க தயாரில்லை, சொல்லபோனால் தன்மானத்தில் சிங்களவன் நம்மைவிட சிறிது உயரம் அதிகம்தான். நிதி அறவீட்டில் அவர்களின் பொறுப்பாளர்கள் சொன்னதை தவறானமுறையில் அணுகிய போராளி செய்தது குற்றமே. அதேநேரம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட என்று போனவன் தோலை உரித்து லாண்ட்மாஸ்டரில் கட்டி இழுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மிக சிறந்த பழிவாங்கல் என்றால் , அவ்வாறான இனமான போராளிகளின் சாவில் மகிழ்கிறவர்கள், புலிகளால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, ராணுவத்தால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, இனவிடுதலைபோராட்டத்தை நேசித்த மக்கள் , மிக சிறந்த பழிவாங்கல் என்றே எடுத்துக்கொள்வார்கள். அதுதான் கடந்தகால வரலாறு, அதை புலிகள் பொதுமக்களை கொன்றார்கள் என்று தாம் செய்த தவறை வெளியே சொல்லாமல் சாயம் பூசி இன்றுவரை மறைப்பவர்கள் பலர். புலி போராளிகள் கொல்லப்பட்டது சிறப்பான சம்பவம் என்று ரோஷமுள்ள மக்கள் சொல்வதில்லை என்பதற்கு முற்றுமுழுதான ராணுவகட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு வருஷம் வருஷம் மாவீரர்நாள் அனுஷ்டிக்கும் பல லட்சம் மக்களே அதற்கு சாட்சி. அதுபோதும் நம்மை விட்டு சென்றவர்கள் தவறுகள் செய்திருந்தாலும் சரியான ஒரு இலட்சியத்திற்கு போராடியபோதே ஒரு சில தவறுகளும் இழைத்தார்கள் என்று சாட்சி சொல்ல,
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
இளங்கோவன் மரணத்தில் எந்த திருப்தியும் இல்லை, அவர் தன் வாழ்நாளை முழுமையாக வாழ்ந்துவிட்டே போயிருக்கிறார். ஆனால் பிறர் மகன் மரணத்தில் மகிழ்ந்த உன்னை உன் வாழ்நாளிலேயே உன் மகன் மரணத்தை காண வைத்தான் இறைவன் அதுதான் காலத்தின் மிக பெரும் பழிக்குபழி. எம் மரணத்தை கொண்டாடிய உன் மரணம் எமக்கு கொண்டாட்டம் அல்ல, எவர் மரணமும் எமக்கு இனிப்பானதல்ல. ஆனால் உன் வார்த்தைகளால் நாம் சுமந்த வலியை உன் வாழ்நாளிலேயே நீயும் உன் கண்முன்னே பார்த்து, அனுபவித்துவிட்டுத்தான் போனாய் என்பதில் அக மகிழ்ச்சி.
-
உண்மையான வடக்கின் வசந்தம் இனிதான்! - கடற்தொழில் அமைச்சர்
அந்த கூட்டம் தொடர்பான காணொலி ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை, நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மேலே பொத்தாம் பொதுவாக கடஞ்சா புலிகள் குடும்பங்களை கைது செய்து பின்னர் விடுவித்தார்கள் என்று சொல்லியிருந்தார், நீங்கள் தெள்ள தெளிவாக அவர்களை வடக்கு கிழக்கைவிட்டு வெளியே அனுப்பினார்கள் என்று சொல்கிறீர்கள், ஆக கடஞ்சாவைவிட புலிகளால் வெளியே அனுப்பப்பட்ட மாற்று இயக்க போராளி சில குடும்பங்கள் , அவர்களின் விபரங்களாவது நீங்கள் துல்லியமாக தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு. அதில் ஒன்றிரண்டையாவது சொல்வீர்களா? இது உங்கள் கருத்தின்மேல் சந்தேகமோ அல்லது உண்மை தன்மையை பரிசோதிக்கும் முயற்சியோ அல்ல, மாறாக ஒரு விடயத்தை ஐயம் திரிபுற அறிந்தவர்களிடம் தகவல் பெற்றுக்கொள்ளும் முயற்சி மட்டுமே. அவர்கள் விபரங்களில் ஒன்றிரண்டை வெளியிடுவதால் அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் பாதுகாப்பு பிரச்சனையும் வந்துவிடபோவதில்லை, ஏனென்றால் இன்று புலிகளும் இயங்கு நிலையில் இல்லை, மாற்று இயக்கங்களும் இலங்கை அரசு சாசனத்தையும் சார்பையும் ஏற்றுக்கொண்டு எவ்வளவோ காலமாச்சு.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு. ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான், அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை. புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம், அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
-
மஹிந்தவிடம் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்ற டக்ளஸ் - சுப்பையா பொன்னையா குற்றச்சாட்டு!
இடிஅமீனின் வரலாற்று தொடரில், இடிஅமீனை போட்டு தள்ள சதிதிட்டம் தீட்டியவர்களை போட்டு கொடுப்பவர்களை, உனக்கு எவ்வளவு காலமா இந்த விஷயம் தெரியும் என்று கேட்டுவிட்டு நீண்டகாலமா தெரியும் என்றால் முதலில் போட்டு கொடுத்தவரைத்தான் போட்டு தள்ளுவாராம் இடிஅமீன் , ஏனென்றால் என்னை போட்டு தள்ளுவது பற்றி உனக்கு பிரச்சனையில்லை, உனக்கு அவர்களுடன் தனிப்பட்ட பிரச்சனை என்றபடியால்தான் இப்போது உண்மையை சொல்கிறாயென்று படித்த ஞாபகம். அதேபோல் காலம் முழுவதும் டக்ளஸ் காலடியில் கிடந்து எந்தவித குற்ற உணர்வுகளுமில்லாமல் மக்கள் நிம்மதியையும் , மக்கள் சொத்துக்களையும்,உயிர்களையும் சூறையாடிவிட்டு இன்று உங்கள் பங்குபிரிப்பில் தகராறு என்றதும் அவன் நல்லவனில்லை என்கிறீர்கள். இன்றும் மஹிந்த குரூப் ஆட்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக டக்ளஸ் புராணம்தான் பாடியிருப்பீர்கள், ஆதலால் உங்கள் பக்கம் எந்த புனிதமும் இல்லை. என்ன இழவுனாலும் பண்ணிப்போட்டு போங்கள், ஆனால் எனக்கிருப்பது ஒரேயொரு சந்தேகம், டக்ளஸ் திருமணமும் செய்யவில்லை, வாரிசுகளும் இல்லை எதுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்து சேர்க்கிறார்? யாருக்காக? அநுர அரசின் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் ஊழல் சுத்திகரிப்பு நடவடிக்கை முடிந்து வடக்கு பக்கம் திரும்பினால் டக்ளசுக்கெதிரா சாட்சி சொல்ல டக்ளசின் முன்னாள் கட்சி உறுப்பினர்களுட்பட எண்ணிலடங்காதவர்கள் அணி திரள்வார்களென்பது இப்போதே தெரிகிறது.
-
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் ஆரம்பம்!
இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல், உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும் நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
-
ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்
75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம், 99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை , இன்னும் சொல்லபோனால் யாரடி நீமோகினி பாடலில் இருந்தே சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும். சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும் சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
கனடாவுக்குள் என்ன செய்யவேண்டுமென்று அமெரிக்காவுடன் கனடிய அரசு போய் பேசுமா? இங்கிலாந்துக்குள் என்ன செய்ய வேண்டுமென்று ஜேர்மனியுடன் போய் பிரிட்டன் அரசு இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துமா? பிராந்திய வல்லரசுக்கு அடிபணிந்து வாழ்ந்தாலும் வாழ்வோமேயொழிய தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கமாட்டோம் என்று வாழும் ஆணவ நிலை தொடரும்வரை உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன் கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்
-
வடிவேலுவின் பிரம்மாண்டம்
பொதுவாகவே ஒரு தனிமனிதனின் வருமானம், சொத்துக்கள், வாழ்க்கையை தோண்டியெடுத்து செய்தியாக்குவது அருவெருப்பான ஒன்றாகவே பார்ப்பதுண்டு. இங்கே வடிவேலுவின் இந்த பிரமாண்டம்பற்றி பகிர்வதற்குகாரணம், வாழ்க்கையின் அடிமட்டத்தின் கீழிருந்து ஒருவர் தனது ஒப்பற்ற திறமையினால் எவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை காண்பிக்கவே.
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
தந்தி டிவி எனும் இந்திய செய்தி சேவை நிறுவனம் தனது நாட்டு அமெரிக்க குடியேறிகளை பற்றி தானே சொன்ன செய்தியை இங்கே தெரிவித்தது மட்டுமே நான், நீங்க சொன்னபடியே அந்த வீடியோவை பார்க்காமலே தீர்மானிக்கிறது நீங்கள். ஒரு செய்தி பிரிவில் ஒரு செய்தியை தெரிவிப்பது எனது கடமை, அதுபற்றிய தீர்மானங்கள் உங்கள் உரிமை.
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள்
பெரும்பான்மையான மோதல்களில் இஸ்லாமியர்களே இஸ்லாமியர்களை கொன்று குவிப்பார்கள், அதன்போது கொல்பவனும் கொல்லப்படுகிறவனும் அல்லாஹு அக்பர் என்பார்கள். அல்லாஹ் யார் பக்கம் நிற்பார் கொல்பவன் பக்கமா கொல்லபடுகிறவன் பக்கமா?
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஆபத்து.!
-
அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர்
அரபுநாடுகளுக்கு வேலைக்கு இலங்கையர்களை அனுப்பி வைப்பதே அரசாங்க அனுமதியுடன்தான், அது என்னமோ அரசாங்கத்துக்கு தெரியாத மாதிரியும் இவர்கள்தான் அவர்களை அங்கு அனுப்பி இலங்கைக்கு வருமானம் பெற்று தருவது மாதிரியும் நினைவூட்டுறது மாதிரி இருக்கு. பெரும்பாலான இந்திய இலங்கை முஸ்லீம்களின் நினைப்பு எல்லாம், அரபுநாடுகள் எல்லாம் என்னமோ அவர்கள் நாடு போலவும் இவர்களுக்கு ஒன்று என்றால் அரபுநாடுகள் களத்தில் குதிக்கும் என்பது போலவும் இருக்கும். பாலஸ்தீன பிரச்சனையில் அரபுநாடுகள் எப்படி நடந்து கொண்டன என்பதை பார்த்த பின்னரும் அரபுநாடுகளை காட்டி தாம் வாழும் நாட்டு பிரஜைகளையும் பிரதிநிதிகளையும் அச்சுறுத்தவதுபோல் இவர்கள் கருத்து பகிர்வது நகைச்சுவையின் உச்சம். முஸ்லீம்கள் என்பதற்காக இவர்களை அரபுநாடுகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாது, வேண்டுமென்றால் ரமழானுக்கு பேரீச்சம் பழம் அனுப்பியும் , பள்ளிவாசல் மதராசா கட்டவும் உதவி செய்யும் மற்றும்படி அந்தந்த நாட்டு அரசுகளுடனேயே அவை தொடர்பைபேணும். அதற்கு மிக சிறந்த உதாரணம் முஸ்லிம்களுக்கெதிராக மிக மோசமான தாக்குதலை தொடுக்கிறார் என்று கூறப்படும் மோடியுடன் அரபுலகநாடுகள் மிக நெருக்கமான பொருளாதார அரசியல் இந்து கலாச்சார உறவுகளை பேணுவது.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அனுமதி என்றால் திரு.ஜஸ்டின் , சரி உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறேன். நாங்கள் யாழ்களம் என்ற ஒரு தளத்தில் சம்பாசணை செய்கிறோம் அதன் ஸ்தாபகர் திரு.மோகன், கண்காணிப்பாளர்களாக சில மட்டுறுத்தினர்கள் இருக்கிறார்கள், கருத்து பகிர்வாளர்களாக நாங்களிருக்கிறோம் இங்கே அவரவர் கருத்துக்களை பகிரலாம் உரையாடலாம், அதை சக உறுப்பினர்கள் மறுக்கலாம், ஒத்துபோகலாம் அதுதான் விதியாம். ஆனால் உரிமைபோரில் உயிர் துறந்தவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சித்தால் அந்த கருத்துக்கள் மூர்க்கதனமாக எதிர்க்கப்படும், அதாவது உங்கள் கருத்துக்களை உங்கள் போக்கில் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்பதே சக கள உறுப்பினராகிய எனது கருத்து. தேசியதலைவர் போராளிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டிய யாழ்கள விதிகளில் ஒன்று என்றும் நினைக்கிறேன். ஆக அனுமதி என்றால் அதுதான் அர்த்தம், அலுவலகம் என்று அர்த்தமில்லை, அனுமதி வேறு அலுவலகம் வேறு . கருமங்களுக்கு அலுவலகம் தேவைப்படும் கருத்துக்களுக்கு அலுவலகமும் தேவையில்ல பாஸும் தேவையில்லை . அமெரிக்காவில் விலங்கியல் துறையில் மருத்துவராக கடமையாற்றும் திரு.ஜஸ்டினுக்கு அனுமதி என்று எதை அர்த்தப்படுத்தினோம் என்பது விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன். இல்லை விளங்கவில்லை அனுமதி என்றால் அலுவலகம் வைத்து பியோன் வைத்து மேசையில் ஒரு கொம்புயூட்டர் வத்து வளவன் பாஸ் கொடுக்கவேண்டும் அதுக்கு பேர்தான் அனுமதி என்று நீங்கள் இன்னமும் கருதினால் விதிவிட்ட வழி.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
நிச்சயமாக அது ஐலண்ட் ஒருவருக்கான பதிலும் மட்டுமோ கோபதாபமுமோ இல்லை ரஞ்சித், அதுபோன்ற எண்ணங்களைகாவி திரியும் அனைவருக்குமான ஒரு பதிவு. ஐலண்டின் எல்லா கருத்துக்களுடனும் எனக்கு முரண்பாடில்லை, சரியென்று தெரியும் சமூக ஒதுக்கல் பிரதேச வேறுபாடுகளுக்கெதிரான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் பல லட்சம்பேரின் ரணங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் எள்ளிநகையாட கூடாது என்பதால் எழுதினேன். இனமானம் என்ற விடயத்தில் ரஞ்சித்துக்கு தெரியாத ஒன்றையா புதிதாக எழுதிவிட போகிறேன்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இந்த விடையைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் கோசான், சொல்லிவிட்டீர்கள், இனிமேல் கீழேயுள்ள நீங்கள் பகிர்ந்த கருத்தை சரி பார்த்துக்கொள்ளுங்கள் மாவீரர்கள், வேறு, புலிகள் வேறு அதன் தலைவர் வேறா? உள்ளுக்குள் விடை தெரிந்தும் வெளியே பகிரும் முரண்பாடான இந்த கருத்துப்பகிர்வை இத்தோடு நிறுத்திக்கொள்வதில் எனக்கு மிக விருப்புண்டு.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அதைத்தான் நானும் கேட்டேன் கோசான், அந்த புறம் தள்ளிய தலைமை யார்? ஐலண்ட் புலிகளையோ தலைவரையோ அர்த்தப்படுத்தவில்லையென்று சொன்னீர்கள், அவர் அர்த்தபடுத்திய அந்த புறம் தள்ளீய தலைமை யாரென்பதை நீங்களும் சொல்ல தயங்குகிறீர்களா? உலகின் எங்கும் மக்களிடம் ஒவ்வொருவராக சென்று ஒருநாட்டின் அல்லது சமூகத்தின் அரசியல்விவகாரங்களை உங்களுக்கு ஒப்பந்தம் ஓகேயா இல்லையா என்று யாரும் பேசிக்கொண்டிருப்பதில்லை, அவர்களுக்கு தலைமை தாங்குகிறவர்களையே அணுகுவார்கள் என்பது கோசானுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். ஏனென்றால் மக்களால் நேசிக்கப்பட்டதும் உருவானதும் / உருவாக்கப்பட்டதும்தான் தலைமை.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அப்படியா கோசான், சரி உங்களிடமே வருகிறேன், தெளிவாக ஒரேவரியில் சொல்லிவிடுங்கள் அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம் , கீழேயுள்ள ஐலண்ட் எழுதிய வரிகளில் அர்த்தப்படுத்தியது, யாரை யார் சார்ந்த சமூகத்தை? மீசை முறுக்கியதும் உதைத்து தள்ளியதும் என்று அவர் அர்த்தப்படுத்தியது யார் தலைமை தாங்கிய ஒரு சமூகத்தை? இது ஐலண்டிடம்தான் கேட்கவேண்உமென்று சாதுரியமாக விலகிவிடாதீர்கள், ஏனென்றால் ஐலண்ட் அர்த்தப்படுத்தியது மாவீரர்களையும் எம் தலைமையையும் இல்லையென்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்போது அவர் அர்த்தப்படுத்தியது வேறு யாரையென்பதும் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் அதனால கேட்கிறேன். இது வீரியமாக எழுதவேண்டும் என்பதற்கான பதிவு இல்லை கோசான், காலம் காலமாக மறக்காமல் அடுத்தடுத்த சந்ததிக்கும் நினைவில் வைத்துக்கொள்ள மீண்டும் மீண்டும் கடத்தப்பட வேண்டியதொன்று என்பதால் எழுதினேன். இன உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு புதுமையும் இல்லை பழமையும் இல்லை. அது எக்காலமும் எம்முடன் எடுத்து செல்லப்பட்டுக்கொண்டிருக்கவும் வேண்டும் எடுத்து சொல்லப்பட்டுக்கொண்டிருக்கவும் வேண்டும்., பல தசாப்தங்களாக எம் இனத்தின்போது எந்த நெகிழ்ச்சியும் எவரும் காட்டாததினால்தான் ஆயுதங்கள் தமிழர்கள் கைக்கு ஏறின, எமக்கு எதிரே ஆயுதத்துடனும் அதிகார பலத்துடனும் நின்றவனுக்கு எந்த நெகிழ்ச்சி போக்கை காட்டியிருக்கவேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்? அதிகாரம், ஆட்சி, ஆயுதம் என்று எம்மைவிட பல மடங்கு பலம் வாய்ந்த ஒரு பெரும்பான்மை இனம், தன்னுடன் வாழும் சிறுபான்மையினருடன் நெகிழ்வு காட்டியிருக்க வேண்டுமா, இல்லை ஒரு பெரும்பான்மை இனத்தின் ஆயுத மிரட்டல், அரசியல் சூழ்ச்சி, நில விழுங்கல்களுக்கு சிறு இன மக்கள் கூட்டம் நெகிழ்வு தன்மை காட்டவேண்டுமா? ஒருவனை பத்துப்பேர் சுற்றிவர நின்று அடிக்கும்போது அடிப்பவர்களிடம் நெகிழ்வு தன்மை இருக்கணுமா, அடிவாங்கி அலறுகிறவனிடம் நெகிழ்வு இருக்கணுமா? உங்களிடம் பொட்டில் அடித்ததுபோல் பதில் இருக்கும், அதை தந்து பலர் அறிய உதவுவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு கோசான்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அரசியல்வழியில் சிங்களவனிடம் தீர்வுகளை எதிர்பார்த்து காலம் காலமாக ஏமாந்த எம் சமூகம் பின்னாளில் ஆயுதம் ஏந்தி பிரிந்து செல்ல முற்பட்டது. சேர்த்து வாழாதவனிடம் இருந்து பிரிந்து செல்ல எத்தனிப்பது ஒன்றும் வரலாற்று தவறல்ல. பிரிந்து சென்று தனியரசு அமைப்பது என்ற இலட்சியத்துக்காகவே வடக்கு கிழக்கிலிருந்து பல ஆயிரம் இளைஞர்கள் நம்பிக்கையுடன் தமது உயிரை ஈந்தார்கள், அவர்கள் உயிரை மாகாணசபைக்கே தாரை வார்ப்பதற்கு பிரபாகரன் என்ற தனி மனிதனுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை, அதைத்தான் அவரும் செய்தார், அவர் வாயாலேயே தமிழீழம் என்ற கோட்பாட்டை கைவிட்டால் பிரபாகரனும் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவரே என்றும் சொன்னார். 1987 மாகாண சபை முறையினை ஒட்டுமொத்தமாக புலிகளுட்பட எவரும் புறக்கணிக்கவில்லை, காலத்தின் தேவைகருதி ஏற்றே கொண்டார்கள். ஆனால் அந்த தீர்வு திட்டத்தில்கூட வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பில்லை, பிரபாகரன் முதலமைச்சர் இல்லை, இந்திய ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்ட பிற ஆயுத குழுக்கள் பிரசன்னம், இந்திய விசுவாச கூட்டணியை உள்ளுக்குள் திணித்தல். எந்த அரசியல் கைதிகளும் விடுதலை இல்லை, மாறாக ஆயுதமின்றி இருந்த தளபதிகள் போராளிகளையும் ஆயுத குழுக்கள் இலங்கை அரசு வேட்டையாட அனுமதித்தது, சிங்கள குடியேற்றங்களை கண்டும் காணாமல் விட்டது, புலிகளிடம் ஆயுதங்களை கையளிக்க சொல்லிவிட்டு தமிழர் தேசமெங்கும் எந்த பாரிய சிங்கள ராணுவ முகாம்களையும் அகற்றாதது. மாறாக சிங்கள இந்திய ராணுவங்களால் மட்டுமே தமிழர் பிரதேசத்தை நிரப்பியது, அவசரகால சட்டத்தை நீக்காதது என்று இத்தனையும், இதைவிடவும் அதிக கொடுமைகள் இருந்த மாகாண சபை திட்டத்தில் என்ன இருக்கிறது, இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது? இந்திய இலங்கை ஒப்பந்தமென்று வந்தது அப்பட்டமாக இந்திய பிராந்திய நலன் கருதிய திட்டம், இல்லையென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வு திட்டமென்றால், சண்டைபோட்டவர்களுக்கு இடையில்தான் ஒப்பந்தம் நடந்திருக்கவேண்டும், அதெப்படி சம்பந்தப்படாத இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்று என்றாவது நாம் சிந்தித்ததுண்டா? அன்றே அது உப்பு சப்பில்லாதது என்று உறுதியாகிவிட்டது. ஆயிரக்கணக்கான எம் மக்களும் போராளிகளும் தம்மை ஆகுதியாக்கியது இன்னொரு நாட்டின் பிராந்திய நலனுக்கா? பிளேட் கையில் வெட்டினாலும், தலைவலி காய்ச்சல் வந்தாலும் ஒப்பாரி வைக்கும் பழக்கமுள்ள மனிதன், உயிரையும் உடல் அவயங்களையும் உரிமைக்காக போராட தந்து சிதைந்து போனபோது அவன் தியாகத்தை உருப்படியற்ற தீர்வுகளுக்கு பயன்படுவது வரலாற்று துரோகம் அதையே இயக்கமும் செய்தது. ஆயுதரீதியில் பலம் எம்மைவிட பலமடங்கு அதிகமானதால் சிங்களவனிடம் நாம் தோற்று போனோம், ஆனால் மண் ரீதியாக சிங்களவனிடம் நாம் தோற்றுவிட்டாலும், மண்ரீதியாக , சிங்கள தேசத்தில் அவர்கள் வேறு நாங்கள் வேறு என்ற சிந்தனை தமிழர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். அந்த அடிமனது துயரத்தை நீக்கும்வரை இலங்கை எனும் நாடு உருப்பட வாய்ப்பில்லை என்பது உலகுக்கும் தெரியும் மாறி மாறி ஆட்சி செய்பவர்களுக்கும் தெரியும் சிங்களவனுக்கும் தெரியும், எம்மில் சிலருக்குத்தான் எப்போதும் தெரிவதில்லை. வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். எம்மீது பிறர் ஏறி மிதித்து போவதைகூட மன்னித்துவிடலாம், ஆனால் எம் எதிர்கால கெளரவமான இருப்பிற்காக மட்டுமே போராடியதை தவிர வேறெந்த தவறும் செய்யாத எம் போராளிகள், தலைமையின் ஆன்மாவின் நெஞ்சு மீது ஏறி மிதித்து போகவோ மறைமுகமா ஏளனம் செய்யவோ எவருக்கும் அனுமதி இல்லை.
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரசேகர்!
கச்சதீவுக்கு இந்திய கடற்படை வந்துஅவர்கள் மீனவர்களை கூட்டி போக முடியாது ஏனென்றால் கச்சதீவு என்பது இலங்கை
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
எல்லாவற்றிற்கும் சுமந்திரனை திட்ட முடியாthu. மாகாண சபை முறையினை இல்லாதொழிக்க சிங்களவன் திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கும்போது, மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்த வேண்டுமென கோருவது ஒரு சூட்சுமம்தான். அரசாங்கமே தேர்தல் நடத்தி தெரிவு செய்த ஒரு அமைப்பை அரசாங்கமே இல்லாதொழிப்பது சட்ட சிக்கலை எதிர்நோக்க கூடிய காரியம்தான். ஒருகாலம் மாகாணசபை முறையையே உப்பு சப்பில்லாதது என்று புறக்கணித்த எம் சமூகம், இன்று அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவது காலத்தின் பரிணாம துயரம்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பலரின் கணிப்பும் அதுதான் யசோ, பார்க்கலாம் புதிய மாற்றத்தை கொண்டுவருவேன் என்ற அநுரவின் ஆட்சி எந்த நோக்கில் நகரும் என்று நீங்கள் சொல்வது சரி ஜஸ்டின் நானும் அறம் சார்ந்த விஷயமாகவே அந்த கருத்தை வைத்தேன் மற்றும்படி மதுவிலக்கை நான் வலியுறுத்தவில்லை, அது சாத்தியமும் இல்லை, எடுத்ததுக்கெல்லாம் தலையை வெட்டும் ஆனானப்பட்ட சவுதியிலேயே புலம்பெயர் தொழிலாளர்கள் திருட்டுதனமாக பழங்களை கொண்டு வடி சாராயம் காய்ச்சுவதை அறிந்திருக்கிறேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு அரசானது எவருக்கும் அடிபணிந்து போகவோ அடி பணிய வைக்க சூழ்ச்சிகள் செய்யவோ தேவையில்லை ரதி , அரசு சொல்வதை பிறர் கேட்டே ஆகவேண்டிய பலம் அவர்களோடது. அதை ஆரோக்கியமான விஷயங்களுக்கு பாவிப்பார்களா என்பதே காலமும் மக்களும் எதிர்பார்க்கும் செய்தி.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
உண்மைதான், பட்டுவேட்டி ஜிப்பா துண்டு போட்டு நெற்றியில் பட்டை, சந்தண பொட்டு குங்கும பொட்டு எல்லாம் வைத்து சிவகடாட்சமாக தவறணைக்கு சிபாரிசுகடிதம் கொடுத்த உலகின் முதல் சிவ பக்தன் ஐயா விக்னேஷ்தான், ஓவியத்தில் மிகவும் விருப்புடைய எனக்கு அதில் தேர்ச்சிபெற முடியவில்லை, அருணாச்சலம் ஐயாவின் கருத்தோவியங்கள் சர்வதேச பத்திரிகளுக்கான உலக தரம். உடனடியாகவே சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் கொட்டி கிடக்கும் அசாத்திய திறமை உங்களுடையது.